Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  3. Today
  4. நான் எழுதுவது ஒரு அனாதையான இனத்துக்கு மீட்பார் என்று சொல்லி பின்கதவால் வந்த வல்லூறு ஒன்றின் கதை . உங்களை போன்றவர்களுக்கு கிரிகெட் விளையாட்டாய் நக்கலாய் போய் விட்டது அந்த மக்களின் மவுன வலி. இந்த சுமத்திர வல்லூறு வடகிழக்கு தமிழருக்கு கடந்த 14 வருடங்களில் ஒன்றையும் கிழித்து போடவில்லை இனியும் கிழிப்பார் என்று பள்ளிக்கூடம் போனவர்கள் நம்ப மாட்டார்கள் .
  5. உறவுகளே, இந்தியக் கடற்படையின் அதிரடிப்படையால் (MARCOS) குருநகர் துறைமுகம்(?) தாக்கப்பட்டது, ஒக்டோபர் 21,1987. இதன் போது என்னமாதிரியான அழிவுகள் ஏற்பட்டன? எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? ஏதேனும் படகுகள் தாக்கப்பட்டதா? உண்மையில் அங்கு துறைமுகம் என்று சொல்லுமளவிற்கு கட்டுமானங்கள் ஏதேனும் இருந்ததா? இதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் என்னென்ன? வரலாற்றை ஆவணப்படுத்த உதவி செய்யுங்கள். நன்றி
  6. பொது சனம் ஒராள் இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார், மன்னாரில். ( இரண்டாவது மறுமொழிப் பெட்டியில் தெளிவாக உள்ளது)
  7. என்னுடைய ஞாபகத்தின்படி இந்திய இராணுவ வருகைக்கு சில (மாதங்கள்) காலங்களுக்கு முன்னமே ஊர் பெரியவர்கள், பிரபலங்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரையிம் உள்ளடக்கி இப்படியான பிரஜைகள் குழு அமைக்கப்பட்டது. இலங்கை இராணுவ திடீர் படை இறக்கம், உளவாளிகள் ஊடுருவல், கிராம மட்டங்களில் நடக்கும் சிறிய சமூக பிரச்சினைகள் போன்றவற்றை அவதானித்து இயக்க பொறுப்பாளருடன் உரையாடி ஆலோசிப்பது அவர்களுக்கான ஒத்துழைப்பை , உதவிகளை வழங்குவது போன்ற செயல் பாடுகள் நடந்தன. நாவட்குழியில் நானும் நண்பர்களும், ஊர் பெரிசுகளும் சேர்ந்து இரவு நேர ஊர் காவல், நோட்டமிடல், சென்ரி, உணவு வழங்கள் போன்ற செயல்பாடுகளில் இருந்து இருக்கிறோம் . இது தவிர, இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு பிறகு மக்கள் அரசியல் செயல்பாடுகளாகவும் பிரஜைகள் குழு என்று ஒன்றும் இருந்தது நினைவுக்கு வருகிறது. இவர்கள் பலரை ராணுவ துணை குழுக்கள் கொலை செய்த்ததாகவும் செய்திகள் வாசித்த ஞாபகம் இருக்கிறது.
  8. அநீதி இழைக்கப்பட்டவர்கள் பக்கத்தில் உறுதுணையாக இருப்பதில் தப்பில்லை. காவி அணிந்தவரெல்லாம் முற்றும் துறந்த துறவிகள் என்ற காலம் மலையேறி பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது. யாருடைய சங்கி மங்கி செயல்களுக்கும் ஆதரவளிக்க வேண்டியதில்லை.
  9. ஏன் சிறியர், டக்கிலஸை கைது செய்து கொண்டு போகும்போது கையில் ஒரு கோப்புடன் போகிறாரே, அதில் என்ன இருக்கும்? தான் கொலை செய்தவர்களின் பெயர்ப்பட்டியலா, தன்னால் இன்னும் கொல்லப்பட வேண்டிய நபர்களின் பெயரா, அல்லது வழக்கு நடத்தப்போகும் சட்டத்தரணி தான் என நினைத்துக்கொண்டாரா? ஒரு வெட்கமேயில்லாமல் போகிறார். எல்லா கூட்டங்களிலும் வலிய புகுந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கும், கருத்து சொல்லும் இந்த மனிதன், தன்னைப்பற்றி இப்படியொரு காணொளி வெளிவருமென எதிர்பார்த்திருப்பாரா? அறிவாளியாக இருந்திருந்தால் இதெல்லாம் செய்திருப்பாரா? மக்களை ஏமாற்றி, அழைத்து வந்து சிங்களத்திற்கு காணொளி அனுப்பி கப்பம் பெற்றவர், இனி அடிக்கடி வருவார் பாவம். தெற்கிலிருந்து, அரச தலைவர்களின் காவல் நா* என்று கருத்தெழுதுகிறார்களாம் இவரைப்பற்றி. தெற்கு மக்களும் இவரின் சாதனைகளை பற்றி அறிந்துதான் வைத்திருக்கிறார்கள். சிறையில் இவரது உயிருக்கு ஆபத்தென்றால், அது இவரின் எஜமானரின் ஏவல் பிராணிகளாற்தான் வரும்.
  10. இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பேராசிரியர் நிஷான் கனகராஜா பிரித்தானிய மன்னரின் 2026 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கௌரவப் பட்டியலில் 'நைட்' பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றி வரும் நிலையில் பட்டம் பெற்றுள்ளார். உயரிய விருது உயர்கல்வித் துறைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு மற்றும் சமூக உள்ளடக்கல் கொள்கைகளை முன்னெடுத்தமைக்காக இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர், யாழ். மார்ட்டின் வீதியில் வளர்ந்தவர். யாழ். பரி. யோவான் கல்லூரியின் பழைய மாணவரான இவர், 1985ஆம் ஆண்டு அந்தக் கல்லூரியின் தலைமை மாணவ தலைவராகவும் (Head Prefect) திகழ்ந்துள்ளார். இலங்கையில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த அவர், பின்னர் பிரித்தானியாவின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை மற்றும் கலாநிதிப் பட்டங்களைப் பெற்றார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தேசத்தின் சிறுவன் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட பதவிகளை வகித்த அவர், 2019 ஆம் ஆண்டு லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்றுள்ளார். பிரித்தானியாவின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றை நிஷான் கனகராஜா வழிநடத்தி வருகினறார். இந்த கௌரவம் குறித்து கருத்து தெரிவித்த அவர், "யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு தேசத்திலிருந்து வந்த ஒரு சிறுவன், இன்று அரச குடும்பத்தினால் கௌரவிக்கப்படுவது என்பது ஒரு வியக்கத்தக்க பயணம். கல்வியின் மாற்றும் சக்தியினாலும், அது வழங்கும் வாய்ப்புகளினாலுமே இது சாத்தியமானது" என உருக்கமாக தெரிவித்துள்ளார். https://tamilwin.com/
  11. எந்த பக்கம் எண்டாலும் சுமனின் ஆட்கள் தானே வெளியில் எடுத்து விடுவது யாழ்ப்பாணத்தை போதை கலாசாரத்தை ஊக்குவிப்பது இந்த கபடவேடதாரி சுமத்திரன் தானே .
  12. மக்களின் பிரச்சனைகளை கண்டுகொள்ளாத அவர்களின் பிரதிநிதிகளை விமர்ச்சிக்காதவர்கள், பிக்குகளின் அடாவடிகளை கண்டுகொள்ளாதவர்கள், யாராவது உண்மையின் பக்கம் நின்றால் வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள். நிஞாயம் என்பது; சந்தர்ப்பத்திற்கு, ஆளுக்கு, பதவிக்கு, இடத்திற்கு ஏற்ப மாறுபடுவதில்லை, அது எங்கேயும் எப்போதும் ஒன்றையே பேசும். அதுதான் நிஞாயம் நடுவுநிலைமை!
  13. ம், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் விசாரணையிலிருந்து தப்பி விடலாம், தண்டனை குறைவாக்கப்படும் என நினைக்கிறார்கள் போலும். அதற்காக சில வைத்தியர்களும் உடந்தையாக இருக்கிறார்கள். ஒரு துடிப்பான அரசியல், வெளிநாட்டு பிரயாணம் செய்த ஒருவரை, இதய வால்வுகள் பெலமிழந்து விட்டது, அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், சிங்கப்பூருக்கு மருத்துவத்திற்கு அனுப்பவேண்டும் என்றும் சிபாரிசு செய்து மருத்துவ சான்று கொடுத்தார், அவர் சாதாரண மருத்துவர் அல்ல. அவரும் படிக்காமல் அறையில் பரீட்சை எழுதி சித்தியடைந்த மருத்துவரோ தெரியவில்லை. ரணிலோ புத்தகம் வாசித்தார், இந்தியா பயணமானார், கூட்டங்கள் நடத்தினார், கட்சிகளை ஒன்று கூட்டி ஆலோசனை கொடுத்தார். தவறு இல்லாதவர்கள் ஏன் விசாரணையை விமர்சிக்கிறார்கள்? வைத்திய சாலையில் போய் படுத்து விசாரணையை தவிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை. அது இருக்கட்டும், டக்கிலஸின் உயிருக்கு சிறையில் ஆபத்தாம் என சுரேன் ராகவன் துடிக்கிறார். டக்கிலசோ அவரது சொந்த பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்ட துப்பாக்கியை போதை, பாதாள உலகத் தலைவன் மதுசிடம் கொடுத்துள்ளார். அப்போ, அவரது உயிருக்கு ஆபத்து இருந்தது என ராகவன் சொல்வதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? துப்பாக்கி பெறுவதற்காக டக்கிளஸ் அவ்வாறு ஒரு நாடகத்தை நடத்தினாரா? ரணிலுக்கு பிரச்சனை என்றவுடன் நீதிமன்றம் போய், எதிர்க்கட்சி பதவியை இழந்தவர்கள், ரணிலை கைது செய்த போது கருத்து கூறி, விமர்சித்து கண்டித்தவர்கள் இப்போ, மாகாண சபை தேர்தலில் நம்பியிருந்த குதிரை, கட்டியணைத்த நண்பர், அவர்களும் இனத்துக்காக போராடியவர்கள் ஆகவே அவரையும் இணைத்துக்கொண்டு பயணம் செய்வோம் என கட்சியை இரண்டுபடுத்தியபவர்கள், எதுவும் பேசாமல் மௌனம் காப்பது ஏன்? டக்கிளஸ் ஒரு இனத்துரோகி என்பதை ஏற்றுக்கொள்கிறார்களா? அல்லது தாங்களும் அகப்பட்டு விடுவோம் என்பதற்காக தவிர்த்துக்கொள்கிறார்களா?
  14. Oman: Jatinder Singh (c), Vinayak Shukla, Mohammad Nadeem, Shakeel Ahmad, Hammad Mirza, Wasim Ali, Karan Sonavale, Shah Faisal, Nadeem Khan, Sufyan Mehmood, Jay Odedra, Shafiq Jan, Ashish Odedara, Jiten Ramanandi, Hasnain Ali Shah. England [Provisional Squad]: Harry Brook (c), Rehan Ahmed, Jofra Archer, Tom Banton, Jacob Bethell, Jos Buttler, Sam Curran, Liam Dawson, Ben Duckett, Will Jacks, Jamie Overton, Adil Rashid, Phil Salt, Josh Tongue, Luke Wood iccAll the squads for ICC Men's T20 World Cup 2026 | ICC Men...The 20 teams set to feature in the ICC Men's T20 World Cup 2026 have started announcing their squads for the mega-event.
  15. இங்கு, வேலன் சுவாமிகள் அரசியல் போராட்டம் நடத்தவில்லை, அவரால் வழிநடத்தப்படும் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு, அந்த மக்கள் தங்கள் நிலங்களையும், வாழ்வாதாரத்தையும் இழந்து அதை மீட்க்கும் போராட்டத்தில் அமைதி வழியில் தமது நிலையை தெற்கிற்கும் உலகிற்கும் வெளிப்படுத்துகிறார்கள். அவர்களோடு துணையாக வேலன் சுவாமிகள் நிற்பதில் என்ன தவறு? அப்போ சிங்கள குடியேற்றம், விகாரை கட்டுதல், மக்கள் நிலங்களை அபகரித்தல் எல்லாவற்றையும் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமென்பவர்கள் தங்கள் சொந்த நிலங்களில் அவர்களுக்கு இருந்தால், கொடுக்கட்டும் பாப்போம். அந்த சூழலில் உள்ள மக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இருக்க இவர்களால் உத்தரவாதம் கொடுக்க முடியுமா? அப்படி இருக்க முடியுமென்றால் ஏன் நாட்டை விட்டு வெளியேறினார்கள் இவர்கள்? மக்களின் ஏகோபித்த குரல் நாங்கள் என்று வாக்கு சேர்த்தவர்களும் மக்களோடு இல்லை, மக்களின் தேவைகளை விட அவர்களுக்கு வேறு என்ன முக்கியமான வேலை இருக்கிறது? மக்களோடு அவர்கள் பிரச்சனைகளில் அவர்களின் பிரதிநிதிகள் துணையாக நிற்க வேண்டுமோ இல்லையோ? மாகாண சபைத்தேர்தலில் யாரோடு கூட்டுச்சேர்ந்து யாரை வீழ்த்துவது என்று முடிவு செய்வதில் அவர்கள் கவனம். வேலன் சுவாமி போலீசாரை அடித்தாரா? ஆயுதம் தூக்கினாரா? அரசியல்தான் பேசினாரா? அன்று, தூஷண பிக்கர் ஒரு கிறிஸ்தவ பாதிரியாரை கன்னத்தில் அறைந்தபோது இங்கும் சிலர் அவர் செயலை ஆதரித்து கருத்து எழுதியிருந்தார்கள். இன்று சைவ தலைவருக்கு அவமரியாதை நடந்திருக்கிறது, தாக்கப்பட்டிருக்கிறார் அதுவும் சரியென்கிறார்கள். பௌத்த துறவி அரசியல் பேசுகிறார், சண்டித்தனம் செய்கிறார், நிலங்களை அபகரிக்கிறார், சட்டத்தை மீறுகிறார், அதை கண்டிக்க முடியவில்லை, தாக்கப்பட்டவர்களை கண்டிப்பது கோழைத்தனம். சைவ ஆலயங்கள் தகர்க்கப்படுகின்றன, மக்களின் வாழ்விடங்கள் வாழ்வாதாயங்கள் பறிக்கப்படுகின்றன, அதை கேட்பது தவறாம், இது என்ன நிஞாயம் என்று தெரியவில்லை. சரி தவறு என்பது என்றால் என்ன என்பது புரியாதவர்களா? தன் சார்ந்த மக்கள் தாக்கப்படும்போது, அவர்களுக்கு அநிஞாயம் நடக்கும்போது வேலன் சுவாமிகள் கைகட்டி பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமோ? அப்படியானால் சட்டம் கைகட்டிக்கொண்டு இருப்பதும் சரியே. வேலன் சுவாமியும் இந்த மக்களிடத்தில் இருந்து தோன்றி, மக்களுக்கு சேவை செய்ய, உண்மையை, நிஞாயத்தை, போதிக்க வந்தவரே. அவரும் மக்களோடு அவலங்களை சந்தித்து இடம்பெயர்ந்தவரே. சிங்களத்துக்கு தமிழரில் துறவியும் இல்லை, கிறிஸ்தவன் சைவன் பேதமுமில்லை, எல்லோரும் தமிழர், அழிக்கப்படவேண்டியவர்களே என்பது மட்டுமே அவர்கள் போதிக்கும், சுவாசிக்கும் மதம் பௌத்தம்.
  16. சரியான விடையை சொன்ன கவிக்கு பாராட்டுக்கள். அந்த பிரதேசசபை உறுப்பினர் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர் என ஊர்ஜிதமாகி உள்ளது.
  17. போராட்ட வெற்றி தோல்வியினை பெரிதும் பாதிக்கும் உலக அரசியல்; ஆரம்பத்தில் பனிப்போர் காலத்தில் இருதுருவ உலக ஒழுங்கு போராட்டத்திற்கு சார்பாக இருந்தது, பின்னர் ஒரு துருவ அமெரிக்க உலக ஒழுங்கு ஏற்ப போராட்ட கொள்கை மாற்றமுடியாமையால் போர் முடிவிற்கு வந்தது, ஆனால் தற்போது நிலைமை வேறாக உள்ளது, இது ஒரு பல்துருவ உலக ஒழுங்கு, இதற்கு ஏற்ப திட்டத்தினை மாற்றவேண்டும். நாம் உக்கிரேன் செய்கின்ற தவறினை செய்யமுடியாது.
  18. புத்த துறவிகளிடம் இருந்து கற்றுக் கொண்டிருப்பார். எனவே துறவிகளையே முதல் திருத்த வேண்டும்.
  19. Yesterday
  20. பொருளாதார எதிரி ஐரோப்பா என சொல்லமுடியாது என நினைக்கிறேன், நீங்கள் கூறும் அன்னிய செலாவணி பரிவர்த்தனை ரீதியாக யுரோ ஒரு மாற்றீடு மட்டுமே அது மிக சொற்பமானது, பெரும்பாலான உலக வர்த்தகத்திற்கு அமெரிக்க நாணயமே தற்போதும் பயன்படுத்தப்படுகிறது. இரஸ்சியா பரிவர்த்தனையில் புதிய தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தி மிக மலிவாக அதே நேரம் வேகமான பரிவர்த்தனையினை அறிமுகப்படுத்தியுள்ளது, சில நாடுகள் அதன் தொழில்னுட்பத்தினை பெற விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது (அதில் சவுதியினை கூறுகிறார்கள் உண்மை பற்றி தெரியவில்லை) ஆனால் அது சுவிப்ட் எனப்படும் ஒரு வகையான பரிமாற்று முறைமையே அது, அமெரிக்க நாணயத்திற்கான மாற்றீடாக இல்லை என கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்). தற்போது அமெரிக்க பணமுறியின் யீல்ட் அதிகரிப்பதற்கான காரணமாக அமெரிக்க நாணயத்தின் முடிவின் ஆரம்பம் என கூறுகிறார்கள், அதற்கு காரணியான விடய்ங்களில் ஐரோப்பா பெரிய தாக்கம் செலுத்தவில்லை என கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்) ஐரோப்பிய பொருளாதாரம் என்பது எனது புரிதலில் ஒரு பிராந்திய பொருளாதாரம், அதன் மொத்த பொருளாதாரத்தின் வலு கிடத்தட்ட அமெரிக்க பொருளாதார வலுவும் சமனாக உள்ளது, அனால் இரண்டு தரப்பினையும் விட குறைவான பொருளாதார வலு கொண்ட சீனாவே இரண்டு தரப்பு பொருளாதாரத்திற்கும் போட்டியாளனாக உள்ளது, அதற்கான காரணம் உண்மையான பொருளாதார வலுவில் இரு தரப்பினையும் மிஞ்சிய தரப்பாக சீனா உள்ளது(PPP). பெரிய தொழில் மீட்பு நிதி அபாயங்கள் குறைந்து வருவதற்கான டிராகியின் அழைப்புக்கு ஐரோப்பிய ஒன்றிய பதில் €400 பில்லியன் ஐரோப்பிய போட்டித்திறன் நிதியை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருகின்றன. இது ஏற்கனவே மிகக் குறைவானது, மிகவும் தாமதமானது போல் தெரிகிறது. கேளுங்கள் இணைப்பை நகலெடு இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2025 இல், டிராகி அறிக்கைக்குப் பிறகு ஒரு வருட மாநாட்டில், முன்னாள் ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவர் மரியோ டிராகி மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன். | ஆலிவர் மேத்திஸ்/EPA டிசம்பர் 17, 2025 காலை 4:00 மணி CET ஆட் வான் டென் ஹோவ் எழுதியது பிரஸ்ஸல்ஸ் - நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்கள் குறைவாகவும், ஏற்கனவே தாமதமாகவும் இருக்கலாம். சீனாவின் கடுமையான போட்டி மற்றும் டொனால்ட் டிரம்பின் அமெரிக்க வரிவிதிப்புகளின் விளைவாக ஐரோப்பிய தொழில்துறை சரிவிலிருந்து காப்பாற்ற ஒரு சிறப்பு முதலீட்டு நிதியை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளில் இதுதான் நிலைமை. 21 ஆம் நூற்றாண்டிற்குள் தனது தொழில்துறையைக் கொண்டுவர, ஆண்டுக்கு €800 பில்லியன் முதலீடு செய்ய வேண்டும் என்று சூப்பர்-டெக்னோக்ராட் மரியோ டிராகி கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவுறுத்தினார் . "காலதாமதம் செய்வதன் மூலம் மட்டுமே ஒருமித்த கருத்தைப் பாதுகாக்க முடியும் என்ற மாயையை நாம் கைவிட வேண்டும்" என்று முன்னாள் ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவரும் இத்தாலிய பிரதமருமான அவர் அப்போது எச்சரித்தார். ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், புதிய ஐரோப்பிய போட்டித்திறன் நிதியத்திற்கான திட்டத்தில் டிராகியின் பரிந்துரைகளை இணைத்தார் . நிதியை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருகின்றன, 2026 ஒரு தீர்க்கமான ஆண்டாக உருவாகிறது. ஆனால், டிராகி நினைத்ததை விட இந்த நிதி சிறியதாக இருக்கும் என்பது ஏற்கனவே தெளிவாகிவிட்டது. அது கடினமாக இருக்கும். மேலும், ஐரோப்பாவின் தொழில்துறை சரிவு வேகம் அதிகரித்து வருவதால், தாமதமாகி வருகிறது. ஐரோப்பிய தொழில்துறையைக் காப்பாற்ற மிகவும் தாமதமாகிவிட்டதா? POLITICO உங்களுக்கு தற்போதைய நிலையைப் பற்றித் தெரிவிக்கிறது: என்ன திட்டம்? 2028 முதல் 2034 வரை இயங்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்த ஏழு ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய தூணாக வான் டெர் லேயன் ஜூலை மாதம் ECF ஐ அறிவித்தார் . முன்மொழியப்பட்டபடி, ஐரோப்பிய தொழில்துறை கொள்கையை பொதுவான மூலோபாய நோக்கங்களை நோக்கி நெறிப்படுத்தும் நோக்கில், ECF ஏற்கனவே உள்ள பல திட்டங்களை ஒரு பெரிய பணத்தில் இணைக்கும். ECF இன் கீழ் நிதியளிப்பதற்கான ஒற்றைப் பாதையை உருவாக்குவதன் மூலம், நிறுவனங்கள், தொடக்க நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒரே ஒரு கோரிக்கையை மட்டுமே நிரப்ப வேண்டும். 14 வெவ்வேறு விண்ணப்பப் படிவங்கள் வெளியிடப்படும். ஆணையத்தின் முன்மொழிவின் கீழ், நிதி நான்கு தூண்களாக அல்லது "ஜன்னல்களாக" பிரிக்கப்படும்: சுத்தமான மாற்றம் மற்றும் தொழில்துறை கார்பனேற்றம்; டிஜிட்டல் தலைமை; சுகாதாரம், உயிரி தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் உயிரி பொருளாதாரம்; மற்றும் மீள்தன்மை, பாதுகாப்புத் தொழில் மற்றும் விண்வெளி. அதில் எவ்வளவு பணம் இருக்கும்? ECF-க்கு €410 பில்லியன் பட்ஜெட் இருக்கும் - இது ஏழு ஆண்டு பட்ஜெட் சுழற்சியில் முதலீடு செய்யப்படும். EU-வின் முக்கிய பட்ஜெட்டிலிருந்து தனித்தனியாக ஒரு புதுமை நிதியைச் சேர்ப்பது, மொத்த தொகையை €450 பில்லியனாகக் கொண்டுவரும். அது EUவின் €2 டிரில்லியன் நீண்ட கால பட்ஜெட்டில் ஐந்தில் ஒரு பங்கிற்கு மேல் ஆகும். ஆனால் அது இன்னும் டிராகி அடையாளம் கண்ட மொத்த தேவைகளில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே ஈடுகட்டும். இந்த இடைவெளியை நிரப்ப, ஒற்றைச் சந்தையில் முதலீடு செய்வதை எளிதாக்கவும், செயலற்ற நிலையில் இருக்கும் ஓய்வூதியப் பணத்தைத் திரட்டவும், மூலதனச் சந்தை ஒன்றியத்தை முடிக்குமாறு டிராகி ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தியுள்ளார். இருப்பினும், இந்த முனைகளிலும் முன்னேற்றம் மெதுவாகவே உள்ளது. ECF-க்குத் திரும்பு: பாதுகாப்பு மற்றும் விண்வெளிக்கு €131 பில்லியன் ஒதுக்கப்படும்; புதுமை நிதியிலிருந்து சுமார் €40 பில்லியன் உட்பட €67.4 பில்லியன் - சுத்தமான தொழில்நுட்பத்திற்காக; டிஜிட்டலுக்கு €54.8 பில்லியன்; மற்றும் சுகாதாரம் மற்றும் உயிரி தொழில்நுட்பத்திற்கு €22.6 பில்லியன். இந்த அமைப்பின் ஆராய்ச்சித் திட்டமான ஹொரைசன் ஐரோப்பா, ECF உடன் தனித்தனியாக ஆனால் இறுக்கமாக இணைக்கப்பட்ட ஒரு நிதியில் €175 பில்லியனைப் பெறுகிறது. அந்த நிதி எப்படி வேலை செய்யும்? பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதைத் தீர்மானிக்கும் முழு நிதிக்கும் ஒரு செயல்பாட்டுத் திட்டத்தை அமைத்து வழிநடத்த ஆணையம் விரும்புகிறது. ஆனால் EU அரசாங்கங்களும் ECF-ஐ நடத்துவதில் ஒரு பங்கைக் கொண்டிருக்க அழுத்தம் கொடுக்கின்றன. ஆணையம், அதன் பங்கிற்கு, எளிதில் மாற்ற முடியாத செலவின உறுதிமொழிகளில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்க நெகிழ்வுத்தன்மையைப் பராமரிக்க விரும்புகிறது. வேலைத் திட்டங்களுக்குள் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதில் உறுப்பு நாடுகள் அதிக பங்களிப்பை வலியுறுத்தி வந்தாலும், பணத்தை எவ்வாறு சிறப்பாக ஒதுக்குவது என்பது குறித்து அவர்களால் தங்களுக்குள் உடன்பட முடியவில்லை. சிலர், ECF புவியியல் சமநிலையின் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்றும், EU-வில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் உள்ள திட்டங்களுக்கு நிதி கிடைப்பதற்கான நியாயமான வாய்ப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்கள். மற்றவர்கள், EU-வில் எங்கிருந்தாலும், மிகவும் உயர்தர, தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் புதுமையான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று வாதிடுகின்றனர். இந்த பிரச்சினை இன்னும் நாடுகளுக்கு இடையே விவாதிக்கப்பட்டு வருகிறது, இன்னும் தெளிவான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. ரொம்ப சிக்கலானதா இருக்கு... அது இருக்க வேண்டிய அவசியமில்லை. மற்ற நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எவ்வளவு வழியைப் பெறுகின்றன என்பதைப் பொறுத்து, நிதி முந்தைய திட்டங்களை விட சுறுசுறுப்பாக இருக்கலாம். ஐரோப்பிய கொள்கை மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான பிலிப் லாஸ்பெர்க்கைப் பொறுத்தவரை, ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் எவ்வளவு அதிகமாகச் சொல்கிறதோ, அவ்வளவுக்கு நிதியை இயக்குவது மிகவும் சிக்கலானதாக இருக்கும். "இது விஷயங்களை மெதுவாக்கும், மேலும் இது விஷயங்களை குறைவான செயல்திறன் மிக்கதாக மாற்றும்," என்று அவர் POLITICO இடம் கூறினார். "27 உறுப்பு நாடுகளை விட ஆணையம் மிகவும் ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கொண்டுள்ளது." ஒரு ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கம் ஒரு திட்டத்தை ஆதரிக்க விரும்பினால் என்ன செய்வது? தற்போதைய ECF திட்டம் EU நாடுகள் நிதியை நிரப்ப அனுமதிக்கும். இந்தப் பணம் எவ்வாறு ஒதுக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், தேசிய நன்மைகளைத் தராத திட்டங்களுக்கு அரசாங்கங்கள் நிதியளிக்காது என்று கருதுவது பாதுகாப்பானது. இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், பெரிய, பணக்கார நாடுகள் - ஜெர்மனி அல்லது பிரான்ஸ் போன்றவை - சிறிய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களை விட அதிக பட்ஜெட் ஆயுத சக்தியைக் கொண்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை சந்தையில் நியாயத்தைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட அரசு உதவி குறித்த விதிகள் நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்வதே இங்கு சவாலாக இருக்கும். அரசு உதவி தொடர்பான அந்த விதிகள் பற்றி... ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் திட்டங்களை EU நிர்வாகிக்கு அறிவிக்கும்போது தேர்வுசெய்யக்கூடிய மாநில உதவி கட்டமைப்புகளின் பட்டியல் உள்ளது - ஒவ்வொன்றும் அதன் சொந்த குறிப்பிட்ட நோக்கங்களைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, சுத்தமான தொழில்துறை ஒப்பந்த மாநில உதவி கட்டமைப்பு, EU அரசாங்கங்கள் சுத்தமான தொழில்நுட்ப திட்டங்களை ஆதரிப்பதை எளிதாக்குவதையும், ஆற்றல் மிகுந்த தொழில்கள் கார்பனைஸ் நீக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடமிருந்து கூடுதல் நிதி, ஏலம்-ஒரு-சேவை பொறிமுறை என்று அழைக்கப்படும் தேசிய திட்டங்களுக்குத் திரும்பப் பாயக்கூடும். இது அரசாங்கங்கள் தேசிய போட்டித் திட்டங்களுக்கு நிதியளிக்க ஒரு பெரிய ஐரோப்பிய அழைப்பு அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தால் நிர்வகிக்கப்படும் ஏலத்தில் ஈடுபட அனுமதிக்கும். சர்வதேச திட்டங்கள் பற்றி என்ன? ECF திட்டம், பொதுவான ஐரோப்பிய ஆர்வமுள்ள முக்கியமான திட்டங்களுக்கான ஐரோப்பிய நிதியுதவிக்கு தேசிய அளவில் நிதி திரட்டுவதையும் முன்னறிவிக்கிறது - இது ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் எல்லை தாண்டிய, அதிநவீன திட்டங்களுக்கு அரசு உதவியைத் திரட்ட அனுமதிக்கும் ஒரு வாகனமாகும். மீண்டும், இது நடைமுறையில் எவ்வாறு செயல்படும் என்பது நிச்சயமற்றது, ஏனெனில் ஆணையத்தின் அசல் திட்டத்தில் ஓரிரு வாக்கியங்கள் மட்டுமே உள்ளன. இருப்பினும், ஒன்று தெளிவாக உள்ளது, ஆணையம் IPCEI களுக்கு சொந்தமாக நிதியளிக்க விரும்பவில்லை - தேசிய நிதியுதவியும் ஒருங்கிணைந்ததாக இருக்கும். இவை அனைத்திலும் ஐரோப்பிய பாராளுமன்றம் எந்த நிலையை எடுக்கிறது? இணை-சட்டமன்ற உறுப்பினராக, ஐரோப்பிய பாராளுமன்றம் மற்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் - மேலும் அதன் விவாதங்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசுகளுக்கிடையேயான பிரிவான ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலை விட மிகவும் முந்தைய கட்டத்தில் உள்ளன. பாராளுமன்றத்திற்கான முன்னணி பேச்சுவார்த்தையாளர்கள் நவம்பர் தொடக்கத்தில்தான் நியமிக்கப்பட்டனர் - அவர்கள் ஜெர்மன் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கிறிஸ்டியன் எஹ்லர் மற்றும் ரோமானிய சோசலிஸ்டுகள் மற்றும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த MEP டான் நிகா. வசந்த காலத்திற்குள் அவர்கள் ஒரு அறிக்கையை வரைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது தொழில்துறை, ஆராய்ச்சி மற்றும் எரிசக்தி குழுவால் வாக்கெடுப்புக்கு சமர்ப்பிக்கப்படும் - மற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் திருத்தங்களுடன் - அது முழுமையான வாக்கெடுப்புக்குச் செல்லும் முன். அந்தத் தடை நீங்கியவுடன் மட்டுமே, பாராளுமன்றம் மற்ற ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சட்டமன்ற சமரசத்தை உருவாக்கும். பணம் எப்போது வரத் தொடங்கும்? அடுத்த ஐரோப்பிய பட்ஜெட் சுழற்சி 2028 இல் தொடங்குவதற்கு முன்பு அல்ல. இப்போதும் இப்போதும் நிறைய மாறலாம். https://www.politico.eu/article/eu-answer-draghi-call-big-industry-rescue-fund-risks-falling-short/ உக்கிரேன் இரஸ்சிய போர் ஆரம்பகாலத்தில் உங்களது கருத்து தொடர்பில் நேரெதிரான கருத்துக்களை கொண்டிருந்தோம்; தற்போது நிகழும் மாற்றங்கள் உங்களது அந்த கால கருத்துக்கள் சரி என்பதனை நிரூபிக்கின்றது, தற்போதய எனது கருத்தும் தவறு உங்களது கருத்துதான் சரி என வரும் நிலை உருவாகலாம்.
  21. என்ன ப்ரோ!? தெரிந்தும் தெரியாமலும் எழுதுகின்றீர்கள்.ஈழ அரசியலில் அன்றைய காலகட்டத்தில் அதி வலதுசாரி போக்கை எடுத்திருந்தால் அயல் நாட்டவனான பாரத தேசத்தான் அன்றே ஒரு முள்ளிவாக்கால் நிகழ்வை நிகழ்த்தியிருக்க மாட்டானா? இன்றும் பங்களா தேசம்,நேபாளம்,பூட்டான்,பர்மா போன்ற தேசங்கள் படும் அவலங்களை பார்க்கவில்லையா? ஏன் கனக்க.... ஈழத்தமிழர் படும் அவலங்களுக்கும் விடிவில்லாமைக்கும் யார் காரணம்?
  22. நம்பிகையானவர்களை,நம்பிக்கையான நிறுவனங்களை யாராவது பரிந்துரை செய்தால் மாதாந்த அல்லது குறிப்பிட்ட தொகையை கொடுக்கலாம். 2009க்கு பின்னர் பட்ட அனுபவங்களால் தான் மேற்குறிப்பிட்ட கருத்தை எழுதினேன். பொது பண விடயத்தில் என் சொந்தங்களைக் கூட நம்ப நான் தயாரில்லை.
  23. மதமும் அரசியலும் கலக்க கூடாது என்பது அனைவருக்கும் பொருந்தும் (உலாமா சபைக்கும்). ஆனால் சங்கிகள் தனியே மதம் சம்பந்தபட்டோர் மட்டும் அல்ல, அவர்கள் தமிழ் தேசியத்துக்கு ஜென்ம வைரியான இந்திய தேசியத்தின் கூறுகள். ஆகவே சங்கிகளை இனம் கண்டு எதிர்ப்பது அரசியல் தத்துவார்த்த ரீதியானது.
  24. நன்றி அண்ணா. இங்கே என் எழுத்தின் தொனி பிழைத்து விட்டது. என்னால் பண பரிவர்தனையில் ஈடுபடமுடியாது. ஆனால் பங்களிப்பேன்.
  25. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 77 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 77 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை இலங்கையின் மதமாற்றத்தை விவரிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவின் மடங்கள் அல்லது துறவறக் கட்டளைகளுடன் தொடர்புடைய கதைகள் அல்லது புனைவுககளின் சுருக்கம் அத்தியாயங்கள் VI [VI. The Ceylonese Legend of Asoka] மற்றும் VII [VII. The Indian Legends of Asoka] இல் இந்த புத்தகத்தில் காணப்படுகிறது. அவற்றை வரலாறாக ஏற்றுக்கொள்ள முடியாது, மேலும், உண்மையில், தீவின் மதமாற்றம் அது பழைய புனைவுகளில் கூறப்பட்டதை விட மிகவும் மெதுவாக நடந்திருக்க வேண்டும். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றிய எந்த அதிகாரப்பூர்வமான விவரமும் எங்களிடம் இல்லை. இப்போது அசோகர் கல்வெட்டுக்களின் கூற்றுக்களின் படி, அது இலங்கையைப் பற்றி அமைதியாக உள்ளது. எனவே, உள்ளூர் துறவியரின் கதைகளை உறுதிப்படுத்தும் தெளிவான வரலாற்றுப் பதிவுகளோ அல்லது அசோகப் பேரரசரிடமிருந்து அதிகாரப்பூர்வ கல்வெட்டுகளோ இல்லை என்பதே உண்மை. அசோகரின் மகள் என்று கூறப்படும் சங்கமித்தாவின் கதை கேள்விக்குரியது. அவளுடைய பெயருக்கு "ஒழுங்கின் தோழி" ["Friend of the Order"] என்று பொருள். இது ஒரு உண்மையான நபரின் பெயரை விட ஒரு குறியீட்டு பட்டமாகத் தெரிகிறது. மேலும், எந்த கல்வெட்டுகளிலும் அவளைப் பற்றி குறிப்பிடப்படவில்லை. [சங்கமித்தா பிறக்கும் பொழுது ஒரு இந்து, அப்படி என்றால், எப்படி அவளுக்கு "ஒழுங்கின் தோழி" என்று பெயர் சூட்டி இருப்பார்கள்?] மகிந்த மற்றும் அவரது சகோதரியின் கதைகள், பின்னர் இலங்கையில் பௌத்தத்திற்கு ஒரு மகத்தான வரலாற்றை வழங்கவும், பிரபல பேரரசரான அசோகருடன் இணைக்கவும் உருவாக்கப்பட்டதாக பேராசிரியர் ஓல்டன்பெர்க் [Professor Oldenberg] நம்புகிறார். மகிந்தா மற்றும் சங்கமித்தா பௌத்தத்தை ஒரே நிகழ்வில் கொண்டு வந்திருக்க முடியாது. அது மிகவும் மெதுவாகவும் படிப்படியாகவும் பரவி இருக்கலாம். அதாவது, யதார்த்தம் மிகவும் படிப்படியாக இருந்து இருக்கும் சுருக்கமாக, இலங்கைக்கு பௌத்தம் வருவது பற்றிய பாரம்பரியக் கதைகள் முற்றிலும் உண்மையாக இருக்காது என்றும், இந்த செயல்முறை புராணக்கதைகள் கூறுவதை விட படிப்படியாகவும் குறைவான வேகத்துடனும் நடந்து இருக்கலாம் என்றும் இந்தப் பகுதி கூறுகிறது. The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919' என்ற நூலில், பக்கம் 49 தொடக்கம் 51 வரையில் உள்ள பகுதியின் எளிமையான விளக்கம் என்னவென்றால், பௌத்தம் காலப்போக்கில் இலங்கைக்கு பரவியது: பௌத்த இலக்கியங்கள் [Buddhist literature] (பாளி மற்றும் ஒருவேளை சிங்கள மொழியில் எழுதப்பட்டவை) இலங்கைக்கு ஒரே நேரத்தில் வரவில்லை. அதாவது, மகத நாடு (இந்தியாவில் புத்த மதம் தோன்றிய இராச்சியம்) அல்லது மகதம் (Magadha) பேரரசுடனான நேரடித் தொடர்பின் திடீர் விளைவை விட, மாறாக, இலங்கைக்கும், இலங்கைக்கு அருகில் உள்ள இந்தியாவின் பகுதிகளுக்கும் இடையிலான வழக்கமான தொடர்பு மூலம் புத்த மதம் படிப்படியாகப் பரவியது. சைனம் மற்றும் பௌத்தத்தின் வளர்ச்சியில் மகதமானது ஒரு முக்கியப் பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவில் புத்த மதம்: 5 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவிற்கு வருகை தந்த சீன பயணிகள், புத்த மதம் தென்னிந்தியாவை அடைந்து சிறப்பாக வளர்ச்சி பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். சில புத்த மடங்கள் தென் இந்தியா தமிழ் பகுதிகளில் இருந்தன, அவை இலங்கையின் புத்த நம்பிக்கைக்கும் செல்வாக்கு செலுத்தின கி.பி ஏழாம் நூற்றாண்டில் ஹியுங் சாங் (Hiuen Tsang) எனும் நாடுகண் சீன பிக்கு [the Chinese 7th Century, Buddhist monk, scholar traveller], பாண்டிய அரசனின் மதுரைக்கு அண்மையில், மகிந்த தேரரால் ஒரு மடாலயம் கடப்பட்டதாக குறிப்பிடுகிறார் [a monastery built by Mahinda thera]. அவர் மேலும் காஞ்சிபுரத்தில் ஒரு தூபி [stupa] அசோகனால் கடப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். மேலும் காஞசிபுரம் ஒரு செழிப்பான நகரம் என்றும், அங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் புத்த மதத்தை தழுவியவர்கள் என்றும் குறிப்பிடுகிறார் [Kanchipuram as a flourishing city and states that most of its population was Buddhist]. பாண்டிய இராச்சியத்தில் (கி.பி 640) மத நிலைமைகள்: ஹியுங் சாங், மலைக்கோடடை பகுதிக்கு (காவிரி நதிக்கு தெற்கே உள்ள பாண்டிய இராச்சியம்) விஜயம் செய்து பல்வேறு மதக் குழுக்களைக் கவனித்தார். சிலர் புத்த மதத்தைப் பின்பற்றினர், மற்றவர்கள் இந்து மதம் அல்லது சமண மதத்தைப் பின்பற்றினர். பல புத்த மடாலயங்கள் இடிபாடுகளில் இருந்தன, சுவர்கள் மட்டுமே அங்கு இருந்தன. இந்து கோயில்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தன, மேலும் பலர் சமண மதத்தைப் பின்பற்றினர். மகேந்திரனும் [மகிந்த] அவரது இலங்கைப் பயணமும்: மதுரைக்கு (பாண்டிய இராச்சியம்) அருகில், புதர்களால் மூடப்பட்ட ஒரு பழைய புத்த மடாலயம் இருந்தது. இந்த மடாலயம் பேரரசர் அசோகரின் தம்பி மகேந்திரனால் [மகிந்த] கட்டப்பட்டதாக பாரம்பரியம் கூறப்படுகிறது. அங்கே அருகிலுள்ள ஒரு தூபி (ஒரு புத்த ஆலயம்) அசோகரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. Part: 77 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 “the conversion of the island must have been a process of much slower than it is represented to have been”. The Edicts, as now interpreted, are silent about Ceylon, and cannot be cited in support of the local monastic traditions, which although resting upon a basis of fact, are wholly untrustworthy of details. We must be content to admit our ignorance, which is likely to continue. I am sceptical about the tale of Samghamitta, the supposed daughter of Asoka. Her name, which means ‘Friend of the Order’, is extremely suspicious, and the inscriptions give no indications of her existence. Professor Oldenberg has much justification for his opinion that the story of Mahinda and his sister seems to have been-‘invented for the purpose of possessing a history of the Buddhist institutions in the island, and connect it with the most distinguished person conceivable – the great Asoka. The historical legend is fond of poetically exalting ordinary occurrences into great and brilliant actions; we may assume that, in reality, things were accomplished in a more gradual and less striking manner than such legends make them appear’. The naturalization in Ceylon of the immense mass of Buddhist literature now exist in Pali and, I believe, also in Sinhalese, must necessarily have been a work of time, and seem to be the fruit of long and continuous intercourse between Ceylon and the adjacent parts of India, rather than the sudden result of direct communication with Magadha. The statements of the Chinese pilgrims in the fifth and seventh centuries prove that Asoka’s efforts to propagate Buddhism in the far South were not in vain, and that monastic institutions existed in the Tamil countries, which were in a position to influence the faith of the island. Hiuen Tsang mentions one stupa in the Chola country, and another in the Dravida or Pallava kingdom ascribed to Asoka. Still more significant is his description of the state of religion in A. D. 640 in the Malakotta Pandya country to the south of the Kaviri (Cauvery), where he found that- ‘Some follow the true doctrine, others are given to heresy. They do not esteem learning much, but are wholly given to commercial gain. There are the ruins of many old convents, but only the walls are preserved, and there few religious followers. There are many hundred Deva (Brahmanical) temples, and a multitude of heretics, mostly belonging to the Nirgranthas (Jains). Not far to the east of this city (the unnamed capital,? Madura) is an old Sangharama (monastery) of which the vestibule and court are covered with wild shrubs; foundation walls only survive. This was built by Mahendra, the younger brother of Asoka-raja. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 78 தொடரும் / Will follow துளி/DROP: 1964 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 77] https://www.facebook.com/groups/978753388866632/posts/33063046316677256/?
  26. கிறிஸ்துவ பாதிரியார்கள், பெளத்த துறவிகள் போராட்டங்களில் ஈடுபடும்போது அவை ஆதரிக்கப்படுவதும், வேலவன் சுவாமிகள் என்றதும் அது ஆதரிக்கப்பட முடியாமல் போவதும், சங்கி என பட்டம் கட்டப்படுவதும் போராட்டத்தை எந்த மத துறவி செய்கின்றார் என்பதை பார்த்தே ஆதரவு கொடுக்கப்படுகின்றதா என ஐயம் ஏற்படுகின்றது. வேலவன் சுவாமிகளுக்கு கொடுக்கும் அறிவுரைகளை கிறிஸ்தவ துறவிகளுக்கு கூற முடியுமா? பெளத்த துறவிகளுக்கு கூற முடியுமா? தலாய் லாமாவுக்கு கூற முடியுமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.