Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. வீழ்ச்சி லஷ்மி சரவணகுமார் கள்ளக்காதல் விவகாரத்தில் தனது கணவனைத் தற்கொலைக்குத் தூண்டிய அந்தப் பெண் ஒரு வாரமாகத் தன்னைத் தொடர்ந்து வருவதைக் கவனித்த மூர்த்தி பதற்றமடையத் துவங்கினான். திருச்சி நீதிமன்றத்தில் செய்தி சேகரிக்கச் சென்றவன் தேநீர் அருந்துவதற்காக ஒரு கடையில் ஒதுங்கியபோதுதான் முதல் தடவையாக எதிர்ப்பட்டாள். அவளை அடையாளம் தெரியாததால் அவன் பொருட்படுத்தவில்லை. அடுத்தநாள் தனது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில் பிஷப் ஹீபர் காலேஜ் சிக்னலில் பச்சை விளக்கிற்காகக் காத்திருந்த இடைவெளியில் தனக்குப் பின்னால் பழைய இரு சக்கரவாகனத்தில் அந்தப் பெண் இருப்பதைப் பார்த்தான். கூர்மையாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கொலை ஆயுதம் ஒன்றின் முனையிலிருக்கும் கூர்மைமிக்கப் பார்வையது. நரம்புகள் அதிர்ந்ததுபோல உடலை உதறிக் கொண்டவன் அவளிடமிருந்து பார்வையை விலக்கி அவசரமாக சிக்னலைக் கடந்து சென்றான். இரவு உறக்கம் பிடிக்கவில்லை. அவளது பார்வையிலிருந்த ரெளத்ரம் அச்சமூட்டுவதாக இருக்க, யாராக இருக்குமெனச் சிந்தனைவயப்பட்டான். அறையில் மிக மெல்லிய நீல வெளிச்சம் படர்ந்திருக்க, அவனது பூனை தனது முகத்தால் கதவை முட்டித் திறந்துகொண்டு வந்தது. ம்யாவ்.. என நான்கைந்து முறை ஒலியெழுப்பியபின் தலையைத் தூக்கிப் பூனையைப் பார்த்தான். அந்த மென் வெளிச்சத்தில் பூனையின் கண்கள் ஒளிரும் உருண்டைகளாய் மின்னியது. ‘அப்பா கிட்ட வா….’ என அழைத்தவனை நோக்கி உடலை நோக்கி நெட்டி முறித்தபின் ஒரே தாவலில் கட்டிலுக்கு வந்தது. அவனது வயிற்றில் தலையைச் சாய்த்துக் கண்களை மூடி உறங்கத் துவங்கிய பூனையை வருடிக் கொடுத்தான். அதன் உடலிலிருந்து மூச்சுவிடும் பர்ர்ர் சத்தம் மெல்லிய ஒலியில் கேட்டுக் கொண்டிருக்க, அடிபட்ட மிருகம் போலிருந்த அந்தப் பெண்ணின் நினைவு மின்னலைப் போல் தலைக்குள் தோன்றி மறைந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்னால் அந்தச் செய்தியை மூர்த்திதான் முதலில் தனது பத்திரிகையில் எழுதினான். வயலூருக்கு அருகே சிறிய கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு அதே ஊரைச் சேர்ந்த ஆளுடன் கள்ள உறவு இருந்ததாகவும் அதனைத் தட்டிக் கேட்ட கணவனைக் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதால் அவனே தற்கொலை செய்துகொண்டதாகவும் விசாரணை அதிகாரி சொல்லியிருந்தார். தனது கணவனைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றம் அவளுடையது. அன்றைக்கு வேறு பெரிய செய்திகள் எதுவும் கிடைக்காததால் மூர்த்தி மாவட்டப் பகுதியில் இந்தச் செய்திக்குச் சிறப்புக் கவனம் கொடுத்துக் கால் பக்கத்திற்கு எழுதியிருந்தான். கள்ளக்காதல்களுக்காக இன்னும் எத்தனை மரணங்கள்? எனத் தலைப்பு, அதன் இரு பக்கத்திலும் அரிவாள் படம் போடப்பட்டு அதற்கு நாடகத்தன்மையும் சேர்ந்திருந்தது. அதன்பிறகு தொலைக்காட்சிச் செய்திகள், யூட்யூபர்களென ஒவ்வொருவரும் தங்களக்குத் தெரிந்த உண்மைகளை எல்லாம் தேடித் திரட்டிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பின்பு எல்லோரையும் போலவே மூர்த்தியும் அந்தச் செய்தியையும் பெண்ணையும் மறந்திருந்தான். ஆனால் எதற்காக அவள் தன்னைப் பின்தொடர வேண்டுமெனக் குழப்பமாக இருந்தது. அடுத்தநாள் ஒரு வழக்கறிஞரைச் சந்திப்பதற்காக சென்ட்ரல் மார்க்கெட் அருகில் ஒரு கட்டிடத்தில் காத்திருந்தான். வழக்கத்தை விடவும் அதிகமான வெக்கையில் உடல் வறண்டுபோயிருந்தது. ‘ஸார் வந்தா சொல்லுங்க… நான் பக்கத்துல கட வர போயிட்டு வரேன்.. எனக் கிளம்பி வெளியே வந்தான். கண்ணைப் பறிக்கும் ஒளியில் சாலை தகித்துக் கொண்டிருந்தது. அந்தக் கட்டிடத்திற்கு அடுத்தாற்போலிருந்த பிரியாணி கடையிலிருந்து இறைச்சி வேகும் மணம் அடர்த்தியாய்ப் பரவியது. நெரிசலான சாலையில் இரு சக்கர வாகனங்களுக்கு நடுவே நுழைந்து சென்றவன் நான்கு கடைகள் தள்ளி உள்நோக்கி அமைந்திருந்த பழக்கடைக்குள் நுழைந்தான். அவனுக்குப் பின்னால் அவனது நிழலும் கடையின் சுவர்களில் பரவி வந்தது. சில நிமிடங்களிலேயே சட்டை வியர்த்திருந்தது. ‘அண்ணே ஒரு ஆரஞ்ச் ஜூஸ் குடுங்க… சக்கர இல்லாம…’ என்றவன் காற்றாடிக்குக் கீழ் அமர்ந்தான். ‘ஏன் சக்கர வியாதியா உங்களுக்கு..’ வசீகரமான ஒரு பெண் குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்க, அவனுக்குப் பின்னால் அந்தப் பெண் கையில் ஒரு கோப்பையோடு இவனைப் பார்த்துச் சிரித்தாள். திருத்தமான முகம். புகைப்படங்களில் தெரிந்த முதுமை நேரில் பார்த்தபோது இல்லை. முப்பத்தைந்து வயதிற்கு மேலிருக்க வாய்ப்பில்லை என்பதைப் போல் தோற்றம். கண்களுக்குக் கீழிருந்த சுருக்கத்தில் அவள் பூசியிருந்த டால்கம் பவுடர் வியர்வையில் வழிந்து ஓடியிருந்தது. ‘என்ன ஸார் அப்பிடிப் பாக்கறீங்க? என்னயத் தெரியலையா? எனச் சாதாரணமாகக் கேட்டாள். அவனுக்கு அடையாளம் தெரிந்தது, பெயர் நினைவில்லை. தெரிந்தது போல் சிரித்தவனை நெருங்கி வந்தாள். ‘தீபா… வயலூர்… ரெண்டு மாசத்துக்கு முன்ன என்னயப் பத்தி ஒரு ஸ்டோரி எழுதியிருந்தீங்களே…’ எனச் சிரித்தாள். ‘ஸ்டோரி இல்லங்க… நியூஸ்…’ என அவசரமாகச் சொன்னான். ‘சரி சரி.. நியூஸ்தான்…’ எனச் சிரித்தவள் தனது கோப்பையிலிருந்து கொஞ்சம் பழச்சாறு அருந்தினாள். ‘நீங்க எப்பிடி? எனச் சந்தேகத்தோடு அவன் கேட்க, ‘ஜாமீன் ல வந்துட்டேன்… சூசைட் கேஸ் இல்லயா… அதனால எனக்கு ஈசியா ஜாமீன் கெடச்சிருச்சு…’ என அவள் சொல்ல மேற்கொண்டு என்ன பேசுவதெனத் தெரியாமல் மூர்த்தி தடுமாறினான். அந்த இடைவெளியில் அவனுக்கு ஜூஸ் வர, அவன் அவசரமாகக் குடித்தான். தயக்கமோ அச்சமோ இல்லாமல் அவனைப் பார்த்தவளிடம் குறுகுறுப்பு அதிகமானதால் ‘நா ரெண்டு மூணு நாளாவே கவனிக்கிறேன். நீங்க என்னய ஃபாலோ பன்ற மாதிரி தோணுது… எதாச்சும் சொல்லணுமா?…’ எனத் தயங்கியபடியே கேட்டான். ‘ஆமாங்க… கொஞ்சம் பேசணும்… உங்களுக்கு எப்ப வசதின்னு சொல்லுங்க பேசலாம்…’ என்றாள். ‘எதப் பத்தி…?’ ‘என்னோட கேஸ் தாங்க… நீங்க அதப் பத்திரிகை ல எழுதணும்னு இல்ல… ஆனா எனக்கு உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கணும்னு தோணுச்சு… உங்களுக்கு ஆட்சேபன இல்லன்னா உங்க நம்பர் குடுங்க…’ எனக் கேட்டாள். அவன் தயங்கியபடியே பழச்சாறைக் குடித்துவிட்டு, குவளையைக் கீழே வைத்தான். தனது பழச்சாறுக்கான பணத்தைக் கொடுக்கச் சென்றவனிடம் ‘நான் குடுத்துடறேன் நீங்க போங்க…’ எனச் சிரித்தாள். சங்கடத்தோடு பார்த்தவன் ‘9790125671 என தனது எண்ணைப் பகிருந்து கொண்டான். தனது அலைபேசியில் சேமித்துக் கொண்டவள் ‘நன்றிங்க… நாம அப்பறம் பேசலாம்.’ என்றபடியே பழச்சாறுக்கான பணத்தைக் கட்டிவிட்டுக் கிளம்பிவிட்டாள். வந்த வேலையின் மீது ஆர்வமில்லாமல் போக, அவன் அந்த அலுவலகத்தின் வாசலில் நிறுத்தியிருந்த தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு மனம் போன போக்கில் சென்றான். வெயிலின் உக்கிரத்தில் கண் கூசியதால் திரைப்படம் பார்க்க முடிவெடுத்து ஒரு திரையரங்கினுள் நுழைந்தான். வெக்கையிலிருந்து மீண்டு ஏசியின் குளிருக்குள் வந்ததும் அசதியில் கண்கள் செருகின. காதல், ரவுடியிசம், அரசியல் என எல்லாம் கலந்த ஒரு திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. நாயகனை விட நாயகி முதுமையாகத் தெரிந்தாள். திரையில் மனம் ஒன்றாமல் இன்ஸ்டாக்ராமில் நடிகைகளை வைத்துப் போடப்பட்ட ஆபாச மீம்களைப் பார்க்கத் துவங்கினான். எதன் மீதும் கவனம் செலுத்தமுடியாத இந்த இடைவெளியைக் காமத்தால் நிரப்பிக் கொள்ள முடிவுசெய்து பார்த்துக் கொண்டிருந்தான். சில நொடிகளிலேயே குறி விறைத்து உடல் சூடானது. திரையரங்கில் கூட்டம் குறைவாக இருந்ததால் சுற்றிலும் தலையைத் திருப்பிப் பார்த்தான்… அவனது வரிசையில் அவனைத் தவிர ஒருவருமில்லை. தனது இடது கையால் மெதுவாகக் குறியைத் தடவத் துவங்கியபோது ‘ஹாய்’ என ஒரு புதிய எண்ணில் இருந்து வாட்ஸப்பில் செய்தி வந்தது. சட்டெனக் கையை விலக்கிக் கொண்டவன் யாரெனத் தெரியாமல் செய்தியைத் திறந்தான். புகைப்படத்திற்குப் பதிலாக ஒரு செம்பருத்தி பூ படம் வைக்கப்பட்டிருந்தது. ஒரு கேள்விக்குறியை மட்டும் பதிலாக அனுப்பினான். அடுத்த நொடியே ஒரு கேலியான சிரிக்கும் ஸ்மைலியும் ‘தியேட்டர் ல மாஸ்டர்பேட் பன்றது தப்பில்லயா? எனக் கேட்டு ஒரு செய்தி வரவும் பதறிப்போனவன் நாலாப் புறமும் தலையைத் திருப்பிப் பார்த்தான். அவனுக்கு முன் வரிசையில் தன்னை நோக்கிப் பார்க்கும் இரண்டு கண்களை அந்த இருளினூடாகக் கண்டு அதிர்ந்தான். அவசரமாக அங்கிருந்து தப்பித்து ஓடிவிட நினைத்து எழுந்தபோது ‘எதுக்கு பயந்து ஓட்றீங்க… நான் யாருகிட்டயும் சொல்ல மாட்டேன். நீங்க கன்டினியூ பண்ணுங்க…’ எனப் பதில் வந்தது. அந்தச் செய்திக்குப் பதில் அனுப்பாமலேயே அவன் அவசரமாகத் திரையரங்கிலிருந்து வெளியேறினான். வீடு திரும்பும் வரை அவனுக்குப் பதற்றம் குறையவில்லை. தனது அறைக்குள் நுழைந்து உடைமாற்றும் போது மீண்டும் அவளிடமிருந்து செய்தி வந்தது. ‘ஏன் ஓடிட்டீங்க… நான் ஒன்னும் உங்கள பயமுறுத்தலையே…’ என்று இருந்த செய்தியை வாசித்தவன் இவளுக்கு என்ன வேண்டும்? எதற்காக தன்னை இத்தனை தீவிரமாகக் கண்காணிக்கிறாள் எனக் குழம்பியபடியே படுக்கையில் அமர்ந்தான். ஒருவேளை தன் மீது ஈர்ப்பிருக்குமோ? என நினைத்தபோதே ஆர்வத்தில் அவனுக்கு மீண்டும் குறி விறைத்தது. தன்னைக் கண்ணாடியில் பார்த்தான். தன் மீது அவளுக்கு ஆர்வம் இருக்கிறது என்பது தெரிந்ததுமே அவளோடு பேச வேண்டுமெனத் தூண்டுதல் உருவானது. ஆனால் தயங்கினான். அவளனுப்பிய செய்தியைப் பார்ப்பதற்காகத் திறந்தபோது செம்பருத்திப் பூவிற்குப் பதிலாக அவள் தனது புகைப்படத்தை வைத்திருந்தாள். திரட்சியான உடலைப் பார்த்து அவனுக்குச் சிலிர்த்தது. ஆனால் எச்சரிக்கை உணர்வோடு பதில் அனுப்புவதைத் தவிர்த்தான். பிறகு அவளும் செய்தி அனுப்பவில்லை. கிறீச் ஒலியுடன் சுற்றும் காற்றாடியைப் பார்த்தபடியே கிடந்தவனின் கண்கள் சிவந்துபோயின. அசதியில் அப்படியே உறங்கிப் போனவன் கண் விழித்ததும் அவசரமாக அலைபேசியை எடுத்துப் பார்த்தான். அவளிடமிருந்து எந்தச் செய்திகளும் இல்லை. தனது அன்றாட வேலைகளைக் கவனிக்கச் சென்றவன் அடிக்கொரு முறை அலைபேசியை எடுத்துப் பார்க்கத் துவங்கினான். அவளிடமிருந்து எப்போது செய்தி வருமென்கிற குறுகுறுப்பு அதிகரித்தது. இரவு வரையிலும் காத்திருந்து பொறுமையற்றுப் போனவன் பதினோறுக்கு மேல் எச்சரிக்கை உணர்வையும் மீறி அவளுக்குச் செய்தி அனுப்பினான். ஹாய்..’ சில நொடிகளிலேயே அவளிடமிருந்து பதில் வந்தது. ‘சொல்லுங்க…’ ‘ஏதோ பேசனும்னு சொன்னீங்களே?..’ ‘ம்ம். ஆமா…’ ‘என்ன பேசனும்…’ ‘ஒன்னுமில்ல… என்னப் பத்தி… எங்க வீட்டுக்காரரப் பத்தி…’ அவனுக்கு இந்த உரையாடலில் ஆர்வமில்லை… ‘ஓ..’ எனப் பதிலளித்து விட்டு அமைதிகாத்தான்… ‘ஏன் நீங்க என்ன நெனச்சீங்க…?’ அவளாகவே அடுத்த கேள்வியைக் கேட்க தான் நினைத்தது சரிதானென அவனது உள்மனம் சொன்னது. ‘நான் எதும் நெனைக்கலீங்க… உங்க வீட்டுக்காரர் சம்பவம் முடிஞ்சிருச்சு. இனி அதப் பத்தி என்ன சொல்லப் போறீங்க. கேஸ் கோர்ட்ல இருக்கு. அதனால அதுல நான் கமெண்ட் பண்ணவும் முடியாது…’ அவன் அனுப்பிய செய்திக்கு அவள் பதில் அளிக்கவில்லை… ‘ஹலோ…’ என மீண்டும் அனுப்பினான்… ‘ம்ம்… எனப் பதில் அனுப்பியவள். சரிங்க… குட்நைட்.’ எனச் சுருக்கமாக முடித்துக் கொண்டாள். அவனுக்குச் சப்பென்றானது. இந்த விளையாட்டு இத்தனை சீக்கிரமாக முடிந்திருக்க வேண்டாமென ஏமாற்றமடைந்தான். எதாவது பேசி அந்த உரையாடலை வளர்க்க வேண்டுமெனக் கைகள் பரபரத்தன. அவன் தட்டச்சு செய்யத் துவங்கும் முன்பாகவே அவள் டைப் செய்வதாகக் காட்டியது. பொறுமை காத்தான். ‘தியேட்டர் ல யார நெனச்சு மாஸ்ட்ரூபேட் பண்ணீங்க…’ அவள் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட்டாள். இவன் வெறும் சிரிக்கும் ஸ்மைலி மட்டும் அனுப்பினான். ‘சும்மா சொல்லுங்க…’ என அவள் வற்புறுத்த ‘அந்தப் படத்துல நடிச்ச நடிகையப் பாத்துதான்…’ எனப் பதில் அனுப்பினான். ‘பொய்…’ அவள் மீண்டும் கேலியான ஸ்மைலி அனுப்பினாள். ‘நிஜமாத்தான்… தீபா…’ என அப்பாவியாகச் சொன்னான். அவளிடமிருந்து அதன்பிறகு பதில் இல்லை. ‘ஹலோ… எனக் கேட்டு நிறைய கேள்விக் குறிகளையும் அனுப்பினான். அவளும் பதிலுக்குக் கேள்விக் குறிகளை அனுப்பினாள். ‘கால் பண்ணவா?’ இந்த முறை அவனது காமம் அவனதுக் கட்டுப்பாட்டை வென்றது. எல்லா ஒழுக்கசீலனுக்குமான எல்லை வாய்ப்பு கிடைக்கும் வரைதான். வாய்ப்புகள் உருவாகும் சிறிய சாத்தியங்கள் தென்பட்டால் கூட ஆண்கள் காமத்தில் திளைக்கவே விரும்புகிறார்கள். பெண்கள் விஷயத்தில் ஆண்கள் கடைபிடிக்கும் கட்டுப்பாடுகள் எல்லாமே தற்காலிகமானவை. ‘எதுக்கு எனக் கேட்டு உடன் ஆங்க்ரி ஸ்மைலியும் அனுப்பினாள். ‘சும்மா பாக்கதான்…’ எனப் பதில் அனுப்பிவிட்டுப் படபடப்போடு காத்திருந்தான். அவள் ஒரு பேய்ப் படத்தை அனுப்பினாள். ‘பேய் நிறையப் பாத்திருக்கேன். உங்களப் பாக்கணும்.’ என எவன் கேட்க, தனது இன்னொரு புகைப்படத்தை அனுப்பினாள். நைட்டியில் அவளது மார்புகள் அடங்க முடியாமல் திமிறிக் கொண்டிருக்க, இவனுக்கு நரம்புகள் முறுக்கேறின. ‘தியேட்டர் ல விட்டத இப்ப முடிச்சுட்டுப் பேசாமப் படுங்க…’ என்றவள் கண்ணடிக்கும் ஸ்மைலியை அனுப்பினாள். அதற்கு மேல் காத்திருக்க முடியாமல் அவளை வீடியோ காலில் அழைத்தான். உடனடியாக இணைப்புத் துண்டிக்கப்பட்டது. ஆத்திரத்தோடு தனது அலைபேசியை முறைத்தான். ‘இப்ப பேசமுடியாது… ஸாரி..’ எனப் பதில் அனுப்பியவள் அதன்பிறகு உரையாடலைத் தொடரவில்லை. வெறுமையிலும் ஏமாற்றத்திலும் புரண்டு படுத்தவனுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. மீண்டும் அவளது புகைப்படத்தைப் பார்க்கலாமென அலைபேசியை எடுத்தபோது அந்தப் படம் அழிக்கப்பட்டிருந்தது. அவன் அலைபேசியைத் தலையணைக்குள் எறிந்துவிட்டுப் படுக்கையிலிருந்து எழுந்துகொண்டான். ஜன்னலுக்கு வெளியே இருள் அடர்த்தியாக வீதியை ஆக்கிரமித்திருந்தது. அதிகாலை கண் விழித்தபோது கை தானாக அலைபேசியைத் தேடி எடுத்தபோது ‘ஸாரி’ என அவளிடமிருந்து செய்தி வந்திருந்தது. அதற்குப் பதில் அளிக்கவே கூடாதென்கிற உறுதியோடு தனது அன்றாட வேலைகளைக் கவனிக்கச் சென்றான். ஒரு மணி நேரத்திற்குப் பின் ‘கோவமா?’ என அடுத்த செய்தி வந்தது. அதனையும் பொருட்படுத்தாமல் அவன் செய்தி சேகரிக்க மருத்துவமனைக்கும் பின் காவல் நிலையத்திற்கும் சென்றான். அவளிடமிருந்து வெவ்வேறு உடைகளில் புகைப்படங்கள் வந்திருந்தன. அவன் எதற்கும் பதிலளிக்கவில்லை. மதிய உணவிற்காக வீடு திரும்பியபோது உள்ளாடை மட்டுமே அணிந்து புகைப்படமொன்றை அவனுக்கு அனுப்பியிருந்தாள். அதைப் பார்த்ததும் பரவசமானவன் கட்டுப்படுத்த முடியாமல் அவசரமாக அறைக்குள் சென்று கதவைச் சாத்தினான். அந்தப் புகைப்படத்திற்கு ஆட்டின் போட்ட அடுத்த நொடி மீண்டும் அது அழிக்கப்பட்டது… அவன் எரிச்சலில் ‘ங்கோத்தா உனக்கு வெளயாட்டா இருக்கா?’ என டைப் செய்து அனுப்ப, அவளிடமிருந்து கால் வந்தது. அவசரமாக எடுத்தான். குறைவான வெளிச்சத்திற்கு நடுவே உடல் முழுக்கப் போர்வையால் மூடியிருந்தவள் இவனைப் பார்த்து வெட்கத்தோடு சிரித்தாள். அவன் அவசரமாக தனது உடைகளைக் களைந்தான். உள்ளாடையோடு நின்றவனைப் பார்த்து வெட்கத்தோடு கண்ணை மூடிக் கொண்டாள். ‘கண்ண வேணா மூடிக்கோடி மத்தத எல்லாம் தொறந்து காட்டு..’ எனச் சிரித்தான். ‘ச்சீ என்ன இவ்ளோ அசிங்கமா பேசறீங்க..?’ எனப் பொய்யாகக் கோபப்பட்டாள். ‘ஓ அசிங்கமா…? ஏன் நல்லா இல்லயா? இண்ட்ரஸ்ட் இல்லாமயா எங்கிட்ட பேசிட்டு இருக்க…?’ என அவளைச் சீண்டினான். ’அதெல்லாம் ஒன்னுமில்ல.. ஒங்ககிட்ட பேசணும்னு தோணுச்சு. அவ்ளோதான். இதெல்லாம் நீங்க தூண்டி விட்டதால நடந்துடுச்சு…’ என அப்பாவியாகச் சொன்னாள். ‘ஆமாடி ஒனக்கு ஒன்னும் தெரியாது பாரு… சரி பெட்ஷீட்ட கொஞ்சம் ரிமூவ் பன்றியா…’ என வழிந்தான். ‘ச்சீ ச்சீ.. நான் பண்ணமாட்டேன்..’ என அடம் பிடித்தாள். அவன் பொய்யான கோபத்தோடு அவளை முறைத்தான். ‘பெரிய ரிப்போர்ட்டர் உங்களுக்கு ஆள் இல்லாம இருக்குமா? எங்கிட்ட வழிஞ்சுட்டு இருக்கீங்க…’ எனச் சீண்டினாள். ‘என்னதான் வீட்டு மாங்கா இருந்தாலும் திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகம் இல்லயா… அதான்…’ எனச் சிரித்தான். ‘நீங்க எந்த மாங்காவச் சொல்றீங்க…?’ எனக் கேலியாகக் கேட்டாள். ‘அதான் தெரியுதுல்ல.. அப்பறம் என்ன கேக்கற… என்னய டென்ஷன் பண்ணாத… சீக்ரமா..’ என அவசரப்படுத்தினான்… மின்னல் வேகத்தில் போர்வையை விலக்கிவிட்டு மீண்டும் மூடிக் கொண்டாள். ஒரு நொடிக்கும் குறைவான அவகாசத்தில் பார்த்த அந்த உடலின் நிர்வாணம் அவனைப் பித்து கொள்ளச் செய்தது. ‘ஏய் இன்னும் ஒரு தடவ நல்லாக் காட்டுடி… ப்ளீஸ் ப்ளீஸ்…’ என மன்றாடினான்.. ‘நோ… என்னால முடியாது… வேணும்னா நேர்ல பாத்துக்கங்க..’ எனச் சொல்லிவிட்டு அவள் இணைப்பைத் துண்டித்துவிட்டாள். கையிலிருந்த அலைபேசி நடுங்கியது. சமநிலை குலைந்தவனாய் உடல் முழுக்க மயிர் கூச்செரிந்து நின்றான். அந்த உடலைக் கட்டியாள வேண்டும். ஒவ்வொரு துளியையும் அள்ளிப் பருகவேண்டுமெனத் தாபமெடுத்தபோது அவளது முகம் தெரியாத காதலனின் மீது காழ்ப்பும் வெறுப்பும் வந்தது. வெக்கையில் உடல் வியர்த்துக் கொட்ட, அவளது மற்ற புகைப்படங்களை எடுத்துப் பார்த்தான். அவளைச் சந்திப்பதையும் அவளோடு உறவுகொள்வதையும் தன்னால் தள்ளிப்போட முடியாதென உணர்ந்தவன் ‘எப்போ மீட் பண்ணலாம்?’ என அவளிடம் கேட்டான். ‘உங்க விருப்பம்….’ என அவளிடமிருந்து பதில் வந்தது. அவசரமாகச் செய்து முடிக்கும் காரியமில்லை. அவளோடு முழுமையாக நேரம் செலவிட வேண்டுமென நினைத்தவன் அலுவலகத்தில் பேசி இரண்டு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டான். வீட்டில் பெற்றோர்களிடம் ஒரு செய்தி சேகரிக்க வேண்டி நாளை காலை வெளியூர் செல்கிறேன் என்று சொல்லிவிட்டான். ‘நாளைக்கு மீட் பண்ணுவமா?’ என அவளிடம் கேட்க, அவள் மறுக்காமல் சம்மதித்தாள். வெளியூர் அழைத்துச் செல்லும் முடிவில் இருந்தவனிடம் ‘எங்கயும் போ வேணாம் என் வீட்டுக்கே வாங்க. நான் மட்டுந்தான் இருக்கேன்.’ எனச் சிரித்தபடி பதிலளித்தாள். வீட்டுக்கா? எனத் தயக்கத்தோடு அவன் கேட்க, ‘பயப்படாதிங்க… இங்க நான் மட்டுந்தான் இருக்கேன். எங்கூட வேற யாருமில்ல.’ என்றாள். ‘இல்ல… வேற யாருக்காச்சும் தெரிஞ்சா தப்பாயிருமே…’ ஆசையும் குழப்பமும் அவனை அலைக்கழித்தன. ‘ரிஸ்க் எடுக்காம எஞ்சாய் பண்ணணும்னா எப்பிடி ஸார்…? இஷ்டம்னா வாங்க… இல்லன்னா விடுங்க… என்னால வெளிய எங்கயும் வர முடியாது…’ எனக் கறாராகச் சொல்லிவிட்டாள். இதில் யோசிக்க ஒன்றுமில்லையென முடிவெடுத்தவன் வீட்டிற்கு வர ஒப்புக்கொண்டான். இரண்டு நாட்களுக்குத் தேவையான மது போத்தல்களை வாங்கிச் சேமித்துக் கொண்டவனுக்கு இரவு உறக்கம் பிடிக்கவில்லை. இந்த இரண்டு நாட்களில் நடந்த எதையும் அவனால் நம்பமுடியவில்லை. யாரிவள்? திடீரென இவ்வளவு நடந்துவிட்டதே… பெண்ணுடலுக்காக எத்தனையோ நாட்கள் ஏங்கித் தவித்தபோது இப்படி ஒருத்தி கிடைக்கவில்லையே எனத் தன் மீது கழிவிறக்கம் கொண்டான். இன்னொரு புறம் பெண்கள் இத்தனை எளிதில் சோரம் போகக் கூடியவர்களா என வியப்பாகவும் இருந்தது. தனக்கு வேண்டுமானால் இது முதல் முறையாக இருக்கலாம். அவள் கையாளுவதைப் பார்க்கையில் அப்படி இருக்க வாய்ப்பில்லையெனச் சமாதானம் சொல்லிக் கொண்டான். உறங்க நினைத்துக் கண் மூடிய போதெல்லாம் அந்தத் திரண்ட மார்புகள் முன்னால் வந்து தொந்தரவு செய்தன. உடல் சூடு குறையாமல் கட்டிலில் புரண்டவன் அதிகாலையிலேயே வீட்டிலிருந்து கிளம்பிவிட்டான். அவள் அனுப்பியிருந்த முகவரி அவனது வீட்டிலிருந்து அரை மணி நேரப் பயணத் தூரத்திலிருந்தது. திருச்சியிலிருந்து குளித்தலை செல்லும் முக்கியச் சாலையிலிருந்து பிரிந்து குளுமணி செல்லும் சிறிய கிராமத்துச் சாலை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்வெளிகள். இந்தப் புதிய முகவரிக்கு வந்து சில நாட்கள்தான் ஆனதென்றாள். ஊருக்கு வெளியே இருந்த புதிய வீடு. தனித்திருக்கும் அச்சம் இல்லாமல் உற்சாகமாக இருந்தாள். நன்கு அறிமுகமானவனை வரவேற்பது போல் வரவேற்றவள் அவனுக்குத் தேநீர் கொடுத்தாள். நிதானமாக வீட்டைக் கவனித்தான். திருத்தமான வீடு. தனது கணவரோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள். குழந்தைகளோடு இருந்த புகைப்படங்களைப் பார்த்தபோதுதான் அந்த வீட்டில் குழந்தைகள் இருப்பதற்கான தடயங்களே இல்லை என்பதைத் தெரிந்துகொண்டான். ‘உன்னோட பசங்க எங்க போயிட்டாங்க…?’ தயக்கத்தோடு கேட்டான். ‘மாமனார் மாமியார் வீட்டுல…’ எனச் சிரித்துவிட்டு, ‘ஒழுக்கம் கெட்ட பொம்பளகிட்ட புள்ளைங்க வளந்தா அதுங்களும் கெட்டுப் போயிருமாம்.’ என ஏமாற்றத்தோடு சொன்னவளை எதிர்கொள்ள முடியாமல் தலையைக் குனிந்துகொண்டான். ‘நீங்க ரெஸ்ட் எடுங்க… இட்லியும் குடல் குழம்பும் செஞ்சுட்டு இருக்கேன். கொஞ்ச நேரத்துல சாப்புடலாம்…’ எனச் சொல்லிவிட்டு சமையலறை நோக்கிச் சென்றாள். அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவசரமாகப் பின்னால் சென்று அவளை அணைத்தான். கழுத்தில் கடித்தவனை விலக்கியவள் ‘எதுக்கு இவ்ளோ அவசரம்?… இங்கதான இருக்கப் போற… பொறுமையா இரு…’ எனச் சிரித்தாள். மீண்டும் அவளது கழுத்தில் கடித்துவிட்டுக் கண்களில் காமம் மிளிர அவன் வெளியே வந்தான். உடை மாற்றிக் கொண்டு வந்தபோது அந்த வீடு அவனுக்குப் பழகியிருந்தது. தனது பையிலிருந்து மதுக்குப்பியை எடுத்தவன் அவளைத் தேடி வந்தான். ‘ நீ குடிப்பியா?’ எனக் கேட்டான்… ‘இல்ல நீங்க குடிங்க..’ எனச் சொல்லிவிட்டு தம்ளரை எடுத்துக் கொடுத்தாள். அவன் சமயலறை மேசையில் ஏறி அமர்ந்து கொண்டு மதுவை ஊற்றி நிதானமாகக் குடித்தான். கொதிக்கும் குடல் கறியின் வாசனையும் அவளது வியர்வை வாசனையும் அவனை அதீதமாய்க் கிளர்த்த அவளுடலைச் சீண்டியும் வருடியும் விளையாடினான். அவளது இதழ்களை வருடினான். அவள் பொய்யாகக் கோபப்பட்டாள். வெட்கப்பட்டாள். அந்த விளையாட்டுப் பிடித்துப் போக அவளுடலை உரசியபடியே முத்தமிட்டான்… ‘கொஞ்ச நேரம் சும்மா இரேன்…’ என்றவளை மேற்கொண்டு பேசவிடாமல் இறுக்கி அணைத்து ஆழமாய் முத்தமிட்டான். அவள் தன்னை முழுமையாக அவனிடம் ஒப்புக் கொடுத்தாள். நீண்ட காத்திருப்பில் அவளுடலை நெருங்கிய சில நிமிடங்களிலேயே உச்சம் பெற்று அவனது லுங்கி ஈரமானது. ஏமாற்றத்தோடு அவன் விலக அவள் சத்தமாகச் சிரித்தாள். ‘போதுமா. போ … போயி வாஷ் பண்ணிட்டு உக்காரு. சாப்டலாம்…’ என அன்பாகச் சொன்னாள். அவன் உடலைச் சுத்தப்படுத்திக் கொண்டு மீண்டும் மதுவருந்தினான். வெக்கை குறைந்ததில் உடல் லேசாகியிருந்தது. உணவைப் பரிமாறியவளிடம் உரையாட விரும்பினான். மதுவின் அடர்த்தி உடல் முழுக்கப் பரவியிருந்ததால் உணவின் காரம் இதமாக இருந்தது. எங்கிட்ட ஏதோ பேசணும் பேசணும்னு சொன்னியே… என்ன பேசணும்..’ சாப்பிட்டபடியே கேட்டான். ‘ம்க்கும் நீ எங்க என்னய பேச விட்ட… சாப்டு அப்றம் பேசிக்கலாம்..’ என வெட்கப்பட்டாள். அவனும் சிரித்தபடியே மதுவையும் உணவையும் ஒருசேர எடுத்துக் கொண்டான். அந்தக் காலை நேரம் வசீகரமானதாக மாறியிருந்தது. தொலைக்காட்சியில் ஒலித்த பாடலை ரசித்தபடியே படுக்கையில் சாய்ந்து அமர்ந்தான். அவள் உடைமாற்றிக் கொண்டு சிரித்த முகத்தோடு வந்தாள். ஜன்னல்களின் வழியாய் வந்த மெல்லிய வெளிச்சம் அறையில் நிரம்பியிருக்க, அவனருகில் அமர்ந்தாள். இந்தமுறை அவளை நிதானமாகக் கையாண்டான். மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துழைத்தவள் அவனது உடைகளைக் களைந்து தூண்டினாள். அவள் வேகத்திற்குத் தன்னை ஒப்புக் கொடுத்தவனின் குறியை இறுகப் பற்றித் திருகினாள். அவன் வலியில் ‘ஏய் என்னடி செய்ற… வலிக்கிது.. விடு…’ எனக் கத்தினான்.. ‘நான் கள்ளக் காதல் பண்ணேன்னு உனக்கு யார்ரா சொன்னது தாயோலி…’ எனக் கத்தியவள் அவனது குறியை முன்னைவிடவும் இறுக்கமாகத் திருகினாள். ‘அய்யோ வலிக்கிது… வலிக்கிது விட்று.. என்னய… போலிஸ்காரந்தான் சொன்னான்…’ எனக் கதறினான். ஓங்கி அவனது முகத்தில் குத்தினாள். ‘போலிஸ்காரன் சொன்னா நீ எழுதுவியா? ஒங்கொம்மாள ஒருத்தன் தேவ்டியான்னு சொன்னா நீ என்ன ஏதுன்னு விசாரிக்காம எழுதுவியாடா தேவ்டியா பயலே…’ மீண்டும் மீண்டும் அவள் தாக்கியதில் அவன் நிலைகுலைந்து போனான். போதையில் உடல் தடுமாற தனது உடைகளைத் தேடினான். அவள் அடிப்பதை நிறுத்தவில்லை. ‘அய்யோ என்னய மன்னிசிரு.. மன்னிச்சிரு…’ என கைகளை உயர்த்திக் கெஞ்சினான். ‘பத்திரிகக்காரன் ஒரு செய்திப் போடறதுக்கு முன்ன எது நெசம் எது பொய்யின்னு நாலு பேருகிட்ட விசாரிக்கணும். ஒருத்தன் சொல்ற பொய்ய விட அரகுறையா தெரிஞ்சிக்கிட்ட உண்ம எவ்ளோ ஆபத்துன்னு தெரியுமாடா ஒனக்கு. சொல்லுடா…’ அவனுக்கு வலியிலும் ஆற்றாமையிலும் கோபம் வந்தது. ‘யேய் நான் மட்டுமாடி செய்தி போட்டேன்.. எல்லாருந்தான் போட்டானுக… போயி அவனுகள நொட்டு… எனக் கத்தினான். மீண்டும் ஓங்கி அறைந்தவள் ‘நீதாண்டா ஆரம்பிச்சு வெச்ச… இது நியூஸா மாறி அதிகமா பரவுனதுக்கு நீதான் காரணம். உண்மை என்னனு எல்லாருக்கும் தெரியறதுக்கு முன்னயே கள்ளக்காதல்னு எழுதுனவன் நீதான்… நீ சொன்னத வெச்சுதான் எல்லாரும் கத சொல்லிட்டானுக… என்னயத் தேவ்டியாவா ஆக்குனது இந்தக் கை தான… எனக் கேட்டபடியே அதனைக் கட்டிலில் வைத்து மிதித்தாள். அவன் வேதனையில் அலறினான். ‘என்னய மன்னிச்சுரு… மன்னிச்சிரு.. வலிக்கிது தீபா விட்று…’ எனக் கெஞ்சியவனை முறைத்தாள். ‘ங்கோத்தா நான் என்ன உன் பொண்டாட்டியா தீபான்னு பேரச் சொல்ற.. அக்கான்னு சொல்ற…’ எனக் கத்தினாள். அவன் பேச்சற்று இறுகிப்போனான். வலியில் கண்ணீர் வழிந்தது. ஆத்திரத்தில் மூச்சு வாங்கியபடியே முகத்திலும் கழுத்திலுமிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டவளுக்கு அழுகை வந்தது. ‘என் பேரக் கெடுத்து ஜெயிலுக்குப் போக வெச்சு என் பிள்ளைகளும் என்னய விட்டுப் போயிருச்சுங்க… ஒரு நாளைக்கு எத்தன பேரு ஃபோன் பண்ணி என்னய படுக்கக் கூப்டறானுக தெரியுமா? எல்லாம் ஒன்னால…. முன்னப் பின்ன தெரியாத ஒருத்தரப் பத்தி எழுதறமேன்னு பயம் இல்லாமப் போச்சுல்லா ஒங்களுக்கெல்லாம்… நான் ஒங்களுக்கு என்னடா பாவம் பண்ணேன்…’ திரும்பி அவனை முறைத்தாள். அவன் இன்னும் அச்சம் விலகாமல் பார்த்துக் கொண்டிருந்தான். ‘என் புருஷன் கேம் அடிக்ட்… ஆன் லைன் கேம்ல நிறைய காச விட்டு கடன் ஆகிட்டான். என் தாலி முதக்கொண்டு எல்லாத்தையும் வித்துக் குடுத்தேன். நாளைக்குத் திருந்திருவேன்னு சொல்லி திரும்பப் போயி விளையாடி தோத்துட்டு வருவான்… இருந்த வீட்டையும் கடன்காரனுக்கு வித்த அப்பறம் யாருக்கும் பதில் சொல்ல முடியாதேன்னு பயந்து செத்துப் போனான் அந்த நாயி…. இந்த உண்மைய நான் வெளிய சொல்றதுக்குள்ள நீ என்னய தேவ்டியாவா ஆக்கிட்ட… ம்ம்…’ எனக் கத்தியவள் மீண்டும் அவனை அடித்தாள். அவசரமாகக் கையெடுத்துக் கும்பிட்டவன் ‘நான் வேணா மறுப்புச் செய்தி போட்டுடறேன்…’என மன்றாடினான். ‘போடா மயிரே… தெனம் எவன் குடி கெடும்… எந்தப் பொம்பள எவனக் கூட்டிட்டு ஓடினா, எவன் தாலிய எவன் அறுத்தான்னு தெரிஞ்சுக்க வெறி புடிச்சு அலையிற கூட்டம் நீ சொல்ற மன்னிப்பக் கவனிக்கும்னு நெனைக்கிறியா? ம்ஹூம்… எல்லாருக்கும் அன்னிக்கி ஜாலி பண்ண ஒரு கிசு கிசு வேணும்… ஊரான் வீட்டுப் பிரச்சனைன்னா ஓநாய்க்கு எச்சில் வடியற மாதிரி வந்துடறீங்கள் ல….’ எனக் கேட்டபடியே அவனது உடைகளைத் தூக்கி முகத்தில் அடித்தாள். அவன் பதற்றத்தோடு அவளைப் பார்த்தான். ‘போ… நீ செஞ்ச சில்றத்தனத்தையும் வெக்கமே இல்லாம எங்கூட அத்துமீறிப் பேசுனதையும் இப்ப ஊரு உலகமே பாத்திருச்சு…’ என்று சிரித்தவளை அதிர்ச்சியோடு பார்த்தான்… ‘என்னடா பாக்கற… நீ இந்த வீட்டுக்குள்ள வந்ததுல இருந்து இவ்ளோ நேரம் நடந்த அவ்வளவையும் ஃபேஸ்புக் ல லைவ் போட்றுக்கேன்… இன்னும் ஓடிட்டுதான் இருக்கு. தெனம் ஒரு ஹாட் நியூஸுக்காக நாய் மாதிரி அலையிவ ல… இன்னிக்கி நீதான் ஹாட் நீயூஸ்… போ உன் கம்பெனில உனக்கு மெடல் குடுப்பாங்க… வெளிய போடா மயிரே… சத்திய மூர்த்தி… **** மூர்த்தின்னு… பேரப் பாரு…’ எனக் கத்தியவளை எதிர்கொள்ளத் திராணியின்றி அவசரமாக உடை மாற்றியவன் தனது அலைபேசியைத் தேடி எடுத்தான். அவனுக்குத் தெரிந்தவர்களும் நண்பர்களுமாய் நிறைய அழைப்புகள் வந்திருந்தன. ஆத்திரத்தில் அவளை ஏதாவது செய்ய வேண்டுமென வெறி வந்தது. வேகமாக நெருங்கியவனை ஓங்கி மிதித்தாள். அவன் கதவுக்கு வெளியே தடுமாறி விழுந்தான். காலைப் பிடித்து இழுத்து வந்தவள் வீட்டிற்கு வெளியே போட்டாள். வெயில் உக்கிரமாய் இருந்தது. தடுமாறியபடியே எழுந்து தனது இரு சக்கர வாகனத்தை உதைத்தான். அவனுக்குப் பின்னால் அவள் கதவை அடித்துச் சாத்தும் சத்தம் மூர்க்கமாய் எதிரொலித்தது. https://thadari.com/fall-short-story-lakshmi-saravanakumar/
  3. Today
  4. இயற்கை அனர்த்தத்தை காரணமாக்கி ஒரு இடத்தில் இரு நூற்றாண்டுகளாக வாழ்ந்த மக்களை வெளியேற்றி பின்னர் அங்கே ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப இங்கேயிருந்து அங்கே மக்களைக் குடியேற்றி எல்லா மக்களின் மனதுகளையும் குழப்பி சலுகைகளைக் கொடுத்து மனதுகளை மாற்றி இங்கே பார்..... அங்கே பார்..... தெரிகின்றதா ஒளி வட்டம்..... என்று ஆர்ப்பரித்து......... சாமிப்பிள்ளையை சமி பிலே.... ஆக்கி மயில்வாகனத்தை மல்லி வானே.... யாக்கி இது புத்தன் இயேசு பிறந்த பூமி என்று மகாவம்சத்தையே மாற்றி..... இப்படியே மாற்றத்தையே வேண்டும் வேண்டும் என..... மக்களை ஏய்ப்பதே இந்த அரசியல்வாதிகளின் தொழில் . அதற்கு வக்காலத்து வேறை....... 😂
  5. அன்றைய ஜெ. வி. பி. நீதிமன்றம் சென்று சாதித்தது. அந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி சில்வா கூறியிருந்தார், நீதிமன்றம் சென்று இதற்கு எதிராக வாதாடி தீர்ப்பை மாற்றலாமென்று.ஆனால் நம்மவர் யாரும் முன்வரவில்லை. வேண்டுமென்றே இருபகுதியும் நடந்து கொண்டன. சட்ட மேதையும் தூங்கிவிட்டார் பாருங்கோ. நாம்தான் பேரம் பேசும் சக்தி, ஏகோபித்த கட்சி என்று கூறி வாக்கு மட்டும் சேகரித்தார்கள்.
  6. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  7. தமிழ் நாடு அரசால் இந்த விடயத்தில் எந்த அழுத்தத்தையும் கொடுக்கும் அரசியல் சூழ்நிலை இப்போது இல்லை என்பதும், அதற்கான அரசியல் அதிகாரம் தமிழ்நாட்டு அரசுக்கு இல்லை என்பதும், அவ்வாறு அழுத்தம் கொடுப்பது இருக்கும் பிரச்சனைகளை இன்னும் சிக்கலாக்குமே தவிர உதவப் போவதில்லை என்பதும் பட்டறிவின் மூலம் ஸடாலினுக்கு நன்கு தெரிந்திருக்கும். ஆனால், இந்த லூசுகள் வந்து கேட்பதால் ஏதோ லூசுகளை திருப்திப்படுத்த அப்படி கூறியிருப்பார் என்று நினைகிறேன். நிச்சயமாக அப்படி அழுத்தம் கொடுக்கும் மகா முட்டாள்தனத்தை அவர் செய்ய மாட்டார் என்பது தெரிந்த விடயம். அரை லூசுகள் மட்டுமே அவர் அப்படி அழுத்தம் கொடுப்பார் என்பதை நம்புவார்கள்.
  8. சந்திச்சதோட மான் ஊறுகாய் ஏற்றுமதிக்கு ஒரு ஒப்பந்தம் செய்திட்டு வந்தால் நல்ல காசு சம்பாதிக்கலாம். நாலு பேருக்கு வேலைவாய்ப்பு குடுத்தாயும் இருக்கும்.😂
  9. குடும்பத்துக்குள்ளேயே ஏற்றத்தாழ்வு, தராதரம் பார்ப்பவர்கள் நிறைந்த மாவட்டம் யாழ்ப்பாண மாவட்டம். இதற்குள்தான் நானும் பிறந்து வளர்ந்தேன். குறியேறிகளுக்கு தேனீர் கொடுக்கவும் சிரட்டையை நாடுதே என்மனம்.🧐
  10. இத்தனை காலம் இந்தியாவை புறக்கணிப்பதாக சொல்லி விட்டு… எடுத்த எடுப்பில் பிஜேபியை சந்திக்க முடியாது… ஆகவே இப்போதைக்கு பிஜேபி பி டீமை சந்தித்துள்ளார்கள். தமிழ் நாட்டினூடாக அமித்ஷாவை நெருங்க மிக பொருத்தமான ஆள்தான் சீமான்.
  11. ஒரு காலத்தில் சிங்களவன் ஒட்டுமொத்தமாக ஆளில்லா காணிகள் எல்லாம் “புனித பூமி” என அறிவிப்பான்…அப்ப குய்யோ, முறையோ என கத்துவார்கள்.
  12. இருந்தாலும் வேறுபாடு உள்ளது சுமந்திரன் இலங்கையில் இருப்பவர் மலையக தமிழர்களை யாழ்பாணம் வந்து குடியேறுங்கோ என்று சொன்னார். இவர்கள் வெளிநாட்டில் இருப்பவர்கள் யாழ்பாணத்து காணிகளின் புனிதம் கெட்டுவிடும் என்று அதை விரும்பவில்லை .
  13. சந்தர்ப்பம் கூறுக: இதன் மிக முக்கிய ஏற்பாடொன்று இலங்கை நீதிமன்றத்தில் யாரால், எச்சந்தர்பத்தில் காயடிக்கப்பட்டது? (புள்ளிகள் யாரால் - 1 புல்டோ எச்சந்தர்பத்தில் - 1 போண்டா).
  14. உண்மை தான், வெளிநாட்டு ராஜதந்திரிகள் அனைவருக்கும் செருப்படி கொடுத்தால் தான் ஈழத்தமிழருக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.😂😂😂 இது தெரியாமல் 75 வருடத்தை வீணாக்கி விட்டோம். சித்திரமாக வரைந்து தமிழ் மக்கள் அனைவரையும் சென்றடைய வைக்க வேண்டிய அற்புதமான கருத்து.
  15. முக்கியமான விடயம் ஒன்று… 2009 முதல் 16 வருடமாக இந்தியாவை “செத்தாலும் வரமாட்டேன், செத்த வீட்டுக்கும் வரமாட்டேன்” என சொல்லி புறக்கணித்தவர் பொன்னர். இப்ப “இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டில் என்ன” என்ற நிலைக்கு தமிழ் தேசிய அரசியல் வந்த பின், திடீர் நிலைமாற்றம். ஏன் நிலைமாற்றம் என்பதற்கோ, முந்திய நிலைப்பாட்டுக்கு மன்னிப்போ எதுவும் இல்லை. பாராட்டகூடிய விடயம் - அனைவரையும் சந்தித்தது. பனையூர் ஜமீனை சந்திக்க இவர்கள் விரும்பவில்லையா? அவர் விரும்பவில்லையா தெரியவில்லை.
  16. கோஷான்? சாத்ஸ், உங்களுக்கு ஆக்டோபர் 1987 - மே 2009, நடுவில கொஞ்சம் பக்கத்தை காணோமா?
  17. சுமன் லவ்வர்ஸுக்கு ஒரு சிறுகுறிப்பு. சுமன் வானத்தில் இருந்து வந்தவர் அல்ல. உங்களவர்தான். உங்களுக்குரிய அத்தனை “சிறப்பு குணாதிசயங்களையும்” ஒருங்கே சேர்த்து அமைக்கப்பட்ட மாதிரிதான் சுமன். சுமனை நீங்கள் இனம் கண்டு வெறுப்பது போலத்தான் இலங்கையில் உள்ள ஏனையவர்கள் உங்களை வெறுப்பதும்.
  18. என்ன இது ஏலும் எண்டா எண்ட ஏரியாவுக்கு வா என்ற வடிவேல் ஜோக் அடிக்கிறீர்கள். எவனும் வரமாட்டான் - ஏன் என்றால் உங்கள் “சுரண்டல் புத்தி” பற்றியும், தாகத்துக்கு தண்ணீர் கேட்கும் வெளி மாவட்ட ஆட்களுக்கு ஜாம் போத்தலில் தண்ணி கொடுக்கும் உங்கள் தீண்டாமை பற்றியும் அவர்களுக்கு பாட்டன், முப்பாட்டன் காலத்தில் இருந்து வடிவாக தெரியும். இந்த மன , செயல் அழுக்குகளை மாற்றி கொண்டு, அவர்களை எம் சொந்தங்கள் என உணர்ந்து அழையுங்கள் என்பதே நான் சொல்வது. காந்தியம் டேவிட் ஐயா, இன்னும் சிலர் போல், குப்பையில் பூத்த குண்டுமணிகள் இதை முன்பே செய்துள்ளனர். நானோ, மனோவோ, சுமனோ இதை புதிதாக கண்டுபிடிக்கவில்லை.
  19. நிழலி அவர்கள் என்றும் இளமையாக இருந்து யாழுக்கு நிழல்தர வேண்டுகிறேன்.🙏
  20. ஏன் அங்கே இருக்க முடியவில்லை? பிரதான காரணங்களில் ஒன்று, எனக் தேவையான வேதனத்தை, எனது துறையில் தரும் வேலை அங்கே இல்லை. நீங்கள் நினைப்பது போல் கொலிடே போய் போத்தல் தண்ணீ குடிக்கும் “கனடா” - இல்லை நான். ஒவ்வொரு முறை நான் போய் வந்து, கண்டு, கேட்டு, உய்த்து சொல்லும் விடயங்கள் பல அடுத்து நிதர்சனமாவதை யாழ்களம் அறியும். உங்களை போல அனுரகாவடிகள் பல யாழில் உருவாகிவிட்டதை கண்டு கொண்டு, ஜேவிபிக்கு யாழில் ஆதரவு பெருகுகிறது என்பதை கடந்த தேர்தலுக்கு ஒரு வருடம் முன்பே யாழில் பதிவு செய்தேன். ஆகவே கனடாவில் இருந்து கற்பனையில் கிறுக்கும் உங்களை விட எனக்கு நாட்டின் நிலமை சற்று அதிகமாக புரியும் என்பது என் தாழ்மையான கருத்து.
  21. வீரனாக மாறிய பேடி மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா தமிழாக்கம் : கார்த்திக் பாண்டவர்கள் மத்ஸய தேசத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தபொழுது அந்த நாட்டின் தளபதியான கீசகன் மாறுவேடத்தில் இருந்த பீமனால் கொல்லப்பட்டான். இது கௌரவர்களுக்கு சந்தேகத்தை உண்டாக்கியது. ஏனென்றால், கீசகனை கொல்வதற்கு பீமனை போன்ற வேறு பலசாலிகள் யாருமில்லை. விராதன், எப்பொழுதும் கௌரவர்களுக்கு எதிராக செயல்பட்டுவந்தான். இந்த நேரத்தில் கீசகனும் கொல்லப்பட்டதால், அத்தேசத்தை தாக்க இதுவே கௌரவர்கள் முடிவு செய்தனர். எனவே, அவர்களின் துணைவனான சுசர்மனை மத்சய தேசத்தின் தெற்கு எல்லையை தாக்க சொன்னார்கள். படைகள் அனைத்தும் அவனை எதிர்க்க தெற்கு எல்லைக்கு செல்லும் நேரத்தில் வடக்கு எல்லையை கௌரவர்கள் தாக்கலாம் என திட்டம் வகுத்தனர். பாண்டவர்கள் அங்கில்லை என்றாலும் மத்ஸய தேசத்தின் கால்நடைகளையாவது கவர்ந்து வரலாம் என்பது அவர்களின் எண்ணம். சுசர்மனின் படை தாக்க வருகிறது என்னும் செய்தி வந்தவுடன் விராதன் என்ன செய்வது என புரியாமல் தவித்தான். அந்த நேரத்தில், அவன் அவையில் மாறுவேடத்தில் இருந்த யுதிஷ்டிரன் அவனிடம் “அரசே! நான் ஞானியாக இருந்தாலும் போர்க்கலையில் தேர்ச்சி பெற்றவன். மேலும் , சமையல்காரனான பல்லவனும், குதிரைகளை பராமரிக்கும் தந்த்ரிபாலா மற்றும் கால்நடைகளை பராமரிக்கும் தர்மகிரந்தியும் போரில் வல்லவர்களே. நாம் அனைவரும் இணைந்து எதிரிப்படைகளை முறியடிப்போம்!” என தைரியம் கூறினான். உடனடியாக படைகள் அணிவகுக்கப்பட்டு விராதனுடன் மாறுவேடத்தில் இருந்த நான்கு பாண்டவர்களும் செல்ல, தெற்கு எல்லையில் நடந்த யுத்தத்தில் சுசர்மனின் படை துவம்சிக்கப்பட்டது. அதே சமயத்தில், வடக்கு எல்லையில் கௌரவர்கள் தாக்கத் துவங்கினர். இளவரசனான உத்திரகுமாரனின் மேல் அதிகபட்ச எதிர்பார்ப்பு இருந்தது. அவனும் அந்தப்புர பெண்களின் முன்னே தம்பட்டம் அடித்துக் கொண்டு போருக்கு கிளம்பினான். அவனை வழிநடத்த சரியான ஆள் தேவை என உணர்ந்த திரௌபதி அவனது சகோதரியான உத்திரகுமாரியிடம் “இளவரசி! நாட்டிய பெண்மணியான பிருகன்னளை சிறந்த தேரோட்டி எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். இளவரசனுக்கு அவள் உதவியாக இருப்பாள். அவளை அழைத்து செல்ல சொல்லுங்கள்” எனக் கேட்டுக் கொண்டாள். துவக்கத்தில் பெருமை பேசிக்கொண்டு வந்த உத்திரகுமாரன் நேரம் செல்ல பயம் கொள்ள துவங்கினான். ஒருகட்டத்தில் தேரில் இருந்து குதித்து ஓடத் துவங்கினான். அவனைத் துரத்தி சென்ற பிருகன்னளை அவனை தூக்கி தேரில் போட்டுக் கொண்டு அங்கிருந்த வன்னி மரத்தை நோக்கி தேரை செலுத்தினான். அங்கே, கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு துணிமூட்டையை கீழே இறக்கினான். அதுவரை, அந்த பகுதி மக்கள் அதை பிணம் நினைத்து வந்தனர். ஆனால், தலைமறைவு வாழ்வின் துவக்கத்தில் பாண்டவர்கள் கட்டிவைத்திருந்த ஆயுதங்கள் அவை. அதன்பின் , தாங்கள் யார் என்று விளக்கிய பிருகன்னளையாக இருந்த அர்ஜுனன், காண்டீபத்தை அவன் கையில் கொடுத்து அவனுக்கு வீரமூட்டி போர்க்களம் நோக்கி தேரை செலுத்தினான். போரில் அர்ஜுனன் திறமையாக தேரோட்டிக் கொண்டே உத்திரகுமாரனை வழிநடத்த, இளவரசன் கௌரவர்களை விரட்டி அடித்து அரண்மனை திரும்பினான். https://solvanam.com/2025/08/24/வீரனாக-மாறிய-பேடி/
  22. செயற்கை நுண்ணறிவால் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு – இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை! தொழில்துறை புரட்சியின் போது காணப்பட்டதைப் போலவே, செயற்கை நுண்ணறிவு (AI) பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுவது தொழிலாளர்களை வேலைகளிலிருந்து வெளியேற்றுவதற்கான வாய்ப்பாக அமையும் என்று இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் எச்சரித்துள்ளார். பொருளாதாரம் முழுவதும் செய்கை நுண்ணறிவு பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வரும் நிலையில், தொழிலாளர்களை அதிகளவில் தொழில்நுட்பத்தில் ஈடுபடுத்த உதவுவதற்காக ஐக்கிய இராஜ்ஜியம் செயற்கை நுண்ணறிவு பயிற்சி, கல்வி மற்றும் திறன்களில் முதலீடு செய்யவது அவசியம் என்றும் இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி கூறினார். அந்த அடித்தளங்கள் இல்லாமல் போனால் தொழிலாளர் சந்தை மேலும் துண்டு துண்டாக உடையும் அபாயத்தை எதிர்கொள்ளும் என்றும் அவர் எச்சரித்தார். அண்மைய ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. மேலும் வணிகங்கள் மற்றும் பொதுத்துறையினரால் இது அதிகளவில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் கணினிகள் அதிக அளவிலான தரவை செயலாக்கவும், வடிவங்களை அடையாளம் காணவும், அந்தத் தகவலை என்ன செய்வது என்பது குறித்த விரிவான வழிமுறைகளைப் பின்பற்றவும் அனுமதிக்கிறது. இருப்பினும், இது ஏற்கனவே வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து இங்கிலாந்தில் கவலைகள் அதிகரித்துள்ளன. இந்த வாரம் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள், ஒக்டோபர் மாதத்துடன் முடிவடைந்த கடந்த மூன்று மாதங்களில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் வேலையின்மை விகிதம் 5.1% ஆக உயர்ந்துள்ளதை வெளிக்காட்டியது. இதில் அதிகளவானோர் இளைய தொழிலாளர்கள் ஆவர். ஒக்டோபர் மாதம் வரையிலான கடந்த மூன்று மாதங்களில் 18 முதல் 24 வயதுடைய வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 85,000 அதிகரித்துள்ளது. இது நவம்பர் 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகப்பெரிய வேலையின்மை உயர்வு என்று இங்கிலாந்தின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் (ONS) தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1456759
  23. ஆசான் ஜெயமோகனின் இந்தக் கதையை ஆராய் Gemini AI tool ஐக் கேட்டபோது…. இக்கதையை வாசிப்பின் ருசி குறையாமல் சுருக்கமாகவும், ஒரு இலக்கிய விமர்சகரின் பார்வையிலும் கீழே விவரிக்கிறேன். கதைச்சுருக்கம்: கெய்ஷா கதை ஒரு ஆணின் தனிமையிலிருந்தும், அவன் பெண்கள் மீது கொண்டிருக்கும் கசப்பிலிருந்தும் தொடங்குகிறது. அவனது கடந்தகாலம் தோல்வியுற்ற திருமண வாழ்வாலும், பிரிந்து சென்ற மனைவி மற்றும் குழந்தையாலும் காயம்பட்டிருக்கிறது. அந்த வடுவினால் உண்டான வெறுப்பைத் தணிக்க, அவன் பெண்களை வெறும் உடலாகவும், போகப் பொருளாகவும் மட்டுமே அணுகுகிறான். இந்தச் சூழலில் அவன் 'கெய்ஷா' (ஜப்பானியப் பாரம்பரியத்தில் கலைநயத்துடன் விருந்தோம்பும் பெண்) போன்ற ஒரு பெண்ணைச் சந்திக்கிறான். ஆரம்பத்தில் அவளை ஒரு கேளிக்கைக்கானப் பெண்ணாகவே பார்க்கிறான். ஆனால், அந்த இரவு செல்லச் செல்ல, இருவருக்குள்ளும் இருந்த முகமூடிகள் கழல்கின்றன. அவள் தன் வறுமையின் காரணமாகவே இந்த வேஷத்தை (கெய்ஷா) அணிந்திருப்பதாக ஒப்புக்கொள்கிறாள். அவனும் தன் மனதிலிருக்கும் தீராத கசப்பையும், தனிமையின் வலியையும் அவளிடம் கொட்டுகிறான். இருவரின் காயங்களும் ஒன்றையொன்று ஆறுதல்படுத்துகின்றன. அந்த நெருக்கத்தின் உச்சத்தில், அவன் அவளைத் தன்னுடன் நிரந்தரமாகத் தங்கிவிடுமாறு கெஞ்சுகிறான். அவளும் "மூச்சொலி போல உடன் இருப்பேன்" என்றும் "இறுதிவரை இருப்பேன்" என்றும் வாக்களிக்கிறாள். அவளது அரவணைப்பில், அவன் நெடுநாட்களுக்குப் பிறகு நிம்மதியாக உறங்குகிறான். ஆனால், விடியற்காலையில் விழித்துப் பார்க்கும்போது அவள் அங்கு இல்லை. அந்த அறை, ஒரு பெண் வந்து போனதற்கான எந்தத் தடயமும் இன்றி நேர்த்தியாகச் சுத்தப்படுத்தப்பட்டிருக்கிறது. அவன் மீண்டும் தன் தனிமையில் விடப்படுகிறான். இலக்கிய விமர்சனம் ஜெயமோகனின் 'கெய்ஷா' சிறுகதை, மனித மனதின் 'தேடல்' மற்றும் 'நிழல் நிஜம்' (Illusion vs Reality) ஆகியவற்றுக்கு இடையிலான ஊடாட்டத்தை மிக நுட்பமாகப் பேசுகிறது. 1. முகமூடிகளுக்குப் பின்னால் உள்ள உண்மை: இக்கதையின் மையமே 'வேஷம்'தான். அந்தப் பெண் 'கெய்ஷா' எனும் வேஷமிட்டு வருகிறாள்; அந்த ஆண் 'வெறுப்பு' எனும் வேஷத்தை அணிந்திருக்கிறான். ஒரு புள்ளியில் இருவரின் வேஷங்களும் கலைந்து, நிர்வாணமான மனித ஆன்மாக்களாக அவர்கள் சந்தித்துக்கொள்வதே இக்கதையின் உச்சம். ஜெயமோகன் உரையாடல்கள் மூலம் அந்தக் கணத்தை மிகக் கூர்மையாகச் செதுக்கியிருப்பார். 2. கலையும் வாழ்க்கையும்: ஒரு கெய்ஷாவின் பணி என்பது விருந்தினரை மகிழ்விப்பது மட்டுமல்ல, அவர்கள் விரும்புவதைப்போலவே தன்னை மாற்றிக்கொள்வதும் ஆகும். கதையில் வரும் பெண், அவனுக்குத் தேவையான ஆறுதலையும், "நிரந்தரமாக உடன் இருப்பேன்" என்ற பொய்யான (ஆனால் அந்த நேரத்தில் தேவைப்படுகிற) நம்பிக்கையையும் கொடுக்கிறாள். அவள் சென்ற பிறகு அறையைச் சுத்தப்படுத்திவிட்டுச் செல்வது என்பது, அவள் ஒரு தொழில்முறை கலைஞர் என்பதன் குறியீடு. அவள் அவனது காயத்தை ஆற்ற வந்த ஒரு மருத்துவர் அல்லது கலைஞரே தவிர, வாழ்க்கைத்துணை அல்ல என்பதை அந்த முடிவு உணர்த்துகிறது. 3. முடிவின் மௌனம்: கதையின் மிகச் சிறந்த பகுதி அதன் முடிவுதான். அவள் போன பிறகு ஏற்படும் வெறுமை (Void), அவள் இருக்கும்போது இருந்த நெருக்கத்தை விட அதிக எடையுடனானது. "ஒரு பெண் வந்து போனதற்கான தடயமே இல்லை" என்ற வரி, அந்த இரவு ஒரு கனவோ என்று எண்ண வைக்கிறது. ஆண் எப்போதுமே தற்காலிகமான ஆறுதலை நிரந்தரமான உறவாக மாற்ற முயல்கிறான்; ஆனால் பெண் (இக்கதையில்) யதார்த்தத்தின் பிடியில் நழுவிச் செல்கிறாள். முடிவுரை: 'கெய்ஷா' - தனிமையின் ஆழத்தையும், ஒரு துளி அன்பிற்காக ஏங்கும் மனித மனதின் பலவீனத்தையும் பேசும் ஒரு செறிவான படைப்பு. இது காமக்கதை அல்ல; காமத்தின் வழியாக மனிதன் தேடும் ஆன்ம ஆறுதலின் கதை.
  24. அப்படியே காளிஅம்மாள், சாட்டை துரைமுருகன் புர்க்கா மூடிய வீராங்கனைகள் பாத்திமா பர்ஹானா , தாரிக்கா சல்மானையும் இவர்கள் சந்திக்க வேண்டும்.
  25. சிலுவை இறக்கம்: துயரொழி காவியம் சு. தவச்செல்வன் கதை வழிப் பயணம் கருணாகரன் பிரமாண்டமாகவே விரிந்திருக்கும் இயற்கையின் வினோதங்கள் எல்லையற்றவை. சொல்லி மாளாத அழகுடையவை. பார்த்துத் தீராத அழகொளிர் காட்சி அது. அப்படியான அழகிய – வசீகர இயற்கையின் பின்னணியில் அல்லது அவ்வாறான பேரெழில் இயற்கைக்குள், நாம் பார்த்துக் கொண்டிருக்கப் பகிரங்கமாகவே நிகழ்கின்றது இலங்கையில், மலையக மக்களின் நூற்றாண்டுகளாக நீளும் அவல வாழ்க்கை. இது நாம் பார்த்து வியக்கின்ற அழகுக்கு நேர் மாறான ஒன்று. இந்த மக்களுக்கான அபிவிருத்தி, மக்களின் நலனுக்கும் முன்னேற்றத்துக்கும் எனச் சொல்லப்படும் திட்டங்கள், பெருந்தோட்டத்துறைக்கும் மக்களுக்குமான தனியான அமைச்சு, அந்த அமைச்சின் நடவடிக்கைகள், அதற்கான கட்டமைப்புகள் எனப் பல இருந்தும் மக்களுடைய வாழ்க்கை நூறாண்டுகளாக ஒரே நிலையில்தான் உள்ளது. துயரமும் வலியும் அவலமும் வேதனையும் நிறைந்த இந்த வாழ்க்கையைப் பற்றி, அந்த விதியை மாற்றி எழுத வேண்டும் என்பதைப்பற்றி, நூற்றுக்கும் அதிகமானோரால் பல கோடி சொற்கள் எழுதியாயிற்று. இந்த வாழ்க்கையை மாற்றி எழுதுவதற்கென்று நடத்தப்பட்ட அரசியற் போராட்டங்களும் பல நூறுக்கும் மேலானவை. ஆனாலும், இந்த மக்களுடைய வாழ்க்கை விதி (அமைப்பு) மாறவே இல்லை. இந்த வேதனையும் துயரமும் வலியும் நூற்றாண்டுகளைக் கடந்தவை. அவற்றை ஏற்றுத்தான் அவர்கள் வாழ வேண்டும் என்ற மாதிரியே அனைத்தும் கட்டமைக்கப்பட்டுள்ளன. அல்லது அதற்குள்தான் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து தீர்க்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு ஆட்சி மாற்றங்களின்போதும் கடின உழைப்பாளிகளான இந்த எளிய மக்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதிப் பூக்கள் அத்தனையும் உடனேயே வாடிச் சருகாகி விடுகின்றன. வரலாறு முழுதும் அதீத நம்பிக்கையூட்டல்களால் களைப்படையப்பட்டவர்கள். இவர்களுக்கு முன்னே எத்தனையோ காட்சி மாற்றங்கள், நிறமாற்றங்கள் ஏற்பட்டாலும் ஒரே நாடகமே திரும்பத்திரும்ப நிகழ்கிறது. அதொரு மாபெரும் சிலுவையேற்றம். இந்தத் துயர – அவல – நிலையைக் கதைகதையாக, நூறாண்டாகவே சொல்லத் தொடங்கினர், முதற் தலைமுறைப் படைப்பாளிகள். முதற்தலைமுறை, 19 ஆம் நூற்றாண்டில் வாய்மொழிப் பாடல்களாகத் தொடங்கியது. இன்றைக்கும் அந்தப் பாடல்கள் புழக்கத்தில் உண்டு. ‘படிப்பறியாத மக்கள், தங்களின் கவலைகளை எத்துணை அற்புதமாக வெளிப்படுத்துகிறார்கள் என்பதற்கு நாட்டார் பாடல்கள் மிக முக்கியமான சாட்சியாகும்’ என்று ‘மலையகத் தமிழர் நாட்டுப்புறப்பாடல்கள்’ நூலுக்கு எழுதிய வாழ்த்துரையில் பேராசிரியர் கா. சிவத்தம்பி இதைப்பற்றிக் குறிப்பிடுகிறார். அவர் சொல்வதைப்போலவே அந்தப் பாடல்களும் சாட்சிபூர்வமாக உள்ளன. “மலைநாட்டு மக்களெல்லாம் தங்கமே தங்கம் – நாங்க‌ மாண்டு மடியலாமோ தங்கமே தங்கம் – நாங்க‌ மரவள்ளியைத் தேடலாமோ தங்கமே தங்கம்…“ இன்னொரு பாடல் – கண்டின்னா கண்டி – நாங்க பொழைக்க வந்த கண்டி- எங்க அயித்த மக குண்டி – அது சோத்துப் பான தண்டி வேறொரு பாடல் – மாடிமனை வீடு இல்ல கோடிப் பணம் எமக்கு இல்ல ஓடியோடி உழைச்சாலும் உள்ளத்தில தாழ்ந்ததில்ல மற்றொரு பாடல் – சீரான சீமை விட்டு சீரழியக் காடு வந்தோம் கூடை தலை மேலே குடி வாழ்க்கை கானகத்திலே…. இப்படி ஏராளம் பாடல்கள். எப்படித்தான் பாடித் தங்களுடைய துயரத்தை அந்த மக்கள் வெளிப்படுத்தியபோதும் அந்த நிலை, அந்த வாழ்க்கை முடியவில்லை; மாறவில்லை. தங்களுடைய கவலைகளை இப்படிப் பாடியாவது உளரீதியாக ஆற்றிக் கொண்டனர். அதாவது தங்கள் அளவில் பாடி மனமாறிக் கொண்டனர். அவ்வளவுதான். இந்தப் பாடல்கள் தமிழ்நாட்டில் பாடப்படும் நாட்டார் பாடல்களை அடியொற்றிய வடிவத்திலானவை. காரணம், இந்த மக்கள் 19 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து இலங்கையின் மலைப்பகுதிகளான கண்டி, மாத்தளை, ஹற்றன் போன்ற இடங்களில் தோட்டப்பயிர்ச் செய்கைக்காக பிரித்தானியர்களால் கொண்டு வரப்பட்டவர்கள் என்பதே. என்பதால், அவர்களுடைய நாட்டார் பாடல்களும் வாய்மொழி இலக்கியமும் தமிழ்நாட்டின் சாயலையும் சாரத்தையும் கொண்டமைந்தது. அதே மொழி, அதே மரபு. அதே தொனி. 1823 தொடக்கம் கடல்வழியாகப் படகுகளில் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட இந்த மக்களுடைய வாழ்க்கையைச் சாராம்சப்படுத்தி எச். டி. டானியல் (H.D.Deniel) எழுதிய Red Tea (எரியும் பனிக்காடு – தமிழ் மொழிபெயர்ப்பு: இரா. முருகவேல்) உங்கள் நினைவுக்கு வரலாம். பின்னர் இயக்குநர் பாலா இதனை அடியொற்றி ‘பரதேசி’ என்ற சினிமாவை உருவாக்கியிருந்தார் என்பதையும் இங்கே நினைவுபடுத்திக் கொள்ளலாம். வாய்மொழிப்பாடல்களுக்குப் பிறகு, பல்வேறு கலை, இலக்கிய வடிவங்கள் உருவாகின. இதற்கான பெரும் பங்களிப்பைச் செய்தவர் தஞ்சாவூரிலிருந்து வந்து இந்த மக்களோடு இணைந்து வாழ்ந்த கோ. நடேசய்யர். நடேசய்யரே இந்த மக்களின் ‘விடிவெள்ளி‘ என்ற அளவுக்கு அன்றைய சூழலில் கல்வி, சமூக மேம்பாடு, கலை, இலக்கிய வெளிப்பாடு, இதழியல், தொழிற்சங்கங்கள், அரசியற் பிரதிநிதி, எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர், வெளியீட்டாளர், தொழிலாளர் நலனுரிமைக்கான போராட்டக்காரர் எனப் பல தளங்களில் செயற்பட்டார். இதனால் மலையகத்தில் ஒரு புதிய வெளிப்பாடு வளர்ச்சி அடைந்தது. மக்களுடைய வாழ்க்கையில் பெரிய மாறுதல் இல்லாது விட்டாலும், சமூக ஊடாட்டங்களினால் இலக்கிய வெளிப்பாட்டில் மாறுதல்கள் ஏற்பட்டன. பின் வந்த தலைமுறையினர் அதைத் தொடர்ச்சியாக எழுதி ‘மலையக இலக்கியம்’ என்றொரு இலக்கிய வரைபடத்தையே உருவாக்கினர். இந்த வரைபடத்தை உருவாக்குவதற்குப் பங்களித்தவர்களில் முக்கியமானவர்களாக கோ. நடேசய்யர், கே. கணேஸ், சி.வி. வேலுப்பிள்ளை, மீனாட்சி அம்மை, பொ. கிருஷ்ணசாமி, த. ரஃபேல், என். எஸ். எம். ராமையா, தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன், ஏ. பி. வி. கோமஸ், சி. பன்னீர்ச்செல்வம், எம் வாமதேவன், அ. சொலமன்ராஜ், மாத்தளை சோமு, மாத்தளை வடிவேலன், கோகிலம் சுப்பையா, அந்தனி ஜீவா, மு. நித்தியானந்தன், அல் அஸூமத், மல்லிகை சி. குமார், மு. சிவலிங்கம், மொழிவரதன், மலரன்பன், க.ப. லிங்கதாசன், குறிஞ்சித் தென்னவன், லெனின் மதிவானம், சு. முரளிதரன் எனப் பல நூறுபேரைக் குறிப்பிடலாம். தொடரும் இந்தநெடு வரிசையில் இப்பொழுது வே. தினகரன், சு. தவச்செல்வன், சிவனு மனோஹரன், பிரமிளா, பதுளை சேனாதிராஜா, சந்திரலேகா கிங்ஸ்லி, நாகபூசணி, மஞ்சுளா, எஸ்தர் லோகநாதன், சண்முகப்பிரியா, இஸ்மாலிகா, இராகலை தயானி, சர்மிளாதேவி எனப் பலர் இணைந்திருக்கின்றனர். இவர்கள் எல்லோருடைய எழுத்துகளிலும் சில பொதுவான பண்பை, குணத்தை அல்லது அடிப்படையை நாம் பார்க்க முடியும். அது தலைமுறை வேறுபாடுகளைக் கடந்தும் தொடர்கிறது என்பது கவனத்திற்குரியது. முதலாளிகள், கங்காணிகள், அரசு, காலனிய சக்திகள் எனப் பல அடுக்குகளில் உள்ள அதிகாரத்துக்கு எதிரான குரல். துன்பியல் வாழ்வின் கதைகள். எழுச்சி, புரட்சி என்ற கனவோடு தொடரும் போராட்டங்களும் அவற்றின் பலவீனங்களும். பெண்களின் பாடுகள் மலையக மக்களின் விடுதலைக்கென உருவாகிய தொழிற்சங்கங்கள், அரசியற் கட்சிகள், தலைமைகள் மீதான விமர்சனம். சிங்கள இனவாதத்தின் அச்சுறுத்தலும் அதற்கெதிரான எதிர்ப்புணர்வும். கேள்விக்குறியின் முன்னே நிற்கும் இளைய சமூகத்தினர். ஆக, மலையக மக்களின் – தோட்டத் தொழிலாளரின் – வாழ்க்கையை நெருக்கும் விடயங்களையே மலையக இலக்கியம் பிரதிபலித்தது. இந்த மரபு அவர்களுடைய வாய்மொழி இலக்கியமான நாட்டார் பாடல்களிலிருந்து உருவாகியது. மக்களின் துயரங்களையும் பிரச்சினைகளையும் பேசுவது, அவற்றுக்குக் காரணமான சக்திகளை விமர்சனத்துக்குள்ளாக்குவது என்பதே நாட்டார் பாடல்களின் பிரதான அடிப்படையாக இருந்தது. மலையக நாட்டார் பாடல்கள் மட்டுமல்ல, அன்றைய நாடகங்களும் கடுமையான அரசியல் விமர்சனத் தொனிப்பைக் கொண்டவையே. என்பதால், அதற்குப் பிறகு வந்த நவீன இலக்கியமும் தவிர்க்க முடியாமல், அதே செல்வழியில், வலிமையான முறையில் அரசியலைப் பேசும் இலக்கியமாகவே – எழுத்தியக்கமாகவே வெளிப்பட்டது. அது கவிதையாக இருந்தாலென்ன, சிறுகதை, நாவலாக இருந்தாலென்ன, இதை விட்டு விலகவில்லை. என்பதால்தான் அது அந்த மக்களையும் அவர்கள் வாழும் பிரதேசத்தையும் அடையாளப்படுத்தும் வகையில் ‘மலையக இலக்கியம்’ என்று உணரப்பட்டது; அடையாளம் பெற்றது. இதையே பின்வந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறை எழுத்தாளர்களும் தொடருகின்றனர். அதை விட்டு விலக முடியாத அளவுக்கு அவர்களுடைய வாழ்க்கையின் நெருக்குவாரங்கள் உள்ளன. இலங்கையில் மிக மோசமான ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகும் மக்கள் (சமூகம்) என்றால், அது மலையக மக்களே. மட்டுமல்ல, நீண்டகால ஒடுக்குமுறையை (இரண்டு நூற்றாண்டுகளுக்கும்மேல்) எதிர்கொள்கின்றவர்களும் இந்த மக்களே! ஆகவேதான் மலைய இலக்கியம் தலைமுறை வேறுபாடுகளைக் கடந்தும், புதிய போக்குகள், கோட்பாடுகள் போன்றவற்றின் செல்வாக்குகளின் மத்தியிலும் சில பொதுக் கூறுகளில் மாறாது நின்று பேசிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இந்த மக்கள் இலங்கைக்கு வந்து – தோட்டத் தொழிலாளர்களாகி இரண்டு நூற்றாண்டுகள் கடந்து விட்டன. 1800 களில் எப்படி இருந்தார்களோ, எப்படிக் கையாளப்பட்டனரோ அவ்வாறே இப்போதும் உள்ளனர். அவ்வாறே கையாளப்படுகின்றனர். இடையில் பிரித்தானியரின் காலனித்து ஆட்சி மாறி, சுதேச ஆட்சி வந்த பிறகும் நிலைமை பெரிய அளவில் மாற்றமுறவில்லை. சுதேச ஆட்சி வந்த பிறகுதான் 1949 நவம்பர் 15 இல் இந்த மக்கள் ‘நாடற்றவர்‘ ஆக்கப்பட்டனர். (இதற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்கள் தனியானவை). சுதேச ஆட்சியில் மலையக மக்களுடைய விடுதலைக்கும் நலனுக்குமென்று தொழிற் சங்கங்களும் அரசியற் கட்சிகளும் வந்த பின்னரும் கூட நிலைமையில் பெரிய முன்னேற்றமில்லை என்பது பெருந்துயரம். ஆனால், மலையகத்தில் ஒரு படித்த மத்தியதர வர்க்கம் உருவாகியுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். அதனுடைய குரலே இன்றைய (1980 க்குப் பிந்திய) இலக்கியத்திலும் வெளிப்படுகிறது. அது மத்தியதர வர்க்கத்தின் குரலாக மட்டுமில்லாமல், ஒடுக்கப்படும் மக்களின் குரலாக 2000 வரையிலும் இருந்தது. இது முக்கியமானது. அந்தக் குரல் தன்னைப் பின்வரும் உள்ளடக்கத் தன்மைகளை வெளிப்படுத்தியது. மலைகள் அழகு. அதற்கு மாறான வகையில் அங்குள்ள மனிதரின் கதைகள் வலியும் துயரும் மிக்கவை. அவலமும் துயரமும் நிறைந்த நூற்றாண்டுகளைக் கடந்த வாழ்க்கை. எத்தகைய அரசியல் முன்னெடுப்புகளும் தொழிற் சங்கப் போராட்டங்களும் அந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவில்லை. ஆட்சி மாற்றங்கள், அரசாங்கத்தின் புதிய திட்டங்கள் எதுவும் பயனளிக்கவில்லை. குடியுரிமை, நில உரிமை போன்ற அடிப்படை உரிமைகளுக்காகவே போராட வேண்டிய வாழ்க்கைப் பின்னணி. தொடர்ந்தும் சுரண்டப்படும் மக்களாகவே இருப்பது. மலையகத்தை விட்டு வெளியிடங்களுக்கு – கொழும்பு போன்ற நகரங்களுக்கு வேலை தேடிச் செல்லும் நிலை. குறிப்பாக சிற்றூழிய வேலைகளுக்காக. இந்திய வம்சாவழி மக்களாக இருந்ததால் நாடற்றவர்கள் என்று ஒரு தொகுதியினர் மறுபடியும் இந்தியாவுக்குப் பலவந்தமாகவே திருப்பி அனுப்பட்டமை. ஏனைய மக்கள் தம்மை இலங்கையர்களாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கோரி வேண்டிய நிலை. இனவன்முறைகளின் தாக்கமும் பாதிப்பும். தோட்டங்களை – மலையகத்தை – விட்டு வெளியேறிக் கொழும்புக்கும் பிற இடங்களுக்கும் செல்வோர் பற்றியது. நெடுங்காலமாகப் பேசப்பட்டும் பேணப்பட்டும் வந்த இந்தத் தன்மை இப்போது சற்று மாறுதலடைந்துள்ளது. இதைப்பற்றி மலையக எழுத்தாளரான சு.தவச்செல்வன் சொல்வதிலிருந்து புரிந்து கொள்ளலாம். ‘இன்றைய கதைகள் அல்லது இலக்கிய வெளிப்பாடுகள் தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்படுவனவாகவும் மக்கள் அல்லது தொழிலாளர் சார்ந்த பிரச்சினைகளைத் தவிர்த்து, உதிரிகள் பற்றிய கதைகளைப் புனைவதும் அல்லது முக்கியத்துவமற்ற பிரச்சினைகளுக்கு முனைப்புக் கொடுத்து படைப்புகளை உருவாக்குவதுமாக மாறியுள்ளது’ என்கிறார் தவச்செல்வன். உருவாகியிருக்கும் அல்லது வளர்ச்சியடைந்திருக்கும் மத்தியதர வர்க்கத்தின் குணாம்ச வெளிப்பாடு இது என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. 2000 க்குப் பிறகு உருவாகிய புதிய தலைமுறையில் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்ளே புத்திஜீவிகளாவும் விமர்சகர்களாகவும் எழுத்தாளர்களாகவும் அதிகமாக உள்ளனர். இவர்களுக்கும் மக்களுக்குமிடையிலான நெருக்கம் குறைவடையத் தொடங்கி, இன்று அது குறைந்தே விட்டது. இவர்கள் மலையகத்தை – தோட்டங்களை விட்டு வெளியேறிச் சென்று விட்டனர்; செல்கின்றனர். இதனால் தோட்டங்களைப் பற்றிய அனுபவங்களும் சமூக உறவும் இவர்களிடம் குறைவடைகிறது. பதிலாக வெளியே சென்று குடியேறுகின்ற – வேலை செய்கின்ற – இடங்களில் சந்திக்கின்ற – சந்திக்க நேர்கின்ற பிரச்சினைகளே இவர்களுடைய எழுத்தைச் சாரப்படுத்துகின்றன. அதுவே இவர்களைச் சீண்டும், தீண்டும் பிரச்சினைகளாக உள்ளன. அத்துடன் இன்றைய உலகமயமாதல் உருவாக்கியிருக்கும் குழப்பமான சூழல், நவீனத்துக்குப் பிந்திய படைப்பாக்கம் பற்றிய கருத்தாக்கம், பின்நவீனத்துவச் சிந்தனைகள் போன்றவற்றின் செல்வாக்கும் இந்தப் புதிய தலைமுறைப் படைப்பாளிகளில் தாக்கம் செலுத்துகின்றன. என்பதால் இப்பொழுது மலையகத்தில் தொழிலாள வர்க்கம் ஒன்றாகவும் அதனுடைய பிரச்சினைகள், அவனுடைய வாழ்க்கை போன்றவை அது சார்ந்தவை அதனோடு இணைந்ததாகவும் உள்ளது. மத்தியதர வர்க்கம் இன்னொன்றாகவும் அதனுடைய பார்வைகளும் அணுகுமுறைகளும் அனுபவங்களும் பிரச்சினைகளும் வேறொன்றாகவும் உள்ளன. என்பதால் மலையக இலக்கியம் இந்த நூற்றாண்டில் இன்னொரு வடிவில், இரு நிலைகளை (தன்மைகளை) உடைய புதிய தன்மையைக் கொண்டுள்ளது. இந்தப் பின்னணியில் மலையக எழுத்தாளரான சு. தவச்செல்வனின் சிறுகதைகள் குறித்துப் பார்க்கலாம். சு. தவச்செல்வன், 2010 இலிருந்து எழுதி வருகிறார். மலையகத்தில் உள்ள ஹற்றன் பகுதியில் உள்ள தோட்டமொன்றில் பிறந்து வளர்ந்து, அங்கேயே படித்து, அங்கேயே ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பட்ட மேற்படிப்பை மட்டும் யாழ்ப்பாணத்திலும் பேராதனை (கண்டி) பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்திருக்கிறார். சிறுகதை, விமர்சனம், கவிதை, ஆய்வு ஆகிய துறைகளில் தவச்செல்வனின் எழுத்து முயற்சிகள் பல்தன்மை விரிவில் உள்ளன. இதுவரையில், சிவப்பு டைனோசர்கள் (கவிதை), மலையகத்தில் பாரதியின் சிந்தனை (ஆய்வு), ஆடுபாலம் (சிறுகதை), டார்வினின் பூனைகள் (கவிதை), படைப்பும் படைப்பாளுமைகளும் (விமர்சனம்), புனைகதையும் சமூகமும் (ஆய்வு), இலக்கியம் – கலகம் – அரசியல் ( விமர்சனம்), இருநூறு வருடகால மலையகச் சமூகமும் இலக்கியமும் (ஆய்வு), சிங்கமலை (சிறுகதை) ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. பன்முக ஆற்றலுடைய தவச்செல்வன், இன்னமும் தோட்டத்து மக்களைக் (மலையகத்திலேயே வாழும் மக்களை) குறித்து எழுதுவதும் மலையச் சமூக, இலக்கிய, அரசியல் வரலாற்றைக் குறித்து ஆய்வுகளைச் செய்வதும் அவருடைய சமூகக் கரிசனையையும் இலக்கிய நோக்கையும் அடையாளப்படுத்துகிறது. என்பதால் தவச்செல்வனுடைய கதைகள் தொழிலாளர் பிரச்சினை, முதியவர்களின் வாழ்க்கை, மலையகப் பெண்களின் பாடுகள், ஓய்வூதியம் பெறுவதில் உள்ள நெருக்கடி, தோட்ட மற்றும் அரச அதிகாரத்தரப்புகளின் நடத்தைகள், சிறாரின் உலகம், மலைகளின் கதைகள் (அந்தச் சூழலின் வரலாற்றுணர்வு பற்றியவை), இளையோரின் சவால்கள், வறியவர்களின் வாழ்க்கை, இந்திய வம்சாவழி என்ற அடையாளத்தினால் ஏற்படும் சிக்கல்கள், புதிய அரசியல் பொருளாதாரச் சூழலில் தோட்டங்கள் மூடப்படுதலின் விளைவுகள், இந்திய வம்சாவழி உறவுகளைப் பேணவும் முடியாது, கை விடவும் முடியாது தத்தளிக்கும் உளநிலை எனப் பலவற்றைப் பற்றிப் பேசுகின்றன. இந்தப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்கான கதைகளா இவை? அல்லது தன்னுடைய கதைகளில் இவற்றையெல்லாம் பேசுகிறாரா? என்று தெரியாத வகையில், கலைத்துவமாக அழகியலோடு எழுதியிருக்கிறார் தவச்செல்வன். வர்க்க நிலைப்பட்ட பார்வையே தவச்செல்வனுடைய கதைகளின் பொதுத் தன்மை. இதனை அவர் இரண்டு வகையாக நிகழ்த்துகிறார். ஒன்று, உழைப்பாளிகளாக உள்ள மக்களின் பாடுகளைச் சொல்வது. இதன் மூலம் அந்த மக்களின் நிலைமையை உலகின் முன்னே வைப்பது. உலகின் முன்னே வைப்பதென்பது, அரசு, சமூக அமைப்புகள், கட்சிகள், கட்சித் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், புத்திஜீவிகள், மனித உரிமைவாதிகள், சட்டவாளர்கள், நீதியாளர்கள், ஊடகங்கள், சர்வதேசச் சமூகம் எனச் சகல தரப்பின் முன்னும் வைப்பதாகும். முக்கியமாக இந்திய அரசின், தமிழக அரசின் முன்னாலும். “உங்களின் முன்னே நூற்றாண்டுகளாக ஒரு சமூகம் மிகக் கீழ்நிலைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறது. இவ்வளவுக்கும் இலங்கையின் பொருளாதாரத்தில் பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் பங்களிப்பே அதிகமானது. அதற்குப் பெரும் பங்களிப்பை நூற்றாண்டுகளாக இந்த மக்களே வழங்கி வருகின்றனர். அப்படிப் பெரும் உழைப்பை வழங்கி வரும் மக்கள், அதற்கான தகுதிநிலையைப் பெற முடியாமல், ஒதுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு, கீழ்நிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இது என்ன நீதி? இதற்கு என்ன நியாயம்?…“ என்று முகத்தில் அறைந்தாற்போலக் கேட்கின்றன. இதன் மூலம் அந்த மக்களின் பிரதிநிதியாக நிற்கிறார் தவச்செல்வன். இது உழைப்பாளர்களின், ஒடுக்கப்பட்டோரின் நிலை நிற்றலாகும். இரண்டாவது, நூற்றாண்டுத் துயரைத் தன்னுடைய முன்னோடிகள் – முதற் தலைமுறையினர் மட்டுமல்ல, தானும் சொல்லவும் பேசவும் வேண்டியுள்ளது. அது தன்னுடைய பொறுப்பு, கடமை என்று உணர்வது. ‘இது தலைமுறையாகத் தொடரும் ஒரு தீராத நோய். தலைமுறைகளாகக் கிடைக்கப்பெறாத நீதி‘. என்பதால் தானும் இதைப்பேசுவதன் மூலம் தன்னுடைய பங்களிப்பைச் செய்வதோடு, இதற்கெதிரான போர்க்குரலை, போராட்ட உணர்வை உருவாக்கும் போராளிக்குரிய நிலையிற் செயற்படுவதாகும். இந்த இரு தன்மைகளில் உள்ள கதைகள், ஒடுக்கப்பட்டோரின் எதிர்ப்புக் குரலாகவும் போராட்ட எழுச்சிப் படைப்புகளாகவும் சமனிலையில் தொழிற்படுகின்றன. இவற்றை அக – புற நிலையில் பயணித்து எழுதி அளித்திருக்கிறார். தொகுத்துச் சொல்வதாயின், இவை ‘கலகக் கதைகள், எதிர்ப்புக் கதைகள்‘ எனலாம். ஆக கலகக் குரலே தவச்செல்வனுடையது. எதிர்ப்பிலக்கியமே தவச்செல்வன், எழுதி அளித்திருப்பது. ஆனால், வாசிக்கும்போது முதல் நிலையில் இவை ‘துன்பியல் கதைகள்‘ என்றே தோன்றும். மக்களின் வாழ்க்கைப் பாடுகளை விவரிக்கும்போது, அவற்றை நாம் நேரில் காண்பதைப்போல, அதற்குள் வாழ்வதைப்போல உணரும்போது அந்த மக்களின் துயரம், நம்முள் சுவறுகிறது. ஆனால், அப்படியே துன்பத்தைப் பகிர்வதோடு எந்தக் கதையும் முடியவில்லை. அப்படித்துன்பியலைப் பரப்பி, கழிவிரக்கத்தைக் கோருவதற்குத் தவச்செல்வன் விரும்பவில்லை. அப்படிக் கழிவிரக்கப்படுவது தேவையில்லை என்பதே அவருடைய நிலைப்பாடுமாகும். ‘உழைப்புக்கு மதிப்புத் தாருங்கள். மனிதருக்கு உரிமையை வழங்குங்கள்‘ என்பதே அவருடைய வலியுறுத்தல். அதைப் பெறுவதற்கு ‘நாமெல்லாம் தகுதியுடையோர்‘ என்பதே அவர் தன்னுடைய மக்களுக்கும் உலகத்துக்கும் சொல்லும் சேதி. இதைத்தானே முந்திய தலைமுறை மலையக எழுத்தாளர்களும் செய்திருக்கிறார்கள்! இதில் தவச்செல்வன் என்ன புதிதாகச் சொல்லியிருக்கிறார்? மலையகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சமூக வளர்ச்சியை, மத்திய தர உருவாக்கத்தை, அந்த மத்தியதர வர்க்கத்தினர் மலையகத்தை விட்டு வெளியேறிச் செல்வதை, அந்த வெளியேற்றம் மலையகச் சமூகத்தில் அகத்திலும் புறத்திலும் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களை, கூலி உழைப்பாளிகளும் கூட தோட்டங்களை விட்டு புறநகர்களை நோக்கிச் செல்கிறார்களே அந்த வெளியேற்றம் உண்டாக்கும் சமூகப் பண்பாட்டு நொதிப்புகளை, புதிய உலக ஒழுங்கில், உலக மயமாதற் சூழலில் மலைகத்தின் நிலையை தவச்செல்வனின் கதைகள் என்ன விதமாகப் பேசியுள்ளன? மொத்தமாக மலையகக் கதைகளில் தவச்செல்வனின் கதைகளுக்கான இடமென்ன? தவச்செல்வனுடைய கரைதகளின் தனித்தன்மை என்ன? போன்ற கேள்விகள் பலருக்கும் எழலாம். தவச்செல்வன் புதிதாக அதிகம் சொல்லவில்லைத்தான். ஆனால், சொல்ல வேண்டியதைச் சொல்லியிருக்கிறார். அதற்கான சொல்முறையையும் வெளிப்பாட்டு வடிவத்தையும் செம்மையாகக் கையாள்கிறார். அவர் ஒரு சமூகவியல் ஆய்வாளர் என்ற வகையிலும் இலக்கிய விமர்சகன் என்ற அடிப்படையிலும் தன்னுடைய கதைகளின் உள்ளீட்டிலும் வெளிப்பாட்டிலும் கவனம் கொண்டு இந்தச் செழுமையாக்கத்தைச் செய்திருக்கிறார். இதற்குச் சான்றாக, ‘சாக்குக்காரன்’, ‘ புதைமேடு’, ‘அப்பாவின் ரேங்குப்பெட்டி’, ‘வரிச்சி வரிசை’, ‘முதிர்கன்னி’, ‘காலையும் கிழவனும்’, ‘வெறுங்கல்லும் வேட்டை நாய்களும்’, ‘ஆடுபாலம்’, ‘காணிக்கொழுந்து’ போன்ற கதைகள் இதில் முக்கியமானவை. ‘சாக்குக்காரன்’ கதை, மலையகத்தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளிளை, அந்தத் தோட்டத்தில் வேலையாட்களுக்குப் பொறுப்பாக இருக்கும், வேலையாட்களைக் கண்காணிக்கும் அதிகாரிகள் எப்படி அடிமைகளாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைச் சொல்கிறது. தோட்ட விதிமுறைகளுக்கு மாறாக நடைமுறைகளை மாற்றித் தங்களுடைய குடும்பத்துக்கான சேகவத்தைச் செய்விக்கும் இடைநிலை அதிகாரிகள், கங்காணிமார், ‘சாக்குக்காரன்‘ என்ற நேர்மையான உழைப்பாளியின் குடும்பத்தைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அவனுக்கும் குடும்பத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கு நேரமில்லை. அவனுடைய அப்பாவித்தனத்தை அவர்கள் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அன்று நள்ளிரவு வரையில் அவனுடைய வருகைக்காக மனைவியும் குழந்தைகளும் காத்திருக்கிறார்கள். வீட்டுக்கு வந்தபோதுதான் அவனுக்குப் புரிகிறது, குழந்தைகளுக்கும் அன்றைய சமையலுக்குமாக வாங்கிய பொருட்களை தான் வேலை செய்யும் வண்டியில் கொழுவி விட்டு, மறந்து வந்துவிட்டேன் என்பது. அதற்கு மேல் என்ன செய்ய முடியும்? அன்றைய இரவும் பசித்திருத்தல், துயரில் வாழ்தல்தான் கதை. இந்த அநீதி விளையாட்டுத் தலைமுறையாகத் தொடருகிறது. தொழிற்சங்கங்களுக்கும் அரசியற் கட்சிகளுக்கும் இதெல்லாம் நன்றாகவே தெரியும். ஆனாலும் என்ன? இருளும் துயரும்தான் விதி. இந்த விதி இப்படியே தொடர வேண்டுமா? என்பதைப் படிக்கும்போது நாம் உணர்ந்து கொள்கிறோம். ‘அப்பாவின் ரேங்குப்பெட்டி’ – இலங்கையின் வாழ்ந்தாலும் இந்தியாவில்தான் வம்சாவழி உறவுகள் என்பதைச் சொல்லும் கதை. ஒரு தடவையேனும் போய் அந்த உறவுகளைப் பார்த்து வரமுடியுமா என்று ஏங்குகிறார் தந்தை. அங்கே, தமிழ்நாட்டில் உள்ள உறவுகளின் மரணச் சேதிகள், திருமண நிகழ்வு பற்றிய அறிவிப்புகள் எல்லாம் வரும்போது உறவுகளைப் பார்க்க வேண்டும் என்ற தாகம் மேலெழுந்து தவிக்க வைக்கிறது. பயணத்துக்கான பாஸ்போட்டை எடுத்தாலும் பயணத்துக்கான சாத்தியங்களில்லை. எல்லாவற்றையும் (தன்னுடைய ஆசைகள், கனவுகள், நம்பிக்கைகள் எல்லாவற்றையும்தான்) அந்த ரேங்குப் பெட்டிக்குள் போட்டிப் பூட்டி வைத்திருக்கிறார் அப்பா. அதை அவர் பக்குவமாகவே வைத்திருக்கிறார். இந்தப் பெட்டிக்குள் என்னதான் இருக்கிறது என்று அறியத் துடிக்கின்றன பிள்ளைகள். அந்தப் பிள்ளைகளின்பார்வையிலிருந்தே கதை சொல்லப்படுகிறது. பிந்திய தலைமுறைக்கு இந்த உறவின் தன்மையோ, விவரமோ தெரிவதற்கு வழியில்லை. காலமும் சூழலும் நாட்டு நிலைமைகளும் சட்டங்களும் அவற்றைச் சிதைத்து விட்டன. ஆனால், அப்பாவுக்கு அந்த நினைவுகளிலிருந்து விடுபட முடியவில்லை. அவர் தன்னுடைய இந்த உறவுகள் அனுப்பிய கடிதங்களோடும் பொருட்களோடும் வாழ்கிறார். அதற்கென ஒரு ரேங்குப் பெட்டியை வைத்திருக்கிறார். அது அவருடைய ரகசியப் பொக்கிஷம். அதைப் பிள்ளைகள் திறந்து பார்த்து விடுகிறார்கள். இப்படியே செல்லும் கதை இந்த மக்களின் பூர்வீகத்தைப் பற்றியும் அந்த நினைவுகளின் பாடுகள் எப்படி மனித மனங்களில் வலியாக மாறி நீடிக்கின்றன என்பதையும் ஆராய்கிறது. மட்டுமல்ல, அந்த நினைவுகளோடு வாழ்தலையும் அதன் வலிகளையும் உறவுகளைப் பிரிந்திருத்தலின் துயரையும் புதிய தலைமுறைகள் இதையெல்லாம் தொடர முடியாத நிலையையும் சிறப்பாகச் சொல்கிறது. மானுடத் துயரங்கள் எப்படியெல்லாம் உள்ளன! ‘வரிச்சி வரிசை‘ – விழிப்புணர்வுக் கதை எனலாம். பொதுவாகவே எல்லாக் கதைகளிலும் விழிப்புணர்வுத் தன்மை அடிப்படையாக இருந்தாலும் இந்தக் கதையில் அது சற்று நேரடியாகச் சொல்லப்படுவதைப்போல ஓருணர்வு ஏற்படுகிறது. சுரண்டப்படும் மக்களுக்குள் அல்லது ஒடுக்கப்படும் உழைப்பாளர்களுக்குள் ஏற்படுகின்ற கொதிப்பு, எதிர்ப்புணர்வாக எப்படி மாறுகிறது? எப்படிப் புரட்சிக்கான உணர்வெழுச்சியை உருவாக்குகிறது என்பதை இயல்பாகச் சொல்கிறது. அப்படி உணர்வெழுச்சி அடையும் இளைஞரின் தலையில் சிவப்பு ரிப்பன் கட்டப்பட்டிருப்பது, சிவப்ப ரீசேர்ட் அணிந்திருப்பது என்பது சற்று மிகைப்படுத்தப்பட்டதுதான். அல்லது அந்தக் குறியீட்டுக்கான அழுத்தம் செயற்கையாக உள்ளதென உணரப்பட வாய்ப்புண்டு. இருந்தாலும் கதைப்போக்கில் கொதிப்பு எதிர்ப்புணர்வாக உருவாகி வரும் விதம் இயல்பாக – யதார்த்தமாகவே உள்ளது. முன்னோரின் வாய்மொழிக் கதையாக தாத்தாவின் மூலமாகச் சொல்லப்படுகிறது ‘சிங்கமலை’. மலைக்காடுகளை எப்படி ‘முன்னோடிகளான முதற் தலைமுறை தொழிலாளர்கள் தோட்டங்களாகவும் இன்று நாம் பார்த்து வியக்கின்றன செழிப்பான மலையகமாகவும் மாற்றினார்கள். அதில் இந்த மாதிரி மலைக்குன்றுகள்தான் அன்று அவர்களுடைய வாழிடமாக இருந்தன. அப்பொழுது வீடுகளே இருக்கவில்லை. காடுகளிலும் மலைக்குன்றுகளின் கீழும் குகைகளிலும்தான் மக்கள் வாழ வைக்கப்பட்டனர். அப்படி வாழ்ந்துதான் இந்த மலையகத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதைப் பேரனுக்குச் சொன்னதாக, பேரனின் வழியாகச் சொல்லப்படுகிறது. கடந்து வந்த காலத்தின் வரலாறும் துயர்வழிப் பாதையும் அப்படியே நமக்குள் விரிகிறது. மலையகத்தைப் பற்றிய, அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய நம்முடைய பார்வையும் அனுபவமும் மாறுகிறது. இனி மலையகத்துக்குச் செல்லும்போது அல்லது மலையகக் காட்சிகளை எங்கேனும் பார்க்கின்றபோது, நாம் அந்தப் பசிய மலைமுகடுகளையோ, வரிசையாக நின்று தேயிலைக் கொழுந்து கொய்யும் பெண்களையோ ஒரு அழகிய காட்சி என்ற கோணத்திலிருந்து பார்க்காமல் நம்முடைய பார்வையை மாற்றி விடுகிறது கதை. பதிலாக அந்த மனிதர்களின் வாழ்க்கை நிலையின் ஊடாகவே பார்க்க வைக்கிறார் தவச்செல்வன். இது அவருடைய நோக்கத்தின் – எழுத்தின் – வெற்றி. இலக்கியத்தின் நுட்பமும் அடிப்படையும் இதுதானே. அக விரிவுகளை உருவாக்குவது. புதிய பார்வைகளை (நோக்குகளை) வழங்குவது. இருட்பிராந்தியங்களை ஒளிப்படுத்திக் காட்டுவது. நீதிக்கான பக்கத்தில் நம்மை நகர்த்துவது. நம்முடைய மனதை திருப்பிப் போடுவது…. ‘பொடிமாத்தயாவும் மாடசாமியும்‘ சிங்கள வன்முறையை, சிங்கள ஆதிக்கத்தைச் சொல்லும் கதை. தமிழ் பேசும்மக்கள் செறிவாக வாழும் மலையகப் பகுதிகளில் சிங்கள இனவாதிகள் எப்படி மேலாதிக்கம் செலுத்துவதற்கு முயற்சிக்கிறார்கள். ஆனாலும் தொழிலாளி என்ற அடிப்படையில் அந்த வன்முறையை பொடிமாத்தயா என்ற சிங்களவர் எதிர்க்கிறார். அவர் தமிழ் மக்களின் பக்கமாகவே நின்று போராடுகிறார். இங்கே தொழிலாளர்களுக்கிடையிலான உறவும் உணர்வும் வர்க்க உணர்வாக அமைந்திருக்கிறது. இது தவச்செல்வனின் வர்க்கப்பார்வைக்கு அடையாளமான கதை எனலாம். ‘காணிக் கொழுந்து‘ வெளியார் உற்பத்தி முறை(Outsider production system) மூலமாக நிலமற்ற மக்களின் பிரச்சினையையும் அதனால் ஏற்படும் வாழ்க்கைச் சிக்கல்களையும் சொல்கிறது. முக்கியமாக இதில் உள ரீதியாக உருவாக்கும் தாக்கங்களைக் கவனப்படுத்துகிறார் தவச்செல்வன். இன்னொரு முக்கியமான கதை, ‘ஆடுபாலம்‘. காலனத்துவ காலத்தில் பிரிட்டிஷாரினால் அமைக்கப்பட்ட ‘ஆடுபாலங்கள்‘ இன்னும் மலையகத்தில் உண்டு. ஆறுகளின் மேலாக அமைக்கப்பட்ட இந்தப் பாலங்கள் பாதுகாப்பற்றவை. இந்தப் பாலத்தின் வழியே பயணித்தவர்கள் இறந்த சம்பவங்கள் பலவுண்டு. அப்படியான ஒரு சம்பவத்தில் எட்டுப்பேர் ஒன்றாக பலியானதை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதை இது. ‘காலையும் கிழவனும்‘ மலையகத்துக் கதையாக இருந்தாலும் வழமையான – அறியப்பட்ட – கதைப் பிராந்தியத்துக்கு வெளியே உள்ள ஒன்று. மலையகத்தில் காளை மாடுகளை வளர்ப்பது ஒரு சிறிய தொழில் முயற்சியாக அங்குள்ள ‘லயம்‘ வாழ் மக்களிடம் இருந்தது. காளை மாடுகளைக் கொண்டு பசுமாடுகளைச் சினைப்படுத்துதல் (கருவூட்டுதல்) தான் காளை மாடுகளை வளர்ப்பதற்கான காரணம். செயற்கை முறைச் சினைப்படுத்தல் வந்தபோது காளை மாடு வளர்ப்புச் சவாலுக்குரியதாகி விடுகிறது. உலகமயமாதல், புதிய தொழில்நுட்பம், விஞ்ஞான வளர்ச்சி போன்றவற்றினால் ஏற்படுகின்ற தொழில் நெருக்கடி, சுதேச, பாரம்பரியத் தொழிலில் எத்தகைய சிக்கல்களை உண்டாக்குகிறது என்பதை உணர்த்துவது. கவனம் பெற்ற கதைகளில் இதுவும் ஒன்று. இதைப்போலப் பெண்களின் பாடுகளையும் அவர்களுடைய உளநிலையையும் சிறார்களின் வாழ்க்கையையும் அவர்களுடைய சவால்களையும் அகமெடுத்துத் தவச்செல்வன் எழுதியிருக்கிறார். தொழிற்சக்க அரசியலின் பலவீனம், தொழிலாளர்களை எப்படிப் பாதிக்க வைத்தது, தோட்டங்கள் மூடப்படுவதற்குப் பயன்படுத்தும் அதிகார வர்க்கத்தின் பொறிமுறை, அந்தச் சவாலை எதிர்கொள்வதற்குப் பெண்கள் உட்படத் தொழிலாளர்கள் படுகின்ற அவதியும் போராட்டமும், சம்பளப்பிரச்சினை, வாழிடப்பிரச்சினை, பாலியற் சுரண்டல்கள், சிறாரைத் தொழிலுக்கு அமர்த்துதல், பாதிக்கப்பட்டவர்களுக்க இழப்பீட்டில் நடக்கும் ஒழுங்கீனங்களும் ஏமாற்றும் – அதற்கான நிவாரணத்தைப் பெறுவதில் உள்ள நெருக்கடிகள் என ஏராளம் ஏராளம் பிரச்சினைகள் அறியத்தரப்படுகின்றன. ஒவ்வொன்றும் எத்தகைய அக – புறத் தாக்கத்தை ஒரு சமூக மனிதர்களிடம் உருவாக்குகின்றன. அது எப்படிச் சமூகத துயரமாக உறைந்து கிடக்கிறது. இதையெல்லாம் தாங்கியும் தாங்கிக்கொள்ள முடியாமலும்தான் அந்த மக்கள் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் நாம் வாழும் இந்த உலகத்தில்தான் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு நம்முடைய வினைகள் என்ன? என்பதைக் கேள்விகளாக எழுப்பி விடுகின்றன இந்தக் கதைகள். ஒவ்வொரு சொல்லையும் படித்துச் செல்லும்போது நம்முடைய மனம் கனக்கத் தொடங்கி விடுகிறது. குற்றவுணர்ச்சியும் கோபமும் சமாந்தரமாக எழுகின்றன. நம்முடைய ரத்தக் கொதிப்பின் அளவு உயர்கிறது. தனியே ரத்தக் கொதிப்பை அதிகரிக்கப்பண்ணுவதுதான் இந்தக் கதைகளா என்றால், நிச்சயமாக இல்லை. நிதானமாகச் சிந்தியுங்கள். அந்த மக்களைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களோடு இணைந்திருங்கள். அவர்களுக்காக போராடுங்கள் – குரல் எழுப்புகள். அவர்களும் சக மனிதர்கள். சக மனிதர்களின் மீது கொள்ளும் நேசமே மானுட மகத்துவம். அதுவே அன்பின் அடையாளம். அதற்கே அன்புறவிலும் பண்பாட்டிலும் இடமுண்டு. பண்பாடு என்பதே சக மனிதர், சக சமூகத்தினரின் மீது கொள்ளும் கரிசனையிலும் அன்புறவிலும் அவர்களுடைய துயர் களைதலிலும்தான் சிறப்புறுகிறது என்பதை உணர்த்துகின்றன. அப்படி உணர்த்தப்பட்டதானால்தான் இந்தக் கதைகளைப் பற்றிய இந்த வார்த்தைகளை எழுத முடிகிறது. அவையே இந்தச் சொற்களை இங்கே தூண்டுகின்றன. தவச்செல்வனுடைய கதைப்பரப்புகளில் மேலும் சில அம்சங்களைக் காணலாம். சூழல் தேசியவாதம் குறித்த அக்கறையும் அக்கறைப்படுத்தலும். மலையக மக்களின் சமகால அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு, வாழ்க்கைச் சித்திரங்கள். மலையக மக்களின் தேசிய இருப்பும் சவால்களும். மலையக மக்களின் தலைமுறைகள் – அவற்றிடையே ஏற்படுகின்ற மாற்றங்களும் மோதல்களும் விலகல்களும். இவை பற்றித் தனித்தனியாகப் பார்க்க வேண்டும். விரிவு காரணமாக இங்கே அதை இந்த அடையாளப்படுத்துலோடு நிறுத்திக் கொள்கிறேன். வெவ்வேறு கதைப் பரப்புகளிலும் கவனம் கொண்டிருப்பது தவச்செல்வன் கதைகளின் முக்கியத்துவம் அல்லது தனித்துவம் எனலாம். ஆனால், மலையகத்தில் ஏற்பட்டுள்ள மத்தியதர வர்க்க வளர்ச்சியையும் அதனுடைய விலகிச் செல்லும் அக – புற நிலைகளையும் கவனிக்கவில்லை என்பது ஒரு குறையே. ஆனால், அவருடைய கட்டுரைகளிலும் ஆய்வுகளிலும் இதைப்பற்றிய முறையான அவதானங்கள் உண்டு. கதைகளில்தான் இல்லை. அதைப்போல, தோட்டங்கள் காலனித்துவம், சுதேச அரசு, அரசுடமை, கம்பனிகள் ஆகியவற்றின் கீழ்மாறிச் சென்றதைப் பற்றிய சித்திரங்களும் பெரிய அளவில் இல்லை. ஒரு சமூகத்தின் அத்தனை பிரச்சினைகளையும் உள்ளெடுத்துப் படைப்பாளி பேச வேண்டும் என்ற நிபந்தனையை யாரும் விதிக்க முடியாது. அப்படியான கேள்விகளையும் எழுப்ப முடியாது. அப்படிச்செய்வது அவருடைய முழுநேர வேலையும் அல்ல. அவருடைய பரப்பெல்லைக்குள் கவனப்படுத்தய விடயங்களைக் குறித்து, அவற்றின் செழுமை, உள்ளடக்குகள், அவை பேச விழைகின்ற அரசியல், பண்பாட்டு விடயங்கள் போன்றவற்றின் மீதுதான் நாம் கவனம் செலுத்திப் பேசலாம். அவற்றில் குறித்த எழுத்தாளருடைய வெற்றி – தோல்விகளைப் பற்றி உரையாடலாம். அப்படிப் பேச விளையும்போது மலையக எழுத்தாளர்களில் தவச்செல்வனுடைய இடம் வலியது. அவருடைய கதைகள் மலையக இலக்கியத்தில் தனி முகமுடையவை. இதை மேலும் சான்றுப்படுத்துவதாக இருந்தால், மக்கள் அழகியல் என்று உணர்ந்து கொள்வதற்கான பண்பாட்டு அம்சங்கள், வாழ்க்கைக் கோலங்கள், மக்களுடைய பண்பு, நம்பிக்கைகள், வரலாறு, நெருக்கடிகளை எதிர்கொண்டு வாழும் திறன் போன்றவற்றைப் படைப்பாக்கி, மலையக மக்களின் முழுச்சித்திரமொன்றை நமக்குத் தருகிறார். ஒரு கதைத் தொகுதியை வாசிப்பதன் வழியாக அந்தச் சமூகத்தின் வரலாறு, பண்பாடு, அதனுடைய மொழி, சடங்குகள், அந்த மக்களுடைய வாழ்க்கை, தொழில்முறைகள், அவற்றில் ஏற்படுகின்ற சவால்கள், அவர்களைப் பலியிடுகின்ற அல்லது ஈடேற்றுகின்ற அரசியல், அவர்களிடையே ஏற்படுகின்ற வளர்ச்சி, சூழல் தாக்கங்கள், அமைவிடம், இயற்கையின் செல்வாக்கு எனப் பலதையும் அறிய முடியுமாயின் அது மிகப் பெரிய வெற்றியே. இவற்றில் குறித்த சமூகத்தின் ஆன்மா தொழிற்படும் விதமே அதனுடைய வரலாறாகவும் பண்பாடாகவும் வளர்ச்சியாகவும் அமைகின்றது. அதைக் கண்டுணர்வதே எழுத்தாளரின் சிறப்புப் பணி. தவச்செல்வனிடம் இதைச் செழிப்புறக் காண்பது மகிழ்ச்சிக்குரியது. மலையகக் கதைகள் ஈழத்தின் பிற தமிழ்மொழிச் சமூகங்களான இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்களின் கதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. வாழிடம் (திணை –குறிஞ்சி), மொழி (தமிழ் மொழியாக இருந்தாலும் ஆட்களின் பெயர்கள், சொற்கள் போன்றவை தமிழ்நாட்டுடன் நெருக்கமானவை அல்லது தமிழ்நாட்டைச் சாரப்படுத்தியவை), பண்பாடு (இதுவும் ஏறக்குறைய தமிழகப் பண்பாட்டை அடியொற்றியதே), அரசியல், வாழ்க்கை அமைப்பு (இதிலும் தமிழகச் சாயல்கள் உண்டு), நம்பிக்கைகள், சவால்கள் எனப் பலவற்றாலும் வேறானவை. ஆனால், மலையக இலக்கியமும் ஈழ இலக்கியமே. அந்த மக்களும் இன்று இலங்கையின் பன்மைச் சமூகங்களில் ஒன்றாகவே உள்ளனர். தேசிய அரசியற் பிரச்சினைகளில் அவர்களுடைய பங்கேற்பும் இடையூடாட்டமும் உண்டு. மட்டுமல்ல, வலிமையானது. பிரத்தியேகத்தன்மைகள்தான் அவர்களைத் தனிச் சமூகத்தினராகவும் தனிப் பண்பாட்டுக்குரியவர்களாகவும் தனியான இலக்கிய அடையாளத்தைக் கொண்டவர்களாகவும் தனித்துக் காண்பிக்கின்றன. இந்தக் காண்பித்தலை – உணர்தலை – தவச்செல்வன் கதைகள் முறையாகச் செய்கின்றன. ஆபிரிக்க இலக்கியம், அரபு இலக்கியம், ஐரோப்பிய இலக்கியம், தமிழிலக்கியம், வங்க இலக்கியம் என்றெல்லாம் அடையாளப்படுத்திக் கொள்வதில் அந்தப் பிரதேசங்களும் அங்குள்ள அரசியல், பண்பாடு, தொழில்முறை போன்றவை எப்படிச் செல்வாக்குப் பெறுகின்றனவோ, அப்படியான அடையாளப் பெறுமானத்தை மலையக இலக்கியமும் கொண்டுள்ளது. மலையக இலக்கியத்தின் பொதுப் பண்பில் ஒன்று, அவற்றைப் படிக்கும்போது கொள்ளும் துயரமும், துயரத்துக்கு எதிரான தூண்டலும் மட்டுமல்ல, இன்னொன்றும் உள்ளது. அது இந்த மக்களைத் தங்களுடைய முதலாளித்துவப் பொருளாதார உற்பத்திக்காக நாடு விட்டு நாடு (தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு) மாற்றிக் கொண்டு வந்து கைவிட்டுச் சென்ற பிரித்தானியர்கள் கொள்ளக் கூடிய குற்றவுணர்ச்சியாகும். அதை எழுப்பக் கூடிய சாட்சியங்களே மலையக இலக்கியத்தின் ஒரு பொருள். இந்தக் கதைகளைப் படிக்கும் ஒரு பிரித்தானியர் தமது மூதாதையர் இழைத்த கொடுமைக்கும் அநீதிக்குமாக வெட்கப்படுவார், துயருறுவார். தலைமுறைகளாக – நூற்றாண்டாகத் தலையையும் தோள்களையும் அழுத்தும் சுமையோடு தங்களின் முன்னே – எதிரே – உற்று நோக்கியவாறு நிற்கும் மனிதர்கள் அவர்களுடைய அகக் கண்களில் தோன்றுவர். அது அவர்களுடைய இதயத்தை உருக்கும். அது இதயமாக இருந்தால். கண்களில் நீரைக் கசியச் செய்யும். அவை ஒளியுடைய கண்களாக இருந்தால். இன்னொன்று அந்த மக்களை வேண்டா வெறுப்போடு ஏற்றுக் கொண்ட இலங்கை ஆட்சியாளர்கள் கொள்ளக் கூடிய குற்றவுணர்ச்சி. இந்த மனிதர்கள் 200 ஆண்டுகளாக தங்களுடைய இரத்தத்தை அட்டைக்கும் நாட்டுக்குமாகச் சிந்தியிருக்கிறார்கள். அட்டையும் இந்த நாடும் அவர்களுடைய இரத்தத்தை உறிஞ்சியிருக்கின்றன. அதற்குப் பதிலாக இந்த மனிதர்களுக்கு எதையும் இந்த நாடு கொடுக்கவில்லை. அந்தக் குற்றவுணர்ச்சி தலைமுறைகள் கொள்ளக் கூடியது. அதற்கடுத்து, சக மனிதர்கள் என்ற அடிப்படையில் இலங்கைத் தமிழர்களும் முஸ்லிம்களும் கொள்ள வேண்டிய குற்றவுணர்ச்சி. இதை விட முக்கியமானது, இந்திய ஆட்சியாளர்களும் தமிழக ஆட்சித்தரப்பினரும் கொள்ள வேண்டிய குற்றவுணர்ச்சி. ஒடுக்கப்பட்டோரின் இலக்கியத்தில், பிரதானமாக இருக்கும் ஓரம்சமும் அடிப்படையும் இந்தக் குற்றவுணர்ச்சியைத் தூண்டுதல் ஆகும். அது எதிர்த்தரப்பையும் (எத்தரப்பையும்) பணிய வைக்கக் கூடியது. தவச்செல்வனும் மலையக இலக்கியமும் அழகிய பிராந்தியத்தின் (வளமான குறிஞ்சித் திணையின் – மலைநாட்டின்) மலர்ச் செண்டுகளை ஏந்தி நிற்கவில்லை. இலங்கையின் விக்டோரியா என்று வர்ணிக்கப்படும் அழகிய – செழிப்பான நுவெரெலியாவிலும் அதைச் சூழலும் மலர்கின்ற அழகிய ரோஜாக்களில் நிரம்பியிருப்பது பனித்துளிகளோ, மழைத்துளிகளோ அல்ல. அது அங்குள்ள மலையக மக்களின் கண்ணீர்த்துளிகளும் வியர்வைத்துளிகளும். மலர்த் தோப்பென விரிந்திருக்கும் கண்டி – பெரெதெனியாவில் மலர்கின்ற மலர்களில் நீங்கள் கண்டு வியக்கும் அழகின் அடியில் கேட்பது மலையக மக்களின் நூற்றாண்டுகாலத் துயரப் பாடலிசை. மலையகத்தில்தான் மிகச் செழிப்பான மரக்கறிச் செய்கை நடக்கிறது. ஆனால், அங்குள்ள மலையக மக்களின் வீடுகளில் கஞ்சிப் பானையே உண்டு. அதைப் பொங்கல் பானையாக்குவதற்கு தவச்செல்வன்கள் தலைமுறைகளாக முயற்சிக்கிறார்கள். அதற்குச் சாட்சியமான சொற்களே இந்தக் கதைகளிலும் கதைகளாகவும். தலையில் மூங்கில் கூடை இடுப்பில் ரெட்டு படங்கு மட்டக்குச்சி மட்டக்கத்தி அவளை விடியல் அலங்கரிக்கிறது அவளின் விடியலில் ஆகத்துயரம் பிள்ளை மடுவத்தில் தேவீயின் குழந்தையை கைவிடுதல் தான் என்ற கவிதையை எப்போதோ படித்த நினைவு இங்கே எழுகிறது. இது காலத்துயரா? மானுடத்தின் இயலாமையா? 00 சு. தவச்செல்வன் புத்தகங்களை நூலகம் தளத்தில் வாசிக்க , கருணாகரன் https://akazhonline.com/?p=11032

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.