Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு : அரசுக்கு நெறியியல், அறநெறிசார் சட்டபூர்வத்தன்மை இல்லை - கிறிஸ்தவ பாதிரிமார்கள், செயற்பாட்டாளர்கள் 61 பேர் கூட்டாகக் கண்டனம் 01 Jan, 2026 | 06:15 PM (நா.தனுஜா) பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளடங்கலாக அடக்குமுறை சட்ட வடிவங்களை நீக்குவோமென வெளிப்படையாக வாக்குறுதி அளித்திருந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தற்போது கருத்துச் சுதந்திரத்தையும் நபர்களின் தனியுரிமையையும் அச்சுறுத்தலுக்குள் தள்ளக்கூடிய பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் மிக மோசமான சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கின்றது. இதன்மூலம் தற்போதைய அரசுக்கும் நெறியியல் மற்றும் அறநெறிசார் சட்டபூர்வத்தன்மை இல்லை என்பது தெளிவாகியுள்ளதாக கிறிஸ்தவ பாதிரிமார்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் 61 பேர் கூட்டாகக் கரிசனை வெளியிட்டுள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்' எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார். இந்நிலையில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பில் தமது கரிசனைகளையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தி அருட்தந்தை மா.சத்திவேல், அருட்தந்தை டெரன்ஸ் பர்ணாந்து, அருட்தந்தை எஸ்.விமலசேகரன், அருட்தந்தை மனுவேல் பிள்ளை டேவிட், அருட்சகோதரி தீபா பர்ணாந்து, செனாலி பெரேரா, சேனக்க பெரேரா, ருக்கி பர்ணாந்து ஆகியோர் உள்ளடங்கலாக அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் (கிறிஸ்தவர்கள்) அடங்கிய 61 பேரின் கையெழுத்துடன் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு அனுப்பிவைத்துள்ள மகஜரில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன வரலாற்று ரீதியாக, பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்காகவோ அல்லது அச்சட்டத்துக்குப் பதிலீடாக முன்னைய அரசாங்கங்களினால் முன்வைக்கப்பட்ட 'பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை' நிராகரிப்பதற்காகவோ மாத்திரம் போராடிய இயக்கங்கள் அல்ல. மாறாக அவர்களது அரசியல் நிலைப்பாடானது, புதிதாக எந்தவொரு அடக்குமுறை சட்ட வடிவங்களும் கொண்டுவரப்படக்கூடாது என்ற தெளிவான மறுப்பையே அடிப்படையாகக் கொண்டமைந்திருந்தது. இந்த நிலைப்பாடு 'பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளடங்கலாக அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் இரத்துச்செய்து, மக்களின் சுதந்திரத்தை உறுதிசெய்வோம்' என்றவாறு தேர்தல் வாக்குறுதியாகவும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறு தெளிவாக அறிவிக்கப்பட்ட உறுதிமொழிகளையும், அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிய தமது அரசியல் வரலாற்றையும் முழுமையாகப் புறக்கணித்திருக்கும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மிகக்கொடூரமானதும், அதிகாரத்துஷ்பிரயோகத்துக்கு வாய்ப்பளிக்கக்கூடியதுமான அம்சங்களை மாற்றமின்றித் தக்கவைத்துக்கொண்டு, மேலும் தெளிவற்றதும் அபாயகரமானதுமான புதிய விதிகளின் மூலம் அரச அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்கு இடமளிக்கக்கூடிய ஒரு சட்டத்தைக் கொண்டுவருவதற்கு இப்போது தயாராகி இருப்பது மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றது. அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் இந்த சட்ட வரைவு கருத்துச்சுதந்திரத்தையும், நபர்களின் தனியுரிமையையும் அச்சுறுத்தல் நிலைக்குள் தள்ளியிருக்கின்றது. இந்தச் சட்டத்துக்கு நாங்கள் நிபந்தனையற்ற எமது முழுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றோம். இது எமது தனிப்பட்ட நிலைப்பாடு மாத்திரமல்ல. மாறாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னர் தேசிய மக்கள் சக்தியும் மக்கள் விடுதலை முன்னணியும் அவர்களாகவே நாட்டுமக்களிடம் அறிவித்த அரசியல் நிலைப்பாட்டின் தொடர்ச்சியாகும். அரசாங்கம் இந்த சட்ட வரைவு குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்கு ஒருமாத கால அவகாசத்தை அறிவித்திருந்தாலும், தேசிய ரீதியில் பல்வேறு அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் நிலவுகின்ற தற்போதைய சூழ்நிலையில், இந்தளவு பரந்துபட்டதும் ஆழமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதுமான ஒரு சட்டத்தைக் கொண்டுவரும் பணிகளை விரைந்து முன்னெடுப்பது உண்மையான ஜனநாயகப் பங்கேற்பையும், மக்களின் அறிவார்ந்த ஒப்புதலையும் பாதிக்கின்றது. எனவே இது முன்னைய ஆட்சிக்காலங்களில் நடந்ததைப்போல, பொதுக் கலந்தாலோசனையை உள்ளடக்காத ஒரு நடைமுறைச்சடங்காகவே தோன்றுகிறது. பயங்கரவாதத்தடைச்சட்டமானது சிறுபான்மையினர், அரசியல் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் அநீதிக்கு எதிராகக் குரலெழுப்புவோரை இலக்குவைத்துப் பிரயோகிக்கப்பட்டதுடன், அது அவர்கள்மீது மட்டுமீறிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி அந்தச் சட்டத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டோரில் இன்றைய அரசை வழிநடத்தும் அரசியல் இயக்கத்தின் உறுப்பினர்களே முக்கியமானவர்களாக இருந்தனர். இத்தகைய பின்னணியில், அடக்குமுறைச் சட்டத்தின் விளைவுகளையும் பாதிப்புக்களையும் அனுபவித்தவர்களே இந்தச் சட்டத்தின் விளைவுகளை விதி விதியாக விளக்கிக் கூறுவது அவசியமற்றதாகும். முன்னர் ஆட்சியில் இருந்த எதிர்க்கட்சிகளுக்கு இந்தச் சட்டத்தை விமர்சிக்கும் அரசியல் உரிமை இருந்தாலும், அவர்களது சொந்த சட்ட வரலாறுகளை நினைத்துப் பார்க்கும்போது, அந்த விமர்சனங்களுக்கு நெறியியல் நம்பகத்தன்மை இல்லை என்பதையும் நாம் தெளிவாகக் கூறுகின்றோம். அதேபோன்று அடக்குமுறை சட்ட வடிவங்களை நீக்குவோம் என வெளிப்படையாக வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இவ்வாறானதொரு சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கும் தற்போதைய அரசுக்கும் நெறியியல் மற்றும் அறநெறிசார் சட்டபூர்வத்தன்மை இல்லை என்பது தெளிவாகியுள்ளது. இந்த மகஜரில் கையொப்பமிட்டுள்ள நாமனைவரும் பயங்கரவாதத்தடைச்சட்டம் கொண்டுவரப்பட்ட நாள் முதல், அதற்கும் அதனை வேறு பெயர்களிலும் வடிவங்களிலும் மீண்டும் உருவாக்கும் சகல முயற்சிகளுக்கும் எதிராகத் திடமான எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்திருக்கின்றோம். எமது கிறிஸ்தவ நம்பிக்கையிலும் ஆன்மீகத்திலும் ஆழ்ந்திருக்கும் நாம், அநியாயத்தை சட்டமாக்கி, அரச அதிகாரத்தின் மட்டுமீறிய விரிவாக்கத்தை இயல்பாக்கம் செய்யும் சட்டங்களுக்கு எதிரான ஒரு அறநெறிசார் சாட்சியமாக இந்த மகஜரை முன்வைக்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/234972
  3. பௌத்த சின்னங்கள் பரப்பப்படுவது வரலாற்று அடிப்படையற்றது! - தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் 01 Jan, 2026 | 01:01 PM மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்ட பிராந்திய உரிமைகோரல்களும், தமிழ் பிராந்தியங்களில் சிங்கள பௌத்த சின்னங்கள் பரப்பப்படுவதும் வரலாற்று அடிப்படையற்றவை என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. புதுவருட தினமான இன்று (ஜன. 1) வவுனியாவில் இச்சங்கத்தினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். அவர்கள் மேலும் கூறுகையில், இன்று ஜனவரி 1, 2026, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் பிள்ளைகளின் தாய்மார்களாகிய நாங்கள், வவுனியாவில் 3,237வது நாட்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்கிறோம். இந்தத் தியாகம் மற்றும் மன உறுதி நிறைந்த இடத்திலிருந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளைப் பற்றிய உண்மையை வெளிக்கொணர உதவுமாறும், தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடரும் இனப்படுகொலையை நிறுத்தி இறைமையை மீட்டெடுக்க ஆதரவளிக்குமாறு அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் தொடர்ந்து கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் அரசியல்வாதிகளாக அல்ல, மாறாக உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரும் தாய்மார்களாகவே இந்த தார்மீக அடிப்படையில் பேசுகிறோம். தமிழ் வரலாறு காலனித்துவத்திற்குப் பிந்தைய அரசியலமைப்புகளுடனோ அல்லது திணிக்கப்பட்ட அரசியல் கட்டமைப்புக்களுடனோ தொடங்கவில்லை. நவீன எல்லைகளுக்கு மிக நீண்ட காலத்திற்கு முன்பே, இந்தத் தீவு தமிழ் பேசும் மக்களால் வசித்து ஆளப்பட்ட தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்த பண்டைய காலங்கள் வரை அது நீண்டு செல்கிறது. இந்தத் தீவில் தமிழர்களின் இருப்பு, பிற்கால அனைத்து அரசியல் மற்றும் இனக் கட்டுமானங்களுக்கும் முந்தையது. ஆயினும்கூட, சமகால தமிழ் தலைவர்கள் பலர் இந்த யதார்த்தத்தைப் புறக்கணித்து, அதற்குப் பதிலாக தனிப்பட்ட வசதி, வெளி அழுத்தங்கள் அல்லது மேட்டுக்குடி நலன்களில் வேரூன்றிய அரசியல் சூத்திரங்களை ஊக்குவிக்கின்றனர். கடந்த மாதம், அமெரிக்கா யாழ்ப்பாண விமான நிலையத்தில் இரண்டு முறை பெரிய இராணுவ விமானங்களைத் தரையிறக்கி மனிதாபிமான உதவிகளை வழங்கியதன் மூலம் தமிழ் பொதுமக்களின் மீது உறுதியான அக்கறையை வெளிப்படுத்தியது. இருப்பினும், எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியோ அல்லது 'சிவில் சமூக அமைப்பு' என்று சொல்லிக்கொள்ளும் அமைப்போ இந்த ஆதரவை பகிரங்கமாக அங்கீகரிக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள் ஆகிய நாங்கள் மட்டுமே நன்றி தெரிவித்தோம். இது தமிழர் மத்தியில் உள்ள தார்மீக மற்றும் தலைமைத்துவத் தோல்வியை அம்பலப்படுத்தியது. தென்னிந்தியா மற்றும் தமிழ் தீவான இலங்கையை உள்ளடக்கிய தமிழகத்தில் ஒரு பழங்கால சிங்கள இனம் இருந்ததற்கான வரலாற்று அல்லது தொல்பொருள் சான்றுகள் எதுவும் இல்லை. தமிழ் இனம் சைவ சமயத்தைப் பின்பற்றியது. அதைத் தொடர்ந்து தமிழ் பௌத்தத்தைப் பின்பற்றியது. பின்னர் மீண்டும் சைவ சமயத்திற்கே திரும்பியது. இந்த மாற்றங்கள் மணிமேகலை உட்பட தமிழ் இலக்கியங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்ட பிராந்திய உரிமைகோரல்களும், தமிழ் பிராந்தியங்களில் சிங்கள பௌத்த சின்னங்கள் பரப்பப்படுவதும் வரலாற்று அடிப்படை அற்றவை. சிங்கள மக்கள் தெற்கில் சுதந்திரமாக வாழலாம், ஆனால் வடக்கு - கிழக்கு வரலாறு, கலாசாரம் மற்றும் தொடர்ச்சியான இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அது தமிழ் தேசத்திற்கு சொந்தமானது என்றனர். https://www.virakesari.lk/article/234926
  4. Today
  5. லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு Jan 1, 2026 - 09:36 PM இன்று (1) முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் புதிய விலை 4250 ரூபாவாகும். அதேநேரம் 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 65 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் புதிய விலை 1710 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjvn0ngl03ero29nm693hxhc
  6. 22 நாடுகளிடம் இருந்து இலங்கைக்கு நிவாரண உதவி Jan 1, 2026 - 04:52 PM டித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக 22 வெளிநாடுகளிலிருந்து மனிதாபிமான உதவிகள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள் நாட்டிற்கு கிடைத்துள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வெளிநாட்டு உதவிகளை முறையாக முகாமைத்துவம் செய்யவும், ஒருங்கிணைக்கவும் மற்றும் அவற்றை மக்களுக்கு வினைத்திறனுடன் பகிர்ந்தளிப்பதை உறுதி செய்யவும் ஜனாதிபதியினால் வெளிநாட்டு நிவாரண ஒருங்கிணைப்புக்கான சிரேஷ்ட அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையிலான இந்தக் குழு, பல சந்தர்ப்பங்களில் ஒன்றுகூடி நிவாரணப் பணிகளில் முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் அதிகபட்ச வினைத்திறனை உறுதி செய்வதற்குத் தேவையான தீர்மானங்களை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, விமான நிலையம் மற்றும் துறைமுகங்கள் ஊடாக நாட்டிற்கு கிடைத்துள்ள வெளிநாட்டு உதவிகள் ஒருகொடவத்தை களஞ்சிய வளாகத்தில் பாதுகாப்பாகவும் முறையாகவும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த நிவாரணங்களைச் சரியான நேரத்தில் முறையாக வழங்குவதற்கான பொறிமுறையானது, தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையத்தின் ஊடாக தற்போது வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjvcuuq403e7o29n1utsjkhl
  7. 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய பிரான்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் Published By: Digital Desk 3 01 Jan, 2026 | 01:56 PM 2026 ஆம் ஆண்டில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய பிரான்ஸ் இரண்டாவது முறையாக முயற்சிக்கும் என அந்நாட்டு ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டன. இளம் வயதினர் கல்வி கற்கும் பாடசாலைகளில் கையடக்க தொலைபேசிகளுக்கு ஏற்கனவே கட்டுப்படுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை எப்போதும் கட்டாயமாக்கப்படவில்லை. 2023 ஆம் ஆண்டு பிரான்ஸ் அரசாங்கம் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு டிஜிட்டல் பயன்பாடு வயது தொடர்பான சட்டத்தை அறிமுகப்படுத்த முயற்சித்தது. இந்த சட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்தது. ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் ஆதரவுடன் சட்ட வரைபு ஒன்றை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஏஎப்பி செய்தி வெளியிட்டுள்ளது. இது டிஜிட்டல் திரைகளை அதிகமாகப் பயன்படுத்துவதால் இளைஞர்களுக்கு ஏற்படும் அபாயங்களைக் காட்டும் ஏராளமான ஆய்வுகளை மேற்கோள் காட்டுகிறது. ஜனவரி மாதம் ஆரம்பத்தில் சட்டத்தை சட்ட ஆய்வுக்கு சமர்ப்பிக்கலாம் என பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதேவேளை, இந்த தடை செப்டம்பர் மாதம் ஆரம்பத்தில் நடைமுறைக்கு வரலாம் என ஏப்பி செய்தி வெளியிட்டுள்ளது. தடையற்ற ஒன்லைன் அணுகல் சிறுவர்களை "பொருத்தமற்ற உள்ளடக்கத்திற்கு" வெளிப்படுத்துவதாகவும், சிறுவர்களும் சைபர்புல்லிங் மற்றும் பிற தீங்குகளுக்கு இலக்காகலாம் என்பதைக் குறிப்பிடுகிறது. முன்மொழியப்பட்ட சட்டம் சமூக ஊடக தளங்கள் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு தங்கள் சேவைகளை வழங்குவதை சட்டவிரோதமாக்கும், மேலும் மொபைல் போன் பயன்பாட்டின் மீதான தடையை உயர்தர பாடசாலைகளுக்கும் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/234921
  8. நல்லது, மாற்று கருத்து இல்லை அண்ணா. தாயகத்தில் அவர் பெயரைச் சொல்லி செயற்படமுடியாது என்பதை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். யாழிணையத்தில் அவர் பெயரால் இந்த திட்டம் செயற்படுத்தப்படுகிறது என்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது என நம்புகிறேன். மூன்று மாவீரர் (அதனை வெளிப்படையாக சொல்வதில்லை) கொண்ட குடும்பத்திற்கு ஏற்கனவே காரைநகரில் மலசலகூடம் திருத்திக் கொடுத்து மாதாந்தம் குடிநீரும் வழங்கி வருகிறோம். தந்தையார் பக்கவாதம், பார்வையிழப்பு. மகள் பார்வைக்குறைபாடு. அடுத்த மகள் மனவளக் குறைபாடு. மூத்த மகளுக்கும் பார்வைக் குறைபாடு, அவருக்கு ஒரு மகன் மூட்டை தூக்கும் தொழில் செய்கிறார். இவர்கள் பக்கத்தில் ஓர் வீட்டில் இருக்கின்றனர்.
  9. சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் பலி - 100 பேர் காயம் Jan 1, 2026 - 04:26 PM சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தீப்பரவலில் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சுவிட்சர்லாந்தில் உள்ள கிரான்ஸ்-மாட்டானா நகரில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றிலேயே அந்த நாட்டு நேரப்படி அதிகாலை 1.30 மணியளவில் வெடிப்பு ஏற்பட்டு தீப்பரவல் ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது. எனினும் இது ஒரு பயங்கரவாத தாக்குதல் அல்லவென முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுவதாக சர்வதேச ஊடங்கள் குறிப்பிடுகின்றன. தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmjvbxxw803e6o29nqko2pzbo
  10. அனைத்து தமிழீழ சொந்தங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
  11. டக்கி ஜனநாயக நீரோட்டத்தில் கலந்துவிட்டார் என்று நம்பவைத்து பாதாள சாக்கடையில் குதித்துவிட்டார் என்பதுதான் உண்மை. அரசியலில் இருந்தபோது எஜமானர்களின் ஏவல்நாயாகவும் சேவை செய்து தனக்காகவும் சிங்கள எஜமானருக்காகவும் அரங்கேற்றிய அராஜகங்களிலும் கொலை கடத்தல்கலிலும் சுமார் 60% வீதமான வேலையை பாதாள மாபியாக்களை வைத்தே முடித்துக்கொண்டார்.
  12. கோசான் ..புதிய திரியில் சில எழுத்துப் பிழைகள் இருக்கிறது. கொஞ்சம் கவனத்தில் எடுத்தால் நன்று.
  13. கீழ்கண்ட திரியில் ஆலோசித்து ஏற்று கொண்ட வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான திரி. பிகு இதை கேணல் சங்கர் ஞாபகார்த்த அடிப்படை வசதி திட்டம் என பெயர் சூட்ட விரும்புகிறேன்ழ் புலத்தில் மிகபெரிய வசதி வாய்ப்பை உதவி விட்டு நாடு திரும்பிய முதலாவது வான்படை சிறப்புத்தளபதி கேணல் சங்கர் பெயரலால் இதை செய்வதில் அனைவரும் உடன்படுவீர்கள் என நம்புகிறேன். மாற்று கருத்து இருப்பின் தெரியப்படுத்தவும்.
  14. ஆமோதிக்கிறேன். துளி துளியாய் பகுதியில் புதிய திரி தீறக்கிறேன்.
  15. அனுரா சும்மா சொல்லகூடாது நல்லாத்தான் அரசியல் செய்கிறார் . விட்டால் வத்திகானில் கூட சிங்கள புத்தரை பிரதிச்ட்டை பண்ணுவினம் .
  16. பாவம் இவர் அப்பாவி. விகாரை எங்கே கட்டப்பட்டது, எப்படி கட்டப்பட்டது என்பது கூட தெரியாமல் விகாராதிபதியாக இருந்துள்ளார்.
  17. ஒரு கொலைகாரனுக்கு வெள்ளை அடிப்பு. இவரின் வண்டவாளங்கள் வெளியில் வரப்போகிறது, இதை எழுதியவரும் வெகு விரைவில் கைதுசெய்யப்படலாம். இவர் எஜமானே இவரை போட்டுக்கொடுப்பார். தனது சொந்த பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்ட துப்பாக்கி, பாதாள போதை தலைவனிடம் சென்றுள்ளது, அதற்கு சரியான விளக்கம் கொடுக்க முடியவில்லை இவரால், வைத்தியசாலையில் பொய் படுக்கிறார். என்ன செய்தாலும் யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை, விசாரிக்கப்போவதில்லை, தண்டிக்கப்போவதில்லை, எப்போதும் எஜமானின் அடிமைகளாக இருப்பதில் மகிழ்ச்சி, பெருமை என்று நினைத்தப்பாட்டிற்கு அடாவடி புரிந்தவர்கள், தங்களுக்கு சார்பான அரசே மாறி மாறி வரும், இனத்தை அழித்து சேவகம் செய்யலாமென நினைத்து சும்மா இருந்துவிட்டார். அனுராவும் தன்னை பணிக்கு அமர்த்துவார் என கனவு கண்டிருப்பார், மாட்டுப்பட்டு முழிக்கிறார். அவரோடு இருந்தவர்களே அவரை காட்டிக்கொடுக்கிறார்கள். இன்றல்ல, பல ஆண்டுகளாகவே இவரோடு இருந்தவர்கள் இவருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார்கள், அவர்தான் உயர் பீடத்தின் காவலனாயிற்றே, தப்பித்துக்கொண்டார். அவர்கள் சலித்து விடுவார்கள் தான் ஜனநாயக வாதியாக வலம் வந்துகொண்டிருக்கலாமென நினைத்தது தப்பாக போய்விட்டது.
  18. கைதுசெய்யப்பட்ட இலங்கை பேராசிரியரை பணிநீக்கிய அமெரிக்க பல்கலைக்கழகம்! அமெரிக்க அதிகாரிகளால் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ஃபெர்ரிஸ் மாநில பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் பேராசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) உறுதிப்படுத்தியது. முன்னாள் பேராசிரியர் சுமித் குணசேகரவின் பணிநீக்கம் குறித்து பல்கலைக்கழகம் விரிவாக்க கூற மறுத்துவிட்டது. மிச்சிகனின் பிக் ரோபிட்ஸில் உள்ள பல்கலைக்கழகத்தின் சந்தைப்படுத்தல் துறையின் இணைப் பேராசிரியரான சுமித் குணசேகர, நவம்பர் 12 ஆம் திகதி டெட்ராய்டில் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க நிறுவன அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குணசேகரா இலங்கையிலிருந்து ஆவணமற்ற முறையில் குடியேறியவர் என்றும் அவர் ஒரு பாலியல் குற்றவாளி என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர், குணசேகராவை நிர்வாக விடுப்பில் அனுப்பியதாக ஃபெர்ரிஸ் மாநில பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந் நிலையில் அவர் குறித்து பதிவிட்டுள்ள உள்நாட்டு பாதுகாப்பு துறை, பல ஆண்டுகளாக, கனடாவில் தண்டனைகள் இருந்தபோதிலும், அமெரிக்காவில் சட்டப்பூர்வ அந்தஸ்தைப் பெற தகுதியற்றவராக கணிக்கப்பட்ட போதிலும் குணசேகரா விண்ணப்பங்கள் மற்றும் மேல்முறையீடுகளுடன் எங்கள் குடியேற்ற முறையை கையாள பலமுறை முயன்றார் – என்று கூறியுள்ளது. https://athavannews.com/2026/1458006

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.