Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. ''சீனா வேகமாக சூரிய சக்தி மற்றும் மின்சார ஆற்றலுக்கு மாறுகிறது - எதிர்காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகள் மிகக் குறைவாகவே இருக்கும்'' - எலான் மஸ்க் Published By: Vishnu 02 Mar, 2026 | 07:49 AM ''சீனா வேகமாக சூரிய சக்தி மற்றும் மின்சார ஆற்றலுக்கு மாறுகிறது. எதிர்காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகள் மிகக் குறைவாகவே இருக்கும்'' என எலான் மஸ்க் தனது x தளத்தில் குறிப்பிட்டுள்ளார். டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் கூறுகையில், சூரிய ஒளியை அடிப்படையாகக் கொண்ட எதிர்காலத்தை நோக்கி சீனா வேகமாக நகர்கிறது மற்றும் மின்சாரம், இது புதைபடிவ எரிபொருட்களின் (எண்ணெய் மற்றும் எரிவாயு) தேவையை வெகுவாகக் குறைக்கும். அவர் தனது x கணக்கில் ஒரு பதிவில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். "சீனாவின் மொத்த வாகனங்களில் 12% இப்போது மின்சார வாகனங்கள் (EVகள்) என்று அதிகாரப்பூர்வ தரவு காட்டுகிறது. இதன் விளைவாக, 2025 ஆம் ஆண்டில் நாட்டின் எரிபொருள் விற்பனை 5.7% குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ''சீனா வேகமாக சூரிய சக்தி மற்றும் மின்சார ஆற்றலுக்கு மாறுகிறது - எதிர்காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகள் மிகக் குறைவாகவே இருக்கும்'' - எலான் மஸ்க்
  3. ஐயனே, அவர் தான் "பீத்தமிழன்" (முஸ்லிம்கள் இப்படித்தான் இனவெறியில் அழைப்பர்) ஆயிற்றே! "முஸ்லிம்" இல்லையே😉!பிறகெப்படி இக்கருத்து தனியாள் வெறுப்பாக முடியும் ? அவரை வாதத்திற்கு அழைத்துள்ளேன்... அது தவறா? வடிவேல்: எதுவா இருந்தாலும் ஞாயமாப் பேசோனும்...🤣 ஐயனே, வருத்தத்திற்கு நல்ல ஆசுப்பத்திரியாய் பாத்து மருந்து போடுங்க...🤪
  4. குவைத்தில் அமெரிக்கப் போர் விமானம் விபத்து! Mar 2, 2026 - 01:54 PM குவைத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதையடுத்து, அமெரிக்கப் போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அலி அல் சலேம் அமெரிக்கத் தளத்திலிருந்து சுமார் ஆறு மைல் தொலைவில், குறித்த விமானத்தின் இயந்திரம் தீப்பற்றி எரிந்தவாறு கீழே விழும் காட்சி காணொளிகளில் பதிவாகியுள்ளது. அதில் இருந்த விமானி விமானத்திலிருந்து குதித்துப் பாதுகாப்பாகத் தரையிறங்கியுள்ளதுடன், பின்னர் பிரதேசவாசிகள் அவருக்கு உதவியுள்ளனர். எனினும், விமானத்திலிருந்த ஆயுதக் கட்டமைப்பு இயக்குநரின் நிலைமை குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. இந்த விமானம் விபத்துக்குள்ளானமைக்கான காரணம் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலா அல்லது இயந்திரக் கோளாறா என்பது இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இதுவரை 3 அமெரிக்கப் படையினர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குவைத்தில் அமெரிக்கப் போர் விமானம் விபத்து!
  5. கோலியை விஞ்சி அசத்தல்: 'நீண்ட' காத்திருப்பை சாதனையாக மாற்றிக் காட்டிய சாம்சன் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரவீன் பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் 'ஜஸ்டிஸ் ஃபார் சஞ்சு சாம்சன்' (சஞ்சு சாம்சனுக்கு நீதி வேண்டும்) கடந்த 10 ஆண்டுகளில், இந்த வரி சமூக வலைதளங்களில் பல முறை ட்ரெண்ட் ஆகியுள்ளது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில், சஞ்சு சாம்சன் ஒரு அற்புதமான செயலைச் செய்தார், அது அடிக்கடி ட்ரெண்ட் ஆகும் அந்த வரியையே மாற்றிவிட்டது. டி20 உலகக் கோப்பையில் கிட்டத்தட்ட காலிறுதி போன்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 97 ரன்கள் விளாசி, இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற உதவினார். சஞ்சுவின் இந்த இன்னிங்ஸிற்குப் பிறகு, 'இறுதியாக சஞ்சு சாம்சனுக்கு நீதி கிடைத்துவிட்டது' என்பதுதான் அதிகமாக விவாதிக்கப்பட்டது. ஆனால் 'சஞ்சு சாம்சனுக்கு நீதி வேண்டும்' என்ற ட்ரெண்டிலிருந்து 'இறுதியாக சஞ்சு சாம்சனுக்கு நீதி கிடைத்துவிட்டது' என்ற நிலைக்கு வர சஞ்சு சாம்சன் கடந்து வந்த பயணம் எவ்வளவு கடினமானது மற்றும் எவ்வளவு நீண்டது என்பதை அவரை விட யாராலும் சிறப்பாக விவரித்திருக்க முடியாது. இந்தியாவின் வெற்றிக்குப் பிறகு, அவர் மைதானத்தில் மண்டியிட்டு அமர்ந்து, தனது நீண்ட கால கனவு நனவானது போல வானத்தை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார். சஞ்சு சாம்சன் எப்போதும் தனது உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காட்டாத ஒரு வீரராகவே அறியப்படுகிறார். ஆனால் இந்த இன்னிங்ஸ் பலவற்றை மாற்றியுள்ளது. அவர் இப்போது தனது உணர்ச்சிகளை நேரடியாக வெளிப்படுத்தியுள்ளார். போட்டிக்குப் பிறகு அவர் கூறுகையில், "இந்த இன்னிங்ஸ் எனக்கு மிக முக்கியமானது. நான் விளையாடத் தொடங்கிய நாளிலிருந்து, எனது நாட்டிற்காக விளையாட வேண்டும் என்று கனவு கண்ட நாளிலிருந்து, இதற்காகத்தான் நான் அதிகம் காத்திருந்தேன்," என்றார். நீண்ட காத்திருப்பு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சஞ்சு சாம்சன் மிக இளம் வயதிலேயே எதிர்கால நட்சத்திரமாகப் பார்க்கப்பட்டார். கடந்த இருபது ஆண்டுகளில் ரோஹித் சர்மாவிற்குப் பிறகு இந்தியாவில் ஏதேனும் ஒரு வீரர் மிகவும் திறமையானவராகக் கருதப்பட்டார் என்றால், அது சஞ்சு சாம்சன் தான். ரோஹித் சர்மாவைப் போலவே, சஞ்சு சாம்சனும் இயல்பாகவே புல்-ஷாட் ஆடுபவர். எந்த ஒரு சிறப்பான முயற்சியும் எடுக்காமல், வெறும் டைமிங் மூலமாகவே பெரிய சிக்ஸர்களை அடிக்கும் திறன் கொண்டவர். சஞ்சு சாம்சன் தனது 17 வயதில் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். தனது முதல் சீசனில் அவர் சிறப்பாகச் செயல்படவில்லை. இருப்பினும், அடுத்த சீசனில் பலமாக மீண்டு வந்த அவர், ஐந்து இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்தார். அதற்கு அடுத்த ஆண்டே, ராஜஸ்தான் ராயல்ஸ் அவருக்கு வாய்ப்பளித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சஞ்சு சாம்சனைத் தேர்ந்தெடுக்கும் போது, அப்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், "சஞ்சு சாம்சன் இந்திய அணியின் எதிர்காலமாகத் திகழப் போகும் ஒரு சில வீரர்களில் ஒருவர்" என்று கூறினார். ஐபிஎல் தொடரின் தொடக்க ஆண்டுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக சஞ்சு சாம்சனுக்குப் பலன் கிடைத்தது. 2015-ஆம் ஆண்டு ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டார். இந்தச் சுற்றுப்பயணத்தில், இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது, ஆனால் அவரால் 19 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்பிறகு, மீண்டும் அணிக்குத் திரும்ப அவர் 2019 வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஐபிஎல் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், 2024 வரை இந்திய அணியில் தனது இடத்தைப் பிடிக்க சஞ்சு சாம்சனால் முடியவில்லை. 2024-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவரால் இடம்பெற முடிந்தது. ஆனால் அப்போதும் கூட, அவர் மைதானத்தில் இல்லாமல் பெஞ்சில் தான் அமர வேண்டியிருந்தது. அந்த உலகக் கோப்பையின் போது பெஞ்சில் அமர வைக்கப்பட்ட கோபமோ என்னவோ, பின்னர் அணியின் ஆடும் லெவனில் இடம் கிடைத்தவுடன் வெறும் ஐந்து டி20 சர்வதேச போட்டிகளில் அவர் மூன்று சதங்களை விளாசினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2024 உலகக் கோப்பையின் போது சஞ்சு சாம்சன் டக்அவுட்டிலேயே இருந்தார். ஆனால், அப்போதும் கூட அணியில் அவரது இடம் உறுதி செய்யப்படவில்லை. இத்தகைய சிறப்பான ஆட்டத்திற்குப் பிறகும், அவர் அணியின் பரிசோதனைகளில் ஒரு பகுதியாகவே நீடித்தார். கடந்த ஆண்டு, அவரை டாப் ஆர்டரில் விளையாட வைப்பதற்காக சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர் இடத்திலிருந்து மிடில் ஆர்டருக்கு மாற்றப்பட்டார். சுப்மனுக்கான தரப்பட்ட வாய்ப்புகள் பலன் தராத நிலையில், உலகக் கோப்பைக்கு சற்று முன்பு மீண்டும் அவருக்குத் தொடக்க வீரராக வாய்ப்பு வழங்கப்பட்ட போது, அவரது ஃபார்ம் சரிந்திருந்தது. நேற்றைய ஆட்டத்திற்கு முந்தைய 12 இன்னிங்ஸ்களில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. பின்னர் இந்த உலகக்கோப்பையின் தொடக்கத்தில், இஷான் கிஷன் பலமாக மீண்டு வந்து, இந்திய அணியில் சாம்சனின் இடத்தைப் பிடித்துவிட்டார். இரண்டு போட்டிகளுக்கு முன், அபிஷேக் சர்மாவின் மோசமான ஆட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர் சந்திப்பில் கேப்டன் சூர்யகுமாரிடம் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைக்குமா என்று கேட்கப்பட்ட போது அவர் எப்படிப்பட்ட அனுபவத்தைக் கடந்திருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள். அதற்கு கேப்டன் சூர்யகுமார், "அப்படியென்றால் அபிஷேக்கிற்குப் பதிலாகவோ அல்லது மூன்றாவது வரிசையில் திலக்கிற்குப் பதிலாகவோ அவரை விளையாட வைக்கச் சொல்கிறீர்களா?" என்று கேட்டார். இந்தப் பதிலைக் கூறிவிட்டு சூர்யகுமார் சிரித்தார். ஆனால், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் தோல்வி, சஞ்சு சாம்சன் மீண்டும் அணிக்குள் வருவதற்கான வழியை திறந்துவிட்டது. அதன்பிறகு கேப்டன் சூர்யகுமார் தனது வார்த்தைகளை மாற்றிக்கொண்டது மட்டுமல்லாமல், போட்டிக்கு பிறகு மைதானத்திற்குள் நுழையும் போது தனது தொப்பியைக் கழற்றி தலைவணங்கி சஞ்சு சாம்சனின் திறமையை அங்கீகரித்தார். சஞ்சு சாம்சன் இந்தியாவிற்கு அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தபோது, சூர்யகுமார் கூறுகையில், "காத்திருப்பவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும் என்று நான் எப்போதும் சொல்வேன். இந்திய அணிக்காக விளையாடாத போது அவர் செய்த கடின உழைப்பினால்தான் இது சாத்தியமானது. இப்போது அதற்கான பலனை அவர் அறுவடை செய்துள்ளார்," என்றார். ' என்னால் இதைச் செய்ய முடியுமா என்று சிந்தித்துக் கொண்டே இருந்தேன்' பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சஞ்சு சாம்சன் 11 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான போதிலும் 60 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். கடந்த 10-12 ஆண்டுகளில் அணிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தபோது தான் எதையெல்லாம் கடந்து வந்தேன் என்பது குறித்துப் பேசிய சஞ்சு சாம்சன், "எனது பயணம் எண்ணற்ற ஏற்றத்தாழ்வுகளுடன் சிறப்பானதாக இருந்தது. நான் எப்போதும் என்னையே சந்தேகித்தேன். என்னால் முடியுமா, என்னால் இதைச் செய்ய முடியுமா என்று நான் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருந்தேன்," என்றார். "ஆனால் இந்தச் சந்தேகங்களுக்கு மத்தியிலும், முடிவுக்கு வராத ஒன்று இருந்தது, அது நம்பிக்கையுடன் கூடிய விடாமுயற்சி. இப்போது நான் எனது ஆசிர்வாதங்களைப் பெற்றுள்ளேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்"என்றார் அவர். "நான் இந்த வடிவத்தில் பல வருடங்களாக விளையாடி வருகிறேன். நான் ஐபிஎல் தொடரில் 12 ஆண்டுகளாகவும், இந்திய அணியுடன் 10 ஆண்டுகளாகவும் இருக்கிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் எனக்கு விளையாட அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், இந்த நேரத்தில் நான் டக்அவுட்டில் இருந்தேன். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற வீரர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பது மிகவும் முக்கியமாக இருந்தது. இது எனக்கு நிறைய உதவியது" என்றும் குறிப்பிட்டார். சஞ்சு சாம்சன் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் பெரும்பகுதியில், ஒரு நல்ல தொடக்கம் கிடைத்த பிறகும் பொறுப்பற்ற ஷாட்களை ஆடி அடிக்கடி ஆட்டமிழப்பதாகக் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்தார். ஆனால் ஞாயிற்றுக்கிழமை, அவரது ஆட்டத்தில் ஒரு தெளிவான மாற்றம் தெரிந்தது. போட்டிக்குப் பிறகு ஹாட்ஸ்டாரில் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், சஞ்சு சாம்சன் இதற்கு முன் இப்படி பேட்டிங் செய்து தான் பார்த்ததில்லை என்று கூறினார். பந்தை காற்றில் பறக்கவிட்டு லாங் ஷாட்களை அடிக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, அவர் தரைப்பகுதியில் ஷாட்களை ஆட முயன்றார். அத்துடன், தனது விக்கெட்டையும் அவர் இழக்கவில்லை. அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், "அணிக்கு மிகவும் தேவைப்பட்ட நேரத்தில் சஞ்சு சாம்சன் நிதானத்தை கடைபிடித்தார். அவர் மீண்டும் அணிக்குத் திரும்பியதிலிருந்து, ஒரு வித்தியாசமான அணுகுமுறையுடன் மைதானத்திற்கு வருகிறார். இந்த இன்னிங்ஸ் அற்புதமானது, ஏனென்றால் இந்தியா ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்திருந்தது. அவர் தனது விளையாடும் பாணியை மாற்றியுள்ளார். நிதானம் என்ற அந்த ஒரு வார்த்தை தான் அனைத்தையும் மாற்றியது"என்றார். போட்டிக்குப் பிறகு தனது ஆட்டத்தில் செய்த மாற்றங்கள் குறித்தும் சஞ்சு சாம்சன் பேசினார். அவர் கூறுகையில், "ஆரம்பத்தில், நாங்கள் விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தோம். நான் பார்ட்னர்ஷிப்களை உருவாக்க முயற்சித்தேன். அந்த நேரத்தில், அடுத்த பந்தைப் பற்றி மட்டுமே நான் யோசித்தேன். அனைத்து கேள்விகளுக்கும் மத்தியில், நான் என்னை நம்பினேன், பந்து எப்படி வந்ததோ அப்படியே விளையாடினேன். அது எனக்குக் கை கொடுத்தது," என்றார். பட மூலாதாரம்,Getty Images கோலியை விஞ்சி சாம்சன் படைத்த சாதனை டி20 உலகக் கோப்பையில் இலக்கைத் துரத்தும்போது , இந்தியாவிற்காக மிகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடிய வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக, 2016-ல் விராட் கோலி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆட்டமிழக்காமல் 82 ரன்களும், 2022-ல் பாகிஸ்தானிற்கு எதிராகவும் ஆட்டமிழக்காமல் 82 ரன்களும் எடுத்திருந்தார். கோலியை விஞ்சி, டி20 உலகக் கோப்பையில் இலக்கைத் துரத்தும் போது அதிக ரன் சேர்த்த இந்திய வீரராக தற்போது சஞ்சு சாம்சன் உருவெடுத்துள்ளார். அதனால்தான் சஞ்சு சாம்சனின் இந்த இன்னிங்ஸ் சமூக வலைதளங்களிலும் பெரிதும் பாராட்டப்பட்டது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சஞ்சு சாம்சனின் 97 ரன்கள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சாம்சனுக்கு பாராட்டு விளையாட்டுச் செய்தியாளர் பரத் சுந்தரேசன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்துப் பதிவிட்டிருந்தார். அதில், "அனைத்து அழகான பவுண்டரிகளுக்கு மத்தியிலும், சஞ்சு சாம்சனின் தோழமை உணர்வு அவரது இன்னிங்ஸை முன்னோக்கி எடுத்துச் சென்றது. அவர் இந்தியாவை முன்னோக்கி அழைத்துச் சென்றார் மற்றும் உலகக் கோப்பையின் மறக்க முடியாத இன்னிங்ஸ்களில் ஒன்றை விளையாடினார்" என்று கூறியுள்ளார். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். "வாழ்வா சாவா என்ற நிலையில் இருந்த ஒரு போட்டியில் சஞ்சு சாம்சன் இந்தியாவின் நம்பிக்கையாகத் திகழ்ந்தார். அவர் ஒருபோதும் கவனம் பெற்றவராக இருந்ததில்லை, ஆனால் அவர் ஒரு ஆட்டத்தை மாற்றியமைப்பவராக தன்னை நிரூபித்துள்ளார்" என்று பதிவிட்டுள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸின் விளையாட்டுச் செய்தியாளர் ஆஷிஷ் மாகோத்ரா சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், " சஞ்சு சாம்சன், என்ன ஒரு பயணம்" என்று கூறியுள்ளார். "சுப்மன் கில்லுக்காக சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரருக்கான இடத்திலிருந்து நீக்கப்பட்டார். கில் சிறப்பாக செயல்படவில்லை. சஞ்சு சாம்சன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் இஷான் கிஷனுக்காக அவர் நீக்கப்பட்டார். அபிஷேக்கின் மோசமான ஃபார்ம் மற்றும் வலது-இடது கை ஆட்டக்காரர்கள் கலவையின் தேவை ஆகியவை சாம்சனை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்தது. இப்போது அவர் இந்தப் போட்டியின் நட்சத்திரமாகத் திகழ்கிறார்"என்று அவர் பதிவிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y6jyxe3rzo
  6. காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்! 02 Mar, 2026 | 02:22 PM காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது எதிர்வரும் 06.03.2025 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுபம் கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இந்த கப்பல் சேவையானது அசாதாரண காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இதன் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் வழமைபோல் செவ்வாய்க்கிழமை தவிர்ந்த ஏனைய ஆறு நாட்களும் இந்த கப்பல் சேவையில் இயங்கும் என்றும் கூறப்படுகிறது. www.sailsubham.com என்ற இணைத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் ஊடாகவோ அல்லது 0212224647, 0117642117 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்வதன் மூலமாகவோ பயணச்சீட்டுகளை பதிவு செய்துகொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!
  7. ஈரானுக்கு எதிராக ஓரணியில் உலக நாடுகள்! Mar 2, 2026 - 01:18 PM மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஓரணியில் திரண்டு வருவதுடன், ஐக்கிய அரபு அமீரகம் அங்குச் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான விசேட சலுகைகளை அறிவித்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்கத் தயாராக உள்ளதாகப் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளன. நட்பு நாடுகளின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில், ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவப் பயன்படும் தளங்களை அழிப்பதற்கான தற்காப்புத் தாக்குதல்களை நடத்தத் தயாராக உள்ளதாகவும் அந்த நாடுகள் தெரிவித்துள்ளன. இதேவேளை, ஈரானின் தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதற்கான திட்டங்களைப் பரிசீலித்து வருவதாக வளைகுடா நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன. "பதற்றத்தைத் தணிக்க மேற்கொண்ட பலகட்ட தூதரக முயற்சிகளையும் மீறி ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. எங்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம்" என வளைகுடா நாடுகள் தமது கூட்டறிக்கையில் எச்சரித்துள்ளன. இந்தப் போர் பதற்றம் மற்றும் விமான ரத்துச் சம்பவங்கள் காரணமாகத் துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நகரங்களில் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளின் தங்குமிடம் மற்றும் உணவுச் செலவுகளை அரசே ஏற்கும் என ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. இதன்படி, பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் தாங்கள் ஏற்கனவே தங்கியுள்ள ஹோட்டல்களில் தங்குமிட காலத்தை இலவசமாக நீட்டித்துக் கொள்ள முடியும் என்றும், அமீரக அரசுக்கு விருந்தினர்களின் பாதுகாப்பே முக்கியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிராக ஓரணியில் உலக நாடுகள்!
  8. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  9. Today
  10. பெருமளவு கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள். நிதானமாகப் பதிலளிக்கிறேன். உங்களுடன் வாதிடும் நோக்கத்தில் அல்ல, மாறாக சில கருத்துக்களை முன்வைப்பதற்காக மட்டுமே. வேலையில் இருக்கிறேன், ஆனால் கட்டாயம் பதில் த‌ருகிறேன். நன்றி
  11. அம்மா என்ற சொல் இயற்கையில் தோன்றிய ஒன்றாகும். பிறந்த குழந்தை அழுவதும், சிரிப்பதுமாக வாயை மூடி மூடித் திறக்கின்றது. குழந்தை வாயைத் திறக்கும் போது அ என்ற ஒலி எழுகின்றது. வாயை மூடும் போது ம் என்ற ஒலி எழுகின்றது. ம்+அ. ம்ம -ம்ம -என்ற ஒலி மீண்டும் மீண்டும் வெளிவரும் போது அது அம்மா என்ற தமிழ் சொல்லைத் தருகின்றது. தமிழ்மொழி இனிமையானது, சுவையானது. அதனால்தான் பூச்சி புழுக்கள்கூட தமிழுக்குள் புகுந்து தமிழைத் தின்பதற்கு முனைகின்றன.😲
  12. நீங்கள் குறிப்பிட்ட திரி சாத்திரக் குறிப்பு இல்லை. மாறாக சாத்திரம் ஏமாற்று வேலையா என்ற விவாதப் பதிவு. அத் திரியில் கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. ஒரு திரியில் மட்டுறுத்தினர் கருத்து எழுதினாலும் அதே திரியில் கள விதிகள் அப்பட்டமாக மீறப்படும்போது அவரே தணிக்கை செய்ய முடியும்.
  13. எல்லாம் சரி, ஐநா, நேட்டோ பங்கேற்காது இன்னொரு நாட்டை தாக்கும் உரிமையை யார் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் கொடுத்தது? ரஸ்சியா உக்ரேனுக்கு அடித்தால் மட்டும் குய்யோ முறையோ என்று கத்துவது!!
  14. போராட்டக்காரர்களை உருவாக்கியது யார், அவர்களுக்கு பண உதவி செய்தது யார் என்று குழந்தை பிள்ளையை கேட்டாலும் சொல்லும். ஒருகாலத்தில் ஆப்பிரிக்காவிலேயே கூடிய GDP , HDI ஐ கொண்டிருந்த நாட்டை இப்படி அழித்தது யார்? அவரை கொன்றதன் காரணம் முழு ஆபிரிக்க தேசத்தையும் ஒரே நாணய (African Dollar) பரிமாற்றத்திற்குள் கொண்டுவர முயன்றதே. ராபர்ட் முகாபே ஜிம்பாப்வேயை 37 வருடங்கள் ஆண்டாரே. மேற்கு எதுவும் செய்யவில்லையே! தலிபான், அல்கயிதா, ஹமாஸ் இவர்களை எல்லாம் உருவாக்கிவிட்டது யார்?
  15. சரி. எற்றுக்கொள்கிறேன். களவிதிகளை மீறும் நோக்கம். எனக்கு. சிறுதுளியும் கிடையாது. இல்லை மேலும் களவிதிக்கு. முரண்பாடாபத் தான் இந்த திரி. களத்தில் அனுமதிக்கப்பட்டதா ? ஏன். அதை அனுமதித்து. மூன்று. பக்கங்கள். வரை. கருத்துகள். பதித்து. இருக்கிறார்கள். ? மேலும். ஒரு. மட்டுநிறுத்தினர். ஒரு. திரியில். கருத்தையும். எழுதிக்கொண்டு. அதே. திரியில். மட்டுநிறுத்தவும். முடியுமா. ? இதுபற்றி. களவிதிகள். என்ன சொல்கிறது. ?நன்றிகள். பல. வணக்கம்.
  16. எங்களுக்கு சாத்திரம், ஜோதிடத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் பிள்ளைகளின், சொந்தக்காரரின் சாதகத்தை ஊர் ஊராய் அனுப்புவம். வரன் தேட!
  17. Bharath Reddy (1978-1979), Hemang Badani (2001-2004), Lakshmipathy Balaji (2003-2005), Thangarasu Natarajan (2021), Washington Sundar (from 2020) இதில்Hemang Badani இன் பெற்றோர்கள் குஜராத்தை சேர்ந்தவர்கள். ஆனால் Hemang Badani பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில்தான்!
  18. முன்பு சோதிடம் பற்றி ஒரு திரியில் விவாதித்துள்ளோம். கள விதிகளில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: சாத்திரம் போன்ற மூட நம்பிக்கைகளை ஊட்டும் பதிவுகளை யாழ் ஊக்குவிக்கவில்லை, அவை நீக்கப்படும்.
  19. இது ஒரு தனிநபர் மீதான வெறுப்பு தாக்குதல், இதற்கு எந்த நொண்டிச்சாட்டுகளாலும் நியாயப்படுத்த முடியாத செயல். இதற்காக நீங்கள் பெருமைப்படுபவராக இருந்தால் உங்களுக்காக வருந்துகிறேன்.
  20. இலங்கை அணி இருந்த குழுதான் மிகவும் பலவீனமான அணிகள் கொண்ட குழு, அதிர்ஸ்டவசமாக மோசமான அவுஸ்ரேலியாவும் அந்த குழுவில் இருந்து விட சிம்ப்பாவே இலங்கை அணிகள் அவுஸ்ரேலியாவினை வீழ்த்தி வென்றுவிட; இரசிகர்கள் மனதில் ஒரு மிகைப்படுத்தப்பட்ட அளவீடு உருவாகிவிட்டது. இதனை Anchoring bias என்பார்கள், சாம்பியன் அணி அவுஸ்ரேலியாவினை வீழ்த்தியமையால் இலங்கை அணியினையும் சிம்ப்பாவேயினையும் சாம்பியனாக இரசிகர்கள் பார்க்க தொடங்கினார்கள். ஒரு அணியினை வெறும் பெயரிற்காக இன்னொரு அணியுடன் ஒப்பீடு செய்யும் போது தவறான புரிதல்கள் ஏற்படுகின்றது, இறுதியில் சுப்பர் 8 போட்டிகள் அனைத்திலும் இலங்கை அணி தோற்கும் யதார்த்தத்தினை ஏற்றுக்கொள்ள இயலாத இரசிகர்கள் இவ்வாறான சாக்கு போக்குகளிற்கு வருகிறார்கள். ஒரு அணி நாட்டிற்கு வெற்றி தேடி பெருமை ஏற்படுத்தாத நிலையில், எதற்காக நாட்டின் பொருளாதாரத்தினை பற்றி யோசிக்கவேண்டும்? குறைந்த பட்சம் ஒரு நாகரிகமான தோல்வியின் மூலம் தமது பெயர்களையாவது காப்பாற்றவே விரும்புவார்கள் (அது அவர்களின் வேலையும் இல்லை), அதுவே நடந்தது. ஆனால் இது ஒரு மனவழுத்தம், சோர்வு, துக்கம், கோபம் என பல உளவியல் வெளிப்பாடுகள் ஏற்படுத்தும், இரசிகர்கள் தமக்குள் சண்டையிடுதல், பொது சொத்துக்களை சேதப்படுத்தல் போன்ற மற்றவர்களையும் பாதிக்கும் செயல்களிலிலும் ஈடுபடுவார்கள். விளையாட்டு மனதிற்கு ஒரு உற்சாக உணர்ச்சியினை கொடுப்பதற்கு பதிலாக எதிர்பாராத பக்கவிளைவுகளையும் சிலரில் ஏற்படுத்திவிடுகிறது, மனம் ஒரு விந்தையானது.
  21. இந்தியா அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார்கள்.
  22. எனக்குள்ளும் ஒரு அன்னியனா?????????? சாம்பியன் அணிகள் மோசமாக தொடங்கினாலும் போட்டியின் போக்கில் (தொடர்ந்து விளையாட) அவர்கள் மெருகேறுவார்கள், ஆனால் இந்தியணி நொக்கவுட் போட்டிகளில் சொதப்புகின்ற அணி (இந்தியர்கள் பயப்படும் அணி நியுசிலாந்து🤣).
  23. இவை இனவாதம் (racism) /இனவெறி ( race hatred) அல்ல. இவை கறுவியத்தீர்வு ( settling a grudge) ஆகும். ஐயனே, என்று தென் தமிழீழத்தில் முஸ்லீம் ஊர்காவல்படையும் காடையரும் செய்தவற்றை அறிந்தனோ அன்று தொடக்கம் இப்படித்தான் ... அதான் இந்த வடிவமைப்பில் இருக்கிறேன்: வாய்ப்பின் போது சோனகரை வெளுத்தல்😁 மற்றது, வட தமிழீழத்தவர் தென் தமிழீழ சோகமெல்லாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அறிந்தாலும் (தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற இழி கொள்கையுடையோர்/ பிரதேசவாதிகள்) ஒற்றுமை வேண்டும் என்று கூறி இவற்றை மறைத்திடுவர்... இவரே சிங்களக் காடையரும் ஊர்காவல்படையினரும் வட தமிழீழத்தில் செய்தவற்றை கூறி ஒப்பாரி வைப்பர். கிஞ்சித்தும் தென் தமிழீழ படுகொலை பற்றி வாய் திறார். வாய் திறந்தால் - படுகொலைகளில் முஸ்லீம்கள் பங்காற்றியிருந்தாலும் / செய்திருந்தாலும் - சிங்களப்படை என்று செய்தியிடுவர்! ஏன் இந்தப் பாகுபாடு...? முஸ்லீம் என்டு போட வேண்டியது தானே?
  24. புதிய துணைவேந்தர் வேல்நம்பிக்கு வாழ்த்துக்கள்! இப்போதைய துணைவேந்தருக்கு வடமராட்சி ஆட்கள் என்றால்தான் மண்டைகாய்கள் என்று ஒரு பிடிப்பு உள்ளதாம். புதியவரும் எப்படியோ.
  25. லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் Published By: VISHNU 02 MAR, 2026 | 08:50 AM "லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பினரால் வடக்கு இஸ்ரேலிய நகரமான ஹைஃபாவிற்கு அருகிலுள்ள ஒரு இராணுவத் தளத்தின் மீது ராக்கெட்டுகள் மற்றும் ட்ரோன்களை வீசியதாகக் கூறியதைத் தொடர்ந்து, இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கியுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் படுகொலைக்கு பதிலடியாக ஹிஸ்புல்லா குறித்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலிய போர் விமானங்கள் உடனடியாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இலக்குகள் மீது தொடர்ச்சியான கடுமையான குண்டுவீச்சுகளைத் தொடங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/239935

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.