Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. மனிதர்களால் திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் பூகம்பங்கள் - அதிர்ச்சி கலந்த உண்மைகள் [ வியாழக்கிழமை, 07 மே 2015, 08:05.28 PM GMT ] பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கட்டடங்கள் உள்ளிட நகரங்களையே துவம்சம் செய்து, 7000க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி கொண்டது நேபாளத்தை உலுக்கியெடுத்த பூகம்பம். மனிதர்களால் எவ்வாறு திட்டமிட்டு பூகம்பத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும், வல்லரசுகளின் பாதுகாப்புத் துறையால் எவ்வாறு புயல்களை, சூறவளிகளை, நிலநடுக்கங்களை ஏற்படுத்த முடியும் என்பதையும் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா பகிர்ந்து கொண்டார். http://makkalnanpan.com/earthquakes-caused-human/ லங்காசிறி

    • 0 replies
    • 577 views
  2. காணாமல்போன கைப்பேசியை கண்டுபிடிப்பது எப்படி? 23 நிமிடங்களுக்கு முன்னர் பகிர்க தொலைந்துபோனப் பொருட்களை தேடிக் கண்டுபிடிப்பது என்பது சலிப்பையும், அயர்ச்சியையும் ஏற்படுத்தும் ஒரு செயல். கைத் தொலைபேசிகளை தொலைப்பது சுலபம் ஆனால் கண்டுபிடிப்பது கடினம் என்கிறார்கள் வல்லுநர்கள்அதிலும் குறிப்பாக விலையுயர்ந்த கைத் தொலைபேசி என்றால் அது உளைச்சலை மேலும் அதிகப்படுத்தும். சரி, தொலைந்துபோன தொலைபேசியை சுலபமாக கண்டுபிடிக்க முடியுமென்றால் இரட்டிப்பு மகிழ்ச்சிதானே. அவ்வகையில் காணாமல்போன கைப்பேசிகளைக் கண்டுபிடிக்க உதவும் சில வழிமுறைகளை பிபிசி கிளிக் ஆராய்கிறது. ஆண்ட்ராய்ட் தொலைபேசிகள் கடந்த ஏப்ரல் மாதம் ‘Find my phone’ அதாவது எனது தொலைபேசியை கண்டுபிடியுங்கள் என்று தட்டச்சு செய்து க…

  3. டிரைவர் இல்லாமல் ஓடும் டிரக் வண்டி அமெரிக்க வீதிகளில் ஓடத் தொடங்கியுள்ளது. இத்தானியங்கி வர்த்தக வண்டி அனுமதிப்பத்திரத்துடன் அமெரிக்காவின் பொது நெடுஞ்சாலையில் பயணிக்கின்றது. வாகன சாரதி வண்டியில் இருப்பார். தேவை ஏற்படும் போது நிலைமையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவார். கூகுளின் தானியங்கி – கார் போன்று டிரக்கும் வீதியில் செல்லும் என கூறப்படுகின்றது. மனித சாரதிகளை விட கணனி சாரதிகள் பாதுகாப்பானவையாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை களைப்படையாது உணர்ச்சி வசப்படவோ அல்லது ஆக்ரோசமடையவோ மன உளைச்சலுக்கு ஆளாகவோ மாட்டாதென கனடிய தானியக்க வாகனங்கள் சிறப்பு மைய நிர்வாக இயக்குநர் பார்ரி கேர்க் கூறியுள்ளார். வணிக நோக்கத்தின் அடிப்படையில் இவை அர்த்தமுள்ளவை எனவும் அவர் …

    • 1 reply
    • 726 views
  4. இளம் வயது கார்ல் மார்க்ஸ் கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள்: மே- 5 கார்ல் மார்க்ஸ் (5 மே 1818 14 மார்ச் 1883) ஜெர்மனியில் பிறந்தவர். அவருடைய அப்பா ஒரு வழக்கறிஞர். தன்னைப் போலவே மகனும் ஒரு வழக்கறிஞராக வர வேண்டும் என அவர் விரும்பினார். ஆனாலும், அவர் கட்டாயப்படுத்தவில்லை. மார்க்ஸ் சட்டம் படித்தாலும் தத்துவத்தில் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்து டாக்டர் பட்டம் பெற்றார். அடக்குமுறை படித்து முடித்ததும் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனார். அப்போது மன்னராட்சி முறையில்தான் அவரது நாட்டில் ஆட்சி நடந்தது. அவரது பத்திரிகை மன்னராட்சியை எதிர்த்தது. மக்களின் பிரச்சினைகளை ஆதரித்தது. அதனால் மன்னரின் அடக்குமுறையைச் சந்தித்தது. இறுதியில் மூடப்பட்டது. ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்து சென்று குட…

    • 0 replies
    • 910 views
  5. பல இடங்களில் ஐஸ் பாறைகள் உடைந்துள்ளன ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஐஸ் பாறைகள் உருகி உடைவதன் காரணமாக, வட துருவம் ஒரு பெரிய அளவிலான மாற்றத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறது என நார்வே விஞ்ஞானிகள் கூறுகின்றனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் குளிர்காலத்தில் ஆர்க்டிக் பெருங்கடலில் இவர்கள் பயணம் மேற்கொண்டிருந்தனர். கணிசமான வெப்பம் ஆர்க்டிக் கடல்நீரில் நிலவுவதன் காரணமாக, பழமையான தடித்த ஐஸ்கட்டிகள் உடைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மிகவும் மெல்லிய - புதிதாக உருவான ஐஸ் கட்டிகளே அந்த பகுதியில் தற்போது எஞ்சியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரினப் பன்முகத் தன்மை பெருமளவு குறைவதற்கும், உருகிவரும் ஐஸ் பாறைகளே தூண்டுகோலாக இருக்கிறது என்றும், இதனால் உணவு சங்கில…

    • 0 replies
    • 376 views
  6. விண்வெளியில் கடந்த 30 வருட சாதனைகளும் வேதனைகளும்

  7. தமிழகத்தில் அதிக நீர் மின்உற்பத்தி செய்யும் மேட்டூரில் இருந்து 250 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. ஆனால் சீனாவில் ஒரு அணையிலேயே 22 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து பெரும் பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளனர். சீனாவில் ஓடும் யாங்ஸ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள திரீ கார்கஸ் அணையில் இருந்துதான் இவ்வளவு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறார்கள். இதற்கு முன்பு உலகிலேயே அதிக நீர்மின் உற்பத்தி பிரேசில் நாட்டில் உள்ள இதைப்பூ அணையில் கிடைத்தது. அங்கு 14 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. அதைவிட 2 மடங்கு மின்சாரம் திரீ கார்கஸ் அணையில் உற்பத்தியாகிறது. தமிழ்நாட்டின் மொத்த மின்சார தேவை 12 ஆயிரம் மெகாவாட். ஏராளமான அனல்மின் நிலையங்கள், நீர் மின் நிலையங்கள், காற்றாலைகள் மத…

  8. எண்ணையும் தண்ணீரும் சுந்தர் வேதாந்தம் | எண்ணையும் தண்ணீரும் எண்ணையும் தண்ணீரும் எண்ணையும் தண்ணீரும்: நிலத்தடி பூதங்கள் ஃபிரான்ஸ் நாட்டில் பிறந்ததால் தாஃபின் (Dauphin) என்று பெயர் சூட்டப்பட்ட ஹெலிகாப்டர் அது. டால்பின் (Dolphin) என்பதற்கான ஃபிரெஞ்சு வார்த்தை. ஆரஞ்சும் வெள்ளையுமாக பெயிண்ட் அடிக்கப்பட்டு பளிச்சென்று இருந்தது. புகுந்தவீடாக இரண்டு வருடத்திற்கு முன்தான் இந்தியாவிற்கு வந்து சேர்ந்து இருந்த அது, மும்பையின் ஜூஹூ ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து கிளம்பி கடற்கறையில் இருந்து 160 கிமீ தள்ளியிருந்த ஒரு கச்சா எண்ணெய் எடுக்கும் பிளாட்பாரத்தை நோக்கி அரபிக்கடலின் மேல் விரைந்து கொண்டிருந்தது. இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு பொறியாளர்களுடன் ஐந்தாவது பயணியாக நானும…

  9. மெசஞ்சர் கலன் புதன் மீது மோதி "இறந்தது" நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் புதன் கிரகத்தை ஆராய அனுப்பிய மெசஞ்சர் விண்கலன் அதை நான்காண்டுகள் சுற்றி வந்தபின், எரி பொருள் தீர்ந்து போன நிலையில், அந்த கிரகத்தின் மீது மோதி தனது பயணத்தை முடித்துக்கொண்டது. இந்த திட்டத்தின் கட்டுப்பாட்டு விஞ்ஞானிகள் இந்த கலன் புதன் கிரகத்தை சுற்றி வரும் போது அடுத்த பக்கத்திலிருந்து மீண்டும் திரும்பி வராத நிலையில், அது மோதி நொறுங்கிவிட்டதை உறுதி செய்து அறிவித்தனர். ஜிஎம்டி நேரப்படி வியாழக்கிழமை 2000 மணிக்கு ( இந்திய, இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 0130 மணி) இது மோதியதாக விஞ்ஞானிகள் கூறினர். மொத்தம் 10 ஆண்டுகள் விண்ணிலும், சுமார் நான்காண்டுகள் புதனைச் சுற்றி வந்த நிலையிலும், இந்த கலன் பல ஆய்வு…

    • 2 replies
    • 683 views
  10. பூமியின் மிக ஆழத்தில் ஏற்படும் நிகழ்வுகளால் சில்லுகள் நகர்ந்து, நிலநடுக்கம் உண்டாகிறது! நேபாளத்தில் கடந்த 25 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பின்னதிர்வுகள் நீடித்துக்கொண்டிருக்கின்றன. சுருங்கச் சொன்னால், வடக்கு நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இந்தியத் துணைக் கண்டம் நேபாளத்தின் அடிநிலப் பாறைகள் மீது செலுத்திவரும் நெருக்குதல் காரணமாகவே நேபாளத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. அப்படியானால், இந்தியத் துணைக் கண்டம் நகர்கிறதா? அது எப்படிச் சாத்தியம் என்று கேட்கலாம். இதுபற்றி விளக்க பூர்வ கதைக்குச் சென்றாக வேண்டும். நாடுகளைக் காட்டும் அட்லஸ் படத்தை நீங்கள் கவனித்தால் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா எங்கோ தொலைவில் இருப்பது புலப்படும். ஆப்பிரிக்காவும் அப்படித்தான். பனி மூடி…

    • 0 replies
    • 712 views
  11. அலெக்சாண்டர் க்ளோத்ஸ் கலிலியோ - ஐசக் நியூட்டன் அற்புத உலகில் ஆலிஸ் என்ற நாவலில் முயலின் வளைக்குள் விழுந்து பூமிக்குள் செல்வாள் ஆலிஸ். “ இப்படியே போய் பூமியின் மறுபுறத்தில் வெளிவந்துவிடுவேனா?” என வியந்துபோவாள். கலிலியோ உட்பட பல விஞ்ஞானிகள் பூமியின் ஊடே துளை போட்டு அதில் ஒரு கல்லை நழுவ விட்டால் என்ன ஆகும் என வியந்துள்ளனர். பூமியில் துளை சாதாரணமாக 100 அடி ஆழத்துக்குக் கிணறு வெட்டுவோம். அதையே 12 ஆயிரம் கி.மீ. ஆழத்துக்குக் வெட்டினால் என்ன ஆகும்? அந்தத் துளைக்குள் ஒரு கல்லைப் போட்டால் என்ன ஆகும்? அப்படி எல்லாம் உண்மையில் பூமியைத் துளைத்து மறு பக்கம் வருவது போல கிணறு வெட்ட முடியாது. பூமிக்குள் இருக்கும் மிகு அதிக அழுத்தம், மிக அதிக வெப்பம் ஆகியவற்றைச் சமாளித்து …

    • 0 replies
    • 845 views
  12. கூடு விட்டு கூடு பாய்வது, ஆட்டின் உடலுக்குள் மனிதனின் ஆவி நுழைவது போன்ற காட்சிகளை விட்டாலாச்சார்யா தொடங்கி ஸ்டீவன் ஸ்பேல்பர்க வரையில் பல திரையுலக ஜாம்பவான்கள் நமக்கு சினிமாக்களின் மூலம் காட்சிப்படுத்தியுள்ளனர். பி.சி.சர்க்கார் உள்ளிட்ட சில மந்திரக்கலை நிபுணர்கள், தாஜ் மகாலை மறையச்செய்வது, காரை காணாமல் போக வைப்பது போன்றவற்றை நமது காட்சிப்பிழை மற்றும் ஒளியின் மாயாஜால வேலைகள் மூலம் நிகழ்த்தி நம்மை நம்ப வைத்துள்ளனர். ஆனால், ஸ்வீடனில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு விசேஷ கண்ணாடியை அணிவதன் மூலம் எதிரே இருக்கும் நபரை காணாமல் போகச் செய்து, வெறும் ஒளியின் நிழற்கற்றையாக்கி நிற்கவைத்து சாதனை படைத்துள்ளனர். வி.ஆர். (Virtual Reality) மென்பொருள் தொழில…

  13. ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி பிறப்பின் தூண்கள் ஒளிமயமான கேலக்ஸி கேலக்ஸிகளின் தேன்கூடு. இதன் விண்மீன்களின் எண்ணிக்கை இதுவரை பூமியில் பிறந்த எல்லா மனிதர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கும்! பூமிக்கு மேலே சுற்றி வந்து பிரபஞ்சத்தை ஆராய்ந்து படங்கள் எடுத்துத்தரும் ஹப்பிள் தொலைநோக்கி நமக்குக் காட்டிவருகிற பிரபஞ்ச தரிசனம் ஒப்பிட முடியாதது என்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படிப்பட்ட ஹப்பிள் தொலைநோக்கிக்கு வரும் ஏப்ரல் 24-ந் தேதி வெள்ளிவிழா. ஹப்பிளின் வருகை பிரபஞ்சம் முடுக்கு வேகத்தில் விரிவடைகிறது என்று ஊகிக்கிற சாத்தியம் கூட ஹப்பிள் தொலைநோக்கி வருவதற்கு முன்பாக நமக்கு இல்லை. மற்ற விண்மீன்களைச் சுற்றிவரும் கோள்களுக்கு பூமியைப் போல வளிமண்டலம் இருக்கல…

  14. இயற்கையைப் பார்த்து அதன் அடிப்படையில் இயக்கத்தை வடிவமைத்துக்கொள்வது பயானிக்ஸ் இயற்கையைப் பார்த்து அதன் அடிப்படையில் இயக்கத்தை வடிவமைத்துக்கொள்வது பயானிக்ஸ் துறை. சுருக்கமாகச் சொன்னால், கண்ணதாசன் பாடிய, ‘பறவையைக் கண்டான், விமானம் படைத்தான்’ ரகம். தமிழில் இதை உயிர் மின்னணுவியல் என்கிறார்கள். எறும்புகளின் உடல் இயக்கத்தை மாதிரியாகக் கொண்டு பயானிக் எறும்புகளின் தொகுதி அண்மையில் ஜெர்மனியில் உருவாகியிருக்கிறது. எறும்புகள்போல விரைவாக நகர, ஆறு கால்கள் கொண்ட உடலமைப்பு இது. ஒவ்வொரு எறும்பின் தலைப் பகுதியில் கேமராவும், என்ன மாதிரியான தரை என்று உணர உணரியும் (சென்சார்) உண்டு. பயானிக் எறும்பு செயல்பட வழி செய்யும் லித்தியம் மின்கலங்களை சார்ஜ் செய்யவும் இந்த அமைப்பு வழி செய்யும். அசல…

    • 4 replies
    • 917 views
  15. நம்பர் 1 மார்க் ஸூக்கர்பெர்க்இனியது புதியது - 4முகில் நிச்சயம் இவருக்குத் தமிழ் பேசவோ, எழுதவோ தெரியாது. தமிழ்ப் பெருங்கிழவி ஔவை பற்றியோ, அவள் அருளிய ஆத்திசூடி பற்றியோ, இந்த இளைஞர் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால், இவர் தன் வாழ்க்கையில் அடைந்திருக்கும் இந்த உயரத்துக்கும், இத்தனை வெற்றிகளுக்கும் காரணம் ஆத்திசூடியில் சொல்லப்பட்டிருக்கும் ‘நல்விதிகளில் ஐந்தை’ நேர்மையுடன் கடைப்பிடித்ததே. யார் இவர்? உலகின் இளம் பில்லியனர்களில் ஒருவரும், உலகின் நம்பர் 1 சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் நிறுவனருமான - மார்க் ஸுக்கர்பெர்க். ‘மார்க் மை வேர்ட்ஸ்’ என ஔவை சொல்லி, மார்க்கின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த அந்த ஐந்து நல்விதிகளை அவரது வெற்றிக் கதையுடன் சேர்த்தே பார்த்துவிடலாம். நியூயார்க…

  16. And eventually, Earth's surviving population of women will have to find somewhere else to live. மனித ஆண்கள் இன்னும் 5,000,000 ஆண்டுகளில் அழிந்து போய் விடுவார்கள் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. மனித ஆணைத் தீர்மானிக்கும் நிறமூர்த்தங்களில் ஒன்றான Y நிறமூர்த்தம் கூனிகுறுகி (அது ஏலவே கூனிக்குறுகிய ஒன்று தான்) ஆண் என்பதை தீர்மானிக்கும் இயல்பை.. இன்றைய கூர்ப்பு வேகத்தில்.. இன்னும்.. 5,000,000 ஆண்டுகளில் இழந்துவிடும். அதன் பின் ஆண்கள் பூமியில் இருந்து படிப்படியாக அருகிவிட.. பெண்கள் தம்பிப் பிழைத்தாலும்.. இனப்பெருக்க வழியின்றி.. ஒன்றில்.. வேற்றுக்கிரகத்தில் போய் மனிதனை ஒத்த.. வேறு ஆண்களை தேட வேண்டும்..இன்றேல்.. அவர்களும் செத்து மடிய வேண்டியது தான். ஆணா பெண்ணா உசத்தி என்…

  17. ஆன்டிராய்டு லாலிபாப் 5.0: யாரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள் [ திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015, 06:25.05 மு.ப GMT ] கூகுள் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள ஆன்டிராய்டு இயங்குதளம் லாலிபாப்பில் புதிய அப்டேட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. Froyo, Gingerbread, Ice Cream Sandwich, Jelly Bean, KitKat ஆகிய இயங்குதளத்திற்கு பிறகு வந்திருப்பது Lollipop. இதில் Lollipop 5.0, 5.1 என்று வெர்சன்கள் (version) வந்துவிட்டன. இதில் செய்யப்பட்டிருக்கும் அப்டேட்டுகள் பற்றி பலருக்கும் தெரியாது. அவற்றை பற்றி பார்க்கலாம். * உங்களது பழைய ஸ்மார்ட்போனில் இருந்து அனைத்து செட்டிங்ஸ் (Settings) மற்றும் தகவல்களை என்எப்சி மற்றும் ப்ளூடூத் பயன்படுத்தி பறிமாறி கொள்ள முடியும். * ஆ…

  18. ஜார்ஜியா: செல்போனில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் இனி கவலைப்பட வேண்டியதில்லை. அதற்காகவே புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு சாதனத்தை போனில் பொறுத்திவிட்டு அதை பார்த்து கத்தினால் சார்ஜ் ஏறிவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களின் மிகப்பெரிய பிரச்சனை பேட்டரி சார்ஜ் தீர்ந்து போவதுதான். இதை சமாளிப்பதற்கு பலர் இரண்டு போன்களை கையில் வைத்துக்கொண்டு அலைகிறார்கள். இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு உலகம் முழுவதும் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.போனில் பொறுத்தப்பட்டிருக்கும் இந்த ஒலிவாங்கியை நோக்கி சத்தமாக கத்தும் போது காகிதத்தில் அதிர்வு ஏற்பட்டு அதன் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த மின் ஆற்றலை கொண்டு செல்போனை சார்ஜ் செய்துகொள்ள முடியும். ஆனால் இந்த …

    • 0 replies
    • 710 views
  19. தமிழில் விரலால் எழுதியும் இனி மெசேஜ் அனுப்பலாம்: கூகுள் புதிய வசதி செயல் விளக்கப் படம்: கூகுள் பக்கத்திலிருந்து. கை விரல்களால் எழுதி, அதனை மெசேஜாக அனுப்பும் கையெழுத்து உள்ளீடு (Google Handwriting Input) அப்ளிக்கேஷனை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ் மொழி உள்ளீடு மூலமாகவும் இனி நாம் மெசேஜ் அனுப்பலாம் என்பதே இதன் சிறப்பு அம்சம். உலக அளவில் மொத்தம் 82 மொழிகளில் மெசேஜ்களை கைப்பட எழுதி அனுப்பக் கூடிய வகையில் இந்த புதிய அப்ளிகேஷன் ஆண்ட்ராய்ட் செல்போன்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. மிகத் தொன்மையான மாண்ட்ரின் மொழியும் இந்த அப்ளிக்கேஷனில் இடம்பெற்றுள்ளது. தவிர, இதில் கை விரல்களால் வரைந்தும் மெசேஜ்களை அனுப்ப முடியும். ப்ளே ஸ்டோரில் கூகுள் கையெழுத்து …

  20. என்னுடைய மின்சாரக் காரை நான் போன வருடம் (2014) ஏப்பிரல் மாதம் லீஸ் பண்ணி (lease) இருந்தேன்.(சரியாக ஒரு வருடம்). அதைப் பற்றி கொஞ்சம் எழுதுவம் என்று ......... அதுக்கு முன் ஒரு 4 wheel drive (suv) வைத்திருந்தேன், அதுவும் பழசாகிக் கொண்டு வர புது வாகனம் வாங்குவம் என்று ...... (பெண்கள் பழைய வாகங்களை ஒட விரும்புவதில்லைத் தானே.) எனக்குத் திரும்பவும் 4 wheel drive (suv) தான் வாங்க வேண்டும் என்று விருப்பம் ஏனேன்றால் driving position நல்லாய் இருக்கும் ,பனிக்கும், பனி மழைக்கும் சறுக்காது. கார் ஓடேக்கை கிடங்குக்கை இருந்து ஓடுவது மாதிரி இருப்பது அதாலை எனக்குக் கார் எண்டா பிடிக்கவே பிடிக்காது. பிடிக்காட்டிலும் பெற்றோல் விலை, சூழல் மாசுபடுதல், ..... எல்லாவற்றையும் பார்த்து ஒரு மி…

    • 17 replies
    • 1.7k views
  21. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்கும் விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, புதிய ஆர்டர் மூலமாக 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை கருதி, இந்த புதிய போர் விமானங்களை உடனடியாக வாங்குவதற்கு முடிவு செய்ததாக மத்திய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. ரபேல் விமானத்தை வாங்கும் பல பில்லியன் டாலர் மதிப்புடைய இந்த ஆர்டரை பல எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும், மத்திய அரசு முழு முனைப்புடன் ரபேல் விமானங்களை வாங்க முடிவெடுத்துள்ளது. இந்த போர் விமானத்தை பற்றிய 30 முக்கிய விஷயங்களை ஸ்லைடரில் காணலாம்.பிரான்ஸ் நாட்டின் ட…

    • 0 replies
    • 1.8k views
  22. Honor அறிமுகம் செய்யும் புதிய Smartphone [ புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015, 05:37.54 மு.ப GMT ] சம்சுங் மற்றும் அப்பிள் நிறுவனங்களின் ஸ்மார்ட் கைப்பேசிக்கு இணையான தொழில்நுட்பத்தினைக் கொண்ட புத்தம் புதிய Smartphone ஒன்றினை Honor நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. Honor 4X எனும் இக்கைப்பேசியானது 5.5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 1.2GHz வேகத்தில் செயல்படக்கூடிய Octa Core Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது. இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன. மேலும் Android 4.4 KitKat இயங்குதளத்தில் செ…

    • 0 replies
    • 647 views
  23. சாம்பல் நிறத் திமிங்கிலம் பருவத்துக்கேற்ப இடம்மாறுவதை கண்காணித்த விஞ்ஞானிகள், அந்த இடப் பெயர்ச்சியில் அவை இருபதாயிரம் கிலோமீட்டர் தூரம் பயணிப்பதாகவும், உலகில் ஒரு பாலூட்டி விலங்கினமும் செய்கின்ற மிக அதிக தூர இடப்பெயர்ச்சி இதுதான் என்றும் கூறுகின்றனர். சாம்பல் நிற பெண் திமிங்கிலம் ஒன்றின் நடமாட்டத்தை அமெரிக்க மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் 172 நாட்கள் கண்காணித்தனர். ரஷ்ய கரையோரத்தில் ஆரம்பித்து பேரிங் கடல் வழியாக அமெரிக்காவின் பசிஃபிக் கரைக்கு வந்து பின்னர் தெற்காக மெக்ஸிகோ வரை சென்று அங்கு குட்டிகளை ஈன்றுவிட்டு பின்னர் ரஷ்யக் கரையோரத்துக்கே அது திரும்பியுள்ளது. இவ்வகைத் திமிங்கலங்களை பாதுகாப்பதற்கான முயற்சியின் அங்கமாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு பற்றி 'பயாலஜி லெட்டர்ஸ்' என்…

    • 3 replies
    • 722 views
  24. கும்பல்கர் மலைக்கோட்டை: மர்மங்கள் பல சூழ்ந்த இந்திய பெருஞ்சுவர்! (வீடியோ இணைப்பு) [ புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015, 07:59.32 AM GMT +05:30 ] ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதைப்பூரில் அமைந்துள்ள இந்த கும்பல்கர் மலைக்கோட்டைச் சுவர் (Kumbhalgarh Fort) சீன பெருஞ்சுவருக்கு அடுத்த உலகின் 2வது பெருஞ்சுவராக விளங்குகிறது. பனாஸ் நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள இந்த மலைக் கோட்டை 15ம் நூற்றாண்டில் ராணா கும்பா என்ற மன்னரால் கட்டப்பட்டது. இந்த மலைக் கோட்டை உதைப்பூரில் இருந்து வடமேற்கு திசையில் 82 கி.மீ திசையில் அமைந்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு, இந்த கோட்டை யுனெஸ்கோவின் (UNESCO) உலக பாரம்பரிய குழுவினரால், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1100 மீற்…

    • 0 replies
    • 2.7k views
  25. இந்தியாவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் துணைக்கண்டத்தின் மிகப் பழமையான நாகரிகம் நிலவிய காலமான ஹரப்பா நாகரிக காலத்தைச் சேர்ந்த மனித எலும்புக் கூடுகள் நான்கை தோண்டியெடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த எலும்புக்கூடுகள் சுமார் நான்காயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இரண்டு வயது வந்த ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடுகள் வட இந்திய மாநிலமான ஹரியானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த எலும்புக்கூடுகள் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டிருப்பதாகவும், அவைகளை டி.என்.ஏ (மரபணு) பரிசோதனைக்கு உட்படுத்தப்போவதாகவும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர். ஹரப்பா நாகரிக கால மக்கள் குறித்த புதிய தகவல்களை இந்தக் கண்டுபிடிப்புகள் தரும் என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள…

    • 0 replies
    • 593 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.