Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. மயூரா திஸாநாயக்க என்ற சிங்களவர் தான் வேலை செய்யும் சேர்விஸ் ஸ்டேஷனில் திருட முட்பட்ட திருடர்களை அடித்து விரட்டியுள்ளார். மயூரவின் கடையில் திருட முட்பட்டவர்களுக்கு மயூரா மார்ஷியல் ஆர்ட்ஸ் சம்பியன் என்ற தகவல் தெரியாது. வங்கியில் இருந்து மயூராவின் நன்பர் பணத்துடன் திரும்பும் போது அதை பறிக்க முட்பட்டுள்ளனர். மயூரா அவர்களை துவம்சம் செய்து ஓட ஓட விரட்டியுள்ளார். ஓடும் போது ஒருவரை விட்டு விட்டு தம்முடைய SUV இல் ஓடியுள்ளார்கள். டெக்ஸாசில் நடந்த இந்த சம்பவத்தை வாடிக்கையாளர்கள் ரசித்துள்ளனர். இணைப்பில் காணொலி உள்ளது. http://www.news.com.au/world/mma-attendant-turns-tables-on-thieves-with-violent-beating/story-fndir2ev-1227004881933

    • 4 replies
    • 609 views
  2. சீனாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன், மருத்துவமனையில் சிகிச்சைக்கு பலனின்று இறந்தவுடன் அந்த சிறுவனுக்கு அந்த மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள் அனைவரும் சிறுவனது இறந்த உடலுக்கு முன் நின்று தலை வணங்கினர். குறித்த சிறுவன் இறப்பதற்கு முன் தனது உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் தானமாக கொடுத்து அதன்மூலம் பல உயிர்கள் வாழ்வதற்கு காரணமாக இருந்தமையினாலேயே டாக்டர்கள் தலைவணங்கி மரியாதை செய்துள்ளனர். சீனாவில் உள்ள சென்லேன் என்ற பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் லியாங் யாவோயி புற்று நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் கடந்த ஜூன மாதம் 6ஆம் திகதி அனுமதிக்கப்பட்டான். அவனுடைய உடல் நிலையை ஆய்வு செய்த டாக்டர்கள், நோய் மிகவும் முற்றிவிட்டதாகவும்,…

  3. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரண்டு தாய்மார் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆறு குழந்தைகளை பிரசவித்துள்ளனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் முதன்முறையாக அடுத்தடுத்த இரு தினங்களில் ஆறு குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன. அம்பாறை ஆலையடிவேம்பு, நாவற்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்குமார் நிசாந்தினி என்ற தாய் ஒரே சூலில் மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளார். அறுவைச் சிகிச்சை மூலமே குறித்த குழந்தைகள் பிரசவிக்கப்பட்டன என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் மா.திருக்குமரன் தெரிவித்தார். இரு பெண்குழந்தைகளும் ஓர் ஆண்குழந்தையும் பிரசவிக்கப்பட்டன என்றும் குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இதேபோன்று ஏறாவூ…

  4. உடல் உறவுக்கு மறுத்து, மனைவி சொன்ன காரணங்களை.... "எக்ஸெல் ஷீட்"டில் எழுதி வைத்த கணவர்! லண்டன்: தனது மனைவியை உறவுக்கு அழைத்தபோது அவர் மறுத்ததையும், அதற்காக அவர் சொன்ன காரணங்களையும் ஒரு எக்ஸெல் ஷீட்டில் எழுதி வைத்துள்ளார் கணவர். அவரது இந்த செயலை மனைவி ஆன்லைனில் போட்டு அம்பலப்படுத்தி விட்டார். கணவரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதனால் வெட்கமாகிப் போன கணவர் தற்போது இந்த எக்ஸெல் ஷீட்டை அழித்து விட்டாராம். உறவுக்கு மறுத்தால் இப்படியா அதைக் குறித்து வைத்து மனைவியை இழிவுபடுத்துவது, அதை விட வேறு பல வழிகளில் அவரிடம் பேசி அவரை சகஜமாக்கி பிரச்சினையைத் தீர்த்திருக்கலாமே என்று பலரும் கணவருக்கு அட்வைஸ் மழை பொழிந்து வருகின்றனர்.…

    • 11 replies
    • 2.8k views
  5. மனிதரிடம் உள்ள சில விசேடமான குணங்களைப் போன்று நாய்களிடமும் இருப்பது கலிபோர்னியா பல்கலைக் கழக மாணவர்களின் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதாவது சில பிரத்தியேகமான பரிசோதனைகளில் நாய்கள் பொறாமைக் குணத்தை (jealous) வெளிப்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டுள்ளன. உதாரணமாக சில நாய்களின் உரிமையாளர்கள் தமது வளர்ப்பு நாய்கள் முன்னிலையில் போலியான பொம்மை நாய்க்குத் தமது பாசத்தை வெளிப்படுத்துவது போன்று நடிக்கும் போது நாய்கள் வித்தியாசமாகத் தமது பொறாமைக் குணத்தை வெளிப்படுத்துவது போல் நடந்து கொண்டன. அதாவது நாயைப் போன்று குரைக்கக் கூடிய அசையும் பொம்மை நாய் மீது பாசத்தைக் காட்டுவது போன்று நடிக்கும் போது வளர்ப்பு நாய்கள் உரிமையாளருக்கும் பொம்மைக்கும் இடையே வந்து குறித்த செய்கையைத் தடுத…

  6. இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் கிரவுன் கோர்ட்டில் சிறுமி பாலியல் வல்லுறவு வழக்கு நடந்து கொண்டிருந்தது. அப்போது சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடந்தது. ஆனால், அந்த விசாரணையின் போது இருக்கையில் அமர்ந்து இருந்த நீதிபதி அசதியில் நன்றாக அயர்ந்து தூங்கி விட்டார். இதனால் வழக்கு விசாரணையை சரிவர பதிவு செய்ய முடியவில்லை. இதுபற்றி புகார் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அந்த நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோர்ட்டில் தூங்கிய நீதிபதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=113873&category=WorldNews&language=tamil

  7. மொபைலை நம்பினோர் கைவிடப்படார். - முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கிடம் கேட்டால் இப்படி தான் சொல்வார். அதுவும் சந்தோஷமாகவே சொல்வார். ஏனெனில் மொபைல் மூலம் விளம்பர வருவாய் தான் பேஸ்புக்கிற்கு அள்ளிக்கொடுத்திருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட பேஸ்புக்கின் இரண்டாம் காலாண்டு நிதி நிலை முடிவுகள் படி பேஸ்புக்கின் வருவாய் 2.91 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இணையான காலாண்டு வருவாயான 1.81 பில்லியன் டாலரை விட இது 61 சதவிதம் அதிகம் என்பது மட்டும் அல்ல, இதில் 62 சதவீதம் அதாவது 1.66 பில்லியன் டாலர் மொபைல் மூலமான விளம்பர வருவாயாகும். ஆக மொபைல் வாரிக்கொடுத்ததால் பேஸ்புக் வருவாயை அள்ளியிருக்கிறது. இதில் விஷேசம் என்ன என்றால், பங்குச்ச…

  8. இன்றைய உலகம் செல்போனுக்குள் சுருங்கிவிட்டது என்று கூறிவிடலாம். அந்த அளவுக்கு அனைத்து வசதிகளும் செல்போனில் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளன. தற்போது இது இன்னும் ஒருபடி மேலே சென்று கொசுவை விரட்டக் கூட அப்ளிகேஷன் வந்துவிட்டது. தற்போது விற்பனையாகி வரும் பல்வேறு கொசு விரட்டிகளாலும் கொசுக் களை கட்டுப்படுத்த முடிவதில்லை என்று நம்மில் பலர் குறைபட்டு கொள்வதை கேட்கிறோம். தற்போது அதற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள இந்த புதிய கொசு விரட்டி எனப்படும் புதிய அப்ளிகேஷனை ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்து அதனை இயக்கினால், அதில் இருந்து வெளியாகும் உயர் அதிர்வெண் கொண்ட சப்த அலைகள் கொசுக்களை ஓட ஓட விரட்டி விடும். கொசுக்களுக்கு பிடிக்காத இந்த அல்ட்ரா சவுண்டால…

  9. காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் பலியான கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த சிசு அறுவை சிகிச்சை மூலம் மீட்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் 850க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இவர்களில் 100க்கும் மேற்பட்டோர் பிஞ்சுக் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. உக்கிரமாக நடக்கும் இந்தப் போரில் நேற்று மத்திய காஸாவின் டெயிட் அல் பலாஹ் நகரம் மீது இஸ்ரேல் ராணுவ விமானங்கள் குண்டு வீசித் தாக்கின. இத்தாக்குதலில் கட்டிட இடிபாடிகளில் சிக்கி 23 வயதான நிறைமாதமான கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்தார். ஆனால், குழந்தை உயிருடன் இருந்ததை அ…

  10. சிறுவனின் வாயிலிருந்து 232 பற்களை அகற்றி இந்திய வைத்தியர்கள் சாதனை இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவரின் வாயிலிருந்து 232 பற்களை அகற்றி மும்பை வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆஷிக் கவாரி என்ற 17 வயதான சிறுவனில் வாயிலிருந்தே 232 பற்களை வைத்தியர்கள் அகற்றியுள்ளார். ஆஷிக் கடந்த 18 மாதங்களாக வாய் வீங்கிய நிலையில் அவதிப்பட்டுள்ளார். ஆனால் சிறுவனின் நிலைமைக்கான காரணத்தினை உள்ளுர் வைத்தியர்களால் கண்டறிய முடிவில்லை. இந்நிலையில் வலது தாடை வீங்கிய நிலையில் மும்பையிலுள்ள ஜே.ஜே வைத்தியசாலையின் பல் மருத்து சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கு சிறுவனின் அரியவகை சிக்கல் நிலைக்கு பற்கள் போன்ற அமைப்பு கட்டியாக வளர்வது காரணமென அடையாளம் காணப்பட்டதாக வைத்தியர் சுன…

  11. பாலங்களை விற்பனை செய்யும் அமெரிக்கா தீவுகள் விற்பனை, நகரங்கள் மற்றும் கிராமங்கள் விற்பனை செய்வதைக் கூட அறிந்திருப்பீர்கள். ஆனால் ஒரு நாட்டின் பாலங்கள் விற்பனை செய்யப்படுவதை அறிவீர்களா? அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள 11 பாலங்கள் விற்பனை செய்ய அம்மாநிலத்தின் போக்குவரத்து திணைக்களம் முடிவு செய்துள்ளது. பென்சில்வேனியாவில் வரலாற்று முக்கியத்துவமிக்க பழைமையான பாலங்களே விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. தற்போதுள்ள நவீன போக்குவரத்துக்கு இப்பாலங்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளதே இதற்கு காரணம். 100 வருடங்களுக்கு முற்பட்ட 252 அடி நீளமும் 16 அடி அகலமான பாலம் உள்ளிட்ட ஏனைய பழைமையான பாலங்களும் இவற்றில் அடங்குகின்றன. இதனால் இப்பாலங்களை அழிக்காமல் பாதுகாப்பதற்கு விரும்ப…

  12. சவூதி அரேபியாவில் 12 லட்சம் ரியால் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடி) அளவுக்கு பணம் வைத்திருந்த பிச்சைக்காரரை போலீஸார் கைது செய்தனர். சவூதி அரேபியாவில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு நபரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் இருப்பது தெரிய வந்தது. அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக சவூதியில் தங்கியுள்ளனர். அந்த பிச்சைக்காரரின் வீட்டுக்குச் சென்ற போலீஸார் அங்கிருந்து 12 லட்சம் ரியால் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடி) ரொக்கத்தைக் கைப்பற்றினர். அந்தப் பிச்சைக்காரரின் குடும்பம் சவூதியில் அடுக்குமாடிக் குடியிருப்ப…

  13. வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் புதிய வகையான மீன் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (22) அகப்பட்டுள்ளது. வாழைச்சேனையைச் சேர்ந்த முஹைதீன் பாவா நிஸார் என்பவரது படகில் சென்ற மீனவர்களின் வலையிலேயே இந்த மீன் அகப்பட்டுள்ளது. கறுப்பு மற்றும் சாம்பல் நிறமும் கொண்ட இந்த மீன் 07.5 கிலோகிராம் எடையும் 04 அடி நீளமும் உடையதாகக் காணப்படுகின்றதென படகு உரிமையாளர் முஹைதீன் பாவா நிஸார் தெரிவித்தார். இப்புதிய வகை மீன் தொடர்பில் பிரதேச கடற்றொழில் பரிசோதகருக்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் கூறினார். (எம்.எம்.அனாம்) http://tamil.dailymirror.lk/--main/119082-2014-07-22-08-45-00.html

    • 2 replies
    • 650 views
  14. எருமை மாட்டையும், விடாத காமுகன்..... ஆந்திராவில் ஒரு அக்கிரமம்! அடிலாபாத்: ஆந்திராவின் பொரந்துலா கிராமத்தைச் சேர்ந்த 43 வயதான நபர் எருமை மாட்டுடன் உறவு கொண்டு கைதாகியுள்ளார். அந்த "மனிதனின்" பெயர் நீலம் லச்சையா. இவர் கரீம் நகர் மாவட்ட், திம்மப்பூர் தாலுகாவுக்குட்பட்ட பொரந்துலா கிராமத்தைச் சேர்ந்தவர். சனிக்கிழமை இவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். எருமை மாட்டுடன் இவர், உடல் ரீதியான உறவு கொண்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட மாட்டின் உரிமையாளர் பொஜ்ஜ பாலையா என்பவர் இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுத்தார். அதில் தனது மாட்டிடம், லச்சையா தவறான உறவு வைத்துக் கொண்டதாக கூறியிருந்தார். இதையடுத்து லச்சையாவைப் போலீஸார் கைது செய்தனர். "சம்பவத்தை" நேரில் …

  15. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் தெலுங்கானா, ஆந்திரா என 2 மாநிலமாக பிரிக்கப்பட்டது. தலைநகர் ஐதராபாத் தெலுங்கானாவுடன் சேர்க்கப்பட்டதால் ஆந்திராவுக்கு புதிய தலைநகர் உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. புதிய தலைநகரை மத்திய அரசு குழு ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் புதிய தலைநகர் சிங்கப்பூர் போன்று அமைக்கப்படும் என்று முதல் - மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்து உள்ளார். இதற்காக 2 அமைச்சர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் விரைவில் சிங்கப்பூர் செல்ல உள்ளனர். புதிய தலைநகர் அமைக்க பொதுமக்கள், தொழில் அதிபர்கள், வியாபாரிகள் தாராளமாக நிதி வழங்கும்படி சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார். இதற்காக தனியாக வங்கி கணக்கு ஒன்றும் தொடங்கி உள்ளார். இதுத…

  16. பிரபல காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை கருவில் அழிக்க முயற்சி செய்ததாக அவரது தாய் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். உலகில் பிரபலமான காற்பந்து வீரர்களின் பட்டியலில் கிறிஸ்டியானொ ரொனால்டோவும் உள்ளார். அவர் போர்த்துக்கல் மற்றும் ரியல் மாட்ரிட் கிளப் அணிகளுக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் அவரை கருவில் சுமந்த போதே அழித்து விட வேண்டும் என்று முயற்சித்தேன் என அவரது தாயார் டோலோரஸ் அவிரோ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ‘துணிச்சலான தாயார்’ என்ற பெயரில் டோலோரஸ் சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் ‘ரொனால்டோவை கருவில் இருக்கும் போதே அழிக்க நினைத்தேன். கருவை கலைப்பதற்கு மருத்துவரை அணுகியதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் முடியாது என்று மறுத்த…

  17. ஜேர்மனியில் சைக்கிள்கள் அதிகளவில் திருடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் ஜேர்மனியில் சுமார் 3,00,000க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வியாபாரம் போல் மிகுதியாக நடைபெறும் இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கணிசமானவர்களை மட்டுமே பொலிசார் பிடித்துள்ளனர். மேலும் ஜேர்மன் தலைநகர் பெர்லினில் நாள் ஒன்றிற்கு மட்டும் 7 மிதிவண்டிகள் திருடப்படுவதாகவும் ஆனால் பலர் புகார் கொடுக்க முன் வருவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் 52 சதவீத மக்கள் சைக்கிள்கள் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/News_More.php?id=623513239119466080

  18. சீனாவின் அதிகாரி ஒருவர் தனது வீட்டின் முன்னால் உள்ள புத்தர் சிலையில் ஆபாச திரைப்பட சீடிக்களையும், பணத்தையும் பதுக்கிவைத்துள்ளார். சீனாவின் பிரதமர் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் மீது கடுமையாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் சீனாவின் மங்கோலியா உள் பகுதியை சேர்ந்த அரசு அதிகாரி வு ஷிஷோங் (63)என்ற கம்யூனிஸ்டு தலைவருக்கு 34 சொசுகு பங்காளாக்கள் இருப்பதும், அதில் ஒன்று கனடாவில் வாங்கபட்டு உள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவரை கைது செய்த பொலிசார் நடத்திய விசாரணையில், இவர் தினமும் வீட்டின் முன் பிரார்த்தனை செய்யும் புத்தர் சிலையின் அடியில் ரகசிய அறை ஒன்று அமைத்துள்ளார் என்றும் அதில் தான் ஊழல் செய்து சேர்த்த 2,000 பணக்கட்டுகள், தங்க கட்டிகள்,…

  19. பசுபிக் சமுத்திரத்தில் பிரான்ஸின் கட்டுப்பாட்டிலுள்ள தஹிட்டி தீவுகளிலுள்ள மக்களின் பாரம்பரிய விளையாட்டு விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. தஹிட்டியின் தலைநகர் பப்பீட்டேயில் நடைபெற்ற இவ்விளையாட்டு விழாவில், தென்னை மரம் ஏறுதல், தேங்காய் உரித்தல், பழங்கள் மற்றும் மரக்கறிகளை சுமந்து ஓடுதல், ஈட்டி எறிதல், 100 கிலோ எடையுள்ள பாரகல்லைத் தூக்குதல் உட்பட பல்வேறு வகை விளையாட்டுப் போட்டிகள் இவ்விழாவில் இடம்பெற்றன. தஹிட்டியின் 5 தீவுகளைச் சேர்ந்த 400 இற்கும் அதிகமான போட்டியாளர்கள் இவ்விளையாட்டு விழாவில் பங்குபற்றினர். - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=6198#sthash.KAgdZp50.dpuf

  20. 2013-14 நிதி ஆண்டில், வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் நடத்திய தேடுதல் வேட்டைகளில் ரூ.10 ஆயிரத்து 791 கோடியே 63 லட்சம் கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பல்வேறு தனி நபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் நடத்திய ஆய்வுகளில் கணக்கில் காட்டப்படாத சட்ட விரோதப்பணம் ரூ.90 ஆயிரத்து 390 கோடியே 71 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆக ஒரே நிதி ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் ரூ.1 லட்சத்து ஓராயிரத்து 182 கோடி ஆகும். இதே நிதி ஆண்டில், நகைகள், நிலைத்த வைப்புகள், ரொக்கம் ரூ.807 கோடி அளவுக்கு கைப்பற்றப்பட்டுள்ளன. http://www.seithy.com/breifNews.php?newsID=113264&category=IndianNews&language=tamil

  21. செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் கன்னியம்மன் நகர் விரிவாக்கம் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் மறு சுழற்சி தொழிற்சாலைகள் உள்ளன.அதில் ஒரு தொழிற்சாலையில் 2 நாய்கள் தலா 5 குட்டி என பத்து குட்டிகள் போட்டன. கடந்த ஜூலை13ந்தேதி ஞாயிற்று கிழமை என்பதால் தொழிற்சாலை விடுமுறை. இதை அடுத்த அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் வடமாநிலமான பீகாரை சேர்ந்த இளைஞர்கள் மது போதையில் இருந்தனர். அதில் ஒருவர் குட்டி நாய்களை தொட முயன்றபோது, அருகில் இருந்த குட்டிகளின் தாய் இளைஞரை கடித்தது. இந்த சம்பவத்தால் பயந்து போன நாய்கடி வாங்கிய சஞ்சய்(25) மற்றும் அவனது நண்பன் சைலேந்தர்(30) ஆகிய இருவரும் நாய்களை செங்கல்களால் அடிக்க முயன்றனர். ஆனாலும் அந்த நாய்கள் தப்பி ஓடின. இருப்பினும் போதையில் இருந்த ஆ…

  22. ஓடும் பஸ்சில் பாட்டு பாடி தொல்லை கொடுக்கும் நபர்களை கட்டுப்படுத்த கனடாவில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு பஸ்சில் பயணம் செய்பவர்கள் பாட்டு பாடினால் 5 ஆயிரம் டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்று கனடாவில் உள்ள வின்னிபெக் நகர நிர்வாகம் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கனடா நகரங்களில் சிறிய இசைக்குழுவினர் அடிக்கடி பொது இடங்களில் பாடியபடி பயணம் செய்வது வழக்கம். தற்போது இந்த உத்தரவின் மூலம் அதற்கு முட்டு கட்டை விழுந்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நகர வாசி ஒருவர் கூறுகையில்: நான் தினமும் வேலைக்கு பஸ்சில்தான் பயணம் செய்வேன். அப்போது டிரைவர் விசிலடித்தபடியோ, பாட்டு பாடியபடியோ உற்சாகமாக பேருந்தை ஓட்டி செல்வார். இதனை ப…

  23. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் பிரான்ஸில் உள்ள பாலம் ஒன்றை திருமணம் செய்து கொண்டு முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய சம்பவம் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரோஸ் என்ற பெண் கடந்த 10 ஆண்டுகளாக பாலத்தில் இருந்து வரும் அதிர்வுகளை வைத்து இசை உருவாக்கம் செய்யும் முயற்சியில் உலகெங்கும் ஆய்வுகள் நடத்திவருகிறார். இவர் பிரான்ஸ் சென்றபோது, அங்கு உள்ள லீ பாண்ட் டு டியாமல் பாலத்தின் மீது மிகுந்த காதல் கொண்டு கடந்த ஆண்டு அந்த பாலத்தை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இவர் தற்போது, கணவனான பாலத்துடன் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளார். இதுகுறித்து ரோஸ் கூறுகையில், 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பாலத்தை பிரிந்து வாழ முடியவில்லை. இதன…

  24. அம்மா..அம்மா... என அழுத இரு குழந்தைகள் அடித்துக் கொலை; குடிகார தந்தை கைது தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகிலுள்ள பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் சதீஷ்குமார் (வயது-28). லாரி ஓட்டுநராக இருக்கும் இவர் மனைவி பெயர் கோகிலா (வயது-25). இவர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தமிழ்ச்செல்வன் (வயது-4), மோகனப் பிரியா (வயது-2), தெய்வானை (வயது-1) என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். வழக்கமாக மது அருந்தும் பழக்கமுடைய சதீஷ்குமார் சரிவர வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால், கனவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த கோகிலா, தனது குழந்தைகளுடன் காவாக்காட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்ட…

  25. மெக்சிகோவை சேர்ந்தவர் கிம்பரலி கோர்டான் இவரது மனைவி கெண்ட்ரா வில்லியனுவா, இவர்கள் கடந்த 2013 ஆண்டு ஜூலை மாதம் 4 ந்தேதி திடீர் என பெய்த புயல் மழை காரணமாக ஒரு மரத்திற்கு கீழ் ஒதுங்கினர். வில்லியனுவா அப்போது கர்ப்பமாக இருந்தார்.அப்போது மின்னல் வில்லியனுவாவை மின்னல் தாக்கியது. அவரது உடல் புகுந்த மின்சாரம் அவரது பெருவிரல் வழையாக வெளியேறி உள்லது அவரது பெருவிரலில் ரத்தகாயம் உள்ளது. உடனடியாக வில்லியனுவா மருத்துவமனையில் சேர்க்கபட்டார். அங்கு அவருக்கு சிகிஅச்சை அளிக்கபட்டது அவரது கர்ப்பத்தில் இருந்த குழந்தை பாதுகாப்பாக பிறந்தது. அது பெண்குழந்தை அதற்கு கிம்பர்லி கோர்டன் என பெயர் சூட்டி உள்ளனர். மின்னல் தாக்கியதால் வில்லியனுவா வயிற்றில் இருந்த குழந்தைக்கும் பாதிப்பு ஏற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.