Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நிறுவனத்தில் நிலைத்திருக்க...அறிவுத்திறனை மேம்படுத்துங்கள்! செ.கார்த்திகேயன் ‘‘ஐ.டி துறையில் வேலை பார்த்து வருகிறார் சபரி. அந்த நிறுவனம், நன்கு வேலை செய்பவர்களை முதல் பக்கெட் பிரிவிலும், சுமாராக வேலை செய்பவர்களை இரண்டாவது பக்கெட் பிரிவிலும், மிகச் சுமாராக வேலை செய்பவர்களை மூன்றாவது பக்கெட் பிரிவிலும், மோசமாக வேலை செய்பவர்களை நான்காவது பக்கெட் பிரிவிலும் வைத்திருக்கும். நான்காம் பக்கெட் பிரிவில் இருப்பவர்களின் வேலை செய்யும் திறனானது மேலும் குறைந்தால், நிறுவனத்தைவிட்டே அந்தப் பணியாளரை வெளியேற்றிவிடுவார்கள். சபரி தற்போது நான்காவது பக்கெட் பிரிவில் இருக்கிறார். இனியாவது அவர் சுதாரித்துக்கொண்டு தன்னைத் திருத்திக் கொள்ளவில்லை எனில், வேலையை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். …

  2. சிந்தனைச்சோதனைகள் சுந்தர் வேதாந்தம் ஒரு புறம் Large Hadron Collider, International Space Station போன்ற பல பில்லியன் டாலர்களை விழுங்கிவிட்டு மெல்ல எழுந்து நிற்கும் சோதனைகளும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் காசு பணம் ரொம்பத்தேவை இல்லாத வெறும் சிந்தனையை மட்டுமே உபயோகிக்கும் பல சுவையான சோதனைகளும் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. வெகு காலத்துக்கு முன்பே கேள்விகள் வழியே பிரச்சினைகளை அலசும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும் பழசும் புதுசுமாய் இவற்றில் பல வகைகள் உண்டு. அறிவியல், உளவியல், பொருளாதாரம், அரசியல், மதங்கள், நீதி, தர்மம், நெறிமுறை (Ethics), தத்துவம் என்று பல துறைகளையும், மனித சமூகத்தின் வாழ்முறையின் பல பக்கங்களையும் தொடும் சிந்தனைச்சோதனைகளை…

  3. தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் மூலிகைப் பயிர்களில் செங்காந்தள் மலர் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இதன் விதைகளும், கிழங்கும் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதால் பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டின் அரசு மலர் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்த மூலிகைப் பயிர் திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் கரூர், திண்டுக்கல், சேலம், பெரம்பலூர், திருச்சி, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களிலும் இந்த செங்காந்தள் சாகுபடி பரவலாகி வருகிறது. செங்காந்தள் சாகுபடி குறித்து திருப்பூர் மாவட்டம், மூலனூர் வட்டார வேளாண் பொறியாளர் தி. யுவராஜ் கூறியதாவது: கண்வலிக் கிழங்கு என்றும், கலப்பைக் கிழங்கு என்றும் அழைக்கப்படும் செங்காந்தள், பொதுவாக…

  4. செயலிகளில் சில அற்புதமானவை என்று வியக்க வைக்கும்.ஒரு சில செயலிகளோ மாயஜாலத்தன்மை மிக்கவையாக அதிசயிக்க வைத்துவிடும்.இன்டுநவ் செயலி இப்படி தான் அதிசயத்தில் ஆழ்த்துகிறது. அமெரிக்காவை சேர்ந்த ஆட்டிடியூட் நிறுவனத்தின் துணை நிறுவனமான இன்டுநவ் இந்த செயலியை உருவாக்கியுள்ளது. தொலைக்காட்சி ரசிகர்கள் தாங்கள் பார்த்து ரசிக்கும் நிகழ்ச்சிகளை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவும் இந்த செயலி அதனை செய்யும் விதம் தான் மாயஜாலமாக இருக்கிறது. அதாவது டிவி பார்த்து கொண்டிருப்பவர்கள் தாங்கள் பார்க்கும் நிகழ்ச்சியை குறிப்பிட வேண்டிய தேவை கூட கிடையாதௌ.இந்த செயலியே அந்த நிகழ்ச்சி என்ன என்பதை தெரிந்து கொண்டு அது பற்றிய தகவலை நண்பர்களுக்கு தெரிவிக்கும்.நேயர்கள் பார்ப்பது என்ன நிகழ்ச்சியாக இருந்தாலும்…

  5. பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த ஆர்வம் காட்டும் திட்டமான, கங்கை நதியை சுத்தம் செய்யும் திட்டத்துக்கு இஸ்ரேல் உதவ முன்வந்துள்ளது. மாசுபட்டுள்ள கங்கை நதியை தூய்மைபடுத்தும் திட்டத்தை 3 ஆண்டுகளில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக ‘நமாமி கங்கா’ என்ற ஒருங்கிணைந்த திட்டத்தை அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியா வந்துள்ள இஸ்ரேலிய பொருளாதார மற்றும் வர்த்தகக் குழுவின் தலைவர் யோனாதன் பென் ஜேகன் டெல்லியில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் கூறும்போது, “இத்திட்டம் தொடர்பாக இந்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி மற்றும் அத்துறையின் செயலாளரை நாங்கள் ஏற்கெனவே சிலமுறை சந்தித்து பேசியுள்ளோம். இத்திட்டத்தில் நாங்களும் பங்கேற்க விரும்புகிறோம். இத்திட்டத்துக்காக எங்களின் அனுபவம்…

  6. ஆங்கிலத்தில் ‘அபாரிஜினல் (Aboriginal)' என்ற வார்த்தை உண்டு. லத்தீன் மொழியில் ‘அபாரிஜின்ஸ் (Aborigines)' என்ற சொல்லில் இருந்து இந்த வார்த்தை உருவானது. இதற்கு ‘ஆதியிலிருந்து இருப்பவர்கள்' (ஒரிஜினல்) என்று அர்த்தம். சுமார் 16-ம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இந்தச் சொல், காலத்துக்கு ஏற்பக் காட்டுவாசிகள், ஆதிவாசிகள், பழங்குடிகள், பூர்வகுடிகள் என்று பல்வேறு விதமான மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. ஒரு சொல்லே இத்தனை மாற்றங்களுக்கு உள்ளாகிறபோது, ஆதியின் எந்தச் சுவடும் மாறாமல் இன்னமும் சில பூர்வகுடிகள் உலகில் வாழ்ந்து வருகிறார்கள் என்றால்... அது பேரதிசயம் அல்லவா? ஜராவா பழங்குடிகள் இந்தியாவின் ஒரு பகுதியான அந்தமான் நிகோபார் தீவுகளில் அப்படி வசிக்கும் இனங்களில் ஒன்றுதான் ஜ…

  7. பிரிட்டன் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். | கோப்புப் படம் CERN ஆராய்ச்சிக் கூடம். கோப்புப் படம் மாபெரும் விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் 2012ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட ‘கடவுள் துகள்’ பிரபஞ்சத்தையே அழிக்கும் பயங்கர ஆற்றல் கொண்டது என்று பிரிட்டன் பௌதீக விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் வடிவமும் அளவும் கொடுத்த கடவுள் துகள் நிலையற்றத் தன்மைக்குச் செல்லலாம் என்கிறார் அவர். இதன் விளைவாக "பேரழிவு வெற்றிட சீர்கேடு" (Catastrophic vaccuum decay)ஏற்பட்டு காலம், வெளி குலைந்து போகும் அபாய வாய்ப்புகள் உள்ளது என்று அவர் கூறியதாக express.co.uk என்ற இணையதள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிக்ஸ் பாஸன் என்று அழைக்கப்படும் …

  8. தென்னை, பனை உள்ளிட்ட உயரமான மரங்களில் காய்களைப் பறிப்பது என்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. மரம் ஏறி காய் பறிப்பதற்கான தொழிலாளர்கள் சரியான நேரத்தில் கிடைக்காததே இதற்குக் காரணம். இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண தென்னை, பனை, பாக்கு உள்பட கிளையில்லாத அனைத்து உயரமான மரங்களிலும் ஏறுவதற்கான கருவி தற்போது சந்தைகளில் விலைக்குக் கிடைக்கிறது. கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த டி.என். வெங்கட் (என்கிற) ரெங்கநாதன் வடிவமைத்த கருவி உயரமான மரங்களில் ஏறுவதை மிகவும் எளிதாக்கியுள்ளது. இந்தக் கருவியை வடிவமைத்த தனது அனுபவம் குறித்து வெங்கட் கூறியதாவது: 25 ஆண்டுகள் ஜவுளி ஆலையில் நான் தொழிலாளியாகப் பணியாற்றினேன். 1999-ம் ஆண்டு ஆலையை மூடி விட்டார்கள். அப்போதுதான் தென்…

  9. மணல் இன்று தங்கத்தைப் போல விலை மதிப்புள்ள பொருளாக மாறிவிட்டது. அதனால் நகைக்கொள்ளை போல மணற்கொள்ளையும் நடக்கிறது. ஆனால் இயற்கை நமக்குக் கொடுத்த கொடைதான் மணல். ஆற்றில் கிடக்கும் மணல்தானே என அள்ளிக்கொண்டே இருந்தால், அதுவும் ஒரு நாள் தீர்ந்துபோகும். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மணல் அள்ளினால் சரி. ஆனால் அதிகார, பண பலம் கொணடவர்களின் கனரக இயந்திரங்கள் கணக்குவழக்கில்லாமல் அள்ளிக்கொண்டே இருந்தால்..? கட்டிடப் பணிகளுக்காக ஆற்று மணல் அவசியம். அதற்கு என்ன செய்வது என்ற கேள்வி எழும். அதற்காகத்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மாற்று மணல். இதுவும் இயற்கை வழங்கிய கொடைதான். கல் உடைக்கும் குவாரிகளில் கிடைக்கும் மணல் துகள்களைக் கொண்டு இந்தச் செயற்கை மணலைத் தயாரிக்கிறார்கள். மேலும் தமிழகம் முழுவ…

  10. டொரன்டோ : மருத்துவத் துறைக்கு பெரும் சவாலாக விளங்கும், 'எபோலா' நோய் கிருமியை அழிக்கும் மருந்தை, ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா நாட்டில் உள்ள நுண் உயிரியல் பூங்காவில், எபோலா நோய் பாதிப்பிற்கு உள்ளான, 18 குரங்குகள், இந்த மருந்தின் மூலம் உயிர் பிழைத்துள்ளன. அதிகரிப்பு: மேற்கு ஆப்ரிக்க நாடுகளான, லைபீரியா, கினியா உள்ளிட்ட நாடுகளில், எபோலா நோய் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கிருந்து, உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ள இந்த நோயால், ஏராளமானோர் பலியாகியுள்ளனர். எபோலாவால் பாதிக்கப்பட்ட பலருக்கும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து சொந்த நாட்டிற்கு திரும்பும் அனைவரும், முறையான சோதனைகளுக்கு உட்படுத்…

  11. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்களா?? இணையங்களில் பரபரப்பு Ca.Thamil Cathamil August 28, 2014 Canada செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆய்விற்காக நாசா, செவ்வாய் கிரகத்துக்கு கியூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலத்தை அனுப்பி வைத்தது. அந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தில் எடுத்த புகைப்படங்களில் ஒன்றில், அங்கு விலங்குகளின் தொடை எலும்புகள் கிடப்பது போன்ற தோற்றம் காணப்பட்டது. அதன்மூலம், டைனோசர்கள் தோன்றி மறைவதற்கு முன்பே, செவ்வாய் கிரகத்தில் பெரியவகை விலங்குகள் உயிர் வாழ்ந்ததாக யூகங்கள் எழுந்தன. இதுபற்றி இணையதளங்களில் பரபரப்பாக கருத்து பரிமாற்றங்கள் நடந்தன. இந்நிலையில், திடீர் திருப்பமாக, அந்த தோற்றம், எலும்பு அல்ல, வெறும் பாறைதான் என்று நாசா வ…

  12. மூளையைக் காசாக்க ஒரு வழி! இது பகிடி... கனடா போய் உறவுகள் நண்பர்களைப் பார்த்து வந்தது முழுக் குடும்பத்துக்குமே பெரிய சந்தோஷம். சந்தோஷத்தோடு கனேடிய குடும்ப உறவுகளின் வாழ்க்கை முறைகள் வசதிகள் பற்றிய ஆச்சரியமும் என்னைத் தொற்றிக் கொண்டு விட்டது. பாரிய காற்றோட்டமான வீடுகள், அழகிய பூந்தோட்டங்கள் நிறைந்த வளவுகள், நாய்க்குட்டி, பூனைக் குட்டி, கரீபியன் தீவுகளுக்கு உல்லாசப் பயணம் என்று நல்ல "சோக்கான" வாழ்க்கை நான் சந்தித்த கனேடியத் தமிழருக்கு. நாங்கள் இங்க உழைக்கிற உழைப்பு எங்களுக்கு சாதாரணமாக வாழவே போதுமாயிருக்கு! என்ன தான் பிழையாகச் செய்கிறோம்? எண்டு யோசித்த போது, ஏதாவது சைட் பிசினஸ் செய்யலாம் எண்ட எண்ணம் வந்தது. எனக்கு பிசினஸ் எண்டாலே என்ன எண்டு தெரியாது, இதில எப்படி முதலீட…

  13. Started by nunavilan,

    நவீன விவசாயம்..! d851418f2d970f56c3d59e288c47cb35

    • 0 replies
    • 1.9k views
  14. புகையிரத தண்டவாளத்தை எப்படி அமைக்கிறார்கள் ? 9e9e0cf7b305454b5bd2cce5353a2ea0

  15. ரோடியோலா எனும் அதிசய மூலிகை. ராமாயணத்தில் அனுமார் கொண்டு வந்ததாகக் கருதப்படும் சஞ்சீவனி மூலிகை போன்ற ஒன்று இமாலயத்தில் இருப்பதாக ஆய்வாளர்கள் அதிசயித்துள்ளனர். இமாலயத்தில் உயிர்வாழ்வதற்கே கடினமான பகுதிகள் உள்ளன. இந்நிலையில் உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை பன்மடங்கு அதகரித்து ஒழுங்கு படுத்துவதும், பிராண வாயு பற்றாக்குறை இருக்கும் மலைப்பிரதேசங்களில் உயிர்களைப் பாதுகாக்கவும் செய்யும் ரோடியோலா என்ற அதிசய மூலிகையின் மகத்துவங்களை விஞ்ஞானிகள் விதந்தோதி வருகின்றனர். இந்த ரோடியோலாவை ‘சஞ்சீவனி’ என்றே கருதுகின்றனர் விஞ்ஞானிகள். லடாக்கில் ‘சோலோ’ என்று அழைக்கப்படும் இந்த மூலிகையின் அரிய குணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப் படாமலே உள்ளது. ஆனால் லடாக்வாசிகள் இதன் இலைகளை உணவுப்பொருளாகப…

    • 1 reply
    • 1.1k views
  16. இந்த பிரபஞ்சம் எப்படிப் பிறந்தது என்பதைப் பற்றி விஞ்ஞானிகள் பல கொள்கைகளை உருவாக்கி உள்ளனர். அவற்றில் பிரபஞ்ச பெருவெடிப்புக் கொள்கையைப் பெரும்பாலோர் ஏற்றுக்கொண்டுள்ளனர். பெரும் வெடிப்பு பிரபஞ்சம் ஆரம்பத்தில் மிகச் சிறியதாக இருந்தது. மிக வெப்பமாகவும், மிகுந்த அடர்த்தியாகவும் இருந்தது. பிறகு அதில் ஒரு சமச்சீரின்மை ஏற்பட்டது. அதன் காரணமாக இது கண்ணிமைக்கும் நேரத்தில் விரிவடைந்தது. அதன் போக்கில் பல பொருட்களை அது தோற்றுவித்தது. இன்னமும் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. காலத்தின் பிறப்பு வெடித்த கணமே காலமும் விண்வெளியும் தோன்றியது. பிரபஞ்சமும் காலமும் இணைந்து பிறந்த முதல் விநாடியை பிளாங்க் நேரம் என்று சொல்லப் படுகின்ற முறையால் அளக்கிறார்கள். ஒரு பிளாங்க் நேரம் என்பத…

  17. டைட்டன் எட்ஜ் உலகின் நம்பர் 1 கடிகாரம் - ராமன் ராஜா வருடம் 1994. டைட்டன் வாட்ச் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் செர்க்ஸெஸ் தேசாய், தன் அணியுடன் உட்கார்ந்து ஆலோசித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர்முன் இருந்த சவால், உலகத்திலேயே ஒல்லியான, தண்ணீர் புகாத கைக்கடிகாரத்தை உருவாக்கவேண்டும். இதன் தடிமன் 3.5 மில்லிமீட்டருக்குமேல் இருக்கக்கூடாது. 3.5 மில்லிமீட்டர் என்பது ஒரு பழைய ஃப்ளாப்பி டிஸ்க்கின் தடிமன்தான். அந்தக் கடிகாரம், தண்ணீர் பட்டால் வீணாகாமலும் இருக்கவேண்டும். முதலில் ஸ்விட்சர்லாந்தினரிடம் போய் உதவி கேட்டார்கள். அவர்கள்தான் வாட்ச் செய்வதிலேயே வல்லவர்கள். ஆனால் ஏமாற்றம்! அப்படி ஒரு வாட்சைத் தயாரிக்கவே முடியாது என்று சொல்லிவிட்டார்கள் சுவிஸ்காரர்கள்! ‘அல்ட்…

  18. செவ்வாய் கிரகத்தில் நாசா ஆய்வுக்கலம் எடுத்த காட்சி சூரிய குடும்பத்தின் நான்காவது கோளான செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அங்கே அனுப்பப்பட்டிருக்கும் நாசாவின் நடமாடும் ஆய்வுக்கலமான ஆப்பர்டியூனிடி (Opportunity) புதிய சாதனை படைத்திருக்கிறது. செவ்வாய்க்கிரகத்தில் இந்த ஆய்வுக்கலம் இதுவரை 40 கிலோமீட்டர் தூரத்தை பயணித்திருக்கிறது. இதுவரை காலமும் இப்படிப்பட்ட ஆய்வுக்கலங்கள் பயணித்த அதிகபட்ச தூரத்தை இந்த ஆப்பர்டியூனிட்டி ஆய்வுக்கலம் முறியடித்திருப்பதாக நாசா கூறுகிறது. இதில் சுவாரஸியமான செய்தி என்னவென்றால் இந்த தானியங்கி ஆய்வுக்கலம் செவ்வாய் கிரகத்தில் சென்று இறங்கும் இடத்தில் இருந்து அதிகபட்சம் ஒரு கிலோமீட்டர் தூரம் பயணித்தாலே போதும் என்று தான் நாசா முதலில் எதிர்பார்த்தது. நா…

    • 1 reply
    • 494 views
  19. புதன் கிரகமும் மோல்னியா செயற்கைக்கோளும் வானில் கிரகங்களைக் காண்பது குறித்து இப்பகுதியில் எழுதப்பட்ட கட்டுரையைப் படித்த ஒரு வாசகர் சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் கிரகம் சூரியனில் போய் விழாமல் இருப்பது எப்படி என்று கேள்வி கேட்டிருந்தார். அவர் கேட்டது நியாயமான கேள்வியே. சூரிய மண்டலத்தில் சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பது புதன் கிரகமே. ராஜ சிநேகிதம் ஆபத்து என்பார்கள். சூரியனுக்குப் பக்கத்தில் இருப்பதால் புதன் கிரகம் படாதபாடு படுகிறது. புதன் கிரகம் வெயிலில் உலர்த்தப்பட்ட இலந்தைப் பழம் மாதிரி சுருங்கி வதங்கிக் கிடக்கிறது. புதனில் வெயில் அடிக்கும் பக்கத்தில் ( புதனின் பகல்) ஆளைக் கொல்லும் வெயில். இரவாக இருக்கின்ற பக்கத்தில் சொல்ல முடியாத குளிர். ஆளில்லா விண்கலம…

    • 6 replies
    • 782 views
  20. கூகிள் நவ் என்ற வசதியை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் தொலைபேசிகளில் இயக்கியிருந்தால் அது உங்களின் ஒவ்வொரு அசைவையும் கூகிள் நிறுவனம் இலகுவாக பதிவுசெய்துகொள்வதற்கு உதவும் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. கூகிள் நவ் ஐ பயன்படுத்தி பயனடைந்தவர்களைத் தவிர்த்து இல்லை அது பற்றி எதுவும் தெரியாது இந்த வசதியும் எங்களுக்கு வேண்டாம் என்று கூறுகின்றவர்கள் கூகிள் நவ் மற்றும் அது தொடர்பான இயக்கங்களை முடக்கிவிடலாம் அதை எவ்வாறு செய்வது என்பதை ஆண்ட்ராய்ட் தொலைபேசியொன்றின் திரைப்பதிவு மூலம் விளக்குகின்றது இந்த வீடியோ. http://4tamilmedia.com/knowledge/useful-links/25300-android-4-1-google-now-privacy-settings-4tamilmedia

  21. ஒளியை விட வேகமாகப் பயணிக்க எதனாலும் முடியாதென்பது ஐன்ஸ்டினின் வாதமாகும். இதுவே 'Theory of Relativity' கோட்பாடு எனப்படுகின்றது. ஒளிக்கு திணிவில்லை என்பதனால் அதனை விட வேகமாகப் பயணிக்க எதனாலும் முடியாது என ஐன்ஸ்டின் பல தசாப்தங்களுக்கு முன்னர் விளக்கியிருந்தார். வெற்றிடமொன்றில் ஒளியானது (light) ஒரு செக்கனில் 1,86,282 மைல்கள் பயணிக்கும். அதாவது 2,99,792 கிலோ மீற்றர். எனினும் இக்கோட்பாடு பிழையென விஞ்ஞானிகள் சிலர் கடந்த வருடம் தெரிவித்திருந்தனர். ஒளியை விட நியூட்ரினோ எனப்படும் அணுவியல் துகள்களால் வேகமாகப் பயணிக்க முடியுமெனவும், இதனை தாம் பல கட்ட ஆய்வுகளின் மூலம் உறுதி செய்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அவர்கள் செலுத்திய அணுவியல் துகள்கள் ஒளியின் வேகத்தினை…

    • 11 replies
    • 3.8k views
  22. தற்போதுள்ள இன்டர்நெட் தொழில்நுட்பத்தில் ஒரு முழு திரைப்படத்தை சில நிமிடங்களில்தான் டவுன்லோடு செய்ய முடியும். ஆனால் டென்மார்க் நாட்டில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இன்டர்நெட் வேகத்தில் 0.2 வினாடிகளில் ஒரு முழு திரைபடத்தையும் டவுன்லோடு செய்யலாம். அதாவது கண்ணிமைக்கும் நேரத்தில் நமது கம்ப்யூட்டரில்ஒரு திரைப்படம் டவுன்லோடு ஆகிவிடும். டென்மார்க் நாட்டில் உள்ள Technical University of Denmark என்ற பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய ஆப்டிக்கல் ஃபைபர் தொழில்நுட்பம் மூலம் மின்னல்வேக இன்டர்நெட் சேவை ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளனர். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கொடுக்கப்படும் இன்டர்நெட்டின் வேகம் 43 டெராபிட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 1GB அளவுள்ள திரை…

  23. பனியால் மூடப்பட்ட அண்டார்டிகா கண்டத்தில் உள்ள ஒரு ஏரியில் நுண்ணுயிரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கண்டுபிடிப்பு வெளி கிரகங்களில் ஏலியன் உயிர் உள்ளதா என்பதை ஆராயும் ஆஸ்ட்ரோபயாலஜி (Astrobiology) துறைக்கு மிகப் பெரும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. அண்டார்டிகாவில் நுண்ணுயிர்கள் இருப்பதற்கும் ஏலியன் உயிர்களுக்கும் என்ன தொடர்பு? இதை அறிய அந்த வில்லன்ஸ் ஏரியை (Lake Whillans) பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். அண்டார்டிகா கண்டம் முழுக்கப் பனியால் மூடப்பட்டுள்ளது. மூடப்பட்ட பனிக்கு அரை மைல் கீழே ஏரிகள் உள்ளன. இவற்றில் சில, பல மில்லியன் ஆண்டுகளாகப் பனியால் மூடப்பட்டவை. சூரிய வெளிச்சம் உள்ளே புகும் வாய்ப்பே கிடையாது. சூரிய வெளிச்சம் உள்ளே புகாததால…

  24. எபோலா பரவுதல் தடுக்கக்கூடியதா? க. சுதாகர் டாக்டர் உமர் ஷேக் கான் இறந்து போனார் என்று செய்தி 29 ஜூலை 2014ல் வந்தபோது பெரிய தாக்கத்தை உலகளவில் ஏற்படுத்தவில்லை. சியர்ரா லியோன் நாட்டில் ஒருவர் உயிர் வாழ்ந்திருந்தால்தான் அது செய்தியாக இருக்க முடியும் என்று கருநகைச் செய்திகளில் அது அமிழ்ந்து போனது. யார் இந்த டாக்டர் கான்? எங்கோ ஆப்பிரிக்காவில் ஒருவர் இறந்த்தற்கு நாம் ஏன் வருந்த வேண்டும்? எபோலா காய்ச்சல் என்ற உயிர்க்கொல்லி நோய்க்கு கினியா, சியர்ரா லியோன், லைபீரியா நாடுகளில் இதுவரை 900 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். நைஜீரியாவில் இது பரவிய செய்தி ஒரு பீதியை ஏற்படுத்தியபின்னரே உலகம் மெல்ல விழித்துக் கொண்டிருக்கிறது. இந்த பீதிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் எபோலாவைக் குற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.