24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்வு.
ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்வு. ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் வெற்றிடமாகஉள்ள ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான தேர்தல், எதிர்வரும் , 16ம் திகதி நடைபெறும் என, இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில், திமுகவிற்கு நான்கு, அதிமுகவிற்கு இரண்டு ராஜ்யசபா எம்பிக்கள் பதவி கிடைப்பது உறுதியானது. திமுக கூட்டணியில், தேமுதிக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. திமுகவில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்; தேமுதிக சார்பில் சுதீஷ், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் தம்பிதுரை, அக்கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அன்புமணி மனு தாக்கல் செய்தனர். அவர்கள் மனு ஏற்கப்பட்டு, மற்றவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மனுவை திரும்ப அவகாசம் வழங்கப்பட்டது. ஆறு பேர் தவிர, மற்றவர்கள் யாரும் களத்தில் இல்லை. இதனையடுத்து திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், சுதீஷ், கிறிஸ்டோபர் திலக், தம்பிதுரை, அன்புமணி ஆகியோர் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ராஜ்யசபா தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தி அறிவித்துள்ளார். https://athavannews.com/2026/1467774
-
இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
இஸ்ரேலை விட அண்டை இஸ்லாமிய நாடுகள் மீது அதிக ஏவுகணைகளை செலுத்திய இரான் பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,பிப்ரவரி 28 முதல் மார்ச் 4 வரை வளைகுடா நாடுகள் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கை 550-க்கும் அதிகமாகும். கட்டுரை தகவல் அப்துல் ரஹ்மான் அபு தாலிப் பிபிசி அரபி மொழி சேவை 9 மார்ச் 2026 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் பிபிசி அரபு சேவை ஆய்வின்படி, கடந்த ஆண்டு இஸ்ரேலுக்கு எதிராக நடந்த 12 நாள் போரை விட, தற்போது நடந்து வரும் போரின் போது இரான் வளைகுடா பிராந்தியத்தை நோக்கி அதிக ஏவுகணைகளை ஏவியுள்ளது என தெரிய வருகிறது. சௌதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் , பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, பிப்ரவரி 28 முதல் மார்ச் 4 வரை வளைகுடா நாடுகள் மீது வீசப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கை 550-ஐத் தாண்டியுள்ளது. ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் குறித்த எண்ணிக்கையை ஓமன் வெளியிடவில்லை. இதற்கிடையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது ஆயிரக்கணக்கான குண்டுகளை வீசியுள்ளன. இரானிய அதிபர் மசூத் பெஸெஷ்கியன் வளைகுடா நாடுகள் மீதான இந்தத் தாக்குதல்களுக்காக மன்னிப்பு கோரியுள்ளார். அந்த நாடுகளின் நிலப்பகுதி இரான் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படாவிட்டால், இரானும் அந்த நாடுகள் மீது தாக்குதல் நடத்தாது என்று அவர் உறுதியளித்துள்ளார். பிபிசியின் உலக விவகாரங்களுக்கான ஆசிரியர் ஜான் சிம்ப்சன் கூறுகையில், பெஸெஷ்கியன் அமைதிக்கான செய்தியை அளித்திருந்தாலும், அவருடைய வார்த்தைகளை இரானிய தலைமையின் நிலைப்பாடாகக் கருத முடியுமா என்பதுதான் கேள்வி எனத் தெரிவித்துள்ளார். இரானின் பாதுகாப்புத் திறன்களில் பாலிஸ்டிக், குரூயிஸ் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் உள்ளன. இரானிடம் டிரோன்களும் உள்ளன. ஆனால் அது தனது உத்தியை இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு மாற்றியிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஏவுகணைகளைப் பற்றி நாம் அறிந்தது என்ன? இஸ்ரேலுக்கு எதிராக முன்பு நடந்த போர்களுடன் ஒப்பிடும்போது இந்த முறை என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது, இரான் தனது ஆயுதங்களை எந்த அளவிற்கு நம்பியிருக்க முடியும்? இரான் ஏவுகணைகளைப் பற்றி நாம் அறிந்தது என்ன? பட மூலாதாரம்,Wisam Hashlamoun/Anadolu via Getty Images படக்குறிப்பு,அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு இரான் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசுகிறது இரான் குறுகிய தூரம் மற்றும் நடுத்தர தூரம் பாயும் ஏவுகணைகளைக் கொண்டுள்ளது. ஜனநாயக நாடுகளின் பாதுகாப்புக்கான அறக்கட்டளைப் படி, இரானின் குறுகிய தூர ஏவுகணைகள் 300 முதல் 1,000 கிலோமீட்டர் வரையிலான இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை. இந்த ஏவுகணைகள் வளைகுடா நாடுகள் உட்பட பல அண்டை நாடுகளை தாக்க வல்லவை. நடுத்தர தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் ஆயிரம் முதல் இரண்டாயிரம் கிலோமீட்டர் வரை பாய்ந்து இஸ்ரேலை சென்றடையக் கூடியவை. இரான் 8 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வைத்துள்ளது. ஷஹாப் 1: 300 கிலோமீட்டர் ஃபதே 110: 300-500 கிலோமீட்டர் ஷஹாப் 2: 500 கிலோமீட்டர் சுல்ஃபிகார்: 700 கிலோமீட்டர் கியாம் 1: 750 கிலோமீட்டர் ஷஹாப் 3: 2000 கிலோமீட்டர் ஆதாரம்: பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் இரானின் மிக முக்கியமான ஆயுதம் பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஆகும், இவை அதிக உயரத்தை எட்டக்கூடியவை மற்றும் அங்கிருந்து ஒரு வில் போன்ற பாதையில் இலக்குகளை நோக்கி செல்லக்கூடியவை. ஜனநாயக பாதுகாப்பு அறக்கட்டளையின்படி, இரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணைகளை பாதிப்பை ஏற்படுத்துவதற்கான மிக சக்தி வாய்ந்த ஆயுதமாகவும், விமானப் படைக்கு மாற்றாகவும் கருதுகிறது. தடைகள் காரணமாக இரானால் வழக்கமான ஆயுதச் சந்தைகளை அணுக முடிவதில்லை, இதனால் அதன் விமானப் படை பலவீனமான நிலையில் உள்ளது. குரூயிஸ் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் குறைந்த உயரத்தில் பறக்கின்றன. அவை தங்கள் இலக்குகளை அடைய ஜெட் அல்லது புரொப்பல்லர் உதவியைப் பயன்படுத்துகின்றன. இரானிய ஏவுகணைகள் பயன்பாடு உத்தி எவ்வாறு மாறியது? பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,பஹ்ரைனில் இரானிய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒரு கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. இரான் தற்போது இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் என இரு தரப்புகள் மீதும் தனது ஏவுகணைகளை வீசி வருகிறது. இது முந்தைய போரிலிருந்து மாறுபட்ட ஒரு அணுகுமுறையாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்பு, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள கத்தாரின் அல்-உதெய்த் தளத்தை மட்டுமே இரான் தாக்கியிருந்தது. அமெரிக்க கொள்கை ஆராய்ச்சி மையமான அமெரிக்கன் என்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட்டின் கீழ் இயங்கும் 'கிரிட்டிக்கல் த்ரெட்ஸ் ப்ராஜெக்ட்' தகவல்படி, போரின் முதல் நான்கு நாட்களில் இரான் சுமார் 36 முறை இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியுள்ளது. அதிகபட்சமாக முதல் நாளில் 20 முறை ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதில் ஒவ்வொரு முறையும் சராசரியாக இரண்டு முதல் மூன்று ஏவுகணைகள் வீசப்பட்டன. இந்தப் போக்கு இரண்டாம் நாளில் தலைகீழாக மாறியது. தினசரி ஏவுகணை வீச்சுகளின் எண்ணிக்கை இரண்டாம் நாளில் நான்காகவும், மூன்று மற்றும் நான்காம் நாட்களில் ஆறாகவும் குறைந்தது. அதே நேரத்தில், ஒவ்வொரு முறையும் இஸ்ரேல் வீசிய ஏவுகணைகளின் சராசரி எண்ணிக்கை இரண்டாம் நாளில் 9 முதல் 30 வரை அதிகரித்தது. டெல் அவிவ் பல்கலைக்கழகத்துடன் இணைந்த தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவன , போர் தொடங்கியதிலிருந்து மார்ச் 4 வரை இரான் 128 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. இஸ்ரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, வியாழக்கிழமை காலை வரை நடந்த இந்தத் தாக்குதல்களில் 10 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர், ஆனால் வீரர்கள் யாரும் காயமடையவில்லை. இரான் தான் ஏவிய ஏவுகணைகளின் துல்லியமான எண்ணிக்கையை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும், புரட்சிகர காவல் படையின் (பஸ்தரன்-இ-இன்கிலாப்) கூற்றுப்படி, போரின் ஐந்தாம் நாளான மார்ச் 4 மதியம் வரை, வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது 17 முறை ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன. இஸ்ரேலிய மதிப்பீடுகளின்படி, தற்போது நடந்து வரும் போர் மற்றும் முந்தைய போர்களின் போது இரான் தனது ஏவுகணை ஏவுதளங்களில் சுமார் பாதியை இழந்துவிட்டது. முக்கியமான அச்சுறுத்தல்கள் திட்ட (Critical Threats Project) உதவி இயக்குநர் நிக்கோலஸ் கார்ல் கருத்துப்படி, இது ஏவுகணை அலகுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை பலவீனப்படுத்தியுள்ளதுடன், அவற்றை இடைமறிப்பதையும் எளிதாக்கியுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏவுகணைகளை ஏவும் குழுக்களை அவை ஏவப்படும் முன்போ அல்லது ஏவும் போதோ குறிவைப்பதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார். இன்னும் எத்தனை ஏவுதளங்கள் செயல்பாட்டில் உள்ளன என்று சொல்ல முடியாது என்றாலும், அவை அதிகமாக இல்லை என்று கூறிய கார்ல், "இது இரான் ஒரே நேரத்தில் வீசக்கூடிய ஏவுகணைகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துகிறது"என்பதை குறிப்பிட்டார். இருப்பினும், அவரது கருத்துப்படி, இது இஸ்ரேலுக்கு இரானிய ஏவுகணைகளால் ஏற்படும் அச்சுறுத்தலைக் குறைக்காது. அதே சமயம், இந்தத் தாக்குதல்களைத் திறம்பட ஒருங்கிணைப்பது இரானுக்கு ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது. வளைகுடா நாடுகள் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் பட மூலாதாரம்,Fadel Senna/AFP via Getty Images படக்குறிப்பு,மார்ச் 1, 2026 அன்று துபாயில் நடந்ததாகக் கூறப்படும் இரானிய தாக்குதலுக்குப் பிறகு ஜெபல் அலி துறைமுகத்திலிருந்து எழும் புகையைக் கடந்து செல்லும் மெட்ரோ ரயில். இரான் "வளைகுடாவில் உள்ள அமெரிக்க தளங்கள்" என்று தான் கருதும் இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் சௌதி அரேபியா ஆகிய நாடுகளுடைய பாதுகாப்பு அமைச்சகங்களின் தரவுகளின் அடிப்படையில், நான்கு நாட்களில் இரான் வளைகுடா நாடுகள் மீது 551 ஏவுகணைகளை வீசியுள்ளதாக பிபிசி கணக்கிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை முந்தைய போரை விட அதிகமாகும்; அப்போது 12 நாட்களில் இஸ்ரேல் மீது இரான் சுமார் 500 ஏவுகணைகளை ஏவியிருந்தது. இந்த நாடுகள் இரானிய தாக்குதல்களைத் தங்களது "இறையாண்மை மீதான ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதல்" என்று கண்டித்துள்ளன, சிவிலியன் இலக்குகளும் குறிவைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளன. பஹ்ரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்டனர். ஓமன் கடற்கரைக்கு அப்பால் எண்ணெய் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இராக் மற்றும் சிரியாவிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. வளைகுடா நாடுகள் இதுவரை இரான் மீது எந்த ராணுவ நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ராஜ்ஜீய அழுத்தங்களில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? நிக்கோலஸ் கார்ல் கூற்றுப்படி, வளைகுடா நாடுகளைக் குறிவைக்கும் முடிவு, முந்தைய மோதல்களில் பயன்படுத்த பொருத்தமற்றதாக இருந்த ஆயுதங்களைப் பயன்படுத்த இரானுக்கு வாய்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், "இஸ்ரேலை சென்றடையக் கூடிய ஆயுதங்களை மட்டுமே இரான் பயன்படுத்தி வந்தது. இப்போது அது குறுகிய தூர ஏவுகணைகளையும் பயன்படுத்த முடியும், அதாவது கடந்த ஆண்டு பயனின்றி இருந்த அனைத்து ஏவுதளங்களும் இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன" என்று அவர் கூறுகிறார். இரான் தொடர்ந்து 'ஷாஹெட்' டிரோன்களையும் பயன்படுத்தி வருகிறது. அதாவது, அது இன்னும் பல செயல்பாட்டு அமைப்புகளைக் கொண்டுள்ளது என்பது தான் இதன் பொருள். போரின் முதல் நாளுடன் ஒப்பிடும்போது இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்கள் 86 சதவீதம் குறைந்துள்ளதாக அமெரிக்க ஜெனரல் டீன் கெய்ன் தெரிவித்தார். அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்த வீழ்ச்சி 23 சதவீதம் என்று தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,இரானிய தாக்குதலால் பஹ்ரைனில் ஒரு கட்டடம் சேதமடைந்தது. டிரோன்களை அதிகமாக நம்பியிருக்கும் இரான் பிபிசி பகுப்பாய்வின்படி, வளைகுடா நாடுகளின் மீதான இரானின் தாக்குதல்களில் ஏவுகணைகளை விட டிரோன்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மார்ச் 4-ஆம் தேதி பிற்பகல் வரை, வளைகுடா நாடுகள் மீது 1,493 டிரோன்களும் 551 ஏவுகணைகளும் வீசப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 12 நாள் போரின் போது இஸ்ரேல் மீது இரான் செலுத்திய 1,100 ட்ரோன்களை விட அதிகமாகும். கார்ல் கருத்துப்படி, வளைகுடா நாடுகளை பின்வாங்கச் செய்வதன் மூலம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது அழுத்தத்தை அதிகரிப்பதே இரானின் உத்தியாக இருக்கலாம். அமெரிக்க ஜெனரல் டீன் கெய்ன் கூற்றுப்படி, போரின் முதல் நாளுடன் ஒப்பிடும்போது இரானிய டிரோன் தாக்குதல்கள் 73 சதவீதம் குறைந்துள்ளன. தொடர்ந்து உற்பத்தியை முன்னெடுப்பதில் உள்ள சிக்கல்கள் காரணமாக, இரான் தனது கையிருப்பை பாதுகாக்க முயற்சிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இரான் தொடர்ந்து எவ்வளவு நாள் ஏவுகணைத் தாக்குதலை தொடர முடியும்? போருக்கு முன்பு இரான் வசம் சுமார் 2,500 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருந்ததாக இஸ்ரேல் மதிப்பிடுகிறது. இரான் மாதத்திற்கு சுமார் 100 ஏவுகணைகளை உற்பத்தி செய்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறுகிறார். இந்த மதிப்பீடுகளைத் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியாது. கார்ல் கருத்துப்படி, இரானின் கையிருப்பு ஒரு கட்டத்தில் ஆபத்தான நிலைக்குக் குறையத் தொடங்கும், ஆனால் இது எப்போது நடக்கும் என்று சொல்வது கடினம். இரான் தற்போதைய உத்தியைத் தொடரும், அதாவது இப்பிராந்தியத்தில் பெரிய அளவிலான ஏவுகணைத் தாக்குதல்கள் தொடரும் என்றும் அவர் கருதுகிறார். இதனைக் குறித்து விளக்கிய அவர், "தங்கள் ஏவுகணைகளில் பல எதிரிகளின் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்படும் என்பதை இரானியர்கள் அறிவார்கள். ஆனால் அதிக எண்ணிக்கையிலான ஏவுகணைகளை ஏவுவதன் மூலம் தங்கள் எதிரிகளின் இடைமறிப்பு ஏவுகணை கையிருப்பை குறைக்க அவர்கள் விரும்புகிறார்கள்" என்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவிடம் "வரம்பற்ற ஆயுதங்கள்" இருப்பதாகக் கூறுகிறார். அதே நேரத்தில் இரானின் பாதுகாப்பு அமைச்சகம் "அமெரிக்கா திட்டமிட்டதை விட நீண்ட காலம் போராடும்" திறன் தங்களுக்கு இருப்பதாகக் கூறுகிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,முதல் நான்கு நாட்களில், அமெரிக்கா இரண்டாயிரம் தாக்குதல்களை நடத்தியது, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குண்டுகளைப் பயன்படுத்தியது. அமெரிக்கா - இஸ்ரேலிய தாக்குதல்கள் அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது வான்வழி தாக்குதலை முதன்மையாகப் பயன்படுத்துகின்றன. அமெரிக்கா நிலம் மற்றும் கடல் வழியிலிருந்தும் ஏவுகணைகளை ஏவி வருகிறது. அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் கூற்றுப்படி, போரின் முதல் நான்கு நாட்களில், அமெரிக்கா 2,000 தாக்குதல்களை நடத்தியதுடன் 2,000-க்கும் மேற்பட்ட ஷெல் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மார்ச் 4 வரை 600 வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்த காலகட்டத்தில், இஸ்ரேலிய விமானப்படை மொத்தம் 5,000 குண்டுகளை வீசியுள்ளது. இரானிய செம்பிறை அமைப்பின் (ஹிலால்-இ அஹ்மர்) தகவல்படி, இந்தத் தாக்குதல்களில் 175 குழந்தைகள் மற்றும் பள்ளி ஊழியர்கள் உட்பட 1,045 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் போரின் முதல் நாளில் மினாப்பில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளி மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கையில் புரட்சிகர பாதுகாப்புப் படை அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyvelpxl9po
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
மத அடிப்படை வாதம் மக்களை முட்டாள்கள் ஆக்கும். இயன்ற அளவுக்கு அது அரசியலில் இருந்து அகற்றப்படல் வேண்டும்்அல்லது அரசியலில் ஆக குறைந்தது தாக்கத்தை ஏற்படுத்தாவண்ணம் பலவீனப்படுத்தப்படல் வேண்டும். ஆரம்பத்தில பாலஸ்தீன விடுதலை என்று புறப்பட்ட பாலஸ்தீன விடுதலை இன்று ஹமாஸின் இஸலாமிய மத அடிப்படை வாதத்தில் வந்து நிற்கிறது. மத்திய காலத்தில் மனிதர்களை மூடபழக்கங்களுக்குள் தள்ளிய உலகில் உள்ள எல்லா மதங்களும் மீண்டும் அந்த நிலைக்கு போக அனுமதிக்கக கூடாது. இலங்கையில் புத்தமதம் இந்தியாவில் இந்துமதம் ஆகியவையும் இதே போல செல்லவே முயலுகின்றன. ஈழத்தமிழர்களிடமும் மத அடிபடைவாதத்தை புகுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்களிடையே முட்டாள்தனங்களை பரப்பி அதை விமர்சிக்கமுடியாத அளவுக்கு புனிதப்படுத்திவிட்டால் கேள்விகள் எதுவும் இன்று தமது எதேச்சதிகாரத்தை தொடர முடியும் என்பதும் கேள்வி கேட்பவனை கடவுளுக்கு எதிரானவன் என்று அடக்கலாம் என்பதுமே மத அடிப்படைவாதத்தின் நோக்கம்.
-
ஈரான் போர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது - ட்ரம்ப்
ஈரான் போர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது Mar 10, 2026 - 06:31 AM திட்டமிட்ட நேரத்தை விட விரைவாக ஈரான் போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். CBS News செய்தி நிறுவனத்திற்கு கருத்து தெரிவிக்கும் போது, போர் பெரும்பாலும் முடிவுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானிடம் கடற்படை, விமானப்படை அல்லது தகவல் தொடர்பு வசதிகள் எதுவும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். தற்போது அவர்களின் ஏவுகணைகள் சிதறடிக்கப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததாக CBS News மேலும் குறிப்பிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmjwmasy0001356pg3l5w3zk
-
எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு
எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு Mar 9, 2026 - 10:52 PM இன்று (09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி 293 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 317 ரூபாவாகும். 340 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 365 ரூபாவாகும். 281 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 22 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 303 ரூபாயாகும். 329 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 353 ரூபாவாகும். மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 195 ரூபாவாகும். அதேநேரம் ஐ.ஓ.சி நிறுவனமும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்கொண்ட விலைத் திருத்தத்திற்கு சமாந்திரமாக தமது விலைகளை திருத்தம் செய்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmmjg7r44000i356pptfwqnv9
-
ஈரானின் புதிய அதி உயர் தலைவர் தெரிவு?
ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து Mar 9, 2026 - 09:03 PM ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முஜ்தபா காமேனிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் எதிர்கொண்டுள்ள ஆயுத மோதல்களுக்கு மத்தியில், ரஷ்யா எப்போதும் ஈரானின் நம்பகமான பங்காளியாக இருக்கும் என்பதை புடின் அதில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, தனது தந்தை ஆரம்பித்த பணிகளை அவர் கௌரவமான முறையில் முன்னெடுத்துச் செல்வார் என தாம் நம்புவதாகவும் புடின் தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmmjcciry000e356p95zj5prq
-
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமனம்
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமனம் Mar 9, 2026 - 06:56 PM இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன் (Gary Kirsten) நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. இந்த நியமனம் 2026 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இரண்டு ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடிப்பார். கேரி கிர்ஸ்டன் இதற்கு முன்னர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக (2008-2011) பணியாற்றி, 2011 இல் இந்திய அணி உலகக் கிண்ணத்தை வெல்ல வழிகாட்டினார். மேலும், தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக (2011-2013) இருந்தபோது, அந்த அணியை அனைத்து வகையான போட்டிகளிலும் முதலிடத்திற்கு இட்டுச் சென்றார். 2026 ஐசிசி (ICC) ஆண்கள் டி20 உலகக் கிண்ணத்தின் போது நமீபியா கிரிக்கெட் அணியின் ஆலோசகராகப் பணியாற்றினார். 1993 முதல் 2004 வரையிலான தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 14,087 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 21 டெஸ்ட் சதங்களும் 13 ஒருநாள் சதங்களும் அடங்கும். 2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள ஐசிசி ஆண்கள் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு இலங்கை அணியைத் தயார்படுத்துவதே இவரின் முதன்மையான பொறுப்பாகும். தேசிய உயர் செயல்திறன் மையத்தின் கட்டமைப்பை மறுசீரமைக்கும் சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmj7rwwu000b356pf2bvzz4g
-
CEB-இன் மின் விநியோகப் பணிகள் இனி EDL வசம்!
CEB இன் மின்சார விநியோக செயல்பாடுகள் இப்போது EDL க்கு மாற்றப்பட்டுள்ளன Published By: Vishnu 09 Mar, 2026 | 09:37 PM 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் எண் மின்சாரச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சாரத் துறை சீர்திருத்தங்களின் கீழ், இலங்கை மின்சார வாரியத்தால் (CEB) முன்னர் செயல்படுத்தப்பட்ட மின்சார விநியோக செயல்பாடுகளுக்கான பொறுப்பு மின்சார விநியோக லங்கா (பிரைவேட்) லிமிடெட் (EDL) க்கு மாற்றப்பட்டுள்ளது.இலங்கை சுற்றுலா மின்சார விநியோகத் துறையில் செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் சேவையின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்கள் மற்றும் செயல்பாட்டு மேம்பாடுகளைச் செயல்படுத்த EDL க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு நெருக்கமான மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட மின்சார விநியோக சேவையை உறுதி செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/240574
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தோல்வி தான் வெற்றியின் முதல்படி! இப்ப நான் முதல்படியில கால் வைச்சிட்டன் அண்ணை.
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
இதில் உள்ள இராணுவ ஆய்வாளர் விடயம் அறிந்தவர். youtube click bait அல்ல.
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
ஈரானை பற்றி தெரியமால் ... மேட்ற்கு பிரச்சாரத்தை தூக்கி வந்து .. செய்தி விடயத்தை மட்டும் சொல்கிறேன் - ஏனெனில் இது விவிலிய பிரளய கிருமிகளால் உருவாக்கப்பட்ட கிருமிப் பிரளயம் (இதை ஏற்கனவே அலசி விட்டேன்.) அரபு நாடுகள் அமெரிக்கா இராணுவ / உளவு தளங்களை கொண்டிருக்கும் வரையிலும், அவை இரானை தாக்குதலில் ஈடுபடுகின்றன. ஏனெனில் இவற்றில் இருந்தே ஏவுகணை கண்காணிக்கப்பட்டு , தரவுகள் உரிய அழிக்கும் ஆயுத கட்டுமானத்துக்கு வழங்கப்படுகிறது. மாற்றம் cia, மொசாட் நிலைகள் இருப்பது. இவை இடம் மாறிக் கொண்டு இருக்க, இரான் அவற்றை ஏறத்தாழ real-time இல் கண்காணிக்கிறது, தாக்குகிறது இவ்வாற்றை தாக்குவதிலேயே உயர்மாடி கட்டிங்களில், குறித்த வதிவிடம் தாக்கப்படுவது. அதில் சில பிழைத்து இருககலாம் அதனால் தன மீண்டும். மீண்டும் குறிவைக்கப்டுவது. (மாறாக அமெரிக்கா / இஸ்ரேல் முழு கட்டியதையும் அழிப்பது (இரானால் செய்ட் இருக்க முடியம்). அத்துடன் இந்த நாடுகளின் வான்வெளியிலேயே , அமெரிக்கா awacs போன்றவை நிலையெடுத்து கொள்வது, இரானில் விமானதாக்குதலுக்கு. அத்துடன், பாலையானத்தில் ஈரானின் ஏவுகணைகளை அழி க்க செல்லிட ஏவுகணைகளை / ஊர்திகள் ஊர்மறைப் செய்யப்பட்டு, தேவையான நேரத்தில் வேண்டிய இடத்துக்கு நகர்த்துவது. இரான் ஏவுகணை தாக்குதல் பெருமளவில் குறிக்கோள்களை அடைந்துள்ளது.மற்றது இரான் குறிவைத்தே பொதுவாக தாக்குகிறது. ஏனெனில், அமெரிக்கா, மேட்ற்கு, இஸ்ரேல் இன் ஏவுகணையை கண்காணிக்கும் கண்கள் பெருமளவில் குருடாக்ப்பட்டுவிட்டன . இது தெரிவது, இரானில் இப்பொது விவிலிய பிரளயக் கிருமிகள் பொதுக்கட்டுமானத்தை தாக்குகிறார்கள் - இதன் அர்த்தம் ஈரானின் இராணுவ இலக்குகள் மீதான என்று விவிலிய பிரளயக் கிருமிகள் நம்பிய தாக்குதல் பொதுவாக பலன் அளிக்கவில்லை. இதுவே நிலைமை. (அனால் ஈரான் சொன்னதின் மொழிபெயர்ப்பு முன்பு நான் சொன்னது - தாக்குதலுக்கு வழிகோலுதற்கு துணைபோகாமல் இருக்கும் வரையிலும் இரான் தாக்காது. அரபு கூட்டங்களால் அந்த நிலையை தடுக்க முடியாது.) இந்த தத்தெடுத்து உருவாக்கப்பட்டு, இப்போதும் தத்தெடுத்தவரின் அரவணைப்பில் உள்ள அரபி மொக்களுக்கு , வரலாறு வழியே அதுவாக, அதனால் மட்டும் உருவாகிய இரான் சொல்லுவது விளங்கவில்லை. அனால், இங்கே உள்ள சிலருக்கும் விளங்கவில்லை. அனால் , டிரம்ப் ஈரானை 2-3 அரசுகளாக பிரிக்கும் எண்ணத்தை ஒத்துகொண்டு இருப்பது (map won't be same / will be different ) - முன்பே நான் சொல்லியது , எந்த திரி என்பது மறந்துவிட்டது. இங்கே இரானை பற்றி தெரியாமல் மேற்றுகின் பிரச்சாரத்தில் ஊழன்று ஈரான் ஆட்சி பற்றி சிலர் கதைப்பது.
- Today
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
நான் யாரை கதாநாயகனாகக் கருதுகிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நிச்சயமாக மத அடிப்படைவாதத்தினால் தனது நாட்டு மக்களை அடக்கியாளும் ஒருவரை இல்லை என்பது எனக்குத் தெரியும். அப்படியானால் நான் ட்ரம்ப்பையோ அல்லது நெத்தென்னியாகுவையோ கதாநாயகனாக நினைக்கிறேனா என்றால், அப்படியுமில்லை. நடந்துவரும் இப்போரில் ஈரானின் மத அடிப்படைவாத அடக்குமுறையாளர்கள் ஆட்சிப் பீடத்திலிருந்து அகற்றப்படவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்கு என்னிடம் பல காரணங்கள் இருக்கின்றன. அதனை அமெரிக்காவும், இஸ்ரேலும் முன்னின்று செய்வதனால், அவர்களின் முயற்சிகளுக்கு அதரவாக எழுதுகிறேன். இதில் கதாநாயகத்தன்மை எதுவும் இல்லை. அறிவு எல்லோரதும் பிறப்புரிமை, சரி. கண்முன்னே நடைபெறும் அடிப்படைவாத அடக்குமுறையினை எதிர்ப்பதனால் நான் ஒரு பக்கவாதியாக உங்களுக்குத் தெரிந்தால் நான் என்ன செய்வது? இந்த விடயத்தில் நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? ஈரானின் மத அடிப்படைவாதிகளை ஆதரித்தும் (எதற்கென்ற தெளிவு சற்றும் இல்லாமல்), அமெரிக்கா தலைமையிலான தாக்குதல்களை எதிர்த்தும் எழுதினால் நான் பக்கச்சார்பற்றவனான இருப்பேன் என்று நீங்கள் கருதுகிறீர்களா? சரித்திரம், வரலாறு, தனிப்பட்ட அனுபவங்கள், நிகழ்காலச் சம்பவங்கள் என்பவற்றை அடிப்படையாக வைத்தே ஒருவர் பல விடயங்கள் தொடர்பான தனது தனிப்பட்ட நிலைப்பாட்டிற்கு வருகிறார். இதனால் அவர் ஏதோ ஒரு பக்கத்திற்கு ஆதரவாகவும், இன்னொரு பக்கத்திற்கு எதிராகவும் கருத்துக்களைக் கொள்ள அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அப்படியில்லாமல், இவையெல்லாவற்றையும் விட்டு விட்டு, ஒரு பிரச்சினை தொடர்பாக எந்தவித பிரக்ஞையுமற்று, பக்கச்சார்பின்றி அவர் மாறவேண்டும் என்று நீங்கள் கேட்பது சரியானதா? ஒரு உதாரணத்திற்கு, இலங்கையில் தமிழரின் பிரச்சினை தொடர்பாக தமிழர்கள் தமக்கென்று ஒரு புரிதலினைக் கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்புரிதல் அவர்களின் கடந்தகால வரலாறு, அனுபவங்கள், இழப்புக்கள், ஏமாற்றங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பது என்றும் வைத்துக்கொள்வோம். ஆனால், தமிழர்கள் இவற்றினைக் கைவிட்டு, இனப்பிரச்சினையினைப் பக்கச்சார்பின்றி அணுகினால் ஒழிய நிலைத்து நிற்கமுடியாது என்று சொல்ல வருகிறீர்களா? ஒருவிடயம் தொடர்பாக தனியொருவர் கொண்டிருக்கும் எண்ணம் அவருக்கே தனித்துவமானது. அதனைக் கொண்டிருப்பதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. அதனை கதாநாயக விம்பத்தின பின்னால் போகிறவர்கள் என்று கொச்சைப்படுத்த வேண்டாமே?! ஒருவர் உலக விடயங்களை எந்தெந்த வழிகளில் அறிந்துகொள்ளமுடியும் என்று நினைக்கிறீர்கள்? உங்களின் வாழ்நாளில் உங்களது அனுபவங்கள் மூலம் பல விடயங்களை நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். சரி, உங்களுக்கு முற்பட்ட காலத்தில் நடந்த விடயங்களை, பழைய வரலாறுகளை, முன்னைய சரித்திரங்களை எப்படி அறிந்துகொண்டீர்கள்? அக்காலத்தில் நீங்கள் வாழ்ந்திருக்கவில்லை. ஆகவே யாராவது ஒருவரின் வாய்மொழிமூலமோ அல்லது பத்திரிக்கைகள், நூல்கள், ஆவணங்கள் மூலமோதான் இதனை அறிந்துகொள்கிறீர்கள். அந்த வழியில்த்தான் இன்றைய செயற்கை நுண்ணறிவும் வருகிறது. இன்று உங்களுக்குத் தெரிந்த விடயங்கள் எல்லாம் நீங்கள் பிறக்கும்போது உங்களது மூளையில் பதியப்பட்டிருந்தனவா? அப்படியில்லை என்றால் எவ்வாறு, எங்கிருந்து அவற்றை நீங்கள் பெற்றுக்கொண்டீர்கள்?
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
ஊடக பிரச்சார தகவல்கள் மற்றும் அந்த தகவலின் ஊட்டலின் தரவுகளினடிப்படையில் செயற்படும் செயற்கை நுண்ணறிவுகள் மூலம் உலக நகர்வுகளை சரியாக புரிந்து கொள்ளமுடியாது. பல இலட்சம் பேர்களை கொல்லும் எதிரெதிர் தரப்புக்களில் சினிமாத்தனமான கதாநாயக் விம்பங்களை உருவாக்கும் கட்டமைப்புகளில் நின்று சரிகளையும் அதன் எதிர்த்தரப்பினை தவறாகவும் பார்க்கும் நிலை உண்மையான புரிதலை கொடுக்காது. அறிவு அனைவரது பிறப்புரிமை, அதனைபக்க வாதங்களுடன் அணுகாமல் சிந்திக்கும் சமுதாயமாக மாறினாலே எமது சமூகம் தன்னை காலா காலத்திற்கும் நிலைத்து முன்னேறும்.
-
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா: திருமணம்
ரொம்ப ஏழைகளா இருக்கினம் .. ஆளுக்கு ரெண்டு ரூபாய் போட்டு விடுங்கப்பா..
-
ரஷ்ய எண்ணெய் மீதான தள்ளுபடி; ட்ரம்புக்கு கமல் கடும் கண்டனம்!
எத்தனை பேர் வாய் வழியாக சிரிச்சினம் ரெல் மீ..
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
கருணை கிழங்கு பஜ்ஜி
-
நகைச்சுவைக் காட்சிகள்
மகளிர் தின பரிதாபங்கள் (புதுசு)
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உள்ள ஒன்ன விட்டு தூக்குங்க எசமான்...- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிரிக்க மட்டும் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அத்தனையும் சுமக்கும் ஆண்களுக்கு இப்படி ஒரு நாள் இருப்பதே பலருக்கு தெரியாது..- சிரிக்கலாம் வாங்க
- கொஞ்சம் ரசிக்க
- தமிழனின் சிற்பக் கலை.
எலிகளை விரட்டி கோயிலை பத்திரமாக பாதுகாக்கும் சிவகணங்கள்(கிராபிக்ஸ் உதவியுடன் ) ஏகாம்பரநாதர் கோயில் - காஞ்சிபுரம் - குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.