Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. Posted Date : 10:35 (13/01/2015)Last updated : 11:01 (13/01/2015) கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சியின்போது, அவருடைய மகன்கள் ஏராளமான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புத்தமத அமைப்பு பரபரப்பு குற்றம்சாட்டிள்ளது. இலங்கையின் அதிபராக 10 ஆண்டுகள் பதவி வகித்தவர், மகிந்த ராஜபக்சே, அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். ராஜபக்சே ஆட்சியில் அவருடைய சகோதரர்களில் ஒருவர் கோத்தபய ராணுவ அமைச்சராகவும், மற்றொரு சகோதரர் பசில் ராஜபக்சே பொருளாதார மேம்பாட்டு அமைச்சராகவும் பதவி வகித்தனர். ராஜபக்சே ஆட்சியில் இருந்தபோது இவர்களுடைய அதிகாரம் கொடி கட்டி பறந்தது. இதேபோல் ராஜபக்சேயின் 3 மகன்களான நமல், யோஷிதா, ரோகிதா ஆகியோரும் தந்தை…

  2. யு.எஸ்.-மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் அல்லது மலிவானதாக இருந்தாலும் ஒருவருக்கு பேக்கிங் பொருட்கள் மிகுந்த குடிபோதையை ஏற்படுத்தும் என்பதை நியு யோர்க்கை சேர்ந்த பெண் ஒருவர் தெளிவாக நிரூபித்துள்ளார். இந்த வார இறுதிநாட்களில் வனிலா சாறின் தாக்கத்துடன் வண்டியோட்டியதால் பொலிசாரால் இவர் கைது செய்யப்பட்டு இதனை நிரூபித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு நியுயோர்க் பொலிசார் வால்மார்ட் வாகனம் நிறுத்தும் இடத்தில் ஒழுங்கற்ற முறையில் வாகனம் செலுத்திய பெண் ஒருவரை நிறுத்தியுள்ளனர். பெண் வண்டியை சாலை ஒரத்தில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு போகும் பாதையை தவறவிட்டு விட்டதாக தெரிவித்தார். ஆனால் அதிகாரி மூச்சில் மதுவின் அளவை சோதிக்கும் கருவியை கொடுத்து பரிசோதித்த போது இரத்தத்தி…

  3. பணத்தை காட்டி, கோமாவில் உள்ளவரை... எழுப்பிய மருத்துவர்கள். பெய்ஜிங்: கோமாவில் இருந்த நபரை சீன மருத்துவர்கள் வித்தியாசமான முறையில் சிகிச்சை அளித்து பிழைக்க வைத்திருக்கிறார்கள். பணம் என்ற தாளிற்கு கிடைக்கும் மதிப்பு, பெரும்பாலான இடங்களில் மக்களுக்குக் கூட கிடைப்பதில்லை. அதனால் தான் நம் முன்னோர்கள் பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் எனச் சொல்லி வைத்தார்கள் போலும். பணத்தைக் காட்டினால் பிணமே வாயைத் திறக்கும் என்றால் நோயாளிகள் மட்டும் விதிவிலக்கா. சீனாவில் கோமாவில் போராடிய நோயாளி ஒருவரை பணத்தின் உதவியால் மருத்துவர்கள் பிழைக்க வைத்துள்ளனர். அதிக பணம் செலவழித்து பிழைக்க வைத்திருப்பார்கள் என நீங்கள் நினைத்தால் அது தவறு. வெறும் 100 யென் நோட்டால் கோமாவிலிரு…

  4. தூங்கினால் படித்தது நினைவில் நிற்கும் --ஆராய்ச்சி முடிவுவாழ்க்கையின் மிக இளம் பிராயத்தில் கல்வி கற்பதற்கு முக்கியமாக உதவுவது அவ்வப்போது குட்டித் தூக்கம் போடுவதே என்று ஐரோப்பிய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். குழந்தைகள் புதிய தகவல்களை கிரகித்துக்கொண்டவுடன் தூங்கப்போனால் அவை அந்தத் தகவல்களை நல்ல முறையில் புரிந்துகொள்கின்றன என்று தேசிய அறிவியல் கழகத்தினால் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை ஒன்று கூறுகிறது. 12 மாதத்துக்குட்பட்ட 216 குழந்தைகளுக்கு புதிய வேலைகளை கை பொம்மைகள் மூலம் செய்ய விஞ்ஞானிகள் கற்றுக்கொடுத்தார்கள். இந்த விளையாட்டு நேரம் முடிந்தவுடன் நான்கு மணிநேரத்துக்குள் தூங்கிய குழந்தைகளால் அடுத்த நாள், அவர்கள் கற்றுக்கொண்டவற்றில் பாதியை நினைவில் வைத்துக்கொள்ள முடிந்தது. ஆனால் தூ…

  5. துபாய் நகை வியாபாரிகள் தயாரித்த ஐந்தரை கிலோ மீட்டர் நீளமும், 256 கிலோ எடையும் கொண்ட தங்கச் சங்கிலி புதிய உலக சாதனை படைத்துள்ளது. துபாயில் ஜனவரி 1-ம் தேதி முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை அந்நாட்டின் 20-வது ஷாப்பிங் திருவிழா நடைபெறுகின்றது. இந்த ஷாப்பிங் திருவிழாவில் நூற்றுக்கணக்கான தங்க நகை வியாபாரிகள் ஸ்டால்களை அமைத்து வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து வருகின்றனர். இந்த திருவிழாவோடு பெரும் விழாவாக மேலும் ஒரு சாதனையை படைக்க துபாய் தங்க நகை வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். 22 கேரட் தங்கத்தில் சுமார் 5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தங்கச் சங்கிலி ஒன்றை கையினால் தயாரிக்கும் பணியில் ஏராளமான பொற்கொல்லர்கள் இரவு-பகலாக ஈடுபட்டு வந்தனர். இதன் மூலம் 1999-ம் ஆண்டில் 4.382 கிலோ…

  6. திருநங்கைகள், ஓரினச் சேர்க்கையாளர்கள், செக்ஸுவல் டிஸ்-ஆர்டர் உள்ளவர்கள், பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியவர்கள், மூட நம்பிக்கையைப் பரப்புபவர்கள் என்று யாருக்கும் இனிமேல் ரஷ்யாவில் கார் ஓட்ட அனுமதி இல்லை என்று ஓர் அதிரடி அறிவிப்பை ரஷ்ய அரசு வெளியிட்டிருக்கிறது. ரஷ்யாவில் கார் ஓட்டுபவர்களில் 85 சதவீதம் பேர், தங்கள் காரின் டேஷ்போர்டில் கேமரா ஃபிக்ஸ் பண்ணியிருப்பார்கள். எதற்குத் தெரியுமா? சாலை விபத்துகளைப் பதிவு செய்து, வீடியோவை நெட்டில் விட்டு வைரலாக்குவது ரஷ்யர்களின் ஹாபி. இப்படி 2011-லிருந்து இதுவரை எத்தனை வீடியோக்கள் உலா வந்திருக்கின்றன தெரியுமா? சுமார் 2 லட்சம். தீவிரவாதம், பாலியல் பலாத்காரம் - இவற்றையெல்லாம் தாண்டி ரஷ்யப் பிரதமருக்குக் கடுமையான தலைவலி என்பது, ரஷ்ய…

  7. யு.எஸ்.-மசாசுசெட் என்ற இடத்தில் பெண் ஒருவரின் எடை அதிகரித்து வர விடுமுறை பருவத்தில் தனக்கு மேலதிக எடை போட்டு விட்டதென நம்பியுள்ளார். ஆனால் இவர் கர்ப்பமாக இருப்பதாக கண்டறியப்பட்ட 1-மணித்தியாலங்களில் ஒரு பத்து இறாத்தல் எடையுள்ள குழந்தையை பிரசவித்துள்ளார். இதை நம்புவது கஸ்டமாக இருந்தாலும் நடந்துள்ளது. குழந்தையை பிரசவித்த பின்னரே கேற்றி குரொபாஸ் என்ற இவர் நடந்தது நிஜம் என அறிந்துள்ளார். தீவிரமான வலியும் முதுகு வலியும் ஏற்பட்டதால் வைத்தியசாலைக்கு சென்றார்.வைத்தியசாலை ஊழியர்கள் இவர் நிறைமாத கர்ப்பினி என்றும் பிரசவ நேரம் வந்து விட்டதெனவும் தெரிவித்ததை கேட்டு கேற்றியும் அவரது காதலனும் அதிர்ச்சியடைந்தனர். கர்ப்பம் சம்பந்தமான எதுவித அறிகுறிகளும் தனக்கு தென்படவில்லை என கூறினார்.…

  8. அமிர்தசரஸ்: பாஞ்சாப் மாநிலத்தில் 500 ரூபாய் காணாமல் போனதற்காக வகுப்பு மாணவிகளை நிர்வாணமாக்கி சோதனையிட்டுள்ளார் ஆசிரியை ஒருவர். இந்த சம்பவத்தால் கொதித்து போன பெற்றோர்கள் போலீசில் புகார் தெரிவிக்கவே ஆசிரியர் தலைமறைவாகிவிட்டார். பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் மாதியாலாவில் உள்ள அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியையாக பணியாற்றுபவர் ஹர்ஜித்கவுர். இவர், 7 ஆம் வகுப்புக்கு பாடம் நடத்த சென்றபோது அவரது பர்சில் இருந்த 500 ரூபாய் காணாமல் போயுள்ளது. அந்த பணத்தை வகுப்பு மாணவிகளில் யாரோ தான் திருடியிருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்ட ஹர்ஜித்கவுர் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். ஆனால், அந்த பணத்தை தாங்கள் யாரும் எடுக்கவில்லை என்று மாணவிகள் மறுத்தனர். ஆனாலும் அதை விடாத ஆசிரியை 1…

  9. சீனாவில் சான்ஸி மாகாணத்தில் நடந்த செக்ஸ் ஊழல், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தங்களுக்கு ஆக வேண்டிய காரியங்களை சாதகமாக செய்து முடிப்பதற்கு அரசு அதிகாரிகளுக்கு பரிசாக பள்ளி மாணவிகளை தொழில் அதிபர்கள் விருந்தாக்கி உள்ளது தற்போது வெளிச்சத்தில் வந்துள்ளது. இது குறித்து தொழில் அதிபர்கள் மீதும், அரசு உயர் அதிகாரிகள் மீதும், புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. 11–ம் வகுப்பு மாணவிகள் மூலமாக 10–ம் வகுப்பு மாணவிகளை அழைத்து வரச்செய்து, அரசு அதிகாரிகளுடன் வலுக்கட்டாயமாக செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள செய்துள்ளனர். இந்த தொழில் அதிபர்கள் அதை மறுக்கும் மாணவிகளை அடித்தும் துன்புறுத்தியும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 10–ம் வகுப்பு மாணவிகளை வலுகட்டாயமாக பாலியல் பலாத்கா…

  10. உலகின் பணக்காரரான பில் கேற்ஸ் அண்மையில் குடிநீர் சுவைக்கும் சோதனை ஒன்றை நடாத்தினார். இந்த நீர் மனித கழிவுநீர் வடிகாலில் இருந்து விசேடமான ஒரு மெசினால் சுத்திகரிக்கப்பட்டு வெளிவருகின்றது. OmniProcessor எனப்படும் ஒரு மகத்தான சாக்கடை நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கொதிகலன்கள் நீராவி ஆற்றல் மற்றும் ஒரு வடிகட்டுதல் முறையை பயன்படுத்தி மனித மலத்தை சுத்தமான குடிநீராக வெளிக்கொண்டு வருகின்றது என கூறப்படுகின்றது. இந்த செயல்பாட்டில் மின்சாரமும் சிறிதளவு சாம்பலும் உருவாக்கப்படுகின்றது. இவரது வலைப்பதிவில் OmniProcessor தண்ணீரின் முதல்தர சோதனை சுவைத்தல் திங்கள்கிழமை ஆவணபடுத்தப்பட்டுள்ளது. கொணரி பட்டையில் மல குவியல் சென்று பெரிய தொட்டி ஒன்றில் விழுவதை தான் கவனித்ததாக எழுதியுள்ளார். பி…

  11. கனடா-ஒரு செட் இறந்த பற்றறிகள் கிறிஸ்மஸ் ஈவ் தினத்தன்று லண்டன் ஒன்ராறியோவை சேர்ந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. கிறிஸ்ரின் ஹவ்லி அவரது மகனிற்கு ஒரு பொம்மை வாங்கியுள்ளார். ஆனால் அதன் பற்றறிகள் பழுதடைந்து விட்டன. அதனால் அவர் அருகில் உள்ள வீட்டுப்பொருட்கள் விற்கும் கடைக்கு மாற்று பற்றறிகள் வாங்க சென்றார். அவரிடம் கடை சொந்காரர் சுரண்டும் ரிக்கெட் ஒன்றை கிறிஸ்மஸ் ஈவ் தினமான இன்று வாங்க போகின்றீர்களா என கேட்டதுடன் இவை அதிஷ்டமானதென தான் கேள்விப் பட்டதாகவும் கூறியுள்ளார். கிறிஸ்ரினும் சரியென்று 20-டொலர்களிற்கு 200-மில்லியன் டொலர்கள் பரிசிற்கான வியக்கத்தகு சுரண்டல் சீட்டை வாங்கினார். வீட்டிற்கு சென்ற அவர் ரிக்கெட்டை சுரண்ட அவர் 2-மில்லியன் ட…

    • 0 replies
    • 793 views
  12. இந்தியா - அரியானா மாநிலத்தில் உள்ள யமுனா நகரை சேர்ந்தவர் சுல்தான் சிங். ஒரு நாள் அவரது குழந்தை வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது குரங்கு ஒன்று வந்தது. நீண்ட நாள் பழகியதை போல குரங்கும் குழந்தையும் உடனே விளையாட ஆரம்பித்து விட்டனர். குரங்கை பார்த்து குழந்தை ஒரு போதும் பயப்படவில்லை. அன்று முதல் இன்று வரை கடந்த ஆறு மாதங்களாக சுல்தான் சிங் வீட்டிலேயே அக்குரங்கு வசித்து வருகிறது. சுல்தான் சிங்கும், அவரது மனைவியும், குரங்கிற்கு 'நானி' என்று பெயர் வைத்து அதை தங்கள் குழந்தை போல் பாவித்து வருகின்றனர். அதே போல் குரங்கும் சுல்தான் சிங்கின் குழந்தையை பெற்ற தாயை போல் கவனித்து வருகிறது. குழந்தையை கொஞ்சி விளையாடுவதிலும், அதற்கு சோறூட்டுவதிலும், முத்தமிடுவதிலும், அவளை பராம…

  13. செல்ஃபி எடுப்பதற்கான தனி வகுப்புகள் லண்டனில் உள்ள சிட்டி லிட் கல்லூரி விரைவில் ஆரம்பிக்க உள்ளது. புதிதாகத் தொடங்கப்போகும் வகுப்புகள் மூலம், மாணவர்களை செல்ஃபி எடுக்க முழுமையாகக் கற்றுக்கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. செல்ஃபி எடுப்பதற்காக ஆரம்பிக்கப்படவுள்ள இந்த வகுப்புகள் மார்ச் மாதம் முதல் தொடங்குகிறது. உலகிலேயே முதன் முதலில் செல்ஃபி எடுக்க பயிற்சி அளிக்கும் முதல் கல்லூரி இதுவாகும். The art of photographic self-portraiture என்ற இதை படிக்க சுமார் ரூ. 8400 பயிச்சிக் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. வளர்ந்து வரும் புகைப்பட கலைஞர்களுக்கு, செல்ஃபி புகைப்படங்கள் எடுக்கத் தோதான இடம், சூழ்நிலை, வெளிச்சம், சுற்றுப்புறம் போன்ற விஷயங்களும், அவர்களின் வேலை தொடர்பான கு…

  14. சர்வதேச அளவில் GFK என்ற என்ற ஆய்வு நிறுவனம் 23 நாடுகளில் அந்தந்த நாட்டு மக்களின் ஆரோக்கியமான‌ உணவு பழக்கம், போதுமான தூக்கம், உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அன்றாட‌ வாழ்க்கை ஆகியவற்றை சர்வே செய்து வெளியிட்டுள்ளது. இதில் இந்தியர்கள் 79% சதவீதத்தில் ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்வதாக முதலிடம் பெற்றுள்ளனர். இந்தோனேசியர்கள் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். இதில் ஜப்பானியர்கள் 29 % சதவீதம் பேரே ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்வதாகவும் கண்டறியப்பட்டு கடைசி இடம் பெற்றுள்ளனர். போதுமான அளவு தூங்கி ஓய்வு எடுப்பதில் இந்தோனேசியர்கள் 85% சதவீதத்தினர் என முதலிடம் பெற்றுள்ளனர். இந்தியர்கள் 77% சதவீதம் பேர் என இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். இதிலும் ஜப்பானியர்கள் 39% சதவீதத்தி…

  15. கிராமத்திற்குள் புகுந்த பெண் கரடி ஒன்று வனக்காவலர் ஒருவரை அடித்துக் கொல்வது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டீஸ்கரின் சுராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்துக்குள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பெண் கரடி ஒன்று புகுந்தது. ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நெருப்பை காட்டி கூச்சலிட்டு கரடியை விரட்டினர். இருப்பினும் அவ்வப்போது ஊருக்குள் வந்த கரடி மக்களை தாக்கத் தொடங்கியது, இதில் நபர் ஒருவர் பலியானார். எனவே வனத்துறையினருக்கு மக்கள் தகவல் அளித்தனர், அங்கு வந்த வனத்துறையினர் கரடியை விரட்டினர். அப்போது எதிர்பாராதவிதமாக காவலர் ஒருவர் கரடியிடம் சிக்கிக் கொண்டனர், அவரையும் கரடி குதறி கொன்றுவிட்டது. செல்போனில் படமெடுக்கப்பட்ட இக்…

  16. திருச்சி: நித்தியானந்தாவின் பெங்களூரு ஆசிரமத்தில் மரணமடைந்த இளம்பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, அந்தப் பெண்ணின் உடல் மறு பரிசோதனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுன் -ஜான்சிராணி ஆகியோரின் மகள் இளம் பெண் சங்கீதா என்பவர், நித்தியானந்தாவின் பெங்களூரு ஆசிரமத்தில் தங்கி இருந்த நிலையில், கடந்த 28 ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இவரின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அதனால் மகளின் உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவரது தாயார் ஜான்சிராணி, திருச்சி ராம்ஜி நகர் காவல்நிலையத்திலும், அடுத்து கர்நாடக மாநிலம் ராம்நகர…

  17. நம் மண்ணின் வளத்தை பாதிக்கும் நஞ்சு மரங்களை வெட்டுங்கள் உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் ‘மரங்களை நடுங்கள்’ என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் ‘மரங்களை வெட்டுங்கள்’ என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்’ ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ‘ என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை. மண்ணின் வில்லன் : அமெரிக்க தாவரவியல் பூங்கா , ‘வளர்க்க கூடாத நச்சு மரங்கள்’ என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது…

    • 13 replies
    • 4.7k views
  18. தென்னஞ்சோலைகளிற்கு உள்ளேயே வாழும் இந்த நண்டுகள் தென்னை மரங்களில் ஏறி தேங்காய் பறித்து உண்ணுகின்ற வல்லமையைப் பெற்றிருக்கின்றன. இவ்வாறு லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில், இயற்கை சம்பந்தமான ஆய்வு தொடர்பாக ஆய்வாளர் சுரேஸ் தர்மா கருத்து வெளியிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில், இது போலவே இன்னொரு நண்டு மனிதனின் உயிர்காக்க இன்று வரை உதவி வருகிறது. கனடா போன்ற நாடுகளில் பெரும் பணமீட்டும் நடவடிக்கையாக snow crab எனப்படும் ஒரு நண்டின் வியாபாரமே மீன்பிடித்துறையில் திகழ்கிறது. அதே போன்று குதிரைலாட (horse shoe) நண்டின் இரத்தம் இன்றுவரை மனிதனின் காயங்களிற்கான, சத்திரசிகிச்சைக்கான தொற்றுநீக்கியாக பாவிக்கப்பட்டு வருவதோடு, ஒரு கலன் நண்டு ரத்தம் 60 ஆயிரம் அமெரிக்க டொலருக…

    • 0 replies
    • 558 views
  19. கனடா- ஒன்ராறியோவில் பார்ரி என்ற இடத்தில் மதுபான அருந்தகம் ஒன்றில் வாடிக்கையாளர் பணிப்பெண் ஒருவருக்கு விட்டுச்சென்ற 99,000.00 டொலர்கள் அவருக்கு கிடைக்க மாட்டாதென பொலிசார் தெரிவித்தனர். ஞாயிற்றுகிழமை இரவு அருந்தகம் ஒன்றில் இருந்து வாடிக்கையாளர் ஒருவர் கட்டணம் செலுத்தக் கஸ்டப்படுவதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. மனிதன் சான்விச் ஒன்றை வாங்கிவிட்டு அதற்கான 7-டொலர்களை செலுத்தி விட்டு பணிப்பெண்ணிற்காக 98,931.87-டொலர்களை விட்டு சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இவர் போதையில் சட்டத்தை மீறியதாக கண்டுபிடிக்கப் பட்டது. துரதிஸ்டவசமாக மனிதனின் கடன் அட்டை மறுக்கப்பட்டதால் பணிப்பெண்ணிற்கு அன்பளிப்பு கிடைக்கவில்லை. - See more at: http://www.canadamirror.com/canada/36346.h…

    • 0 replies
    • 769 views
  20. சுமை' தாங்கி! - விநோத நோயுடன் வாழும் நினா பார்சன்ஸ் Posted Date : 13:42 (05/01/2015)Last updated : 13:54 (05/01/2015) அமெரிக்காவைச் சேர்ந்த நினா பார்சன்ஸ் (Nina Parsons) என்ற பெண்ணுக்கு 'ஈயிலேர்ஸ் டான்லோஸ் சின்ட்ரோம்' (Ehlers-Danlos Syndrome) என்ற நோய் தாக்கி உள்ளது. இந்த நோய் தாக்கப்பட்டவர்களால் அவர்களது தலையைச் சுமக்க முடியாது. கழுத்து எலும்புகள் சக்தியற்று அவர்களது தலையைத் தாங்க முடியாமல் போய்விடும். அது மட்டுமின்றி, மண்டை ஓடு அதிக அளவு அழுத்தம் கொடுத்து மூளையை நசுக்கிவிடும். இதற்குத் தீர்வு என்று ஒன்று இல்லவே இல்லை. பாதிக்கப்பட்ட நினா பார்சன்ஸ் இதுபற்றிப் பேசுகையில், "எனக்கு வந்திருக்கும் நோய்க்கு இதுவரை தீர்வு கண்ட…

    • 0 replies
    • 395 views
  21. போதையில் உளறும் பறவைகள் மது உள்ளே போனதும் குடிகாரர்கள் உளறத்தொடங்கி விடுவார்கள். மனிதர்கள் மட்டுமல்ல, பறவைகளும் இப்படித்தான் உளறும் என்பது ஒரு ஆராய்ச்சியின் மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பான ஆராய்ச்சியை அமெரிக்காவில் உள்ள ஒரேகான் சுகாதாரம், அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி கிறிஸ்டோபர் ஓல்சனும், குழுவினரும் மேற்கொண்டனர். ஒரு பிரிவு சிட்டுக்குருவிகளுக்கு அவர்கள் திராட்சை சாறு கொடுத்தும், மற்றொரு பிரிவு சிட்டுக்குருவிகளுக்கு சாராயம் கலந்த பல்வகை பானங்களை கலந்து கொடுத்தும் சோதித்தனர். இதில் சாராயம் கலந்த பல்வகை பானங்களை குடித்த சிட்டுக்குருவிகள், குடிகாரர்கள்போலவே உளறுவது போன்று ஒலி எழுப்பின. அவர்களின் ரத்தத்தை பரிசோதித்து பார்த்தபோது அதில்…

    • 1 reply
    • 721 views
  22. 17 வயதுச் சிறுவனுடன் குடும்பப் பெண் ஒருவா் மாயமானா். கொழும்பு வெள்ளவத்தை 37 வீதிப் பகுதியில் வசித்து வந்த குடும்பப் பெண்னே சிறுவனுடன் மாயமாகியுள்ளார். குறித்த பெண் பெரும்பான்மை இனத்தைச் சோ்ந்தவா் எனவும் சிறுவன் யாழ்ப்பாணம் கந்தா்மடம் பகுதியைச் சோ்ந்தவன் எனவும் தெரியவருகின்றது. குறித்த சிறுவனின் சகோதரி வெளிநாட்டில் வசிப்பதாகவும் சகோதரி கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் தொடா்மாடியில் வீடு வாங்கி அதனை பெரும்பாண்மையினத்தைச் சோ்ந்த குடும்பப் பெண்ணுக்கு வாடகைக்குக் கொடுத்ததாகவும் தெரியவருகின்றது. குறித்த பெண்ணின் கணவா் கப்பலில் பணியாற்றுவதாகவும் இப் பெண்ணுக்கு 5 வயதில் ஒரு சிறுமி இருப்பதாகவும் தெரியவருகின்றது. சிறுவன் தனது தாயுடன் கடந்த இரு வருடங்களாக விடுமுறை நாட்களில் வெள்ள…

  23. காந்தி பெயரில் அவரது படத்துடன் பீயர் விற்பனை செய்த அமெரிக்க மதுபான நிறுவனம் மீது கோர்ட்டில் பொதுநலவழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த நியூ இங்கிலாந்த் பிரிவிங் என்ற மதுபானம் தயாரிப்புநிறுவனம் காந்திபூட் என்ற பெயரில் மூன்று வித சுவைகளுடன் புதிய பீர் ரகத்தினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் காந்தியின் படம் இடம் பெற்றுள்ளது. அந்நிறுவனம் காந்தியின் உண்மை, அன்பை போதிக்கும் கொள்கை போன்று இந்த பீர் சுத்தமானது என அவரது பெயரை நிறுவனத்தின் விளம்பரதூதராகவும் சித்தரித்துள்ளது. இந்தியாவின் தேசத்தந்தை காந்தியின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக புகார்எழுந்தது. இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜனார்த்தன் ,நம்பள்ளி மாவட்ட, 11-வது மெட்ரோபொலிட…

  24. இங்கிலாந்தின்.... முதலாவது போர் விமானத்தின் பெயர் "யாழ்ப்பாணம்!" இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம் என்பது ஆகும்.இப்போர் விமானத்தை உருவாக்குகின்றமைக்கு யாழ்ப்பாண தமிழர்கள் வழங்கி இருந்த நிதிப் பங்களிப்புக் காரணமாகவே இப்பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது. இப்போர் விமானம் குறித்த தகவல்கள் மிகவும் சுவாரசியமானவை. முன்னைய கால விமானங்கள் 100 குதிரை வலு என்ஜின்களுடன் இயங்கி வந்தன. இவை மரம், துணி, வயர்கள் போன்றவற்றால் ஆக்கப்பட்டு இருந்தன. முதலாம் உலகப் போர் நடைபெற்ற காலம். எதிரிகளை வேவு பார்ப்பதற்கும், குண்டு வீசுவதற்கும் சிறந்த பொறியாக விமானம் கண்டு கொள்ளப்பட்டது. ஆனால் மேற்சொன்ன ரக விமானங்கள் அவற்றின் வடிவமைப்புக் காரணமாக எளிதில் தாக்குதல்களுக்கு உள்ளாகி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.