Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. பாட்னாவில் இளம்பென்ணின் நாக்கை பக்கத்து வீட்டுகாரர் துண்டித்ததால் பாதிக்கபட்ட பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார் புகாரை பெற்று கொண்ட போலீசார் சம்பந்தபட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறிப்படுவதாவது:- பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் உள்ள சாக்கிய என்ற கிராமத்தில் குஷ்மா தேவி என்ற பெண் பாஸ்வான் என்கிறவருக்கு சொந்தமான வயலை காலை கடனை கழிப்பதற்க்கு தினமும் பயன்படுத்தி வந்தார். இதை அறிந்த பாஸ்வான் குஷ்மா தேவியை கடுமையாக எச்சரித்தார் வந்தார். அவர் எச்சரிக்கையும் மீறி குஷ்மா தேவி காலை கடனை கழிப்பதற்காக வயலை பயன்படுத்து வந்தார். கோபம் அடைந்த பாஸ்வான் நேராக குஷ்மா தேவி வீட்டிற்கு சென்று அவருக்கு ப…

  2. ஒரே மரத்தில் 40 வகையான பழங்களை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள சைரகஸ் பல்கலைக்கழகத்தில் சாம் வான் அகேன் தாவரவியல் பேராசிரியராக உள்ளார். விஞ்ஞானியான சாம் வான் அகேன் மரத்தில் பல்வேறு வகையான பழங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த முயற்சி எப்படி என்றால் “ஒட்டு மாங்கனி’ என்ற முறையை பயன்படுத்தப்படுத்தி புளிப்பான மரத்தின் தண்டில், இனிப்பான மாம்பழத்தின் தண்டை ஒட்ட வைத்து சிறிது நாளில் புளிப்பான மாம்பழத்தை இனிப்பாக மாற்றுவர் அதேபோல்தான் இவரும் ஒரே மரத்தில் பல்வேறு மரங்களின் தண்டுகளை படிப்படியாக இணைத்தும், சில மாற்றங்களை செய்தும் வளர்த்தார். தற்போது அந்த மரத்தில் 40 வகையான பழங்கள் காய்த்து தொங்குன்றன. இந்த காட்சி அங்குள்…

  3. மூக்கில் சாதனை விடுமுறை நாட்களில் குறும்புத்தனமாக எதையாவது செய்வதே எமது வழமை. அவ்வாறிருக்கையில், இளைஞரொருவர் கணினியின் விசைப்பலகையில் அவரது மூக்கை வைத்து டைப் செய்து கிண்ணஸ் சாதனை படைத்ததுள்ளார். இந்தியாவின், ஹைதராபாத்தைச் சேர்ந்த குர்ஷித் ஹூசைன் என்ற 23 வயதுடைய இளைஞரே இவ்வாறான தொருசாதனையை நிலைநாட்டியுள்ளார். 10 விரலைவைத்தே டைப் செய்ய சிரமப்படும் பலரின் மத்தியில், அவரது மூக்கை பயன்படுத்தியது மாத்திரமல்லாது, ஒரு கண்ணை மூடிக்கொண்டு இவர் இச்செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார். இவர் 47.44 செக்கன்களில், 103 எழுத்துக்களை மூக்கின் மூலம் டைப் செய்துள்ளார். இதன்போது, இவரது கைகள் இரண்டும் பின்னோக்கி கட்டியுள்ளார். இவ்வாறான சாதனையை படைப்பதற்காக மூன்று வருடகாலத்தை இவர் செலவுச…

  4. காதலன் இறந்ததாக கிடைத்த தவறான தகவலால், திருமணத்தை வெறுத்து கன்னியாஸ்திரியாக மாற முடிவெடுத்த காதலி, 10 ஆண்டுகளுக்கு பின்னர் காதலனை கரம் பிடித்துள்ளார். உண்மை காதலுக்கு அழிவில்லை என்பதை நிரூபிக்கும் இந்த நெகிழ்ச்சி சம்பவம் தேனி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியை சேர்ந்த மரியசூசை மகன் ஜான்சன் (34). ஐடிஐ படித்தவர். டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2004ல் சிவகங்கை மாவட்டம் சாலைகிராமத்திற்கு வேலைக்கு சென்றார். அங்கு உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். பக்கத்து வீட்டில் வசித்து வந்த லீமா ரோஸ் (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. லீமாரோஸ் குடும்பத்தினர் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சாலைக…

  5. டோணியுடனான என் காதல் கறையை போன்றது: ராய் லக்ஷ்மி சென்னை: கிரிக்கெட் வீரர் டோணியுடனான காதல் உறவு கறை அல்லது வடுவை போன்றது என நடிகை ராய் லக்ஷ்மி தெரிவித்துள்ளார். நடிகை ராய் லக்ஷ்மி ஒரு காலத்தில் கிரிக்கெட் வீரர் டோணியை காதலித்தார். அதன் பிறகு அவரவர் பாதையை பார்த்து சென்றுவிட்டனர். மக்களும் அதை பற்றி மறந்தே போய்விட்டனர். இந்நிலையில் இது குறித்து ராய் லக்ஷ்மி தற்போது பேசியுள்ளார். அவர் கூறுகையில், டோணி, ராய் லக்ஷ்மியை பத்தி தான் ஊரே பேசுதாமே! டோணியுடனான என் உறவு கறை மற்றும் வடுவை போன்று மறைய பல காலம் ஆகும் போன்று. அது பற்றி தற்போது பேசும் அளவுக்கு மக்களுக்கு தெம்பும், பொறுமையும் உள்ளது ஆச்சரியமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் டிவி சேனல்கள் டோணியின் காதலிகள் பற்றி பேசுக…

  6. கோவை: கோவை மாவட்டத்தில் நாளை நடக்க உள்ளதாக கூறப்படும் "கீ"டிரா நிகழ்ச்சி காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மேலைநாட்டு கலாச்சாரம் வேகமாக பரவியுள்ளது.ஆடையை எடுத்துக்கொண்டாலும் சரி,வாழ்க்கை முறையை எடுத்துக்கொண்டாலும் அவர்களின் தாக்கம் நம்மிடம் உள்ளது. அவர்கள் இந்திய கலாச்சாரத்திற்கு மாறிவரும் நிலையில் நாம் அவர்கள் தூக்கி எறிந்த கலாச்சாரத்திற்க்கு திரும்புகிறோம் என்பதற்கு எராளமான உதாரணங்கள் உள்ளன.அந்த வகையை சார்ந்ததுதான் இது. இந்து மக்கள் கட்சி தமிழக மாநில தேர்தல் பிரிவு செயலாளர் பொன்.கார்த்திகேயன் என்வர் தனது முகநூல் பக்கத்தில், "கீ டிரா நடத்தினால், நடத்தப்படும் இடம் தரைமட்டமாக்கப்படும். கோவை செட்டிபாளையத்தில் அமைந்துள்ள கால்ப்கிளப்பில் டிசம்பர் 31 நள…

  7. கரூர்: கரூர், லாலாப்பேட்டை பகுதியில் கழுதைப்பால் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் பொதுமக்கள் முன்வந்து வாங்குகின்றனர். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நோய்கள் ஏற்பட்டு என்னதான் மருத்துவம் பார்த்தாலும், பாட்டி வைத்தியம் எனப்படும் கைவைத்தியதாலும் சில நோய்கள் சரியாகலாம். அந்த வகையில் கழுதை பாலுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் பொதுமக்களிடம் மவுசு இன்னும் இருக்கிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்திலிருந்து கழுதைகளுடன் வந்துள்ள ஒரு குழுவினர், மகாதானபுரம், ஒமாந்தூர், சிந்தலவாடி, லாலாப்பேட்டை ஆகிய பகுதிகளில் கழுதைப் பால் விற்பனை செய்து வருகின்றனர். ஒருசங்கு பால் ரூபாய் 30க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் கேட்ட உடன் சுடசுட…

  8. இத்தாலியில் இறந்த கர்ப்பிணி பெண் ஒருவர் மூன்று மாதங்கள் கழித்து குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இத்தாலியிலுள்ள மில்லன்(Milan) நகரின் சான் ரஃபேல்(San Raphel) என்னும் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்(36) ஒருவர் திடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். 6 மாத கர்ப்பிணியான அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்நிலையில் தீவிர ஆலோசனைக்கு பின் குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என தீர்மானித்துள்ளனர். இதன்பின் கடந்த 3 மாதங்களாக மருத்துவக் கருவிகள் மூலம் செயற்கையாக பெண்ணின் உடல் உறுப்புகளை இயங்கச்செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அவரின் வயிற்றில் இருந்து, ஆண் குழந்தையை ஆரோக்கியமாக வெளியில் எடுத்துள்ளனர் . - See more at: ht…

    • 0 replies
    • 1.5k views
  9. ஆந்திராவில் பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பேய் விரட்டும் சாமியார் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கமலாபுரத்தில், இளைஞர் ஒருவர் காவி உடை அணிந்து தன்னை சாமியார் என்று கூறி கொண்டு உலா வந்துள்ளார். அங்குள்ள அய்யப்பன் கோவிலின் பின்புறம் உள்ள அறையில் தங்கி இருந்த அவரை, கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசிக்க தொடங்கி உள்ளனர். தங்கள் குடும்ப பிரச்னை, மனக்குறைகளை பொதுமக்கள் அந்த சாமியாரிடம் கூறி நிவாரணம் கேட்டுள்ளனர். அவர்களிடம் உங்களுக்கு பேய் பிடித்துள்ளது. அதை கட்டிப்பிடி வைத்தியம் மூலம் நிவர்த்தி செய்கிறேன் என்று கூறி தன்னிடம் வந்த பெண்களை கட்டி அணைத்தும், முத்தம் கொடுத்தும் உள்ளார். இதனால் அவரை அந்தப் பகுதியில் 'மு…

  10. கனடா-நயாகராவோல்ஸ்சை சேர்ந்த 8-வயது சிறுவன் லியோன்ஸ் எனப்படும் பெரிய நிறுவனத்தில் பணிக்கமர்த்தப்பட்ட சம்பவம் மிகவும் சுவாரசியமாக அமைந்தது. இந்த தேர்வர் நல்ல தோற்றம், கண்ணியமானவர், சுத்தமான ஆடைஅணிந்தவராகவும் காணப்பட்டதுடன் வாடிக்கையாளர்களால் விருப்ப பட்டவராகவும் காணப்பட்டார். ஆனால் 3-ம்வகுப்பு கல்வி அறிவை மட்டுமே கொண்டிருந்தார். 8-வயது பிறைட்டன் றோஜர்ஸ் என்ற இந்த சிறுவன் திங்கள்கிழமை நயாகரா-ஒன்- த-லேக் பகுதியில் உள்ள லியோன்ஷ் தளபாட விற்பனை நிலையத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டார். பிறைட்ரன் ஒரு வகை மன இறுக்க நோயினால் பாதிக்கப்பட்டவர் தனது 3-வயது சகோதரிக்கு Disney Frozen Kid’s Recliner என்ற கதிரையை வாங்க நினைத்தார். தாயார் குழியலறையில் இருக்கும் சமயம் பார்த்து அவரது கைத்த…

  11. விசித்திரமான எண்ணங்கள் கொண்டவர்கள் என்றால் சீன மக்களைக் கூறலாம். விசித்திரமான வடிவமைப்பிலான உணவகங்களுக்கு, சீனாவின் பெய்ஜிங் மிகவும் பிரபலமானது. 80 களில் செயல்பட்ட பள்ளிகளைப் போன்று ஒரு உணவகத்திற்கு செல்வோர், தங்கள் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும். ரிகாவில் உள்ள மருத்துவமனை போன்ற உணவகத்தில் பரிமாறுபவர்கள், டாக்டர்கள் மற்றும் நர்சுகளைப் போன்று உடையணிந்து இருப்பர். இங்கு வழங்கப்படும் உணவுகள், மனித உடல் உறுப்புகளைப் போன்ற பாத்திரங்களில் பரிமாறப்படுகிறது. தற்போது, புதிதாக சீனாவின் ஷாங்ஜி என்ற பகுதியில் தொடங்கப்பட்டுள்ள கழிப்பறை உணவகத்தில், மேற்கத்திய கழிப்பறை (Western Toilet) வடிவில் நாற்காலிகளும், கை கழுவும் வாஷ்பேசினைப் போன்று மேஜையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கழிப்பறைய…

  12. ஆந்திராவில், 'கட்டிப்பிடி முத்த' சாமியார் கைது! மனநல மையத்தில் சேர்க்க கோர்ட் உத்தரவு! கடப்பா: ஆந்திராவில் பெண்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அருள்வாக்கு கூறிவந்த டுபாக்கூர் சாமியாரை போலீசார் கைது செய்தனர். அவரை மனநிலை மையத்தில் சேர்க்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கமலாபுரம் என்ற ஊரில் இளைஞர் ஒருவர் காவி உடை அணிந்து தன்னை சாமியார் என்று கூறிக்கொண்டு உலா வந்தார். தங்கள் குடும்ப பிரச்சனை, மனக்குறைகள் போன்றவற்றை சாமியாரிடம் கூறி நிவாரணம் கேட்ட பெண்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து "அருள்வாக்கு" கூறி வந்திருக்கிறார். இந்த போலி சாமியார் பற்றி போலீசுக்கு ஏராளமான புகார்கள் சென்றன. சாமியார் பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் …

  13. சுனாமியில் காணாமல் போன மகள், நிச்சயம் ஒரு நாள் கிடைப்பார் என நம்பிக்கையுடன் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக தந்தை தேடி வருகிறார். குஜராத் மாநிலம் பூஜ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி சங்கர் (44). இந்திய விமானப்படை அதிகாரியான சங்கர் சுனாமி ஏற்பட்ட சமயத்தில் கார் நிக்கோபர் தீவில் தனது மனைவி மற்றும் அபூர்வா (8), அருண் (1) என இரண்டு குழந்தைகளுடன் குடும்பமாக இருந்துள்ளார். என்ன நடக்கிறது என யூகிப்பதற்கு முன்னதாகவே சுனாமி அலை அவர்களது குடும்பத்தைப் பிரித்தது. அலையில் சிக்கி சிறிது நேரம் கழித்து தான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறோம் என்ற நிதானத்திற்கு சங்கர் வந்தபோது, அவரது மனைவி இடுப்பில் மகனை வைத்தபடி நண்பர் ஒருவரால் காப்பாற்றப்பட்டு அழைத்து வரப்பட்டார். ஆனாலும், அச்சிறு…

  14. நத்தம்: திண்டுக்கல்லில் குழந்தையின் பாலினத்தை முன்னரே ஸ்கேன் மூலம் தெரிவித்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் அருகே நத்தம் அவுட்டரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைகளை கண்டறியும் ஸ்கேன் பிரிவு செயல்பட்டு வந்தது. இதில் பிறக்கப்போவது ஆணா, பெண்ணா என்பதை பார்த்து கர்ப்பிணி பெண்களுக்கு பாலினம் குறித்து தகவல் தெரிவிப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மாவட்ட சட்ட அமலாக்க பிரிவு இணை இயக்குநர் ரவிகலா மேற்பார்வையில் அந்த மருத்துவமனையை சோதனையிடப்பட்டது. அப்போது அங்கு கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பார்க்கும் தனி அறை இருப்பது கண்டறியப்பட்டு அந்த அறைக்கு தாசில்தார் கேசவன் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் உ…

  15. 112 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய முதியவர்! 2014-12-24 11:09:55 யாழில் 112 வய­தினை கடந்த ஒருவர் ஆரோக்­கி­ய­மாக வாழ்ந்து வரு­கின்றார். நவாலி தெற்கு மானிப்­பாயை சேர்ந்த கண­பதி காத்தி என்­பவர் கடந்த 1902 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி பிறந்தார். இதன்­படி கடந்த மாதம் தனது 112 ஆவது பிறந்த தினத்­தி­னையும் கொண்­டா­டினார். எவ­ரு­டைய உத­வியும் இன்றி தனது தேவை­களைத் தானே பூர்த்தி செய்து கொண்டும் இன்றும் தடு­மா­றாத உட­லு­டனும் உளத்­து­டனும் சாதா­ர­ண­மாக நட­மாடித் திரி­கின்றார். எந்­த­வொரு போதைப் பொரு­ளுக்கும் அடி­மை­யா­காமல் இருப்பதுடன் சிறந்த உணவுப் பழக்­கமும் தள­ராத உழைப்­புமே தனது நீண்ட ஆயு­ளுக்கு காரணம் என அவர் தெரிவித்து இருந்தார். - See more at: http://www.met…

  16. பேஸ்புக் பாட்டி அன்னா ஸ்டோஹர், தனது 114 வது வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். அமெரிக்காவின் மின்னேசோட்டா பகுதியில் வசித்து வந்த பாட்டி அன்னா மிகவும் வயதான பேஸ்புக் பயனாளியாக கவனத்தை ஈர்த்தவர். மேலும் பேஸ்புக்கில் இணைவதற்காக பாட்டி தனது வயதை குறைத்து சொல்லியதற்காக பரபரப்பை ஏற்படுத்தினார். பேஸ்புக்கின் வயது கொள்கைக்கு சவால் விட்டவராகவும் வர்ணிக்கப்பட்ட இந்த பாட்டி, கடந்த ஞாயிறு அன்று இயற்கை எய்தினார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னா ஸ்டோஹர் 1900 ம் ஆண்டு பிறந்தவர். தனது 87 வயது மகனால் ஐபேட் மற்றும் இணைய உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட பாட்டி, கடந்த அக்டோபர் மாதம் ஃபேஸ்புக்கில் இணைய விரும்பினார். ஆனால் பேஸ்புக் விதிகளின் படி 1905…

  17. எப்படி தற்கொலை முயற்சி தடுக்கப்படுகிறது? https://www.facebook.com/video/video.php?v=687817611273705

  18. அட பாவிகளா 100,000 ஸ்பேர் பார்ட்ஸில ஓடாத பிளேன் இந்த பாட்டிலையா ஓடப்போகுது!!!!

    • 0 replies
    • 835 views
  19. கான்பூர்: உத்தரப்பிரதேச ரயில் நிலையம் ஒன்றில், விபத்தில் சிக்கிய குரங்கு ஒன்றை, மற்றொரு குரங்கு காப்பாற்றி மனிதர்களுக்கு "மனிதம்" பற்றிய படிப்பினையை உணர்த்தியுள்ளன அந்த வாயில்லா ஜீவன்கள். கான்பூர் ரயில் நிலையத்தில் உயர் அழுத்த மின்கம்பியில் அடிபட்டு தண்டவாளத்தின் இடையே குரங்கு ஒன்று தூக்கி வீசப்பட்டது. மயக்கமடைந்து கிடந்த அந்த குரங்கை மீட்க, அதனுடன் சுற்றித்திரிந்த மற்றொரு குரங்கு ஒன்று நீண்ட நேரமாக போராடியது. மீட்கமுடியாமல் தவிப்பு: தண்டவாளத்திற்கிடையே சிக்கி கிடந்த குரங்கை, பல முறை முயற்சித்தும் சக குரங்கால் மீட்க முடியவில்லை. மயக்கம் தெளிய உதவி: ஆனாலும், மனம்தளராமல் மயக்கமுற்று கிடந்த குரங்கை சக குரங்கு காப்பாற்றியது. மயக்கம் தெளிவதற்காக அந…

  20. 111வது கிறிஸ்துமஸை கொண்டாடும் ஐரோப்பாவின் வயதான மனிதர் நஸர் சிங் லண்டன்: ஐரோப்பாவின் வயதான மனிதரான பஞ்சாப்பில் பிறந்த நஸர் சிங் வரும் 25ம் தேதி 111வது கிறிஸ்துமஸை கொண்டாட உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தநவர் நஸர் சிங்(110). பஞ்சாபில் விவசாயம் செய்து வந்த அவர் 1965ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அவர் வடக்கு இங்கிலாந்தில் உள்ள சண்டர்லேண்டில் தனது மகன் செயின் சிங்குடன்(61) வசித்து வருகிறார். நஸர் சிங் தான் ஐரோப்பாவிலேயே வயதான மனிதர். 111வது கிறிஸ்துமஸை கொண்டாடும் ஐரோப்பாவின் வயதான மனிதர் ஜப்பானைச் சேர்ந்த 111 வயதாகும் சகாரி மோமோய் மற்றும் யசுதாரோ கொய்தே ஆகியோர் தான் நஸர் சிங்கை விட மூத்தவர்கள் ஆவர். இந்நிலையில் நஸர் சிங் இந்த ஆண்டு 11…

  21. ரயில்வே கேண்டீன் பிரியாணியில் செத்த எலி!... ஐயப்ப பக்தர்கள் கிலி!! விஜயவாடா: ஒரு படத்தில் கார்த்திக்கும் கவுண்டமணியும் திருமணத்தை நிறுத்த விருந்து சாப்பாட்டில் செங்கல்லை வைத்துவிட்டு கலவரம் செய்ய நினைப்பார்கள். அப்போது பக்கத்தில் சாப்பிடும் ஒருவர் ஏய், சாப்பாட்ட செத்த எலி கிடந்துச்சு... அதையே தூக்கி தூரப்போட்டுட்டு தூர் வாறிட்டு இருக்கேன். நீ என்ன கல்லு கெடக்கிறேன்னு சொல்ற என்று கூலாக சொல்லிவிட்டு சாப்பிடுவார். அதுபோல ஒரு சம்பவம் நிஜமாகவே ரயிலில் சென்ற ஐயப்ப பக்தர்களுக்கு நடந்துள்ளது. சபரிமலைக்கு புனித பயணம் மேற்கொண்டுவிட்டு திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஊர் திரும்பி பக்தர்கள் காய்கறி பிரியாணி ஆர்டர் செய்தனர். . அவர்களுக்கு எலி பிரியாணியை கொடுத்து கிலியை ஏற்…

  22. மரணம் அடைந்த ஒருவரின் உடலை எரித்து வரும் சாம்பலை, விண்ணில் பரப்ப அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்துள்ளது. அமெரிக்காவில் உள்ள லெக்சிங்டன் மாகாணத்தில் உள்ள கெண்டக்கி என்ற நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று இந்த சேவையைத் தொடங்கியுள்ளது. இந்நிறுவனம் இறந்தவர்களின் சாம்பலைப் பெற்றுக்கொண்டு ராட்சத பலூன் மூலம் விண்ணில் எடுத்து செல்கிறது. பின்னர் அந்த சாம்பல் 75ஆயிரம் அடி உயரத்திற்கு சென்றவுடன், ரிமோட் மூலம் பலூனில் உள்ள சாம்பல் விண்ணில் தூவும் ஒரு தொழில்நுட்ப முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் இதற்கென ஒரு குறிப்பிட்டத் தொகை வசூல் செய்கிறது. பொதுமக்கள், இதனால் இறந்துபோன உறவினர் இதனால் நேராக சொர்க்கத்திற்கு சென்றுவிடுவார்கள் என்பது ஒரு நம்புகிறா…

  23. பிச்சை எடுக்கும் காவல் துறை !! https://www.facebook.com/video/video.php?v=755153911204794

  24. டெல்லி: மும்பை தாக்குதலின் சூத்திரதாரியான ஷகி உர் ரஹ்மான் லக்வி சிறையில் இருந்தாலும் சிறப்பு சலுகைகளுடன் சொகுசாக வாழ்ந்து அங்கே "குடும்பம் நடத்தி" "குழந்தைக்கு தந்தையான"தாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி மும்பையில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 166 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தின் மூளையாக இருந்த லஷ்கர் இ தொய்பாவின் ஹபீஸ் சயீத். இச்சதியை செயல்படுத்தியது ஷகி உர் ரஹ்மான் லக்வி. இந்தியாவின் நீண்ட வலியுறுத்தலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் நடைபெற்ற 'மும்பை தாக்குதல் வழக்கில்' லக்வி சேர்க்கப்பட்டு 2009 ஆம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகிறான். அப்போது லக்வி, ஒரு குழந்தைக்கு தந்தை என்ற தகவல் ஏதும் இல்லை. பின்னர் 201…

  25. இணையத்தளத்தில் SEX என்ற வார்த்தையை அதிகமாக தேடும் நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக கூகுல் தெரிவித்துள்ளது. இதன்படி 2011, 2012, 2013, மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் கூகுல் இணையத்தளத்தில் SEX சொல்லை அதிகமான தேடிய நாடு இலங்கையாகும். இலங்கையின் மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலேயே இந்த SEX என்ற சொல் கூகுலில் அதிகமாக தேடப்பட்டுள்ளது. இதேவேளை இந்த பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/136092--sex-.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.