stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 82 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 82 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை புத்தர் துறவியாக மாற முடிவு செய்தபோது, அனோமா நதிக்கரையில் வெட்டப்பட்ட புத்தரின் தலைமுடியைப் பயன்படுத்தி, தேவர்களின் மன்னரான சக்காவால், ஒரு வான தூபி 'Culamani-cetiya' கட்டப்பட்டது. இதை சூளாமணி கோபுரம் [அல்லது சூளாமணி சைத்தியம்] என்று தமிழில் கூறலாம்? மேலும் புத்தர் காலமான பிறகு, டோனா என்ற மனிதன், புத்தரின் வலது கழுத்து எலும்பை தனது தலைப்பாகையில் மறைக்க முயன்றார், ஆனால் சக்கா அதை அவரிடமிருந்து எடுத்து, சேதியத்தில் [வான் தூபியில்] அதையும் சேர்த்து வைத்தார் என்று கூறப்படுகிறது. எனவே, இந்த வலது கழுத்து எலும்பு நினைவுச் சின்னத்தை, கடவுள் நகரத்தில் உள்ள இந்த வான் Culamani-cetiya த்திலிருந்து பெறப்பட்டது என்று [ஒரு கருத்துக்கு] கொள்ளலாம். In Dravidian and Indo-Aryan phonetics, we often see shifts where: "ḷ" (ள) and "d" (ட) get interchanged over time. Retroflex sounds like "ḷ" are replaced with dentals like "d" in Sanskritization (and vice versa). Tamil and Pali usage often differ from Sanskrit, leading to variations in pronunciation and writing. For example: Chuda (சுட) vs. Cūḷā (சூளா) → Phonetic shift from "d" (ட) → "ḷ" (ள) is possible. Mani (மணி) remains unchanged. So, Chudamani (சுடாமணி) → Cūḷāmaṇī (சூளாமணி) is phonetically feasible, especially in Buddhist contexts. ஆகவே மேலே கூறியதையும் மற்றும் ஓலைச் சுவடிகள் 100 - 150 ஆண்டுகளுக்கிடையில் திருப்பி எழுதி புதிப்பிப்பதையும் கருத்தில் கொண்டால், மிக இலகுவாக ஒரு சாத்தியத்தை கூறலாம் என்று எண்ணுகிறேன். ஒலிப்பு ரீதியாக, l (எல்) மற்றும் 'd' ஆகியவை காலப்போக்கில் அல்லது மொழிகளுக்கு இடையேயான படியெடுத்தலின் போது ஒன்றுக் கொன்று மாற்றப்படுகின்றன. எனவே இந்த Chulamani Chedi, a celestial stupa, தமிழில் 'சூடாமணி' ஆக இருக்கலாம்? தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரை ஒன்று இருந்தது. இது 1006 CE இல் மகரத்துவஜன் சூடாமணிவர்மன் எனும் புகழ் பெற்ற மன்னனின் மகன் விஜயோத்துங்கவர்மன் தன் தந்தையின் திருநாமத்தை நிலைநாட்ட இராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரத்தைக் எழுப்பினான். இது ஜேசுட் பாதிரியாரால் [Jesuits priest] 1867 க்கு பிறகு இடிக்கப்பட்டது என்பது வரலாறு. மீண்டும் 17 ஆம் அத்தியாயத்திற்கு வரும்போது, அசோகன் இறந்தவுடன், உடனேயே சுமனன் அங்கே சென்று விட்டான் என்று கூறுகிறது. இது தெய்வீக சக்தியைக் குறிக்கிறது, அது வரலாறு அல்ல, இறையியல் ஆகும். மேலும், இதில் இருந்து நாம் அறிவது அல்லது ஊகிப்பது, மகிந்த, சுமனா, சங்கமித்தா ஆகியோர் உண்மையான நபர்கள் அல்ல. கடவுளின் நகரத்திற்குச் செல்லும் உடனடிப் பயணங்களும் உண்மையான நிகழ்வுகள் அல்ல. மேலும், புத்த நாடுகளில் புத்தரின் அனைத்து தாதுக்களையும் ஒன்றாகச் சேர்த்தால், அது புத்தர் உயிருடன் இருந்தபோது இருந்ததை விட கட்டாயம் அதிகமாக இருக்கலாம், அதுவும் எரிந்து காற்றுடன் கலந்ததையும் விட. [If all the supposed relics of the Buddha in the Buddhist countries were added together, it may weigh greater than that of the Buddha when he was alive.] அத்தியாயம் 18 [மகாபோதி விருட்சத்தை பெறுதல்]: இது போதி மரத்தின் கிளையை இலங்கைக்கு எடுத்துச் செல்வது பற்றியது. இராணி அனுலா மற்றும் அவரது ஐநூறு பெண்களுக்கும் பப்பஜ்ஜி தீட்சை [pabbajji ordination] செய்ய சங்கமித்தாவை அழைக்க முன்னர் முடிவு செய்யப்பட்டது. 15- 19 இல் இருந்து 22 வரை பார்க்கவும். ‘அரசே! நாங்கள் தீட்சை பெற விரும்புகிறுேம் என்று ராணி அனுலா தன்னுடன் வந்த ஐநூறு பெண்களுடன் அரசனிடம் கூறினாள். உடனே, ‘இவர்களுக்குத் தீட்சை செய்து வையுங்கள்" என்று அரசன் தேரரைக் கேட்டுக் கொண்டான். 'மாமன்ன! பெண்களுக்கத் தீட்சை செய்து வைக்க எங்களுக்க அனுமதி கிடையாது' என்று தேரர் பதிலளித்தார். பாடலிபுத்ரத்தில் [Pataliputta] என்னுடைய தங்கை சங்கமித்தா என்ற பெயருடைய தேரி இருக்கிறாள். அனுபவத்தில் முதிர்ந்தவள் அவள். ‘புத்தர் ஞானம் பெற்ற புனித போதி மரத்தின் தென்பகுதிக் கிளையுடன் [ஏன் தென்பகுதி கிளை?] அவள் இங்கே வருவாள் என்று இந்த பந்தி கூறுகிறது. மன்னன் தேவநம்பிய தீசன் தனது மருமகனும், அவரது அமைச்சருமான அரிதனிடம் [Arittha] போதி மரத்தின் கிளையை கொண்டு வருவதுடன், தேரி சங்கமித்தாவையும் கூட்டிக் கொண்டு வர, அசோகரிடம் செல்ல முடியுமா என்று விசாரித்தார்! அவன் ஒப்புக்கொண்டான். மேலும் அவன், தனது மனத்திண்மையால் [by his will power] அவன் புறப்பட்ட அதே நாளில் பாடலிபுத்ரத்தை அடைந்தார் [18 - 8: ஐம்பு கோளத்தில் கப்பல் ஏறி, மகாசமுத்திரத்தைக் கடந்து, தேரருடைய சக்தியால் புறப்பட்ட அன்றே அழகிய புஷ்பபுரத்துக்கு வந்து சேர்ந்தான்.]; மற்றொரு மாபெரும் பொய். அவன் அசோகருக்கும் சங்கமித்தைக்கும் அந்த செய்தியைச் சொன்னார். சங்கமித்தை கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, தயக்கம் காட்டிய, தந்தை அசோகனை ஒருவாறு சமாதானப்படுத்தினாள். மொகாலிபுத்தவும் [Moggaliputta] அதை ஆதரித்தார். Part: 82 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Sumana went to the King Asoka the very moment he departed. All the miraculous and magical events happened are not historical events. Which is the city of gods? How did Sumana meet Sakka, the king of gods? Tamils have no issue with these as religious edifications, but will never accept as historical events. Apparently, the right collarbone relic was obtained from the Culamani-cetiya. Phonetically, l (Ell) and ‘d’ get interchanged in the course of time or during transcription between languages. It could be ‘Cudamani’ in Tamil. There was a Vihara called Cudamani Vihara in Nagapattinam in Tamil Nadu also with the name Rajarajapperumpalli, which was standing in dilapidated state until 1867, for about 800 to 900 years after its construction. It was pulled down by Jesuits priests. The above sketches are two views of Cudamani Vihara, which was prepared in 1846. The king Rajaraja endowed the revenues from the Anaimankalam village for the upkeep of this Vihara. This Vihara is also known as Rajendracholapperumpalli, Silendracutamani Vihara etc. The king Silendra of the present day Indonesia or Malaysia built this Vihara with the blessings of the Chola kings who also generously granted revenues from villages for its upkeep. The author has no intention to hurt the feelings of the Buddhists, but their blind belief in the Mahavamsa resulted in the death of about of 150,000 Tamils in very gruesome manners, and in the displacement of half a million Tamils, and the pious Buddhists without any compunction or remorse branded them as economic refugees. In this process, Tamils got their parliamentary representations drastically reduced with boisterous behaviour of the Sinhala members in the Parliament shouting down the reduced Tamil members with the tacit approval of the speaker of the House. It is then necessary to analyse the genuineness of the document on which the Sinhala Buddhists base their claim. Coming back to the chapter 17 again, Sumana went to Asoka on the very moment he departed, implying divine power, and it is not history, but theology. Sumana went to the city of gods. Tamils do not believe this nonsense. If all the supposed relics of the Buddha in the Buddhist countries were added together, it may weigh greater than that of the Buddha when he was alive. We would, again, like to stress that Mahinda, Sumana, Samghamitta are not real personalities, and the instant travels, even to the city of gods, are not real events. Chapter 18: This is about the obtaining the branch of the Bodhi tree to be taken to Lanka. It was decided earlier to invite Samghamitta to perform pabbajji ordination on Queen Anula and her five hundred women, 15-21. The King Devanampiya Tissa inquired his nephew, also his minister; Arittha whether he could go to Asoka to bring the branch of the Bo tree and Theri Samghamitta! He agreed and by his will power reached Pupphapura (Pataliputta) on the same day he departed; another lie. He passed the message to Asoka as well as to Samghamitta. Samghamitta acceded to the request and convinced the reluctant Asoka that she should go. Moggaliputta was also in favour of it. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 83 தொடரும் / Will follow துளி/DROP: 1977 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 82] https://www.facebook.com/groups/978753388866632/posts/33164353323213221/?
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
நிராஜ் டேவிட் கூறுகின்ற அ மெரிக்க ஒற்றை துருவ உலக ஒழுங்கு இன்னமும் உள்ளது, இந்த வெனிசுலா பிரச்சினையினை அமெரிக்கா வெற்றிகரமாக இலகுவாக கடந்துள்ளது என்பதாக நான் கருதவில்லை. போரியல் கலையில் சன் சூ கூறிய எதிரியின் தவறுகளை அனுமதி என்பது போலவே இந்த அமெரிக்க வெனிசுலா ஆக்கிரமிப்பினை அதன் எதிர்த்தரப்பு பார்க்கிறதோ என கருதுகிறேன். இது அமெரிக்காவின் அடிப்படைதோல்வியாக உருவெடுக்கும் என நான் நம்புகிறேன். காலமாற்றத்தினை சரியாக அமெரிக்கா உணரவில்லை (அல்லது உள்நாட்டு அரசியல் அழுத்தம்), அத்துடன் கடந்த கால தனது வரலாற்றுத்தவறுகளில் இருந்து பாடம் கற்கவில்லை. கடந்தகாலத்தில் அமெரிக்காவின் மத்திய கிழக்கு நடவடிக்கை அங்கு ஒரு பிராந்திய மட்டத்தில் அதிகார வெற்றிடத்தினை உருவாக்கி மேலதிகமாக பல பயங்கரவாதங்களை உருவாக்கியது (ஐ எஸ் ஐ எஸ், ஈரான் போன்ற) என்பதனை மறந்து விட்டுள்ளது. இது ஒரு வெறும் சில மணிநேரத்தில் முடிந்துவிட்ட வெற்றிகரமான நடவடிக்கை என நிராஜ் டேவிட் கூறுகிறார், ஆனால் இது ஒரு பிரச்சினையின் ஆரம்பம், தற்போது இது ஒரு தலைமை வெற்றிடமாக மட்டுமே உள்ளது போல தெரிந்தாலும் வருகின்ற நாள்களில் நிர்வாக, சட்ட, பிராந்திய வெற்றிடம் உருவாகும் போது முன்னர் அமெரிக்கா சந்தித்திராத பெரும் நெருக்கடிக்குள் அமெரிக்கா சிக்க நேரிடும். அதனால்தான் இதனை அமெரிக்காவின் கேர்ஸ்க் என கருதியிருந்தேன். தற்போது அமெரிக்காவின் நிலை கத்தி மேல் பயணம், இதில் முடிந்தளவு சேதாரம் இல்லாமல் திரும்புமா? அல்லது இவ்வாறான பிரச்சினைகள் தோன்றாமல் எவ்வாறு மீழ போகிறது என காலம்தான் பதில் கூறவேண்டும்.
- Today
-
வெட்கமற்றவையும் வெட்கமற்றவர்களும்
வெட்கமற்றவையும் வெட்கமற்றவர்களும் ------------------------------------------------------------------ தேசங்கள் வெட்கம் அற்றவை மெலிந்த தேசங்களை கொளுத்தி குளிர் காய்ந்து சூறையாடும் எல்லா தேசங்களுமே வெட்கம் அற்றவை ஏழைகளிடமும் ஏலாதவர்களிடமும் அடித்துப் பிடுங்கும் சக மனிதர்கள் போல அடித்து பிடுங்கி அழித்துக் கொண்டே தர்மம் போதிக்கும் தேசங்கள் வெட்கம் அற்றவை போலிச் சாமியார்கள் போல கலப்பட வியாபாரிகள் போல வெட்கம் அற்ற ஏமாற்றுக்கார தேசங்கள் நியாயவான் மனிதாபிமானி முகமூடிகளுடன் வந்து வந்த பின் முகமூடியை கழட்டி எறிந்து விட்டு குதறி குற்றுயிராக சுடுகாடாக விட்டுச் செல்லும் எல்லா தேசங்களுமே வெட்கம் அற்றவை அயலவரை நேசிக்கின்றோம் என்று கொண்டே பயமுறுத்தும் ஆக்கிரமிக்கும் வெட்கமற்ற பெரும் தேசங்கள் ஆயிரம் ஆயிரம் காரணங்கள் சொல்லும் அத்தனையும் கடைந்தெடுத்த பொய்கள் ஒரு ஆக்கிரமிப்பை எதிர்த்தும் இன்னொரு ஆக்கிரமிப்பை ஆதரித்தும் ஒரு கண் மூடி மறு கண் திறக்கும் மனிதர்களும் வெட்கமற்ற தேசங்கள் போலவே அபிமானிகளும் வெட்கம் அற்றவர்கள்.
- Destruction.jpg
-
ஒரு கிலோ டூனா மீனின் விலை 11,413 யூரோக்கள்.
இல்லை, இது ஜப்பானின் மட்டும் அல்ல, அந்த பகுதியில் இருக்கும் நாடுகளின் கலாசாரம், அந்தந்த நாடுகளின் உணவுகளில் . அனால், மிகவும் வளர்ந்த ஜப்பானில் கூட விட்டுப்போகவில்லை. இதே போல, kobe மாட்டு இறைச்சி Wagyu என்ற மாட்டு இனத்தில், மிகவும் சுத்தம், சுகாதாரம், உணவு போன்றவை மிகுந்த கவனிப்பில் கீழ், குறிப்பிட்ட Hyogo Prefecture (கிட்டதட்ட எமது மாகாணத்துக்கு ஒப்பான நிர்வாக பிரதேசம்) வளர்க்கப்படும் Wagyu இன மாடுகளில் இருந்த்து பெறப்படுவதே Kobe மாட்டிறைச்சி. ஜப்பானில் எதிலும் மிகஉன்னத (perfection) நிலை அடைவதில் இருக்கும் சமூக மற்றும் வரலாற்று ஆவலும், உணவிலும் பிரதிபலிக்கிறது. உ.ம். நண்டு, இறால், கணவாய் போன்றவை ஒரு போதும் இறந்து விற்பது மிக குறைவு, ஏனெனில் இறப்பின் தாக்கத்தில், அழுத்தத்தில் அதன் தன்மை, ருசி போன்றவை மாறிவிடும் என்று.
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
ஆரம்பத்தில் அனைத்து விடயங்களையும் விரிவாக எழுத நினைத்திருந்தேன்; தற்போது மிக மிக சுருக்கமாக எழுதுவதற்கு முடிவெடுத்துள்ளேன் (பயன்பாடு குறைவாக இருந்தால் தேவையில்லாமல் யாழின் பக்கங்களை நிரப்பி யாழிற்கு மேலதிக சுமைகளை ஏற்படுத்த விரும்பவில்லை), இந்த பகுதியில் கோல்ட்மன் சக்ஸின் முதலீட்டு முகாமையாளர்களின் பயிற்சியின் அடிப்படையாக கொண்டது ஆனால் அது முற்று முழுதாக அதன் வடிவமல்ல வெறும் சராம்சமடிப்படையுடன் முடிந்தவரை விளக்கமாக ஆனால் அதன் பயன்பாட்டு அடிப்படையாக கொண்ட (இலகுவான மாற்றீடு) விடயங்களை ஆரம்பத்தில் உள்ளடக்க விரும்பியிருந்தேன், தற்போது வெறும் அடிப்படைகளை மட்டும் எழுத திட்டமிட்டுள்ளேன். இதனால் யாருக்கேனும் பலனுண்டாகும் எனும் எண்ணத்திலேயே ஆரம்பித்திருந்தேன், இது பலனற்ற விடயம் என உணர்ந்தால் இதனை தொடர்வதனை நிறுத்திவிடும் எண்ணம் உண்டு.- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
https://tradingeconomics.com/united-states/consumer-confidence இது அமெரிக்க நுகர்வோர் நன்நம்பிக்கை சுட்டெண் (Consumer confident). https://tradingeconomics.com/united-states/building-permits இது அமெரிக்க கட்டட அனுமதி கணக்கெடுப்பு சுட்டெண் ஆகும்.- தாலிக்கொடியை யுவதியிடம் இழந்த யாழ் வங்கி ஊழியர்
அல்லது "விட்டுப்போட்டு" கதை விடுறாரோ 😉- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
"நாங்கள் ஒரு வல்லரசு": டிரம்பின் கீழ் அமெரிக்க நடவடிக்கைகளை வெள்ளை மாளிகை விளக்குகிறது Krystyna Bondarieva , Iryna Balachuk — 6 ஜனவரி, 07:55 டொனால்ட் டிரம்ப் மற்றும் ஸ்டீபன் மில்லர். புகைப்படம்: X இல் மில்லர் (ட்விட்டர்) 18373 ஆம் ஆண்டு உண்மையான உலகம் அதிகாரத்தால் ஆளப்படுகிறது, அமெரிக்கா ஒரு வல்லரசு, எனவே அது அவ்வாறே செயல்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உதவியாளர்களில் ஒருவரும் வெள்ளை மாளிகையின் துணைத் தலைவருமான ஸ்டீபன் மில்லர், வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோ கைப்பற்றப்பட்டது குறித்து கருத்து தெரிவித்தார். மூலம்: ஐரோப்பிய பிராவ்தா, CNN ஐ மேற்கோள் காட்டி விவரங்கள்: சர்வதேச நுணுக்கங்களைப் பற்றி மக்கள் விரும்பும் அளவுக்குப் பேசலாம் என்று மில்லர் கூறினார், "ஆனால் நாம் ஒரு உலகில், உண்மையான உலகில் வாழ்கிறோம் ... அது வலிமையால் ஆளப்படுகிறது, அது பலத்தால் ஆளப்படுகிறது, அது அதிகாரத்தால் ஆளப்படுகிறது. " இதை அவர் "உலகின் இரும்புச் சட்டங்கள்" என்று விவரித்தார் . டிரம்ப் கோட்பாட்டின் கீழ், அமெரிக்க நலன்களைப் பாதுகாக்க அமெரிக்கா தனது இராணுவத்தை தயக்கமின்றிப் பயன்படுத்தும் என்று மில்லர் வலியுறுத்தினார், இது ஒரு சுதந்திர உலகின் எதிர்காலத்திற்கு ஒத்ததாக இருக்கும் என்று அவர் கூறினார். "நாங்கள் ஒரு வல்லரசு. ஜனாதிபதி டிரம்பின் கீழ், நாங்கள் ஒரு வல்லரசாக நடந்து கொள்ளப் போகிறோம்," என்று மில்லர் கூறினார். பின்னணி: ஜனவரி 4 ஆம் தேதி மற்ற நாடுகளுக்கு எதிராக புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று டிரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்தக் கருத்துக்கள் வந்தன. குறிப்பாக, கொலம்பியாவை அச்சுறுத்திய அவர், மெக்சிகோ "அவர்களின் நடவடிக்கைகளை ஒன்றிணைக்க வேண்டும்" என்று கூறினார் . கூடுதலாக, ஈரான் போராட்டக்காரர்களைக் கொன்றால் "மிகவும் கடுமையாகத் தாக்கப்படும்" என்று டிரம்ப் சமீபத்தில் உறுதியளித்தார். கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கான தனது அச்சுறுத்தல்களையும் அவர் புதுப்பித்தார். டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து பிரதமர்கள், தீவு தொடர்பான அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்களை நிறுத்துமாறு டிரம்பிடம் அழைப்பு விடுத்தனர். பால்டிக் நாடுகளைப் போலவே, பின்லாந்து ஜனாதிபதியும் ஸ்வீடிஷ் பிரதமரும் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்திற்கு ஆதரவைத் தெரிவித்தனர். https://www.pravda.com.ua/eng/news/2026/01/06/8014828/ வெனிசுலாவில் ரஷ்ய வான் பாதுகாப்பை பென்டகன் தலைவர் ஹெக்ஸெத் கேலி செய்கிறார்: அது அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை. இவான் டியாகோனோவ் - 6 ஜனவரி, 00:35 பீட் ஹெக்செத். புகைப்படம்: கெட்டி இமேஜஸ் 19659 வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவைக் கைப்பற்ற அமெரிக்க சிறப்பு நடவடிக்கையின் போது ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறன் குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் ஒரு முரண்பாடான கருத்தை வெளியிட்டுள்ளார். மூலம்: ஆர்சனல் ஆஃப் ஃப்ரீடம் சுற்றுப்பயணத்தின் போது ஹெக்செத்தின் உரை . மேற்கோள்: "வெனிசுலாவின் கராகஸ் நகர மையத்தில் மூன்று இரவுகளுக்கு முன்பு, நமது தலைசிறந்த அமெரிக்கர்களில் கிட்டத்தட்ட 200 பேர் கராகஸில் உள்ள நகர மையத்திற்குச் சென்றதைப் பார்த்தோம். அந்த ரஷ்ய வான் பாதுகாப்பு அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை போலும், இல்லையா? கராகஸ் நகர மையத்தில், அமெரிக்க நீதியால் தேடப்படும் ஒரு குற்றஞ்சாட்டப்பட்ட நபரைப் பிடித்து, ஒரு அமெரிக்கர் கூட கொல்லப்படாமல், சட்ட அமலாக்கத்திற்கு ஆதரவாக, தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் நிறுவினார்." விவரங்கள்: அமெரிக்கா பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியின் புதிய சகாப்தத்தில் நுழைகிறது என்று ஹெக்செத் வலியுறுத்தினார். இந்தத் துறை, வலிமை மூலம் அமைதியைப் பாதுகாப்பதும், தேவைப்பட்டால் ஒரு போரை "தீர்க்கமாக வெல்ல" தயாராக இருப்பதும் குறிக்கோளாகக் கொண்ட போர்த் துறை என்ற கருத்துக்குத் திரும்புகிறது. பின்னணி: ஜனவரி 3 ஆம் தேதி, அமெரிக்க இராணுவத்தின் டெல்டா படை, ஒரு உயரடுக்கு சிறப்புப் படைப் பிரிவு, வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவைக் கைப்பற்றி நாட்டிற்கு வெளியே அழைத்துச் சென்றது. ஜனவரி 5 ஆம் தேதி, மதுரோவும் அவரது மனைவியும் நியூயார்க்கில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் , போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் ஒத்துழைத்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர். வெனிசுலாவில் தெளிவான மற்றும் பாதுகாப்பான அதிகாரப் பரிமாற்றம் நடைபெறும் வரை அமெரிக்கா அங்கு ஆட்சி செய்யும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார் . Ukrainska PravdaPentagon chief Hegseth mocks Russian air defence in Venez...US Secretary of Defense Pete Hegseth has made an ironic comment on the performance of Russian air defence systems during an American special operation to capture Venezuelan leader Nicolás Maduro.இந்த இரண்டு செய்திகளும் மேலே இணைத்த நிராஜ் டேவிட் அவர்களின் காணொளியின் சாராம்சமாக உள்ளது. கிரீன்லாந்தை இராணுவம் கையகப்படுத்துவதை நிராகரிக்க டிரம்ப் அதிகாரி மறுக்கிறார் இவான் டியாகோனோவ் - 6 ஜனவரி, 03:18 ஸ்டீபன் மில்லர். புகைப்படம்: கெட்டி இமேஜஸ் 51613 - अनुक्षिती समान्ती स्ती स्त அமெரிக்க பாதுகாப்பு கட்டமைப்பின் ஒரு பகுதியாக கிரீன்லாந்து அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்று வாஷிங்டன் வலியுறுத்துவதாகவும், தீவை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை அவர் நிராகரிக்கவில்லை என்றும் வெள்ளை மாளிகையின் துணைத் தலைமைத் தளபதி ஸ்டீபன் மில்லர் கூறியுள்ளார். மூலம்: CNN உடனான நேர்காணலில் மில்லர் மில்லரின் மேற்கோள்: "அமெரிக்கா நமது ஒட்டுமொத்த பாதுகாப்பு எந்திரத்தின் ஒரு பகுதியாக கிரீன்லாந்தை வைத்திருக்கும் நாடாக இருக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி பல மாதங்களாக தெளிவாக இருக்கிறார்." "இந்த நிர்வாகத்தின் தொடக்கத்திலிருந்தே, வெளிப்படையாகச் சொன்னால், முந்தைய டிரம்ப் நிர்வாகத்தில் இருந்தே, கிரீன்லாந்து அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பது அமெரிக்க அரசாங்கத்தின் முறையான நிலைப்பாடாக இருந்து வருகிறது. ஜனாதிபதி அதைப் பற்றி மிகவும் தெளிவாக இருக்கிறார். அதுதான் அமெரிக்க அரசாங்கத்தின் முறையான நிலைப்பாடு." விவரங்கள்: CNN செய்தித் தொகுப்பாளர் ஜேக் டேப்பர், அமெரிக்கா கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாக கைப்பற்ற முயற்சிக்கும் ஒரு சூழ்நிலையை நிராகரிக்க முடியுமா என்று மில்லரிடம் பலமுறை கேட்டார். மில்லர் நேரடி பதிலைத் தவிர்த்து, தீவின் மீதான டென்மார்க்கின் கட்டுப்பாட்டின் நியாயத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கினார். மில்லரின் மேற்கோள்கள்: "உண்மையான கேள்வி என்னவென்றால், கிரீன்லாந்தின் மீது டென்மார்க் எந்த உரிமையின் மூலம் கட்டுப்பாட்டை வலியுறுத்துகிறது? அவர்களின் பிராந்திய உரிமைகோரலின் அடிப்படை என்ன? கிரீன்லாந்தை டென்மார்க்கின் காலனியாகக் கொண்டிருப்பதற்கான அடிப்படை என்ன?" "அமெரிக்கா நேட்டோவின் சக்தி. அமெரிக்கா ஆர்க்டிக் பகுதியைப் பாதுகாக்க, நேட்டோ மற்றும் நேட்டோ நலன்களைப் பாதுகாக்க, கிரீன்லாந்து அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது." "நாங்கள் ஒரு வல்லரசு. ஜனாதிபதி டிரம்பின் கீழ், நாங்கள் ஒரு வல்லரசாக நடந்து கொள்ளப் போகிறோம்." பின்னணி: முன்னதாக, மில்லரின் மனைவி கேட்டி மில்லர், கிரீன்லாந்து அமெரிக்கக் கொடியால் மூடப்பட்டிருப்பதைக் காட்டும் வரைபடத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தீவின் மீது அமெரிக்கா கட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார் . இதற்கு பதிலளிக்கும் விதமாக, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன், அமெரிக்கா மற்றொரு நேட்டோ நாட்டைத் தாக்கினால், அது கூட்டணிக்கும் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பாதுகாப்பு அமைப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்று எச்சரித்தார். Ukrainska PravdaTrump official refuses to rule out military takeover of G...White House Deputy Chief of Staff Stephen Miller has stated that Washington insists Greenland should become part of the US as part of the American security framework, and has not ruled out the possibi- மனநலம் பாதிக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளரை விடுவிக்குமாறு குடும்பத்தினர் கோரிக்கை
உண்மையில் இந்தக் கடற்கொள்ளையன் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால் மனிதாபிமான அடிப்படையில் விடுதலைசெய்யவேண்டும். ஆனால் இதனை ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு இந்திய கடற்கொள்ளையர்கள் போலி மனநல பாதிப்பு அறிக்கைகளை தயார் செய்துவிட்டு கடற்கொள்ளையில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இந்தியன் எந்தக் கீழ்த்தரமான வேலையையும் செய்யத் தயங்கமாட்டான்.- குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்காக அரச – தனியார் பங்குடமை மாதிரியை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி
குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்காக அரச – தனியார் பங்குடமை மாதிரியை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி Published By: Digital Desk 3 06 Jan, 2026 | 05:35 PM அரச வைத்தியசாலைகளில் தற்போது குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகள் காணப்பட்டாலும், அதிகரித்துவரும் சிகிச்சைக்கான கேள்விகளைப் பூர்த்தி செய்வதற்கு தற்போதுள்ள வசதிகள் போதுமானதாக இல்லையென அவதானிக்கப்பட்டுள்ளது. அதனால், சிறுநீரக நோயாளிகள் எதிர்கொள்கின்ற சிரமங்களைக் கருத்தில் கொண்டு, குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்கான தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்காக தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற முறை மூலம் பெற்றுக்கொண்டுள்ள அனுபவங்களின் அடிப்படையில், அடையாளங்காணப்பட்டுள்ள அரச வைத்தியசாலைகளில் குருதிக் கூழ்மப்பிரிப்புக்கு அரச – தனியார் பங்குடமை முறையின் கீழ் பொருத்தமான மாதிரியைக் கண்டறிவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு திட்டமிட்டுள்ளது. இவ் உத்தேச முறையின் கீழ் குருதிக் கூழ்மப்பிரிப்பு இயந்திரம், வடிகட்டி சுத்திகரிப்பு தொகுதி, தேவையான பயன்பாட்டுப் பொருட்கள், தொழிற்பாடு மற்றும் பராமரிப்புக்களை தனியார் பங்காளர்கள் மூலம் முழுமையான நிதியிட்டு முகாமைத்துவம் செய்வதற்கும், முழுமையான சிகிச்சைக் கண்காணிப்பை பேணி அரசு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கும் எதிர்பார்க்கின்றது. அதற்கமைய, தெரிவு செய்யப்பட்ட அரச வைத்தியசாலைகளில் குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்காக அரச – தனியார் பங்குடமை முறையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/235377- அமெரிக்காவின் அடுத்த இலக்காக வாய்ப்புள்ள 5 நாடுகள் எவை?
கியூபா உள்பட அமெரிக்காவின் அடுத்த இலக்காக வாய்ப்புள்ள 5 நாடுகள் எவை? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் டாம் பென்னட் 6 ஜனவரி 2026, 07:22 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம், அவரது வெளியுறவுக்கொள்கையின் லட்சியங்களால் வடிவமைக்கப்பட்டு வருகிறது. வெனிசுவேலா அதிபர் மற்றும் அவரது மனைவியை அந்நாட்டின் தலைநகர் கரகாஸில் இருந்து ஓர் அதிரடி இரவு நேரத் தாக்குதல் மூலம் கைது செய்ததன் வழியாக, வெனிசுவேலாவுக்கு எதிராக விடுத்த எச்சரிக்கைகளை டிரம்ப் நிஜமாக்கியுள்ளார். இந்த நடவடிக்கை குறித்து விவரிக்கும்போது, டிரம்ப் 1823-ஆம் ஆண்டின் 'மன்றோ கோட்பாட்டையும்', மேற்கு அரைக்கோளத்தில் (வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களை உள்ளடக்கிய பகுதி) அமெரிக்காவின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் அதன் வாக்குறுதியையும் மீண்டும் கையில் எடுத்தார். மேலும், அதற்கு "டான்றோ கோட்பாடு" என்று மறுபெயரிட்டார். சமீப நாட்களில் பிற நாடுகளுக்கு எதிராக அவர் விடுத்துள்ள சில எச்சரிக்கைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. கிரீன்லாந்து கிரீன்லாந்தில் பிட்டுஃபிக் விண்வெளித் தளம் என்ற ஒரு ராணுவத் தளம் அமெரிக்காவுக்கு ஏற்கெனவே உள்ளது. ஆனால், டிரம்ப் அந்த முழுத்தீவையும் கைப்பற்ற விரும்புகிறார். "தேசிய பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் நமக்கு கிரீன்லாந்து தேவை" என்று செய்தியாளர்களிடம் கூறிய அவர், அந்தப் பிராந்தியம் முழுவதும் "ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்கள் நிறைந்துள்ளன" என்றும் குறிப்பிட்டார். டென்மார்க் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியான இந்த பரந்த தீவு, அமெரிக்காவுக்கு வடகிழக்கே சுமார் 2,000 மைல் (3,200 கி.மீ) தொலைவில் அமைந்துள்ளது. ஸ்மார்ட்போன்கள், மின்சார வாகனங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்களின் உற்பத்திக்குத் தேவையான அரிய வகை கனிமங்கள் கிரீன்லாந்தில் அதிகளவில் உள்ளன. தற்போது, இந்த கனிமங்களின் உற்பத்தியில் அமெரிக்காவை விட சீனா வெகுவாக முன்னிலையில் உள்ளது. வட அட்லாண்டிக் பகுதியில் கிரீன்லாந்து ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இது ஆர்க்டிக் வட்டத்திற்குள் நுழைவதற்கான வழியாக திகழ்கிறது. வரும் ஆண்டுகளில் துருவப் பனிக்கட்டிகள் உருகுவதால், புதிய கப்பல் போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீவை அமெரிக்கா கட்டுப்படுத்துவது என்பது ஒரு "கற்பனை" என்று டிரம்புக்கு கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் ஃப்ரெடெரிக் நீல்சன் பதிலடி கொடுத்துள்ளார். "இனி அழுத்தங்கள் வேண்டாம். மறைமுகக் குறிப்புகள் வேண்டாம். இணைத்துக்கொள்வது போன்ற கற்பனைகள் வேண்டாம். நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம். ஆனால், அது முறையான வழிகளிலும், சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்தும் நடக்க வேண்டும்," என்று அவர் கூறினார். கொலம்பியா வெனிசுவேலாவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு சில மணிநேரங்களுக்குப் பிறகு, கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோவை டிரம்ப் எச்சரித்துள்ளார். வெனிசுவேலாவின் மேற்கு அண்டை நாடான கொலம்பியாவும் கணிசமான எண்ணெய் வளங்களைக் கொண்டுள்ளது. இது தங்கம், வெள்ளி, மரகதம், பிளாட்டினம் மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் முக்கிய உற்பத்தியாளராகவும் உள்ளது. இப்பிராந்தியத்தின் போதைப்பொருள் வர்த்தகத்தில், குறிப்பாக 'கோகைன்' கடத்தலில் இது ஒரு முக்கிய மையமாகத் திகழ்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதல், கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கூறி படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இதன் விளைவாக, கொலம்பியாவின் இடதுசாரி அதிபருடன் டிரம்ப் தொடர் மோதலில் ஈடுபட்டுள்ளார். போதைப்பொருள் கும்பல்கள் "செழிக்க" பெட்ரோ அனுமதிக்கிறார் எனக் கூறி, கடந்த அக்டோபரில் அமெரிக்கா அவர் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. "கோகைன் தயாரிப்பதையும் அதை அமெரிக்காவுக்கு விற்பதையும் விரும்பும் ஒரு மனிதனால் கொலம்பியா வழிநடத்தப்படுகிறது. அவர் அதை நீண்ட காலத்திற்குச் செய்யப் போவதில்லை" என்று ஞாயிற்றுக்கிழமை ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பேசும்போது டிரம்ப் கூறினார். கொலம்பியாவைக் குறிவைத்து அமெரிக்கா ஒரு ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளுமா என்று கேட்டதற்கு, டிரம்ப், "அது எனக்கு நன்றாகத் தோன்றுகிறது" என்று பதிலளித்தார். வரலாற்று ரீதியாக, அமெரிக்காவின் போதைப்பொருள் ஒழிப்புப் போரில் கொலம்பியா ஒரு நெருங்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது. போதைப்பொருள் கும்பல்களை எதிர்கொள்ள ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை ராணுவ உதவியாக அந்நாடு அமெரிக்காவிடமிருந்து பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இரான் இரானில் தற்போது அரசுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அங்கு போராட்டக்காரர்கள் மேலும் கொல்லப்பட்டால், அந்த நாட்டு அதிகாரிகள் மீது "மிகக் கடுமையான தாக்குதல்" நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். "நாங்கள் இதை மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். கடந்த காலத்தைப் போலவே அவர்கள் மக்களைக் கொல்லத் தொடங்கினால், அமெரிக்காவிடமிருந்து அவர்கள் மிகக் கடுமையான பதிலடியைச் சந்திப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்," என்று ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார். கோட்பாட்டு ரீதியாக, இரானானது "டான்றோ கோட்பாட்டின்" எல்லைக்கு வெளியே இருந்தாலும், கடந்த ஆண்டு அதன் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரான் ஆட்சிக்கு எதிராக மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக டிரம்ப் ஏற்கெனவே எச்சரித்துள்ளார். அணு ஆயுதங்களை உருவாக்கும் இரானின் திறனை அழிப்பதை நோக்கமாகக் கொண்டு இஸ்ரேல் ஒரு பெரிய அளவிலான நடவடிக்கையைத் தொடங்கியது. இதன் உச்சக்கட்டமாக 12 நாட்கள் நீடித்த இஸ்ரேல்-இரான் போர் நடந்தது. அமெரிக்காவும் இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்களை நடத்தியது. கடந்த வாரம் மார்-ஏ-லாகோ இல்லத்தில் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே நடந்த சந்திப்பில், இரான் விவகாரமே முதன்மையானதாக இருந்ததாகக் கூறப்பட்டது. 2026-ஆம் ஆண்டில் இரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நெதன்யாகு ஆலோசித்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெக்சிகோ 2016-ஆம் ஆண்டில் டிரம்ப் ஆட்சிக்கு வந்தபோது, மெக்சிகோவுடனான தெற்கு எல்லையில் "சுவர் எழுப்பப்படும்"என்ற முழக்கம் மிக முக்கியமானதாக இருந்தது. 2025-ஆம் ஆண்டு மீண்டும் பதவியேற்ற முதல் நாளிலேயே, மெக்சிகோ வளைகுடாவை , "அமெரிக்க வளைகுடா" என்று பெயர் மாற்றுவதற்கான நிர்வாக ஆணையில் அவர் கையெழுத்திட்டார். அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதையோ அல்லது சட்டவிரோத குடியேற்றத்தையோ தடுப்பதற்கு மெக்சிகோ அதிகாரிகள் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அவர் அடிக்கடி குற்றம் சாட்டி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர், மெக்சிகோ வழியாக போதைப்பொருள் "பெருக்கெடுத்து ஓடுவதாகவும்", நாம் "நிச்சயமாக ஏதாவது செய்ய வேண்டியிருக்கும்" என்றும் கூறினார். அங்குள்ள போதைப்பொருள் கும்பல்கள் "மிகவும் வலிமையாக" இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷைன்பாம், அமெரிக்கா மெக்சிகோ மண்ணில் எந்தவொரு ராணுவ நடவடிக்கையையும் மேற்கொள்வதை வெளிப்படையாக நிராகரித்துள்ளார். கியூபா புளோரிடாவுக்கு தெற்கே 90 மைல் (145 கி.மீ) தொலைவில் அமைந்துள்ள இந்த தீவு நாடு, 1960-களின் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு வருகிறது. இது நிக்கோலஸ் மதுரோவின் வெனிசுவேலாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தது. கியூபா "வீழ்வதற்குத் தயாராக" இருப்பதால், அங்கு அமெரிக்க ராணுவத் தலையீடு தேவைப்படாது என்று டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். "நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். அது தானாகவே வீழ்வது போல் தெரிகிறது," என்று அவர் கூறினார். மேலும், "அவர்களால் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் கியூபாவுக்கு இப்போது வருமானம் இல்லை," என்று தெரிவித்த டிரம்ப் , "அவர்கள் தங்களுடைய வருமானம் முழுவதையும் வெனிசுவேலாவிடமிருந்து, குறிப்பாக வெனிசுவேலாவின் எண்ணெயிலிருந்து பெற்றனர்," என்றும் குறிப்பிட்டார். கியூபாவுக்குத் தேவையான எண்ணெயில் சுமார் 30% வெனிசுவேலாவால் வழங்கப்படுவதாகத் தெரிகிறது. இப்போது மதுரோ பதவியில் இல்லாததால், அந்த விநியோகம் முடங்கும்பட்சத்தில் ஹவானா (கியூபாவின் தலைநகரம்) பெரும் பாதிப்புக்குள்ளாகும். கியூப குடியேறிகளின் மகனும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருமான மார்கோ ரூபியோ, கியூபாவில் ஆட்சி மாற்றத்தை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார். சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் ஹவானாவில் வசிப்பவராகவோ அல்லது அங்குள்ள அரசாங்கத்தில் இருப்பவராகவோ இருந்தால், நான் கவலைப்படுவேன். குறைந்தபட்சம் ஒரு சிறிய அளவாவது கவலை கொள்வேன்"என்றார். மேலும், "அதிபர் பேசுகிறார் என்றால், நீங்கள் அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்," என்றும் அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cje1952wzwvo- பாம்புக்கடிக்கு இலக்கான கிளிநொச்சி இளைஞன் உயிரிழப்பு
பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு Jan 6, 2026 - 06:51 PM கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் இன்று (06) ஆலய வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஶ்ரீகாந்தன் கிருசிகன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பாம்பு கடிக்கு இலக்கான இளைஞனை உடனடியாக தர்மபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://adaderanatamil.lk/news/cmk2mbebd03m2o29nss7x03f8- போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசியப் பொறுப்பு: ஜனாதிபதி
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசியப் பொறுப்பு: ஜனாதிபதி Jan 6, 2026 - 07:42 PM நாட்டின் பௌதீக வளர்ச்சியைப் போன்று சமூகத்தின் நலன் மற்றும் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியம் என்றும், தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழித்து, நாட்டின் எதிர்கால சந்ததியினரை இந்த அழிவிலிருந்து மீட்டெடுக்க அனைவரும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட "முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபையின் மூன்றாவது அமர்வு, மூன்று நிகாயாக்களின் மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றபோதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தை ஒழித்தல், சோதனை நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், இதற்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட வேலைத் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராக சமூகத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பன்முக அணுகுமுறையின் மூலம் நாட்டில் பரவலாக உள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கத்துடன் "போதைப்பொருள் அற்ற நாடு - மகிழ்ச்சியான நாளை" என்ற தொனிப்பொருளின் கீழ் “ அகன்று செல்-முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு எதிராக பாரிய சமூக தாக்கத்தையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தவும், போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கவும் அரசாங்கம், பாதுகாப்புப் பிரிவுகள், சிவில் அமைப்புகள் மற்றும் அனைத்து பிரஜைகளையும் ஒன்றிணைத்து, ஒரு தேசிய முன்னணியாக இது செயல்படுகிறது. போதைப்பொருள் தொடர்பாக தற்போது இடம்பெறும் சோதனை நடவடிக்கைகள், கைதுகள் மற்றும் புனர்வாழ்வு செயல்பாட்டின் முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைத்து நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் பொது மக்களுக்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார். 2025.01.01 முதல் 2026.01.05 வரையிலான காலப்பகுதியில், 1,821.174kg ஹெரோயின், 3,865.710kg ஐஸ், 17,189.377kg கஞ்சா, 38.958kg கோக்கேய்ன் மற்றும் 4,049,569 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. கடந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டபடி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை உடனடியாக அழிப்பது தொடர்பான புதிய சட்டங்களை வகுப்பதற்கான பணிகளின் முன்னேற்றம் குறித்து குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் அந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு அறிவுறுத்தினார். தற்போது கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருட்களை அழிப்பது தொடர்பான முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. போதைக்கு அடிமையானவர்களின் சமூகத் தகவல்களைக் கண்டறிவதன் அவசியம் மற்றும் அது தொடர்பான தரவுகளைச் சேகரிக்க கணக்கெடுப்பை நடத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த தேசிய வேலைத்திட்டத்தை பரவலாக செயல்படுத்துவதற்காக கல்வி நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கலைத்துறையில் செயற்படும் அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் ஒரு வலுவான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மேலும், கிராமத்திற்கும் மத வழிபாட்டுத் தலங்களுக்கும் இடையிலான தொடர்பைப் பயன்படுத்தி, மதத் தலைவர்களின் பங்கேற்புடன் பொது விழிப்புணர்வு திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmk2o5kqn03m4o29nmhhusdv5- மனநலம் பாதிக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளரை விடுவிக்குமாறு குடும்பத்தினர் கோரிக்கை
மனநலம் பாதிக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளரை விடுவிக்குமாறு குடும்பத்தினர் கோரிக்கை இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இந்திய மீனவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி கடற்றொழிலாளரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்றையதினம்(05.01.2026) இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு - இராமேஸ்வரம் பகுதியில் இருந்து, கடற்றொழிலுக்கு சென்றவர்கள் கடந்த 30ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றத்திற்காக நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்றொழிலாளர் விடுவிப்பு கோரிக்கை கைது செய்யப்பட்ட பிரபு(49), நாகராஜ்(47), ரூபன்(45) ஆகிய மூன்று கடற்றொழிலாளர்களையும் இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில், அவர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://www.facebook.com/reel/837653312421458 இந்நிலையில், கைதான பிரபு, மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்தும் சிகிக்சை பெற்று வருவதாகவும், நாளாந்தம் தூக்க மருந்து எடுத்துக் கொள்பவர் என்றும், இவருக்கு கடந்த 3ஆம் திகதி மதுரையில் உளவியல் சிகிச்சை பெற இருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என அவரின் மனைவி தெரிவித்துள்ளார். அத்துடன், தற்போது கடற்றொழிலாளர் பிரபு தூக்க மாத்திரை எடுத்துக் கொள்ளாமல், உடைகளை மாற்றாமல் உணவு உண்ணாமல், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக உடன் இருக்கும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளார்கள் என அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அவரை விரைவில் விடுவிக்க வேண்டும் எனவும், ஏனெனில் அவருடைய உடல்நலம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருப்பதாகவும், அவரை உயிருடன் தங்களிடம் ஒப்படைக்குமாறும் உறவினர்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர். https://tamilwin.com/article/tamil-nadu-demands-release-of-fisherman-1767696094- வடக்கு, கிழக்கு வானிலை குறித்த விசேட எச்சரிக்கை அறிவிப்பு
மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தவுள்ள தாழமுக்கம்! வடக்கு - கிழக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை வங்காள விரிகுடாவில் இலங்கையின் பொத்துவிலுக்கு தென்கிழக்கு திசையில் 664 கி.மீ. தொலைவில் காணப்படும் காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தற்போது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக (Well Marked Low Pressure) மாறியுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கையின் கிழக்கு மாகாணக் கரையோரமாக வடக்கு நோக்கி நகர்ந்து, வடக்கு மாகாணத்தை அண்மித்து மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து தமிழ்நாட்டை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் பாதிப்பு இந்த தாழமுக்கமும் இலங்கைக்கு மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. தற்போது வடக்கு, கிழக்கு, வட மத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கு பரவலாக மிதமான மழை கிடைத்து வருகின்றது. எதிர்வரும் 08.01.2026 முதல் 12.01.2026 வரை வடக்கு, கிழக்கு, ஊவா, வட மத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்கள் முழுவதும் மிக மிக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தங்களுக்கு வாய்ப்புள்ளது. முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 8,9,10,11 ம் திகதிகளில் மிக மிக கனமழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலச்சரிவு அனர்த்தம் குறிப்பாக முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் எதிர்வரும் 08.01.2026 முதல் 11.01.2026 வரை திரட்டிய மழைவீழ்ச்சியாக 450மி.மீ. க்கு மேல் கிடைக்கும் வாய்ப்புள்ளது. எதிர்வரும் 08.01.2026 முதல் 13.01.2026 வரை வடமேற்கு, மேற்கு, சபரகமுவா மாகாணங்களுக்கு பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இது தற்போது தாழமுக்கமாகக் காணப்பட்டாலும் இலங்கைக் கரையை அண்மிக்கும் போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதனால் எதிர்வரும் 08.01.2026 முதல் கிழக்கு, வடக்கு வடமத்திய ஊவா மாகாணங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ. இனை விட கூடுதலாக வீசக்கூடும். மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் என்பதனால் நிலச்சரிவு அனர்த்தங்களும் நிகழக்கூடும். கடல் மட்டம் வடக்கு, கிழக்கு, வட மத்திய, மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களின் மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாக அதிகாரிகள் முன்கூட்டியே மக்களுக்கு இந்தக் கனமழை தொடர்பிலும் வெள்ள அனர்த்தங்கள் மற்றும் நிலச்சரிவுகள் தொடர்பிலும் தெரியப்படுத்துவதன் மூலம் பாதிப்புக்களைக் குறைக்க முடியும். தயவு செய்து இந்த தாழமுக்கத்தினைச் சாதாரண நிகழ்வாகக் கருத வேண்டாம். மிக வேகமான காற்றோடு கூடிய மிகக் கனமழை (இடி மின்னலும் இணைந்ததாக) மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும். மிக முக்கியமாக தாழமுக்கம்/ தாழ்வு மண்டலத்தோடு இணைந்த நிகழ்வு என்பதனால் வழமையை விட கடல் மட்டம் மிக உயர்வாக காணப்படும். ஆகவே சாதாரண காலங்களில் வெள்ளநீர் கடலுக்குள் செல்வது போல இக்காலத்தில் வெள்ள நீர் கடலுக்கு செல்லாது. ஆகவே இதனையும் கருத்தில் கொண்டு அதிகாரிகள் செயற்படுவது சிறந்தது என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/flooding-and-landslide-warnings-heavy-rainfall-1767692928- ஒரு கிலோ டூனா மீனின் விலை 11,413 யூரோக்கள்.
புதிய ஆண்டு அந்த டூனா மீனை பிடித்தவருக்கு அதிஸ்டம் அடித்திருக்கு தானே ஐயா?!- தாலிக்கொடியை யுவதியிடம் இழந்த யாழ் வங்கி ஊழியர்
தாலி கட்டிட்டு கதை விடுறாரோ?!- திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் தீபம் ஏற்ற அனுமதி!
'மலை உச்சி தூணில் தீபம் ஏற்றலாம்' - திருப்பரங்குன்றம் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு விவரம் 6 ஜனவரி 2026, 05:45 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்துள்ளது. தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அப்போது, தூணில் விளக்கு ஏற்றுவது தொடர்பாக முந்தைய வழக்குகளில் முடிவு செய்யப்படவில்லை எனவும் அதனால் தனி நீதிபதியின் உத்தரவை முன்னரே முடிக்கப்பட்ட வழக்கு என முடிவு செய்ய முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தர்காவுக்கு அருகில் உள்ள கல் தூணில் விளக்கு ஏற்றுவதற்கு ஆகம விதிகளில் இடம் இல்லை என்பதற்கான வலுவான ஆதாரங்களை மாநில அரசின் அதிகாரிகளும் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா தரப்பில் சமர்ப்பிக்க தவறிவிட்டதாகவும் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர். ஓராண்டில் குறிப்பிட்ட நாளில் கல் தூணில் விளக்கு ஏற்றுவதற்கு அனுமதித்தால் அது பொது அமைதிக்கு ஆபத்தை விளைவிக்கும் என அரசு அஞ்சுவது ஆபத்தானது எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். இது நம்புவதற்குக் கடினமானது என்று கூறியுள்ள நீதிபதிகள், 'சட்டம்-ஒழுங்கு குறித்த அச்சம் என்பது ஒரு சமூகத்துக்கு எதிராக மற்றொரு சமூகத்திற்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதற்கு மாநில அரசின் அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட கற்பனையான பேய்' எனவும் தெரிவித்துள்ளனர். "நிச்சயமாக, இதுபோன்ற ஒரு குழப்பம் அந்த அரசாங்கத்தாலேயே தூண்டிவிடப்பட்டால் மட்டுமே அது சாத்தியமாகும். தங்களின் அரசியல் நோக்கங்களை அடைவதற்காக எந்தவொரு அரசாங்கமும் அந்த அளவுக்குத் தாழ்ந்துவிடக் கூடாது என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்" என்று நீதிபதிகள் குறிப்பிட்டதாக லைவ் லா செய்தி கூறுகிறது. திருப்பரங்குன்றம் மலை பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், எந்தவித நடவடிக்கைகளும் சட்டப்படியே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். மலை உச்சி தூணில் தீபம் ஏற்றலாம் எனக்கூறிய நீதிபதிகள் எத்தனை பேர் அனுமதிக்கப்படலாம் என்பது குறித்து தொல்லியல் துறையுடன் கலந்தாலோசித்த பின்னர் முடிவெடுக்கலாம் என்று தெரிவித்திருப்பதாக 'லைவ் லா' இணையதள செய்தி கூறுகிறது. லைவ் லா செய்தியின்படி, சமூகங்களுக்கு இடையேயான இடைவெளியை மத்தியஸ்தம் மூலம் தீர்ப்பதற்கான பாலமாக மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தை பார்க்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 'அறநிலையத் துறை, கோவில் நிர்வாகமே பொறுப்பு' தீபத்தூணில் தீபமேற்ற கோரி வழக்கு தொடுத்தவர்களுள் ஒருவரான அரசுபாண்டி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் குமார் தீர்ப்பு குறித்து கூறுகையில், "இன்றைய தீர்ப்பில், ' மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டியது ஒரு கட்டாயம்' என்பதை நீதிபதிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அறநிலையத் துறைக்கும் கோவில் நிர்வாகமும் தான் இதற்கு பொறுப்பு என உறுதிப்படுத்தியுள்ளனர். எந்த காலத்திலும் என்ன காரணத்திற்காகவும் தவிர்க்கக் கூடாது என உறுதிப்படுத்தியுள்ளனர்." என கூறினார். நிர்வாகத்தின் 10 பேர் சேர்ந்து தீபம் ஏற்றுவதால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என கூறுவது, அரசின் திறமையின்மையை காட்டுகிறது அல்லது அரசின் நிலைப்பாட்டை காட்டுகிறது என நீதிபதிகள் தெரிவித்ததாக அவர் கூறினார். "திருப்பரங்குன்றம் மலையில் எந்த மதத்தை சேர்ந்த நிகழ்வாக இருந்தாலும் தொல்லியல் துறை மற்றும் காவல்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். ஆனால், கார்த்திகை தீபத்திற்கு ஏற்கெனவே அனுமதி அளித்துவிட்டதால், அதற்கு இந்த நிபந்தனை பொருந்துமா என தெரியவில்லை." என தெரிவித்தார். தர்கா தரப்பு கூறியது என்ன? திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி தீர்ப்பை இரு நீதிபதிகள் அமர்வு உறுதிப்படுத்தியிருப்பது குறித்து தர்கா தரப்பிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அவர்கள் கூறினர். வழக்கின் பின்னணி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ள மலை உச்சியின் இடதுபுறத்தில் காசி விஸ்வநாதர் ஆலயமும் மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன. ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை தீப நாளில் சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இந்து அமைப்பினர் முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டுமென உத்தரவிட்டார். அதன்படி, டிசம்பர் 3 மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென திருப்பரங்குன்றம் முருகன் கோவில் செயல் அலுவலர் டிசம்பர் 2 அன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். ஆனால், டிசம்பர் 3 அன்று திருப்பரங்குன்றம் மலையில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே வழக்கம் போல தீபம் ஏற்றப்படும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் தீபத்தூணில் தீபத்தை ஏற்றுவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை (டிசம்பர் 3) தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். தன்னுடன் அவர் 10 பேரை அழைத்துச் செல்லலாம் என்றும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். பட மூலாதாரம்,hcmadras.tn.gov.in படக்குறிப்பு,தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனும், உயர் நீதிமன்ற மதுரை கிளையும் இந்த உத்தரவை எதிர்த்து, மதுரை மாவட்ட ஆட்சியர், நகர காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் செயல் அதிகாரி ஆகியோர் ஒரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக டிசம்பர் 4 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பின் மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மறுபுறம், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை, திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம், மலை மீதுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம் ஆகியவை மேல் முறையீடு செய்திருந்தன. இந்த வழக்கை நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு விசாரித்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8e5wzkkr3ro- அடிப்படை சுகாதார வசதி திட்டம்
காரைநகரில் இருந்து முன்னோடிக்கான இரண்டாவது வேண்டுகோள் கடிதம்.- தாலிக்கொடியை யுவதியிடம் இழந்த யாழ் வங்கி ஊழியர்
அதுசரி களவா உல்லாசம் , சல்லாபம், டண்டணக்கா அனுபவிக்க போனவர் எதுக்கு மனைவியின் 9 பவுன் தாலிக்கொடியை கொண்டு போனார். சைத்தாங்கே பச்சி!!!- அடிப்படை சுகாதார வசதி திட்டம்
நானும் அப்பப்ப செய்வேன். ஓய்வூதியத்தில் வாழ்வதால் எல்லாமே திட்டமிட்டே செலவு.- தாலிக்கொடியை யுவதியிடம் இழந்த யாழ் வங்கி ஊழியர்
யுவதி உழைப்புக்கு ஊதியம் எடுத்துக் கொண்டு போயிருக்கிறா. விசயத்தை அப்பிடியே அமுக்கி இருக்கலாம். இப்ப கொடியும் போச்சு மானமும் போச்சு.- தாலிக்கொடியை யுவதியிடம் இழந்த யாழ் வங்கி ஊழியர்
"ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்" என்பது ஒரு பழமொழி. இதன் பொருள், ஒரு புதிய உறவு அல்லது திருமணம் ஏற்பட்ட ஆரம்ப காலங்களில் இருக்கும் அதீத விருப்பம் (ஆசை) 60 நாட்களுக்கும், காதல் உணர்வு (மோகம்) 30 நாட்களுக்கும் மட்டுமே நீடிக்கும்; அதன் பிறகு அந்த ஆரம்ப கால உற்சாகம் குறைந்து, இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பிவிடும் என்பதேயாகும். எனினும், பெண்கள் மீதான மோகத்தால் பலரும் பலவற்றை இழந்துவிடுவார்கள். இதில், ஆண்களை குறிவைத்து சூறையாடும் பெண்களும் இல்லாமல் இல்லை. அந்த வலையில் சிக்கிய பலரும் மீண்டெழ முடியாத நிலைமையில் உள்ளனர். சரி விடயத்துக்கு வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் , மனைவிக்கு தெரியாது எடுத்துசென்ற 9 பவுண் தாலிகொடியை கொழும்பு யுவதி எடுத்துக்கொண்டு தலைமறைவான சம்பவம் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த திருமணமான வங்கி ஊழியர் ஒருவருக்கு , அவரது நண்பனின் ஊடாக கொழும்பு யுவதி ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அந்த யுவதியுடன் தனித்திருக்க விரும்பி குறித்த வங்கி ஊழியர் மனைவிக்கு தெரியாது அவர்து தாலிகொடொயை எடுத்துகொண்டு கொழும்பு யுவதியுடன் வவுனியா சென்று ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் வங்கி ஊழியர் கண் அயர்ந்த நேரத்தில் கொழும்பு யுவதி, வங்கி ஊழியரிடம் இருந்த தாலிக்கொடியை எடுத்துகொண்டு தப்பிவிட்டார். கண் விழி்த்த பின்னரே வங்கி ஊழியருக்கு , கொழும்பு யுவதி தாலிகொடியுடன் மாயமாகியமை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து நண்பனுடன் யுவதியை தேடியபோதும் அவர்களால் கொழும்பு யுவதியை கண்டுபிடிக்க முடியவில்லை. நண்பருக்கு இரவல் கொடுத்ததாக கணவன் சமாளித்தபோதும், தொடர்ந்து இழுத்தடிப்பு செய்ததால், நண்பனின் வீடு சென்று மனைவி அது தொடர்பில் வினவியபோதே நடந்த சம்பவம் அம்பலமானது. Tamilmirror Online || தாலிக்கொடியை யுவதியிடம் இழந்த யாழ் வங்கி ஊழியர் - பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.