Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கடவுளுடன் ஒரு #பேட்டி: ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது எனக்கு... “உள்ளே வா” – அழைத்த #கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா?” “ஆமாம்… உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்” கடவுள் சிரித்தார். “என் நேரம் முடிவற்றது எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்?” “மனித இனத்தில் உங்களை ஆச்சரியப்படுத்துவது எது?” கடவுள் சொன்னார்… “மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்… ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான். பணத்துக்காக உடல்நலனை இழக்கிறான்… பின்னர் இழந்த நலத்தைத் திரும்பப் பெற எல்லாப் பணத்தையும் இழக்கிறான்! எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கவலையுடன் யோசிப்பத…

  2. செத்து மடிவோமே அன்றி இலங்கைக்கு திரும்பப் போக மாட்டோம். துபாயில் சிக்கியுள்ள ஈழ அகதிகளின் கண்ணீர். --------------------------------------------------------------------- சர்வதேச நாடுகளுக்கு துபாய் ஈழ அகதிகளின் வேண்டுகோள். எங்களுக்கு புகலிடக் கோரிக்கை தர மறுக்கும் சர்வதேச குடியேற்ற நாடுகளே.!! எங்களுக்கு வீடு வாசல், வசதி வாய்ப்புக்கள், சுகபோக வாழ்க்கை எதுவும் தர வேண்டாம். உங்கள் நாடுகளில் ஏதாவது ஒரு காட்டுப் பகுதியில் ஒரு சிறிய இடம் தந்தாலே போதும், நாம் உயிரோடும், பாதுகாப்போடும், நிம்மதியோடும் வாழ்வதற்கு! ---------------------------------------------------------------------- இவ்வாறு துபாய் சிறையில் வாடும் ஈழத்து உறவுகள் கோரிக்கை வைத்திருப்பது தமிழ் சமூகத…

  3. உலகில் 6வது மகிழ்ச்சி மிக்க மக்கள் வாழும் நாடு கனடா என கணிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி ஐக்கிய நாடுகளின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. வாழ்க்கையின் எதிர்பார்ப்பு, சமூக ஆதரவு, தாராளமனப்பான்மை, வாழ்க்கை முறையினை தெரிவுசெய்வதற்கான ,பொருளாதாரம், ஊழல்களை கண்டுபிடிக்கும் ஆற்றல் போன்ற தொடர்காரணங்களே காரணமாகுமென கூறப்பட்டுள்ளது. மேற்படி கட்டளை விதிகளின் படி அவுஸ்ரேலியாவும், கனடாவும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளை விட மகிழ்ச்சியான நாடுகளாக கருதப்படுகின்றன. கிறீக்,இத்தாலி, ஜப்பான் நாட்டவர்கள் மகிழ்ச்சியற்ற நிலையில் உள்ளனர். டென்மார்க் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாகவும் கருதப்படுகின்றது. மேற்படி அறிக்கையை எழுதிய ஓய்வு பெற்ற பிரி…

  4. ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூரில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மணி தீக்குளிப்பு! :>>மனித உயிர் பலியை தடுத்து நிறுத்தி, மூளையை செயல்படுத்தி வெற்றி பெற வேண்டிய நேரம் இது. அவர் குடும்பத்தை நினைத்து வருந்துவதை தவிர வேறு வழியில்லை. https://www.facebook.com/photo.php?fbid=432794533478233&set=a.430430003714686.1073741826.430428090381544&type=1&theater

  5. 23 மாதத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால், நாட்டை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று தென் ஆப்ரிக்கருக்கு நியூசிலாந்து அரசு இறுதி கெடு விதித்துள்ளது. தென் ஆப்ரிக்கரான ஆல்பர்ட் புடேன்ஹஸ், அவர் மனைவி மார்த்தி, ஆறாண்டு முன்பு வேலை நிமித்தமாக நியூசிலாந்து வந்தனர். கிரிஸ்ட்சர்ச் பகுதியில் அவர்கள் குடியேறி னர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஆல்பர்ட் உடல் எடை மிக அதிகமாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் அவரின் வேலை நிமித்த விசா புதுப்பிக்கும் போது, குடியேற்ற துறை எச்சரித்து வந்தது. கடந்தாண்டு அவர் எடை 120 கிலோவை தாண்டியது. நீங்கள் உடல் எடையை குறைக்காவிட்டால் அடுத்த ஆண்டு விசா புதுப்பிக்கப்பட மாட்டாது என்று அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர். உடல் எடைய…

  6. சினிமாவில் வருவது போன்ற பரபரப்பான கொள்ளை சம்பவம் ஒன்றில், பிரான்சில் சுமார் 2.6 மிலியன் டாலர்கள் மதிப்புள்ள ஆபரணக் கற்களும், கைக்கடிகாரங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. முகமூடி அணிந்த கொள்ளையர், கார் ஒன்றை, பாரிஸ் நகைக்கடை ஒன்றின் ஜன்னல் வழியாக மோதி, உள்ளே நுழைந்து சில நிமிடங்களில் அங்கு இருந்த விலைமதிப்புள்ள கற்களையும் , கைக்கடிகாரங்களையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இதே போன்று பல கொள்ளைச்சம்பவங்கள் ஏற்கனவே பிரான்சில் நடந்துள்ளன. ஜூலையில்தான், 136 மிலியன் டாலர்கள் மதிப்புள்ள நகைகள் பிரென்சு நகரான கேனில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டன. 'ரோஜா சிறுத்தைகள்' ( பிங்க் பாந்தர்ஸ்) என்றழைக்கப்படும் ஒரு கிரிமினல் குழுதான் இதைச் செய்திருக்கவேண்டு…

  7. குதிரை வீரன் ! குதிரையின் மேல் வீரர்கள் அமர்ந்து இருக்கும் சிலைகளை நிறுவும் விஷயத்தில் ஒரு மரபு இருக்கிறது. குதிரையின் நான்கு கால்களும் கீழே ஊன்றி இருந்தால், அந்த வீரன் இயற்கையாக மரணம் அடைந்தான் என்று பொருள். குதிரையின் ஒரு கால் தூக்கிய நிலையில் இருந்தால், அந்த வீரன் போரில் காயம் அடைந்து, பிறகு இறந்தவன் என்று அர்த்தம். முன்னங்கால்கள் இரண்டும் தூக்கிய நிலையில் இருந்தால், அந்த வீரன் போரில் வீர மரணம் அடைந்தவன் என்று அர்த்தம். இனி குதிரை சிலைகளைப் பார்த்தால் இதையும் கவனியுங்க! ◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘ எங்களுடன் வலைத்தளத்தில் இணைய, இணையத்தள முகவரி:- www.thaayakam.com முகநூல் பக்கம்:- Thaayakam.Com ◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘

  8. நித்தியானந்தாவின் சிஷ்யையை மணக்கிறார்.. அவரது அண்ணன்! பெங்களூர்: நித்தியானந்தாவின் சிஷ்யை என்று கூறப்படும் மலேசியாவைச் சேர்ந்த நித்திய கீதானந்தா என்பவருக்கும், நித்தியானந்தாவின் உடன் பிறந்த அண்ணன் செந்தில்குமாருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாம். நித்தியானந்தாவுக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி உண்டு. அண்ணன் பெயர் செந்தில்குமார். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. 40 வயதாகிறது. நித்தியானந்தாவின் தந்தை இறந்ததும், தனது தாயார் மற்றும் தம்பியை தன்னுடனேயே அழைத்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அண்ணன் செந்தில்குமார் மட்டும் திருவண்ணாமலையில் தொடர்ந்து தங்கியுள்ளார். இந்த நிலையில் அவருக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. நித்தியானந்தாவின் சிஷ்யையானா மலேசியாவைச் சேர்ந்த சுபத்ரா எ…

  9. மம்மி, நா வந்துட்டேன்.... கதவைத் திறந்து பார்த்த அம்மா அதிர்ச்சி. லண்டன்: இங்கிலாந்தில் 2 வயது குட்டிப் பாப்பா ஒன்று தனது நர்சரிப் பள்ளியில் சேர்ந்த முதல் நாளிலேயே அங்கிருந்து நைஸாக வெளியேறி வீட்டுக்குத் தனியாகவே போய் வி்ட்டது. பாவம் பிஞ்சுக் கால்கள் வலிக்க வலிக்க ரொம்ப தூரம் தைரியமாக நடந்தே போய் விட்டதாம் இந்த குட்டிப் பாப்பா. பள்ளிக்கூட வாட்ச்மேன் வாசலில் காவல் காக்காமல், எங்கேயோ போய் விட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒரு பாலம், ரவுண்டானா என ரொம்ப தூரம் இந்த குட்டி வாண்டு நடந்து போயிருக்கிறது. சிறுமி வீடு போய்ச் சேரும் வரை பள்ளிக்கூடத்தில் யாருக்குமே அவள் காணாமல் போனது தெரியவில்லையாம். நர்சரியில் சேர்க்கப் பட்ட பாப்பா.... அந்தக் குட்டியின் பெயர் ல…

  10. நாடு முழுவதும், நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதை ஒட்டி, ஐதராபாத்தில் உள்ள, கைர்தாபாத் கணேஷ் விநாயகருக்கு, 4,000 கிலோ எடையில் "மெகா சைஸ்' லட்டு தயார் செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் உள்ள கணேஷ் மண்டலியின் சார்பில், 56 அடி உயர விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இது, "கைர்தாபாத் கணேஷ்' என, அழைக்கப்படுகிறது. இந்த விநாயகருக்கு, ராஜமுந்திரியில் உள்ள இனிப்புகள் தயாரிக்கும் நிறுவனம், 4,000 கிலோ எடையில் மெகா சைஸ் லட்டு தயாரித்து உள்ளது. நாளை துவங்கி, 10 நாட்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி உற்சவத்தில், இந்த மெகா சைஸ் லட்டு, விநாயகருக்கு படைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இதை தயாரிக்க, 1,600 கிலோ சர்க்கரை, 1,000 கிலோ கடலை பருப்பு, 900 …

  11. பிரிட்டிஷ் மகாராணியின் அதிகாரபூர்வ இல்லத்துக்குள் நுழைந்த திருட முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையின் காவல் கட்டமைப்புக்களை மீறி, பாதுகாப்பு வேலியை ஏறிக் குதித்து கடந்த திங்கள்கிழமை இரவு ஒரு நபர் உட்புகுந்துள்ளார். அரண்மனையில் உள்ளே இருக்கும், அரசத் தலைவர் சமூகமளிக்கும் தர்பார் அறையில் இந்த நபர் பிடிக்கப்பட்டுள்ளார். பொதுவாக பகல் நேரத்தில் இந்த அறை பார்வையாளர்களுக்கு திறந்துவிடப்படும். இந்த நபரோடு வந்த மற்றொருவர் அரண்மனைக்கு வெளியே கைது செய்யப்பட்டுள்ளார். குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சம்பவம் நடந்தபோது, அரச குடும்பத்தினர் யாரும் அரண்மனையில் இல்லை. கடந்த 1982 ஆம் ஆண்டு ம…

  12. தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர், நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய செய்தியை, தவறாக புரிந்து கொண்ட அமெரிக்க முன்னாள் அதிபர், ஜோர்ஜ் புஷ், இரங்கல் தெரிவித்தார். ஜூன் மாதம், உடல்நிலை பாதிக்கப்பட்ட மண்டேலா, சிகிச்சைக்காக, பிரிட்டோரியா நகர, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்தவாரம்,மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அமெரிக்காவின் முக்கிய பத்திரிக்கையான, "வாஷிங்டன் போஸ்ட்' மண்டேலா வீடு திரும்பியதை, தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. இச்செய்தியை அரைகுறையாக படித்த, அமெரிக்க முன்னாள் அதிபர், ஜார்ஜ் புஷ்சின் செய்தி தொடர்பாளர், ஜிம் மெக்கிராத், மண்டேலா இறந்து விட்டதாக, புஷ்சிடம் கூறியுள்ளார். இதையடுத்து, மண்டேலாவின் மறைவுக்கு இரங்கல் தெரி…

    • 11 replies
    • 889 views
  13. டொரண்டோவில் உள்ள York Unviersity பகுதியில் 18 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு வலைவீச்சு. டொரண்டோவில் உள்ள York University’s Keele கேம்பஸ் பகுதியில் 18 வயது பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டொரண்டோவில் உள்ள York University’s Keele கேம்பஸ் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் ஒரு 18 வயது பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் வந்த ஒரு வாலிபர் அந்த பெண்ணின் முன்பு பாட்டு பாடி டான்ஸ் ஆடி அவரிடம் அவரை தொட்டு தொட்டு பேசி, பின்னர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண், சத்தம் போட்டு கத்தியதும் ஆட்கள் …

  14. லண்டன்: இங்கிலாந்து என்பது யாரும் கண்டுகொள்ளாத ஒரு சிறிய தீவு என்று ஜி20 மாநாட்டில் ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் உள்ள புனித பீட்டர்ஸ்பெர்க்கில் ஜி20 மாநாடு நேற்று துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் மாநாடு நடக்கும் இடத்தில் ரஷ்ய பத்திரிக்கையாளர்களுக்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று இரவு பேட்டி அளித்தார். அப்போது அவர், இங்கிலாந்து யாரும் கவனிக்காத ஒரு சிறிய தீவு ஆகும் என்று கூறியதாக செய்திகள் வந்தன. இந்நிலையில் அதை மறுத்து அவர் இன்று காலை கூறுகையில், நான் இங்கிலாந்தை பற்றி அவ்வாறு கூறவே இல்லை. இந்த செய்தி எப்படி வந்தது என்று தெரியவில்லை. இங்கிலாந்து மற்றும் ரஷ்யாவிடையே நல்ல உறவு உள்ளது என்றார். ரஷ்யாவின் கரு…

  15. தமிழால் இணைவோம் அன்றே சொன்னார்... .................................. "நான் இந்தியா முழுவதும் பயனம் செய்தேன்.அங்கு ஒரு பிச்சைக்காரனையோ,திருடனையோ பார்க்க முடியவில்லை. செல்வ வளம் அங்கு கொட்டிக் கிடைக்கிறது.உயர்ந்த நீதி நெறிகள்,ஒழுக்கம் நிறைந்த மக்கள் காணப்படுகின்றனர். நாம் அந்த நாட்டை ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது என நினைக்கின்றேன். அவர்கள் ஆன்மீகம்,பண்பாடு என்ற பாரம்பரியம் உள்ளவர்கள். அந்த நாட்டின் இந்த முதுகெலும்பை உடைக்காமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே அவர்களது பழைய புராதனக் கல்வி முறையையும்,பண்பாட்டையும் அடியோடு அகற்ற வேண்டுமென்று நான் முன் மொழிகிறேன். அந்நிய மொழி என்று கருதாமல் நம்முடைய ஆங்கிலமே அவர்களது மொழியைவிட சிறந்தது என…

  16. Thamilmaran Kri பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ரா‌ஜ் ) பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரகாஷ்ராஜ். நடிக்க உள்ளார் சீமான் தயாரிப்பில் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ரா‌ஜ் நடிக்கிறார்.பிரபாகரன் வாழ்க்கை வரலாறு இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது.ஆக்சன் படங்களுக்கு‌ரிய விறுவிறுப்பும், திகில் படங்களுக்கு‌ரிய மர்மமும், மெலோ டிராமாக்களுக்கு‌ரிய சென்டிமெண்டும், செவ்வியல் படங்களுக்கு‌ரிய ச‌ரித்திரப் பின்னணியும், தியாகமும், வீரமும் நிறைந்தது தமி‌ழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை. அந்த வாழ்க்கையின் சிறு துளியை‌த் திரையில் கொண்டு வந்தால்கூட அதுவொரு பிரமாண்ட பெருமைக்கு‌ரிய ஆக்கமாக இருக்கும்.அதற்கான முயற்சியில் இறங…

  17. Sentamil Karthik வாரிசு என்று இருந்தால் அரசியலுக்கு வரத்தான் செய்வார்கள்... -ஸ்டாலின்... \\ இது சாதரண வார்த்தைகள் அல்ல... திமுக தொண்டர்களின் முதுகில் குத்தும் வார்த்தைகள்... // திமுகாவில் இணையும் , இணைந்துள்ள நண்பர்களின் ஆழ்ந்த கவனத்திற்கு :- ** வாங்க ஒரு குட்டி சர்வே எடுப்போம்... ** கருணாநிதியின் குடும்பம் மிக பெரியது... அதில் - ஸ்டாலின் , அழகிரி , கனிமொழி, மாறன் சகோதரர்கள்... எல்லோருக்கும் ஆட்சி அதிகாரத்தில் குறுக்கு வழியில் பதவி.... இவர்கள் என்ன கடும் வெயிலில் கட்சி கொடி பிடித்து ரோட்டில் அலைந்தார்களா ??? இல்லை கட்சியை வளர்க ஊர் ஊராக சென்று தொண்டை தண்ணி வற்ற வற்ற கத்தினார்களா ??? இல்லையே ???? ஆனால், திமுக தொண்டர்களுக்கு கடைசி…

  18. இன்று (05) லண்டனில் சனல் 4 தயாரித்துள்ள புதிய கொலைக்களங்கள் ஆவணப் படம் வெளியிடப்படவுள்ளது. குறித்த இந்த ஆவணப்படத்தை காலம் மக் ரே அவர்கள் வெளியிடவுள்ளார். பிரித்தானியாவில் உள்ள சனல் 4 கின் முக்கிய ஊடகவியலாளர்கள், அதிதிகள், புத்திஜீவிகள் மற்றும் பிற ஊடகவியலாளர்கள் இதில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இம் மாதம் ஜெனீவா மனித உரிமைக் கழகத்தில் அமர்வுகள் இடம்பெறவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த ஆவணப்படத்தை வெளியிட்டு , அதனூடாக ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்த தற்போது பிரித்தானியா தாயாராகியுள்ளது. இதன் ஒரு அங்கமாகவே , இன்றைய தினம் கொலைக்களங்கள் வெளியிடப்படவுள்ளது. இந்த குறிப்பிட்ட ஆவணப்படத்தில் வரும் சில பிரத்தியேகக் காட்சிகளை அதிர்வு இணையமே சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ளதும் குறிப்பிடத…

  19. பேயோட்டுவதற்கு முயன்ற இருவர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவமொன்று ஹோமாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. உளவியல் விஞ்ஞான ஆலோசகர் மற்றும் தனியார் வகுப்பு ஆங்கில ஆசிரியர் ஆகிய இருவரின் சடலங்களே இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இவ்விருவரும் ஹோமாகம, கிரிவத்துடுவே வீட்டினுள் குழியொன்றை தோன்றி அதற்குள் இறங்கி மண்ணால் மூடிக்கொண்டு பேயோட்டி தோஷத்தை கழித்துகொண்டிருந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளனர். பேயோட்டுவதற்கான ஆயத்தங்கள மற்றொரு ஆசிரியர் வீட்டில் வைத்தே நேற்று முன்தினம் புதன்கிழமை மேற்கொள்ளப்படவிருந்தன. அந்த வீட்டில் வைத்து பேயையோட்டினால் வீட்டில் இருப்பவர்கள் இன்றேல் பேயையோடுபவர் இறந்துவிடலாம் என்ற அச்சத்தின் காரணமாக ஹோமாகமைய…

  20. உலகத் தமிழர் இணைய இணைப்பு வியந்து தான் போவீர்கள் # சிறுத்தையால் சிங்கத்தைப் போல் கர்ஜிக்க முடியாது. பூனையைப் போல மியாவ் என்ற ஓசையைத் தான் எழுப்பும். # ஓர் ஒட்டகத்தை விடவும் அதிக நாட்களுக்குத் தண்ணீரின்றி எலியால் தாக்குப் பிடிக்க முடியும். # ஒட்டகப் பறவை என்று நெருப்புக் கோழி அழைக்கப்படுகிறது. இது ஒட்டகத்தைப் போல பல நாட்கள் தண்ணீர் குடிக்காமலேயே வாழக் கூடியது என்பதால் அதற்கு இந்தப் பெயர். # மரங்கொத்தியால் ஒரு நொடிக்கு 20 முறை மரத்தைக் கொத்தித் தள்ள முடியும். # காகம் ஒரு மணிக்கு 45 மைல்கள் வேகத்தில் பறக்கும். # ஒரு சாதாரண பசு அதன் வாழ்நாளில் 2 இலட்சம் குவளை பால் கொடுக்கும். # உலகிலேயே மிகச் சிறிய பாலூட்டி, தாய்லாந்தில் காணப்படும் பப்ளியீ என…

  21. உண்மையைச் சொல்லுங்கள்: அசத்தும் வீடியோ வெளியாகியுள்ளது ! 04 September, 2013 by admin உண்மையச் சொல்லுங்கள் ! என்ற தலைப்பில் சர்வதேச மன்னிப்புச் சபை ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுலா செல்லும் நபர்களை இது குறிவைத்து எடுக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவு ஒரு சொர்க்க பூமி, அங்கே வந்தால் சொகத்தைப் பார்க்கலாம் என்று எல்லாம் இலங்கை அரசு பெரும் பணத்தை செலவழித்து விளம்பரப்படுத்தி வருகிறது. எனினும் சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள இந்த சிறிய வீடியோவால் இவை அனைத்தும் ஆட்டம் கண்டுள்ளது. வீடியோவைப் பாருங்கள் .http://www.youtube.com/watch?v=Lx_CGTjPDOU

  22. பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் கைதிகள் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு வார இறுதியில் வெளியே சென்றுவிட்டு வருவது தெரிய வந்துள்ளது. பாலியல் வல்லுறவு குற்றவாளியான ஜெய்சங்கர் பாதுகாப்பு அதிகமுள்ள பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தப்போயிடினான். அவன் தப்பிச் செல்ல சிறையில் உள்ள யாரோ உதவியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சிறையின் பாதுகாப்பு எவ்வளவு அழகாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது. வீட்டில் சாப்பாடு தேசிய கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி ஒருவர் 2012ம் ஆண்டில் 83 நாட்கள் பெங்களூர் சிறையில் இருந்துள்ளார். அப்போது அவர் இரவு நேரத்தில் தனது வீட்டுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு மறுநாள் அதி…

  23. மனாமா: தனக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளைக்கு, டிவிட்டர், பேஸ்புக்கில் ஏகப்பட்ட தோழியர் இருந்ததால் கடுப்பாகிப் போன சவூதி அரேபியப் பெண் அந்த திருமணத்தையே ரத்து செய்து விட்டார். இந்தப் பெண் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையின் டிவிட்டர், பேஸ்புக், பிளாக் ஆகியவற்றை கடந்த 2 வாரமாக ஆய்வு செய்தாராம். அப்போது அதில், தனது வருங்கால கணவருக்கு ஏகப்பட்ட பெண் தோழிகள் இருப்பதையும், அவர்கள் ஏகப்பட்ட மெசேஜ்களை அவருக்கு அனுப்பி வருவதையும் பார்த்து அதிர்ந்து போய் விட்டாராம். மேலும், அந்தப் பெண்கள் தனது வருங்கால கணவர் குறித்து தெரிவித்திருந்த கமென்ட்டுகள் உள்ளிட்டவையும் அவருக்குப் பிடிக்கவில்லையாம். பார்த்தார், இந்தத் திருமணமே வேண்டாம், மாப்பிள்ளையும் வேண்டாம் என்று முடிவு செய்த…

  24. கோவை: கோவையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் அடுத்தடுத்து 3 திருமணம் செய்தும், மூன்று பேருமே அவரை விட்டுப் பிரிந்து போனதால் மன வேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்டார். கோவை, பாப்பாயக்கன் பாளையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான முருகமூர்த்தி. இவருக்கு 2 முறை திருமணம் நடந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ, இரண்டு மனைவியரும் இவரை விட்டுப் போய் விட்டனர். இருந்தும் மனம் தளராத முருகமூர்த்தி, மூன்றாவதாக 27 வயதுப் பெண்ணை சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்தார். ஆனால் அந்த வாழ்க்கையிலும் விரிசல் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் 3வது மனைவி கடந்த வாரம் வீட்டை விட்டுப் போய் விட்டார். திரும்ப வரவே இல்லை. இதனால் முருகமூர்த்தி பெரும் சோகமடைந்தார். 3 முறை திருமணம் செய்தும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.