stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
“60 வயதுக்கு மேல் இளமையாக இருப்பது எப்படி?” – ஆரோக்கியத்திற்கான 5 எளிய மந்திரங்கள்!
எதுக்கும் முதல் போடவேண்டும் என்பதை போல, 60 களில் ஆரோக்கிய்யம் இயன்ற அளவு அவரவர் கட்டுபாட்டில் இருக்க, ஆக குறைந்தது 50 வயதில் இருந்து தயார் படுத்த வேண்டும். விரும்பியதை கைவிடட வேண்டும் என்பது அல்ல, உணவில், அசைவில் .. போன்றவற்றில் வேண்டிய, அல்லது இயன்ற மாற்றங்கள் மாற்றங்கள்
-
தேசங்களின் குரல்கள்
இங்கேயும் அப்படித்தான். அவர்கள் பார்வையில் இந்தியனாகத்தான் என்னைப் பார்த்தார்கள். ஒரு சிலர் “ஆபிரிக்காவா?” என்றும் கேட்டதுண்டு. அதிகம் எதற்கு, என்னை முதன் முதலாக சந்தித்த போது, தமிழ்சிறி என்னை பிறேஸிலியன் என்றே நினைத்துக் கொண்டாராம். சரி..சரி.. நானும் ஒத்துக்கொள்கிறேன்😊 தமிழ், சிங்களம் எனப் பிரிந்திருந்தாலும் ஆங்கிலம் எங்களுக்குப் பொது மொழியாகவே இருக்கிறது. ஒருவேளை கூட்டுக் கோழிக்கு, அவர்களுடனான பழக்கத்தில் அந்தத் தொனி வந்திருக்கலாம்.
-
அமரசிறி : கருணாகரன்
நீண்ட கதை. பார்த்தவுடன் பிறகு வாசிக்கலாம் என்று விட்டுவிட்டேன். அதிகாலையில், அமைதியான நேரங்களில்தான் நான் அதிகம் வாசிப்பேன். இன்று 'அமரசிறி'யை வாசிக்க முடிந்தது. வாசிக்கத் தொடங்கியபோது, பல நினைவுகள் வந்து குழப்பிக் கொண்டிருந்தன. அதனால், நின்று நிதானித்து வாசிக்க, நினைத்த நேரத்தை விட கொஞ்சம் அதிகமான நேரம் எனக்குத் தேவைப்பட்டு விட்டது. சில விஷயங்கள், அதை நாங்களே செய்யாவிட்டாலும், பார்வையில் விழுந்து விட்டாலே நினைவில் தங்கிவிடும். என்னிடமும் பல நினைவுகள் இருக்கின்றன. இன்றுவரை அதை மறக்க முடியவில்லை. எப்போதாவது, அவை வந்து போகின்றன. 'அமரசிறி'யை வாசிக்கும் போதும், அந்த நினைவுகள் வந்து நின்று தொல்லைகளும் தந்தன. எண்பதுகளின் ஆரம்பம். வெளிநாட்டுக்கு இடம் பெயர்வதற்கான எண்ணம் எனக்குள் தோன்றிய காலம். பத்திரகாளி கோவில் வாசலோடு இருந்த திண்ணையில் அமர்ந்து, நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். திடீரென வீதியில் சலசலப்பு. வெள்ளை வானில் இருந்து கைகள் கட்டப்பட்டவரை ஒருவர் அழைத்து வந்தார், இல்லை, இழுத்துக் கொண்டு வந்தார். அவர்களின் பின்னால் ஆயுதம் ஏந்திய இருவர் வந்து கொண்டிருந்தனர். இழுத்துக் கொண்டு வந்தவர் எனக்கு நன்கு தெரிந்தவர், பின்னாளில் கடற்படைத் தளபதியான சூசை. அப்போதிருந்த பதட்டத்தில் எல்லோரும் போல், நானும் எழுந்து கொண்டேன். என்னை கடந்து போகும் போது, சூசை மட்டுமல்ல, இழுத்து வந்தவரும் என்னைப் பார்த்தார், அல்லது எங்களைப் பார்த்தனர். அந்த மனிதர், "தண்ணீர்" என்று கேட்டார். ஒரு நொடிதான், இழுத்துக் கொண்டு செல்லப்பட்டுவிட்டார். அந்த ஒரு நொடியிலான அவரது பார்வையும், "தண்ணீர்" கேட்ட அவரது குரலும், இன்றும் நினைவில் வந்து, வந்து போகின்றன. நடப்பதைப் பார்க்க கூட்டம் கூடியது. நான் பத்திரகாளி கோவிலின் முன்னாலேயே நின்று விட்டேன். "காட்டிக் கொடுப்பவர்களுக்கும், துரோகிகளுக்கும் இதுதான் தண்டனை" என்ற சூசையின் குரல் கேட்டது. தொடர்ந்து ஒரு துப்பாக்கியின் வெடிச்சத்தம். நின்று கொண்டிருந்த காந்தி சிலைக்குப் பின்னால், கம்பத்தில் கட்டப்பட்டிருந்தவரின், தலை தொங்கிய நிலையில், நெற்றியில் பொட்டு வைக்கப்பட்டிருந்தது. எங்கள் நகரத்தில் நடந்த முதல் சம்பவம் இதுதான். அவர் மலையகத்தைச் சேர்ந்தவர். அவரது பெயர் சிவனுகணேசன். நாற்பது வருடங்களுக்கு மேலாக, அடிக்கடி என்னிடம் வந்து போகிறவர்களில் சிவனுகணேசனும் ஒருவர்.
- Today
-
ஆல்கஹால் இல்லாத பியர், வைன் போன்ற பானங்கள் உடலுக்கு நல்லதா?
அண்மையில் நானும் இந்த மதுவல்லாத பியரில் கொஞ்சம் நாட்டம் காட்டுகிறேன். இப்போதைக்கு ஹைனிக்கன் 0%, ஸ்டெல்லா 0% சுவை நன்றாக உள்ளது. ஏனையவை பிடிக்கவில்லை. ஆனால் கவனமாக இருக்க வேண்டும் சிலது zero sugar ஆனால் அல்கஹோல் இருக்கும். பார்த்து வாங்காவிட்டால் கற்பு பறிபோய்விடும்😂
-
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
இங்க கருத்துக்களை பார்த்தால்… “என்னது பெரியவர் சாகலியா… செத்துடார்ன்னு நம்பி வெட்டியான் கூட சாரயத்தை கடனுக்கு குடிச்சிட்டானே”… எண்ட விவேக் ஜோக்தான் நினைவுக்கு வருகிறது. கவலை வேண்டாம் மகிந்த சாகும் போது அனுர முன்னிலையில் முழு ராசமரியதையுடன் சங்கநாயகர்கள் ஓதித்தான் அனுப்புவார்கள். தர்மத்தின் வாழ்வதை சூது கவ்வும்… மறுபடியும் தர்மமே மண்ணை கவ்வும்😂
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
டங்க டலீவர் டக்கா அவர்களையும், ரணில் போல ஒரு “நிக்காத வழக்கில்” அனுர அரசு கைது செய்து நாடகம் ஆடுகிறது. ரணில், டக்லசை எல்லாம் தண்டிப்பது அல்ல அனுரவின் நோக்கம். டக்காவும் அனுரவும் ஒரே கூட்டணியில் இருந்தோர்தான். #ஈயம் பூசுனா மாரியும் இருக்கோணும், பூசவும் கூடாது
-
ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.கவும்! - ஷோபாசக்தி
ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.கவும்! ஷோபாசக்தி இந்தியப் பெருநிலப் பரப்பிலிருந்து பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்ந்த தெற்கு நோக்கிய புலப்பெயர்வே இலங்கைத் தீவின் தமிழ் – சிங்களம் பேசும் மக்களின் நிலைத்த குடிசன வரலாறு. இனம், மதம், பண்பாடு, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இரு நிலங்களுக்கும் இடையே பெரும் ஒற்றுமையுண்டு. நிலையான தேசங்கள் தோன்றாத பண்டைய காலத்திலும் பின்னர் காலனியக் காலத்திலும் இலங்கைத் தீவின் வரலாறு எப்போதும் இந்தியப் பெருநிலத்துடன் இணைத்தே எழுதப்பட்டிருக்கிறது. கண்டி அரசின் கடைசி நான்கு மன்னர்களும் மதுரை நாயக்கர்கள் என்பதும், யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னர்கள் ஆரியச் சக்கரவர்த்திகள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கவை. சுதந்திரத்திற்குப் பின்னான இலங்கையின் உள்நாட்டு அரசியலிலும் பொருளியலிலும் போரிலும் இந்திய ஒன்றிய அரசின் தலையீடும் கட்டுப்பாடும் இன்றுவரை வலுவாகவே இருக்கின்றது. எனவே, இந்தியப் பெருநிலப் பரப்பில் நிகழ்ந்த எந்த அரசியல் – பண்பாட்டு மாற்றங்களும் இலங்கையிலும் வலுவான பாதிப்பைச் செலுத்தியுள்ளன. இந்த வகையில், தமிழகத்தில் தோன்றிய திராவிட இயக்கக் கருத்தியல் இலங்கைத் தமிழர்களிடையேயும் உடனடியாகவே பரவத் தொடங்கியது. 1925-இல் ஈ.வெ.ரா. பெரியாரால் தொடக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் கருத்தியலை உள்வாங்கி, 1927-இல் யாழ்ப்பாணத்தில் ‘திராவிடன்’ பத்திரிகை வெளியாகத் தொடங்கியது. ‘திராவிட வித்தியா அபிவிருத்தி சங்கம்’, ‘திராவிட வித்தியாசாலை’ ஆகியவை யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டன. வடமராட்சியில், தமிழறிஞரும் பகுத்தறிவாளருமான கந்தமுருகேசனாரின் தலைமையில் இளைஞர் திரள் திராவிட இயக்கச் சிந்தனைகளுடன் செயற்பட்டது. இவர்களால் ‘திராவிடர் கலை மன்றம்’ என்ற வாசகசாலை ஆரம்பிக்கப்பட்டு ‘திராவிட நாடு’ ,’குடியரசு’ போன்ற பத்திரிகைகள் தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்டன. 4 பெப்ரவரி 1938-இல் ‘புலோலி’ கிராமச் சங்கத் தேர்தலில் ‘துறையா’ வார்ட்டில் சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் முருகப்பர் வேலுப்பிள்ளை போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார். இவர் புரோகித மறுப்புச் சங்கத்தின் தலைவருமாவார். அதேபோன்று ‘ஆலடி’ வார்ட்டில் சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் ப.கதிர்காமர் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இந்தச் செய்தியை 10 ஏப்ரல் 1938 தேதியிடப்பட்ட ‘குடியரசு’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. தொகுத்துப் பார்க்கும்போது ஈழத் தமிழர்களிடையே தமிழ்த் தேசியச் சிந்தனைகளும் இடதுசாரிச் சிந்தனைகளும் அறிமுகமாவதற்கு முன்பே திராவிட இயக்கச் சிந்தனைகள் அறிமுகமாகியிருந்தன எனக் கருதக் கூடியதாகவே உள்ளது. 1932-இல் கொழும்பில் ‘இலங்கை சுயமரியாதை இயக்கம்’ ஆரம்பிக்கப்பட்டது. இதே வருடத்தில்தான் பெரியார் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொழும்பு, கண்டி, நாவலப்பிட்டி, ஹட்டன், யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆகிய இடங்களில் உரைகளை நிகழ்த்தினார். அந்த உரைகளில் தேசம், தேசியம், சாதி, மதம் போன்றவற்றைக் கடுமையாகத் தாக்கி விமர்சித்துப் பேசி, பகுத்தறிவையும் சுயமரியாதையையும் ஒடுக்கப்பட்டவர்களின் ஒற்றுமையையும் பெரியார் வலியுறுத்தினார். ‘தேசியம் ஒரு கற்பிதம்’ என்ற எண்ணத்தை முன்வைத்தார். இதற்கு 50 வருடங்கள் கழித்துத்தான் பெனடிக்ட் ஆண்டர்ஸனின் ‘Imagined Communities’ என்ற புகழ்பெற்ற நூல் வெளியாகி, தேசியம் என்பது கட்டமைக்கப்பட்ட கருத்தாக்கம் என்றவாறான சிந்தனை 1990-களில் தமிழில் விவாதிக்கப்பட்டது. “தோழர்களே! கடவுள், மதம், ஜாதியம், தேசியம், தேசாபிமானம் என்பவைகள் எல்லாம் மக்களுக்கு இயற்கையாக தானாக ஏற்பட்ட உணர்ச்சிகள் அல்ல. சகல துறைகளிலும் மேல்படியிலுள்ளவர்கள் தங்கள் நிலை நிரந்தரமாயிருக்க ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கட்டுப்பாடான ஸ்தாபனங்களின் மூலம் பாமர மக்களுக்குள் புகுத்தப்பட்ட உணர்ச்சிகளேயாகும். இந்தப்படி புகுத்தப்படவேண்டிய அவசியமும், காரணமும் என்னவென்று பார்த்தால் அவை முற்றும் பொருளாதார உள் எண்ணத்தையும், அந்நியர் உழைப்பாலேயே வாழவேண்டும் என்கின்ற உள் எண்ணத்தையும் கொண்ட பேராசையும், சோம்பேறி வாழ்க்கைப் பிரியமுமேயாகும்” என்று தனது கொழும்பு உரையில் பெரியார் குறிப்பிட்டார். 1944-இல் இந்தியாவில் சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் இணைக்கப்பட்டு ‘திராவிடர் கழகம்’ தோற்றுவிக்கப்பட்டபோது, இலங்கை சுயமரியாதை இயக்கமும் ‘திராவிடர் கழகம்’ எனப் பெயர் மாற்றிக்கொண்டது. 1949-இல் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறியவர்கள் தி.மு.கவை நிறுவியபோது, இலங்கையிலும் அவ்வாறே திராவிடர் கழகத்திலிருந்து ஏ.இளஞ்செழியனின் தலைமையில் ‘இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகம்’ (இ.தி.மு.க.) தோற்றம் பெற்றது. இ. தி.மு.க. இலங்கைக்கான அரசியலையே முதன்மையாக முன்னெடுத்தது. ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று திராவிட நாட்டையே முன்வைத்துத் தமிழக தி.மு.க. பெயரிட்டிருப்பதால், இலங்கையைத் தாயகமாகக் கொண்டவர்களுக்கு அது பொருந்தாது எனக் கருதிய இ. தி.மு.கவினர் ‘திராவிடர் முன்னேற்றக் கழகம்’ என்றே தமது இயக்கத்தின் பெயரை வைத்துக்கொண்டனர். இயக்கக் கொள்கைகளான சாதியொழிப்பு, பெண் விடுதலை, மொழிப்பற்று மற்றும் பண்பாட்டு முன்னெடுப்புகளை தி.மு.கவைப் பின்பற்றியே இ. தி.மு.கவினர் அமைத்துக்கொண்டனர். தமிழகத்தில் வெளியாகிய தி.மு.க பத்திரிகைகளின் தொடர்ச்சியாகவே இலங்கையிலும் 1950 – 1971 காலப்பகுதியில் ‘திராவிடமணி'(கொழும்பு) ‘நாம்’ (பதுளை) ‘ஈழமுரசு’ (மட்டக்களப்பு) ‘இனமுழக்கம்’ (யாழ்ப்பாணம்) ‘எரிமலை’ (அக்கரைப்பற்று) போன்ற முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட திராவிடச் சிந்தனைப் பத்திரிகைகள் வெளியாகின. மலையகத் தோட்டத் தொழிலாளர்களிடையே இ.தி.மு.க கிளைகளை அமைப்பதற்குத் திராவிட இயக்க சினிமாக்கள் உதவின எனச் சொல்லும் ஆய்வாளர் பெ.முத்துலிங்கம் “பராசக்தி திரைப்படம் மலையக சினிமாக் கொட்டகைகளில் திரையிடப்பட்டது. தென்னிந்தியாவிலிருந்து இலங்கை, பிஜி, மலேசியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்ற தமிழர்களின் அவலநிலை பற்றி இப்படத்தில் குரலெழுப்பப்படுவதுடன் சீர்திருத்தக் கருத்துகளையும் கடவுளின் பெயரால் மேற்கொள்ளப்படும் அட்டூழியங்களுக்கு எதிரான காட்சிகளையும் இப்படம் கொண்டிருந்தது” எனச் சுட்டிக்காட்டுகிறார். 1951 டிசம்பரில் முதல் மாநில தி.மு.க மாநாடு சென்னையில் நடத்தப்பட்டபோது, இ. தி.மு.க. பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், இ.தி.மு.கவால் திரட்டப்பட்ட நிதியையும் மாநாட்டுக்கு அளித்தனர். காலத்திற்குக் காலம் தமிழகத் திராவிட இயக்கத்தினர் இ.தி.மு.கவின் அழைப்பின்பேரில் இலங்கைக்கு வந்து நாடு முழுவதும் பரப்புரைக் கூட்டங்களில் சொற்பொழிவாற்றினார்கள். இவ்வாறு இலங்கை வந்தவர்களில் பேராசிரியர் க. அன்பழன், ஆசிரியர் கி.வீரமணி, சி.பி. சிற்றரசு, கலைவாணர் என் .எஸ்.கிருணன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, நாவலர் இரா. நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன் போன்ற பலர் இருந்தார்கள். இலங்கையில் தமிழ் மொழிக்குச் சமவுரிமை கோரியும், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழியினருக்குக் குடியுரிமை கோரியும், தமிழகத்தில் நிகழ்ந்த இந்தித் திணிப்புக்கு எதிராகவும் இ.தி.மு.க பலமுனைப் போராட்டங்களை முன்னெடுத்த போதெல்லாம், தமிழக தி.மு.கவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைத்தது. இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவளித்து தமிழக தி.மு.க. தலைவர்கள் அறிக்கைகளையும் செய்திகளையும் வெளியிட்டார்கள். யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கிளைகளை அமைத்திருந்த இ.தி.முக 1957 டிசம்பரில் சாதியொழிப்பை முன்வைத்து சமூக சீர்திருத்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தத் திட்டமிட்டபோது, அந்த மாநாட்டுக்குத் தமிழகத்திலிருந்து நாவலர் நெடுஞ்செழியன், ஈ.வி.கே. சம்பத், பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். எனினும், அவர்கள் மூவரையும் இலங்கை வர இந்திய அரசு அனுமதிக்கவில்லை. இக்காலகட்டத்தில், இலங்கையில் நிலவும் ஒற்றையாட்சி முறைக்கு மாற்றாகத் தமிழ் -சிங்கள கூட்டாட்சி முறையை முன்வைத்துப் போராடிக்கொண்டிருந்த ‘இலங்கை தமிழரசுக் கட்சி’க்கும் இ.தி.மு.கவுக்கும் இடையே தோழமை நிலவியது. இரு அமைப்புகளும் பல தருணங்களில் சேர்ந்து செயற்பட்டன. இ.தி.மு.க 1960-இல் பண்டாரவளையில் நடத்திய கலாசார மாநாட்டில் தமிழரசுக் கட்சித் தலைவர்களான சாம் தம்பிமுத்து, எம். திருச்செல்வம், செனட்டர் மு. மாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டார்கள். 1961-இல் தமிழரசுக் கட்சியினர் யாழ்ப்பாணத்தில் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பொதுச்செயலாளர் ஏ. இளஞ்செழியனின் தலைமையில் இ.தி.மு.க பங்கெடுத்தது. நுவரெலியாவில் இ.தி.மு.க நடத்திய கூட்டத்தில் அ.அமிர்தலிங்கம், எம்.சிவசிதம்பரம், மங்கையர்க்கரசி போன்ற தமிழரசுக் கட்சியினர் கலந்துகொண்டார்கள். இந்தக் கூட்டத்தின் முடிவில் தமிழரசுக் கட்சியுடன் கூட்டாகச் செயற்படுவது என இ.தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியது. 1962 ஏப்ரலில், ஹட்டன் நகரத்தில் மொழியுரிமை – மலையக மக்களின் குடியுரிமை ஆகியவற்றை முன்வைத்து இ.தி.மு.க நடத்திய இரண்டாவது மாநில மாநாட்டில் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே. வி. செல்வநாயகம் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். கூட்டாட்சி கோரிப் போராடிக்கொண்டிருந்த தமிழரசுக் கட்சியுடனான இ.தி.மு.கவின் அரசியல் கூட்டு சிங்கள இனவாத அரசியல்வாதிகளுக்குக் கலக்கத்தைக் கொடுத்தது. திராவிட நாடொன்றை உருவாக்க முயலும் தமிழக தி.மு.க செயற்பாட்டின் ஓர் அங்கமே இ.தி.மு.கவின் இந்த நடவடிக்கை எனக்கூறி இ.தி.மு.கவைத் தடை செய்யுமாறு சிங்கள இனவாத அரசியல்வாதிகள் கூக்குரலிட்டார்கள். பெயர்பெற்ற சிங்கள இனவாதிகளான கே.எம்.பி. ராஜரத்ன, ஆர்.ஜி.சேனநாயக்க, கம்யூனிஸ்ட் கட்சியின் பேர்ஸி விக்ரமரத்ன ஆகியோர் நாடாளுமன்றத்தில் இ.தி.மு.வை தடைசெய்யுமாறு கோரினார்கள். இவர்கள் இ.தி.மு.கவை, தமிழக தி.மு.கவின் நேரடிக் கிளை என்றும் அது இலங்கையைத் தமிழகத்துடன் இணைக்க முயல்கிறது என்றும் சொன்னார்கள். 1962 ஜூலை 22-ஆம் தேதி, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசால் அவசரகாலச் சட்டத்தின்கீழ் இ.தி.மு.க. தடைசெய்யப்பட்டது. இந்தத் தடையைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் அ.அமிர்தலிங்கம் நீண்ட உரையாற்றினார். அந்த உரையில் “இவர்கள் குறிப்பிடும் பூதம் என்ன என்பதை நான் குறிப்பிட வேண்டியிருக்கிறது. இந்தத் திராவிட முன்னேற்றக் கழகம் என்பது இன்று நேற்றுத் தோன்றிய ஓர் இயக்கமல்ல. நான் இலங்கைச் சர்வகலாசாலையில் 1946- 1947 ஆண்டளவில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே இலங்கை திராவிடர் கழகம் இருந்தது. இவர்களது நோக்கம் இலங்கையில் வாழ்கின்ற மலைநாட்டுத் தமிழர்கள் மத்தியில் சாதியின் பெயரால் காணப்படும் பேதங்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதாகும்…மலைநாட்டுத் தமிழ் மக்கள் தன்மானம் பெற்றவர்களாகப் பகுத்தறிவுப் பாதையில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இலங்கையில் தி.மு.க இயங்கி வருகிறது” என்றார். இலங்கை சமசமாஜக் கட்சியும் இந்தத் தடையைக் கண்டித்து “மலையக மக்களின் அடிப்படை உரிமையான குடியுரிமை இலங்கை அரசால் மறுக்கப்படுவதே இ.தி.மு.கவின் வளர்ச்சிக்கு முதன்மையான காரணம்” என்றது. இ.தி.மு.கவின் மீதான தடை 1963-இல் நீக்கப்பட்டது. 1965-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது, இடதுசாரிக் கட்சிகள் ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தத்திற்கு ஆதரவளித்தார்கள். தமிழரசுக் கட்சியினர் அந்த ஒப்பந்தத்தை எதிர்த்தார்கள். எனவே, இ.தி.மு.க. பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு நிலையெடுத்து வடக்கு – கிழக்கில் பரப்புரையை மேற்கொண்டது. எனினும், தேர்தலின் பின்பு தமிழரசுக் கட்சி டட்லி சேனநாயக்கவின் அரசு அமைய ஆதரவு கொடுத்ததால், தமிழரசுக் கட்சியுடனான உறவை இ.தி.மு.க முறித்துக்கொண்டது. 1968-இல் இ.தி.மு.க தன்னை அரசியல் கட்சியாக நிறுவிக்கொண்டது. அதே வருடத்தில் அக்டோபர் 14-ஆம் தேதி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை கொழும்பில் நடத்தியது. இவ்விழாவில் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த தி.மு.கவினரும் கலந்துகொண்டார்கள். இந்நிகழ்வை திரிபுபடுத்தி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ‘எத்த’ நாளிதழ் “ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி திருப்பி அனுப்ப வேண்டியுள்ள இந்தியர்களைத் தடுத்து, இலங்கை திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்த்து, தென்னிந்தியாவையும் வட இலங்கையையும் ஒன்றிணைத்து திராவிட இராச்சியத்தை உருவாக்குவதற்கான சதி அம்பலமாகியுள்ளது. இந்திய தி.மு.கவின் தலைவர் அண்ணாதுரையின் பிறந்தநாளைக் கொண்டாடும் தோரணையில் இலங்கை வந்துள்ள அண்ணாதுரை குழுவினர் இதற்கான அமைப்பு வேலைகளை நடாத்திச் செல்கின்றனர்” என்று எழுதியது இ.தி.மு.க. யாழ் மாவட்டத்தின் நான்காவது மாநில மாநாட்டை 18.09.1969-இல் நடத்தியது. அன்றைய தினம் முற்றவெளியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய இ.தி.மு.க பொதுச்செயலாளர் ஏ. இளஞ்செழியன் “தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களை சாத்வீகப் போராட்டத்தின் மூலம் பெற முடியாவிடின், புரட்சி ஒன்றின் மூலம் பெறவிரும்பினால் தமிழ் மக்கள் கெரில்லா யுத்தத்திற்குத் தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். காவல்நிலையங்களைத் தகர்த்தல், ஆயுதப் பயிற்சி முகாம் அமைத்தல் வேண்டும்” என்று கூறினார். எனினும் “அதற்கான தேவை தற்போது இல்லை” என்றும் குறிப்பிட்டார். ஈழநிலத்தில் முதன்முதலாக ‘கெரில்லா போராட்டம்’ என்ற சொல்லாடல் இ.தி.மு.கவாலேயே உச்சரிக்கப்பட்டிருக்கிறது. இந்த உரையைச் சிங்கள அரசியல்வாதிகள், பத்திரிகைகள் மட்டுமல்லாமல் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் உள்ளிட்ட தமிழ் அரசியல்வாதிகளும் ஒட்டுமொத்தமாகக் கண்டித்தார்கள். மறுபடியும் இ.தி.மு.க. மீது தடை கோரப்பட்டது. 1971-இல் ஜே.வி.பி. நடத்திய ஆயுதக் கிளர்ச்சியைத் தொடர்ந்து ஏ.இளஞ்செழியனும் இ.தி.மு.கவின் பல உறுப்பினர்களும் கைதுசெய்யப்பட்டார்கள். இ.தி.மு.கவை ஒரு பிரிவினைவாதச் சக்தியாகவும், தமிழக தி.மு.கவின் திராவிட நாடு கொள்கையை முன்னெடுக்கும் இலங்கைக் கிளையாகவுமே இலங்கை அரசு, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஜே.வி.பி, சிங்கள ஊடகங்கள் போன்றவை தொடர்ச்சியாகச் சித்திரித்துக்கொண்டிருந்தன. இது இ.தி.மு.கவுக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியது. உண்மையில் இ.தி.மு.க, தமிழக தி.மு.கவின் நேரடிக் கிளை என இ.தி.மு.வோ அல்லது தி.மு.கவோ ஒருபோதும் சொல்லியதில்லை. இரண்டு இயக்கங்களுக்குமிடையே அரசியல் – கலாசார கூட்டிணைவு உள்ளது என்றே இரு இயக்கங்களுமே பிரகடனப்படுத்தியிருந்தன. தமிழகத்தில் தி.மு.கவில் பிளவு ஏற்பட்டு, எம். ஜி. ஆர் அ.தி.மு.கவை தோற்றுவித்தார். இந்தப் பிளவின் தாக்கம் இலங்கையிலும் நிச்சயமாக எதிரொலித்து இ.தி.மு.கவைப் பலவீனப்படுத்தியிருக்கும். இன்னொருபுறத்தில் இ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து ஏ.இளஞ்செழியன் விலகி ‘இளம் சோசலிஸ முன்னணி’ என்ற அமைப்பை உண்டாக்கினார். இந்தப் அமைப்பு ட்ராட்ஸ்கிய அரசியலை முன்னெடுத்தது. 1972-இல் இலங்கையில் புதிய அரசியல் சாசனம் ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் இளைஞர்களிடையே தோன்றிய தமிழ்த் தேசியவாதப் பேரலை, 1976-இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழீழப் பிரகடனம், இளைஞர்களின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்பு ஆகியவற்றால் இலங்கையின் அரசியல் சூழல்கள் மாறின. உள்நாட்டுப் போர் இலங்கையின் மீது இறங்கிக்கொண்டிருந்தது. அவசரகாலச் சட்டமும் பயங்கரவாதத் தடைச் சட்டமும் அமலுக்கு வந்தன. இவையெல்லாம் இ.தி.மு.க. தொடர்ந்தும் வீறுடன் இயங்குவதற்கான சூழலை நாட்டில் இல்லாமல் செய்தன. எழுபதுகளின் இறுதியில் இ.தி.மு.க. கலைந்துபோயிற்று. இ.தி.மு.கவின் துணை அமைப்புகளாகச் செயற்பட்ட ‘இலங்கை இளம் திராவிடர் முன்னேற்றக் கழகம்’, ‘கலைஞர் கருணாநிதி நற்பணி மன்றம்’ போன்றவையும் செயலிழந்தன. “இ.தி.மு.க. மூன்று தசாப்த வரலாற்றுடன் அஸ்தமித்த போதிலும், அது ஒரு வரலாற்றுத் தேவையைப் பூர்த்தி செய்துள்ளது. மலையக மக்களின் அடிப்படை மனித உரிமையான பிரஜாவுரிமைப் பிரச்சினை தொடர்பாக மக்கள் போராட்டத்தை இதுவே முன்னெடுத்தது. மலையக மக்கள் மத்தியில் நிலவிய அறியாமை நீங்கி விழிப்புணர்வு ஏற்படுவதற்கும் இ.தி.மு.கவே காரணமாக இருந்துள்ளது” என்று இ.தி.மு.கவை மதிப்பிடுகிறார் ஆய்வாளர் பெ. முத்துலிங்கம். 2 2012-இல், பெரவள்ளூர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய கலைஞர் மு. கருணாநிதி “தமிழீழம் என்பது அய்ம்பது – அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தந்தை செல்வா அவர்கள் தலைமையில் உருவான கீதம். அந்தக் காலத்திலிருந்து அவரோடு இணைந்து திராவிட முன்னேற்ற கழகமும், தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், நானும், நம்முடைய நண்பர்களும் நின்றிருக்கிறோம்” என்றார். உண்மையிலேயே ‘தமிழீழம்’ என்ற கருத்தாக்கத்தின் துணையாக மட்டுமல்லாமல், அந்தக் கருத்தாக்கத்தின் தோற்றத்திற்கான ஒரு காரணமாகவும் தி.மு.க. இருந்திருக்கிறது. 1940 ஆகஸ்ட் 24 -இல், பெரியார் ‘நீதிக்கட்சி’ மாநாட்டில் தொடக்கிவைத்த ‘திராவிட நாடு’ முழக்கத்தை தி.மு.க. 1962-வரை முன்னெடுத்தது. ‘அடைந்தால் தனிநாடு இல்லையேல் சுடுகாடு’ போன்ற பலநூறு முழக்கங்கள் உருவாகின. தி.மு.க. உருவாகிச் சரியாக மூன்று மாதங்கள் கழித்து, இலங்கையில் எஸ்.ஜே. வி. செல்வநாயகத்தின் தலைமையில் ‘தமிழரசுக் கட்சி’ தொடக்கப்பட்டது. தமிழரசுக் கட்சியின் உருவாக்கத்தில் தி.மு.கவின் கருத்தியல் தாக்கம் கணிசமாகவே இருந்தது. தமிழரசுக் கட்சி முன்நிறுத்திய இனவுணர்வு, மொழிப்பற்று, சங்ககாலப் பெருமிதங்கள், பண்டைய தமிழ் அரசர்களின் காலத்தைப் பொற்காலமாகச் சித்திரிப்பது, மேடைகளில் முழங்கும் அடுக்குத் தமிழ், தீப்பொறியான பத்திரிகை எழுத்துகள் எல்லாமே தி.மு.கவிடமிருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டன. தமிழரசுக் கட்சி ஆதரவு ‘சுதந்திரன்’ பத்திரிகையில் தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைவர்களைக் குறித்த செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகின. அண்ணாவும் கலைஞரும் உலகத் தமிழினத்தின் தலைவர்களாகவும் சமூக மறுமலர்ச்சியாளர்களாகவும் கருதப்பட்டார்கள். ஈழத் தமிழ் அரசியலாளர்களின் முதன்மை நட்புச் சக்தியாக தி.மு.கவே இருந்தது. ஈழத் தமிழர்களின் இல்லங்களிலே பேரறிஞர் அண்ணாவின் படமும் கலைஞரின் படமும் தொங்கத் தொடங்கின. அண்ணாவின் பெயரால் படிப்பகங்களும் மன்றங்களும் உருவாகின. அண்ணாவின் உருவச் சிலைகள் நிறுவப்பட்டன. 1969-இல் யாழ்ப்பாண முற்றவெளியில் நிகழ்ந்த இ. தி.மு.க. மாநாட்டில் யாழ்.முற்றவெளிக்கு ‘அண்ணா நகர்’ எனப் பெயரிட வேண்டும் என்ற தீர்மானத்தை வேலணை வீரசிங்கம் முன்மொழிந்து அந்தத் தீர்மானம் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. பத்திரிகைகள் இலங்கையில் பரவலாகப் படிக்கப்பட்டன. தி.மு.க.இயக்கத் திரைப்படங்கள் – குறிப்பாக கலைஞர் எழுதியவை- இலங்கையில் கொண்டாடப்பட்டன. ஈழ அரசியலிலும் முன்னொருபோதும் இல்லாத அடைமொழிகள் ‘தந்தை’, ‘தளபதி’, ‘சொல்லின் செல்வர்’, ‘உணர்ச்சிக் கவிஞர்’ , ‘தீப்பொறி’ என்றெல்லாம் தோன்றின. தி.மு.கவின் மேடைப்பேச்சுப் பாணியைப் பின்பற்றி செ.இராசதுரை, ம.க.அ.அந்தனிசில், காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன் என ஒரு பேச்சாளர் பட்டாளமே உருவானது. 1972-இல் தொடங்கப்பட்ட ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’யின் தேர்தல் சின்னமாக ‘உதயசூரியன்’ இருந்தது. 1970-களின் மத்தியில் ஈழ இளைஞர்கள் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கத் தொடங்கினார்கள். இவர்களிடமும் தி.மு.கவின் கருத்தியல் தாக்கம் இருந்ததைப் புலிகள் இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும் புலிகளின் முதலாவது மத்தியகுழு உறுப்பினருமான கணேசன் “அப்போது தூய தேசியவாதச் சிந்தனையுடனேயே செயற்பட ஆரம்பித்தோம். தமிழ் பிரச்சினைகள் பற்றிப் பேசுபவர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, தமிழரசுக் கட்சி என்பதே எமக்குத் தெரிந்திருந்தவை” என்று அவரது ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்’ நூலில் குறிப்பிடுகிறார். எந்தவொரு தமிழகத் தலைவருக்கும் முன்னாலேயே கலைஞர் ஈழப் போராளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார். 1977-இல் பிரபாகரன் தனது 23-வது வயதில் கலைஞரைச் சந்தித்தார். காசி ஆனந்தனும் மாவை சேனாதிராஜாவும் அழைத்துச் சென்றிருந்தார்கள். பிரபாகரன் ஒருமுறை கலைஞருக்கு உதவி கோரி எழுதிய கடிதத்தில் “எங்களின் நம்பிக்கை நட்சத்திரம் நீங்கள்” என எழுதியிருந்தார். கலைஞர் மறைந்தபோது, வடக்கு – கிழக்கு முன்னாள் முதலமைச்சரான வரதராஜப்பெருமாள் “அவர் தமிழர்களின் மொழியை, கலைகளை, இலக்கியத்தை, ஊடகங்களை, அரசியலை, சமூகத்தை எனத் தமிழுலகின் பல பாகங்களையும் அய்ம்பது வருடங்களுக்கு மேல் ஆண்ட பேரரசன். அவரைத் தேர்தல் அரசியலுக்கு அப்பால் கௌரவமாக வழியனுப்பி வைப்பதே தமிழர்களுக்கு அழகு” என்று எழுதினார். கலைஞர் மு.கருணாநிதி அனைத்து ஈழப் போராளி இயக்கத் தலைவர்களுடனும் தொடர்ச்சியான உறவையும் உரையாடலையும் வைத்திருந்தார். ஈழப் பிரச்சினையின் அடிப்படை குறித்துத் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தார். தமிழகத்தின் பல்வேறு ஈழ ஆதரவாளர்களைப் போன்று வெறுமனே குருட்டுத்தனமாகப் புலிகளின் புகழைப் பாடுபவராகக் கலைஞர் ஒருபோதும் இருந்ததில்லை. ஈழத்தில் நிகழ்ந்த சகோதரப் படுகொலைகளுக்காகப் புலிகளைக் கண்டித்தார். புலிகளை எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்த்தார். ஆனால், அந்த எதிர்ப்பு ஒருபோதும் வெறுப்பாக மாறியதில்லை. புலிகளின் அரசியல்துறைத் தலைவர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது, கலைஞர் இரங்கல் கவிதையும் எழுதினார். இலங்கையில் தமிழர்கள் மீதான இன வன்முறை 1956-இல் ஆரம்பித்தது. இதன் பின் எத்தனையோ இன வன்முறைகள். அத்தனை வன்முறைகளையும் எதிர்த்து இந்தியாவிலிருந்து ஒலிக்கும் முதல் குரல் தி.மு.கவுடையதாகவே இருந்தது. 1956-இல் சிதம்பரத்தில் நடைபெற்ற தி.மு.க.பொதுக்குழுவில் ‘இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1958, 1977, 1981, 1983 என்றெல்லாம் இலங்கையில் தமிழர்களின் மீது இனரீதியான தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டபோது, தி.மு.க. இந்தத் தாக்குதல்களுக்கு எதிராகக் குரலை ஓங்கி ஒலித்துக்கொண்டேயிருந்தது. இந்திய ஒன்றிய அரசுக்கு இது குறித்துக் கடிதங்களை எழுதியது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தமிழக மக்களை அணிதிரட்டியது. 1983-இல், வெலிகடைச் சிறைப் படுகொலைகளை தி.மு.க. கண்டித்து எட்டு இலட்சம் மக்களைத் திரட்டிச் சென்னையில் பேரணியை நடத்தியது. 1983 ஆகஸ்ட் 10-இல், மத்திய – மாநில அரசுகள் ஈழத் தமிழர் பிரச்னையில் போதிய கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி, கலைஞரும் பேராசிரியர் அன்பழகனும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்தனர். கலைஞர் 1985-இல் தமிழீழ ஆதரவாளர் அமைப்பை (டெசோ ) உருவாக்கினார். 1986-இல் மதுரையில் டெசோ அமைப்பின் சார்ப்பில் மாபெரும் இலங்கைத் தமிழர் ஆதரவு மாநாடு நடத்தப்பட்டது. வாஜ்பாய்,என்.டி.ராமராவ் போன்ற அனைத்திந்தியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான உரிமை கிடைக்கும்வரை போராடுவது, ஈழப்போராளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது, ஈழத் தமிழினத்தின் பாதுகாப்புக்காக எந்தவிதத் தியாகத்திற்கும் தயாராக இருப்பது, இந்தக் கடமைகளைச் செய்யும்போது மத்திய-மாநில அரசுகளின் அடக்குமுறைகளுக்கு ஆளாக நேர்ந்தாலும் அவற்றை இன்முகத்துடன் ஏற்பது என நான்கு தீர்மானங்கள் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. தி.மு.கவினர் வெறும் அறிக்கைகளிலும் மேடைகளிலும் மட்டும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்கள் அல்ல. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தி.மு.க. தனது தோற்றம் முதலே இயங்கியிருக்கிறது. எண்ணற்ற ஆர்ப்பாட்டங்களையும் மாநாடுகளையும் பேரணிகளையும் மனிதச் சங்கிலிப் போராட்டங்களையும் நடத்தியிருக்கிறது. தி.மு.கவினர் ஈழப் போராளிகளுக்குத் தமது வீடுகளிலும் சட்டமன்ற விடுதியிலும் அடைக்கலம் கொடுத்தார்கள். பல்வேறு இக்கட்டுகளிலிருந்து போராளிகளைக் காப்பாற்றினார்கள். இதற்காகத் தி.மு.கவினர் நீண்டகாலம் சிறைவாசத்தையும் அனுபவித்திருக்கிறார்கள். இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்து திரும்பியபோது, அமைதிப்படையை வரவேற்க கலைஞர் மறுத்தார். “இந்திய இராணுவம் இலங்கையில் என் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த அய்ந்தாயிரம் பேர் கொல்லப்படக் காரணமாக இருந்தது என்பதை எண்ணித்தான், அந்தப் படையை வரவேற்க நான் செல்லவில்லை” என முதலமைச்சராகக் கலைஞர் கூறியது சட்டமன்றத்தில் பதிவாகியது. ஈழத்தில் இறுதி யுத்தம் நடந்த காலப்பகுதியில் தி.மு.க. ஆட்சியிலிருந்தது. யுத்தத்தை நிறுத்தக் கலைஞர் தன்னால் முடிந்தளவு முயற்சித்தார். தி.மு.க. முக்கியஸ்தர்கள் சிலரோடு புலிகள் கடைசிவரை தொடர்பை வைத்திருந்தார்கள். யுத்தத்தை நிறுத்துமாறு தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுத்தது. மனிதச் சங்கிலிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் பெருமளவில் நடத்தியது. இலங்கையில் தலையீடு செய்து போரை நிறுத்துமாறு ஒன்றிய அரசைக் கோரியது. 2009 ஏப்ரல் 27-ம் தேதி, மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் கலைஞர் யுத்த நிறுத்தம் கோரி உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். உண்ணாவிரதத்திலிருந்த கலைஞரை பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் தொடர்புகொண்டு பேசினார்கள். இலங்கை அரசு கனரக ஆயுதத் தாக்குதல்களையும் விமானத் தாக்குதல்களையும் நிறுத்துவதாக உறுதியளித்தது. அந்த உறுதியளிப்பின் நகல் பிரணாப் முகர்ஜி மூலம் கலைஞரிடம் கையளிக்கப்பட்ட பின்பே கலைஞர் உண்ணாவிரத்தை முடித்துக்கொண்டார். எனினும், எப்போதும் போலவே இலங்கை அரசு இந்தமுறையும் தனது வாக்குறுதியைச் சீக்கிரமே மீறியது. ஒரு மாநில அரசாக தி.மு.க. ஈழப் பிரச்சினையில் தனது உச்சபட்ச அழுத்தத்தை ஒன்றிய அரசுக்குக்குக் கொடுத்திருக்கிறது. இந்தியாவில் வேறெந்தக் கட்சியோ இயக்கமோ ஒன்றிய அரசுக்கு இந்தளவுக்கு அழுத்தத்தைக் கொடுத்ததில்லை. இந்திய அரசியல் சாசனத்தில் ஒரு மாநில அரசினதும் முதல்வரினதும் அதிகார எல்லைகள் இவ்வளவே. இந்த அழுத்தங்கள் போதாது, தி.மு.க. மத்திய அரசிலிருந்து விலக வேண்டும் என்றெல்லாம் அப்போது சிலர் விமர்சித்தார்கள். இந்த விமர்சனம் சரியற்றதும் தொலைநோக்கற்றதுமாகும். தி.மு.கவின் பதினெட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை விலக்கிக்கொள்வதால் மத்தியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்திருக்காது. மாறாக 1990-இல் நிகழ்ந்ததைப் போன்று தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் கலைக்கப்பட்டிருக்கக்கூடும். அது தி.மு.கவுக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் கேடாகத்தான் முடிந்திருக்கும். தி.மு.க. பதவி விலகியிருந்தாலும் ஈழத்தில் யுத்தம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்காது. ஏனெனில், அந்த யுத்தம் சர்வதேச அரசுகளின் நீண்டகாலத் திட்டத்துடன் புலிகளை அழிப்பதற்காக நடத்தப்பட்டது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சர்வதேச அரசுகள் புலிகளுக்கு முன்வைத்த நிபந்தனைகளைப் புலிகளும் ஏற்றுக்கொள்ளாமல் மே 15-வரை போரிட்டுக்கொண்டிருந்தார்கள். ஈழத்தின் எந்த அரசியல் தலைவரோ, அறிவுச் சமூகமோ தி.மு.கவிடம் பதவி துறப்புக் கோரிக்கையை வைத்ததில்லை. புலிகள் கூட வைத்ததில்லை. அந்த நேரத்தில் வேறெவரையும் விடக் கலைஞர் தமிழக ஆட்சிப் பொறுப்பிலிருப்பதுதான் உகந்ததென அவர்கள் கருதினார்கள். 2009 மே மாதம் நிகழ்ந்த நாடாளுமன்றத் தேர்தலில், புலிகளின் தீவிர ஆதரவுத்தளமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தி.மு.கவோடு கூட்டணிக்குச் செல்லுமாறு புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அறிவுறுத்தியதாக 2019-இல் லண்டனில் நிகழ்ந்த ‘அமைப்பாய்த் திரள்வோம்’ நூலின் விமர்சனக் கூட்டத்தில் தொல். திருமாவளவன் தெரிவித்தார். போருக்குப் பின்னும் ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க. தீவிரமாகவே இயங்கியது. 2011 ஏப்ரல் 27- இல் நடைபெற்ற தி.மு.க உயர்நிலை செயற்திட்டக் குழு கூட்டத்தில் முதல் தீர்மானமாக ‘இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்காக அய்க்கிய நாடுகள் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, இலங்கைப் படையினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது. இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2012 மார்ச் 1-இல் தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்ட அறிக்கையில் ‘அய்.நா மனிதவுரிமை ஆணையத்தில் கொண்டு வரவுள்ள தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும்போது, இந்திய அரசு எக்காரணம் கொண்டும் இலங்கை அரசை ஆதரிக்கக்கூடாது’ என்று வலியுறுத்தினார். தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகளுக்காகத் தி.மு.க பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. அப்போதைய தமிழக முதல்வர் கலைஞரின் வேண்டுகோளை ஏற்று எழுத்தாளரும் சட்டமன்ற உறுப்பினருமான து.இரவிக்குமார் ஈழ அகதிகள் முகாம்களைப் பார்வைட்டு 04.07.2006 அன்று முதல்வரிடம் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தார். அது குறித்து து. இரவிக்குமார் விகடன் இதழில் (11.10.2009) இவ்வாறு எழுதியிருந்தார்: “முதல்வர், உடனடியாக சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். தமிழ் அகதிகளுக்கு அதுவரை மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த பணக்கொடை மிகமிகக் குறைவாக உள்ளது என்பதை அறிக்கையில் நான் சுட்டிக்காட்டியிருந்தேன்… அது மிகவும் குறைவு என்பதை உணர்ந்த முதல்வர் உடனடியாகப் பணக்கொடையை இரு மடங்காக உயர்த்தி ஆணையிட்டார். அது மட்டுமின்றி, அகதி முகாம்களின் நிலைமைகளைச் சீர்படுத்திடப் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் முதல்வர் ஆணையிட்டார். முதல்வரிடம் வழங்கிய அறிக்கையில் நான் முன்வைத்திருந்த கோரிக்கைகள் பலவும் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளன. குடியுரிமை தொடர்பான எனது கோரிக்கையும் இன்று தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு மத்திய அரசிடம் அது தொடர்பாக வலியுறுத்துவதற்கு தமிழக முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.” ஈழ அகதி மாணவர்ளுக்கு மருத்துவம், பொறியியல், ஐ.டி.ஐ. போன்ற துறைகளில் தி.மு.க. அரசு இட ஒதுக்கீடுகளை வழங்கியிருந்தது. அதன்பின்பு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு, ஈழ அகதி மாணவர்களுக்கு 12-ஆம் வகுப்புக்கு மேல் படிக்க அனுமதி இல்லை என்று 03.09.1991-இல் ஆணை பிறப்பித்தது. மறுபடியும் தி.மு.க. ஆட்சிக்கு வந்துதான் இந்த ஆணையை விலக்கிக்கொண்டது. தி.மு.க என்ற 75 வருட வரலாறு கொண்ட கட்சியின்மீது வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த விமர்சனங்கள் பலவற்றில் நியாயமும் உண்டு. ஆனால், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையைப் பொறுத்தளவில் தி.மு.க. மீதான எதிர் விமர்சனங்கள் செல்லுபடியவற்றவை என்றே நான் கருதுவேன். ஏனெனில், இலங்கைத் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் இனவழிப்புகளையும் முக்கால் நூற்றாண்டாகத் தொடர்ச்சியாகக் கவனமெடுத்துக் குரல் கொடுத்த இலங்கைக்கு வெளியிலுள்ள ஒரேயொரு கட்சியாக தி.மு.கவே இருக்கிறது. இலங்கையில் இருக்கும் சிங்கள முற்போக்குக் கட்சிகளோ, இடதுசாரி இயக்கங்களோ கூட இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.க. அளவுக்குப் போராடிய வரலாறு கிடையாது. இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காக தி.மு.க. தன்னால் முடிந்த அனைத்தையுமே செய்திருக்கிறது. இலங்கைத் தமிழர்களின் வரலாற்றிலும் ஈழப் போராட்டத்திலும் தி.மு.கவின் மதிப்பு மிக்க பங்களிப்பு இன்னும் விரிவாகப் பேசப்பட வேண்டிய ஒன்றாகும். இன்னும் துல்லியமாகச் சொன்னால் ஈழத் தமிழர்கள் மீது நேர்மையான கரிசனம் கொண்டு ஈழத்திற்கு வெளியே செயலாலும் சிந்தனையாலும் தியாகங்களாலும் இயங்கிய ஒரேயொரு பேரியக்கம் தமிழகத் திராவிட இயக்கமேயாகும். கட்டுரையை எழுதப் பயன்பட்டவை: 1.எழுதாத வரலாறு – பெ. முத்துலிங்கம். 2. ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை – நாவலர் ஏ.இளஞ்செழியன். 3.ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி – என்.கே.ரகுநாதன். 4.’நமது மலையகம்’ இணையத்தளம். 5.’நமது’ வலைத்தளம். (‘காலத்தின் நிறம் கருப்பு – சிவப்பு’ தொகுப்பு நூலுக்காக எழுதப்பட்ட கட்டுரை. நவம்பர் 2025). https://www.shobasakthi.com/shobasakthi/2025/12/26/ஈழத்தில்-திராவிடச்-சிந்த/
-
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025
நத்தாருக்கு அடித்தது முறிய முதலே விளையாட தொடங்கினால் இப்படித் தான் முடியும்.
-
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
கதாநாயகன் ரேஞ்சில் இருந்தவர் கடந்த 15 வருடத்தில் பாதி சிங்களவருக்கு ஊழல் வாதி ஆகிட்டார் இன்னும் கொஞ்ச வருடங்களில் உயிருடன் இருந்து மிகுதி சிங்களவரிடமும் சாபம் பெற்று இத்தாலி முசோலினி போல் போய் தொலையட்டுக்கும்.
-
🕯️ சுனாமி நினைவு நாள்: நாளை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள்! 🌊🇱🇰
ஆழிப் பேரலையால் உயிர் நீத்தவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.
-
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
இப்ப 15 வருடத்துக்கு மேலாக இந்தா போறார் போறார் என்றார்களே பொய்யா கோப்பாலு. சாது ஓதியே ஆளைப் பிழைக்க வைத்துவிடும்.
-
🕯️ சுனாமி நினைவு நாள்: நாளை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள்! 🌊🇱🇰
ஆழிப்பேரலை 21வது நினைவேந்தல் ; மூதூரில் 200 மாணவர்களுக்கு கல்விப் பொருட்கள் வழங்கி வைப்பு 26 Dec, 2025 | 03:43 PM மூதூரில் ஆழிப்பேரலையின் 21வது நினைவேந்தலைத் தொடர்ந்து, சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு கல்விப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (26) தி/மூதூர் – அல்மனார் பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வு ஈராக் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், பரக்கா நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி முஜீப் அவர்களால் கல்விப் பொருட்கள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த கல்விப் பொருட்கள், அவர்களின் கல்வி பயணத்திற்கு ஓர் ஊக்கமாகவும், சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதலாகவும் அமைந்தது. இந்நிகழ்வில் பொதுமக்கள், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/234476
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
இது அநியாயம். சிறிலங்கா அரசின் யாழ்க்காவலனும் அரசுகளுக்காகவும் தனது பழிதீர்ப்பாகவும் பலகொலைகளைச்செய்து சிறிலங்கா சிங்கள அரசுகளுக்கு உதவியவரை கைது செய்யலாமா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
லிவர் சிரோசிஸ் கடைசி கட்டம் என்கிறார்கள் ஆழ்ந்த அனுதாபம்கள் . புலம்பெயர் கொஞ்சம் லிவர் மக்கர் பண்ண தொடங்கி குடியை விடாமல் தொடர திடீர் திடீர் என்று காணாமல் போகின்றனர் .
-
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025
மெல்பர்ன் அரங்கில் 94,000 ரசிகர்கள் முன்னிலையில் முதல் நாளன்று 20 விக்கெட்கள் சரிவு ; இங்கிலாந்தை விட 46 ஓட்டங்களால் ஆஸி. முன்னிலை 26 Dec, 2025 | 03:27 PM (நெவில் அன்தனி) மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (26) ஆரம்பமான அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 'பொக்சிங் டே' டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த 94,000 ரசிகர்கள் முன்னிலையில் முதல் நாளன்று 20 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் 124 வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக ஆரம்ப நாளன்று ஆஷஸ் டெஸ்ட் ஒன்றில் 20 விக்கெட்கள் சரிக்கப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இந்த விளையாட்டரங்கில் 1902இல் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆரம்ப நாளன்று 25 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டிருந்தன. மேலும் நான்காவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 94,119 ரசிகர்கள் ஆரம்ப நாளன்று கண்டுகளித்தனர். 2015 உலகக் கிண்ண இறுதிப் போட்டியைக் கண்டு களித்தவர்களை விட இந்த எண்ணிக்கை அதிகமாகும். வேகப்பந்து வீச்சாளர்கள் மாத்திரம் பயன்படுத்தப்பட்ட இப் போட்டியில் இங்கிலாந்து சார்பாக ஜொஷ் டங் 5 விக்கெட் குவியலையும் அவுஸ்திரேலியா சார்பாக மைக்கல் நேசர் 4 விக்கெட் குவியலையும் பதிவு செய்தனர். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரண்டு அணிகளாலும் 160 ஓட்டங்களை எட்டமுடியாமல் போனது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களும் மீதம் இருக்க அவுஸ்திரேலியா 46 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் 152 ஓட்டங்களுக்கு சுருண்டது. துடுப்பாட்டத்தில் மத்திய வரிசை வீரர் மைக்கல் நேசர் அதிகப்பட்சமாக 35 ஓட்டங்களைப் பெற்றார். அவரும் கெமரன் க்றீனும் 7ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 52 ஓட்டங்களே இன்றைய ஆட்டத்தில் சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. அவுஸ்திரேலியாவின் முதல் 6 விக்கெட்கள் 91 ஓட்டங்களுக்கும் கடைசி 4 விக்கெட்கள் 9 ஓட்டங்களுக்கும் சரிந்தன. மைக்கல் நேசரைவிட உஸ்மான் கவாஜா 29 ஓட்டங்களையும் அலெக்ஸ் கேரி 20 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை. இங்கிலாந்து சார்பாக பந்துவீச்சில் பயன்படுத்தப்பட்ட நால்வரும் குறைந்தது ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். ஜொஷ் டங் 45 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். இது டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அவர் பதிவுசெய்த அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும். அவரை விட கஸ் அட்கின்சன் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பென் ஸ்டோக்ஸ் 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ப்றைடன் கார்ஸ் 42 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் 29.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் 110 ஓட்டங்களுக்கு சுருண்டது. மிச்செல் ஸ்டார்க், மைக்கல் நேசர் ஆகியோரின் பந்துவீச்சுக்களில் திணறிப்போன இங்கிலாந்து அதன் முதல் 4 விக்கெட்களை முதல் 8 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்குள் இழந்தது. ஹெரி ப்றூக், பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்ததால் இங்கிலாந்து சிறிய அளவில் மீட்சி பெற்றது. ஆனால், கடைசி 6 விக்கெட்கள் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தப்பட்டன. ஹெரி ப்றூக் பெற்ற 41 ஓட்டங்களே இரண்டு அணிகளிலும் இன்றைய தினம் தனி ஒருவரால் பெறப்பட்ட அதிகபட்ச ஓட்டங்களாக பதிவானது. அவரை விட கஸ் அட்கின்சன் (28), பென் ஸ்டோக்ஸ் (17) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் மைக்கல் நேசர் 45 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஸ்கொட் போலண்ட் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டாக் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கெமரன் க்றீன் 5 பந்துகளில் ஓட்டம் கொடுக்காமல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸ் நிறைவில் 42 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த அவுஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. https://www.virakesari.lk/article/234474
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது Published By: Vishnu 26 Dec, 2025 | 06:39 PM தனிப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவொன்றிடம் குறித்த ஆயுதம் கையளிக்கப்பட்டதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. https://www.virakesari.lk/article/234494
-
தையிட்டியில் காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணி அல்லது இழப்பீடு - அமைச்சர் சந்திரசேகரன்
அமைதியாக கழிக்க வேண்டிய கிறிஸ்மஸ் விடுமுறையில் ஒரு கிறிஸ்தவ உறவு இப்படி பதட்டப்படுவதை பார்க்க எனக்கே மனம் கேட்கவில்லை😂. சரி ஒரே ஒரு கேள்வி? புத்தசாசன அமைச்சு ஜனாதிபதி அனுரவுக்கு கீழேதான் வருகிறது. இந்த பிரச்சனையில் இவர்களுக்கு இனவாத எண்ணம் இல்லை எனில், மொட்டு கட்சி காலத்தில், ரணில் காலத்தில் கூட செய்யாத அரச அங்கீகாரம், பதவிநிலைகளை இந்த விகாரைக்கும், தேரருக்கும் ஏன் அனுரா இப்போ கொடுத்தார்? சும்மா இருந்திருக்கலாமே?
-
அமெரிக்காவில் லாட்டரியில் ரூ.10,000 கோடி பரிசு - என்ன செய்யப் போகிறார்?
அமெரிக்க பவர்பால் அதிர்ஷட இலாபச் சீட்டு - 1.8 பில்லியன் அமெரிக்க டொலர் வெற்றி! 26 Dec, 2025 | 11:02 AM அமெரிக்காவின் பிரபலமான பவர்பால் அதிர்ஷட இலாபச் சீட்டில், நேற்று வியாழக்கிழமை (25) ஆர்கன்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த குடியிருப்பாளர் ஒருவர் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிசை வென்றுள்ளார். இந்த வெற்றி, அமெரிக்க அதிர்ஷட இலாபச் சீட்டு வரலாற்றில் ஒரு தனிநபர் பெற்ற இரண்டாவது பெரிய பரிசாகக் கருதப்படுகிறது. 2 டொலர் விலையில் விற்கப்படும் குறித்த அதிர்ஷட இலாபச் சீட்டு 4, 25, 31, 52, 59 மற்றும் சிவப்பு எண் 19 ஆகிய எண்களுடன் பொருந்தி காணப்பட்டுள்ளன. வெற்றியாளர், இந்த பரிசுத்தொகையை ஒரே நேரத்தில் முழுத் தொகையாகவோ அல்லது 29 ஆண்டுகளுக்குள் தவணை முறையிலோ பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். எனினும், பெரும்பாலான வெற்றியாளர்கள் பரிசுத் தொகையை ஒரே நேரத்தில் பெறும் விருப்பத்தையே தேர்வு செய்கிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க லொத்தர் வரலாற்றில், ஒரே சீட்டிற்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய பரிசுத்தொகையாக 2022 ஆம் ஆண்டு ஒருவர் வென்ற 2.04 பில்லியன் டொலர் இதுவரை பதிவாகியுள்ளது. 1992 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பவர்பால் அதிர்ஷட இலாபச் சீட்டு, தற்போது அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 45 மாநிலங்களில் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234450
-
இஸ்ரேல் அரசியலில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள 'கத்தார்கேட்' விவகாரம் - முழு பின்னணி
இஸ்ரேல் அரசியலில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள 'கத்தார்கேட்' விவகாரம் - முழு பின்னணி பட மூலாதாரம்,AFP via Getty Images 2 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேலின் புலம்பெயர் விவகாரங்களுக்கான அமைச்சர் அமிச்சாய் சிக்லி, 'கத்தார்கேட்' (Qatargate) விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென புதன்கிழமை (டிசம்பர் 24) அன்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். தற்போதைய இஸ்ரேல் அரசாங்கத்தில் இத்தகைய கோரிக்கையை முன்வைத்த முதல் அமைச்சர் இவர். சிக்லி, 'கான் ரெஷெட் பெட்' (Kan Reshet Bet) வானொலிக்கு அளித்த பேட்டியில், 'கத்தார்கேட் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது' என்று விவரித்ததுடன், 'அதில் முழுமையான விசாரணை அவசியம்' என்றும் கூறினார். அப்போது அவர், "இதை நியாயப்படுத்த வழியே இல்லை. இது அதிர்ச்சியளிக்கிறது. இந்த வழக்குகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றார். கத்தார்கேட் ஊழலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மூத்த ஆலோசகர்கள் மற்றும் உதவியாளர்கள் கத்தாரின் நலன்களை மேம்படுத்துவதில் பங்கு வகித்ததாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இஸ்ரேல் கடுமையான ராஜதந்திர மற்றும் பாதுகாப்புச் சிக்கல்களுடன் திணறிக் கொண்டிருந்த நேரத்தில், ஊடகங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்ற குற்றச்சாட்டும் இதில் அடங்கும். பிரதமர் அலுவலகத்திற்கு நெருக்கமானவர்களுக்கும் கத்தாருக்கு ஆதரவு திரட்டுபவர் ஒருவருக்கும் இடையே தொடர்பு இருந்ததாக இஸ்ரேலிய ஊடகங்களின் சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இது அரசியல் மற்றும் பொது மட்டத்தில் பல தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது. கத்தார் குறித்துப் பேசும்போது, சிக்லி கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். "என் பார்வையில், அது ஒரு எதிரி நாடு மற்றும் மோசமான நாடு. கத்தார்கேட் தொடர்பான குற்றச்சாட்டுகளை என்னால் நியாயப்படுத்த முடியாது. இது அதிர்ச்சியளிக்கிறது" என்று அவர் கூறினார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சில ஊடக நிறுவனங்கள் நிதி ரீதியாகப் பலன் அடைந்திருக்கலாம் என்றும் அவர் சூசகமாகத் தெரிவித்தார். முன்னதாக திங்கள்கிழமையன்று, முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் நஃப்தாலி பென்னட், கத்தார்கேட் ஊழல் தொடர்பான விவகாரத்திற்குப் பொறுப்பேற்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்று கோரினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். பெஞ்சமின் நெதன்யாகுவை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களில் பென்னட் ஒரு முக்கிய வேட்பாளராகக் கருதப்படுகிறார். நெதன்யாகுவின் உதவியாளர்களுக்கு கத்தார் நிதி வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அடுத்து, அவரது நிர்வாகம் 'துரோகம்' இழைத்துவிட்டதாக முன்னாள் பிரதமர் பென்னட் குற்றம் சாட்டினார். பென்னட் தனது சமூக ஊடக பதிவில், "போரின்போது, நெதன்யாகுவின் நிர்வாகம் இஸ்ரேலுக்கும் அதன் ராணுவ வீரர்களுக்கும் துரோகம் இழைத்ததுடன், பேராசையால் கத்தாரின் நலன்களுக்காகச் செயல்பட்டது" என்று குற்றம் சாட்டினார். நெதன்யாகுவே இந்த வழக்கை முடக்க முயல்வதாகக் குறிப்பிட்ட பென்னட், "இது இஸ்ரேல் வரலாற்றிலேயே மிக மோசமான துரோகச் செயல்" என்றும் குறிப்பிட்டார். கத்தார்கேட் என்றால் என்ன? இஸ்ரேலிய செய்தி ஊடகங்களில் கத்தாரின் நலன்களை ஊக்குவிப்பதற்காக நெதன்யாகுவின் ஊடக ஆலோசகர்களுக்கு கத்தார் பிரதிநிதி ஒருவர் நிதி வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த 'கத்தார்கேட்' வழக்கு அமைந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு பல இஸ்ரேலியர்களை கோபமடையச் செய்துள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் பிரச்னைகள் இன்னமும் தீர்ந்தபாடில்லை கத்தார் ஹமாஸ் தலைவர்களுக்கு அடைக்கலம் அளித்துள்ளதுடன், ஹமாஸுக்கு நிதி வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஷின் பெட் (Shin Bet) என்ற இஸ்ரேலின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பின் தலைவரை பதவியிலிருந்து நீக்க நெதன்யாகு சமீபத்தில் மேற்கொண்ட முயற்சிகள் இந்த சர்ச்சையை மேலும் அதிகப்படுத்தியுள்ளன. உண்மையில், நெதன்யாகுவின் உதவியாளர்களுக்கு எதிரான விசாரணையை முதலில் தொடங்கியதே ஷின் பெட் அமைப்புதான். நெதன்யாகு இந்த வழக்கை, "தன்னை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட, அரசியல் உள்நோக்கம் கொண்ட முயற்சி" என்று குறிப்பிட்டுள்ளார். கத்தார் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று கூறியுள்ளது. நீதிமன்ற ஆவணங்களின்படி, நெதன்யாகுவின் உதவியாளர்களான ஜோனாதன் யூரிச், எலி ஃபெல்ட்ஸ்டைன் ஆகியோர் இஸ்ரேலிய செய்தி ஊடகங்களில் கத்தார் குறித்த நேர்மறையான பிம்பத்தை உருவாக்க முயன்றார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருவதாக 'தி நியூயார்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. அவர்கள் பெயர் குறிப்பிடப்படாத மூன்றாவது நபர் ஒருவருடன் இணைந்து பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,காஸாவில் போர் நிறுத்தத்தை உறுதி செய்வதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கியப் பங்கு வகித்தார். எகிப்து மற்றும் கத்தாரின் பங்கு எகிப்து, கத்தார் ஆகிய இரு நாடுகளுமே 2023 இறுதி முதல் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே மத்தியஸ்தம் செய்து வருகின்றன. இருப்பினும், மத்தியஸ்தம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே அதிக ஒருங்கிணைப்பு இல்லை. காஸா போர் நிறுத்தம் தொடர்பான ராஜதந்திர முயற்சிகளில் எகிப்தைவிட கத்தார் முக்கியப் பங்காற்றியது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க இந்த மூவரும் முயன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. கத்தார் அரசாங்கம் ஓர் அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன், எகிப்தின் 'தீர்க்கமான பங்கை' பாராட்டியது. மேலும், "இரு நாடுகளும் நெருக்கமாக இணைந்து செயல்படுவதாகவும்" கூறியது. யூரிச் மற்றும் ஃபெல்ட்ஸ்டைன் இந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், அவர்கள் பல கட்டுப்பாடுகளுடன் ஏப்ரல் இறுதி வாரத்தில் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஜோனாதன் யூரிச் ஒரு முன்னாள் இஸ்ரேலிய ராணுவ ஊடக அதிகாரி மற்றும் நெதன்யாகுவின் மிகவும் நம்பகமான வியூக வகுப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். சமீபத்திய தேர்தல்களில் பிரதமரின் தகவல் தொடர்பு வியூகத்தை வடிவமைப்பதில் அவர் முக்கியப் பங்காற்றினார். நெதன்யாகு தனது சுயசரிதையில் அவரை 'கிட்டத்தட்ட குடும்ப உறுப்பினர் போன்றவர்' என்று விவரித்ததாக நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2023 அக்டோபர் 7 அன்று, இஸ்ரேல் தாக்குதலுக்கு உள்ளானது, காஸாவில் போர் தொடங்கியது. இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில், கத்தாருக்காக பணியாற்றும் அமெரிக்க ஆதரவு திரட்டுபவர் (lobbyist) ஒருவர் சார்பாக ஃபெல்ட்ஸ்டைனுக்கு நிதி அனுப்பியதாக ஒரு தொழிலதிபர் கூறுவதன் ஆடியோ பதிவை இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டன. அந்த நேரத்தில், அந்த நிதி கத்தாருக்காக அல்ல, பிரதமர் அலுவலகத்திற்கு ஃபெல்ட்ஸ்டைன் வழங்கிய தகவல் தொடர்பு சேவைகளுக்காக வழங்கப்பட்டது என்று அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மேலும் தொழிலதிபருக்கும் கத்தார் உள்ளிட்ட பிற தரப்பினருக்கும் இடையே எந்தத் தொடர்பும் இருப்பது குறித்து ஃபெல்ட்ஸ்டைனுக்கு தெரியாது என்றும் அவர்கள் கூறினர். மறுபுறம், கத்தாரிலிருந்து வந்த செய்திகளை, அவை மூத்த இஸ்ரேலிய அரசியல் அல்லது பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து வந்ததைப் போல செய்தியாளர்களுக்கு யூரிச் வழங்கினார் என்ற சந்தேகம் இருப்பதாக போலீஸ் பிரதிநிதி ஒருவர் நீதிபதி மிஸ்ராஹியிடம் தெரிவித்தார். கத்தார் தரப்பு கூறுவது என்ன? கத்தார் அதிகாரி ஒருவர் 'ஃபைனான்சியல் டைம்ஸ்' நாளிதழிடம் பேசுகையில், "நாங்கள் இத்தகைய அவதூறு பிரசாரத்தால் குறிவைக்கப்படுவது இது முதல் முறையல்ல. காஸா போர் முடிவுக்கு வருவதையோ அல்லது எஞ்சியிருக்கும் பிணைக் கைதிகள் தங்கள் குடும்பங்களுக்குத் திரும்புவதையோ விரும்பாத நபர்கள்தான் இதைச் செய்கிறார்கள்" என்றார். டிசம்பர் 25 அன்று, இஸ்ரேலின் முன்னணி நாளிதழான 'ஜெருசலேம் போஸ்ட்' கத்தார்கேட் குறித்து ஒரு தலையங்கம் எழுதியது. அதில், "கத்தாரின் பிராந்திய பங்கு ரகசியமானது அல்ல. பல ஆண்டுகளாக, இஸ்ரேலிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் முஸ்லிம் சகோதரத்துவ சமூகத்துடன் இணைந்த அமைப்புகள் உள்பட மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய இயக்கங்களுக்கான கத்தாரின் அரசியல் மற்றும் நிதி ஆதரவை அம்பலப்படுத்தியுள்ளன. அல் ஜசீராவின் உரிமை மற்றும் நிதி ஆதாரம் குறித்தும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவை சிறிய அல்லது மறைக்கப்பட்ட உண்மைகள் அல்ல. எனவே எந்தவொரு தொடர்பும் அல்லது செல்வாக்கும் இந்தச் சூழலின் அடிப்படையிலேயே ஆராயப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தது. "அதே நேரத்தில், இஸ்ரேல் கத்தாருடன் வரம்புக்கு உட்பட்ட மற்றும் நடைமுறை ரீதியான தொடர்புகளை, குறிப்பாக பிணைக் கைதிகள் மீட்பு மற்றும் போர் நிறுத்த முயற்சிகளில், பேணி வருகிறது. அதிகாரிகள் இந்த ஈடுபாட்டை மூலோபாய ரீதியானதாக அல்லாமல், ஒரு தொழில்நுட்ப ரீதியான நடவடிக்கையாக என்றே விவரிக்கின்றனர்" என்று ஜெருசலேம் போஸ்ட் வெளியிட்ட தலையங்கம் குறிப்பிட்டது. அதோடு, "ஒரு சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் கத்தார் உதவியாக இருப்பது, பெரும் மூலோபாய கவலைகளைவிட முக்கியமானது அல்ல. அதனால்தான் இந்த விசாரணைகளை வெறும் அரசியல் அசௌகரியங்களாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. பிரதமர் அலுவலகத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய தொடர்புகள் மற்றும் செய்திகள் குறித்த நடவடிக்கைகளை போலீசார் விசாரித்து வருகின்றனர்" என்றும் ஜெருசலேம் போஸ்ட் எழுதியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g616jwn48o
-
டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராணுவத்தால் வழங்கப்பட்ட பிஸ்டலை அமைப்பு முறை குற்றவாளி மகந்துரே மதுஷுக்கு கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், சிஐடியினால் கைது செய்யப்பட்டார். - Arun Hemachandrea ( Deputy foreign minister)
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது! முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். 2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷிடம் முன்னெடுத்த விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அமைய முன்னாள் அமைச்சர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறித்த துப்பாக்கியின் இலக்கங்களைப் பரிசோதித்த போது, அது டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், அந்தத் துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்து விளக்கம் அளிக்க அவர் தவறியுள்ளார். இதனடிப்படையில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmjmvpnmk035so29nsghseyvc
-
பைசன் காளமாடன் -திரைவிமர்சனம்: அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!
முட்டி மோதாமலேயே வென்றான் காளமாடன்! Ko.Ragupathi திரையில் நீலச் சுவாலை கலை இலக்கியப் படைப்புகளையும் திரைப்படங்களையும் ‘கற்பனை’ எனக் கூறினாலும் அவற்றுக்குள் சமூகத்தின் எதார்த்தங்களும் இருக்கின்றன. இந்த அடிப்படையைக்கூட அறியாமல் ‘உன்குழலில்’ (YouTube) திரைப்படங்களை ‘மதிப்பிடு’கின்றனர். தனக்கு மாறுபட்ட அரசியல் நிலைப்பாட்டைக் கொண்ட ஒருவர் ‘பைச’னை வரவேற்றதால் அப்படத்தைச் சந்தேகத்துடன் பார்க்கச் சென்றதாக ‘உன்குழலர்’ ஒருவர் கூறியுள்ளார். ஜாதியக் கட்டமைப்பையும் தென்மாவட்டங்களின் ஜாதிய மோதல்களின் பின்னணியை மட்டுமன்றி, கபடியின் விதிகளைக்கூட அறியாதோர்தான் ‘பைச’னை ‘மதிப்பிட்டுள்ளனர்’. ‘விளையாட்டு வடிவம்’ (sports formula) திரைப்படத்துக்கு வெற்றியைத் தருமென்ற நம்பிக்கையில் ‘பைசன்’ உருவாக்கப்பட்டதாகச் சிலர் கருதுகின்றனர். திரைப்படங்கள் அரசியல் பொருளாதார ஆதாயத்துக்கான கலைத் தொழிலாக இருப்பதை மறுக்க இயலாதுதான். ஆனால் அதேசமயம், ‘சார்பட்டா பரம்பரை’ (2021), ‘ப்ளூ ஸ்டார்’ (2024), ‘லப்பர் பந்து’ (2024), ‘பைசன்’ (2025) போன்ற சமகால திரைப்படங்களை வெறும் வணிகச் செயலாகவும் குறுக்க இயலாது. ஜாதிய முரண்கள் விளையாட்டுகளிலும் விளையாடுவதை அத்திரைப்படங்கள் உரையாடுகின்றன. அவை வணிகச் செயலாக இருந்தாலும்கூட நமக்குச் சிக்கல் இல்லை. ஆர்ய ப்ராமண, ஜாதிதிராவிட இயக்குநர்கள் திரைப்படங்களை இயக்கி பெரும் முதலாளிகளாக மாறுகிறபோது ஆதிதிராவிட இயக்குநர்களும் அவ்வாறு மாறுவதில் எந்தத் தவறும் இருக்க இயலாது. தலித் இயக்குநர்கள் அவர்களின் சமூகத்தைப் படமாக்கிப் பணமாக்குகிறார்கள் எனக் குற்றம் சுமத்துவதே தலித் வெறுப்பு மனநிலைதான். பொதுவாகத் திரைப்படங்களின் ரசனைக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் எதிர்பார்ப்பு இருக்கும்; தலித் இயக்குநர்களின் திரைப்படங்கள்தான் ‘ஜாதி அரசியலுடன்கூடிய’ ரசனைக்காக எதிர்பார்க்கப்படுகின்றன; அவை சலசலப்பையும் விவாதத்தையும் உருவாக்குகின்றன. அம்பேத்கர் நூற்றாண்டையொட்டி வீரியமாக எழுந்த தலித் இலக்கியங்களும் பனுவல்களும் விளைவித்த விவாதம் முனை மழுங்கிய இக்காலத்தில் அது திரைத்துறையில் சுடர்விட்டு எரிகிறது. இதைப் பற்ற வைத்தது இயக்குநர் பா.இரஞ்சித்தும், அவருடைய நீலம் நிறுவனமும் என்ற கூற்று மிகை மதிப்பீடு அல்ல. ‘நான் யார்’ எனத் தன் அடையாளத்தை வெளிப்படுத்தியதும், ‘இதைப் பேசுவது எதற்காக’ எனத் தன் அம்பேத்கரிய அரசியலைப் பகிரங்கமாகப் பொதுவெளியில் அறிவித்ததும் ஜாதிய சமூகத்தில் அதிர்வை ஏற்படுத்தியது. நீலம் அறிமுகம் செய்த மாரி செல்வராஜ் ‘பரியேறும் பெருமாள்’ வழி ஜாதி உரையாடலைத் தொடங்கினார். தன்னுடைய மக்களின் வலியை, வேதனையைத் தொடர்ந்து திரைப்படமாக்குவேன் என அப்பட்டமாக அறிவிக்கிறார். அவர் பிறந்த சமூகத்துக்குள் ஒரு பிரிவினர் தலித் என்ற சொல்லையும், ஒடுக்கப்பட்டோர் என்ற சமகால எதார்த்த நிலையையும் மறுக்கின்றனர். தாங்கள் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர் என்ற ‘அரசாண்டப் பரம்பரை’யினர் உரிமையைக் கோருகின்றனர். இவற்றின் தொடர்ச்சியாக அரசின் ‘பட்டியல் வகைமை’யிலிருந்தே வெளியேற வேண்டுமென்ற இயக்கத்தையும் முன்னெடுக்கின்றனர். இந்த நிலைப்பாடுகளுக்கு முரணாக மாரி செல்வராஜ் தானும் தன் சமூகத்தினரும் ஒடுக்கப்பட்ட, ஒடுக்கப்படுகிற அவலத்தைப் பேசுகிறார். ஒடுக்கப்படுகிற மக்களின் எந்தச் சிக்கல்களையும் எந்த வடிவங்களில் பேசினாலும் அவர்களைச் சுரண்டுகிற, ஏமாற்றுகிற, தாக்குகிற ஆதிக்க ஜாதிகளையும் பேசுவது தவிர்க்க இயலாது. இதனால் சுயஜாதியும், ஆதிக்க ஜாதிகளும் அவரைக் கண்டிக்கின்றனர். எழுகின்ற எதிர்ப்புகளை எதிர்கொண்டு எதார்த்தங்களை எடுத்துரைப்பேன் என அறிவிக்கும் மாரி செல்வராஜின் பெருங்கோபமும் அரசியலும் திரைப்படங்களாய் வெளிப்படுகின்றன. அவருடைய ‘பரியேறும் பெருமாள்’ (2018), ‘கர்ணன்’ (2021), ‘மாமன்னன்’ (2023), ‘வாழை’ (2024), ‘பைசன்’ (2025) ஆகிய ஐந்து திரைப்படங்களும் ஒடுக்குமுறைகளின் வெவ்வேறு வடிவங்களையும் அவற்றுக்கெதிராகப் போராடுவதையும் கருவாகக் கொண்டிருக்கின்றன. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரானர் பல்கலைக்கழகத்தில் 2002ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை ‘தமிழ்நாட்டில் தேவேந்திரகுல வேளாளர் இயக்கம், 1920 – 2000’ என்ற தலைப்பில் கா.அ.மணிக்குமார் நெறியாள்கையில் மேற்கொண்ட ஆராய்ச்சியால் முனைவர் பட்டம் பெற்ற நான், மாரி செல்வராஜின் திரைப்படங்களைத் தென்மாவட்டங்களின் ஜாதிய எதார்த்தத்தின் பின்புலத்தில்தான் மதிப்பிடுகிறேன். ‘பரியேறும் பெருமா’ளில் உரையாடலை முன்வைத்த மாரி செல்வராஜ், ‘கர்ண’னில் உரசலைத் தூண்டுகிறாரோ எனச் சிலர் விமர்சித்தபோது, “அத்திரைப்படம் சமூக எதார்த்தத்தை, வரலாற்றை, உண்மையைப் பேசுகிறது” என இடதுசாரி தோழர்கள் சிலரிடம் வாதித்தேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் விழுப்புரம் கிளை சார்பில் மதுசூதனன் ஏற்பாடு செய்த இணையக் கூட்டத்திலும் அவ்விவாதத்தை வலுப்படுத்தினேன். ‘கர்ண’னின் கருப்பொருள்தான் ‘மண்டேலா’ (2021) திரைப்படத்திலும் பேசப்பட்டிருப்பதால் ‘கர்ணனும் மண்டேலாவும் பொதுவுரிமையின் கலகக் குரல்கள்’ என்ற கட்டுரையைக் காலச்சுவடு (ஜூன் 2021) இதழில் எழுதினேன். ‘பைசன் என்ற காளமாடன்’ என்னுள் உணர்ச்சிவய மனநிலையையும் ஏற்படுத்தியது. காளமாடனை உருவாக்கிய தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷியஸ் பள்ளியில்தான் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை நானும் பயின்றேன். அப்பள்ளியின் கால்பந்தாட்டக் குழுவிலும் இடம்பெற்றேன். மர்காஷியஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தில் சேர்ந்தபோதும் கால்பந்தாட்டக் குழுவில் இணைந்து சில மாதங்கள் விளையாடினேன். கால்பந்தாட்ட வீரர்கள் அனைவருக்கும் பூட் கொடுத்த உடற்பயிற்சி ஆசிரியர் சில்வியா, அதை எனக்குத் தராதபோதுதான் பாகுபாட்டை உணர்ந்தேன். இதைக் கிறிஸ்துவ தேவேந்திர சமூகத்தைச் சேர்ந்த தேவா, தேவர் சமூகத்தைச் சேர்ந்த கணேசன் ஆகியோரிடம் கூறினேன். தேவா எனக்கு இலவசமாக பூட் தந்தார். பாகுபாடு இருப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். அனுபவத்திலும் வயதிலும் என்னைவிட மூத்தவர்களான அவர்கள் நட்சத்திர வீரர்களாகப் பிரகாசித்ததால் “வேலியிட இயலாது நிலையில் இருந்தனர்.” இச்சிக்கலைக் கல்லூரியின் கபடி வீரர்களும், தேவேந்திரர் சமூகத்தைச் சேர்ந்த என் நண்பர்களுமான தேமாங்குளம் சுந்தர், செம்பூர் ஜூலியஸ் போன்றோரிடம் கூறினேன். கல்லூரியின் கபடி அணிக்குத் தேவேந்திரர் சமூக மாணவர்களே பலமானவர்கள் என்பதால் ஜாதிய பாகுபாடு இல்லை எனப் பதிலளித்தனர். நானும் அவ்வப்போது கபடி விளையாடினேன். மணத்தி கணேசனையும் கல்லூரியில் பயின்ற காலத்திலேயே அறிந்தேன். ஜாதி பாகுபாட்டால் குழுவிலிருந்து வெளியேறி விளையாடுவதையே முற்றிலும் நிறுத்தினேன். விளையாடிய நேரத்தைத் தட்டச்சும் சுருக்கெழுத்தும் படிக்கச் சென்றேன். முனைவர் பட்ட ஆராய்ச்சிக் காலத்தில் தலித் இலக்கிய எழுச்சியின் தாக்கத்தால் பள்ளி கல்லூரி அனுபவங்களுடன் வேறுசில பாகுபாட்டு அனுபவங்களையும் இணைத்து ‘அந்தப் பாவிகளைத் தண்டிப்பீராக!’ எனத் தலைப்பிட்டுக் குறுநாவல் எழுதினேன். அப்பிரதியைத் தொலைத்துவிட்டேன்! என் சுய அனுபவங்களால், பிற ஜாதியைச் சேர்ந்த அனைவருமே பாகுபாட்டைக் கடைபிடிப்பர்; பகையுடன் அணுகுவர் எனக் கூற இயலாது. ஏனென்றால், மர்காஷியஸ் பள்ளியிலும் கல்லூரியிலும் பிற சமூகத்தைச் சேர்ந்த நித்தியானந்தன் (விலங்கியல்), ஃப்ரடெரிக் (இயற்பியல்), பியூலா (தமிழ்), ஜாஸ்மின் (வரலாறு), கிறிஸ்டோபர் (வரலாறு), பீட்டர் (வரலாறு) போன்றோர் படிப்பில் என் ஆர்வத்தைக் கண்டு என்னை ஊக்கப்படுத்தினர்; அரவணைத்தனர். ஆசிரியர்களில் ஒரே ஜாதியைச் சேர்ந்த ஒருவர் விளையாட்டில் பாகுபாட்டையும், சிலர் படிப்பில் ஊக்கப்படுத்தலையும் பின்பற்றிய பின்னணியிலும், தேவேந்திரர் சமூக ஆராய்ச்சி அனுபவத்திலும்தான் காளமாடனை மதிப்பிடுகிறேன். மர்காஷியஸ் பள்ளியின் பிரார்த்தனை நேரத்தில் வகுப்பறையில் பிறரின் சாப்பாடு பாத்திரங்களைத் திறந்து தன் பசியை அடக்கும் காளமாடனைக் கண்டிக்கும் உடற்பயிற்சி ஆசிரியர் சந்தனராஜ், அவனுடைய கபடி ஆர்வத்தைக் கண்டுணர்கிறார்; அவனை அரவணைத்து, ஊக்கப்படுத்தி, வழிநடத்துகிறார். சந்தனராஜின் உடல்மொழியும் வார்த்தைகளும்கூட கனக்கச்சிதமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் ஆசிரியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இவரைப் போல் ‘கடா மீசை’யுடன் ஒர் உடற்பயிற்சி ஆசிரியர் நான் பயின்றபோது மர்காஷியஸ் பள்ளியில் இருந்தார். அவருடைய பெயர் மோகன் என்பது என் நினைவு. பிறர் உணவை உண்ணும் காட்சி இடம்பெற்றிருக்க வேண்டாம் எனச் சிலர் கூறுகின்றனர். பள்ளி, கல்லூரிகளில் அனுமதியுடன் அல்லது அனுமதியில்லாமல் பிறரின் உணவை உண்ணுவது இயல்பாக நடைபெறும். அந்தப் பிறர் நண்பர்களாகவும் வகுப்புத் தோழர்களாகவும் இருப்பர். இச்செயலைத் ‘திருட்டு’ என எவரும் கருதவில்லை. விளையாடிய காலங்களில் எனக்கும் இந்த அனுபவம் உண்டு. கொடும்பசியில் இருக்கும் விளையாட்டு வீரனுக்கு ஒருடிபன் பாக்ஸ் உணவு போதுமானது அல்ல; கூடுதலாகத் தேவைப்படுவது இயல்புதானே. அவனுடைய கொடும்பசிக்காகப் பச்சாதாபம் கொள்வதுதானே சரியாக இருக்க இயலும்! இதைப் போன்று, 300 பரோட்டாக்களைச் சாக்கு மூட்டையில் கொடுக்கும் காட்சியும் விமர்சிக்கப்படுகிறது. தென்மாவட்டக் கிறிஸ்துவ தேவாலயங்களில் வருடத்தில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நாள் ‘அசனம்’ என்ற பெயரில் உணவு வழங்குவது இன்றுவரை பின்பற்றப்படுகிறது. இது சமத்துவத்துக்கான செயலாகத் தோன்றியிருக்கலாம். அதைப் புனிதமாகக் கருதுவர். அனைத்து ஜாதியினரும் வேறுபாடற்றுச் சமத்துவமாய் ‘அமர்ந்து’ உண்பதும், ‘அசனச் சோற்றைத்’ தோளிலிடும் துண்டுகளில் வாங்கி பொதிந்துச் செல்வதும் நடைபெறும். நகர்ப்புறங்களில் பிளாஸ்டிக் பைகளில் பார்சல் டீ வாங்கும் பழக்கமுடைய இக்காலத்தில் சாக்கு மூட்டை பரோட்ட சிக்கலானது அல்ல. தென்மாவட்டங்களில் ஏப்ரல், மே மாதங்களின் இரவு நேரங்களில் நடத்தப்படும் ‘மின்னொளி கபடி போட்டி’களைக் காண்பதற்கெனக் கூட்டம் கூடும். எங்கள் கிராமத்திலிருந்தும் சென்றிருக்கிறோம். ஒவ்வொரு கிராமங்களும் குழுக்களும் இதில் விளையாடினர். இது தனித்த ஜாதியாகவும், ஜாதிகள் கலந்தும் இருக்கும். சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம் கபடிக் குழுக்களில் முக்கியமான காளமாடன்கள் சிலர் இருந்தனர். தனியார் கம்பெனிகளும் கபடி குழுக்களைக் கொண்டிருந்தன. விளையாட்டுத் திறமையால் கபடி அணியில் சேர்க்கப்பட்டு அக்கம்பெனிகள் வேலையும் கொடுத்தன. பல்கலைக்கழக, மாநில அளவிலான வீரர்களுக்கு அரசு வேலை எளிதாகக் கிடைத்ததும் கால்பந்து, கபடி விளையாட்டுகளில் பங்கெடுப்பதற்கான முக்கியக் காரணமாக இருந்தது. இந்த நிலைக்கு முன்னேறுவது எளிதானது அல்ல. ஜாதி மோதல் கூர்மைபெற்ற 1990களில் ஜாதிகளுக்குள் பகை புகைந்தது; மோதல் வெடித்தது. நட்பும் பகையும் மின்னலாய் வந்துசென்று ஏற்படுத்திய தாக்கத்தின் பின்புலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் விளையாட்டு வீரராகவும் நட்சத்திரமாகவும் உருமாறுவது கடினம். விளையாட்டில் பதுங்குதல், பாய்தல், பாதுகாத்தல் உள்ளிட்ட நுணுக்கங்களை வீரனுக்குக் கற்பிக்கும் ஆசிரியர் அவசியம். அவனுக்கு உணவு, உடை உட்பட சில பொருட்கள் வேண்டும். அவற்றை வாங்கும் பொருளாதாரச் ‘சக்தி’ ஒடுக்கப்பட்டோருக்கு இல்லை. இவை புற ஜாதிகளிடமிருந்து கிடைக்கின்றன. காளமாடன் கபடி வீரனாக உருவாவதிலும் அவனை அங்கீகரிப்பதிலும் ஜாதியின் உள்முரண்தான் முக்கியத் தடையாக இருக்கிறது. முந்தைய நான்கு படங்களிலும் ஜாதியின் புறமுரணைப் பேசிய மாரி செல்வராஜ், முதன்முதலாகக் காளமாடனில் அகமுரணைக் காட்சிப்படுத்தியுள்ளார். ஆசிரியரின் ஆதரவில் வயிறாற பரோட்டா உண்ணும்போதுதான், தன் முன்னே ஒருவர் அறுத்துக் கொல்லப்படுவதைக் கண்டு ‘காளமாடனே’ அஞ்சுகிறான்; பதறுகிறான். கொல்லப்பட்டது தன் ஜாதியைச் சேர்ந்தவர் என்றபோதிலும் அச்சம்பவத்தில் காளமாடன் சாட்சியாய் மாறி அவன் வாழ்க்கைத் திசை திரும்பாதிருக்க அந்த ஆசிரியர் காளமாடனைக் காப்பாற்றுகிறார். ஜாதி மோதலில் ஏதாவது ஒருவகையில் வழக்கில் சிக்கியவர்களின் வாழ்க்கை சீரழிந்ததைப் பார்த்தால் இக்காட்சியின் முக்கியத்துவம் விளங்கும். விளையாட்டும் வினையாவதை அனுபவத்தில் உணர்ந்த காளமாடனின் தந்தை பசுபதி, மகன் விளையாடுவதை மறுக்கிறார். அப்போதும் ஆசிரியர்தான் விளையாட உதவுகிறார். இக்காட்சிகள் ஒருவேளை ‘உண்மைச் சம்பவங்கள்’ என்றால், காளமாடனின் ஆசிரியருக்கு இந்த நாடே நன்றிக் கடன் பட்டிருக்கிறது! உள்ளூரின் உள்பகையால் ஊர்க் கபடிக் குழுவிலேயே காளமாடனை வீரனாக அங்கீகரித்துச் சேர்க்க மறுப்பதும் நிகழ்கிறது. ஒரேநேரத்தில் உள்பகையின் புறக்கணிப்பையும், புறஜாதியைச் சேர்ந்த பண்ணையாரின் ஆதரவையும் பெறுகிறான். வீரனின் திறமையைத்தான் பார்க்கிறார்; அவரின் ஜாதியை அல்ல. இதைப் புரிய வைக்க ஆசிரியரும் பண்ணையாரும் முயற்சிக்கின்றனர். இது காளமாடனின் தந்தைக்கு அச்சமாகவும் நம்பிக்கையற்றதாகவும் இருக்கின்றன. நம்பிக்கைக்குப் பின் ஏற்படும் ஜாதிய தாக்குதலால் காளமாடனைப் பண்ணையாரின் ஆட்கள் சந்தேகித்தாலும், ‘வீரன்’ துரோகம் செய்ய மாட்டான் எனப் பண்ணையார் நம்புகிறார்; அவனைப் பாதுகாப்பாக அனுப்புகிறார்; தொடர்ந்து விளையாட அறிவுறுத்துகிறார். அச்சமும் சந்தேகமும் ஜாதியம் உற்பத்தி செய்ததாகும். காளமாடன் கபடி நட்சத்திரமாகி இந்திய அணியில் சேர்வதற்குப் புறஜாதியினரின் ஆதரவுதான் முக்கியப் பங்காற்றுகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் முன்னேற்றத்துக்கு அவர்களைச் சுரண்டுகின்ற ஆதிக்க ஜாதியினர்களே உதவுவார்களா? ஜாதிய அமைப்பு, ஜாதிகளுக்கிடையே பாகுபாட்டையும் பகையையும் விளைவித்தாலும் திறமைக்கான ஆதரவைப் பிற ஜாதிகளின் ‘தனிநபர்கள்’ கொடுக்கச் செய்கிறது. நான் பிறந்துவளர்ந்த கிராமத்தை என் தந்தை கோ.பெ.கோயில்பிள்ளை புதிதாக உருவாக்கிய காலத்தில், எங்கள் உறவினர்களுக்குத் தன் நெருங்கிய நண்பரான டி.கே.செல்லத்துரை நாடார் செய்த உதவிகளுக்காக ‘டிகேசி நகர்’ என என் தந்தை பெயரிட்டார். எனக்கும் பிற ஜாதியினரின் உதவிகள் முக்கியமானவை. எனவே, ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்தில் பிற ஜாதி தனிநபர்களின் ஆதரவு கிடைப்பது இயல்பு. சுரண்டும் ஜாதிகளிலும் இரக்கமும் மனிதநேயமும் இருக்கின்றன. பண்ணையார் ‘திறமையை’ அங்கீகரிப்பதில் ஜாதியைப் புறக்கணிக்கும் வகையைச் சேர்ந்தவர். சுயஜாதித் தலைவரும் பண்ணையாரும் எதிரிகளாக இருந்தபோதிலும் காளமாடனின் விளையாட்டுத் திறமையை அங்கீகரிப்பதில் ஒத்தச் சிந்தனையுடன் இருக்கின்றனர்! அத்திறமையை அவனுடைய ஜாதியினர் அங்கீகரிக்க மறுக்கின்றனர்; இழிவாகப் பேசுகின்றனர். இதைக் கண்டிக்கும் ஜாதித் தலைவர், காளமாடன் அவனுடைய திறமையால்தான் நிற்கிறான்; அதுவே சமூகத்தின் பெருமை எனக் கூறுகிறார். இத்தகைய தனிநபர்கள், திறமையை ஜாதியிலிருந்து மதிப்பிடவில்லை; திறமையைத் திறமையாகப் பார்க்கிறபோது ஜாதியைப் புறக்கணிக்கின்றனர். உடற்பயிற்சி ஆசிரியரும், பண்ணையாரும், விளையாட்டுத் தேர்வுக்குழு நபரும் பிற ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும் திறமையைத் திறமையாகப் பார்த்ததால் அத்திறமை தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதற்காகப் போராடுகின்றனர். இதனால் காளமாடன் நட்சத்திரமானான். திறமைதான் திறமையை அங்கிகரீக்கும்; திறமை ஜாதியையும் புறக்கணிக்கும் என்பதைத் தெளிவாகக் காட்சிப்படுத்தியது மாரி செல்வராஜின் தனித்திறமை! அது இப்படத்தின் தனிச்சிறப்பு! “நான் அல்ல, கண்ணகிநகர்தான் பிராண்ட்” எனக் கார்த்திகா அறிவித்த விளையாட்டின் ‘திறமை’ அரசியல்தான் காளமாடனின் அரசியலும். ஏககாலத்தில் காளமாடன் நிழலாகவும், கண்ணகிநகர் கார்த்திகா நிஜமாகவும் ஒடுக்கப்பட்டோரின் திறமைகளை வெளிச்சமாக்கியுள்ளனர். ஒடுக்கப்படும் சமூகங்களின் வலியை அவர்களை வதைப்பவர்களால் புரிந்துகொள்ளவே இயலாது என முன்வைக்கப்படும் விவாதத்துக்கு எதிராக அதைப் புரிந்துகொள்ள இயலும் என்று காளமாடன் பறைசாற்றுகிறான். பகையின் பரிமாணம் பள்ளிக்கூடத்திலிருந்து பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தரும்வரை காளமாடன் ஜாதிப் பாகுபாட்டை அனுபவித்ததாகக் காட்சிகள் இல்லை. காளமாடனைச் சுற்றி நிகழும் சம்பவங்கள் அவனைப் பாதிக்கின்றன; விளையாட்டுக்குத் தடைகளாக இல்லை. ஒருவன் தன்னைக் கட்டிப்பிடிப்பதாகவும் மற்றொருவன் கத்தியால் குத்துவதாகவும் இதனால் யாரிடம் பேசுவது, சிரிக்கிறது, பழகுவது என ஜாதியரசியல் தெரியாத வெள்ளந்தி அவன். கபடியில்தான் எவராலும் கட்டுப்படுத்த இயலாத காளமாடன், ஆட்டைப் பலியிட கோயிலுக்குச் செல்கிறபோது வேற்று ஜாதியைச் சேர்ந்தவராலும், கிராமத்தில் தன் காதலியின் அண்ணனாலும், இந்திய அணியில் விளையாடச் செல்கிறபோது காவலர்களாலும் தன் தந்தை தாக்கப்படுகிறபோது காளமாடன் சீறிப் பாய்ந்து எதிர்த்துத் தாக்குகிறான். தன் தந்தையைப் பாதுகாப்பதே இதன் நோக்கம்; வேறு அரசியல் இல்லை. உண்மையில் காளமாடனுக்கு அரசியல் தெரியவில்லை; குழந்தைப் பருவத்தில் ஒரு முத்தம் மட்டும் கொடுத்தவனுக்கு அதற்குப் பின் காதலும் வரவில்லை. மர்காஷியஸ் பள்ளியின் விளையாட்டு காலரியில் அமர்ந்து சைட் அடித்த காட்சிகளும் இடம்பெறவில்லை. இந்த அனுபவங்கள்கூட காளமாடனுக்கு இல்லை போலும்! வயதுக்கு மூத்தப் பெண்களைத் திருமணம் செய்ததும், குழந்தைக் கணவர் வழக்கமும் சில சமூகங்களில் இருந்தன. இவற்றைச் சிக்கலாக மாற்றியிருக்க வேண்டாம். தேசிய வீரனாகச் செல்கிறபோது அவனது தந்தை காவலர்களால் தாக்கப்படுவதும், காளமாடன் எதிர்த்துத் தாக்குவதும் அந்தச் சூழலுக்குத் தர்க்கமற்ற காட்சி. இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர் ஜாதிய மோதல் சூழலில் அரசின் உரிய ‘மரியாதையுடன்’ காவலர்களின் பாதுகாப்பிலேயே சென்றிருக்க முடியும். இவ்விடத்தில் காவல்துறையுடன் மோதலை ஏற்படுத்தியது அந்தச் சூழலுக்குத் தர்க்கமற்ற, பொருத்தமற்ற, அவசியமற்ற காட்சி. சில சண்டைக் காட்சிகளையும் தவிர்த்திருக்கலாம். காளமாடன் எப்போதுமே கோபத்துடனேயே இருக்கிறான். அவன் முகத்தில் சிரிப்பே இல்லை. ஒடுக்கப்படுகிற சமூகங்களை மகிழ்ச்சியாக்கும் அவர்களுக்கு இடையேயான கேலியையும் கிண்டலையும் காட்சிப்படுத்தாமல் அவற்றை மாரி செல்வராஜ் விலக்குவது விளங்கவில்லை; அது வியப்பாகவும் இருக்கிறது. ‘பைச’னில் காட்டப்பட்ட இரு ஜாதிகளுக்கும் இரண்டுக்கும் மேற்பட்ட தலைவர்கள் அக்காலத்தில் இருந்தனர். வாலிபர்களும் மாணவர்களும்கூட அவரவர் ஜாதி தலைவர்களுடன் தொடர்பில் இருந்தனர். வெவ்வேறு ஜாதி நபர்களுடன் நட்பாகவும் பழகினர். என் நண்பன் கண்ணன் பண்ணையாரைப் பார்க்கச் சென்றதாக அவ்வப்போது கூறியது என் நினைவில் உள்ளது. தென்மாவட்ட ஜாதி மோதல்களின் பரிணாமமும் பரிமாணமும் ஒற்றைத் தன்மை கொண்டவை அல்ல; அவை பன்மையானவை. இந்தப் படத்தின் ‘பகை’, தாமிரபரணி பாசனத்தின் தென்கிழக்குக் கடைகோடிக்கு உரித்தானது. இத்தாக்கம் பிற பகுதிகளில் இல்லை. பிற்காலத்தில் இது வேறுவடிவம் பெற்றது. ஆனால், “நான், நீங்க, தாத்தனுக்கும் தாத்தன் பிறக்கிறதுக்கு முன்னாடியே பகையும் பழியும் இருப்ப”தாகச் சித்திரிப்பது அவ்விரு ஜாதிகளுக்குமான பகை நிரந்தரமாக நீடிக்கிற தோற்றத்தைத் தருகிறது. இது சிக்கலுக்குரியது. பைசனின் கதைக்களம் நெல், வாழை என விவசாயமும் விற்பனையும் நிகழும் பகுதி. இவ்விரண்டும் வெவ்வேறு ஜாதியினரால் செய்யப்படுகின்றன. வியாபாரிகளும் விவசாயிகளும் ஒருவர் மற்றொருவரைச் சார்ந்து வாழ வேண்டிய நிலை இருப்பதால் இணக்கமும் பிணக்கமும் உண்டு. இங்கு நிலவுடைமையாளர்களாக இருந்த பிராமண, வெள்ளாள ஜாதிகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் காலத்திலேயே குடிபெயர்ந்து நவீன வாழ்க்கைக்குள் சென்றதால், அந்நிலத்தில் விவசாயம் செய்த தேவேந்திரர்கள் நிலவுடைமையாளர்களாகினர். அங்குச் சில இடங்களில் நாடார்களில் சிலரும் பண்ணையார்களாக இருந்தனர். காளமாடனின் கந்தசாமி, பண்ணையார்களின் பிரதிநிதியே. அவருடைய ஆட்களின் பொருளாதார நிலை அவரைப் போன்றது அல்ல. அந்த “ஆட்களின்” வீடுகளையும், உடற்பயிற்சி ஆசிரியரின் வீட்டையும், கிராமத்தையும் காட்சிப்படுத்தியிருந்தால் ஜாதியின் உண்மை நிலை பார்வையாளர்களுக்கு நன்கு புரிந்திருக்கும். பிற்காலத்தில்தான் பண்ணையார், ஜாதியின் பிரதிநிதியாக உருமாறுகிறார். அதற்கான அரசியல் பொருளாதார காரணிகள் வேறு. ஆராய்ச்சிக் காலத்தில் அப்பகுதிகளில் மேற்கொண்ட கள ஆய்வில் அங்கு பண்ணையார், பண்ணையாள் என்ற ‘வர்க்க’ முரண் இருப்பதை அறிந்தேன். வர்க்க முரண்தான் சமத்துவ உரிமைக்கான போராளியாகப் பாண்டியராஜாவையும் உருவாக்கியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பண்ணையடிமை முறைக்கு எதிரான போராட்டத்துக்கு கம்யூனிஸ்ட்டுகள் தலைமை தாங்கியதால் பிற்காலங்களில் அது ஜாதிய மோதலாக உருவாகவில்லை. தென் மாவட்டங்களில் வர்க்க அணிதிரட்டலின் பலகீனத்தால் அது ஜாதிய மோதலாக உருமாறியது. இது மேலும் ஆய்வுக்கு உரியதுதான். இருப்பினும், மாரி செல்வராஜ் கூறுவதுபோல் அது முப்பாட்டன் காலத்துக்கும் முந்தைய பகை அல்ல. ஏனென்றால், பகை உருவாவதற்குப் பொருளாதார ஆதிக்கமும் (நிலவுடைமை, முதலாளித்துவம்) அல்லது இவ்வமைப்புகளின் அதிகாரத்தின் பிரதிநிதியாக இருப்பதும், இவற்றால் ஆளப்படுகிற குழுக்கள் இருப்பதும் அவசியம். இவ்வமைப்பு முரண்களை உருவாக்கும். ‘பைச’னில் கந்தசாமியைப் பிரதிநிதித்துவம் செய்கிற ஜாதியினர் அடிப்படையில் ஜாதிய கிராம கட்டமைப்புக்குள் இல்லை. அவர்கள் தனித்த கிராமங்களில் சுயமாக, சுதந்திரமாக வசிக்கின்றனர். தென்மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் இவ்விரு பிரிவினருக்கும் இடையேயான உறவு ஆதிக்கமும் சார்பு நிலையையும் கொண்டிருக்கவில்லை. கந்தசாமி பிரதிநிதித்துவம் செய்கிற ஜாதியில் பல பிரிவுகள் இருந்தன. அவர்களில் நிலவுடைமையாளர்களும் ஒரு பிரிவினர்; இவர்களுக்கும் விவசாயக் கூலிகளுக்குமான முரண் இயல்பானதே. இதுவும்கூட அந்தப் பகுதிகளுக்கு மட்டுமே உரியது. இது சுதந்திர இந்தியாவில் தோன்றிய முரண்தான். அது பாண்டியராஜா கொல்லப்படுவதுவரை நீடித்தது. ஒரு மூலையில் தோன்றிய வர்க்க முரண், அதற்குத் தொடர்பற்ற ஜாதிகளின் பகையாக மாறியதில் சில காரணிகள் உண்டு; இதைத் தனித்து விவாதிக்க வேண்டும். கந்தசாமிக்கும் பாண்டிராஜாவுக்கும் இடையிலான மோதலுக்கான அடிப்படைக் காரணத்தைக் காட்சிப்படுத்தாமல் மோதலை மட்டுமே காட்சிப்படுத்தியது, இரு ஜாதிகளுக்குமான “முப்பாட்டன் காலத்துப் பகை”யாகக் கூறுவது ஜாதியச் சிக்கலை மேலும் வலுப்படுத்துகிறது. காளமாடனுக்கே ஜாதியச் சிக்கல் புரியாதபோது, இதன் அரிச்சுவட்டை அறியாதோர் அதை விளங்குவது கடினம். ‘பைசன்’ என்ற பெயரைப்போல் உள்ளடக்கமும் அனைவரும் உள்வாங்கும் விதமாகக் காட்சியமைத்தல் அவசியம். பாண்டியராஜா, கந்தசாமி ஆதரவாளர்களாலும், கந்தசாமி காவலர்களாலும் கொல்லப்படுகிற சம்பவங்களுக்குப் பின்புலமாகச் செயல்பட்டது ஜாதியின் பிரதிநிதிகள்தான் என்பதைக் காட்சிப்படுத்தியுள்ளார். இவை, சுய ஜாதியினர் நம்பிக்கையானவர்கள் அல்லர்; அவர்கள் துரோகிகளாகவும் மாறுவர் என்பதற்குச் சாட்சி. ஒவ்வொரு துறைகளிலும் காளமாடன்கள் இயல்பிலேயே திறமையானவர்களாக இருப்பினும் அவர்கள் முட்டி மோதிதான் வெல்கிறார்கள். ஆனால், பைசன் என்ற காளமாடன் இதைச் செய்யாமலேயே வெற்றிபெறுகிறான். அவனுக்காகப் ‘பிறர்’தான் முட்டிமோதுகின்றனர்; அவன் விளையாட்டில்தான் காளமாடன். காளமாடன் பொதுச் சமூகத்தில் முன்வைக்கும் முக்கியக் கேள்வி: “சுயஜாதி அடையாள அணிதிரட்டல் அவசியமா?” https://theneelam.com/bison-review/
-
தையிட்டியில் காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணி அல்லது இழப்பீடு - அமைச்சர் சந்திரசேகரன்
இது வேறு இருக்கா நீங்கள் இவை எல்லாம் கற்று தெளிந்து தான் வத்திருக்கிறீர் 😂 நாங்கள் இப்போ இருக்கின்ற கேள்வி பதில்களை படித்து தான் அறிந்து கொள்கின்றோம்
-
தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது - வட இலங்கையின் சங்க நாயக்க தேரர்
அதனால் தான் புத்தரை தமிழர்கள் போட்டி போட்டு கும்பிட தொடங்க வேண்டும் தமிழர்கள் பகுதிகள் எங்குமே விகாரைகள் வைத்து கொண்டு போவதை தையிட்டியோடு நிறுத்திவிடுவார்கள். எற்கெனவே தமிழர்களின் கடவுளாக இருந்தவர் தானே புத்தர். ஐயப்பனாரையும் அனுமாரையும் கும்பிட தொடங்கியவர்கள் அதே ஆவேசத்துடன் இதை ஆரம்பிக்க வேண்டும்
-
பாரிய சமூகச் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணம்
ஈழத்தமிழர்களின் கல்வி மற்றும் கலாச்சார மையமாகத் திகழ்ந்த யாழ்ப்பாணம், இன்று ஒரு பாரிய சமூகச் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, யாழ் இளைஞர்களிடையே பரவி வரும் சோம்பேறித்தனமும், அதற்குத் தீனி போடும் புலம்பெயர் உறவுகளின் ‘முட்டாள்தனமான’ பண உதவியும் ஒரு தலைமுறையையே அழிவின் விளிம்பிற்குத் தள்ளிக் கொண்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தின் வீதிகளில் இன்று வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரப் பலகைகளை சாதாரணமாகக் காணலாம். ஆனால், எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் "வேலை இல்லை" என்று புலம்பிக் கொண்டு வெட்டியாகத் திரிவதே யதார்த்தமாக உள்ளது. இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்களில் சிங்கள இளைஞர்களும், சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் புடவைக்கடைகளில் மலையக இளைஞர் யுவதிகளும் மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள். வெளிமாவட்ட இளைஞர்கள் வந்து யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உள்ளூர் இளைஞர்களோ, படித்து முடித்துவிட்டு எவ்வித இலக்கும் இன்றித் திரிகிறார்கள். ஆட்டோ ஓட்டலாமே? துணிக்கடையில் வேலை செய்யலாமே?" என்று கேட்டால், "அது எங்கள் தகுதிக்குக் குறைவானது" என்ற பதில் வருகிறது. வெளிநாட்டில் இருக்கும் உறவினர்களின் கௌரவம் பாதிக்கப்படுமாம்! வெளிநாடுகளில் கௌரவம் பார்க்கும் இந்த உறவினர்களில் பலர், அங்குள்ள அரசுகளை ஏமாற்றி, உடல் உழைப்பை வருத்தி, இரவு பகலாகக் கஷ்டப்பட்டுத்தான் பணம் சம்பாதிக்கிறார்கள். சிலர் மதுக்கடைகளிலும், சிகரெட் விற்பனை நிலையங்களிலும் வேலை செய்து, அடுத்தவர் உடல்நலனைச் சீரழிக்கும் தொழில்கள் மூலம் பணம் சம்பாதித்து இங்கே அனுப்புகிறார்கள். அங்கே அவர்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, இங்கே கையில் லேட்டஸ்ட் iPhone, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான KTM மோட்டார் சைக்கிள் என ஆடம்பரமாகத் திரியும் இளைஞர்கள், உண்மையில் உழைக்கத் தயங்கும் கோழைகளாகவே இருக்கிறார்கள். உழைக்காமல் கைக்கு வரும் பணம், இயல்பாகவே இளைஞர்களை போதை மற்றும் மதுப் பழக்கத்திற்கு அடிமையாக்குகிறது. அதிகப்படியான பணப்புழக்கம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாட்டை அதிகரித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் பணம் இவர்களை அறிவார்ந்தவர்களாக மாற்றாமல், சமூகத்திற்குப் பாரமான 'காவாலிகளாக' மாற்றிக் கொண்டிருக்கிறது. யாழ் இளைஞர்களை வேலைக்கு அமர்த்தினால், அவர்கள் சரியாக வேலை செய்வதில்லை, சம்பளம் அதிகமாகக் கேட்கிறார்கள், சிறு வேலைகளைச் சொன்னால் முறைக்கிறார்கள் போன்ற காரணங்களால், யாழ்ப்பாணத்து முதலாளிகளே இன்று பிற மாவட்ட இளைஞர்களையே விரும்புகின்றனர். வெளிநாட்டு உறவினர்களின் இந்த பண உதவி என்பது நிரந்தரமானது அல்ல. இந்தப் பரம்பரையுடன் இது முடிந்துவிடும். அடுத்த தலைமுறைப் புலம்பெயர் தமிழர்கள் தங்களின் சொந்தப் பிள்ளைகளுக்கே பணம் சேமிப்பார்களே தவிர, இங்கே இருக்கும் தம்பிக்கோ, மச்சானுக்கோ ஒரு சதம் கூடத் தரமாட்டார்கள். அப்பொழுது, இன்று கஷ்டப்பட்டு வேலை செய்யும் வெளிமாவட்ட இளைஞர்கள், யாழ்ப்பாணத்தின் அனைத்து வியாபார நிறுவனங்களின் உரிமையாளர்களாக மாறியிருப்பார்கள். இன்று ‘கௌரவம்’ பார்த்த யாழ் இளைஞர்கள், அன்று பிற இனத்தவர்களிடம் கையேந்தி நிற்கும் அல்லது கூலி வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இளைஞர்களே, வேலை என்பது இழிவு அல்ல. உழைக்காமல் உண்பதுதான் பேரிழிவு. எந்த வேலையாயினும் அதனை அர்ப்பணிப்புடன் செய்யுங்கள். புலம்பெயர் உறவுகளே! பணத்தை அனுப்பி உங்கள் உறவுகளைச் சோம்பேறிகளாக மாற்றாதீர்கள். அவர்களுக்குத் தூண்டிலைத் தந்து மீன்பிடிக்கக் கற்றுக் கொடுங்கள் , மாறாகத் தினமும் மீனைத் தந்து அவர்களை முடமாக்காதீர்கள். நமது பொருளாதாரம் நமது கைகளை விட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. விழித்துக் கொள்ளாவிட்டால், வரலாறு நம்மைச் சோம்பேறிகள் என்றுதான் பதிவு செய்யும். https://www.facebook.com/share/1DZd5Dn3j9/?mibextid=wwXIfr