செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7128 topics in this forum
-
இரவுவேளையில் உறங்கிக் கொண்டிருந்த 11 மாத பச்சிளம் பாலகியை வளர்ப்பு நாயொன்று கடித்துக் குதறி கொன்ற விபரீத சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து பிரித்தானிய ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. லங்காஷயர், பிளக்பேர்ன் நகரைச் சேர்ந்த அவா ஜேன் கொர்லஸ் என்ற பாலகியே இவ்வாறு நாயால் கடித்துக் குதறப்பட்டு உயிரிழந்துள்ளார். ஜேனின் தாயான சொலிகிங்கும் (20 வயது), தாயின் காதலரான லீ நைட்டும் (26 வயது) நாயுடன் போராடி பாலகியை மீட்டெடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் மருத்துவர்களால் பாலகியின் உயிரைக் காப்பாற்ற முடியாது போயுள்ளது. பாலகியை கடித்துகொன்ற மூர்க்கங் கொண்ட நாயை மேற்படி தம்பதி வளர்ப்பது குறித்து …
-
- 1 reply
- 369 views
-
-
சென்னை : தான் ஆசையாக வளர்த்து வந்த நாயைக் காணவில்லை என்ற சோகத்தில் சென்னைப் பெண் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை கொருக்குபேட்டை ரங்கநாதம் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரது மனைவி ஷர்மிளா (35). இவர்களது வீட்டில் உயர்ரக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். அந்த நாய் கடந்த சில நாட்களுக்கு முன்னால் காணாமல் போய் விட்டதாம். ஆசையாக வளர்த்த நாயைக் காணவில்லையே என மன வருத்தத்தில் இருந்துள்ளார் ஷர்மிளா. இந்நிலையில், நேற்று முந்தினம் வீட்டில் யாருமற்ற நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார் ஷர்மிளா. ஷர்மிளாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார், உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்…
-
- 11 replies
- 894 views
-
-
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மாணவர்கள் மனு! [Wednesday, 2014-02-12 18:13:05] நாளை மறுநாள் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அனைத்து மாணவர்கள் பொதுநல சங்க பொதுச் செயலாளர் ராமச்சந்திரன், 30–க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சென்று துரைப்பாக்கத்தை அடுத்த கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் இன்று ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:–பிப்ரவரி 14–ந்தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. சென்னையிலும் இது தொடர்பான கொண்டாட்டங்கள் நாளை மறுநாள் நடைபெறும்.நாளை மறுநாள் பொது இடங்களில் சந்தித்துக் கொள்ளும் காதலர்களுக்கு காவல் துறையினர் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். காதல் ஜோடிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.காதலர் …
-
- 0 replies
- 270 views
-
-
ஒபாமாவுக்கும் பொப் பாடகி பியான்சுக்கும் காதல்! – பரபரப்பைப் கிளப்பியுள்ள பிரெஞ்ச் பத்திரிகை. [Tuesday, 2014-02-11 18:11:50] அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு பிரபல பொப் பாடகி பியான்சுக்கும் இடையே காதல் இருப்பதாக பிரெஞ்ச் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.கடந்த சில மாதங்களாக பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் மற்றும் நடிகை ஜூலியட் கெய்டுக்கும் இடையே ஒருந்த காதல் விவகாரம் செய்தியாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது பிரெஞ்ச் போட்டோகிராபர் வெளியிட்டு உள்ள படங்களை வைத்து பிரெஞ்ச் மீடியாக்கள் ஒபாமாவுக்கும் பியானஸ்க்கும் இடையே காதல் ஆபத்தான காதல் என வதந்தியை கிளப்பி உள்ளன.அதிபர் ஒபாமாவுக்கும் பொப் பாடகி பியான்ஸ்சுக்கும் இடையே காதல் இருப்பதாக அமெரிக்க …
-
- 0 replies
- 642 views
-
-
போலியோ நோயில்லாத நாடாக இந்தியா சாதனை [Tuesday, 2014-02-11 04:42:30] தொடர்ந்து மூன்றாவது வருடமாக போலியோ நோயற்ற நாடு என இந்தியா சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலக சுகாதார மையம் "போலியோ நோயற்ற நாடு" என்ற சான்றிதழை இந்தியாவுக்கு வழங்கும் என கூறப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சரகத்தை சேர்ந்த 40000 குழுக்கள், முடக்குவாதம் குறித்த 60000 நோயாளிகளின் மாதிரிகளை போலியோ சோதனைக்கு உட்படுத்தியது. உலக சுகாதார மையத்தை சேர்ந்த 8 ஆய்வுக் கூடங்களில் சோதனை செய்யப்பட்ட நோயாளிகளின் 120000 மாதிரிகளில் போலியோ தாக்கியதற்கான எந்த முகாந்திரமும் காணப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆய்வில் வெற்றி கண்டுள்ள இந்தியா போலியோ அற்ற நாடு என்று பெயர் பெற்ற…
-
- 0 replies
- 461 views
-
-
திருவாரூர் : நீடாமங்கலத்தில், மணமகனுக்கு, மணமகள் தாலி கட்டிய சம்பவம், அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம், வெண்ணாறு தென்கரையைச் சேர்ந்தவர், சோமு. இவரது மகள் வசந்தி, 19. இவருக்கும், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த, சதீஷ், 22, என்பவருக்கும், நேற்று, நீடாமங்கலத்தில், திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நேற்று காலை, 7:30 மணியில் இருந்து, 9:00 மணிக்குள், திருமணம் என்பதால், இரு வீட்டு உறவினர்கள், நண்பர்கள் என, அதிகளவில், மண்டபத்தில் நிரம்பி இருந்தனர்.இருவரும், மாலை மாற்றிய நிலையில், மணமகன் சதீஷ், மணமகள் வசந்திக்கு தாலி கட்டினார். சற்று நேரத்தில், மணமகள் வசந்தி, மணமகன் சதீஷுக்கு தாலி கட்டினார். யாரும், இதை எதிர்பார்க்காததால், இச்சம்பவம், அப்பகுதியில், அனை…
-
- 9 replies
- 1.1k views
-
-
Published On: Sat, Feb 8th, 2014 கட்டாயப்படுத்தி முத்தம் கொடுத்த வாலிபரின் நாக்கை கடித்து காயப்படுத்தியுள்ளார் இளம்பெண் ஒருவர். இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் உள்ள அழகு சிகிச்சை நிலையமொன்றில் 18 வயதுடைய இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். வழமைபோன்று திங்கட்கிழமை காலை வேலைக்கு சென்ற அந்த பெண்ணை 30 வயதுடைய வாலிபர் ஒருவர் வழிமறித்து கட்டாயப்படுத்தி முத்தமிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், வாலிபரின் நாக்கை நன்றாக கடித்து காயப்படுத்தியுள்ளார். வலியால் அந்த வாலிபர் அலறி துடித்துள்ளார். இது குறித்து இரண்டு பேரும் கம்லாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது, தான் அழகு சிகிச்சை நிலையத்தில்; வே…
-
- 10 replies
- 889 views
-
-
கோமாவில் இருந்ததால் பழைய நினைவுகளை இழந்த பெண்ணுக்கு மீண்டும் திருமணம்! [sunday, 2014-02-09 19:15:47] திடீர் இருதய கோளாறால் பழைய நினைவுகளை இழந்த இளம்பெண்ணுக்கு மீண்டும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த இளம்பெண் அமந்தா கார்த் (27). இவருக்கும் கோடி கார்த் என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. முதலிரவு அன்று அமந்தாவுக்கு புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம் எனப்படும் மிக அரிதான இருதய கோளாறு ஏற்பட்டது. மூச்சு விட முடியாமல் திணறினார். திடீரென மயங்கி விழுந்த அமந்தாவை பார்த்து கோடி கார்த் அதிர்ச்சி அடைந்தார். என்ன ஆச்சு, என்ன ஆச்சு என்று மனைவியை தட்டி எழுப்பினார். ஆனால், அவரிடம் எந்த சலனமும் இல்லை. உடனடியாக ஆம்புலன்சை வரவழைத…
-
- 0 replies
- 607 views
-
-
ஈராக்கைச் சேர்ந்த 92 வயதான நபரொருவர் கடந்த வருடம் ஜுலை மாதம் 4 ஆம் திகதி தன்னை விட 70 வருடங்கள் இளமையான பெண்ணை திருமணம் செய்து பிரதான செய்தியாக இடம்பிடித்து பரப்பரப்பினை ஏற்படுத்தியமை பலருக்கும் ஞாபகம் இருக்கும். மூஸா அலி மொஹம்மட் அல் முஜாமி என்ற இந்த 92 வயது நபர் திருமணமாகி 6 மாதங்களே கழிந்த நிலையில் கடந்த வாரம் ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் வைத்து மரணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்-முஜாமியின் திருமண நிகழ்வின் போது அவரது 16 மற்றும் 17 வயதான இரு பேரன்களுக்கும் அதே மண்டபத்தில் திருமணம் நடத்தப்பட்டது. அல் முஜாமிற்கு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளு பேரப் பிள்ளைகள் என 325 பேர் உள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.metronews.lk/a…
-
- 15 replies
- 2k views
-
-
அமெரிக்க சரணாலயத்தில் அபூர்வ ஆந்தை திருட்டு! ரூ.2.5 லட்சம் மதிப்புமிக்கதென தெரிவிப்பு! [Friday, 2014-02-07 13:15:37] அமெரிக்க பறவைகள் சரணாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள அபூர்வ வகை ஆந்தை ஒன்றை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அமெரிக்காவிலுள்ள 'யாக்கிமா' மாகாணத்தில் உள்ளது ரேப்டர் ஹவுஸ் பறவைகள் சரணாலயம். இங்கு பல அபூர்வ பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சரணாலயத்தில் இருந்து அபூர்வ வகை ஆந்தை ஒன்று கடந்த வாரம் திருடப்பட்டுள்ளதாக சரணாலய நிர்வாகி உறுதி செய்துள்ளார். திருடர்கள் ஆந்தையைக் குறி வைத்து திருடியுள்ளார்கள் எனவும், அதன் அருகிலிருந்த மற்ற அரிய பறவைகள் திருடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். திருடப்பட்…
-
- 0 replies
- 539 views
-
-
யாழ் ஜெர்மன்வாசிகளே, உங்கள் நாட்டின் முதுபெரும் புகழ்பெற்ற தலைவர் ஹிட்லர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொள்ளவில்லையாம்..! அவர் தனது 95ம் வயதில் இயற்கையாக மரணமடைந்ததாக செய்திகள் தற்பொழுது உலா வருகின்றது.. பெர்லின்: 2ம் உலகப் போரின் இறுதியில், 1945ம் ஆண்டு பெர்லின் பாதாள அறைக்குள் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு ஹிட்லர் செத்துப் போனார் என்பதுதான் இதுவரை நாம் வரலாறாக படித்து வந்தது.. ஆனால் ஹிட்லர் சாகவில்லை, தப்பிப் போய் விட்டார்.. 1984ம் ஆண்டு வரை அவர் உயிர் வாழ்ந்தார். தனது 95வது வயதில்தான் இயற்கையாக அவர் மரணமடைந்தார் என்று ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார் ஒரு நூலாசிரியர். ஹிட்லர் தனது வாழ்நாளின் கடைசிக் காலத்தை பிரேசிலில் கழித்தார் என்று கூ…
-
- 6 replies
- 2.4k views
-
-
இன்டர்நெட்டில் மூழ்கிப் போன தம்பதி-பசியால் துடித்து பரிதாபமாக இறந்த குழந்தை! சியோல்: தென் கொரியாவில், இன்டர்நெட்டில் தீவிரமாக மூழ்கிப் போயிருந்த தம்பதியின் குழந்தை [^], பசியால் துடித்து நா வறண்டு பரிதாபமாக உயிரிழந்து போனது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த தம்பதியை போலீஸார் கைது செய்துள்ளனர். டிவி பார்ப்பதில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் என்று நம் ஊரில் பொதுவான குற்றச்சாட்டு உண்டு. ஆனால் இப்போது அந்த இடத்திற்கு இன்டர்நெட் வந்து விட்டது. எப்போது பார்த்தாலும் கம்ப்யூட்டர் முன்பும், இன்டர்நெட்டிலும் மூழ்கிப் போய் விட்டார்கள் என்று புகார் [^]கள் சாதாரணமாக எழ ஆரம்பித்து விட்டன. ஆனால் அந்த இன்டர்நெட் மோகம் ஒரு பச்சைக் குழந்தையின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு விபரீத…
-
- 5 replies
- 1.3k views
-
-
மத ரீதியாக பலிகொடுக்கும் நடவடிக்கைக்காக தமது தாயாரை படுகொலை செய்த 3 பிள்ளைகள், அவரது உடல் உறுப்புக்களை உண்ட கொடூர சம்பவம் பிலிப்பைன்ஸில் இடம்பெற்றுள்ளது. அம்பதுவான் எனும் இடத்திலுள்ள வீட்டில் முஸலா அமில் (56 வயது) என்ற மேற்படி பெண்ணின் உடல் மோசமாக சிதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலிலுள்ள பல உறுப்புக்கள் வெட்டி அகற்றப்பட்டிருந்தன. இந்த சடலம் கண்டுபிடிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் குறிப்பிட்ட வீட்டிலிருந்து விநோதமான சத்தங்கள் கேட்டதாக அயலவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்தப் பெண்ணின் மகன்மாரான டன்ரி (35 வயது), பரோய் (21 வயது) மற்றும் இப்ராஹிம் (18வயது) ஆகியோர் படுகொலைக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குடும்ப சச்சர…
-
- 0 replies
- 267 views
-
-
சிம்பாப்வே நாட்டை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ராபர்ட் மார்டின் கும்புரா (57). இவருக்கு 11 மனைவிகளும், 30 குழந்தைகளும் உள்ளனர். இவர் தனக்கு 100 குழந்தைகள் வேண்டும் என விரும்பி இவர் சர்ஜ்சுடன் இணைந்த ஒரு நிறுவனம் நடத்தி வந்தார். இவர் 4 மீது 10 ஆண்டுகளுக்கு முன் 4 பெண்களை கற்பழித்ததாக வழக்கு தொடரப்பட்டது .இந்த வழக்கில் நீதிபதி ஹோசக் முஜாயா குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார் கும்புராவுக்கு 50 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=102918&category=WorldNews&language=tamil
-
- 1 reply
- 587 views
-
-
ரஷ்யாவின் பெலராஸ் பகுதியில் கடந்த 1887ஆம் ஆண்டில் பிறந்த மார்க் சாகல் என்ற பிரபல ஓவியர் நவீன யுகத்தின் முன்னோடியாகக் கருதப்பட்டவர். இவர் பின்னாளில் பிரான்ஸ் நாட்டில் குடியேறி அங்கு 1985 ஆம் ஆண்டு இறந்தார். இவருடைய ஓவியங்கள் பல மில்லியன் பவுண்டுகள் மதிப்பிற்கு விற்கப்பட்டன. கலை உலகில் இவரது நற்பெயரைக் காப்பற்றும் வண்ணமாக இவரது பேரப்பிள்ளைகளே சாகல் குழு என்ற அமைப்பினை நிர்வகித்து வருகின்றனர். இங்கிலாந்தின் லீட்ஸ் பகுதியைச் சேர்ந்த மார்டின் லங்(63) என்ற தொழிலதிபர் கடந்த 1992 ஆம் ஆண்டு 1,00,000 பவுண்டு கொடுத்து இந்த ரஷ்ய ஓவியரின் ஓவியம் ஒன்றினை வாங்கியிருந்தார். 1909 -10 ஆம் ஆண்டுக்காலத்தில் வரையப்பட்டது என்று வாங்கப்பட்ட இந்த ஓவியம் பற்றித் தெரிந்து கொள்வதற்கா…
-
- 0 replies
- 524 views
-
-
தனது மனைவியுடன் நித்திரையிலிருந்த ஒரு பிள்ளையின் தந்தையை ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக களனிய பொலிஸ் பிரிவிலுள்ள பெண் பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து நேற்று முன்தினம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் பரிசோதகர் தமது கணவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து கடத்திச் சென்றதாக மனைவி கடந்த 28 ஆம் திகதி போலியகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பெண் பொலிஸ் பரிசோதகர் கடந்த 28 ஆம் திகதி அதிகாலை அந்த வீட்டுக்குச் சென்றுள்ளார். ஒரு பிள்ளையின் தந்தையான நபர் தனது மனைவியுடனும் பிள்ளையுடனும் கட்டிலில் இருந்துள்ளார். பொலிஸ் பரிசோதகர் அறைக்குள் சென்று தம்முடன் வரும்ப…
-
- 15 replies
- 1.3k views
-
-
லொத்தர் பரிசாக கிடைத்த 3 கோடியே 41 லட்சத்து 70 ஆயிரத்து 772 ரூபா பணத்தை பெண்ணொருவர் குடிபோதையில் கிழித்து அதனை மலசலக்கூட கழிவிருக்கையில் பிளஸ் செய்த சம்பவமொன்று ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது. ஜெர்மன் எஸ்ஸன் நகரைச் சேர்ந்த ஏஞ்சலா மெய்யர்(63) என்ற பெண்ணே இத்தகைய விபரீதத்தை செய்துள்ளார். இப்பெண்ணுக்கு ஜெர்மன் தேசிய லொத்தரில்; ரூ. 3 கோடியே 41 லட்சத்து 70 ஆயிரத்து 772 பரிசு கிடைத்துள்ளது. இந்நிலையில் அவரது கணவர் இறந்த பராமரிப்பு இல்லத்தில் இருந்து ஏஞ்சலாவுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அவரின் கணவரின் மருத்துவ செலவுக்கான தொகையை செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கடிதத்தை பிரித்துப் படித்த ஏஞ்சலா ஆத்திரம் அடைந்தார். தனக்கு பரிசாக கிடைத்த பணத்தை யாருக்கும் …
-
- 0 replies
- 385 views
-
-
2014-01-29 10:19:05 தவறாக நடந்துகொள்ளும் நபர்களிடமிருந்து பெண்களை பாதுகாக்கும் வகையில் அதிநவீன மார்புக் கச்சை (பிரா) ஒன்று ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான ஆடைகளை உற்பத்தி செய்யும் ஜப்பான் நிறுவனமான 'ரவிஜோர்' என்ற நிறுவனம் தனது 10 வருட நிறைவின் ஒரு பகுதியாகவே இந்த மார்புக் கச்சையை வடிவமைத்துள்ளது. குறித்த மார்புக் கச்சைக்கு 'ட்ரூ லவ் டெஸ்டர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனை அணிந்துகொள்ளும் பெண்கள் காதல் மனநிலையில் இருந்தால் மட்டுமே இந்த மர்புக் கச்சை திறக்கும். இதனால் அநாகரீமாக நடந்துகொள்பவர்களிடமிருந்து பெண்களை பாதுகாக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த மார்புக் கச்சையானது அணிந்துகொள்பவரின் இதயத் துடிப்பு வீதத்தினை ப்ளுடூத் மூலம…
-
- 4 replies
- 3.3k views
-
-
அமெரிக்காவில் முதன் முறையாக ஆண்,பெண் இருபாலரும் சேர்ந்து நிர்வாணமாக யோகா பயிலும் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. உடல் மற்றும் மனப் பயிற்சி கலையான யோகாவை பயில உலக மக்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஏராளமான டொலர்களை கொட்டிக் கொடுத்து இவற்றை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் போல்ட் அன்ட் நேக்ட் என்ற பெயரில் யோகா மையத்தை ஜோசிஸ் வார்ஸ் மற்றும் மோனிகா வெர்னர் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து நடத்தி வருகின்றனர். முதல் முறையாக ஆண், பெண் இருபாலரும் ஒன்றாக சேர்ந்து பயிலும் நிர்வாண யோகா பள்ளியை தொடங்கியுள்ளனர், இதற்கு நியூயார்க் நகர நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து ஜோசி மற்றும் மோனிகா ஆகியோர் க…
-
- 2 replies
- 948 views
-
-
இங்கிலாந்தை சேர்ந்த மாணவர் ஒருவர் வாங்கிய கேட்பரீஸ் சாக்லெட்டுக்குள் குளவி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. FILE இங்கிலாந்தின் லிவர்பூல் நகரை சேர்ந்த ஜேக் கியேட்டிங் என்னும் 20 வயது மாணவர் அப்பகுதியில் உள்ள சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் 'கேட்பரீஸ் டெய்ரி மில்க் சாக்லெட்’ ஒன்றை வாங்கினார். அதன் கவரை பிரித்து சாக்லெட்டை சுவைக்க நினைத்த ஜேக்கிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. சாக்லெட்டின் ஒரு பகுதி மட்டும் வழக்கத்துக்கு மாறாக புடைத்துக் கொண்டிருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தார். FILE அந்த பகுதியை பார்த்த ஜேக் கியேட்டிங் அதிர்ச்சியால் உறைந்துப் போனார். அந்த சாக்லெட்டுக்குள் இறக்கை, கால் மற்றும் தலையுடன் ஒரு முழு குளவி செத்…
-
- 0 replies
- 563 views
-
-
கொடூர எலிகளுடன் கப்பல்: பிரிட்டன் அச்சம் சனி, 25 ஜனவரி 2014( 11:46 IST ) நர மாமிசம் சாப்பிடும் கொடூர எலிகளுடன் பிரிட்டனை நோக்கி மிகப்பெரிய கப்பல் ஒன்று வந்து கொண்டிருக்கிறது. கடந்த 1976ம் ஆண்டில் யூகோஸ்லோவியாவில் ‘லியோபோவ் ஆர்லோவா’ என்ற பயணிகள் சொகுசு கப்பல் கட்டப்பட்டது. இது கனடா நாட்டின் துறைமுகத்துக்கு வந்தபோது கப்பலின் உரிமையாளர் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு கடனில் தத்தளித்தார். கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் ஊழியர்களுக்கு அவரால் சம்பளம் தர முடியவில்லை. அதை தொடர்ந்து அந்தக் கப்பல் டொமினிகன் குடியரசு நாட்டை சேர்ந்தவருக்கு 36 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பல பிரச்சனைகளுக்கு பிறகு தனது பயணத்தை தொடங்கிய அந்தக் கப்பல் புயலில் சிக்கி சேதமடைந்தது. எனவே அதை…
-
- 6 replies
- 633 views
-
-
தலைவரின் பெயரை தணிக்கை செய்த நீயா நானாவிற்கு உங்கள் கண்டனங்களை தெரிவியுங்கள்.https://www.facebook.com/anthony.thirunelveli நன்றி முகனூல் வட்டம்
-
- 1 reply
- 697 views
-
-
காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னர் காலை உணவுக்காக தயாரிக்கப்பட்ட ரொட்டியில் அல்லாஹ் முகம்மத் எனும் எழுத்து காணப்பட்டுள்ளது. இது பற்றி தெரியவருவதாவது, காத்தான்குடி பி.ஜே.எம்.வீதியிலுள்ள மர்சூக் என்பவரின் வீட்டில் காலை உணவுக்கான ரொட்டி தயாரிக்கப்பட்ட வேளை ரொட்டியை தயாரித்து முடிந்த பிறகு அந்த ரொட்டியின் மேல் பகுதியில் அல்லாஹ், முகம்மத் என காணப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ரொட்டியை சாப்பிடாமல் விட்டுள்ளனர். இந்த ரொட்டியை தயாரித்த ரொட்டி கல்லில் எந்த வொரு எழுத்தும் இருக்கவில்லையெனவும் இதில் அல்லாஹ் என்ற எழுத்தை கண்டவுடன் தான் அதிர்ச்சியடைந்ததாகவும், இது ஒரு அற்புதமாகு…
-
- 16 replies
- 927 views
-
-
சென்னை: கடமையாக குடிக்கப் போன இடத்தில், குவார்ட்டர் பாட்டிலில் தவளை ஒன்று கிடந்ததால் குடிகார குடிமகன் ஒருவர் டென்ஷனாகி விட்டார். இதையடுத்து தனது வக்கீல் சகிதம் பிரஸ் மீட் வைத்து தனது மனக் குமுறலை இன்று கக்கினார். சம்பந்தப்பட்ட நபரின் பெயர் தென்னரசு. அழகிய தமிழ்ப் பெயர் கொண்ட தென்னரசு, சென்னை குமணன் சாவடி பஸ் ஸ்டாண்ட் பக்கமாக உள்ள டாஸ்மாக் கடைக்குப் போய் பிராந்தி வாங்கினார். குவார்ட்டர் பாட்டில் வாங்கினார். இந்த பிராந்தியானது, லேட்டஸ்டாக களம் இறக்கப்பட்டுள்ள பின்லாந்து நாட்டு சரக்காகும். படு ஆவலோடு குவார்ட்டர் பாட்டில் மூடியைத் திறந்து எட்டிப் பார்த்தபோது உள்ளே ஒரு தவளை செத்துக் கிடந்ததைப் பார்த்து வாந்தி வராத குறையாக டென்ஷாகி விட்டார். உடனே தனது வக்கீல் திருநாவுக்கரசுக்க…
-
- 1 reply
- 634 views
-
-
மதுரை: என் ஆதீனத்திற்கு நிறை நடிகர் நடிகைகள் வந்துள்ளனர். சிவாஜி வந்துள்ளார்.. ஏன் சில்க் ஸ்மிதாவே வந்துள்ளாரே...என்னிடம் திறுநீறு வாங்கிக் கொண்டு போனார். பருத்தி வீரன் பிரியாமணி கூட வந்தார்.. வந்த பிறகுதான் அவருக்கு அவார்டே கிடைத்தது என்று ஒரு பேட்டியில் சிலாகித்துக் கூறியுள்ளார் மதுரை ஆதீனம். மதுரை ஆதீனத்தின் ஒருபக்கம் ரொம்ப ஆன்மீக மயமானது என்றால், மறுபக்கம் மகா சுவாரஸ்யமானது. சீரியஸாகவும் பேசுவார்.. கிச்சுகிச்சென சிரிக்கவும் வைப்பார்.. டென்ஷன்படுத்தவும் செய்வார்.. டெர்ரிபிளாகவும் சில நேரங்களில் பேசுவார். அப்படி ஒரு பேச்சை, பேட்டியை விகடனுக்குக் கொடுத்துள்ளார் ஆதீனம். வாங்க படிச்சுப் பார்ப்போம். - அம்மாவை மறந்துட்டீங்களேப்பா... வரும் தேர்தலில் நரேந்திர மோ…
-
- 11 replies
- 1.3k views
-