Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. தனது கணவர் முள்ளுக்கரண்டியை பாவித்து பட்டாணி உண்பதில்லை என்று கூறி பெண்ணொருவர் விவாகரத்துக்கு தாக்கல் செய்துள்ளார். குவைத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு விவாகரத்துக்கு தாக்கல் செய்துள்ளார். திருமணம் முடித்து ஒரு கிழமையிலே இவ்வாறு மேற்படி பெண் விவாகரத்துக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 'தனது கணவர் பட்டாணி உண்ணும்போது முள்ளுக்கரண்டியை பயன்படுத்துவதில்லை. அதேபோல், பாண் உண்ணும்போது முள்ளுக்கரண்டிக்கு பதிலாக வேறு உபகரணங்களை பயன்படுத்துகிறார்' என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தது. இதேபோல் மற்றுமொரு சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பற்பசையை எடுக்கும்போது அதனை முடிவிலிருந்து எடுக்காமல் நடுவிலிருந்து எடுக்குமாறு கூறி தன்னை தனது கணவர் வலிய…

  2. அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மனாட்டி என்ற பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் ஷாவோனா ரம்ப் என்ற பெண், தனது காதலனுடன் வசித்து வருகிறார். இருவரும் தங்கள் குடியிருக்கும் வீட்டிலேயே அடிக்கடி மது அருந்துவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் இருவரும் தூங்குவதற்கு முன் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். பின்னர் போதையுடன் இருவரும் தூங்க சென்றனர். அப்போது, காதல் மயக்கத்தில் இருந்த ஷவோனா தன்னை கட்டித் தழுவும்படி காதலனிடம் கூறியுள்ளார். காதலன் மறுத்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். ஷவோனா தனது காதலனின் சட்டையைப் பிடித்து இழுத்து அடித்துள்ளார். இதனால் காதலன் வீட்டை விட்டு வெளியேற முயன்றார். ஒரு கட்ட…

  3. நபரொருவர் மூகமூடி அணிந்துகொண்டு தனது மனைவியையே அச்சுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமொன்று அண்மையில் சீனாவில் இடம்பெற்றுள்ளது. சீனாவின் குஆன்ஷொஉ நகரைச் சேர்ந்த ஷியாஓ யென் என்ற 36 வயதான பெண்ணொருவர் சமயலறையில் வேலைசெய்துகொண்டிருந்த போது மூகமூடி அணிந்த திருடன் ஒருவர் வீட்டினுள் நுழைந்துள்ளான். அத்திருடன் பணம் கேட்டு அச்சுறுத்த 35 ரென்மின்பியை (சுமார் 600 ரூபா) கொடுத்துள்ளார் யென். பின்னர் மூகமூடியுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாது யென்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து யென் நடந்தவற்றை கணவனிடம் கூறியுள்ளார். பின்னர் இருவரும் இணைந்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸாரின் விசாரணையின் போது யென்னின் கணவனில…

  4. செக்கோஸ்லோவேக்கியா நாட்டிற்கான பாலஸ்தீன தூதராக ஜமீல் அல் ஜமால் என்பவர் பணியாற்றி வந்தார். இவர், தூதரக அலுவலகத்தில், கடந்த 20 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த பெட்டகத்தை திறந்து பார்த்தார். அப்போது, அதில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில், பலத்த காயம் அடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=100487&category=WorldNews&language=tamil

  5. ரொம் மியொக் எனும் சிற்பக் கலைஞர் தத்ரூபமான மனித சிற்பங்களை செய்வதில் வல்லவராகத் திகழ்கிறார். உண்மையான மனிதர்களோ என எண்ண வைக்கும் அளவுக்கு இவரின் சிற்பங்கள் உள்ளன. உலகின் பல நாடுகளில் இவரின் சிற்பகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிறார்களுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் தயாரித்துக்கொண்டிருந்த ரொ மியொக், 1996 ஆம் ஆண்டு முதல் மனிதச் சிற்பங்களை தயாரித்து வருகிறார். அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் ஜேர்மன் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவர் ரொன் மியொக். பின்னர் லண்டனுக்குச் சென்று சிற்பங்களை உருவாக்க ஆரம்பித்த அவர் சொந்த நிறுவனமொன்றையும் ஸ்தாபித்தார். இவரின் மனிதச் சிற்பங்கள் அசல் மனிதர்களைப் போலவே தோற்றமளிப்பதால் பலரையும் கவரத்…

  6. அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தாதியர் மலசலக்கூடத்தில் கமெராவை பொருத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள வைத்தியரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுர நீதவான் நீதிமன்ற நீதவான் ருவந்திகா மாரப்பன உத்தரவிட்டுள்ளார். கமெராவை பொருத்தியதாக கூறப்படும் வைத்தியரான தினுஷ சேரங்கவே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலையின் தாதியரின் மலசலக்கூடத்தில் கமெரா பொருத்திய வைத்தியரை கைது செய்யுமாறு கோரி அந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை, வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு கமெராவில் பதியப்ப…

    • 3 replies
    • 524 views
  7. ''சிலாபம் திண்ணனூரான்'' எச்.ஐ.வி. தொற்று நோயாளிகளின் சரிதம் எழுதப்படுவது விழிப்புணர்வுக்காகவும், சிந்திப்போம், சிந்திக்க வைப்போம் என்ற உணர்வுடனேயேயாகும். இன்று நாம் காணப்போவது அப்பாவியான ஒரு கிராமத்து பெண்ணின் சோகக் கதையாகும். எனது பெயர் பொடி மெனிக்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நான் மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த வெற்றிலைக்கு பெயர் கொண்ட கிராமத்தைச் சேர்ந்தவள். எனக்கு வயது இப்போது இருபத்தெட்டு. இரண்டு ஆண் பிள்ளைகள். மூத்தவனுக்கு வயது ஐந்து வருடம் ஒன்பது மாதம். இளையவனுக்கு வயது பதினெட்டு மாதங்களே. எனது கணவர் வெற்றிலை தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகின்றார். பொடி மெனிக்கா வறுமையோடு வாழ்கிறார் என்பதை அவளின் முகமும் உடையும் அடையாளப்படுத்தியது. முகம் முழுவதிலும் சோகம் து…

  8. -எம்.எஸ்.முஸப்பிர் புத்தளம் - கொழும்பு வீதியில் தினமும் சில கோவேறு கழுதைகள் நின்றுகொண்டு வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துகின்றன. எவ்வளவு சத்தமிட்டாலும் இந்தக் கோவேறு கழுதைகள் அவ்விடத்தை விட்டு விலகிச் செல்லாமல் நிற்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    • 1 reply
    • 474 views
  9. பியூனோஸ்: தாயின் கள்ளக்காதலனால் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமான 14 வயது சிறுமியின் கருவை கலைக்க அர்ஜென்டினா நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அர்ஜெண்டினா தலைநகர் பியுனோஸ் ஐரெஸ்-சில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சால்டோ என்ற நகரில் வாழ்ந்து வரும் ஒரு நடுத்தர வயது பெண், தனது கணவரை விவாக ரத்து செய்துவிட்டு கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வந்தர். முதல் கணவர் மூலம் பிறந்த தனது 14 வயது மகளையும் தன்னுடன் வைத்து அவர் வளர்த்து வந்தார். சம்பவத்தன்று, அந்த பெண் வெளியே சென்றிருந்தபோது குடிபோதையில் இருந்த அவரது கள்ளக்காதலன் வீட்டில் தனிமையில் இருந்த சிறுமியை பலாத்காரம் செய்து விட்டார். தற்போது 9 வார கருவை வயிற்றில் சுமந்திருக்கும் தன் மகளுக்கு கருக்கலைப்பு செய்வதற்காக …

    • 31 replies
    • 1.8k views
  10. 52 வயது கணவரின் சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் தனதாக்கிக்கொள்ள முயன்ற 27 வயதுடைய இளம் விதவையொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கணவரின் இறுதி விருப்பம் என்ற பெயரில் பல கோடி ரூபா பெறுமதியான வீடு, காணி மற்றும் பணம் போன்றவற்றை தன் பெயருக்கு மாற்றும் நோக்கில் இந்த போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த மோசடி நடவடிக்கைக்கு கொழும்பிலுள்ள பிரபல விகாரையொன்றின் விகாராதிபதியான தேரர் ஒருவரும் குறித்த பெண்ணின் தாயாருமே உதவி புரிந்துள்ளனர். இதனால், அவ்விருவரையும் போலி ஆவணங்களைத் தயாரித்த வழக்கறிஞர் ஒருவரையும் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தனது 57 வயதுடைய சகோதரர் உயிரிழந்ததன் பின்னர் சொத்துக்களை 27 வயதுடைய அவரது இரண்டாவது மன…

  11. பெங்களூரூ: பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா முறைப்படி தீட்சை ( சன்னியாசம் ) பெற்று நித்யானந்தாவின் சீடரானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தாவுடன் படுக்கையறையில் இருந்ததாக வீடியோ ஒளிபரப்பானது. இது ஜோடிக்கப்பட்டது என்று நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக பல சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்தது. தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்டது. பல இடங்களில் இவருக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது. இன்று நித்யானந்தாவுக்கு 37வது பிறந்தநாள் ஆகும். இந்நிலையில் ரஞ்சிதாவுக்கு நித்தியானந்தா இன்று தீட்சை வழங்கினார். பிடதி ஆசிரமத்தில் உள்ள புனித குளத்தில் குளித்து, காவி உடை அணிந்த ரஞ்சிதா, நித்யானந்தாவிடம் சென்று தீட்சை பெற்றார். தொடர்ந்து ரஞ்சிதாவுக்கு மா ஆனந…

    • 18 replies
    • 1.5k views
  12. லக்னோ: உத்தர பிரதேசத்தில், பெற்றோர் அனுமதியில்லாமல், திருமணம் செய்து கொள்ளும் காதல் ஜோடிக்கு, போலீசாரே திருமணம் செய்து வைக்கின்றனர். ஆனால், பெண்ணை திருமணம் செய்ய விரும்பும் ஆண், மணப்பெண்ணின் வங்கிக் கணக்கில், 50 ஆயிரம் ரூபாய், 'டெபாசிட்' செய்ய வேண்டும் என்று போலீசார் நிபந்தனை விதிக்கின்றனர். உத்தரபிரதேசத்தில் காதல் திருமணங்கள், சமீப காலமாக அதிகரித்துள்ளன. ஜாதி மாறி, மதம் மாறி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு, போலீசாரும் ஆதரவாக உள்ளனர். மாநில, டி.ஜி.பி., தேவ்ராஜ் நாகர், அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், சில நாட்களுக்கு முன், அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளும், காதல் ஜோடிகளை தடுக்க வேண்டாம். மாறாக, அந்தப் பெண்ணின், வங்கிக்கணக்கில், 50 ஆயி…

  13. ஆர்ஜெண்டினாவில் உள்ள பரானா என்ற ஆற்றில் மாமிசம் உண்ணும் மீனினமான பிரானா மீன் கடித்து 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இச் சம்பவத்தில் 20 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். 7 வயதுடைய சிறுமி தனது கை விரலின் ஒரு பகுதியை இழந்ததோடு ஏனையோர் தமது கணுக்கால், விரல்கள் மற்றும் கைகளில் ஆழமான வெட்டு காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து அந்நாட்டு கடல்சார் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் பெட்ரிகோ கார்னியர் கருத்து தெரிவிக்கையில், இங்கு நிலவிய 100 டிகிரி வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஆயிரக்கணக்கான மக்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கூர்மையான பற்களை உடைய பிரானா வகை மீன் கடித்ததில் அவர்களின் கை மற்றும் கால்களில் காயங்கள் ஏ…

  14. திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் புதன்கிழமை 21 மணிநேரம் காத்திருந்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி வெங்கடேசப் பெருமாளை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்கள், பிரம்மோற்சவம் உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கானவர்கள் திருமலைக்கு வருவது வாடிக்கை. அனைத்து மாநிலங்களிலும் தேர்வு முடிந்து பள்ளிக் கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், கிறிஸ்துமஸ் தின விடுமுறைகள் காரணமாகவும் திருமலை ஏழுமலையானை தரிசிக்க தற்போது பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை தர்ம தரிசன பக்தர்கள் 31 கம்பார்ட்மென்ட்களை கடந்து 1 கிலோ மீட்டர் தொலைவிலும், நடைபாதை பக்தர்கள் 12 கம்பார்ட்மென்ட்களிலும், ரூ.300 விரை…

  15. மும்பையில் செயல்படும் மிக பெரிய வர்த்தகம்..! மிகப் பெரிய நிறுவனம்... 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள்... பக்காவான தொழில் பயிற்சி... மாத வருவாய் 15 கோடிக்கு மேல்... ஊழியரின் சம்பளம் 15 ஆயிரத்துக்கு குறைவில்லை... என்ன, இப்படிப்பட்ட பெரிய கம்பெனியில் வேலை கிடைக்கலையேன்னு நினைக்கத் தோன்றுதா... சாரி, அந்த எண்ணத்தை மாத்திக்குங்க. இது, முழுக்க முழுக்க ‘பிச்சை’ பிசினஸ் விவகாரம். மொழி, இனம் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் மும்பை சாலைகளில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்கள், தங்களின் பாஸுக்கு மாதந்தோறும் சம்பாதித்து தரும் தொகைதான் ரூ. 15 கோடி. தொழிலாளிக்கோ ஒருநாள் சம்பளம் ரூ. 500. நாளுக்கு நாள் மாறி வரும் தொழில்நுட்பத்தை கற்றுத் தருவதற்காக பல கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங…

  16. திருப்பூர் அருகே 6 வயது சிறுவனை அயர்ன் பாக்ஸ் மூலம் சூடு வைத்து சித்ரவதை செய்ததாக மதரசா பள்ளி நிர்வாகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அப்துல் ஹக்கீம் என்பவர் தனது மகன் இப்ராகிமை, அரபு மொழி கற்பதற்காக மங்கலம் அருகே புதூரில் மதரசா பள்ளியில் சேர்த்துள்ளார். இந்தநிலையில் மகனை பார்க்க சென்றபோது பள்ளி நிர்வாகி முகமது ஷேக் பரீக், இப்ராகிமை காட்டாமல் மறைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த அப்துல் ஹக்கீம், தொடர்ந்து வலியுறுத்தியதால் மகனை பார்க்க அனுமதிக்கப்பட்டார். அப்போது மகனின் உடலில் பல பகுதிகளில் காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் மகனை மருத்துவமனையில் சேர்த்தார். இதுகுறித்து மங்கலம் காவல்நியைத்தில் அப்துல் ஹக்கீம்…

  17. அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள மேன்ஹட்டன் நகரில் உள்ள 52 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ஒரு தந்தை தனது 3 வயது மகனுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 35 வயது மதிக்கத்தக்க நபர், தனது மகனை கட்டி பிடித்தபடி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதில், சம்பவ இடத்திலேயே தந்தை உயிரிழக்க, சிறுவன் படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=99734&category=WorldNews&language=tamil

  18. தெஹிவளை மிருகக் காட்சிசாலையின் ஊர்வன பிரிவிலுள்ள பெண் அனகொண்டா ஒன்று ஆண் அனகொண்டா ஒன்றினை விழுங்கியுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இரு அனகொண்டாக்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதலின் போதே ஆண் அனகொண்டாவை பெண் அனகொண்டா விழுங்கி உள்ளதாக மிருகக் காட்சிசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. பத்து அடி நீளமான இந்த பெண் அனெகொண்டாவால் ஒன்பது அடி நீளமான ஆண் அனகொண்டாவே விழுங்கப்பட்டுள்ளது. குறித்த அனகொண்டாக்களை வேறாகப் பிரித்து வைக்குமாறு பலமுறை மிருகக்காட்சிசாலை அதிகாரிகளுக்கு தெரிவித்த போதிலும் கூட அது கவனத்தில் எடுக்கப்படவில்லையென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 2004 ஆம் ஆண்டு மிருகக் காட்சிசாலைக்கு கொண்டு வரப்பட்ட இந்த ஜோடி மூலம் பல அனகொண்டா குட்டிகள் கிடைக்கப…

    • 14 replies
    • 1.3k views
  19. தூக்கக் கலக்கத்தில் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து, ரயிலை நிறுத்தியவர் கைது. ராமநாதபுரம்: பாம்பன் பாலத்தில் ரயிலை நிறுத்திய மாணவரை போலீசார் கைது செய்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு, சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பாம்பன் பாலத்தில் வந்த போது, திடீரென நடு வழியிலேயே நிறுத்தப்பட்டது. இனால் ரயிலில் இருந்த பயணிகள் பலரும் பாலத்தில் பிரச்சனையா அல்லது ரயிலில் பிரச்சனையா என அதிர்ச்சி அடைந்தனர். இதனால், உஷாரான ரயிலில் பாதுகாப்புக்கு வந்த போலீசார், ரயிலின் முன்பதிவு பெட்டியில் ரயில் உள்ள அபாய சங்கலியை ஒருவர் இழுத்ததை கண்டறிந்து, அப் பெட்டிக்கு சென்று, பாலத்தில் ரயில் செல்லும் போது, அபாய சங்கலியை இழுத்தவர் குறித்து விச…

  20. சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் பொது இடத்தில் நிர்வாணமாக திருமணம் செய்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். பொதுவாக பொது இடங்களில் நிர்வாணமாக நடப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிராக நிர்வாண கிளப் என்ற ஒன்றை ஆரம்பித்து அதன் உறுப்பினர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அதன் உறுப்பினர்களான காதல் ஜோடி ஒன்று பொதுஇடத்தில் நிர்வாணமாக திருமணம் செய்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். காதல்...திருமணம் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்த பார் நடனப் பெண் ஸிப்சி தவுப். நிர்வாண கிளப்பில் உறுப்பினராக சேர்ந்த ஸிப்சி, அங்கிருந்த மற்றொரு உறுப்பினர் ஜேம்ஸ் ஸ்மித்தை காதலிக்கத் தொடங்கினார். கொளகைப்படி.... இருவரும…

  21. யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக அடிக்கடி சைக்கிள்கள் திருடிச் செல்லப்படுகின்றன. எனினும் அவை மீட்கப்பட்டதாகவோ திருடர்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவோ தெரியவில்லை என மக்கள் பெரும் விசனம் தெரிவிக்கின்றனர். இதேவேளை, யாழ்.கந்தர்மடம் பகுதியில் அண்மையில் சுவாரஷ்யமான சம்பவமொன்று இடம்பெற்றது. இளைஞரொருவர் திருநெல்வேலிச் சந்தியிலிருந்து வந்துக் கொண்டிருந்த சமயம் நபரொருவர் கொச்சைத் தமிழில், தான் அவசரமாக கொழும்புக்கு செல்ல வேண்டுமெனவும், தயவு கூர்ந்து தன்னை யாழ்ப்பாணம் பஸ் நிலையமருகில் கொண்டு சென்று இறக்குமாறும் மன்றாடியுள்ளார். முதலில் மறுத்த குறித்த இளைஞன், பின்னர் பாவம் எனக் கருதி அந்த நபரை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் புறப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பஸ் நிலையத்தை அடைந்ததும் அப்…

  22. ’முதல்வன்’ திரைப்பட பாணியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் டெல்லி முதல்வ ராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக அவர் பொது மக்களிடம் கருத்து கேட்டு எழுதிய கடிதத்துக்கு வெள்ளிக்கிழமை வரை ஆறு லட்சம் பதில்கள் குவிந்துள்ளன. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியினர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைப்பது ’நித்திய கண்டம் பூரண ஆயுசு’ போன்றதுதான். ஒருவேளை அவ்வாறு ஆட்சி அமைத்தால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரை கண்டிப்பாக ஆபத்து இருக்காது. எனவே, ‘நாயக்’ (முதல்வன் படத்தின் இந்திப் பதிப்பு) திரைப்படத்தில் நாயகன் ஒரு நாள் முதல்வரானது போல், அர்விந்த் கேஜ்ரிவால் ஆறு மாதங்களுக்கு முதல்வராகலாம். இதில், ’நாயக்’ நாயகன் போல், …

    • 2 replies
    • 518 views
  23. -ரொமேஸ் மதுசங்க தெற்காசியாவின் மிகவும் உயரமான கிறிஸ்மஸ் மரம் கிளிநொச்சியில் தயாரிக்கப்பட்டுள்ளது. 116 அடி உயரம் கொண்ட இந்த சிறப்பு வாய்ந்த கிறிஸ்மஸ் மரமானது, 75க்கும் மேற்பட்ட படையினர் தயாரித்துள்ளனர். 50 அடி விட்டமும் 116 அடி அகலமும் கொண்டதாகவும், 59,000 மின் குழிழ்களை கொண்டதாகவும் இந்த கிறிஸ்மஸ் மரம் தயாரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினரால் கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டே இந்த கிறிஸ்மஸ் மரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டம் இடம்பெறவுள்ளது. கரோல் கீதங்கள், கிளிநொச்சி மாணவர்களுக்கான புலமைப் பரிசில்கள், ஒரு மில்லியன் பெறுமதியான இறக்குமதி செய்யப்பட்ட 3 பந்தை…

  24. பங்களாதேசில் கடந்த ஆண்டு, இந்து மதத்தைச் சேர்ந்தவரைக் கொலை செய்த வழக்கில், எட்டு பேருக்கு மரண தண்டனையும், 13 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.பங்களாதேசில், கடந்த ஆண்டு, டிச., 9ம் தேதி நடந்த, நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் போது, ஆளும், "அவாமி லீக்' கட்சியைச் சேர்ந்தவர்கள், தாகா நகரில், பகதூர் ஷா பூங்காவில், விஸ்வஜித் என்பவரை கொலை செய்தனர். இந்த சம்பவம், பங்களாதேசில் "டிவி'க்களில், நேரடியாக ஒளிபரப்பானதையடுத்து, கொலையாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம், இந்த வழக்கை, தாகா நகர நீதிபதி, நிஜாமுல் ஹக், 10 நிமிடங்களில் விசாரித்து முடித்து, தண்டனை வழங்கினார். பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையில், விஸ்வஜித்தை கொலை செய்த, ஆளும் கட்சியி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.