செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7156 topics in this forum
-
ரம்புட்டான், மங்குஸ்தான் பருவ காலம் ஆரம்பித்துள்ள நிலையில் கொழும்பு ஹெவலொக் டவுனில் ரம்புட்டான் கொள்வனில் ஈடுபட்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரிசனம் வழங்கியுள்ளார் பிரபல நடிகை பூஜா. ஹெவலொக் டவுனில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ஒன்றுக்கு முன்னால் விற்பனைக்காக வைத்திருந்த ரம்புட்டான் வியாபாரிகளிடம் செவ்வாய்க்கிழமை மாலை நடிகை பூஜா ரம்புட்டான் கொள்வனவு செய்ததுடன் வியாபாரிகளுடன் இணைந்து ரம்புட்டன் வியாபார நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார். அதனால் அதிகமான வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்தி அந்த இடத்தில் ரம்புட்டான் தூரியன் மற்றும் மங்குஸ்தான் பழங்களை வாங்கியுள்ளனர். பூஜாவின் விருப்பத்துக்குரிய பழம் தூரியன் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். (Clicked by : Sandesh Bandara)…
-
- 7 replies
- 1.2k views
-
-
சீனாவில் உள்ள ஒரு இளைஞர் மலைப்பாதை ஒன்றில் காரை ஓரமாக நிறுத்திவிட்டு இரண்டு பெண்களுடன் காரில் உல்லாசமாக இருந்தபோது, கார் திடீரென பாதையை விட்டு விலகி மலையில் இருந்து உருண்டதால், காரில் இருந்து மூன்று நபர்களுக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் உள்ள வென்ஜோ என்ற பகுதியைச் சேர்ந்த சுங் ஹே என்பவர் தனது இரண்டு பெண் தோழிகளான யீசூ,வயது 27, மற்றும் 23 வயதுடைய டாய் லெய் ஆகியோருடன் உல்லாசமாக இருப்பதற்காக அவர்களை காரில் ஏற்றி மலைப்பாதை ஒன்றுக்கு அழைத்து சென்றார். காரை ஓரமாக ஒரு மரத்தின் அடியில் நிறுத்திவிட்டு, இருவருடனும் உல்லாசமாக இருந்தார். அந்நேரத்தில் எதிர்பாராத விதமாக அவருடன் வந்த தோழிகளின் ஒருவரின் கால், காரின் ஹேண்ட் பிரேக்கில் பட்டதால், கார் திடீரென பாதையை விட்டு வ…
-
- 4 replies
- 924 views
-
-
அமெரிக்க பல்கலைக்கழகமொன்றின் கூடைபந்தாட்ட அணி வீரர், வீராங்கனைகளை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பாராட்டும் வைபவத்தில் மாணவியொருவர் நிலைதடுமாறி விழப்போனதால் அவரை தாங்கிப்பிடிக்க ஜனாதிபதி ஒபாமா முற்பட்ட சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. அமெக்கரிக்காவின் என்.சி.ஏ.ஏ. கூடைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் கெனக்டிகட் பல்கலைக்கழக ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் சம்பியனாகினர். அமெரிக்க பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கிடையிலான கூடைபந்தாட்டப் போட்டிகளில் ஒரு வருடத்தில் ஒரே பல்லைக்கழகத்தைச் சேர்ந்த ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் சம்பியனாகியமை இது இரண்டாவது தடவையாகும். இவ்வணிகளின் வீரர், வீராங்கனைகளை வெள்ளை மாளிகையில் பாராட்டு வைபவம் நேற்றுமுன்தினம் நடத்தப்பட்டது.…
-
- 0 replies
- 742 views
-
-
சுவீடன், ஜேர்மனி, பிரித்தானியா மற்றும் நெதர்லாந்தின் தலைவர் சுவீடனில் ஏரிக் கரையோரம் இடம்பெற்ற குறுகிய ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடொன்றில் பங்கேற்றனர். இந்த உச்சி மாநாட்டையடுத்து ஸ்டொக்ஹோம் நகரின் மேற்கே 120 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள சுவீடன் பிரதமர் பிரட்றிக் ரெயின் பீல்டின் கோடை வாசஸ்தலத்திற்கு அண்மையிலுள்ள ஏரியில் சுவீடன் பிரதமரும் ஜேர்மனிய அதிபர் அஞ்ஜெலா மேர்கலும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோனும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ருத்தும் படகுச் சவாரியில் ஈடுபட்டனர். http://virakesari.lk/articles/2014/06/11/4%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%…
-
- 0 replies
- 476 views
-
-
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில அழகுராணியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள வலேரி கெட்டோ, தான் பாலியல் வல்லுறவின் காரணமாகப் பிறந்த ஒரு பெண் எனத் தெரிவித்துள்ளார். 24 வயதான வலேரி பென்சில்வேனியா மாநில அழகுராணியாக அண்மையில் முடிசூடப்பட்டார். இவ்வருடத்துக்கான அமெரிக்க அழகுராணி (மிஸ் யூ.எஸ்.ஏ.) போட்டியில் பென்சில்வேனியா மாநிலம் சார்பாக அவர் பங்குபற்றினார். இந்நிலையில், பேட்டியொன்றின்போது தனது துயர வரலாறு குறித்து வலேரி கூறியுள்ளார். தனது கதை பாலியல் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் என அவர் கருதுகிறார். 'பாலியல் வல்லுறவினால் பிறந்த ஒருவளாக இருப்பதை, எனது தந்தை யார் என்று தெரியாத நிலையை, அவர் எப்போதாவது கண்டுபிடிக்கப்படுவாரா என்பதும் தெரியாத …
-
- 6 replies
- 877 views
-
-
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் ஆவது மிக கடினம் என்று அனைவருக்கு தெரியும். அப்படியிருக்கு ஒரு ஈழத்து இசையமைப்பாளர் ஒருவர் கோலிவுட்டில் கால் பதித்துள்ளார்.எஸ்.கே.முரளிதரன் இயக்கத்தில் வர்ஷன் மற்றும் அனு நடிக்கும் ’காக்கா குருவி’ படத்தில் ஈழத்து இசையமைப்பாளர் சஜேஸ் கண்ணன் இசையமைக்கயிருக்கிறார்.ஒரு ஈழத்து இசையமைப்பாளர் கோலிவுட் வரை வந்து இசையமைப்பது ஈழத் திறமை சாலிகளுக்கு கிடைத்த கௌரவம். See more at: http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/104855/#sthash.q37JztFY.dpuf
-
- 0 replies
- 500 views
-
-
நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த விருது விழா ஒன்றில் பிரபல பாப் பாடகி ரிஹானா அங்கமெல்லாம் பளிச்சென்று தெரியும்படி ஆடை அணிந்து வந்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திங்கட்கிழமை நடந்த விருது வழங்கும் விழாவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலர் வந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு பிரபல பாப் பாடகி ரிஹானாவும் வந்திருந்தார். அவர் வந்திருந்ததை நிச்சயம் தனியாக குறிப்பிட வேண்டும். அதற்கு காரணம் அவரின் ஆடை. ரிஹானா தரையை தொடும் அளவுக்கு ஒரு ஆடை அணிந்திருந்தார். ஆனால் அந்த ஆடை கண்ணாடியாக இருந்ததால் அவரது அங்கம் எல்லாம் பளிச்சென்று தெரிந்தது. ஆடை தான் லேசான துணி என்றால் ரிஹானா உள்ளாடை அணியாமல் மூடி மறைக்க வேண்டிய மேல் அழகை இப்படி பளிச்சென்று காட்டியுள்ளார். ரி…
-
- 18 replies
- 1.6k views
-
-
கைவிடப்பட்ட 2ஆம் உலகப் போர் கால துறைமுகம் ஒன்றின் கடலிலுள்ள சிறிய பகுதியானது 22 பேர் வாழும் சுதந்திர நாடு என அங்கு வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். சீலேண்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த குட்டித் தீவின் பரப்பளவானது 5,290 சதுர அடிகள் மட்டுமே ஆகும். இரண்டு கோபுரங்களின் மீது இரும்பு தளத்தினூடாக இணைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பெலிக்ஸ்டோவ் நகரிலிருந்து சில மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த குட்டி நாட்டினை அங்கு வசிக்கும் 22 பேரும் பிரித்தானியாவிலிருந்து சுதந்திரமைந்துவிட்டதாக 1967ஆம் ஆண்டிலிருந்த தாங்களாகவே பிரகடனப்படுத்தியுள்ளனர். ஆனால் இதனை தனி ஒரு நாடாக எந்தவொரு நாடும் இதனை அங்கீகரிக்கவில்லை. இங்கு வாழ்பவர்கள் தமக்கான அரசரைத் தேர்வு செய்துள்ளதுடன் தங்களுக்கான நாணயம், …
-
- 5 replies
- 1k views
-
-
உலக கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் அடுத்த வாரம் பிரேஸிலில் ஆரம்பமாவதை முன்னிட்டு பாகிஸ்தானின் சியல்கொட் நகரிலுள்ள தொழிற்சாலையொன்று மிக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. உலக கிண்ண போட்டிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள கால்பந்துகள் 'போர்வார்ட் ஸ்போர்ட்ஸ்' எனும் இத்தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றமையே இதற்குக் காரணம். சர்வதேச தரவரிசையில் 159 ஆவது இடத்திலுள்ள பாகிஸ்தான் அணி, உலக கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றவில்லை. ஆனால் பாகிஸ்தானின் சியல்கொட் நகரில் நீண்டகாலமாக உலக தரம் வாய்ந்த கால்பந்துகள் தயாரிக்கப்படுகின்றன. 1982 ஆம் ஆண்டு முதல் பீபா உலக கிண்ணப் போட்டிகளுக்கு சியல்கொட் நகரில் பந்துகள் தயாரிக்கப்படுகின்றன.இம்முறை பிரேஸிலில் நடைபெறவுள்ள போட்டிகளுக்காக பிராகு…
-
- 3 replies
- 526 views
-
-
ஹொலிவூட் நடிகர் புறூஸ் வில்லிஸின் மகள் ஸ்கௌட் வில்லிஸ் தனியாக ஆரம்பித்த டொப்லெஸ் ஆர்ப்பாட்டம் இப்போது குழுவாக விரிவடைந்துள்ளது. இன்ஸ்டாகிராம் புகைப்பட இணையத்தளத்தில் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்கள் தரவேற்றம் செய்ய முடியாது. இக்கொள்கையை எதிர்த்து கடந்த வாரம் அமெரிக்காவின் நியூயோர்க் வீதியில் தனியாக டொப்லெஸ்ஸாக கடைக்குச் சென்று ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டார் 22 வயதான ஸ்கௌட் வில்லிஸ். பின்னர் அது குறித்த தகவல்களையும் படங்களையும் டுவிட்டரில் வெளியிட்டு பிறீ த நிப்பிள் எனும் ஹேஸ் டெக்குடன் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இது இணையத்தில் பிரபல்யமடைந்தது. இச்செயலினால் தூண்டப்பட்ட சுமார் 20 பெண்கள் ஸ்கௌட் வில்லிஸின் நோக்கத்தையே மையப்பொருளாக வைத்து வொஷிங்டன் சதுக்க பூங்காவில் கடந்த …
-
- 0 replies
- 682 views
-
-
சென்னை: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவைவிட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகள் கவர்ச்சியானவர் என்று பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இயக்குனர் ராம்கோபால் வர்மா, அடிக்கடி தனது டுவிட்டர் பக்கங்களில் ஏதாவது வில்லங்கமான பதிவுகளை போட்டு, சர்ச்சையில் சிக்கி கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அண்மையில், "நடிகர் ரஜினிகாந்த்திடம் எனக்கு பிடித்ததே அவரது மார்புதான். அதை ஏன் அவர் அனிமேஷனில் விரிவடைய அனுமதித்தார் என்றே தெரியவில்லை. கோச்சடையானில் ரஜினியின் மார்பு அனிமேஷனில் விரிவடைவதை நான் விரும்பவில்லை" என்று ராம்கோபால் வர்மா தன்னுடைய டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். ராம்கோபால்…
-
- 0 replies
- 1k views
-
-
பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஸூக்கர்பேர்கின் மனைவியான பிரஸில்லா சான், முதல் தடவையாக தொலைக்காட்சியொன்றுக்கு பேட்டியளித்துள்ளார். இளம் வயதிலேயே உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராகிவிட்ட மார்க் ஸூக்கர்பேர்குடனான திருமணம், தமது நாய், மற்றும் மார்க் ஸூக்கர்பேர்கின் அபிமான ஆடையான ஹுடி எனும் ஆடைகளின் சேகரிப்புகள் போன்ற பல விடயங்கள் குறித்து இப்பேட்டியில் பிரஸில்லா சான் கலந்துரையாடியுள்ளார். அத்துடன் வசதி குறைந்த பாடசாலைகளுக்காக தானும் ஸூக்கர்பேர்க்கும் 12 கோடி அமெரிக்க டொலர்களை (சுமார் 1563 கோடி ரூபா) நன்கொடையாக வழங்கவுள்ளதாகவும் அமெரிக்காவின் என்.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார். பிரஸில்லா சான் சீன, வியட்நாம் வம்சாவளி பெற்றோரின் மகள் எ…
-
- 0 replies
- 583 views
-
-
அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் 50 மில்லியன் டொலர் மாபெரும் பரிசை வென்ற சீட்டைத் தொலைத்த ஜோடியொன்று அந்த அதிர்ஷ்ட இலாபச் சீட்டை தேவாலய தரையில் ஒருவர் கண்டுபிடித்து ஒப்படைத்ததையடுத்து தமக்குரிய பரிசை பெற்றுக் கொண்ட சம்பவம் திங்கட்கிழமை கனடாவில் இடம்பெற்றுள்ளது. நைஜீரிய வம்சாவளி இனத்தவர்களான ஹக்கீமும் அபியோலா நொஸிரும் கடந்த ஜனவரி 17 ஆம் திககி இடம்பெற்ற லொட்டோ மக்ஸ் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் மாபெரும் பரிசை வென்றிருந்தனர். எனினும், அந்த பரிசுக்குரிய சீட்டை அவர்கள் தொலைத்திருந்ததால் அவர்கள் அந்தப் பரிசை உரிமை கோர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்நிலையில் பல மாதம் கழித்து தேவாலயத்தில அந்த பரிசுச்சீட்டை கண்ட நபரொருவர் அதனை மேற்படி ஜோடியிடம் ஒப்படைத்ததையடுத்து திங்கட்கிழ…
-
- 9 replies
- 711 views
-
-
லண்டனில் குறுகிய காலத்தில் பெரும் வளர்சியடைந்த உணவு நிறுவனம் சென்னை தோசா ஆகும். பல கிளைகளைக் கொண்டு இயங்கிவரும் இந்த உணவகத்தில் பாரிய சுகாதாரக் கேடு இருப்பதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தோசையில் கரப்பான் பூச்சிகளின் எச்சங்கள் காணப்பட்டதோடு, சில உணவுகளில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தும் உள்ளது. இதேவேளை குறிப்பிட்ட இந்த உணவகத்தில் கரப்பான் பூச்சிகளின் ஆதிக்கம் பன்மடங்காகப் பெரிகியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த நிர்வாகிகள் தவறியும் விட்டார்கள். பல முறைப்பாடுகள் வெம்பிளி கவுன்சிலுக்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து சுகாதார அதிகாரிகள் வெம்பிளியில் உள்ள சென்னை தோசா உணவகத்திற்கு பரிசோதனைக்கு சென்றுள்ளார்கள். சுகாதார அதிகாரிகள் அங்கே நிற்கும் வேளையில் கூட, அவர்கள் …
-
- 7 replies
- 1k views
-
-
பீகாரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவரது கணவர் வீட்டில் கழிவறை இல்லாததால் அந்த வீட்டை விட்டு வெளியேறி விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு 4.5 லட்சம் ரூபாய் வரை உதவி தொகை அளிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தின் அடலட்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் பரோ தேவி. இவருக்கு வயது 20. சில வருடங்களுக்கு முன் திருமணமான இவருக்கு 3 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. பரோ தேவியின் கணவர் வீட்டில் கழிவறை வசதி இல்லை. கழிவறையை கட்டும்படி, பல முறை கணவரிடம் தெரிவித்தும் அவர்களது வீட்டில் யாரும் இதற்கு செவிசாய்க்காததால் கோபமடைந்த பரோ தேவி குழந்தையை அழைத்துக்கொண்டு ஒரு வருடத்திற்கு முன் அவரது தாய் வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் இது குறித்து அறிந்த சுலப் இன்டர்நேஷனல் எ…
-
- 0 replies
- 522 views
-
-
தன்னை துரத்தி வந்த நாய்களிடமிருந்து தப்புவதற்காக மின் கம்பமொன்றில் ஏறிய கரடியொன்று அந்தக் கம்பத்தில் தன்னை மறந்து உறங்கி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்திய சம்பவம் கனடாவில் இடம்பெற்றுள்ளது. சஸ்கட்சிவான் பிராந்தியத்தில் ஷெல்புறூன் எனும் இடத்திற்கு அண்மையிலுள்ள மின் கம்பத்திலேயே அந்தக் கரடி உறங்கியுள்ளது. அந்தக் கரடியை மின் தாக்குதலுக்கு உள்ளாகாமல் பாதுகாப்பாக கீழே இறக்குவதற்கு பிராந்திய மின்சார ஊழியர்கள் பெரும் போராட்டத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. virakesari
-
- 0 replies
- 539 views
-
-
தமது முன்னாள் காதலி, காதலனின் நிர்வாண புகைப்படங்களை வைத்திருப்பது சட்டவிரோதமானது என ஜேர்மன் நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. ஜேர்மனிய பெண்ணொருவர் தனது காதலருக்கு எதிராக தொடுத்த வழக்கொன்றிலேயே மேற்படி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மனு தாரரான பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அழித்துவிட வேண்டுமெனவும் அப்பெண்ணின் முன்னாள் காதலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜேர்மனியின் மத்திய பிராந்தியத்தைச் சேர்ந்த இப்பெண், புகைப்படக் கலைஞரான ஒருவரை காதலித்தார். இவர்கள் காதலித்த காலத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு நிர்வாணமாகவும் அப்பெண் போஸ் கொடுத்திருந்தார். இவர்களின் காதலில் முறிவு ஏற்பட்டபின் அப்புகைப்படங்களையும் வீடியோக்களையும் அழித்துவிடுமா…
-
- 6 replies
- 779 views
-
-
மத்திய கிழக்கு நாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு பாலூட்டும், வளர்ப்புத் தாய் முறைமை காணப்படுகிறது.வளர்ப்புத் தாயாக செயற்படுவர்களுக்கு பெருந் தொகை சம்பளமும் வழங்கப்படுகிறது. அத்துடன் தனக்கு பாலூட்டி, வளர்த்த பெண்ணை சொந்தத் தாயாகவே பிள்ளைகள் கருதுவதும், தன்னிடம் தாய்ப்பால் குடித்து வளர்ந்த பிள்ளைகளை தம் சொந்த மக்களாக அந்த பெண்கள் கருதுவதும் தொன்றுதொட்டு இருந்து வரும் மரபு வழி பழக்கமாக உள்ளது. இந்நிலையில், சவுதியில் வசிக்கும் ஒரு தம்பதியர் சுமார் 25 ஆண்டு கால இல்லற வாழ்க்கையின் மூலம் 7 குழந்தைகளை பெற்றெடுத்தனர். இவ்வளவு காலத்துக்குப் பிறகு அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு பெரிய உண்மை தெரிய வந்தது. தற்போது, கணவன்-மனைவியாக வாழ்ந்து வரும் இவர்கள் இருவரும் குழந்தைப் பரு…
-
- 3 replies
- 863 views
-
-
எஸ்.சதீஸ்குமார் பல பெண்களை ஏமாற்றி அவர்களை காதல் வலையில் சிக்கவைத்து அப்பெண்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து தலைமறைவாக வாழ்ந்துவந்து இளைஞனை பொலிஸார் இன்று சனிக்கிழமை கைதுசெய்துள்ளனர். வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களையடுத்தே அவ்விளைஞன் கைதுசெய்து செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பொகவந்தலாவை, கிளானி தோட்டத்தைச்சேர்ந்த 25 வயதான ஜெயராமன் புவனேஷ்வரன் என்று தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞன் குயின்ஸ்பரி, தலவாக்கலை, கண்டி,நுவரெலியா மற்றும் பத்தனை ஆகிய பகுதிகளிலேயே பல பெண்களை ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், கொள்ளை குற்றச்சாட்டில் தலவாக்கலை பொலிஸாரினால் அண்மையில் கைதுசெய்யப்பட்டு…
-
- 0 replies
- 996 views
-
-
ஹொலிவூட்டின் சர்ச்சைக்குரிய நடிகைகளில் ஒருவரான லிண்ட்ஸே லோஹன், தனது கர்ப்பம் கலைந்ததால் நீதிமன்ற விசாரணைக்கு வரமுடியாதிருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். 27 வயதான லிண்ட்ஸே லோஹன் இன்னும் திருமணமாகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகள், மது போதையில் வாகனம் செலுத்தியமை, நெக்லஸ் திருடியமை முதலான காரணங்களால் நீதிமன்றத்தால் புனர்வாழ்வு நிலையத்துக்கும் சிறைக்கும் அனுப்பப்பட்டிருந்த லிண்ட்ஸே லோஹன், பின்னர் பிணை நிபந்தனைகளை மீறியதால் மீண்டும் குற்றச்சாட்டுகளுக்குள்ளானவர். ஒருகாலத்தில் உலகின் மிகப் பிரபலமான மொடல்களில் ஒருவராக விளங்கிய அவர், கடந்த சில வருடங்களாக ஹொலிவூட்டில் மிகவும் சர்ச்சைக்குரிய நடிகைகளில் ஒருவராகி மாறியுள்ளார். போதைப்பொருள்…
-
- 0 replies
- 632 views
-
-
உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI). இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள். 42 லட்சம் ஹிந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது. ஒரு காலத்தில் ஹிந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் படையெடுப்பிற்கு பிறகு பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) என்ற கடைசி ஹிந்து மன்னரை வீழ்த்திய பிறகு ஹிந்து மதத்தை விட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலிக்கு குடிபெயர்ந்தனர். பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள். 1. இங்கே ஒவொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் ஒரு நாள் மௌன விரதம் கடைபிடிக்கபடுகிறது. Nyepi day என்று சொல்கிறார்கள். ஹிந்துகளின் பண்டிகை போன்ற அந்த நாளில் இந்தோனேசியா முழுவதும் விடுமுறை அளி…
-
- 0 replies
- 796 views
-
-
பாஸ்போர்ட்டில் படங்கள் வரைந்த மகன்- நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் தந்தை. பீஜிங்: மக்களே உங்கள் பாஸ்போர்டை குழந்தைகளுக்கு எட்டாய இடத்தில் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள், அல்லது சீன நபரைப்போல அயல்நாட்டில் சிக்கி சீரழிய வேண்டியிருக்கும். சீனநாட்டை சேர்ந்த தந்தையும், அவரது நான்கு வயது மகனும் தென்கொரியாவுக்கு சென்றிருந்தனர். விமானத்தில் செல்லும்போது, பிரயாண களைப்பு தெரியாமல் இருக்க சிறுவன் பேனாவை எடுத்து படம் வரைந்து கொண்டே வந்துள்ளான் அச்சிறுவன். ஆனால் அவன் படம் வரைந்தது வெற்று காகிகத்தில் கிடையாது, தந்தையின் பாஸ்போர்ட்டில். இது தெரியாத தந்தை தென்கொரிய குடியுரிமை அதிகாரிகளிடம் பாஸ்போர்ட்டை காட்டியபோது அதிர்ச்சியடைந்தார். தந்தையின் உருவமே தெரியாத அளவுக்கு கண்டபடி…
-
- 2 replies
- 911 views
-
-
வெளியே பார்க்கும் போது பிரம்மாண்டமாக தெரியும் தொகுப்பாளர்களுக்கு எல்லாம் தனியார் தொலைக்காட்சிகளில் கொடுக்கும் சம்பளம் என்னவோ குறைவு தான்,ஆனாலும் அவர்கள் சினிமா நிகழ்ச்சிக்காக வாங்கும் சம்பளமோ விண்ணை தொடும் அளவிற்கு அதிகம். நான் கூறுவது அனைத்தும், பெண் தொகுப்பாளினிகளுக்கு மட்டுமே என்பது இதில் குறிப்பிடத்தக்கதாகும்.நம் எல்லோருக்கும் தெரிந்த டிடி என்கிற திவ்யதர்ஷினியின் சம்பளம் தான் அனைத்து நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் சம்பளத்தையும் விட அதிகமானது.டிடியின் சம்பளம் ஒரு நிகழ்ச்சிக்கு 60 ஆயிரமிலிருந்து 75 வரையாம். அவரை அடுத்து இருப்பது பாவனா அவரின் சம்பளமோ 35 ஆயிரமாம். அடுத்த இடத்தில் இருக்கும் ரம்யாவிற்கு 25 முதல் 30 ஆயிரம் வரையாம் மேலும் மற்ற தொகுப்பாளினிகளுக்கான சம்பளம் 5 ஆ…
-
- 1 reply
- 577 views
-
-
பண்டத்தரிப்பு பிரான்பற்று கட்டுவரைப் புளியடி அம்மன் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை காலை மிருக வேள்வி இடம் பெற்றது. ஆலயத்தில் இடம் பெற்ற பொங்கல் படையல்களைத் தொடர்ந்து கடா வெட்டும் நிகழ்வும் இடம் பெற்றது. இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட கடாகள் வெட்டப்பட்டுள்ளதுடன் 75 க்கும் மேற்பட்ட சேவல்களும் வெட்டப்பட்டுள்ளன. பிரான்பற்று கிராமம் உட்பட சுற்றுக் கிராமங்கள் பலவற்றில் இருந்து கடாகள் உழவுயந்திரங்கள், லாண்ட் மாஸ்டர்கள், வடி வாகனங்கள், பிக்கப் வாகனங்களில் ஊர்வலமாக ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்டு பூசைகளின்போது பலியிடப்பட்டுள்ளன. www.lankaroad.net நியானி: கொடூரமான காட்சியுள்ள படம் ஒன்று நீக்கப்பட்டுள்ளது.
-
- 23 replies
- 2.7k views
-
-
-
- 12 replies
- 1.2k views
-