Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable energy) என்பது சூரிய ஒளி, காற்று, மழை, கடல் அலை, புவிவெப்பம் போன்ற புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஆற்றல் ஆகும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பம், சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், நீர்மின்சாரம், உயிர்த்திரள் ஆற்றல், உயிரெரிபொருட்கள் என்பவற்றை உள்ளடக்கி உள்ளது. 2006 ஆம் ஆண்டில் சுமார் 18% உலக ஆற்றல் நுகர்வு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து பெறப்பட்டது. இதில் 13% விறகுகள் போன்ற உயிர்த்திரள் மூலங்களிலிருந்து கிடைத்தது. அடுத்ததாக நீர்மின்சாரம் 3% ஆகவும், சுடுநீர்/வெப்பமாக்கல் 1.3% ஆகவும் இருந்தது. புதிய தொழில்நுட்பங்களான புவிவெப்பம், காற்று, சூரியஒளி, கடல் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் …

  2. தோளில் பொருத்தும் ஜெட் இந்த வருட இறுதியில் வர்த்தகச் சந்தையில் வர உள்ளது. நியூசிலாந்தில் தயாரிக்கப்படும் இந்தப் பறக்கும் இயந்திரத்தை தோளில் கொளுவிக்கொண்டு 50 மீற்றர் உயரத்தில் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகம் வரைப் பறந்து செல்லலாம். ஒரு முறை பெற்றோல் நிரப்பினால் அரை மணித்தியாலம் வரைப் பறக்கும். விலை 100,000 நியூசிலாந்து டொலர். 30 வருட ஆராய்ச்சியின் பின்பு அதன் இறுதி வெளியீட்டு வடிவமைப்பு நிலையை அது அடைந்துள்ளதாகவும் வருட இறுதியில் சந்தைக்கு வந்து விடும் என்றும் அதன் தயாரிப்பாளர் மார்டின் சொல்கிறார். 2500 பேர்வரை இதனை வாங்குவதற்கு விண்ணப்பித்துள்ளதாகவும், பல்வேறு இராணுவங்களும், மத்திய கிழக்கு அரச குடும்பங்களும் இதற்குள் அடங்கும் எனவும் கூற‌ப்பட்டுள்ளது. …

    • 0 replies
    • 1.4k views
  3. விண்வெளி வீரர் யூரி கெகாரின் ரஷ்ய விண்வெளி வீரர் யூரி கெகாரின் விண்வெளியில் கால் பதித்து இன்றோடு (2011 ஏப்ரல் 12) 50 ஆண்டுகள் ஆகின்றன. இதேநாள் 1961ஆம் ஆண்டு யூரி கெகாரின் விண்வெளியில் கால் பதித்து சாதனைப் படைத்தார். விண்வெளிக்குச் சென்றுவந்த முதல் மனிதன் யூரி கெகாரிதான். யூரி கெகாரின் கெகாரின் விண்வெளியில் கால் பதித்து இன்றோட 50 ஆண்டுகள் நிறை வடைவதை ரஷ்யா ஆரவாரத்தோடு கொண்டாடிவருகிறது. 1961க்கு முன்புவரை மனிதர்கள் யாரும் விண்வெளிக்கு சென்றதில்லை. ரஷ்யாதான் முதன் முறையாக இந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டியது. ரஷ்யாவின் சாதனையைப் பார்த்து அமெரிக்கா வாய்மேல் விரல் வைத்து வேடிக்கைப் பார்த்தது. விண்வெளிக்கு சென்றது மட்டும் இல்லா…

    • 2 replies
    • 1.8k views
  4. மொபைல் போன் தொடர்ந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் கதிர்களால் நம் மூளை பாதிக்கப்படும் எனவும் அதெல்லாம் இல்லை எனவும் எதிர்மறையான விவாதங்களும் அது குறித்த ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இருப்பினும் மொபைல் இயங்கும் போது கதிர்வீச்சு இருப்பது என்னவோ உண்மைதான். எனவே அது பாதிப்பினை ஏற்படுத்துகிறதா என்ற விவாதத்திற்குள்ளே போகாமல், சற்று பாதுகாப்பாகப் பயன்படுத்தலாமே. இயலுமானால் உங்கள் உடம்பிலிருந்து மொபைல் போனைச் சற்று தூரத்திலேயே வைத்துப் பயன்படுத்தவும். இதனால் கதிர் வீச்சு உங்கள் உடம்பை அடைவது குறையும். இதற்கு ஹேண்ட்ஸ் பிரீ செட்கள் கிடைக்கின்றன. போனைத் தள்ளி வைத்து அதனை வயருடன் இணைந்த அல்லது வயர் இல்லாமல் இணைப்பு ஏற்படுத்திப் பேசலாம், அழைக்கலாம். மொ…

    • 0 replies
    • 1.2k views
  5. பூமியில் உயிரினங்கள் வாழ்வதைப் போன்று புதன், செவ்வாய் கிரகங்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதா? மற்றும் மனிதர்கள் அங்கு வாழ முடியுமா? போன்ற ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பூமியின் அண்டை மண்டலத்தில் வானில் இருந்து விழுந்த நட்சத்திர எரி கற்களை சோதனையிட்டதில், அவற்றில் உள்ள பாக்டீரியாக்களுடன் பூமியில் வாழும் மனித பாக்டீரியா அணுக்களுக்கு தொடர்பு இருப்பதை, நாசா விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் ஹூப்பர் கண்டுபிடித்துள்ளார். பூமியில் எப்படி மனித வாழ்க்கை துவங்கியது என்பதை, நட்சத்திர எரி கல் ஆதாரத்துடன் கிடைத்துள்ள பூமியின் அண்டை மண்டல அன்னிய மனித வாழ்க்கை முறை விவரித்துவிடும் என்று ஹூப்பர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அ…

    • 0 replies
    • 854 views
  6. சனிக் கிரகத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம்:நாளை இரவு பூமிக்கு ஒரு திசையில் சூரியனும் அதற்கு நேர் எதிர் திசையில் சனிக் கிரகமும் [Monday, 2011-04-04 02:50:50] வானத்தில் நாளை இரவு சனி கிரகத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியும். நாளை இரவு பூமிக்கு ஒரு திசையில் சூரியனும், அதற்கு நேர் எதிர் திசையில் சனிக் கிரகமும் இருக்கும். இதனால் பூமியில் இருந்து பார்க்கும் போது வானத்தில் சனிக்கிரகம் பிரகாசமாகத் தோன்றும்.இதை வெறும் கண்ணால் பார்க்க முடியும். பைனாகுலர் கொண்டு பாரத்தால் சனிக்கிரகத்தைச் சுற்றி இருக்கும் வளையத்தையும் காணலாம். seithy.com

  7. Started by nunavilan,

    தத்துவமேதை காரல் மார்க்ஸ் ஒரு வழக்குரைஞரின் குடும்பத்தில், 1818 மே 5-ல் பிரஷ்யவின் ரைன் மாநிலத்தில், திரிர் என்ற நகரத்தில் ஹைன்ரிக் மார்க்ஸ் - ஹென்ரிட்டே தம்பதிக்கு மகனாக காரல் மார்க்ஸ் பிறந்தார். இரண்டு சகோதரர்கள், ஐந்து சகோதரிகள் காரல் மார்க்ஸூக்கு அப்போது இருந்தனர். திரிர் உயர்நிலைப்பள்ளியில் 1830 முல் 1835 வரை மார்க்ஸ் பயின்றார். பள்ளி இறுதி வகுப்பில் நடந்த ஒரு கட்டுரைப் போட்டியில், ‘என்ன வேலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்பதைப் பற்றி ஒரு இளைஞனுடைய சிந்தனைகள்’ என்று தலைப்பில் மார்க்ஸ் ஒரு கட்டுரை எழுதினார். அப்போது அவருக்கு வயது பதினேழு. தன்னுடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையும், குறிக்கோளும் என்ன? என்பதை மார்க்ஸ் அந்தக் கட்டுரையில் க…

    • 9 replies
    • 7.6k views
  8. Twitter@5: Five years of 140-character social networking Twitter at 5: powerful social force - Twitter reaches its fifth birthday today. It has come a long way since co-founder Jack Dorsey posted the first tweet on March 21, 2006 - Since then the micro-blogging site has grown hugely in popularity - over 140 million tweets are published every day. - In 2010, Twitter users sent an average of 50 million tweets a day. In Feb. 2011 alone, the average number was 140 million. - The number of employees has jumped from eight in Jan. 2008 to 400 in March 2011.

    • 2 replies
    • 1.9k views
  9. மார்ச் 19 – பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு! பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றிவரும் நிலவு, வரும் 19ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது. பூமியில் இருந்து நிலவு சுற்றிவரும் சுழற்சிப் பாதையில் அதன் சராசரி தூரம் 2,38,857 மைல்களாகும், அதாவது 3,84,403 கி.மீ. அது ஒரு நீள் வட்டப் பாதையில் பூமியை சுற்றி வருவதால் பூமிக்கு குறைந்த தூரத்திலும், பூமியில் இருந்து மிக அதிக தூரத்திற்கும் சென்று சுற்றி வருகிறது. அதன் சுழற்சிப் பாதையில் பூமியில் இருந்து வெகு தூரத்திற்கும் செல்லும்போது (அபோஜி) பூமியில் இருந்து 4,06,395 கி.மீ. தூரம் வரை செல்கிறது. அது தனது சுழற்சிப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது (பெரிஜி) அதன் தூரம் 3,57,643 கி.மீ. ஆக சுருங்குகிறது. …

  10. வருகிறது 4G அலைவரிசை [saturday, 2011-03-12 15:24:10] லாஸ்வேகாஸ் தகவல் தொழில் நுட்ப திருவிழாவில் கலந்து கொண்ட நிறுவனங்கள் அனைத்தும், வரும் ஆண்டுகளில் தாங்கள் அறிமுகப்படுத்த இருக்கும் டிஜிட்டல் சாதனங்கள், சேவைகள் மற்றும் தொழில் நுட்பங்களை அறிமுகப்படு த்தியுள்ளன. இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 1. ஏறத்தாள அனைத்து நிறுவனங்களும் ஏதாவது ஒரு வகையில் பேசிய 4ஜி அலை வரிசை தொடர்பு குறித்துத்தான். பல நிறுவனங்கள் 4ஜி அலைவரிசை தொடர்புடன் கூடிய மொபைல் போன் அல்லது டேப்ளட் பிசியைக் காட்சிக்குக் கொண்டு வந்திருந்தனர். 4ஜி அலை வரிசை கொண்ட மொபைல் போன்கள் இதுவரை இல்லாத அளவிற்கு தொலைதொடர்பு வேகத்தைத் தரும். ட்ரெயினில் பயணிக்கும் போது கூட விநாடிக்கு 100 மெகாபிட் அளவில் இணை…

    • 0 replies
    • 1.9k views
  11. அதி விரைவாக முன்னேறிக்கொண்டு இருக்கும் இன்றைய தொழில் நுட்பக் காலகட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் என்பது நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்களை கொண்டது.வயர்களின் உதவியின்றி தானாகவே இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் இந்த புளுடூத். கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் என்று பல சாதனங்கள் தமக்குள்ளே இணைப்பினை ஏற்படுத்திக்கொள்ளும் தன்மைகளை கொண்டுள்ளன ஆனாலும் கூட இந்த புளுடூத் சாதனன்களில் குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்த…

    • 0 replies
    • 3.3k views
  12. பலூன் தயாரிக்கும் முறை சின்ன பலுன் என்று நாம் நினைக்கும் விடயத்தை இவர்கள் எப்படி பாதுகாப்பு முறைகள் பின்பற்றி தயாரிக்கிறார்கள் என்று பாருங்கள். பலூன் பெரும்பாலும் குழந்தைகளால் பயன்படுத்தப்படுகின்றன. எனவே இவர்கள் அதற்காவே சுகாதாரத்த்திற்கு முன்னுரிமை கொடுத்து இந்த பலுனை தயார் செய்கிறார்கள்.

    • 5 replies
    • 2.4k views
  13. ஐரோப்பிய மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து உருவானது

  14. திருட்டு இறுவெட்டுக்கள் தயாரிக்கும் முறை

    • 0 replies
    • 1.5k views
  15. கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால், நீர் உந்தப்பட்டு மிகப்பெரிய அலைகள் ஏற்படுகின்றன. இது கரையைத் தாண்டி சேதத்தை ஏற்படுத்துவதை சுனாமி என்கிறோம். கடலுக்கு அடியில் இருக்கும் பூமியின் கடினமான மேற்பகுதி, நிலநடுக்கத்தால் ஆட்டம் காண்கிறது. இதனால் ஏற்படும் மிகப்பெரும் விசையின் காரணமாக நீர் தரைப்பகுதிக்கு வந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறது.சுனாமியின் வேகம் மிகவும் பயங்கரமானது. நிலநடுக்கம் ஏற்படும் அளவை பொறுத்து, இதன் வேகம் பலமடங்கு அதிகரிக்கும். சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் வல்லமை சுனாமிக்கு உண்டு. சுனாமி என்ற வார்த்தை ஜப்பான் மொழியில் இருந்து தான் வந்தது. இதற்கு துறைமுகம் மற்றும் அலைகள் என்று பொருள். சிறிய உயரமுடைய அலைகள், சுனாமியால் பெரிய…

    • 1 reply
    • 1.9k views
  16. உலகின் மிகச் சிறந்த பல்கலைகழகமாக அமெரிக்காவின் ஹார்வேர்ட் பல்கலைகழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உலகின் மிகச் சிறந்த பல்கலைகழகமாக அமெரிக்காவில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஹார்வேர்ட் பல்கலைகழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெய்லி மெயில் பத்திரிகையி்ல் வெளியிட்டுள்ள செய்தியில், தி டைம்ஸ் ஹையர் எஜூகேஷன் எனும் பத்திரிகையில் கல்வித்துறையில் சிறப்பான சேவை வழங்கும் உலகில் மிகச்சிறந்த 10 பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் முதல் இடத்தில் ஹார்வேர்ட் பல்கலைகழகமும், இரண்டாம் இடத்தில் மாஸிசூசட்ஸ் கல்வி நிறுவனமும் உள்ளது. இதைத் தொடர்ந்து ஜப்பானின் டோக்கியோ பல்‌க‌லைகழகம், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கேம்பிரிஜ்ட் பல்க‌லைகழகம், கலிப‌ோர்னியா பல்க‌ல…

    • 0 replies
    • 880 views
  17. புவியில் மட்டுமல்ல அண்டவெளி முழுவதும் உயிரினம் பரவியுள்ளது அண்டவெளியில் எங்காவது உயிரினங்கள் இருக்கிறதா என்ற கேள்விக்கான பதில் இன்றுவரை சரியாகவும் உறுதியாகவும் முன் வைக்கப்படவில்லை. இந்த நிலையில் அமெரிக்க நாஸாவின் விஞ்ஞானியான றிச்சாட் கூவர் என்பவர் கடந்த வெள்ளியன்று சுமார் 100 க்கும் மேற்பட்ட வானிலை விஞ்ஞானிகள், 5000 நிபுணர்களை வரவழைத்து அண்டவெளியில் உயிரினங்கள் இருக்கின்றன என்பதற்கான தனது அவதானிப்புக்களை முன் வைத்தார். அண்டவெளியில் இருந்துபுவியில் வந்து விழுந்த கற்களை வைத்து மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் தனது கருத்தை வலியுறுத்தியுள்ளார். மொத்தம் ஒன்பது அடிப்படைகளை இவருடைய ஆய்வு வலியுறுத்தியுள்ளது. அதில் முதலாவது புவியில் விழுந்த விண் கற்களின் மேலும், உட்புற…

  18. Started by Nellaiyan,

    • 0 replies
    • 1.5k views
  19. அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக பறவையினங்கள் சில மர்மமாக நூற்றுக்கணக்கில் இறந்து விண்ணில் இருந்து விழுகின்றன. ஆராய்ச்சியாளர்களோ மூளையைப் போட்டு கசக்கினது தான் மிச்சம்... இவற்றின் சாவுக்கு விடை இன்னும் புரியவில்லை. அமெரிக்காவில் மட்டுமன்றி இத்தாலியிலும் இது தொடர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் பறவைகளின் இந்த திடீர் உயிரிழப்புக்கு பல வகை காரணங்கள் சொல்லப்பட்டாலும்.. வேற்றுக்கிரகவாசிகளின் பிரவேசக் கலங்களுடனான மோதல் மற்றும் அமெரிக்க இராணுவம் செய்மதிகளின் உதவிகொண்டு செய்யும் உயர்சக்தி ஆயுதங்களின் பரிசோதனைகளின் விளைவென்பது கொஞ்சம் புதிதாகவும் வேறுபட்டும் இருக்கின்றன. ஆனால் இந்தப் பறவைகள் நோய் தொற்றால் இறக்கவில்லை என்பதை மட்டும் தற்போதைக்கு உறுதி செய்திருக்கிறார்கள…

  20. வானியல் அபூர்வத்தைக் கண்டுபிடித்து 10 வயது சிறுமி சாதனை வீரகேசரி இணையம் 1/5/2011 2:49:13 PM கனடாவைச் சேர்ந்த 10 வயது சிறுமியொருவர் வெடித்துச் சிதறும் நட்சத்திரம் (Super Nova) ஒன்றை கண்டறிந்ததன் மூலம் குறைந்த வயதில் இத்தகைய கண்டுபிடிப்பை மேற்கொண்ட வானியலாளர் என்ற பெருமையினை பெற்றுள்ளார். கத்ரின் அவுரோரா கிரே என்ற அச்சிறுமி கடந்த 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையே இதனைக் கண்டறிந்துள்ளார். தற்போது 5 ஆம் வகுப்பில் பயின்றுவரும் அவர் தனது எதிர்கால இலட்சியம் வானியலாளர் ஆவதே எனத் தெரிவிக்கின்றார். இந்த வெடித்துச் சிதறும் நட்சத்திரமானது சுமார் 24 மில்லியன் ஒளி வருட தூரத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவரது கண்டுபிடிப்பானது ரோயல் கனேடிய வானியல் சமூகத்…

  21. ஏப்ரல் 13, 2036 இல் பூமிக்கு அழிவா?: விஞ்ஞானிகள் எச்சரிக்கை வீரகேசரி இணையம் 2/12/2011 12:22:58 PM 'அப்போஃபிஸ்' என்ற சிறிய கோளானது பூமிக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் இக் கோளானது எதிர்வரும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி பூமியுடன் மோதலாம் எனவும் ரஸ்ய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சென் பீட்டர்ஸ் பேர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை எதிர்வு கூறியுள்ளார்கள். இக் கோளானது 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி சுமார் 37, 000 முதல் 38, 000 கிலோ மீற்றர் தொலைவில் பூமியை நெருங்கும் எனவும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி பூமியை மோதும் எனவும் பேராசிரியர் லியொனிட் சொலோகொவ் தெரிவிக்கின்றார். சிலவேளை மத்திய கிழக்கு,தென் அமெரிக்கா அல்லது ஆபி…

    • 4 replies
    • 1.6k views
  22. டைனோசர்கள் சாகவில்லை ? கிட்டத்தட்ட 62 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இந்த பூமியில் வாழ்ந்ததாக கூறப்படும் பலவேறு டைனோசர்கள் அழிக்கப்பட்டன. அவை, இந்த பூமியுடன் மோதிய ஒரு வேறு கிரக துண்டால் (asteroid) ஏற்பட்ட அதிர்வில் கொலப்பட்டன என சொல்லப்படுகின்றது. அமெரிக்கவில் பலவேறு ஆராய்ச்சிகள் டைனோசர்களை பற்றி ஆராய்ந்தவண்ணம் உள்ளனர். இவர்கள் palientologists என அழைக்கப்படுவர். அண்மையில் வெளிவந்த ஒரு ஆராய்ச்சியாளரின் கருத்துக்கள் ( Jack Horner ) முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளதுடன், பல புதிய நம்பிக்கையையும் தந்துள்ளது. காரணம், இவர்கள் உறைநிலையில் உள்ள ஒரு கருத்தரித்த டைனோசரின் முட்டையை கண்டு எடுத்துள்ளனர். இதில் டைனோசரின் குருதிக்கலங்கள் எடுக்கப்பட்டுள்ளன என சொல்லப்படுகி…

    • 2 replies
    • 1.3k views
  23. நாசாவின் செயற்கைகோள் கடலில் விழுந்தது அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெள்ளிக்கிழமை அனுப்பிய செயற்கைகோளும், அதைச் சுமந்து சென்ற ராக்கெட்டும் சுற்றுப் பாதையை எட்ட முடியாமல் கடலில் விழுந்தன. பூமியின் பருவநிலை தொடர்பாக ஆய்வு செய்வதற்காக நாசாவின் குளோரி செயற்கை கோளை சுமந்தபடி டாரஸ் எக்ஸ்.எல் ராக்கெட் கலிபோர்னியா விமானப்படைத் தளத்திலிருந்து வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது. தரையிலிருந்து கிளம்பிய சில நிமிடங்களில் ராக்கெட்டில் செயற்கைக் கோளை மூடியிருக்கும் பகுதி இரண்டாகப் பிரிந்து விட வேண்டும். ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தப் பகுதி பிரியவில்லை. இதனால் ராக்கெட்டின் வேகம் படிப்படியாகக் குறைந்தது. குறிப்பிட்ட நேரத்தில் சுற்றுப் பாதையை…

    • 0 replies
    • 883 views
  24. அண்டார்டிகாவில் பாரிய பனிக்கட்டிபடலம் கண்டு பிடிப்பு! விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். அண்டார்டிகாவின் அடிப்பகுதியில் அமைந்து உள்ள பனிக்கட்டி படலம் மிகப் பெரிதாக 4.2 கி.மீ உயரமுடையதை கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். இந்த வெள்ளைக் கண்டத்தின் நடுப்பகுதியை ஆய்வு செய்த போது திரவ நிலைத் தண்ணீர் உறைந்து பனிப்படலம் மீது ஏராளமாக குவிந்திருப்பதை கண்டறிந்தனர். சில இடங்களில் இந்தப் பனிப்படலம் நூற்றுக்கணக்கான மீற்றர் அடர்த்தி உடையதாகவும், மொத்தமுள்ள பனிக்கட்டில் பரப்பில் பாதி அளவுக்கு இருக்கிறது என ஆய்வு புள்ளி விவரங்கள் கூறுகின்றன. வியக்க வைக்கும் பல உண்மைகளை தாங்கிய ஆய்வு முடிவுகள் தி ஜர்னல் சயின்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பனிப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.