Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. “அழகான கணித மூளைக்காரர்” ஜான் நாஷ் விபத்தில் மரணம் நோபெல் பரிசு பெற்ற கணிதமேதை ஜான் நாஷ்நோபெல் பரிசுபெற்ற கணிதமேதை ஜான் நாஷ் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் நடந்த கார்விபத்தில் காலமானார். "A Beautiful Mind," என்கிற உலகப்புகழ்பெற்ற திரைப்படம் அவரது வாழ்க்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. எண்பத்தி ஆறு வயதான ஜான் நாஷும் அவரது மனைவி அலிசியாவும் பயணம் செய்துகொண்டிருந்த டாக்ஸி சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவருமே இறந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. Paranoid schizophrenia என்கிற தீவிர மன அழுத்தநோயால் தன் வாழ்நாளின் பெரும்பகுதி அவதிப்பட்ட ஜான் நாஷ், 1994ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நேபெல் பரிசை வென்றார். Game theory என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக …

  2. நேபாளத்தில் கடந்த ஏப்ரல் 25 அன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் எதிரொலியாக மே 12ந்தேதியும் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது. அவை எவரெஸ்ட் மலைச்சிகரத்தை குனியவைத்துவிட்டன. அதன் உயரம் சுமார் 2.5 சென்டிமீட்டர் அளவுக்கு குறைந்துவிட்டது. காத்மாண்ட் பகுதி சுமார் மூன்று அடி உயரத்துக்கு உயர்ந்து விட்டது என்றும் விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். அதுமட்டுமல்ல. பூமி சுழலும் வேகம் அதிகரித்துள்ளது. அதனால் ஒரு நாளின் கால இடைவெளி சுமார் ஒன்று அல்லது இரண்டு மைக்ரோ செகண்ட் வரை குறைந்தும் போயிருக்கலாம்! ஆப்பிளும் முட்டையும் பூமியின் மேல் அடுக்கு மேலோடு (crust) எனப்படுகிறது. பாறைகள் அடங்கிய இந்தப் பகுதியில்தான் நாம் வாழும் நிலப்பகுதியும் கடல்களும் உள்ளன. பூமியை ஒரு ஆப்பிள் என்று நாம் …

  3. எல்ஈடி- ஓர் ஒளிப் புரட்சி சிவானந்தம் நீலகண்டன் ஒருசாதாரண வேலை நாளின் காலையில் படுக்கையிலிருந்து எழுவதற்கு முன் கையால் தடவி எடுத்து முதற்கண் நோக்கும் கைப்பேசியின் திரை, பிறகெழுந்து சோம்பல் முறித்து ஸ்விட்ச் ஆன் செய்யப்படும் மின்விளக்கு, பிறகு ஏறிச்செல்லும் காரின் முன்விளக்கு முதல் பின்விளக்கு வரை, வழியில் போக்குவரத்தை நெறிப்படுத்தும் பச்சை, மஞ்சள், சிவப்பு விளக்குகள், அலுவலகத்தில் நுழைந்தவுடன் உயிர்ப்பிக்கும் கணினித்திரை, வேலை முடித்து வீடு திரும்புகையில் கண்ணுறும் – வானுரசிக் கட்டிடங்களை அலங்கரிக்கும் – வண்ண விளக்குகள் என்று தற்கால மனிதர் எங்கும் தன் பார்வையிலிருந்து தப்பிவிடாமல் எல்ஈடி எனப்படும் ஒளி உமிழும் டையோடுகள் (Light Emitting Diodes) தங்கள் கண்காணிப்பிலே…

    • 2 replies
    • 1.3k views
  4. யப்பானில் துவிச்சக்கரவண்டி எப்படி நிறுத்தப்படுகிறது(park)? aaeb6737a3ca5574c0ab9b8a8d4dc3af

  5. 5606df798cf2d40f0f0b1eb82bbe5f58 வளமிக்க மண்ணில் இலட்சக்கணக்கான லீட்டர் கழிவெண்ணை கலந்த பின்னும் காத்திரமான செயலில் இறங்காத நாம் எங்கே, யூதர்கள் எங்கே? இதுக்குள்ள தனி நாடு ஒன்றுதான் எமக்கு கேடு..

  6. கம்பத்துக்குப் பின் நில அதிர்வு.... நேபாள பூகம்பத்துக்கு பின் ஏற்பட்ட இரண்டாவது நில அதிர்வில் பீஹாரில் 17 பேர் இறந்தனர் நேபாளத்தில் ஏப்ரல் 25ம் தேதி ஏற்பட்ட கடும் பூகம்ப அழிவில் 8,000 பேருக்கு மேல் கொல்லப்பட்ட பின்னர், செவ்வாய்க்கிழமை மற்றொரு நில நடுக்கம் ஏற்பட்டு, மேலும் உயிர் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டன. இயற்கை பேரழிவுகள் இது போல ஒரே இடத்தில் அடுத்தடுத்து நிகழ்வதில்லை, ஆனால் பூகம்பங்கள் ஒரு விதிவிலக்கு. பெரும் நில நடுக்கங்கள் ஏற்படும்போது அவைகளைப் பின் தொடர்ந்து மேலும் சில அதிர்வுகள் பொதுவாக ஏற்படுகின்றன. செவ்வாய்க்கிழமை நேபாளத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் 7.3 அளவு கொண்டது ஆனால் அது ஏப்ரல் 25ம் தேதி தாக்கிய முதல் பூகம்பம் போல 7.8 அளவு கொண்டதல்ல. இருந்தாலும…

    • 0 replies
    • 366 views
  7. அடர்த்தி இழக்கும் ஐஸ் அடுக்கு அண்டார்டிக்கா தீபகற்பத்தில் இருக்கும் மிகப்பெரிய ஐஸ் அடுக்கு ஒன்று 1998லிருந்து 2012 வரையிலான காலத்தில் நான்கு மீட்டர்கள் அடர்த்தியை இழந்திருப்பதாக புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. லார்சன் சி என்ற இந்த அடுக்கு பற்றி பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், இந்த அடர்த்தி இழப்பில் பெரும்பகுதி இந்த ஐஸ் அடுக்கின் அடியில் உள்ள வெதுவெதுப்பான கடலால் ஏற்பட்டதாகவும், இந்த அடுக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 28 செண்டிமீட்டர் அடர்த்தியை கீழே உள்ள கடலால் இழந்திருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. இந்த 55000 சதுரகிமீ பரப்பளவுள்ள அடுக்கு இன்னும் சில பத்தாண்டுகளில் இடிந்து விழுந்து, அதன் பின்னால் இருக்கு பனி ஏரிகள் கடலுக்குள் வந்து இணைந்து கடல…

    • 0 replies
    • 336 views
  8. செவ்வாய்க் கிர­கத்தின் மேற்­ப­ரப்பில் தரை­யி­றங்­கி­யுள்ள நாசா விண்­வெளி ஆராய்ச்சி நிலை­யத்தின் கியூ­ரி­யோ­சிற்றி விண்­க­ல­மா­னது அந்தக் கிர­கத்­தி­லான சூரிய அஸ்­த­மனம் தொடர்பில் புகைப்­ப­டங்­களை எடுத்து அனுப்பி வைத்­துள்­ளது. கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி எடுக்­கப்­பட்ட இந்த புகைப்­ப­டங்கள் ஆரம்­பத்தில் கறுப்பு வெள்ளை நிறத்­தி­லேயே பூமிக்கு அனுப்­பப்­பட்­டி­ருந்­தன. இந்­நி­லையில் கோள் மண்­டல சபையை சேர்ந்த நிபு­ணர்கள் இந்த புகைப்­ப­டங்­களை உயர் தொழில்­நுட்­பங்­களை பயன்­ப­டுத்தி வர்ண புகைப்படங்களாக மீள உருவாக்கி வெளியிட்டுள்ளனர். http://www.virakesari.lk/articles/2015/05/08/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%…

  9. மரிசா தி தொலெதோவுக்கு வலி என்றால் என்னவென்றே தெரியாதுபிரேசில் நாட்டைச் சேர்ந்த மரிசா டெ தொலெதோ ஒரு அதிசய பிறவி. உலக அளவில் வலியை உணர முடியாத சுமார் 50 பேரில் இவரும் ஒருவர். அபூர்வமான மரபணு மாற்றம் காரணமாக இவரது உடலின் வலி மூளையால் உணரப்படுவதில்லை. 27 வயதாகும் மரிசா ஒரு கால் விரலை பறிகொடுத்திருக்கிறார். மயக்க மருந்து எதையும் எடுத்துக்கொள்ளாமல் மூன்று குழந்தைகளை பெற்றிருக்கிறார். உடல் முழுக்க காயத்தின் தழும்புகளோடு காணப்படுகிறார். ஆனால் அவர் ஒருநாளும் வலி என்றால் என்ன என்பதை உணர்ந்ததே இல்லை. இவர் பிறந்தபோதே அனெல்ஜீஷியா (analgesia) என்கிற மரபணு மாற்ற நோயுடன் பிறந்தவர் என்பதால் அவரால் உடலின் வலியை உணரவே முடியாது. உலக அளவில் சுமார் 50 பேரை மட்டுமே பாதிக்கும் இந்த நிலைமை மேம…

  10. மனிதர்களால் திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் பூகம்பங்கள் - அதிர்ச்சி கலந்த உண்மைகள் [ வியாழக்கிழமை, 07 மே 2015, 08:05.28 PM GMT ] பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கட்டடங்கள் உள்ளிட நகரங்களையே துவம்சம் செய்து, 7000க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி கொண்டது நேபாளத்தை உலுக்கியெடுத்த பூகம்பம். மனிதர்களால் எவ்வாறு திட்டமிட்டு பூகம்பத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும், வல்லரசுகளின் பாதுகாப்புத் துறையால் எவ்வாறு புயல்களை, சூறவளிகளை, நிலநடுக்கங்களை ஏற்படுத்த முடியும் என்பதையும் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா பகிர்ந்து கொண்டார். http://makkalnanpan.com/earthquakes-caused-human/ லங்காசிறி

    • 0 replies
    • 583 views
  11. காணாமல்போன கைப்பேசியை கண்டுபிடிப்பது எப்படி? 23 நிமிடங்களுக்கு முன்னர் பகிர்க தொலைந்துபோனப் பொருட்களை தேடிக் கண்டுபிடிப்பது என்பது சலிப்பையும், அயர்ச்சியையும் ஏற்படுத்தும் ஒரு செயல். கைத் தொலைபேசிகளை தொலைப்பது சுலபம் ஆனால் கண்டுபிடிப்பது கடினம் என்கிறார்கள் வல்லுநர்கள்அதிலும் குறிப்பாக விலையுயர்ந்த கைத் தொலைபேசி என்றால் அது உளைச்சலை மேலும் அதிகப்படுத்தும். சரி, தொலைந்துபோன தொலைபேசியை சுலபமாக கண்டுபிடிக்க முடியுமென்றால் இரட்டிப்பு மகிழ்ச்சிதானே. அவ்வகையில் காணாமல்போன கைப்பேசிகளைக் கண்டுபிடிக்க உதவும் சில வழிமுறைகளை பிபிசி கிளிக் ஆராய்கிறது. ஆண்ட்ராய்ட் தொலைபேசிகள் கடந்த ஏப்ரல் மாதம் ‘Find my phone’ அதாவது எனது தொலைபேசியை கண்டுபிடியுங்கள் என்று தட்டச்சு செய்து க…

  12. டிரைவர் இல்லாமல் ஓடும் டிரக் வண்டி அமெரிக்க வீதிகளில் ஓடத் தொடங்கியுள்ளது. இத்தானியங்கி வர்த்தக வண்டி அனுமதிப்பத்திரத்துடன் அமெரிக்காவின் பொது நெடுஞ்சாலையில் பயணிக்கின்றது. வாகன சாரதி வண்டியில் இருப்பார். தேவை ஏற்படும் போது நிலைமையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவார். கூகுளின் தானியங்கி – கார் போன்று டிரக்கும் வீதியில் செல்லும் என கூறப்படுகின்றது. மனித சாரதிகளை விட கணனி சாரதிகள் பாதுகாப்பானவையாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை களைப்படையாது உணர்ச்சி வசப்படவோ அல்லது ஆக்ரோசமடையவோ மன உளைச்சலுக்கு ஆளாகவோ மாட்டாதென கனடிய தானியக்க வாகனங்கள் சிறப்பு மைய நிர்வாக இயக்குநர் பார்ரி கேர்க் கூறியுள்ளார். வணிக நோக்கத்தின் அடிப்படையில் இவை அர்த்தமுள்ளவை எனவும் அவர் …

    • 1 reply
    • 729 views
  13. இளம் வயது கார்ல் மார்க்ஸ் கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள்: மே- 5 கார்ல் மார்க்ஸ் (5 மே 1818 14 மார்ச் 1883) ஜெர்மனியில் பிறந்தவர். அவருடைய அப்பா ஒரு வழக்கறிஞர். தன்னைப் போலவே மகனும் ஒரு வழக்கறிஞராக வர வேண்டும் என அவர் விரும்பினார். ஆனாலும், அவர் கட்டாயப்படுத்தவில்லை. மார்க்ஸ் சட்டம் படித்தாலும் தத்துவத்தில் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்து டாக்டர் பட்டம் பெற்றார். அடக்குமுறை படித்து முடித்ததும் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனார். அப்போது மன்னராட்சி முறையில்தான் அவரது நாட்டில் ஆட்சி நடந்தது. அவரது பத்திரிகை மன்னராட்சியை எதிர்த்தது. மக்களின் பிரச்சினைகளை ஆதரித்தது. அதனால் மன்னரின் அடக்குமுறையைச் சந்தித்தது. இறுதியில் மூடப்பட்டது. ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்து சென்று குட…

    • 0 replies
    • 922 views
  14. பல இடங்களில் ஐஸ் பாறைகள் உடைந்துள்ளன ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஐஸ் பாறைகள் உருகி உடைவதன் காரணமாக, வட துருவம் ஒரு பெரிய அளவிலான மாற்றத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறது என நார்வே விஞ்ஞானிகள் கூறுகின்றனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் குளிர்காலத்தில் ஆர்க்டிக் பெருங்கடலில் இவர்கள் பயணம் மேற்கொண்டிருந்தனர். கணிசமான வெப்பம் ஆர்க்டிக் கடல்நீரில் நிலவுவதன் காரணமாக, பழமையான தடித்த ஐஸ்கட்டிகள் உடைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மிகவும் மெல்லிய - புதிதாக உருவான ஐஸ் கட்டிகளே அந்த பகுதியில் தற்போது எஞ்சியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரினப் பன்முகத் தன்மை பெருமளவு குறைவதற்கும், உருகிவரும் ஐஸ் பாறைகளே தூண்டுகோலாக இருக்கிறது என்றும், இதனால் உணவு சங்கில…

    • 0 replies
    • 382 views
  15. விண்வெளியில் கடந்த 30 வருட சாதனைகளும் வேதனைகளும்

  16. தமிழகத்தில் அதிக நீர் மின்உற்பத்தி செய்யும் மேட்டூரில் இருந்து 250 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. ஆனால் சீனாவில் ஒரு அணையிலேயே 22 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து பெரும் பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளனர். சீனாவில் ஓடும் யாங்ஸ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள திரீ கார்கஸ் அணையில் இருந்துதான் இவ்வளவு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறார்கள். இதற்கு முன்பு உலகிலேயே அதிக நீர்மின் உற்பத்தி பிரேசில் நாட்டில் உள்ள இதைப்பூ அணையில் கிடைத்தது. அங்கு 14 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. அதைவிட 2 மடங்கு மின்சாரம் திரீ கார்கஸ் அணையில் உற்பத்தியாகிறது. தமிழ்நாட்டின் மொத்த மின்சார தேவை 12 ஆயிரம் மெகாவாட். ஏராளமான அனல்மின் நிலையங்கள், நீர் மின் நிலையங்கள், காற்றாலைகள் மத…

  17. எண்ணையும் தண்ணீரும் சுந்தர் வேதாந்தம் | எண்ணையும் தண்ணீரும் எண்ணையும் தண்ணீரும் எண்ணையும் தண்ணீரும்: நிலத்தடி பூதங்கள் ஃபிரான்ஸ் நாட்டில் பிறந்ததால் தாஃபின் (Dauphin) என்று பெயர் சூட்டப்பட்ட ஹெலிகாப்டர் அது. டால்பின் (Dolphin) என்பதற்கான ஃபிரெஞ்சு வார்த்தை. ஆரஞ்சும் வெள்ளையுமாக பெயிண்ட் அடிக்கப்பட்டு பளிச்சென்று இருந்தது. புகுந்தவீடாக இரண்டு வருடத்திற்கு முன்தான் இந்தியாவிற்கு வந்து சேர்ந்து இருந்த அது, மும்பையின் ஜூஹூ ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து கிளம்பி கடற்கறையில் இருந்து 160 கிமீ தள்ளியிருந்த ஒரு கச்சா எண்ணெய் எடுக்கும் பிளாட்பாரத்தை நோக்கி அரபிக்கடலின் மேல் விரைந்து கொண்டிருந்தது. இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு பொறியாளர்களுடன் ஐந்தாவது பயணியாக நானும…

  18. மெசஞ்சர் கலன் புதன் மீது மோதி "இறந்தது" நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் புதன் கிரகத்தை ஆராய அனுப்பிய மெசஞ்சர் விண்கலன் அதை நான்காண்டுகள் சுற்றி வந்தபின், எரி பொருள் தீர்ந்து போன நிலையில், அந்த கிரகத்தின் மீது மோதி தனது பயணத்தை முடித்துக்கொண்டது. இந்த திட்டத்தின் கட்டுப்பாட்டு விஞ்ஞானிகள் இந்த கலன் புதன் கிரகத்தை சுற்றி வரும் போது அடுத்த பக்கத்திலிருந்து மீண்டும் திரும்பி வராத நிலையில், அது மோதி நொறுங்கிவிட்டதை உறுதி செய்து அறிவித்தனர். ஜிஎம்டி நேரப்படி வியாழக்கிழமை 2000 மணிக்கு ( இந்திய, இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 0130 மணி) இது மோதியதாக விஞ்ஞானிகள் கூறினர். மொத்தம் 10 ஆண்டுகள் விண்ணிலும், சுமார் நான்காண்டுகள் புதனைச் சுற்றி வந்த நிலையிலும், இந்த கலன் பல ஆய்வு…

    • 2 replies
    • 690 views
  19. பூமியின் மிக ஆழத்தில் ஏற்படும் நிகழ்வுகளால் சில்லுகள் நகர்ந்து, நிலநடுக்கம் உண்டாகிறது! நேபாளத்தில் கடந்த 25 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பின்னதிர்வுகள் நீடித்துக்கொண்டிருக்கின்றன. சுருங்கச் சொன்னால், வடக்கு நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இந்தியத் துணைக் கண்டம் நேபாளத்தின் அடிநிலப் பாறைகள் மீது செலுத்திவரும் நெருக்குதல் காரணமாகவே நேபாளத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. அப்படியானால், இந்தியத் துணைக் கண்டம் நகர்கிறதா? அது எப்படிச் சாத்தியம் என்று கேட்கலாம். இதுபற்றி விளக்க பூர்வ கதைக்குச் சென்றாக வேண்டும். நாடுகளைக் காட்டும் அட்லஸ் படத்தை நீங்கள் கவனித்தால் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா எங்கோ தொலைவில் இருப்பது புலப்படும். ஆப்பிரிக்காவும் அப்படித்தான். பனி மூடி…

    • 0 replies
    • 715 views
  20. அலெக்சாண்டர் க்ளோத்ஸ் கலிலியோ - ஐசக் நியூட்டன் அற்புத உலகில் ஆலிஸ் என்ற நாவலில் முயலின் வளைக்குள் விழுந்து பூமிக்குள் செல்வாள் ஆலிஸ். “ இப்படியே போய் பூமியின் மறுபுறத்தில் வெளிவந்துவிடுவேனா?” என வியந்துபோவாள். கலிலியோ உட்பட பல விஞ்ஞானிகள் பூமியின் ஊடே துளை போட்டு அதில் ஒரு கல்லை நழுவ விட்டால் என்ன ஆகும் என வியந்துள்ளனர். பூமியில் துளை சாதாரணமாக 100 அடி ஆழத்துக்குக் கிணறு வெட்டுவோம். அதையே 12 ஆயிரம் கி.மீ. ஆழத்துக்குக் வெட்டினால் என்ன ஆகும்? அந்தத் துளைக்குள் ஒரு கல்லைப் போட்டால் என்ன ஆகும்? அப்படி எல்லாம் உண்மையில் பூமியைத் துளைத்து மறு பக்கம் வருவது போல கிணறு வெட்ட முடியாது. பூமிக்குள் இருக்கும் மிகு அதிக அழுத்தம், மிக அதிக வெப்பம் ஆகியவற்றைச் சமாளித்து …

    • 0 replies
    • 849 views
  21. கூடு விட்டு கூடு பாய்வது, ஆட்டின் உடலுக்குள் மனிதனின் ஆவி நுழைவது போன்ற காட்சிகளை விட்டாலாச்சார்யா தொடங்கி ஸ்டீவன் ஸ்பேல்பர்க வரையில் பல திரையுலக ஜாம்பவான்கள் நமக்கு சினிமாக்களின் மூலம் காட்சிப்படுத்தியுள்ளனர். பி.சி.சர்க்கார் உள்ளிட்ட சில மந்திரக்கலை நிபுணர்கள், தாஜ் மகாலை மறையச்செய்வது, காரை காணாமல் போக வைப்பது போன்றவற்றை நமது காட்சிப்பிழை மற்றும் ஒளியின் மாயாஜால வேலைகள் மூலம் நிகழ்த்தி நம்மை நம்ப வைத்துள்ளனர். ஆனால், ஸ்வீடனில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு விசேஷ கண்ணாடியை அணிவதன் மூலம் எதிரே இருக்கும் நபரை காணாமல் போகச் செய்து, வெறும் ஒளியின் நிழற்கற்றையாக்கி நிற்கவைத்து சாதனை படைத்துள்ளனர். வி.ஆர். (Virtual Reality) மென்பொருள் தொழில…

  22. ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி பிறப்பின் தூண்கள் ஒளிமயமான கேலக்ஸி கேலக்ஸிகளின் தேன்கூடு. இதன் விண்மீன்களின் எண்ணிக்கை இதுவரை பூமியில் பிறந்த எல்லா மனிதர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கும்! பூமிக்கு மேலே சுற்றி வந்து பிரபஞ்சத்தை ஆராய்ந்து படங்கள் எடுத்துத்தரும் ஹப்பிள் தொலைநோக்கி நமக்குக் காட்டிவருகிற பிரபஞ்ச தரிசனம் ஒப்பிட முடியாதது என்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படிப்பட்ட ஹப்பிள் தொலைநோக்கிக்கு வரும் ஏப்ரல் 24-ந் தேதி வெள்ளிவிழா. ஹப்பிளின் வருகை பிரபஞ்சம் முடுக்கு வேகத்தில் விரிவடைகிறது என்று ஊகிக்கிற சாத்தியம் கூட ஹப்பிள் தொலைநோக்கி வருவதற்கு முன்பாக நமக்கு இல்லை. மற்ற விண்மீன்களைச் சுற்றிவரும் கோள்களுக்கு பூமியைப் போல வளிமண்டலம் இருக்கல…

  23. இயற்கையைப் பார்த்து அதன் அடிப்படையில் இயக்கத்தை வடிவமைத்துக்கொள்வது பயானிக்ஸ் இயற்கையைப் பார்த்து அதன் அடிப்படையில் இயக்கத்தை வடிவமைத்துக்கொள்வது பயானிக்ஸ் துறை. சுருக்கமாகச் சொன்னால், கண்ணதாசன் பாடிய, ‘பறவையைக் கண்டான், விமானம் படைத்தான்’ ரகம். தமிழில் இதை உயிர் மின்னணுவியல் என்கிறார்கள். எறும்புகளின் உடல் இயக்கத்தை மாதிரியாகக் கொண்டு பயானிக் எறும்புகளின் தொகுதி அண்மையில் ஜெர்மனியில் உருவாகியிருக்கிறது. எறும்புகள்போல விரைவாக நகர, ஆறு கால்கள் கொண்ட உடலமைப்பு இது. ஒவ்வொரு எறும்பின் தலைப் பகுதியில் கேமராவும், என்ன மாதிரியான தரை என்று உணர உணரியும் (சென்சார்) உண்டு. பயானிக் எறும்பு செயல்பட வழி செய்யும் லித்தியம் மின்கலங்களை சார்ஜ் செய்யவும் இந்த அமைப்பு வழி செய்யும். அசல…

    • 4 replies
    • 922 views
  24. நம்பர் 1 மார்க் ஸூக்கர்பெர்க்இனியது புதியது - 4முகில் நிச்சயம் இவருக்குத் தமிழ் பேசவோ, எழுதவோ தெரியாது. தமிழ்ப் பெருங்கிழவி ஔவை பற்றியோ, அவள் அருளிய ஆத்திசூடி பற்றியோ, இந்த இளைஞர் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால், இவர் தன் வாழ்க்கையில் அடைந்திருக்கும் இந்த உயரத்துக்கும், இத்தனை வெற்றிகளுக்கும் காரணம் ஆத்திசூடியில் சொல்லப்பட்டிருக்கும் ‘நல்விதிகளில் ஐந்தை’ நேர்மையுடன் கடைப்பிடித்ததே. யார் இவர்? உலகின் இளம் பில்லியனர்களில் ஒருவரும், உலகின் நம்பர் 1 சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் நிறுவனருமான - மார்க் ஸுக்கர்பெர்க். ‘மார்க் மை வேர்ட்ஸ்’ என ஔவை சொல்லி, மார்க்கின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த அந்த ஐந்து நல்விதிகளை அவரது வெற்றிக் கதையுடன் சேர்த்தே பார்த்துவிடலாம். நியூயார்க…

  25. And eventually, Earth's surviving population of women will have to find somewhere else to live. மனித ஆண்கள் இன்னும் 5,000,000 ஆண்டுகளில் அழிந்து போய் விடுவார்கள் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. மனித ஆணைத் தீர்மானிக்கும் நிறமூர்த்தங்களில் ஒன்றான Y நிறமூர்த்தம் கூனிகுறுகி (அது ஏலவே கூனிக்குறுகிய ஒன்று தான்) ஆண் என்பதை தீர்மானிக்கும் இயல்பை.. இன்றைய கூர்ப்பு வேகத்தில்.. இன்னும்.. 5,000,000 ஆண்டுகளில் இழந்துவிடும். அதன் பின் ஆண்கள் பூமியில் இருந்து படிப்படியாக அருகிவிட.. பெண்கள் தம்பிப் பிழைத்தாலும்.. இனப்பெருக்க வழியின்றி.. ஒன்றில்.. வேற்றுக்கிரகத்தில் போய் மனிதனை ஒத்த.. வேறு ஆண்களை தேட வேண்டும்..இன்றேல்.. அவர்களும் செத்து மடிய வேண்டியது தான். ஆணா பெண்ணா உசத்தி என்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.