அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
உங்கள் ஃபேஸ்புக்கை உங்களைத் தவிர இன்னொருவரும் பார்க்கிறார்! இது சமூக வலைத்தளங்களின் காலம். இவற்றிற்கு தேசம், எல்லை என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. யாரும் யாருடனும் பேசலாம்; பழகலாம்; நட்பாகலாம். கண்ணுக்கு புலப்படாத ஓர் இணைப்பை ஏற்படுத்தியதில் இருக்கிறது சமூக வலைத்தளங்களின் சக்தி. யாரென தெரியாத புதிய நபர்களிடம் உறவு ஏற்படவும் ஒற்றை ரசனைக் கொண்ட புதிய நண்பர்களை கண்டடையும் சாத்தியத்தையும் சமூக வலைத்தளங்களே நமக்கு தந்துள்ளன. இவற்றை எல்லாம் தாண்டி சமூக வலைத்தளங்களை நாம் பார்க்கவே விரும்ப மாட்டோம். அதுவும் அதன் சாதக பாதகங்களை பற்றிப் பேசுவதெல்லாம் அலுப்பூட்டக்கூடிய விஷயம். ஆனால் வெளியாகி வரும் ஆய்வுகளானது, இதைப் பற்றியும் பேசி ஆக வேண்டிய சூழ்நிலையி…
-
- 0 replies
- 719 views
-
-
http://video.yahoo.com/watch/6670112/17324703 வீடியோ பதிக்க வழிதெரியவில்லை.அதனால் தொடுப்பை இணைக்கிறேன் காணொளி
-
- 0 replies
- 719 views
-
-
-உதயம் (http://chemistrytutors.co.nz/)
-
- 3 replies
- 719 views
-
-
கம்பியில்லா முறையில் மின்சாதனங்களுக்கு மின்இணைப்பைப் பெறும் முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். செல்போன் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை ஒயர் இணைப்பு இல்லாமல் சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய முறையை அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் மின்னணு மற்றும் கணினி பொறியியல் துறை உதவி பேராசிரியர் யாரோஸ்லாவ் உர்ஸுமோவ் கூறுகையில், “மிகவும் நுண்ணிய மின் காந்த அலைகள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் ஒயர் (கம்பி) இணைப்பு இல்லாமலேயே மின் சாதனப் பொருள்களுக்கு தேவையான மின்சாரத்தைப் பெற்று இயக்க முடியும். மின்காந்த அலைகளை பெற்று மின்சாரமாக மாற்றும் கருவியில் உள்ள காயில்களின் எண்ணிக்கையை அ…
-
- 2 replies
- 718 views
-
-
சூரிய மண்டல எல்லைக்கு அப்பால் ஒரு “பழுப்புக் குள்ளன்” இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழுப்புக் குள்ளன் எங்கே உள்ளது என்பதைக் காட்டும் படம். சூரிய மண்டலத்தின் எல்லைக்கு அப்பால் மேலும் ஒரு “பழுப்புக் குள்ளன்” (Brown Dwarf) இருப்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதென்ன பழுப்புக் குள்ளன்? நிச்சயம் அது மனிதன் இல்லை. அது ஒரு நட்சத்திரமா? இல்லை. அது ஒரு கிரகமா? அதுவும் இல்லை. அப்படியானால் அது தான் என்ன? நிலவற்ற நாளில் இரவில் வானைப் பார்த்தால் எண்ணற்ற நட்சத்திரங்கள் தெரிகின்றன. பல நூறு கோடி கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து நமது சூரியனைப் பார்த்தால் சூரியனும் ஒளிப்புள்ளியாக அதாவது நட்சத்திரமாகத்தான் தெரியும். சூரியன் மற்ற நட்சத்திரங்களைப் போல ஒரு ந்ட்சத்திரமே. …
-
- 1 reply
- 718 views
-
-
மீள் உருவாக்கம் என்று தமிழ்ச் சொல்லாக்கம் செய்யப்பட்டிருக்கும் குளோனிங் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு புதைந்துபோன வரலாற்றைக் கூட உயிரியல் விஞ்ஞானிகள் தோண்டிக் கொண்டுவந்துவிடுவார்கள் போலிருக்கிறது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து உலகையே கலக்கிய ஜூராசிக் பார்க் படத்தைப் பார்க்காதவர்கள் இருக்க முடியுமா? அதில் விஞ்ஞானிகள் டைனோசரை சாகசமாக உருவாக்குவார்கள். கடைசியில் அது விபரீதத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். ஆனால் அதுபோல நிஜ வாழ்க்கையில் நடக்காது என நினைத்திருப்போம். ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குளோனிங் முறையில் ஒரு டைனோசர் குட்டியை உருவாக்கியிருக்கிறார்கள். இங்கிலாந்தின் லிவர்பூல் ஜோன் மோர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்தான் இ…
-
- 2 replies
- 718 views
-
-
அப்பிள், கூகுள், அமேசன் போன்ற நிறுவனங்கள் டெப்லட் கணனிகளை முடியுமான வரை சிறிய உருவில் , மெல்லியதாக தயாரிக்க முயற்சி செய்து வருகின்றன. ஆனால் பெனசொனிக் நிறுவனமோ 20 அங்குல திரையைக் கொண்ட டெப்லெட் கணனியொன்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது. 'டப் பேட்' என அழைக்கப்படும் இது கூகுளின் நெக்ஸஸ் 7 டெப்லட்டை விட 3 மடங்கு பெரியதாகும். விண்டோஸ் இயங்குதளத்தின் மூலம் இயங்கும் மேற்படி டெப்லட்டின் நிறை 2.26 கிலோகிராம்களாகும். இந்நிறையானது அப்பிளின் புதிய ஐபேட் எயாரை விட 5 மடங்கு அதிகமானதாகும். இது தவிர 8ஜிபி ரெம், 256 ஜி.பி. நினைவகம் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளதுடன் Intel i5 1.9GHz புரசசர் மூலம் இது இயங்குகின்றது. பெரிய திரையைக் கொண்டிருப்பதனால் 2 மணித்திய…
-
- 0 replies
- 717 views
-
-
பிரபஞ்சம் குறித்து மனிதனுக்கு எப்போதும் பெருமதிப்பு உண்டு. பிரபஞ்ச ரகசியங்கள் குறித்து தெரிந்து கொள்வதில் மனிதன் எப்போதும் ஆர்வம் காட்டி வருகிறான்.100 வருடங்களில் மனிதன் பிரபஞ்சம் குறித்து எவ்வளவோ தெரிந்து வைத்து உள்ளான் .அதற்கு தகுந்தாற்போல் நவீன கருவிகளும் கண்டுபிடிக்கபட்டு மேலும் பிரபஞ்சம் குறித்தும் அதில் நிகழும் மாறுதல் குறித்தும் பூமி மற்றும் கிரகங்கள் குறித்து மனிதன் அறிந்து வருகிறான். இருந்தாலும் இன்னும் பிரபஞ்சம் குறித்து முற்றிலுமாக மனிதன் அறிந்து கொள்ளவில்லை. இன்னும் நமது விண்வெளியில் ஏகபட்ட மர்மங்கள் உள்ளன.நாசா அதி நவீன கருவிகளை கொண்டு பூமி மற்றும் மற்ற கிரகங்களின் அமைப்புகளை ஆராய்ந்து வருகிறது.அவ்வாறு பூமி மற்றும் கிரகங்களில் இருந்து வரும் மர்ம ஒலிகளை மின்கா…
-
- 0 replies
- 716 views
-
-
உடற் பயிற்சி செய்யாமல் இருந்தால் உடலுக்கு தீங்கு என்பது உங்கள் எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். அதே போன்று தான் உடற் பருமன் கூட நாம் நீண்ட காலம் உயிர் வாழ்வதற்கு தடையாக இருக்கின்றது. ஆனால், இது இரண்டையும் விட மிகவும் பயங்கரமானது என்ன தெரியுமா…? வேறு மக்களுடன் பேசிப் பழகாமல் தொடர்பு இல்லாமல் இருப்பது எமது உயிருக்கு மிகவும் ஆபத்தானது என்பதை ஓர் ஆராய்ச்சி சொல்கிறது. நாம் எப்போதும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என்று பலருடன் தொடர்பில் இருந்தால் நீண்ட காலம் உயிர் வாழமுடியும் என்று கூறப்படுகின்றது. ஆக மொத்தத்தில் இப்படிப் பேசிப் பழகி தொடர்பில் இருக்காதவர்களை, ஒரு நாளுக்கு 15 சிகரெட் பிடிப்பவர்களுடன் ஒப்பீடு செய்யலாம் என்று ஆராய்சியாளர்கள் சொல்கிறார்கள். இருவரின் ஆ…
-
- 2 replies
- 716 views
-
-
ரோமத்தை விட பத்தாயிரம் மடங்கு மெலிதான மின் கம்பி மனித ரோமத்தை விட பத்தாயிரம் மடங்கு மெலிதான மின் கம்பிகளை உருவாக்குவதில் ஆஸ்திரேலியாவின் கணினி விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். கணினிகள் நாளுக்கு நாள் சிறிதாகிவருகிறன என்றாலும் அவற்றின் சக்தி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.கணினியில் பயன்படுத்தப்படும் உட்கூறுகளும் சின்னதாகிக்கொண்டே வருகின்றன. அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தாத, அதிக வெப்பத்தை வெளியிடாத, அதிகம் மின் விரயம் செய்யாத கணினி உட்பொருட்களை உருவாக்குவதென்பது ஆராசய்ச்சியாளர்களுக்கு சிக்கல் நிறைந்த விஷயமாகவே இருந்து வந்துள்ளது. அந்த சிக்கலைத் தீர்ப்பதில் பெரியதொரு முன்னேற்றம் கண்டிருப்பதாக நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நம்…
-
- 1 reply
- 716 views
-
-
பூமியின் மிக ஆழத்தில் ஏற்படும் நிகழ்வுகளால் சில்லுகள் நகர்ந்து, நிலநடுக்கம் உண்டாகிறது! நேபாளத்தில் கடந்த 25 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பின்னதிர்வுகள் நீடித்துக்கொண்டிருக்கின்றன. சுருங்கச் சொன்னால், வடக்கு நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இந்தியத் துணைக் கண்டம் நேபாளத்தின் அடிநிலப் பாறைகள் மீது செலுத்திவரும் நெருக்குதல் காரணமாகவே நேபாளத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. அப்படியானால், இந்தியத் துணைக் கண்டம் நகர்கிறதா? அது எப்படிச் சாத்தியம் என்று கேட்கலாம். இதுபற்றி விளக்க பூர்வ கதைக்குச் சென்றாக வேண்டும். நாடுகளைக் காட்டும் அட்லஸ் படத்தை நீங்கள் கவனித்தால் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா எங்கோ தொலைவில் இருப்பது புலப்படும். ஆப்பிரிக்காவும் அப்படித்தான். பனி மூடி…
-
- 0 replies
- 715 views
-
-
வானியல் விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராகவும் தேடத் தேட ஆச்சரியமூட்டும் தன்மைகளைக் கொண்டிருப்பதுமானவை பிரபஞ்ச வெளியில் அமைந்துள்ள கரும் துளைகள் (Black holes) ஆகும். பிரபஞ்சத்தின் சில பகுதிகளில் நம்மால் கணக்கிட முடியாத மிக வலிமையான ஈர்ப்பு விசையுடன் தொழிற்படும் event horizon எனும் நிகழ்வை ஏற்படுத்தும் கரும் துளைகளின் அபார ஈர்ப்பு விசையில் இருந்து மிக நுட்பமான ஒளி கூட தப்ப முடியாது என அறிவியலாளர்கள் சிலர் கூறுகின்றனர். இப்படிப் பட்ட ஓர் இடத்தில் இருந்து கூட சில சில நுட்பமான கதிர்கள் வெளியாவதாகவும் இக்கதிர்களைக் கொண்டு பிரபஞ்சத்தின் குறித்த பகுதி ஒன்றில் கரும் துளைகள் உள்ளனவா அல்லது இல்லையா என எதிர்வு கூற முடியும் என்ற தனது மிகத் தனித்துவமான தத்துவத்தை இந்த நூற்றாண்டில் ஒர…
-
- 0 replies
- 715 views
-
-
ஜார்ஜியா: செல்போனில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் இனி கவலைப்பட வேண்டியதில்லை. அதற்காகவே புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு சாதனத்தை போனில் பொறுத்திவிட்டு அதை பார்த்து கத்தினால் சார்ஜ் ஏறிவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களின் மிகப்பெரிய பிரச்சனை பேட்டரி சார்ஜ் தீர்ந்து போவதுதான். இதை சமாளிப்பதற்கு பலர் இரண்டு போன்களை கையில் வைத்துக்கொண்டு அலைகிறார்கள். இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு உலகம் முழுவதும் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.போனில் பொறுத்தப்பட்டிருக்கும் இந்த ஒலிவாங்கியை நோக்கி சத்தமாக கத்தும் போது காகிதத்தில் அதிர்வு ஏற்பட்டு அதன் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த மின் ஆற்றலை கொண்டு செல்போனை சார்ஜ் செய்துகொள்ள முடியும். ஆனால் இந்த …
-
- 0 replies
- 715 views
-
-
'கடவுள் துகள்கள்' என்றால் என்ன? அப்பெயரை விஞ்ஞானிகள் தவிர்ப்பது ஏன்? விக்னேஷ். அ பிபிசி தமிழ் பட மூலாதாரம், SCIENCE PHOTO LIBRARY / CERN படக்குறிப்பு, சுவிட்சர்லாந்து - பிரான்ஸ் எல்லையில் மலைக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள 'லார்ஜ் ஹேட்ரான் கொலைடர்' மூலம் 2012இல் பேரண்டத்தில் ஹிக்ஸ் போசான் துகள்கள் இருப்பது உறுதியானது. (இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள், அறிவியல் ரீதியிலான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி "Myth Buster" எனும் பெயரில், பிபிசி தமிழ் தொடர…
-
- 0 replies
- 715 views
-
-
உடலுக்கு அவசியமான கொழுப்பமிலங்களில் ஒன்றான ஒமேகா 3 யை அதிகம் உருவாக்கும் மாடுகளைச் சீனா மரபணு மாற்றம் மூலம் உருவாக்கியுள்ளது. இந்த ஒமேகா 3 பொதுவாக மீன்களில் அதிகம் காணப்பட்டாலும்.. மீன் உணவுக்கு உலகளாவிய அளவில் உள்ள தட்டுப்பாடு காரணமாக.. இந்தச் சீனக் கண்டுபிடிப்பு முக்கியமாகிறது. இதே ஒமேகா ஐ மரபணு மாற்றம் மூலம் பங்கசுக்களில் பெருமளவில் உருவாக பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முயன்று வரும் நிலையில்... சீனா இதனை மாடுகளில் உருவாக்கியுள்ளது. இந்த மரபணு மாற்றம் குறித்த ஆய்வில் எங்களது பேராசிரியர் ஒருவரும்.. ஈடுபாட்டைக் காட்டியுள்ளமை.. இங்கு குறிப்பிடத்தக்கது. பங்கசுகளில் ஒமேகா 3 ஐ அதிகளவில் உருவாக்குவது தொடர்பான ஆய்வில் நாங்களும் அவருடன் இணைந்து பணியாற்றி இர…
-
- 2 replies
- 714 views
-
-
Formation of the solar system in Tamil - சூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும், சுமார் 4.568 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இராட்சத மூலக்கூறுகளாலான மேகத்தின் ஒரு சிறு பகுதி ஈர்ப்புக்குரிய மோதல் மூலம் தொடங்கப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது. சூரியக் குடும்பம் அதன் தொடக்க உருவாக்கம் முதல் படிப்படியாக வளர்ச்சிப்பெற்று வந்திருக்கிறது.
-
- 3 replies
- 713 views
-
-
1972 ஆம் ஆண்டு தொடக்கம் சோவியத் விமானப்படையினால் பயன்படுத்தப்பட்டுவரும் இவ் உலங்குவானூர்தியானது தாக்குதற்திறன் மிக்கதாக இருப்பது மட்டுமல்லாது சிறு எண்ணிக்கையான துருப்புக்களையும் நகர்த்தவல்லது. ஈழத்தில் இந்தியக் காடையர் படை நிலைகொண்டிருந்த காலப்பகுதியிலேயே, அங்கு இவ் உலங்கு வானூர்தி தமிழ் மக்களுக்கு அறிமுகமானது. “முதலைக் கெலி" , "மூஞ்சுறு “ என்று இது தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை அம்மன் கோவிலடி வயல்வெளியில் வந்திறங்கிய இந்திய Mi- 24 உலங்குவானூர்தியில் தேசியத் தலைவர் அவர்களை புதுடில்லி அழைத்துச்செல்லப்பட்ட நிகழ்வானது இந்தியாவிற்கும் ஈழத்திற்க்கும் இடையில் நீண்ட கால விரோதத்திற்கு வித்திட்ட ஒரு பயணம் ஆக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது…
-
- 0 replies
- 713 views
-
-
மரிசா தி தொலெதோவுக்கு வலி என்றால் என்னவென்றே தெரியாதுபிரேசில் நாட்டைச் சேர்ந்த மரிசா டெ தொலெதோ ஒரு அதிசய பிறவி. உலக அளவில் வலியை உணர முடியாத சுமார் 50 பேரில் இவரும் ஒருவர். அபூர்வமான மரபணு மாற்றம் காரணமாக இவரது உடலின் வலி மூளையால் உணரப்படுவதில்லை. 27 வயதாகும் மரிசா ஒரு கால் விரலை பறிகொடுத்திருக்கிறார். மயக்க மருந்து எதையும் எடுத்துக்கொள்ளாமல் மூன்று குழந்தைகளை பெற்றிருக்கிறார். உடல் முழுக்க காயத்தின் தழும்புகளோடு காணப்படுகிறார். ஆனால் அவர் ஒருநாளும் வலி என்றால் என்ன என்பதை உணர்ந்ததே இல்லை. இவர் பிறந்தபோதே அனெல்ஜீஷியா (analgesia) என்கிற மரபணு மாற்ற நோயுடன் பிறந்தவர் என்பதால் அவரால் உடலின் வலியை உணரவே முடியாது. உலக அளவில் சுமார் 50 பேரை மட்டுமே பாதிக்கும் இந்த நிலைமை மேம…
-
- 2 replies
- 713 views
-
-
உங்கள் ஒவ்வொரு நகர்வையும் கண்காணிக்கும் கூகுள்! #GoogleMapsTimeline கூகுள் மேப்ஸ் எந்தெந்த விஷயங்களுக்கு எல்லாம் பயன்படும் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். பலருக்கு தற்போது வழிகாட்டிக் கொண்டிருப்பது கூகுள் மேப்ஸ்தான். இப்படி நம் பயணங்களில் வழிகாட்டும் ஆண்ட்ராய்டு கைடாக இருக்கும் இந்த மேப்ஸில் நீங்கள் இதுவரை அதிகம் பயன்படுத்தாத ஒரு வசதியும் உண்டு. பலரும் இதனை பார்த்திருந்தாலும், சரியாக பயன்படுத்தியிருக்க மாட்டோம். ஆனால் இதனை பயன்படுத்தினால் உங்களுக்கே ஆச்சர்யமாக இருக்கும். அதுதான் கூகுள் மேப்ஸ் டைம்லைன். 2015-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த வசதிதான் இந்த கூகுள் மேப்ஸ் டைம்லைன். உங்கள் போனில் இருக்கும் ஜி.பி.எஸ் மூலமாக, நீங்கள் இதுவரை எ…
-
- 0 replies
- 713 views
-
-
மின்னணு சாதனங்களில் பெரும் சிக்கல் என்னவென்றால் அது அதன் மின்தேக்கி பழுதடைவது ஆகும். ஒரு சில ஆண்டுகளில், மின்னணு சாதனங்களின் மின்தேக்கியானது அதன் மின் தேக்க திறனை இழந்துவிடுகிறது. இதனால் பெரும்பாலான பயனர்கள் இன்னல் படுகிறார்கள் .சுடான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் இந்தச் சிக்கலைத் தீர்க்கும் வண்ணம் ஒரு புதிய வகை மின்தேக்கியைக் கண்டறிந்துள்ளனர். அதுவே, தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும் இலித்தியம் அயனி மின்தேக்கி. இந்தக் கண்டுபிடிப்பால் மின்சார தானுந்துகளின் ஏற்றுக்கொள்ளும் தன்மை அதிகரிக்கலாம் என உலகில் பல அறிஞர்கள் நம்புகின்றனர். பொதுவாக, மின்தேக்கிகளின் மின்வாயினில் நாட்கள் ஆக ஆக சிறு வெடிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதனாலேயே மின்தேக்கி பழுதடைந்து நீண்டநாட்…
-
- 0 replies
- 712 views
-
-
உலகின் மூலையில் உங்கள் நண்பர்கள் எங்கிருந்தாலும், தற்போது பேஸ்புக் அப்ளிக்கேஷன் உதவியுடன் அவர்களிடம் இலவசமாக பேசலாம். நண்பர்களுடன், அவர்கள் எந்த நாட்டிலிருந்தாலும், இலவசமாக உரையாடக்கூடிய வசதியினை சமூக வலைதளமான பேஸ்புக் விரைவில் ஆரம்பிக்க உள்ளது. பேஸ்புக்கின் ஐபோன் அப்ளிகேஷனான மெஸேன்ஜசரில் தற்போது இந்த வசதி செய்யப்பட்டு, கனடா நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பேஸ்புக் வலைத்தளத்தில் இருக்கும் நண்பர்களுடன் எந்த நாட்டிலிருந்தாலும் இலவசமாக பேசிக் கொள்ளலாம். தற்போது ஐபோனில் உள்ள பேஸ்புக் மெஸேன்ஜர் அப்ளிகேஷனில், நாம் பேசி அதனைப் பதிந்து குரல் அஞ்சலாக அனுப்பும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மெஸேன்ஜர் அப்ளிகேஷனில் உள்ள + குறியினை அழுத்தி நாம் பேசுவதை பதிந்து அனு…
-
- 1 reply
- 712 views
-
-
நியூட்ரினோ இளையா 1930 ஆம் ஆண்டு வுல்ஃப்கேங் பெளலி பீட்டா சிதைவு (Beta decay) என்ற அணுக்கரு நிகழ்வில் உள்வரும் ஆற்றலையும் வெளிச்செல்லும் ஆற்றலையும் கூட்டி கழித்து பார்த்தார். கணக்கு தவறியது. ஆற்றல் அழிவின்மை விதியின்படி ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஏதோ ஒரு புது துகளின் வழியே அந்த மிச்ச ஆற்றல் வெளியேறுகிறது என்று ஊகித்தார். பின்பு என்ரிக்கோ ஃபெர்மி இந்த புதிய துகளை அடிப்படையாகக் கொண்டு பீட்டா சிதைவு கோட்பாட்டை உருவாக்கினார். அந்த துகளுக்கு நியூட்ரினோ என்று பெயர் போடப்பட்டது. ஆனால் அதன்பிறகுதான் சிக்கல்கள் ஆரம்பித்தன. ஏனெனில் நியூட்ரினோ ஒரு நிறையிலி துகள். மேலும் மின்னூட்டம் அற்றது. பொருண்மையுடன் கிட்டத்தட்ட அது செயலாற்றுவதேயில்லை. 1000…
-
- 0 replies
- 712 views
-
-
ஆப்பிள் நிறுவனம் மீது நூதன வழக்கு ஆப்பிள் நிறுவன புதிய இயங்குதளம் ஒருவித ஆக்கிரமிப்பு என குற்றச்சாட்டுஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் புதிய இயங்குதளமான ஐஓஎஸ்-8, ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புக்களான ஐ பேட், ஐ பாட், ஐபோன் உள்ளிட்டவற்றில் கூடுதல் இடத்தை ஆக்கிரமித்துக்கொள்வதன் மூலம், ஐகிளவுட் எனப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் தகவல் சேமிப்பு சேவையில் கட்டணம் செலுத்தி சேரும்படி பயன்பாட்டாளர்கள் நிர்பந்திக்கப்படுவதாக கலிஃபோர்ணியா நகரில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப்பிள் நிறுவனக் கருவிகளை வாங்கும் பயன்பாட்டாளர்கள் தமது சொந்தத் தகவல்களை சேமிக்க முடியாத விதத்தில், விளம்பரப்படுத்தப்பட்ட அளக்கும் கூடுதலான தகவல் சேமிப்பதற்கான இடத்தை ஆப்பிளின் புதிய …
-
- 0 replies
- 712 views
-
-
நியூயார்க்: உலக புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது மின்னஞ்சல் சேவையான ஹாட்மெயிலிற்கு, அவுட்லுக் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது. 32.4 கோடி பேர் பயன்படுத்தும் இந்த மின்னஞ்சல் சேவையில் புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தி உள்ளது. இன்று அனைவராலும் எளிதாக பயன்படுத்தப்படுவது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் தான்.இந்த அவுட்லுக் மின்னஞ்சல் சேவையில் ஃபேஸ்புக் சாட் வசதியினை பெறலாம். அத்துடன் ஃபேஸ்புக், ட்விட்டரில் இருந்து வரும் தகவல்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.வேர்ட்ஸ், எக்ஸெல், பவர்பாய்ன்ட் போன்ற பக்கங்களில் அவுட்லுக் மூலம் எளிதாக எடிட் செய்யவோ, ஷேர் செய்யவோ முடியும். அவுட்லுக்கில் இணைக்கப்படும் புகைப்படங்களை ஸ்லைடு ஷோவில் பார்க்க …
-
- 1 reply
- 712 views
-
-
கிராமம், நகரம் என எங்கு கண்டாலும் விரவி, பரவியுள்ளது பார்த்தீனிய செடி. வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவை தனது தாயகமாக கொண்ட இந்த விஷ களை செடி, ஈரப்பதம் கொண்ட எந்த மண்ணிலும் வேகமாக வளர்ந்து, தன் இனத்தை வளர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டது. மற்ற தாவரங்களைப் போல் குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமல்லாமல், ஆண்டின் எல்லா மாதமும் செழித்து வளரும் தன்மை கொண்டது பார்த்தீனியம் செடி. இதன் இலைகள் வெளிர் பச்சை நிறத்துடன் இருக்கும். இதன் விதைகள் எந்த மண்ணிலும் எந்தச் சூழலிலும் முளைக்கக் கூடிய வகையில் அதிக முளைப்புத் திறன் உடையதாக இருப்பதால் இந்த விஷ களைச் செடியை அழித்து ஒழிப்பது மிகவும் கடினமாக உள்ளது. மனிதர்களுக்கு ஆஸ்துமாவை உருவாக்கும் இந்த களைச் செடிகளை பிடுங்கி அழிப்பதை விட அதனை அப்…
-
- 0 replies
- 712 views
-