Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. சீமான் தனது பரப்புரையில் வழமைபோல் அனைவருக்கும் அரசவேலை என அடித்து விட… கூட்டத்தில் இருந்தே ஒருவர் எழும்பி, இந்த ஊரிலேயே 2000 வேலை தேடி வெளி ஊர் போறாங்க அனைவருக்கும் அரச வேலை எப்படி சாத்தியம் என கேள்வி எழுப்புகிறார். சீமான் பதில் 1: நீ இப்படி போய் திமுக கூட்டத்தில் கேட்பியா பதில்2: குடுப்பேன், குடுப்பேன் (எப்படி என்பதுதான் கேள்வி) கேள்வி கேட்டவரை சீமான் கண் முன்பே நாதக குண்டர்கள் அடக்கி வெளியேற்றுகிறார்கள். பொலிஸ் வந்து அழைத்து போகிறது. #அன்பான சர்வாதிகாரி
  3. போரில் அடைய முடியாத இலக்குகளை 15 அம்ச பட்டியலின் ஊடாக அடைய முயற்சிக்கிறது அமெரிக்கா ; “சமரசத்துக்கோ சரணடைதலுக்கோ வாய்ப்பில்லை" - ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் 30 Mar, 2026 | 12:34 PM “அமெரிக்கா, அது விரும்பியவற்றை, போரின் ஊடாக அடைய முடியாத நிலையில், அதன் இலக்குகளை 15 அம்ச நிபந்தனைப் பட்டியலில் முன்வைத்து, அவற்றை தன் ராஜதந்திரத்தின் மூலம் அடைய முயற்சிக்கிறது என ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாப் தெரிவித்துள்ளார். “அமெரிக்கா ஒருபுறம் பேச்சுவார்த்தைக்காக அழைப்பு விடுத்துக்கொண்டு, மறுபுறம் இரகசியமாக தரைவழித் தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளது. அமெரிக்க வீரர்கள் ஈரான் மண்ணில் தரை இறங்கவிருப்பதை எங்களது படையினர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர்களை அழிக்கத் தயாராக உள்ளோம்” என்றும் அவர் சூளுரைக்கிறார். மேலும், ஈரானுடனான மோதல் ஒரு நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ளது என்றும் இந்த சந்தர்ப்பத்தில் அமெரிக்கா முன்வைத்த நிபந்தனைகளுக்கு அமைய சரணடையவோ பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவோ ஈரான் முன்வராது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தத் தொடங்கிய நாள் முதல் ஈரானில் அரசாங்கத்துக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதை சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய பொது முழக்கங்களும் ஆர்ப்பாட்டங்களும் ஈரானின் இராணுவ நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இனி சமரசம் இல்லை, சரணடைதலும் இல்லை, அமெரிக்காவுக்கு எதிராக போராடு” என்ற பேரணியினரின் முழக்கத்தின் வாயிலாக, அவர்கள் நாட்டின் ஏவுகணைகளுக்கு வலிமை சேர்த்திருக்கிறார்கள்” என்றும் சபாநாயகர் கூறியுள்ளார். பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தத் தொடங்கியதிலிருந்து ஈரானும் பதில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், அமெரிக்கா ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் குறித்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. 15 அம்ச நிபந்தனைகளை பட்டியலிட்டு அமெரிக்கா அமைதி ஒப்பந்தத்தை முன்வைத்தது. அதற்காக 10 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் என அறிவித்தது. அதேவேளை இரு தரப்புக்கும் இடையே தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்ந்தவண்ணமே உள்ளன. பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்து வரும் அதே சந்தர்ப்பத்தில் மேற்காசியாவில் அமெரிக்க படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய பதற்றமான சூழ்நிலையில் அமெரிக்கா ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கிறது என்ற தகவல் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் இந்தத் திட்டத்தையும் இராணுவ நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் எதற்கும் அடிபணியப் போவதில்லை என்றும் ஈரான் பதிலளித்துள்ளது. https://www.virakesari.lk/article/242294
  4. இயற்கையாக தேனீக்கள் கூடுகட்டி சேகரிக்கும் தேன் கெடாது. அந்தத் தேனில் சேமிக்கப்படும் எந்தப் பொருட்களும் கெடாது.
  5. அதிக வெப்பம்: பாடசாலைகளுக்கான விசேட வழிகாட்டல்கள் வௌியீடு Mar 30, 2026 - 04:21 PM தற்போது நிலவும் வரட்சியான வானிலை நிலவரங்களுக்கு மத்தியில், பாடசாலைச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் விதம் குறித்த பரிந்துரைகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவின் கையொப்பத்துடன் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பின்வரும் பரிந்துரைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்: 1. வெப்பத் தசைப்பிடிப்பு (Heat Cramps) - அதிக வியர்வை காரணமாக நீர்ச்சத்துக் குறைபாடு மற்றும் தாது உப்புகள் வெளியேறுவதால் ஏற்படும் தசைப்பிடிப்பு: கை, கால்கள் மற்றும் வயிற்றில் தசை வலி மற்றும் பிடிப்பு ஏற்படும். முதலுதவி: அனைத்துச் செயற்பாடுகளிலிருந்தும் விலகி, குளிர்ந்த இடத்தில் ஓய்வெடுத்தல் மற்றும் போதுமான அளவு நீர் அருந்துதல் (ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் அரை கிளாஸ் வீதம்). 2. வெப்பக் களைப்பு (Heat Exhaustion) - அதிக வெப்பநிலை காரணமாக ஏற்படும் கடும் சோர்வு: அதிக வியர்வை, உடல் தளர்ச்சி, மயக்கம். முதலுதவி: அனைத்துச் செயற்பாடுகளிலிருந்தும் விலகி, குளிர்ந்த இடத்தில் ஓய்வெடுத்தல் மற்றும் போதுமான அளவு நீர் அருந்துதல் (ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் அரை கிளாஸ் வீதம்), குளித்தல், குளிர்ந்த நீரால் உடலைத் துடைத்தல். 3. வெப்பத்தாக்கம் (Heat Stroke) - உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் செயல்முறை செயலிழப்பதால் ஏற்படும் நிலை: அதிக உடல் வெப்பநிலை, நாடித்துடிப்பு மற்றும் சுவாச வேகம் அதிகரித்தல், மனக்குழப்பம், தலைவலி, வலிப்பு, மயக்கமடைதல். முதலுதவி: குளிர்ந்த நிழலான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல், உடலில் உள்ள தேவையற்ற இறுக்கமான ஆடைகளை அகற்றுதல்/தளர்வு செய்தல், குளிர்ந்த நீரால் உடலைத் துடைத்தல். இது மிகவும் ஆபத்தான நிலை என்பதால் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் 1990 ஐ அழைத்து 'சுவசரிய' நோயாளர் காவு வண்டி சேவையின் உதவியைப் பெறவும் அல்லது அருகிலுள்ள வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியைப் பெற நடவடிக்கை எடுக்கவும். பாடசாலைச் செயற்பாடுகளை முன்னெடுத்தல்: அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் மாணவர்கள் வெளிப்புற/விளையாட்டு மைதானச் செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். பாடசாலை இடைவேளையின் போது கடும் வெயில் உள்ள பகுதிகளில் மாணவர்கள் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலதிகமாக நீர் அருந்துவதற்கும் களைப்பைத் தீர்ப்பதற்கும் இரண்டு குறுகிய இடைவேளைகளை வழங்குவது மிகவும் பொருத்தமானது. நண்பகல் வேளையில் அதிக வெப்பநிலை நிலவும் போது அத்தியாவசியமற்ற சந்தர்ப்பங்களில் மாணவர்களை வெளியே அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் (பாடசாலையிலும் வீட்டிலும்). பிராந்திய ரீதியில் நிலவும் வெப்பநிலை/வானிலை நிலவரங்களைக் கருத்திற்கொண்டு இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சிகளைத் திட்டமிடுவது சிறந்தது. வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்: தேவையான அளவு குடிநீரை வழங்குவதோடு, சுத்தமான நீரை அதிகளவு பருகுவதற்கு மாணவர்களைத் தூண்டுதல். பாடசாலையில் போதுமான நீர் வசதி இல்லையெனில் அதற்கு மாற்று வழிகளைக் கையாளுதல் (மாவட்ட அனர்த்த முகாமைத்து ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் ஊடாக மாவட்டச் செயலாளரின் உதவியைப் பெறலாம்). வகுப்பறைகளில் காற்றோட்டம் சீராகக் கிடைப்பதை உறுதி செய்ய கதவு, ஜன்னல்களைத் திறந்து வைத்தல். மின்விசிறிகளைப் பயன்படுத்தினால் சுத்தமான காற்று கிடைக்கக் கதவு, ஜன்னல்கள் கட்டாயம் திறந்திருக்க வேண்டும். மாடிக்கட்டிடங்கள் அல்லது தகரக் கூரையிடப்பட்ட அதிக வெப்பம் நிலவும் வகுப்பறைகளைத் தற்காலிகமாகப் பொருத்தமான இடங்களுக்கு மாற்றுதல். மாணவர்களின் தனிப்பட்ட தயார்நிலை: அவசியமான சந்தர்ப்பங்களில் கழுத்துப்பட்டி (Tie) அணிவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது அதன் முடிச்சைத் தளர்வாக வைத்திருக்க வேண்டும். அரைக்கச்சை (Belt) அணிவதைக் கூடியவரை குறைத்தல். அதிக வெயில் நிலவும் போது தலைக்கவசம் அல்லது குடையைப் பயன்படுத்துதல். அடர் நிற ஆடைகளுக்குப் பதிலாக தளர்வான, மெல்லிய நிற பருத்தி (Cotton) ஆடைகளை அணிதல் (பாடசாலைக்கு பின்னரான செயற்பாடுகளுக்கும் இது பொருந்தும்). வீட்டிலிருந்து வெளியே செல்லும் போதெல்லாம் காய்ச்சி ஆறவைக்கப்பட்ட குடிநீர் போத்தலை எடுத்துச் செல்லுதல். சாதாரண நாட்களை விட அதிகளவு நீர் அருந்துதல். நீருக்குப் பதிலாக இளநீர் போன்ற பானங்களை அருந்துவது சிறந்தது. எக்காரணம் கொண்டும் அதிக சீனி கொண்ட மென்பானங்களை அருந்தக் கூடாது. தாகம் இல்லாவிட்டாலும் அதிகளவு நீர் அருந்துதல் வேண்டும். அதிக வெப்பம் உணரப்படும் போது முகம், கைகள் மற்றும் கால்களைக் குளிர்ந்த நீரால் நனைத்தல். அதிக வெப்பம் காரணமாக ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் ஆசிரியர் அல்லது பெரியவர்களிடம் அறிவித்து உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுதல். https://adaderanatamil.lk/news/cmnd2issh0000356plzog1i7h அதிக வெப்பமான காலத்தில் பாடசாலை நேரத்தை மாற்றலாமே?! 8.30 - 2.30 வரை என்றால் தாக்கம் குறையுமே.
  6. இஷாரா செவ்வந்திக்கு சிஐடி பிரிவுக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் : பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் Published By: Digital Desk 1 30 Mar, 2026 | 04:32 PM (இணையத்தள செய்திப் பிரிவு ) பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு, பொலிஸ் பிரிவுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக பொலிஸார் கடும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனிப்பட்ட ரீதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விஜயம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். அங்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரிகள் அரச அதிகாரிகளாவர் என்றும், அவர்கள் குற்றவாளிகளுடன் எவ்வித தொடர்புகளையும் பேண முடியாது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் இதன்போது வலியுறுத்தினார். பொலிஸ் அதிகாரிகள் தமது கடமைகளைச் செய்யும்போது தமது பொறுப்புகளை பேண வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/242304
  7. இரான் தாக்குதலில் அமெரிக்க ராணுவ விமானம் தகர்ப்பா? புகைப்படத்தின் பின்னுள்ள உண்மை பட மூலாதாரம்,Facebook படக்குறிப்பு,அமெரிக்க ராணுவச் செய்திகளை வெளியிடும் ஒரு பேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படங்கள் முதலில் பகிரப்பட்டதாகத் தெரிகிறது. கட்டுரை தகவல் எம்மா பெங்கெல்லி, ஷயான் சர்தாரிசாதே மற்றும் ஜேக் ஹார்டன் 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் சௌதி அரேபியாவில் உள்ள ஒரு விமானப்படை தளத்தில், அமெரிக்காவின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு விமானம் ஒன்று அழிக்கப்பட்டதை சரிபார்க்கப்பட்ட புகைப்படங்கள் காட்டுகின்றன. அமெரிக்க ராணுவச் செய்திகளை வெளியிடும் ஒரு பேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படங்கள் முதலில் பகிரப்பட்டதாகத் தெரிகிறது. அந்த புகைப்படங்களில் ஈ-3 (E-3) சென்ட்ரி (E-3 Sentry) விமானம் இரண்டாகப் பிளந்து காணப்படுகிறது. சௌதி தலைநகர் ரியாத்திற்கு தென்கிழக்கே சுமார் 100 கிமீ (62 மைல்) தொலைவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். புகைப்படங்களில் காணப்படும் மின்கம்பங்கள், சேமிப்பு அலகுகள் மற்றும் நடைபாதை அடையாளங்கள் ஆகியவை செயற்கைக்கோள் படங்களுடன் ஒத்துப்போகின்றன. இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க மத்திய கட்டளை மையம் இதுவரை பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை. இதுகுறித்து பிபிசி விளக்கம் கேட்டுள்ளது. விமானப்படை தளத்தின் மீது இரான் நடத்திய தாக்குதலில் 12 அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததாகவும், அவர்களில் இருவர் படுகாயமடைந்ததாகவும் அமெரிக்க அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். குறைந்தது இரண்டு அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதமடைந்ததாக 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, இரானின் ஐ.ஆர்.ஜி.சி அமைப்புடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம், ஒரு ஷாஹெட் டிரோன் மூலமாக ஈ-3 விமானம் தாக்கப்பட்டதாகத் தெரிவித்தது. மார்ச் 11 அன்று எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்திலும் இதே இடத்தில் ஒரு ஈ-3 உளவு விமானம் இருப்பதை பிபிசி வெரிஃபை பார்த்துள்ளது. ஆனால் இவை இரண்டும் ஒரே விமானம் தானா என்று எங்களால் கூற முடியாது. சரிபார்க்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்றில் அந்த விமானத்தின் வால் பகுதி எண் தெரிகிறது. இதை வைத்து பிளைட்ரேடார்24 என்ற விமானப் பயணக் கண்காணிப்புத் தளத்தில் சோதித்தபோது, அந்த விமானம் மார்ச் 18 அன்று தளத்திற்கு அருகில் பறந்துகொண்டிருந்தது தெரியவந்தது. வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்ட ஒரு செயற்கைக்கோள் படம், ஈ-3 விமானம் இருக்கும் இடத்திற்கு கிழக்கே சுமார் 1,600 மீட்டர் (5,200 அடி) தொலைவில் விமானப்படை தளத்தின் ஓடுபாதையில் தீப்பிடித்திருப்பதைக் காட்டுகிறது. இந்த புகைப்படங்களில் காணப்படும் விமானம் சேதமடைந்த அதே தாக்குதலின் ஒரு பகுதியா இது என்பது தெளிவாகத் தெரியவில்லை. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஈ-3 உளவு விமானத்தின் ரேடார், நீண்ட தூரங்களில் உள்ள சாத்தியமான இலக்குகளைக் கண்காணிக்க உதவுகிறது (கோப்புப் படம்). போயிங் ஈ-3 அவாக்ஸ் என்பதன் விரிவாக்கம் 'வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு' (AWACS - Airborne Warning and Control System) என்பதாகும். இது போயிங் 707 ரக விமானத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அதன் உடற்பகுதியின் பின்புறத்தில் ஒரு தனித்துவமான சுழலும் ரேடார் தட்டைக் கொண்டுள்ளது. இந்த ரேடார், இலக்குகளை நீண்ட தூரத்திலேயே கண்டறியவும் கண்காணிக்கவும் உதவுகிறது. இதன் மூலம் போர் நடவடிக்கைகளின் போது ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை வழங்க முடிகிறது. அமெரிக்க விமானப்படை வலைத்தளத்தின் படி, அந்த விமானம் "வான்வழிப் போரின் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கும் தக்கவைத்துக் கொள்வதற்கும் வான்வழி நடவடிக்கைகளின் தளபதிகளுக்குத் தகவல்களை வழங்குகிறது". இந்த வகை விமானங்களில் முதலாவது 1977 ஆம் ஆண்டு சேவையில் இணைந்தது. ஈ-3 ரக விமானங்கள் 2035 ஆம் ஆண்டு வரை அமெரிக்க விமானப்படையில் பயன்பாட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd7jvvr7g8qo
  8. Top 10 Best Indian Players Run Outs In Cricket History Ever || Cricket Plus.....! 😂
  9. ஆஹா... வில்லேஜ் விஞ்ஞானிகள், இவர்களின் திறமையை ஊக்குவிக்க வேண்டும். கைது செய்து அவமானப் படுத்தக் கூடாது. 😂
  10. Today
  11. ஒரு திங்கட் கிழமை பிற்பகலில் பெரம்பூரில் விஜை வேட்புமனு தாக்கல் செய்ய போன போது மறுபடியும் கட்டுக்கடங்கா கூட்டம். ஸ்டாலின் போகும் போது வழமையான கூட்டம்தான்.
  12. காலை வணக்கத்தோடு யாழின் முகப்புத் தோற்றம் குறிப்பாக 28ம் ஆண்டு தோற்றம் மிகவும் நன்றாக இருக்கிறது.இனிய 28ம் ஆண்டு வாழ்த்துகள் உரித்தாகட்டும்.இது யாயினி.🙏
  13. இது சீர்காழியார் குரல்போல் தெரியவில்லை. படத்தில் இருப்பவர் சகஸ்ரநாமம். எனக்கு இது ரிஎம்எஸ் குரல் போலவே தெரிகிறது
  14. வீட்டையே ஆட்டையைபோடலாம் என்று போய் இப்ப வீடு கிடக்கட்டும் பின் கோடிக்குள்ள சாக்கடையை திறந்துவிடுகிற நாத்தத்தில வந்து நிக்குது . ........! 🙂
  15. நல்லாயிருக்கு ....... எது கெடாது என்பதையும் போட்டுவிடுங்கள் நல்லாயிருக்கும் ......! 🙂
  16. destnporSo4aag21guel141m2ttàm52 :g0r0i u1h94u2f4hsL8876 a65 · ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரி. இவங்க ரெண்டு பேரும் ஒரு நாள் மாலை நடைபயிற்சி போனாங்க ஒரு ஆத்தங்கரை ஒரமா.. அப்போது அங்கே ஒரு கொடியில் வெள்ளரிக்காய் காய்த்துத் தொங்குவதை பார்த்த ராஜா "மந்திரி.. அந்த வெள்ளரிக்காய பறிச்சிகிட்டு வா சாப்பிடலாம்"ன்னு சொன்னார். மந்திரி பறிக்க போனபோது அதனருகில் உட்கார்ந்து இருந்த ஓரு குருடன் சொன்னான் "ஐயா அது வெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டி காய். அதை தின்னா வாந்தி தான் வரும்"ன்னு... ராஜா சொன்னான் "யோவ் மந்திரி அது பறிச்சு சாப்பிடு.. வாந்தி வருதா பார்க்கலாம்"... வேற வழி இல்லாம மந்திரி சாப்பிட்டான். உடனே மந்திரிக்கு கும்மட்டிக்கிட்டு ஒரே வாந்தி. ராஜா கேட்டான் "யோவ் கபோதி இதுக்கு என்ன மருந்து?". அந்த குருடன் சொன்னான் "அது பக்கத்துல 'கை' மாதிரி பச்சை இலை இருக்கும்.. அதை கையால கசக்கி மந்திரி வாய்ல விட்டா வாந்தி நிற்கும்"ன்னு சொன்னான் குருடன். ராஜா முயற்சி செய்ய மந்திரிக்கு வாந்தி நின்னு போச்சு. மந்திரிக்கு போன உசுரு திரும்பி வந்தது. ராஜா குருடனை பார்த்து "உனக்கு தான் கண் தெரியாதே எப்படி கரெக்ட்டா சொன்னாய்" என்று கேட்க , குருடன் சொன்னான் "ராஜா இந்த நாட்ல எங்கேயும் பஞ்சம் பசி பட்டினி. அப்படி இருக்கும் போது எவனாவது வெள்ளரிப்பிஞ்சை விடுவானா. எப்பவும் இயற்கை ஒரு நோய் கொடுக்கற காயை கொடுத்தால் இறைவன் பக்கத்துல ஒரு மாற்று மருந்து வச்சிடுவான்".. ராஜாக்கு சந்தோஷம். "இந்தா ஒரு டோக்கன். கிழக்கு வாசலுக்கு போ. பட்டை சாதம் குடுப்பாங்க. சாப்பிட்டு ஜாலியா இரு..." என்று சொல்லிட்டு ராஜா போய்ட்டான். கொஞ்ச நாள் கழித்து ஒரு வெளியூர் வியாபாரி ராஜா கிட்ட வந்தான். "ராஜா எங்கிட்ட வைரம் நிறைய இருக்கிறது. வாங்கிக்கறீங்களா"ன்னு கேட்டான். 'இது ஒரிஜினலா டூப்ளிக்கேட்டான்னு எப்படி தெரிஞ்சிக்கிறது' என்று மந்திரியை கூப்பிட்டான். ஏற்கனவே ஒரு தடவை வாந்தி எடுத்த அனுபவம் இருந்ததால் எதையாவது முழுங்கி வைக்க சொன்னா என்ன பண்றதுன்னு பயந்துட்டு தெரியாதுன்னுட்டான். ராஜா சொன்னான் "மந்திரி போய் அந்த கபோதிய கூட்டிண்டு வா.. அவன்தான் காரண காரியத்தோட கரெக்டா சொல்லுவான்"னான். மந்திரி போய் அந்த குருடனை கூட்டிட்டு வந்தான். ராஜா சொன்னான் "டேய் இதுல ஒரிஜினல் வைரம்... டூப்ளிகேட் வைரம் கலந்திருக்கான்னு பார்த்து சொல்லு". அந்த குருடன் அந்த மொத்த வைரத்தையும் எடுத்து மத்தியான வெயில்ல கொண்டு போய் வெச்சான். கொஞ்ச நேரம் பொறுத்து அதை கையில் எடுத்து பிரிச்சு ராஜா "இதெல்லாம் வைரம். மற்றது எல்லாம் கண்ணாடி"ன்னு பிரிச்சு கொடுத்துட்டான். வியாபாரியும் "எதோ தெரியாம நடந்துடுச்சு"ன்னு சொல்லி எல்லா வைரத்தையும் இனாமா கொடுத்தான். ராஜாவுக்கு ஆச்சர்யம். ராஜா குருடனை பார்த்து கேட்டான் "எப்படி கண்டுபிடிச்ச காரண காரியத்தோட சொல்லு..." குருடன் சொன்னான் "ராஜா வெயிலில் வைரம் சூடாகாது. ஆனா கண்ணாடி சூடாகும். அதுனால சூடானது எல்லாம் கண்ணாடின்னும் சூடுஆகாதது எல்லாம் வைரம்ன்னு பிரிச்சேன்".. ராஜா சந்தோஷமா பாக்கெட்ல கைய விட்டு ஓரு டோக்கன் எடுத்து குருடன் கிட்ட குடுத்து " மேற்கு வாசலுக்கு போ... இந்த டோக்கனை கொடுத்து பட்டை சாதம் வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு"ன்னு சொல்லி அனுப்பிச்சான். இப்படி கொஞ்ச நாள் போச்சு. ராஜா தன் மகனுக்கு கல்யாணம் பண்ண பெண் தேட ஆரம்பிச்சான். பக்கத்து ஊர்ல இருந்து எல்லாம் இளவரசி குடுக்க ரெடியா இருந்தாங்க. ராஜாவுக்கு குழப்பம். யாரை தேர்ந்து எடுக்கறதுன்னு. மந்திரியை கேட்டா எல்லாம் நல்லா இருக்குன்னு பயந்துகிட்டே சொல்றான். ராஜா பார்த்தான் "கூப்பிட்றா அந்த கபோதியை..". குருடன் வந்தான். ராஜா குருடன்கிட்ட சொன்னான் "என் மகனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பாக்கறேன். எந்த ராஜாவோட ராஜகுமாரி சரியா இருக்கும்ன்னு காரண காரியதோட சொல்லு" அப்படின்னான். குருடன் சொன்னான் "ராஜா அடுத்த நாட்டை விட்டுட்டு அதுக்கு அடுத்த நாட்டு ராஜா பொண்ணை பாருங்க"ன்னான். "அந்த ராஜா உங்க சம்பந்தி ஆனா பக்கத்து நாட்டு ராஜா உங்க ரெண்டு பேருக்கும் நடுல இருப்பான். அப்போ எல்லை பிரச்சினை வராது. பொண்ண குடுத்ததால அந்த இடைப்பட்ட பகுதில பிரச்சினை வராம பார்த்துப்பான்..". ராஜாவுக்கு ஒரே குஷி. "சபாஷ். இந்தாடா டோக்கன்... வடக்கு வாசலுக்கு போ. பட்டை சாதம் குடுப்பான். வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு" அப்படின்னான். குருடனும் போய்ட்டான். கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாள் ராஜா அந்த குருடன தன்னோட அந்தரங்க ஆலோசனை அறைக்கு வர சொன்னான். "டேய் நான் ஒண்ணு கேட்பேன்... சரியா காரண காரியதோட சொல்லணும்" அப்படின்னான். குருடனும் சரின்னான். "இந்த ஊர்ல என்ன எல்லோரும் என்னை பிச்சைகாரனுக்கு பிறந்த பய அப்படின்னு சொல்றாங்க. இதுக்கு நீ என்ன சொல்ற?... அப்படின்னான். குருடன் அமைதியா இருந்தான். பதிலே பேசல.. ராஜா திரும்ப கேட்டான்... குருடன் சொன்னான் "ராஜா.. நீங்க திரும்ப திரும்ப கேட்கறதால சொல்றேன் நெசமா நீங்க பிச்சைக்காரனுக்கு பிறந்தவன் தான்" அப்படின்னான். ராஜாவுக்கு ரொம்ப வருத்தம். "ஏன்டா"ன்னு கேட்டான். "ராஜா முதல்ல குமட்டி காய பத்தி சொன்னேன். நீங்க சந்தோஷமா ஆகிட்டீங்க. ஆனா கொடுத்தது இலவச டோக்கன் பட்ட சாதத்துக்கு. ராஜாவா இருந்தா கைல இருந்த மோதிரத்தை கொடுத்திருப்பான்... அப்புறம் கோடி கணக்குல வைரம் கிடைக்க வழி செஞ்சேன். ராஜாவா இருந்திருந்தா கழுத்திலிருந்த வைர மாலைய கொடுத்திருப்பான். ஆனா நீங்க கொடுத்தது பட்டை சாத டோக்கன்... மூணாவது.. ஒரு ராஜ்யமே உங்க கைக்குள்ள வருவதற்கு வழி சொன்னேன். இன்னொரு ராஜாவா இருந்தா நாலு கிராமத்தை எனக்கு எழுதி கொடுத்திருப்பான். நீங்க கொடுத்தது வடக்கு வாசல் பட்ட சாத டோக்கன்... இதிலிருந்து தெரிகிறது சத்தியமா நீங்க பிச்சைகாரனுக்கு பிறந்தவன்னு... ஏன்னா உங்க புத்தி டோக்கனோடு முடிஞ்சு போச்சு. அதுக்கு மேல போகல.... 🤔" அந்த குருடன் நிலைமையில் தான் ஓட்டு போடற நாம இருக்கோம்... Voir la traduction....!
  17. நீருக்கடியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை. மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட்பட்ட சிரயாதீவு பிரதேச வாலியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீருக்கடியில் சூட்சூமமான முறையில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைத்தனர் . இச்சுற்றி வளைப்பு தேடுதலின் போது 8 பரள்களில் 800 லீட்டர் கோடா மற்றும் 160 லீட்டர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டதுடன் கசிப்பு உற்பத்தி செய்யும் பெருமளவு உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எ.எஸ்.எம்.ஏ. றஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்தனர் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது இவ்வாறு கசிப்பு உற்பத்தி நிலையத்தில் கசிப்பு உற்பத்திக்கான பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான உபகரணங்களும் பரள்கள் போத்தல்கள் பலன்கள் என்பனவும் பொலிசாரினர் கைப்பற்றப்பட்டுள்ளன . சந்தேக நபர்கள் தப்பியோடிள்ளதுடன், கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். https://athavannews.com/2026/1470408
  18. விரிவடையும் மத்திய கிழக்கு போர்; சாதனை அளவை எட்டிய எண்ணெய் விலை! ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல் தொடங்கி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் ஆசியாவில் திங்கட்கிழமை (30) சந்தைகள் திறக்கப்பட்டபோது எண்ணெய் விலை 115 டொலருக்கும் மேல் உயர்ந்தது. அதன்படி, பிரென்ட் மசகு எண்ணெயின் விலை 2.9% அதிகரித்து, 115.84 டொலராக உள்ளது. பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்பு, ஒரு பீப்பாய் பிரென்ட் மசகு எண்ணெய் சுமார் 72 டொலர் என்ற விலையில் வர்த்தகம் செய்யப்பட்டது. கடந்த வாரம், மார்ச் 19 அன்று ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 118 டொலர் என்ற உச்சத்தை எட்டியது. வெள்ளிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, அது 112 டொலருக்கும் சற்றுக் குறைவாக இருந்தது. அதேநேரத்தில் முந்தைய அமர்வில் 5.5% விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 1.86 டொலர் அல்லது 1.87% அதிகரித்து, 101.50 டொலராக இருந்தது. வார இறுதியில் யேமன் ஹவுதிகள் இஸ்ரேல் மீது தங்களது முதல் தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் விரிவடைந்த நிலையில் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கான வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மோதல் திறம்பட மூடியதைத் தொடர்ந்து, பிரென்ட் மசகு எண்ணெய் விலை இந்த மாதம் 59% உயர்ந்துள்ளது. இதுவே 1990 வளைகுடாப் போரின்போது காணப்பட்ட ஆதாயங்களை விட மிக அதிகமான, மிகப்பெரிய மாதாந்திர ஏற்றமாகும். பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுடன் தொடங்கப்பட்ட இந்தப் போர், மத்திய கிழக்கு முழுவதும் பரவியுள்ளது. மோதல் தொடங்கியதிலிருந்து சனிக்கிழமையன்று (28), ஈரானுடன் இணைந்த ஏமனின் ஹவுதிகள் இஸ்ரேல் மீது தங்கள் முதல் தாக்குதல்களைத் தொடுத்தனர். இது அரேபிய தீபகற்பம் மற்றும் செங்கடலைச் சுற்றியுள்ள கப்பல் போக்குவரத்துப் பாதைகள் குறித்த கவலையை எழுப்பியுள்ளது. ஹார்முஸ் நீரிணையிலிருந்து செங்கடலில் உள்ள யான்பு துறைமுகத்திற்குத் திருப்பிவிடப்பட்ட சவுதி மசகு எண்ணெய் ஏற்றுமதி, கடந்த வாரம் ஒரு நாளைக்கு 4.658 மில்லியன் பீப்பாய்களை எட்டியதாக, Kpler என்ற பகுப்பாய்வு நிறுவனத்தின் தரவுகள் காட்டின. யான்புவிலிருந்து ஏற்றுமதி தடைபட்டால், சவுதி எண்ணெய் மத்தியதரைக் கடலுக்குச் செல்லும் எகிப்தின் சூயஸ்-மத்தியதரைக் கடல் (SUMED) குழாய்வழியை நோக்கித் திருப்பப்பட வேண்டும் என்று ஜேபி மோர்கன் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், வார இறுதியில் இப்பகுதியில் தாக்குதல்கள் தீவிரமடைந்து, ஓமானின் சலாலா முனையத்தைச் சேதப்படுத்தின. அமெரிக்காவின் தரைவழித் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாக ஈரான் கூறியதுடன், பேச்சுவார்த்தைகளை நாடிய போதிலும், தரைவழித் தாக்குதலுக்கு வொஷிங்டன் தயாராகி வருவதாக ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியது. இப்பகுதியில் போரை விரைவாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான வழிகள் குறித்தும், இஸ்லாமாபாத்தில் நடைபெறக்கூடிய அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் குறித்தும் விவாதித்ததாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1470391
  19. இவ்வளவு பேரும்தான் கட்சியே கட்சிகளில் வேறு யாரும் இல்லை. கூடிப்பேசி அனைவரும் உள்ளடங்கிய இணைப்புக்குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
  20. 'உணவு, மருந்துகள், ஸ்மார்ட் ஃபோன்கள்' - ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுவதால் எதெல்லாம் விலை உயரும்? கட்டுரை தகவல் பென் ஷூ பிபிசி வெரிஃபை 29 மார்ச் 2026 வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தொடுத்துள்ள போரினால் ஹோர்மூஸ் நீரிணை வழியாக விநியோகிக்கப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு தடைபட்டிருப்பது, உலகளாவிய எரிசக்தி விலைகளை கடுமையாக உயர்த்தியுள்ளது. பெட்ரோல் விலை ஏற்கனவே உயர்ந்துவிட்டது. பிரிட்டனில், குளிரிலிருந்து தங்களை பாதுகாத்துகொள்ள மக்கள் வீடுகளை வெப்பமூட்டுவதற்கான கட்டணங்களும் உயர்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் இந்த மோதலால் எரிபொருள் மட்டும் பாதிக்கப்படவில்லை. ஹோர்மூஸ் நீரிணை வழியாக சர்வதேச விநியோகச் சங்கிலிகளுக்குள் நுழையும் முக்கியமான ரசாயனங்கள், வாயுக்கள் மற்றும் இதர தயாரிப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 100-க்கும் மேல் இருந்த நிலையில் இருந்து, போர் தொடங்கிய பிறகு வெறும் ஒரு சில கப்பல்கள் என்ற எண்ணிக்கைக்கு அது குறைந்துள்ளதால், உணவு முதல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மருந்துகள் வரை பல பொருட்களின் விலைகள் பாதிக்கப்படலாம் என்று பிபிசி வெரிஃபை கண்டறிந்துள்ளது. பாதிக்கப்படக்கூடியவை என்னென்ன என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... உரங்கள் (உணவு) பெட்ரோகெமிக்கல்கள் எண்ணெய் மற்றும் எரிவாயுவிலிருந்து பெறப்படுகின்றன, அவை வளைகுடா பிராந்திய நாடுகளால் ஏற்றுமதிக்காக பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் மிக முக்கியமானது உரம், இது உலகளாவிய விவசாய உற்பத்திக்கு இன்றியமையாதது. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, யூரியா, பொட்டாஷ், அம்மோனியா மற்றும் பாஸ்பேட் போன்ற உலகின் உரங்களில் மூன்றில் ஒரு பங்கு பொதுவாக ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்கிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சிறு விவசாயிகள் பயிர்களுக்காக யூரியா உரத்தை பெருமளவில் சார்ந்துள்ளனர். உலக வர்த்தக அமைப்பின் (WTO) தரவுகள், மோதல் தொடங்கியதிலிருந்து இந்த நீர்வழிப்பாதை வழியாக உரங்கள் தொடர்பான தயாரிப்புகளின் வெளிச்செல்லும் ஏற்றுமதி சரிந்துள்ளதைக் காட்டுகின்றன. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் வடக்கு அரைக்கோளத்தின் பயிர் நடவு காலமாகும் என்பதால், இந்த உரங்களின் பற்றாக்குறை இப்போது விவசாய உற்பத்தியை மோசமாக பாதிக்கும் என்றும், இப்போது விவசாயிகள் குறைவான உரத்தைப் பயன்படுத்துவது ஆண்டின் பிற்பகுதியில் விளைச்சலைப் பாதிக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். கீல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, "ஒரு சிறிய கால அளவிலான மூடல் கூட முழு வளரும் பருவத்தையும் சீர்குலைக்கக்கூடும், இதன் உணவு பாதுகாப்பு விளைவுகள் நீரிணை மீண்டும் திறக்கப்பட்ட பிறகும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும்." நீரிணை முழுமையாக மூடப்பட்டால், உலகளாவிய கோதுமை விலை 4.2% மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை 5.2% உயரக்கூடும் என்று அந்த நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், ஒட்டுமொத்த உணவு விலையேற்றத்தால் மோசமாக பாதிக்கப்படும் நாடுகள் ஜாம்பியா (31%), இலங்கை (15%), தைவான் (12%) மற்றும் பாகிஸ்தான் (11%) என்று அது மதிப்பிடுகிறது. ரஷ்யா பொதுவாக உலகளாவிய உர ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கை வழங்குகிறது, இந்த இடைவெளியை நிரப்ப ரஷ்யா உற்பத்தியை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உரம் போன்ற பொருட்களின் முக்கிய உற்பத்தியாளரான ரஷ்யா, 'சரியான நிலையில்' இருப்பதாக விளாடிமிர் புதினின் சிறப்புத் தூதர் கிரில் டிமிட்ரிவ் கூறியுள்ளார். ஹீலியம் (மைக்ரோசிப்கள்) உலகளாவிய ஹீலியம் வாயு ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு பொதுவாக கத்தாரிலிருந்து வந்து ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்கிறது. இது இயற்கை எரிவாயு உற்பத்தியின் ஒரு உபபொருளாகும், மேலும் இது செமிகண்டக்டர் வேஃபர்களை (semiconductor wafers) தயாரிக்கப் பயன்படுகிறது, பின்னர் அவை கணினிகள், வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களில் பயன்படுத்தப்படும் மைக்ரோசிப்களாக மாற்றப்படுகின்றன. மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் எம்ஆர்ஐ (MRI) ஸ்கேனர்களில் உள்ள காந்தங்களைக் குளிர்விக்கவும் ஹீலியம் பயன்படுத்தப்படுகிறது. பட மூலாதாரம்,AFP via Getty Images இந்த வாயுவை உற்பத்தி செய்யும் கத்தாரின் ராஸ் லாஃபன் எனும் மாபெரும் ஆலை, இரானிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்குப் பிறகு உற்பத்தியை நிறுத்தியுள்ளது. சேதத்தை சரிசெய்ய மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று கத்தார் அரசாங்கம் எச்சரித்துள்ளது, இது விநியோகம் குறித்த அச்சத்தை எழுப்பியுள்ளது. 2023 ஆம் ஆண்டில், உலகளாவிய ஹீலியம் விநியோகம் தடைபட்டால் 'விலை உயர்வு' ஏற்படும் என்று அமெரிக்க செமிகண்டக்டர் தொழில்துறை சங்கம் எச்சரித்தது. ஹோர்மூஸ் நீரிணை அடைப்பின் தொடர் தாக்கம், ஸ்மார்ட்போன்கள் முதல் தரவு மையங்கள் வரையிலான பல அதிநவீன தொழில்நுட்பங்களின் விலைகள் உயர்வதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். நீடித்த ஹீலியம் பற்றாக்குறையால் எம்ஆர்ஐ விலைகள் அதிகரிக்கக்கூடும் என்று வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சிலின் மூத்த ஆய்வாளர் பிரசாந்த் யாதவ் எச்சரித்துள்ளார். "எம்ஆர்ஐ இயந்திரங்களுக்கு காந்தங்களைக் குளிர்விக்க 1,500 முதல் 2,000 லிட்டர் ஹீலியம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு முறை நீங்கள் ஸ்கேன் செய்யும் போதும், அதில் ஒரு சிறிய பகுதி ஆவியாகிவிடும்." "ஹீலியத்தின் முக்கிய பயன்பாடு தரவு மையங்கள், செமிகண்டக்டர்கள் மற்றும் ஏஐ மற்றும் தரவுத் துறையின் குளிர்விப்பு ஆகியவற்றில் இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் எம்ஆர்ஐ-களுக்கும் மற்ற மருத்துவ பயன்பாடுகளுக்கும் ஹீலியம் மிகவும் முக்கியமானது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது," என்று அவர் பிபிசி வெரிஃபையிடம் கூறினார். பெட்ரோகெமிக்கல் வழிப்பொருட்கள் (மருந்துகள்) மெத்தனால் மற்றும் எத்திலீன் போன்ற பெட்ரோகெமிக்கல்களின் வழிப்பொருட்கள், வலிநிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் தடுப்பூசிகள் உள்ளிட்ட மருந்துகளின் உலகளாவிய உற்பத்தியில் முக்கிய பொருட்களாக உள்ளன. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகள் - சௌதி அரேபியா, கத்தார், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகியவை உலகளாவிய பெட்ரோகெமிக்கல் உற்பத்தித் திறனில் சுமார் 6% கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாடுகள் இந்த ரசாயனங்களை உலகிற்கு ஏற்றுமதி செய்ய முதன்மையாக ஹோர்மூஸ் நீரிணையைப் பயன்படுத்துகின்றன, இதில் பாதி ஆசியாவிற்குச் செல்கிறது. இந்தியா உலகின் ஜெனரிக் (பிராண்ட் அல்லாதவை) மருந்து ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கை உற்பத்தி செய்கிறது, அவற்றில் பல அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு அனுப்பப்படுகின்றன. இந்த மருந்துப் பொருட்களில் பல பொதுவாக வளைகுடா விமான நிலைய மையங்கள், குறிப்பாக துபாய் வழியாக உலகச் சந்தைகளுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன, அவை இந்த மோதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஹோர்மூஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இடையூறு காரணமாக பொது மக்களுக்கான மருந்து விலைகள் உயரக்கூடும் என்று சில ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். கந்தகம் (உலோகங்கள்/பேட்டரிகள்) கந்தகம் (சல்பர்) என்பது கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவைச் சுத்திகரிப்பதன் மூலம் கிடைக்கும் மற்றொரு உபபொருளாகும், இது வளைகுடா பிராந்தியத்தில் ஏற்றுமதிக்காக அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகளாவிய கடல்வழி கந்தக வர்த்தகத்தில் சுமார் பாதி ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்கிறது. இதன் முக்கிய பயன்பாடு ஒரு விவசாய உரமாகும், ஆனால் இது உலோக செயலாக்கத்திற்கும் இன்றியமையாதது. கந்தகம், சல்பூரிக் அமிலம் தயாரிக்கப் பயன்படுகிறது, இது செம்பு, கோபால்ட் மற்றும் நிக்கல் ஆகியவற்றின் செயலாக்கத்திற்கும், லித்தியத்தைப் பிரித்தெடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் மின்சார வாகனங்கள் மற்றும் டிரோன்கள் போன்ற ராணுவ வன்பொருட்கள் வரை அனைத்திலும் பயன்படுத்தப்படும் பேட்டரிகளின் உற்பத்திக்கு அந்த உலோகங்கள் அனைத்தும் தேவைப்படுகின்றன. கந்தக விநியோகம் தொடர்ந்து தடைபட்டால், பேட்டரிகள் கொண்ட பொருட்களை வாங்கும் நுகர்வோர் அதிக விலையைக் கொடுக்க வேண்டி வரும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdj7yezw1ldo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.