Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்களா?? இணையங்களில் பரபரப்பு Ca.Thamil Cathamil August 28, 2014 Canada செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆய்விற்காக நாசா, செவ்வாய் கிரகத்துக்கு கியூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலத்தை அனுப்பி வைத்தது. அந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தில் எடுத்த புகைப்படங்களில் ஒன்றில், அங்கு விலங்குகளின் தொடை எலும்புகள் கிடப்பது போன்ற தோற்றம் காணப்பட்டது. அதன்மூலம், டைனோசர்கள் தோன்றி மறைவதற்கு முன்பே, செவ்வாய் கிரகத்தில் பெரியவகை விலங்குகள் உயிர் வாழ்ந்ததாக யூகங்கள் எழுந்தன. இதுபற்றி இணையதளங்களில் பரபரப்பாக கருத்து பரிமாற்றங்கள் நடந்தன. இந்நிலையில், திடீர் திருப்பமாக, அந்த தோற்றம், எலும்பு அல்ல, வெறும் பாறைதான் என்று நாசா வ…

  2. மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது ஸ்கைப் சொப்ட்வெயாரில் எதிர் முனையில் பேசுபவர் எந்த மொழியில் பேசினாலும் உடனடியாக அது அடுத்த முனையில் பேசுபவர் தெரிவு செய்துள்ள மொழிக்கு மாற்றம் செய்து அந்த மொழியில் கேட்க கூடியவாறு வசதியினை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரியில் இருந்து நடைபெற்று வந்த போதிலும், தற்போது சோதனைத் தொகுப்பினை மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். http://virakesari.lk/articles/2014/06/04/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%…

  3. செவ்வாய்க் கிரகத்தில் நிலப்பரப்புக்கு கீழேயுள்ள கிடைக்கப்பெறுகின்ற தாதுக்கள் அந்த கிரகத்தில் முன்னொரு காலத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கு இதுவரையில் கிடைத்திருப்பதில் வலுவான ஆதாரம் என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. செவ்வாய்க் கிரகத்தின் சரித்திரத்தில் பெரும்பான்மையான காலங்களுக்கு அதன் மேற்பரப்பிலிருந்து ஐந்து கிலோமீட்டர் வரையான ஆழங்களில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டும் தாதுக்கள் அங்கு காணப்படுவதாக ஆய்வை நடத்தியவர்கள் கூறுகின்றனர். லண்டனின் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம் மற்றும் அபெர்டீன் பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஈசா ஆகியவற்றின…

    • 0 replies
    • 764 views
  4. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு, அறிவியலில் மட்டுமல்லாது, ஆன்மீகத்திலும் கூட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், கடவுள்தான் மனிதனைப் படைத்தார் என்று மதங்கள் அதுகாறும் சொல்லி வந்த கோட்பாடுகளையும், கருத்துகளையும் மறுதலிக்கக் கூடியதாக அவரது கண்டுபிடிப்புகள் அமைந்தன. அதுவரை, எல்லா உயிரினங்களும் ஒரு தெய்வீக சக்தியால் கருத்தரிக்கப்படுகிறது என்றே மக்களும் நம்பி வந்தனர். பிரிட்டனில் பிறந்த இயற்கை ஆர்வலரான சார்லஸ் டார்வின்தான், முதன் முதலில் மனிதனின் பரிணாம வளர்ச்சி இயற்கையாக நிகழ்கிறது என்பதை விளக்கினார். நடராஜனின் 'யார்க்கர்கள்' எங்கே போயின? அர்ஜூனை…

  5. பேஸ்புக்கில் மார்க் சக்கபேர்க்கை பிளாக் செய்ய முடியாது நீங்கள் விரும்பாத, பிடிக்காத நபரை பேஸ்புக்கில் பிளாக் செய்யமுடியும். ஆனால், பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கபேர்க்கை என்ன முயற்சித்தாலும் பிளாக் செய்ய முடியாது. மார்க் உபயோகிக்கும் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தின் மூலமாகத்தான் தனது பயனீட்டாளர்களிடம் நேரடியாகத் தொடர்பில் உள்ளார். தனது அடுத்த நடவடிக்கை தொடர்பான விவரங்களை உலகம் முழுவதும் உள்ளோரிடம் இந்தப் பக்கத்தின் மூலமாகத்தான் பகிர்ந்துகொள்கிறார். கம்ப்யூட்டர் புரோகிராமர் ஃபஹாத் என்பவர் நேற்று, பேஸ்புக் நிறுவனர் மார்க்கை பிளாக் செய்யும் முயற்சியில் தோல்வியடைந்ததையடுத்து தன்னுடைய இந்த ஆச்சரியமளிக்கும் அனுபவத்தை உலகத்துடன் பகிர்ந்துகொண்டார். நீங்கள் எத்தனைமுறை அவரை பேஸ்புக்…

  6. Started by akootha,

    ஆண்டிபயாடிக் சாப்பிட்டால் வைரஸ் சாகுமா? ஆண்டிபயாடிக் மருந்து சாப்பிட்டால் வைரஸ் கிருமிகள் சாகும் என்ற ஒரு நம்பிக்கை நம்மில் பலரிடையே இருக்கிறது. சளிக்கும் இருமலுக்கும் மருத்துவரிடம் செல்லாமல் நாமாகவே மருந்து கடைகளுக்கு சென்று ஆண்டிபயாடிக் மாத்திரைகளை வாங்கிப் போட்டுக்கொள்ளும் ஒரு வழக்கத்தை இந்தியாவில் பார்க்கலாம். உண்மையில் ஆண்டிபயாடிக் மருந்துகள் வைரஸ்களைக் கொல்லுமா? பாக்டீரியா என்று சொல்லப்படுகின்ற நுண்ணுயிரிகளைத்தான் ஆண்டிபயாடிக் மருந்துகள் கொல்லுமே ஒழிய வைரஸ்களைக் கொல்லாது. ஏனென்றால் வைரஸ்கள் என்பவற்றை ஒரு வகையில் பார்த்தால் உயிருள்ள வஸ்துக்கள் என்றே சொல்ல இயலாது. எனவே சளி இருமல் எல்லாம் வந்தால், ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொண்டு அவற்றை குணப்படுத்…

  7. பிரியா நடராஜன் தேனீக்கள் ஒரு பக்கம் பிறந்து வளர்ந்து கொண்டும் இன்னொரு பக்கம் பல்லாயிரக்கணக்கான மலர்களில் இருந்து தேனைக் கொண்டுவந்து சேகரித்து வைத்து இருக்கும் தேனடையைப் பார்த்து இருக்கிறீர்களா? அதேபோல பிரபஞ்சத்தில் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் பிறந்து வளர்ந்து இறக்கும் நிகழ்வு நடைபெறுகிற காலக்ஸிக்கு விண்மீன் பேரடை என பெயர் வைத்துள்ளார்கள். தமிழ் தேன்தான். கருந்துளை நமது சூரியக்குடும்பம் பிறந்து வளர்ந்த தொட்டில் பால்வெளி மண்டலம் எனும் விண்மீன் பேரடை. சூரியனைச் சுற்றி கோள்கள் சுழல்கின்றன. சூரியன் தன் கோள்களையும் இழுத்துக்கொண்டுப் பால்வெளி மண்டலத்தைச் சுற்றுகிறது. சூரியனைப் போன்ற எண்ணற்ற விண்மீன்களைக் கொண்ட பால்வெளி மண்டலம் தனது மையத்தில் உள்ளக் கருந் துளைய…

  8. போஸ்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், போர்ப்ஸ் இதழின் 400 பெரும் பணக்கார அமெரிக்கர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். தொடர்ந்து 17வது ஆண்டாக அவர் இந்த இடத்தை தக்க வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. கேட்ஸின் சொத்து மதிப்பு 54 பில்லியன் டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் வாரன் பபட், 45 பில்லியன் டாலருடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். 27 பில்லியன் டாலர் சொத்துக்களை உடைய ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனரும், சிஇஓவுமான லேரி எலிசன் 3வது உலகப் பெரும் பணக்கார அமெரிக்கராக உருவெடுத்துள்ளார். இந்த பட்டியலில் பேஸ் புக் நிறுவனர் மார்க் சுகர்பெர்க் 35வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) மற்றும் மீடி…

    • 0 replies
    • 762 views
  9. பறவையைப் போல கீச்சிடும் எலியை ஜப்பானிய விஞ்ஞானிகள் மரபு வழி பொறியியல் (Genetic engineering) மூலம் உருவாக்கியுள்ளனர். ஒசாகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை உருவாக்கியுள்ளனர். இந்த உயிரினமானது மரபணுப் பொறியியல் மூலம் மரபணுக்களை மாற்றி உருவாக்கப்பட்டதாகும். இதனை தாம் எதிர்ப்பார்த்திருக்கவில்லையெனவும் ஆனால் தமக்கு இதன் குரல் மிக்க மகிழ்ச்சியளிப்பதாகவும் எலியை உருவாக்கிய விஞ்ஞானிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். இதன் உருவாக்கமானது விஞ்ஞான உலகில் பாரியதொரு மைல் கல்லெனவும் கலப்புப்பிறப்பாக்கத்திற்கும், பரிணாம வளர்ச்சிக் கொள்கைகளிலும் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதாக அவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

  10. கால்கள் ஒருவரின் மனதை காட்டிக் கொடுத்து விடும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம், அது உண்மை தான், நமது உடல் பாகங்களில் முகத்திற்கு அடுத்தபடியாக இருப்பது கைகள். கைகள் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது நமக்கு தெரியும், ஆனால் கால்கள் என்ன செய்கிறது என்பதை உணர மறந்து விடுகிறோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அதற்காக சோகமான நேரங்களில் கூட, வேண்டா வெறுப்புடன் மகிழ்ச்சியாக இருப்பதைப் போல முகத்தை மாற்றி வைப்பார்கள். ஆனால், அப்படிப்பட்ட நேரங்களில் அவர்களின் கால்கள் அதைக் காட்டிக் கொடுத்துவிடும். நடக்கும் விதம் இளமையாக ஆரோக்கியமாக இருப்பவர்கள் வேகமாக நடக்கிறார்கள். இதனால் அவர்களது கைகள் முன்னும், பின்னும் அசைகின்றன. தாங்கள் இளமையானவர்கள், துடிப்பானவர்கள் என்…

  11. 3 லட்சம் மைல்களை கடந்து சாதனை புரிந்த கூகுள் தானியங்கி கார்! சோதனை ஓட்டத்தில் இதுவரை 3 லட்சம் மைல்களை(4,82,803கிமீ) விபத்து உள்ளிட்ட எந்த பிரச்னையும் இல்லாமல் வெற்றிகரமாக கடந்து சாதனை புரிந்திருக்கிறது டிரைவர் இல்லாமல் செல்லும் கூகுள் தானியங்கி கார். டிரைவர் இல்லாமல் இயங்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி காரை கூகுள் சோதனை நடத்தி வருகிறது. செயற்கை கோள் தொடர்புடன் இயங்கும் இந்த காரை சுற்றிலும் சென்சார்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை கம்ப்யூட்டர் உதவியுடன் கட்டுப்படுத்தி செல்லும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வரும் இந்த தானியங்கி கார் இதுவரை 300000 லட்சம் மைல்களை(4,82,803கிமீ) தூரத்தை கடந்…

  12. வியாழன் கிரகத்தின் பனி நிறைந்த துணைக் கிரகமான யூரோப்பாவில் உயிர்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழ்நிலை இருப்பதற்கான மேலும் ஆதாரங்களை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புவியின் சுற்றுவட்டப் பாதையில் இருக்கும் கண்ணாடி மூலம் பிரதிபலிக்கும் தொலைநோக்கி ஒன்றின் பிம்பங்களில் காணப்பட்ட, யூரோப்பாவின் படங்களில், அதன் மேற்பரப்பில் காணப்படுகின்ற தண்ணீர் தெறிப்புகள், அங்கு நுண்ணிய உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் இருப்பதற்கான ஒரு சமிக்ஞையாகும். சான்பிரான்ஸிக்கோவின், ''அமெரிக்க ஜியோபிசிக்கல் யூனியனின்'' வருடாந்த மாநாட்டில் இந்தக் கண்டுபிடிப்பு குறித்த தகவல் அறிக்கையிடப்பட்டது. ஆகவே யூரோப்பாவுக்கு பயணித்து ஆராய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார…

  13. செந்நிற கிரகம் என வர்ணிக்கப்படும் செவ்வாய் கிரகம் பூமியில் இருந்து சுமார் மூன்றரை கோடி மைல் தூரத்தில் உள்ளது. அதிவேகமாக செல்லும் ராக்கெட்டில் பயணித்தால்கூட, நாம் செவ்வாய் கிரகத்தை சென்றடைய சுமார் 7 மாத காலம் ஆகிவிடும். செவ்வாய் கிரகத்தில் பல்வேறு ஆய்வுகளை ஆய்வு மேற்கொண்டுவரும் அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம், எண்டேவர் உள்பட சில ஆளில்லா விண்கலங்களை அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பு, தட்ப வெப்ப நிலை போன்றவை குறித்து ஆராய்ச்சி நடத்தி வருகிறது. இந்தியாவின் ‘மங்கல்யான்’ விண்கலமும் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் உள்ளனவா? என்று ஆய்வு செய்து வருகின்றது.இந்த நிலையில், வருகிற 2030–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்பி அங்கு தங்க…

  14. மண்புழுக்களுக்கு ‘விவசாயி களின் நண்பன்’ எனும் பட்டப்பெயர் இருப்பது உங்களுக்குத் தெரியும். சரி, மண்புழுக்களின் சராசரி நீளம் எவ்வளவு என்று தெரியுமா? இந்தக் கேள்விக்கான உங்கள் பதில் சென்டிமீட்டர் கணக்கில் இருந்தால், அதை மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருப்பது சராசரி மண் புழுக்கள். ஆனால், ஒரு மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட மெகா சைஸ் மண்புழுக்கள் இருக்கின்றன, தெரியுமா? முதல் பார்வைக்கு நீள மான பாம்போ என்று நினைக்க வைக்கக்கூடிய அளவுக்கு நீளமாக வும் பருமனாகவும் காட்சி அளிக்கும் மண்புழுக்கள் இருக்கின்றன. ஜெய்ண்ட் ஜிப்ஸ்லாண்ட் மண்புழுக்கள் என்று அழைக்கப்படும் இந்தப் புழுக்கள் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன. அந்தக் கண்டத்தில் மட்டுமே இவற்றைப் பார்க்க…

  15. அமேசன்: அமேசான் காடுகளில் பூனை முகம் கொண்ட, மகிழ்ச்சியில் பூனை போல் ஒலி எழுப்பும் குரங்கு வகை ஒன்று கண்டறியப் பட்டுள்ளாதாம். இந்த வகைக் குரங்குகள் பூனையை போன்ற வித்தியாசமான சத்தம் எழுப்புவதால் இது குறித்து ஆச்சர்யம் தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். கடந்த நான்காண்டுகளில் மட்டும் அமேசான் காடுகளில் இதுவரை அறியப் படாத 441 புதிய தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சியினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பூனை போல் முகம் கொண்ட குரங்கு வகையும் ஒன்றாகும். இதுகுறித்து விலங்கின ஆராய்ச்சியாளர் தாமஸ் டெப்லர் கூறுகையில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த குரங்கினம் மிகவும் அபூர்வமானதாகும். குட்டி குரங்குகள் கிட்டத்தட்ட பூனை போலவ…

  16. உலக அளவில் ஸ்மார்ட்போன் சந்தை வளர்ச்சியடைந்து வரும் நிலையில் கடுமையான போட்டி காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்களின் விலை குறையும் என ஸ்மார்ட்போன் சந்தையை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஐ.டி.சி. ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2015-ஆம் ஆண்டில் சுமார் 1.5 பில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும் என கணி்க்கப்பட்டுள்ளது. சைனா ஸ்மார்ட்போன்களின் வரத்தும் கணிசமாக அதிகரித்து வருவதால் பிரீமியம் ஹேன்ட்செட்டுகளின் விலையும் கடுமையாக சரிந்து வருகின்றன. தற்போது சர்வதேச சந்தையில் 80 சதவீதம் ஆண்ட்ராய்டு மொபைல்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆப்பிளின் ஐ.ஓ.எஸ் 13 சதவீத்தை மட்டுமே ஆக்கிரமித்துள்ளது. எனினும், டைசன், பயர்பாக்ஸ் போன்ற புதிய ஓ.எஸ்.களும் வாடிக்கையாளர்க…

  17. பிரபல புகைப்படப் பகிர்வு மென்பொருளான "இன்ஸ்ராகிராம்"இனை புகழ்பெற்ற சமூகவலைத்தளம் “பேஸ்புக்“ ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (125 பில்லியன் ரூபாய்) கொள்வனவு செய்துள்ளது. இன்ஸ்ராகிராமினை கொள்வனவு செய்தமை பற்றி பேஸ்புக்கின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மார்க் சூக்கர்பெக் கருத்துத் தெரிவிக்கையில்... ”இன்ஸ்ராகிராம் வெகுவிரைவில் அனைவரும் பயன்படுத்துகின்ற சமூகத்தளமாக மாற்றமடையும். வெகுவிரைவில் தங்களுக்கு பிடித்தமான படங்களை நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். அதற்காக இன்ஸ்ராகிராம் குழுவினருடன் மிக நெருக்கமான தொடர்பினை பேணவிருக்கிறோம். இன்ஸ்ராகிராமும் அதன் பெறுமதியான குழுவினரும் எங்களுடன் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி. நமது இணைவின்மூலம் சிறந…

    • 1 reply
    • 756 views
  18. பாதசாரிகள் மற்றும் முன்னால் வரும் வாகனங்களை இணங்கண்டு கொள்வதுடன் அவை மோதலாம் என்ற நிலையில் அது தொடர்பில் எச்சரிக்கை சமிக்ஞை எழுப்புவது மட்டுமல்லாமல், உடனடியாக தானியங்கி முறையில் நிறுத்திக் கொள்ளவும் கூடிய உபகரணமொன்றினை கார் தயாரிப்பு நிறுவனமான வொல்வோ உருவாக்கியுள்ளது. இதனை தனது கார்களில் அந்நிறுவனம் பொருத்தியுள்ளது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளும் வெற்றியடைந்துள்ளன. ராடார் மற்றும் கமரா தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இக்காரானது முன்னால் வரும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகளை இணங்கண்டு கொள்கின்றது. அவற்றின் மீது கார் மோதலாம் என்ற நிலையில் எச்சரிக்கை சமிக்ஞை எழுப்படும். அதை சாரதி பொருட்படுத்தாத நிலையில் கார் தானாக நிறுத்தப்படும். எனினும் இவ்வ…

    • 0 replies
    • 755 views
  19. வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் சிறுநீரால் சக்தியூட்டப்பட்ட எரிபொருள் கலன்களை கொரிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மனித சிறுநீரில் காணப்படும் காபன் அணுக்களைப் பயன்படுத்தி மிகவும் மலிவான மின்சக்தியைப் பிறப்பிக்க முடியும் என தென் கொரிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உலகில் தினசரி சுமார் 10.5 பில்லியன் லீற்றர் சிறுநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஒலிம்பிக் நீச்சல் விளையாட்டுப் போட்டிகளில் பயன்படுத்தப்படுவதையொத்த 4200 நீச்சல் தடாகங்களை நிரப்புவதற்கு போதுமானதாகும். இந்நிலையில் எரிபொருள் கலங்களிலுள்ள விலையுயர்ந்த பிளட்டினம் மாற்றிகளுக்கு பதிலாக சிறுநீரிலுள்ள காபனை பயன்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். எரிபொர…

  20. Title: Decoding of the Thirukkural Book Series - Volume 1 - Chapter 1 தலைப்பு: திருக்குறளின் மறைபொருள் அறியும் பயணம் - பாகம் - 1 - அத்தியாயம் - 1 மூலநூல் ஆங்கிலத்தில் - டாக்டர்.மு.செம்மல் (இந்தியா) தமிழில் மொழிபெயர்ப்பு - முனைவர் தேமொழி (அமெரிக்கா) The World's first medical science fiction book based on an imaginary core concept of extraterrestrial species conducting critical inquiry into the Neurological acumen embedded in Thirukkural which is a 2000 year old script penned in Tamil, probably the oldest language in the world. This science fiction book is written via the Google platform simultaneously in 2 Languages (English from India and Tamil from Americ…

  21. ஒரு தாவரத்திற்கு ஆபத்து நேரும் போது அது அதன் அயலில் உள்ள இதர தாவரங்களை எச்சரித்து விடும் வகையில் கண்ணுக்குப் புலப்படாத ஒரு நச்சு வாயுவை பாதிப்புக்கு உள்ளாகும் தாவரம் சுரந்து விடுவதாக ஆய்வொன்றில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக தாவரங்கள் தாவர உண்ணி விலங்குகளால் தாக்கப்பட்டாலோ அல்லது வேறு வகையில் ஆபத்தை எதிர்கொண்டாலோ இவ்வாறு நடந்து கொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வு Exeter University ஆய்வு கூடத்தில் நடத்தப்பட்டுள்ளது. http://kuruvikal.blogspot.com/

  22. இந்த ஆராய்ச்சி தவறானது என்று ஒரு குழுவும், அறிவியலில் இதுவொரு முக்கியமான ஆய்வு என்றும் இரு வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்தப் பரிசோதனை பொறுப்பற்றது. மரபணு மாற்றத் தொழில்நுட்பத்துக்கான நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மனித வரலாற்றில் நவீன கால அறிவியல் கொண்டுவந்துள்ள முக்கியமான ஆராய்ச்சிகளுள் ஒன்று மரபணு ஆராய்ச்சி. நமது மூதாதையர்களைப் புரிந்துகொள்ள, மனிதனின் உயிர்க்கூறு பண்புகளைத் தெரிந்துகொள்ள, நோய்களை எதிர்கொள்ள எனப் பல்வேறு வகைகளில் இந்த மரபணு ஆராய்ச்சி நமக்குக் கைகொடுத்துவருகிறது. மனிதர்களின் இயல்பையே மாற்றும் அளவுக்கு வல்லமை வாய்ந்த ஆராய்ச்சி இது என்பதால், எப்போதும் இதுகுறித்த சர்ச்சைகளும் வந…

  23. வியாழன் கிரகத்தின் தலையில் ஒளிரும் கிரீடத்தில் ஜொலிப்பது என்ன? ---------------------------------------------------------------------------------------------------------------------------- அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஜூபிடர் (வியாழன்) கிரகம் அதன் தலையில் ஒரு ஒளிக்கிரீடத்தை சுமந்து கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஹபிள் விண்வெளி தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஜூபிடரின் துருவங்களில் காணப்படும் அரோரா என்ற ஒளிக்கோவை அழகாக பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒளிக்கோவைகள் அதிக சக்தியுள்ள அணுவை விட சிறிய துகள்கள் விண்வெளியில் பறக்கும்போது அவை இந்த கிரகத்தின் காந்தப் புலத்தால் பிடிக்கப்பட்…

    • 3 replies
    • 753 views
  24. மல்டிவர்ஸ் என்றால் என்ன? நாம் வாழும் பேரண்டம் தவிர வேறு பேரண்டங்கள் உண்டா? பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY கட்டுரை தகவல் எழுதியவர்,டெய்சி ரோட்ரிக்ஸ் பதவி,. 5 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த வாரம் 7 ஆஸ்கார் விருது வென்ற "எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்" படத்தின் பாத்திரமான ஈவ்லின் ஒரே நேரத்தில் ஒரு சலவை இயந்திர நிறுவனத்தின் உரிமையாளராகவும், குங்ஃபூ நுட்பங்களில் தேர்ச்சி பெற்ற ஒரு திரைப்பட நட்சத்திரமாகவும், நீண்ட, தளர்வான விரல்களைக் கொண்ட பெண்ணாகவும் இருக்கிறார். இந்த பாத்திரம் பல்வேறு இணை பிரபஞ்சங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்கிறது. அவரது சுயத்தின…

  25. ஐபேட்டை பயன்படுத்தி அசத்தும் பிரசன்டேஷன் - வீடியோ Monday, 26 March 2012 10:40 4தமிழ்மீடியாவின் பொழுதுபோக்கு பகுதியில் ஐபோன் 5 , ஐபேட் 3 வெளிவர முன்னரே அவற்றில் எப்படியெல்லாம் வசதிகள் கிடைக்கும், அதன் வடிவமைப்பு எப்படி என்றெல்லாம் ஏராளமான வீடியோக்கள் படங்கள் வெளிவந்து அட ஐபேட் 3 இல் இவைகூட சாத்தியமா என ஆச்சரியமளிக்கின்றது என்ற வீடியோப் பதிவை படித்திருப்பீர்கள். அதன் இணைப்பு இங்கே - http://bit.ly/GTlIwU தற்போது ஸ்கேன்டினேவியனில் ஐபேட்களைப் முழுமையாக பயன்படுத்தி எப்படி ஒரு பிரஸன்டேஷனை செய்ய முடியும் என்பதை மாயஜாலத்துடன் இணைத்து அசத்துகின்றார்கள் இருவர். வீடியோவைப் பார்வையிட இங்கே ப்ரமோத்தீஸ் மிரட்டும் ட்ரைலர் கடலில் மூழ்கி…

    • 0 replies
    • 752 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.