செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7130 topics in this forum
-
திருடிய மகனுக்கு தாய் கொடுத்த அதிர்ச்சி தண்டனை!!! சீனா - ஷயோடாங் என்ற பகுதியில் ஒரு வீட்டில் வைத்திருந்த பணத்தை திருடிய மகனுக்கு அவனின் தாய் கொடுத்த தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிலிருந்த 20,000 ரூபாய் பணத்தை சிறுவன் திருடி செலவழித்துள்ளான். இதுபற்றி அவனின் தாய் விசாரித்ததற்கு சிறுவன் சரியான பதிலை கூறாமலிருக்க ஆத்திரமடைந்த அவனின் தாய் தனது மோட்டார் சைக்கிளின் பின்புறம் அந்த சிறுவனை கயிற்றால் கட்டி தரதரவென சாலையில் இழுத்து சென்றுள்ளார். இதைக் கண்ட பொதுமக்களில் ஒருவர் தனது கைத்தொலைப்பேசியில் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பரப்பியதோடு பொலிஸாருக்கும் தெரியப்படுத்தியுள்ளார். …
-
- 0 replies
- 382 views
-
-
புலிகள்தான் ஈழபோராட்டத்தை உலகம் பயங்கரவாதமாக பார்க்க வைத்தவர்கள் என்று கூறுபவர்களில் முதன்மையானவர் டக்ளஸ் தேவானந்தா, அவரும் அவர் சார்ந்திருந்த இயக்கமுமே ஈழபோராளிகளை பயங்கரவாதிகளாக உலகின்முன் நிறுத்துவதை ஆரம்பித்து வைத்தார்கள் என்பதன் சாட்சிகளில் ஒன்று இது... ரொனால்ட் றீகன் பேசுகிறார்!
-
- 0 replies
- 501 views
-
-
சூடு பிடிக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ‘நடனம்’! பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ‘ஆட்டத்தை’ அடுத்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ‘ஆட்டம்’ சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளது. காணொளியில், சந்திரிகா பண்டாநாயக்க குமாரதுங்க, ஆங்கிலப் பாடல் ஒன்றை வாய்விட்டுப் பாடியபடியே, சக விருந்தினர்களுடன் ஆடும் காட்சி பதிவாகியுள்ளது. அந்தக் காட்சி இதோ, உங்களுக்காக: http://www.virakesari.lk/article/29722
-
- 0 replies
- 243 views
-
-
வீதித்தடுப்பில் மோதி வானில் பறந்து மாடிக் கட்டிடத்தில் பாய்ந்து சொருகி நின்ற கார்! அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதித் தடுப்பில் மோதி வானில் பறந்து அருகிலிருந்த கட்டிடத்தின் மாடியில் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவின் தென் பகுதியில் உள்ள சாண்ட்டா அனா பகுதியின் வீதியில் அதிகாலை வேளையில் வேகமாகப் பயணித்துக்கொண்டிருந்த வௌ்ளை நிற சொகுசுக் கார், கட்டுப்பாட்டை இழந்து வீதியின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் சுமார் 20 அடி உயரத்திற்கு வானில் பறந்து எகிறிய கார், அருகில் இருந்த ஒரு கட்டிடத்தின் மாடி ஜன்னலுக்குள் பாய்ந்…
-
- 12 replies
- 710 views
-
-
மனைவியை அச்சுறுத்த சவப்பெட்டிக்கு முற்பணம் செலுத்திய கணவன்!! மனைவியை அச்சுறுத்த சவப்பெட்டிக்கு முற்பணம் செலுத்திய கணவன்!! மனைவியை அச்சுறுத்தும் நோக்கில் சவப்பெட்டியை வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு நபர் ஒருவர் கோரியுள்ளார். குளியாப்பிட்டி நகரில் இந்த விநோதச் சம்பவம் பதிவாகியுள்ளது. நடுத்தர வயதுடைய ஆண் ஒருவர் மலர்ச்சாலைக்கு சென்று சவப்பெட்டிகளின் விலைகளை விசாரித்துள்ளார். ஏனைய அலங்காரங்கள், பெரிய பித்தளை விளக்கு என்பன தேவையா என்று மலர்ச்சாலை…
-
- 7 replies
- 388 views
-
-
வேகமாக சென்ற காரை துரத்திய போலீசார் பிரசவம் பார்த்தனர். அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்தில் பிரசவ வலி எடுத்த மனைவியினை, அவரது பல கோளாறுகள் காரணமாக உடனடியாக ஆஸ்பத்திரிக்கு பதட்டத்துடன் எடுத்துச் சென்ற கணவர், மிக வேகமாக சென்ற காரணத்தினால் பொலிஸாரினால் நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டு இருந்தார். தனது மனைவியின் பிரசவ வலி அலறலினால் பதடடம் அடைந்த கணவரோ நிறுத்தாமல் தொடர்ந்து செல்ல... கிடடதடட இருபது போலீஸ் கார்கள் திருத்தி, ஒரு சந்தியில் வைத்து பொக்ஸ் அடித்து அமத்தி இருக்கிறார்கள். கணவர் கை விலங்கிடப்படடு ஓரமாக உட்க்கார வைக்கப் பட நிலையில்.... போலீசார் பெண்ணை அணுகிய நிலையில்.... அது வழக்கமான பாசாங்கு இல்லை.... உண்மையிலேயே பிரசவ வலி என அறிந்து இருக்கின்றனர். தா…
-
- 2 replies
- 554 views
-
-
இந்த ரணகளத்திலும் இது தேவையா.. அடங்காத விஜய் மல்லையா..! #KingfisherCalendar2018 l கடன் பிரச்சனை, நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை வெளிநாட்டுக்குப் பிரிமாற்றம், நிறுவன பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியது, சிபிஐ வழக்கு, தான் துவங்கி நிறுவனத்தில் இருந்தே வெளியேற்றம், நாடு கடத்த முயற்சி, தினசரி நீதிமன்றம் செல்ல வேண்டிய கட்டாயம் இப்படிப் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் ஒரு மனுஷன் எப்படி இருப்பான். சாதாரண மனிதனாக இருந்தால் பைத்தியம் பிடிக்கும் அளவிற்குச் செல்வார்கள், ஆனால் விஜய் மல்லாயா வேற லெவல் என்ற சொல்ல வேண்டும். இன்றும் தனக்கென இருக்கும் ஸ்டைலில் சொகுசு வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார் விஜய் மல்லையா. இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பு தேவையா என்று கேட்கு…
-
- 0 replies
- 688 views
-
-
நெருக்கடியான அரசியல் சூழலிலும் கவலை மறந்து நடனமாடிய ரணில் நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கவலையை மறந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் நடைபெற்ற விருந்துபசாரமொன்றில் நடனமாடியதாக ஐ.பி.சி தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியின் பிணை,முறி ஊழல் விவகாரம் தொடர்பான அறிக்கை வெளியாகி இரண்டு நாட்களிற்குள் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு நடனமாடியிருக்கின்றார். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டுமென கூட்டு எதிரணியினர் கூறிவருகின்றனர். அத்துடன் பிரதமர் பதவியிலிருந்து ரணில் …
-
- 3 replies
- 305 views
-
-
அமெரிக்கா: கழிவறையை அசிங்கம் செய்த பயணியால் பாதியில் தரை இறங்கிய விமானம் அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து 245 பயணிகளுடன் ஹாங்காங் நோக்கிப் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்று, அதில் பயணித்த நபர் ஒருவர் அவ்விமானத்தின் இரு கழிவறைகளையும் தனது கழிவுகளால் அசிங்கம் செய்ததால் பாதி வழியிலேயே தரை இறக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைREUTERS யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் மலத்தின் துர்நாற்றம் வீசியதாகக் கூறியதால் அலாஸ்காவில் உள்ள ஆன்கரேஜ் விமான நிலையத்தில், வியாழன்று அது தரை இறக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பயணியால் வேறு பிரச்சனை எது…
-
- 0 replies
- 184 views
-
-
இலங்கையின் எல்லா இடங்களிலும் புதிய அறிவிப்பு ! பங்குனி 31 வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதாம்.
-
- 1 reply
- 325 views
-
-
2017ல் பூனையாகிய டொனால்ட் டிரம்ப் 2018ல் நாயாக வடிவமைக்கப்பட்டு உள்ளார்.. சீனாவில் ஷாங்ஸி மாகாண தலைநகர் தையு யான் நகரில் உள்ள வியாபார கடைத் தொகுதியில் வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ராட்சத நாய் பொம்மை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அது டிரம்ப் போன்று இடது கை விரலை மேலே தூக்கியபடி வடிவமைக்கப்பட்டுள்ளது. சீனாவில் விலங்குகள் பெயரில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு நாய் புத்தாண்டு வருகிறது. அதை வரவேற்கும் வகையில் டிரம்ப் உருவத்தில் நாய் பொம்மை வைக்கப்பட்டுள்ளது. அந்த பொம்மையின் கண் இமைகள் தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கழுத்தில் சிவப்பு …
-
- 0 replies
- 188 views
-
-
சிவகங்கையில் டாஸ்மாக் கடையை பாதுகாக்கும் நாய்க்கு பாசத்துடன் வளைகாப்பு நடத்திய மதுப்பிரியர்கள் சிவகங்கையில் டாஸ்மாக் கடையை பாதுகாத்து வந்த பெண் நாய் கருவுற்றதை தொடர்ந்து அதற்கு வளைகாப்பு நடத்தி நெகிழச் செய்து உள்ளனர் மதுப்பிரியர்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை அருகே மதகுபட்டி ஊராட்சியில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இதன் அருகில் தனியார் பார் ஒன்றும் உள்ளது. கடந்த ஆண்டு இந்த பாரில் ஆதரவற்ற பெண் நாய்க்குட்டி ஒன்று தஞ்சம் அடைந்தது. பாரில் குடிப்பிரியர்கள் தின்றுபோடும் மீதமுள்ள உணவு வகைகளை உண்டு வளர்ந்த நாய் பாருக்கு விசுவாசமாக காவல் காக்கும் பணியை தொடங்கியது. இரவு 10 மணிக்கு மேல் டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டதும் கடை வாசல…
-
- 8 replies
- 897 views
-
-
ஆண் வேடமிட்டு, 3 பெண்களை மணந்த.. ஆந்திரா இளம்பெண் சிக்கினார். ஆண் போல வேடம்போட்டுக் கொண்டு 3 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கில்லாடி ஆந்திரா இளம்பெண் போலீசில் சிக்கியிருக்கிறார். ஆந்திராவின் புலிவேந்துலா மில் ஒன்றில் பணியாற்றிய நபர், 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை காட்டி திருமணம் செய்திருக்கிறார். திருமணம் செய்த உடனேயே வெளியூருக்கு செல்வதாக கூறிவிட்டு எஸ்கேப்பாகிவிட்டார். 2 மாதங்களாகியும் அந்த நபர் திரும்பாததால் பெற்றோரிடம் சிறுமி தெரிவித்தார். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த நபரை சொந்த ஊருக்கு தந்திரமாக வரவழைத்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில்தான் சம்பந்தப்பட்ட நபர் ஒரு இளம்பெண் தெரியவந்தது போலீசாருக்கு பெரும்…
-
- 1 reply
- 232 views
-
-
செத்தல் மிளாகாயை காயவைக்கும் இடத்தில், எத்தனை எலிகள் ஒடித் தெரிகின்றது என்பதை பார்த்தவுடன், மிளாகாய்த் தூள் போடாமலே... சமையல் செய்ய வேண்டும் போலுள்ளது. எலிகளின் சிறுநீர், கழிவுகளால் கடுமையான தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது!
-
- 14 replies
- 1k views
-
-
குடிவாடா நாகரத்தினம் நாயுடு, அமெரிக்க ஜனாதிபதியை ஈர்த்த இந்திய விவசாயி!!! ஒரு விவசாயிடம் பேட்டி எடுப்பதற்காக 1,200 கிலோ மீட்டர் தூரம் நான் பயணிப்பது இதுதான் முதல் முறை. நானென்ன நான்..! ஒரு மாநில முதல்வரே இவரது பண்ணை விஜயத்தை ஒரு நாள் நிகழ்ச்சியாக வைத்திருக்கும் போது; ஆந்திர அரசு இவரைப் பற்றிய பாடத்தை ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு சேர்த்திருக்கும் போது; அமெரிக்க ஜனாதிபதியே இவரை தேடி இந்தியா வந்திருக்கும் போது நான் எம் மாத்திரம்..! பள்ளிப் பாடமாக நாகரத்தினம் நான் ஹைதராபத்தில் இறங்கிய போது அவர் அங்கு இல்லை. டெல்லியில் இருந்தார். தேசிய அளவில் நடைபெறும் சாதனை விவசாயிகள் மாநாட்டின் சிறப்பு விருந்தினராக அவருக்கு அன்று பாராட்டும் 10 லட்சம் பணமும் ரொக்கமாக அளிக்…
-
- 1 reply
- 474 views
-
-
*களவாடிய பொழுதுகள்* திரைப்படத்தில் இருந்து நிறுவனத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ள *சேரன் எங்கே, சோழன் எங்கே* பாடல். தமிழக இளைஞர்களின் உணர்ச்சிக் குவியல்களை உறைக்கும் புரட்சிப் பாடல்! காணத்தவறாதீர்கள்!
-
- 3 replies
- 1.7k views
-
-
நல்ல நேரம் பார்த்த அரசியல்வாதிக்கு நேர்ந்த கதி வேட்பு மனு தாக்கல் செய்ய நல்ல நேரம் பார்த்த அரசியல்வாதியொருவர், விடிய விடிய வீட்டுத் தோட்டத்தில் கண் விழித்திருக்க நேர்ந்ததாக தகவல்கள் கசிந்துள்ளன. குறித்த வேட்பாளர் சோதிடத்தில் அதீத நம்பிக்கை உள்ளவர். வெற்றி வாய்ப்பைத் தரும் நேரம் ஒன்றை வேட்பு மனு தாக்கல் செய்வதற்குக் குறித்துத் தருமாறு சோதிடர் ஒருவரை வேட்பாளர் அணுகினார். எல்லா அரசியல்வாதிகளும் சோதிடத்தில் அதீத நம்பிக்கை உள்ளவர்களே என்று கூறிய சோதிடர், அதிகாலை 1.37க்கு வீட்டை விட்டு வெளியேறினால் நல்லது என்று நேரம் குறித்துக் கொடுத்தார். அதன்படி, குறித்த அதிகாலை நேரம் வீட்டை விட்டு வெளியேறிய வேட்பாளர், தேர்தல் அதிகாரிகள் அலுவலகம் வ…
-
- 1 reply
- 210 views
-
-
திருமணப் பரிசாக, `பிட்காயின்கள்` கேட்ட புதுமண ஜோடி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க திருமண நிகழ்வுகள் பாரம்பரியமானதாக இருந்தாலும் அதற்கு அளிக்கப்படும் பரிசுகள் வேறுபடும். இந்த விதத்தில் பார்த்தால் இது ஒரு வித்தியாசமான திருமணம். பெங்களூரின் தெற்கு நகரில் புதிதாக திருமணமான தம்பதியினருக்கு, பெரும்பாலான விருந்தினர் பாரம்பரிய கல்யாணப் பரிசு பொருட்களுக்கு மாற…
-
- 1 reply
- 608 views
-
-
செக்ஸ் தேடும் பட்டியலில் இலங்கை 3ம் இடத்தில் – நகரங்களில் ஹோமாகம, சென்னை, டாக்கா முன்னிலையில்… இணையத்தில் செக்ஸ் என்ற வசனத்தை தேடும் நாடுகளில் இலங்கை மூன்றாம் இடத்திலுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த சில வருடங்களாக இலங்கை இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்துள்ளது. இதேவேளை இம்முறை பங்களாதேஷ் முதலிடத்திற்கு முன்னேறி, எத்தியோப்பியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.மேலும், நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முறையே நான்காம், ஐந்தாம் இடங்களில் உள்ளன.இதேவேளை, இந்தப் பட்டியலில் முதல் நகரமாக இலங்கையின் ஹோமாகம விளங்குவதோடு அதற்கு அடுத்த இடங்களில் சென்னை, டாக்கா என்பன இடம்பிடித்துள்ளன.அத்துடன், முழு வருடத்திலும் பாடசாலை விடுமுறை மாதங்களான ஆகஸ்ட்…
-
- 6 replies
- 941 views
-
-
தாய்க்கும் மகளுக்கும் ஒரே கணவரா.? அதிர்ச்சியை ஏற்படுத்திய திருமணம்.! (படங்கள் இணைப்பு) பங்கதேசத்தில் பின்பற்றப்படும் வினோத பாரம்பரியம் ஒன்று அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், தாயும் மகளும் ஒரே ஆணை திருமணம் செய்ய வேண்டும் என்பதுதான் அது. பங்கதேசத்தில் உள்ள மாண்டி என்ற பழங்குடியினத்தை சேர்ந்த விதவை பெண்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திருமண முறையால் பதிக்கப்பட்ட மிட்டாமோனி என்ற பெண் ஒருவர் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, எனது தாயின் இரண்டாவது கணவர், அதாவது எனது வளர்ப்பு தந்தை பார்ப்பதற்கு அழகாக இருப்பார். அவரை போல்ம் ஒரு கணவர் எனக்கு கிடைக்க வேண்டும் என நினைத்தே…
-
- 0 replies
- 279 views
-
-
'என்னை திருமணம் செய்ய சம்மதமா?' - நாடாளுமன்றத்தில் காதலை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய எம்.பி. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS ஆஸ்திரேலியாவில் ஒரு பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, எம் பி ஒருவர் அவரது காதலரிடம் தன் காதலை வெளிப்படுத்தினார். பொது கேலரியில் அமர்ந்திருந்த ரியான் பொலுஜரிடம…
-
- 1 reply
- 399 views
-
-
ஆணுக்கு கிடைத்த குழந்தை வரம் தென் இலங்கையில் ஒரு பரியாரி அம்மா திடீரெனெ கடை விரித்தார். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கச் செய்யும் மூலிகை தன்னிடம் உள்ளதாக அறிவித்தார். படை எடுத்தனர், குழந்தைகள் இல்லா தாய் மார்கள். எல்லோருக்கும் பணத்தினை வாங்கிக் கொண்டு அள்ளிக் கொடுத்தார் மூலிகையினை... கூடவே ஒரு எச்சரிக்கையினையும் விடுத்தார். ஆஸ்பத்திரிக்கு போகாதீர்கள்.... கர்பத்தினையும் இழப்பீர்கள்... இந்த பரியாரி அம்மாவின் புகழைக் கேள்விப்படட ஒரு பெண்ணும், கணவருக்கு தெரியாமல் வந்து மூலிகையினை வாங்கி, சொன்னவாறே பக்குவமாக எடுத்துக் கொண்டார். கணவர் தீடீரெனக் கேட்டார்..... இது என்னப்பா மருந்து.... எதாவது வருத்தமா?... ஓ அதுவா, முழங்கால் வலிக…
-
- 4 replies
- 505 views
-
-
இலங்கை விமான நிலையத்தில் மெர்சல் உடையில் வெளிநாட்டவர்கள். FacebookTwitterPinterestEmailGmailViber இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் பட்டையைக் கிளப்பிய காட்சி, தமிழர்களின் ஆடையில் விமான நிலையத்தில் வருவது போன்று அமைந்திருக்கும். அந்த வகையில் வெளிநாட்டு இளைஞர்கள் இலங்கை விமான நிலையத்தில் மெர்சல் ஸ்டைலிலில் வருகை தந்துள்ளனர் http://newuthayan.com/story/43776.html
-
- 13 replies
- 1.4k views
-
-
அலங்கார செடிகளை தின்ற 8 கழுதைகளுக்கு 4 நாள் ஜெயில் தண்டனை. உத்தரப்பிரதேசத்தில் சிறை வளாகத்தில் இருந்த செடிகளைத் தின்றதற்காக 8 கழுதைகளுக்கு 4 நாட்கள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட கொடூரம் அரங்கேறி உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ஜலாவூன் மாவட்டத்தில் உராய் சிறை வளாகத்தில் விலை உயர்ந்த செடிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இவற்றின் மதிப்பு ரூ5 லட்சம் என கூறப்படுகிறது. அழகுக்காக வைக்கப்பட்டிருந்த இந்த செடிகளை 8 கழுதைகள் மேய்ந்துவிட்டன. இதில் கடுப்பாகிப் போன சிறைத்துறை அதிகாரி கழுதைகள் மீது புகார் கொடுக்க போலீசாரும் 8 கழுதைகளை 'கைது செய்து' உராய் சிறைக்குள் அடைத்து வைத்தனர்.இதனிடையே கழுதைகளை காணாத உரிமையாளர் கமலேஷ் அவற்றை தேடி அலைந்துள்ளார். பின்னர் உராய் சிறையில் கழுதைகள் …
-
- 2 replies
- 328 views
-
-
மனைவியுடன் குடும்பம் நடத்துமாறு, கணவனை கட்டாயப்படுத்த முடியாது... உச்ச நீதிமன்றம். இரு மனித உறவுகள் சம்பந்தப்பட்டது என்பதால் மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு கணவனை கட்டாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த விமானி ஒருவர் தனது மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க முன் ஜாமின் வழங்குமாறு அந்த பைலட் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையை அணுகியுள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது மனைவியுடன் சமாதானமாக செல்வதாக விமானி ஒப்புகொண்டதையடுத்து அவருக்கு மதுரை நீதிமன்றம் ஜாமின் அளித்தது. ஆனால் ஒப்புகொண்டபடி விமானி தன்னுடைய மனைவி மற்றும் மகளை பராமர…
-
- 0 replies
- 260 views
-