Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. டோக்கியோ: தான் வளர்த்து வரும் 120 பூனைகளுக்கு உணவளிப்ப்பதற்காக, கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான பணம் மற்றும் நகைகளைத் திருடிய நபர் ஒருவரை ஜப்பான் போலீசார் கைது செய்துள்ளனர். ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள இசுமி நகரைச் சேர்ந்தவர் 48 வயது மமோரு டெமிஸ் என்ற நபர். வருமானத்திற்கென வேலை எதையும் செய்யாத இந்நபர், வீட்டில், தெருவிலும் என மொத்தமாக கிட்டத்தட்ட 120 பூனைகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து வந்துள்ளார். பூனைகளை தனது நண்பர்களைப் போல் பாவித்து வளர்த்த டெமிஸ், அவற்றிற்கு உணவிடுவதற்காக இதுவரை 32 இடங்களில் கொள்ளையடித்துள்ளாராம். இதுவரை அவர் கொள்ளையிட்ட பொருட்களின் மதிப்பு, 185 ஆயிரம் அமெரிக்க டாலர் ஆகும். அதாவது, இந்திய மதிப்பில் ரூ ஒரு கோடியே 14 லட…

  2. முகப்புத்தகத்தில் கிடைத்த தகவலை யாழ் உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறேன். You can send gifts to your love one in Jaffna . யாழ்பாணத்திற்கு இப்போ இணையத்தினூடாக பரிசுப்பொருட்கள் அனுப்ப http://www.yarlolai.com/cart/

  3. தனது காத­லி­யுடன் எதிர்­வரும் நத்தார் பண்­டி­கைக்­காக ஆடை வாங்­கு­வ­தற்கு ஆடை­ய­க­மொன்­றுக்கு சென்ற காதலர் ஒருவர், காதலி பிறி­தொரு ஆடைக் கடைக்கு செல்­வ­தற்கு அடம் பிடித்­ததால் சின­ம­டைந்து ஆடை­யகம் அமைந்­தி­ருந்த 7 மாடிக் கட்­டிடத் தொகு­தியில் இருந்து குதித்து பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்த சம்­பவம் சீனாவில் இடம்பெற்­றுள்­ளது. கிழக்கு சீனா­வி­லுள்ள ஜியாங்­ஸு மாகா­ணத்தைச் சேர்ந்தத வோ ஹஸி­யவோ (38 வயது) என்ற காத­லனே சம்­பவ தினம் ஸுஸொயு நக­ரி­லுள்ள ஆடை­ய­கத்­துக்கு தனது காத­லி­யுடன் சென்­றுள்ளார். இந்­நி­லையில் அந்த ஆடை­ய­கத்தில் 5 மணித்­தி­யா­லங்­களை காதலி செல­விட்டு ஆடை­களை கொள்­வ­னவு செய்­த­தை­ய­டுத்து, தவோ ஹஸி­யவோ வீடு திரும்­பு­வ­தற்கு காத­லியை கோரி­யுள்ளார். இந்­நி­லைய…

  4. ரயில் சாரதி இல்லாமல் ரயில் இன்ஜின் ஒன்று பயணித்த சம்பவமொன்று இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. தெமட்டகொடையில் ரயில்கள் நிறுத்திவைக்கப்படும் இடத்திலிருந்து இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் ரயில் சாரதி இல்லாது, மேற்படி ரயில் இன்ஜின் தானாகவே இயங்கி பயணித்துள்ளது. இவ்வாறு பயணித்த மேற்படி ரயில் இன்ஜின் கல்கிஸைக்கும் இரத்மலானைக்கும் இடையில் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு ரயில் இன்ஜின் பயணித்துள்ள நிலையில் விபத்துக்கள் எதுவும் சம்பவிக்கவில்லை எனவும் அவர்கள் கூறினர். இந்த ரயில் இன்ஜின் தற்போது இரத்மலானை ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த ரயில் இன்ஜின் சாரதியும் அவரது உதவியாளரும் உடனட…

  5. மேற்கத்தேய நாடுகளில் குளிர்காலம் ஆரம்பித்துவிட்டால் விபத்துக்களுக்கு குறைவே இருக்காது. சாரதிகள் எவ்வளவு கவனமாக வாகனங்களைச் செலுத்தினாலும், அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒருவாகனம் விபத்திற்குள்ளானால் தொடர்ச்சியாக பின்னால் வரும் வாகனங்களும் விபத்திற்குள்ளாகிவிடும். இவ்வாறான நேரடி காட்சிப் பதிவுகள் சிலவற்றை நாம் ஏராளமாக பார்த்திருப்போம். ஐந்து நிமிடங்களில் 41 முதல் 45 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளான சம்பவமொன்று கடந்த சனிக்கிழமை பதிவாகியுள்ளது. நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த போக்குவரத்து ஆணையத்திற்கு சொந்தமான கமராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளன. கட்டுக்கடங்காமல் போன இந்த விபத்துக்களினால் முன்னதாக விபத்திற்குள்ளான வாகன ஓட்டுநர்கள் அவசர அவசரமாக இறங்கி வீதி …

  6. அண்மையில் பிரிட்டனை தாக்கிய கடற்பெருக்கம் மற்றும் சூறாவளி காரணமாக தாய்மாரைப் பிரிய நேரிட்டு இறந்தவர்கள் போக மிஞ்சியுள்ள கடற்சிங்கக் குட்டிகளின் பரிதவிப்பு.. இதயத்தின் நெகிழ்வுப் பக்கத்தை மீண்டும்.. கிளறிவிடுகிறது. இப்போது இந்தக் குட்டிகள் பராமரிப்பு நிலையத்தை அடைந்திருந்தாலும் தாயை தேடும் அவலம்.. தொடர்கிறது. http://www.bbc.co.uk/news/uk-25313572

  7. 4,500 வருடங்கள் பழைமையான நியோலித்திக் யுக நகரொன்றை சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்நகர் சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள அனுஹி மாகாணத்தில் கடந்த புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ட்ரபெஷொய்டல் நகர சுவர், நன்சென்ங்ஷி இடிபாடுகள் அவற்றுடன் சேர்த்து சில வீடுகள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டதாக வுஹான் பல்கலைக்கழக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் 2000 வருடங்களுக்கு முற்பட்ட மான் தலைகள், கொம்புகள், ஆமை ஓடுகள், கோதுமை மற்றும் நெல் விதைகள் போன்றனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். இது குறித்து வுஹான் பல்கலைக்கழக பேராசிரியல் ஹி ஷியோலின் கூறுகையில், இந்த கண்டுபிடிப்பு வரலாற்று, சமூக ம…

  8. Started by Maruthankerny,

    India Could Be Kicked Out Of Olympics For Keeping Corruption-Tainted Officials, Says IOC President By STEPHEN WILSON 12/07/13 10:04 AM ET EST 15 0 0 GET SPORTS NEWSLETTERS: SUBSCRIBE FOLLOW: International Olympic Committee, Olympics, India Ioc, India Olympics, Indian Kicked Out Of Olympics, Olympics Corruption, Sports Fails, Sports News LAUSANNE, Switzerland (AP) — India faces the ultimate sanction of expulsion from the Olympics unless it keeps corruption-tainted officials out of its ranks, IOC President Thomas Bach said in an interview with The Associated Press. Bach said the IOC is prepared to withdraw recognition of the Indian Olym…

  9. நியூயார்க்: அமெரிக்க நிறுவனம் ஒன்று பீருக்கு இந்து கடவுளான சிவனின் பெயரை வைத்ததுடன் அவரது புகைப்படத்தை பாட்டிலில் ஒட்டியுள்ளதற்கு உலக இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமெரிக்க, ஆஸ்திரேலிய நிறுவனங்கள் தங்களின் பீர் பாட்டில்களில் இந்து கடவுள்களின் புகைப்படங்களை போட்டு சர்ச்சையில் சிக்கின. பின்னர் அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டன. இந்நிலையில் அமெரிக்காவின் வட கரோலினாவில் உள்ள ஆஷ்வில் ப்ரூயிங் கம்பெனி புது சர்ச்சையில் சிக்கியுள்ளது. http://tamil.oneindia.in/news/international/upset-hindus-urge-withdrawal-lord-shiva-beer-188989.html காளிமா முன்னதாக அமெரிக்க பீர் நிறுவனமான பர்ன்சைட் ப்ரூயிங் கம்பெனி தான் தயாரித்த பீருக்கு இந்து கடவுளான காளியின் பெயர…

    • 1 reply
    • 655 views
  10. வங்கியில் பெற்ற கடனை மீளச் செலுத்துவதற்காக தனது மனைவியை வேறொரு நபருடன் தகாத நடத்தையில் ஈடுபடுமாறு வற்புறுத்திய கணவனை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சர் தமயந்த விஜேஸ்ரீ தெரிவித்தார். யாழ்.பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கணவனுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மனைவி செய்த முறைப்பாட்டையடுத்தே பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளனர். இச் சம்பவம் யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. குறித்த வீட்டில் வவுனியாவில் இருந்து வந்து தங்கியிருந்த யுவதி ஒருவர் தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் அதன் அடிப்…

  11. மன அழுத்­தத்தை கண்­டு­பி­டித்து எச்­ச­ரிக்­கக்­கூ­டிய மார்புக்கச்­சை­யொன்றை அமெ­ரிக்க வாஷிங்டன் நகரை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­படும் பல்­தே­சிய தொழில்நுட்பக் கம்­ப­னி­யான மைக்ரோ சொஃப்டைச் சேர்ந்த ஆய்­வா­ளர்கள் வடி­வ­மைத்­துள்­ளனர். இரு­தய மற்றும் தோல் செயற்­பா­டு­களை கண்­கா­ணிக்கும் அகற்­றக்­கூ­டிய உணர்கரு­வி­களைக் கொண்ட இந்த மார்­புக்­கச்சை பயன்­பாட்­டா­ள­ரது மன நிலையில் ஏற்­படும் மாற்­றங்­களை சுட்டிக் காட்­டு­கி­றது. மன அழுத்­தத்­துடன் தொடர்­பு­டைய அள­வுக்­க­தி­க­மாக உண்ணும் பழக்­கத்தை குணப்படுத்துவதை இலக்­காகக் கொண்டே இந்த அணி­யக்­கூ­டிய தொழில்நுட்பம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. உணர்­க­ரு­விகள் இரு­த­யத்­துக்கு நெருக்­க­மாக இருப்­பதை உறு­திப்­ப­டுத்­து­…

  12. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 5 பெண்கள் யுக்ரைன் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச்சுக்கு எதிராக அவரது புகைப்படத்தின் மீது சிறுநீர் கழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலாடையின்றிய (டொப்லெஸ்) ஆர்ப்பாட்டங்களுக்கு பெயர் போன் பிமென் (குநஅநn) பெண்ணியவாத குழுவைச் சேர்ந்த பெண்களே இவ்வாறு ஆர்ர்ப்பாட்டம் செய்துள்ளனார். வழக்கமாக மேலாடையின்றி ஆர்ப்பாட்டம் செய்யும் இக்குழுவினர் இம்முறை வி;ததியாசமாக கீழாழையின்றியும் (பொட்டம்லெஸ்) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வார்ப்பாட்டம் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் உள்ள யுக்ரைன் நாட்டு தூதுவராலயத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. யனுகோவிச் அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வியாபாரம் மற்றும் கூட்டு ஒப்பந்தத்தினை நிராகரித்திருந்தார். …

  13. 2014 புது வருட பட்டாசு வான வேடிக்கை: துபை உலக சாதனை? இந்த புது வருடத்தை உற்சாகமாக வரவேற்று கொண்டாடுவதில், துபை கின்னஸ் சாதனையில் இடம்பெறப் போகிறது. துபை, பாம்(Palm Islands) தீவுகளின் மீதும், உலகத்(World Islands) தீவுகளின் மீதும் தொடர்ந்து கொளுத்தப்படபோகும் மிகப் பிரமாண்டமான பட்டாசு வான வேடிக்கைகள், சென்ற வருடம் குவைத் தனது ஐம்பதாவது வருடத்தை கொண்டாடிய வான வேடிக்கை திருவிழாவை விட அதிக நேரத்திற்கு அதாவது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக வானில் வெடிக்கப் போகிறது. குவைத் தனது வான வேடிக்கையில், 77,282 பட்டாசு வகைகளை ஐந்து கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு மணி நான்கு நிமிடம் வரை தொடர்ச்சியாக வெடித்து ரசிகர்களை மகிழ்வித்து கின்னஸ் சாதனை நிகழ்த்திக் காட்டியது.…

  14. 'பாஸ்ட் அன்ட் பியூரிஸ்' திரைப்படப் புகழ் ஹொலிவூட் நடிகர் போல் வோகர் வாகன விபத்துக்குள்ளாகி திடீர் மரணமடைந்தமையால் அவரின் காதலியான ஜெஸ்மின் இதயம் நொருங்கிப்போனவராக காணப்படுகிறார் என ஜெஸ்மினின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சனிக்கிழமை மாலை (இலங்கை நேரப்படி ஞாயிறு அதிகாலை) ஆடம்பர போர்ஸ்ச் காரில் பயணம் செய்த நடிகர் போல் வோகரும் காரை செலுத்திய அவரின் நண்பர் ரோஜர் ரொடாஸும் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பலியாகியமை குறிப்பிடத்தக்கது. போல் வோகருக்கு 40 வயது. ஆனால் அவரின் காதலி ஜெஸ்;மின் பில்சார்ட் கொஸ்னலுக்கு 23 வயதுத்தான் ஆகிறது. இவர்கள் இருவரும் 2006 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். இவர்கள் முதலில் சந்தித்தபோது, 16 வயது சிறுமியாக…

  15. 2009 ஆம் ஆண்டு தனது 15 வயதிலேயே டைவிங் போட்டியில் உலக சம்பியன் பட்டம் வென்றவர் டொம் டேலி. கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் அவர் வெண்கலப்பதக்கத்கத்தை வென்றார். தற்போது 19 வயதான டொம் டேலி, தான் ஆண் ஒருவரை காதலிப்பதை யூரியூப் மூலம் தனது தனது ரசிகர்களுக்கு பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆனாலும் யுவதிகள் மீதும் தான் இன்னும் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவர் ஏற்கெனவே, அமெரிக்க டைவிங் (கரணமடித்தல்) வீராங்கனையான காஸிடி குக் என்பவரை காதலித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தான் சில மாதங்காக ஓர் ஆணை காதலிப்பதாகவும் முன்னரைவிட மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும் நேற்று முன்தினம் கூறியுள்ளார். டொம் டேலிக்கு அவரின் தாயார் ஆதரவாக உள்ளாராம். ஆனால், அவரின் குடும்பத்தில் ஏனையோ…

  16. சீனாவைச் சேர்ந்த பெண்; ஒருவர் தனக்கு ஆடம்பர காரொன்றை வாங்கித் தருவதற்கு கணவரை நிர்ப்பந்திக்கும் நோக்குடன் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த காரை உராய்ந்து சேதப்படுத்திய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. தனது கணவர் ஒருவர் தன்னை விட இளமையாக தோற்றமளிப்பதால் இப்பெண் மிகவும் பொறாமைக்கொண்டிருந்தாராம். இவர்கள் இருவரும் சீனாவில் நடைபெற்ற வாகனக் கண்காட்சியொன்றில் கலந்துகொண்டபோது அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 42 லட்சம் பெறுமதியான காரின் மேற்பரப்பை திடீரென உராய்ந்து சேதப்படுத்தத் தொடங்கினார். காரை சேதப்படுத்திவிட்டால் அதை விலைகொடுத்து வாங்குவதற்கு தனது கணவர் நிர்ப்பந்திக்கப்படுவார் என்பதே இப்பெண்ணின் நோக்கம். 'திருமணத்தின்பின் நான் வயதான தோற்றத்துக்கு மாறிக்கொண…

  17. டொரண்டோ: கனடாவைச் சேர்ந்த ஒரு வாலிபர் தற்கொலை செய்து கொள்வதை நேரடியாக இணைய தளத்தில் ஒளிபரப்பினார். இதனை 200க்கும் மேற்பட்டோர் பார்த்து 'ரசித்ததாகவும்' கூறப்படுகிறது. கனடாவின் டொராண்டோ நகரைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (20). கல்லூரி மாணவரான இவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். அதை ஒரு இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்ப இருப்பதாகவும் அறிவித்தார். அதன்படி தான் தற்கொலைக்கு முயற்சி செய்யும் காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பினார். அதை ஒரு சிலர் மட்டுமே பார்க்கவில்லை. இவனுக்கு வேறு வேலை இல்லை என கூறி இணையதளத்தை ‘ஆப்' செய்தனர். ஆனால், பெரும்பாலானவர்கள் நேரில் பார்த்து ரசித்தனர். தொடக்கத்தில், மாணவர் ஸ்டீபன் சில மாத்திரைகளை விழுங்கி தண்ணீர் குடித்தார். பின்னர் வோட்கா மதுவை குடி…

    • 2 replies
    • 808 views
  18. குணசேகரன் சுரேன் மதுபோதையில் நிர்வாணமாக இருந்த ஒருவர் மற்றொருவரின் வீட்டுக் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று அந்த வீட்டுக்காரர்களுடனேயே உறங்கிய சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்.ஓட்டுமடம் பகுதியிலேயே இந்த சம்பவம்; இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. அதே பகுதியினைச் சேர்ந்த நபர் ஒருவரே மற்றொருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து உறங்கியுள்ளார். வீட்டின் முன்பக்க கதவினை உடைத்துகொண்டு வீட்டிற்குள் சென்று குறித்த நபர் வீட்டில் ஆழ்ந்த நித்திரையிலிருந்தவர்களுடன் இணைந்து தானும் உறங்கியுள்ளார். கண்விழித்த வீட்டு காரர்களில் ஒருவர் புதிய ஒருவர் அதுவும் அலங்கோலமாக உறங்கிக்கொண்டிருப்பதை கண்டு வீட்டிலிருந்த ஏனையவர்களுக்கும் அறிவித்துள்ளார். இதன…

  19. காதல் வாழ்க்கைக்கு தனது பச்சிளங் குழந்தை இடையூறாக இருப்பதாகக் கருதிய தாயொருவர் மகளை தள்ளுவண்டி சகிதம் கடலில் தள்ளிய விபரீத சம்பவம் பிரான்ஸின் பாரிஸ் நகரில் இடம்பெற்றுள்ளது. செனகலை பிறப்பிடமாகக் கொண்ட பபியன்னி கபோயு, (36 வயது) என்ற மேற்படி தாய் தனது 15 மாத மகளான அடெலெயிட்டை கடற்கரைக்கு தள்ளுவண்டியில் தள்ளி வந்து நிதானமாக ஆங்கிலக் கால்வாயினுள் தள்ளும் காட்சி 'சிசிரிவி" கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது. கடந்த நவம்பர் 19 ஆம் திகதி இடம்பெற்ற இந்த கொடூர படுகொலை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்நிலையில் மறுநாள் மேற்படி பாலகியின் சடலம் தள்ளுவண்டியில் சிக்கிய நிலையில் கடலில் மிதந்தந்துள்ளது. இதனையடுத்து அந்த பாலகியின் பெற்றோரைத் தேடி நாடளாவிய ர…

  20. லைட் வால்பிரி மொழியை எப்படி பேசுவார்கள்? - ஆஸ்திரேலிய லஜாமனு என்ற நகரொன்றின் மொத்த சனத்தொகை 850 என்பதுடன் இதில் லைட் வால்பிரியைப் பேசுபவர்கள் அனைவரும் 35 வயதுக்குக் குறைந்த 350 மக்கள் பேர் என்பது ஆச்சரியமாக இருக்கின்றதா? இதைப்பற்றிய விரிவான செய்தி இங்கே அதற்கு முன்னர் இம்மொழியை எப்படி பேசுகின்றார்கள் என அறிவதற்கு http://www.4tamilmedia.com/lifestyle/listen-song/15693-listen-light-warlpiri

  21. மும்பை: பிரபலமான பெண்மணிகள் தங்களின் குடும்ப வாழ்க்கையும், பணியையும் எப்படி பேலன்ஸ் செய்து வெற்றி பெறுகிறார்கள் என்பது பலரது கேள்வி. அரசியலாகட்டும், விளையாட்டு, கார்ப்பரேட் துறை, சினிமா என பல துறைகளிலும் இவ்வாறு வெற்றி பெற்ற பெண்மணிகள் பலர் இருக்கின்றனர். இந்தியாவில் உள்ள பிரபல பெண்மணிகளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அனைவரையும் கவர்ந்த தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தையும், அரசியல் வாழ்க்கையும் அவர் சரிசமமாக பேலன்ஸ் செய்யும் பிரபல பெண்மணிகள் பற்றி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இது தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதும் 5100 பெண்களிடம் இது தொடர்பாக கருத்துக் கணிப்பு நடைபெற்றது. திருமணத் தகவல் இணையத்தளம் பிரபல பெண்மணிகள் பற்றி கேள்வி கேட்டது. அதில் சுவாரஸ்…

  22. தெரிந்து கொள்வோம்: கழு தைக்க (கழுதைக்குத்) தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும், கற்பூரத்திற்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை, காலத்தால் மருவியதே. https://www.facebook.com/photo.php?fbid=644553492269769&set=a.134953169896473.25916.126712174053906&type=1&theater

  23. MOSSAD, KGB , CIA போன்று உலகம் முழுவதும் பரிச்சயமான பெயர்கள் சில தான். ஆனால் 450 க்கும் மேற்பட்ட பரிச்சயமில்லாத உளவு நிறுவனங்கள் பல்வேறு அரசுகளுக்காக உலகம் முழுவதும் இன்று இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு அரசின் செயல்பாட்டிற்கு அத்தியாவசியமான அங்கமாக உளவு அமைப்புகள் இன்று கருதப்படுகிறது. இதனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்திருந்தான் ஒரு தமிழன். போர் செய்வதற்கு முன்பு எதிரிகளின் படை பலத்தை அறிந்து வருவதற்காக மட்டும் ஒற்றர்கள் பயன்படுத்தப்பட்ட காலத்தில், உளவு திரட்டலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து ஒரு உளவு அமைப்பு எப்படி இருக்க வேண்டும், இயங்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்து கொடுத்தான் அந்த ஆதி தமிழன். ஒற்றாடல் குறள் 581: ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்…

  24. எவருக்கும் அறிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிய மகனொருவர் இரு வருடங்கள் கழித்து வீடு திரும்பியபோது தனது கல்லறைக்கு தனது பெற்றோர் பூங்கொத்து வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் போலந்தில் இடம்பெற்றுள்ளது. சியட்லிஸ்கா நகரைச் சேர்ந்த ஜரோஸ்லாவ் கரோலின்ஸ்சி (38 வயது) என்ற மேற்படி நபர் 2011 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறினார். இந் நிலையில் கடந்த வாரம் மனம் மாறி வீடு திரும்பிய ஜரோஸ்லாவ் தனது கல்லறைக்கு பெற்றோர் பூங்கொத்து வைத்து அஞ்சலி செலுத்துவதைக் அவதானித்துள்ளார். இந்நிலையில் தனது கல்லறையில் ஏறிய ஜரோஸ்லாவ் 'ஹலோ அம்மா, அப்பா, நான் திரும்பி வந்துவிட்டேன்" எனத் தெரிவிக்கவும் அதிர்ச்சிக்குள்ளாகிய அவரது தாயார் மயங்கி விழுந்துள்ளார். உக்ரேனிய எல்லைக்கு அர…

  25. புயலில் சிக்கி உயிரிழந்த 9 வயது மகன் இன்னும் தங்களுடன் ஆவியாக வாழ்ந்து வருவதாக அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் வழங்கிய தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலமான ஒக்லஹோமாவில் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி புயலில் சிக்கி நிக்கொலஸ் மெக்காபே என்ற சிறுவன் உயிரிழந்தான். அச்சிறுவன் கல்விகற்ற பாடசாலையின் கட்டிடத்தை புயல் தாக்கியதால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன்பின்னர் நிக்கொலஸின் மைத்துனியான சிறுமியொருவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் அச்சிறுமிக்குப் பின்னால் இன்னுமொரு உருவம் இருப்பது அவதானிக்கப்பட்டது. அந்த உருவம் புயலில் சிக்கி உயிரிழந்த தன்னுடைய மகன்தான் என நிக்கொலஸின் தந்தை ஸ்கொட் மெக்காபே அதிர்ச்சி தர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.