Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. வாழைப்பழத்துக்கு தடை! By Kavinthan Shanmugarajah 2013-01-08 16:20:41 பி.பி..சி. செய்திச் சேவையின் லண்டனில் அமைந்துள்ள புதிய தலைமை அலுவலகத்தில் பணியாளர்கள் வாழைப்பழம் உண்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியரொருவருக்கு வாழைப்பழத்தால் ஒவ்வாமை நிலை ஏற்படும் அச்சுறுத்தல் நிலவுவதாகவும் இதனால் உயிராபத்து ஏற்படக்கூடுமென்பதாலேயே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பணியாளரின் நன்மை கருதியே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்காக அலுவலகத்தின் பல இடங்களில் இது குறித்து அறிவிப்புகளும் ஒட்டப்பட்டுள்ளன. ஊழியர்கள் சிலர் இணைந்தே இந்நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். http://www.virakesari.l…

  2. இந்தியாவை சேர்ந்த யூசுப் (38) என்பவர் தனது மனைவி சாராவுடன் (33) பிரிட்டனின் கார்டிப் என்னுமிடத்தில் வசித்து வருகின்றார். இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை கற்கச் சொல்லி மனைவி சாரா தனது மகனை அடித்து வந்திருக்கிறார். குரானை மனப்பாடம் செய்ய இயாலாமல் தவித்த யாசின் மீது கோபமடைந்த சாரா கடந்த 2010-ம் ஆண்டு மிருகத்தனமாக அடித்து இருக்கிறார். இதில் யாசின் இறந்து போயிருக்கிறான். பிறகு யாசின் உடலை மறைக்க எண்ணை ஊற்றி எரித்து புதைத்து இருக்கிறார். இந்த செய்தி காவல் துறையினருக்கு தெரியவர சாரா மீது கார்டிப் கிரௌன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோபம் தாங்காமல் குச்சியால் அவனது முதுகில் ஒரு நாயை அடிப்பது போன்று அடித்தேன். இதில் அவன் இறந்துவிட்டான் என்று தீவிர விசாரணை…

  3. செவ்வாய் கிரத்தில் பாறையின் மேல் முத்து நிறத்தில் பூ பூத்ததா? வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் பாறையின் மேல் முத்து நிறத்தில் பூ போன்ற வடிவமுள்ள படத்தை நாசாவின் க்யூரியாசிட்டி விண்கலம் பூமிக்கு அனுப்பியது. செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள நாசா க்யூரியாசிட்டி விண்கலத்தை அனுப்பியது. அது கடந்த மாதம் அனுப்பிய புகைப்படத்தில் பாறையின் மேல் முத்து நிறத்தில் பூ போன்ற வடிவம் ஒன்று உள்ளது. அது மலரும் ஒரு பூவாக இருக்கலாம் என்று ஒரு தரப்பினர் கூற, அது பூ அல்ல என்றும், குவார்ட்ஸ் கல்லாக இருக்கலாம் என்று விண்வெளி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது குறித்து நாசா அதிகாரப்பூர்வமாக எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை என்று செவ்வாய் கிரக ஆராய்ச்சி குழு தலைவர் அமிதாபா கோஷ் தெரிவித்…

  4. துபாய்: பெரும் பணத்தை வரதட்சணையாக கொடுத்து 15வயது சிறுமியை மணந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் 90 வயதான சவூதி அரேபியா நபர் ஒருவர். இந்த வயது முதிர்ந்த தாத்தாவுக்குக் கட்டி வைக்கப்பட்ட அந்த சிறுமி, 2 நாட்கள் பெட்ரூம் கதவை மூடிக் கொண்டு பயத்தில் வெளியே வராமலேயே இருந்துள்ளார். பின்னர் வீட்டிலிருந்து தப்பி தனது வீட்டுக்கு ஓடி விட்டார். சவூதி அரேபியாவில் இந்த திருமணம் பெரும் பரபரப்பையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தனது திருமணம் சட்டப்பூர்வமானதே என்று அந்த 90 வயது சவூதி அரேபிய நபர் கூறுகிறார். மேலும், அந்தச் சிறுமியை மணப்பதற்காக 17,500 டாலர் பணத்தை சிறுமியின் பெற்றோரிடம் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். அந்த சிறுமி ஏமன் நாட்டைச் சேர்ந்த தந்தைக்க…

  5. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை துவங்க, மத்திய அரசு அனுமதி அளித்தால், 10 ஆண்டுகளில், 10 லட்சம் பேருக்கு, வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவேன்,'' என, அமெரிக்க கடன் பத்திரங்கள் வைத்திருந்த சர்ச்சையில் சிக்கியுள்ள, தாராபுரம் கடலை வியாபாரி ராமலிங்கம் கூறியுள்ளார்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த, உப்புத்துறை பாளையத்தைச் சேர்ந்த கடலை வியாபாரி ராமலிங்கம். இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட, 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, அமெரிக்க கருவூல கடன் பத்திரங்கள் குறித்து, சென்னையில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள், நேற்று முன்தினம், 12 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். விசாரணையில், தன்னிடமிருந்த தங்க கடன் பத்திரங்களை, பிரேசிலில் உள்ள, நண்பர் டேனியலிடம் …

  6. புதுடெல்லி: டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில்,அக்குற்றத்தில் ஈடுபட்டவர்களைப்போன்று பாதிக்கப்பட்ட மாணவியும் குற்றவாளிதான் என்று பிரபல குஜராத் ஆசிரம சாமியார் ஆஷ்ரம் பாபு கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. "டெல்லி சம்பவத்தில் 5 முதல் 6 பேர்தான் குற்றவாளிகள்...அந்த பெண் அக்குற்றவாளிகளை அண்ணா என விளித்து...அச்செயலை நிறுத்துமாறு அவர்களிடம் கெஞ்சிக்கேட்டிருக்க வேண்டும்...அப்படி செய்திருந்தால் அது அவரது கவுரவத்தையும்,உயிரையும் காப்பாற்றி இருக்கும்.ஒரு கை ஓசை எழுப்புமா? எழுப்ப முடியாது என நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார். மேலும் டெல்லி சம்பவ குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்ற கருத்துக்கும் கடும் எதிர்ப்பு தெரிவி…

  7. செல்போன், கத்தி சகிதமாக பிரேசில் சிறைக்கு வாங்கிங் போன பூனை: கையும் களவுமாக பிடிபட்டது! Posted by: Mayura Akilan Published: Monday, January 7, 2013, 10:01 [iST] ரியோ- டி- ஜெனிரோ: தமிழ்நாட்டில் உள்ள சிறை வளாகத்திற்குள் செருப்பு, தலைமுடி, வடை ஆகியவற்றிற்குள் செல்போன், சிகரெட், கஞ்சா, கத்தி போன்றவைகளை கடத்துவார்கள். ஆனால் பிரேசில் நாட்டில் பூனை ஒன்று கத்தி, செல்போனை சிறைக்குள் கொண்டு சென்றதற்காக கைதாகியுள்ளது. அலகோஸ் நகரில் உள்ள அராபிராகா சிறை பலத்த பாதுகாப்பு கொண்டது. இங்கு 263 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த புத்தாண்டு அன்று வெள்ளை சாம்பல் நிறம் கலந்த பூனை ஒன்று பிரதான நுழைவு வாயில் வழியாக பம்மி பம்மி 'கேட் வாக்' செய்து சிறைக்குள் புகுந்தது. இது பூனைதானே என்பதால் போலீ…

  8. பீட்றோ எனச் செல்லப் பெயரிடப்பட்ட ஆண் தண்டி எனப் பெயரிடப்பட்ட பெண் பென்குவின்களிற்கு திசெம்பரில் பொரித்த (பிறந்த) குஞ்சு, ஆபத்தை எதிர்நோக்கியுள்ள மேலதிக எட்டு ஆபிரிக்க பென்குவின் குஞ்சுகளோடு சேர்ந்து ரொறன்ரோ விலங்குச்சாலையில் உள்ள பென்குவின் கூட்டத்தோடு இணைந்துள்ளது. இந்தப் பென்குவின் குஞ்சுகள் பெப்ரவரி நடுப்பகுதியில் தொடங்கும் பென்குவின் காட்சியில் இருக்கும். ஆண் இன பென்குவின்களான பெட்றோ அதன் நண்பரான பட்டியினோடு கொண்ட நட்பு அட ஓரினக் காதலா என்பது பற்றியும் அவற்றின் நெருக்கம் பற்றிய குறிப்பு 2011இல் உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாயிற்று! அதன்பிறகு ஒருவாரு இந்த இரண்டு ஆண் நண்பர்களும் பிரிக்கப்பட்டு அவை பெண் துணையோடு இணைக்கப்பெற்றன. ஆபத்தை எதிர்நோக்கியுள்ள இந்த ஆபிரிக…

    • 0 replies
    • 291 views
  9. "பிறந்தால் இந்த நாட்டில் தான் பிறக்க வேண்டும்' என்ற விருப்பத்தின் அளவில், பொதுமக்கள் மத்தியில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் அடிப்படையில், நாடுகள் தேர்வு செய்யப்பட்டன.இதில், இந்தியா, 66வது இடத்தை பிடித்துள்ளது. இலங்கை, 63வது இடத்தையும், பாகிஸ்தான் மற்றும் வங்க தேச நாடுகள், முறையே, 75 மற்றும் 77வது இடங்களில் உள்ளன. ஆப்ரிக்க நாடான, நைஜீரியா, 80வது இடத்தை பிடித்துள்ளது. இது போன்றதொரு ஆய்வு, 1988ல் எடுக்கப்பட்ட போது, 13வது இடத்தை பிடித்த, சுவிட்சர்லாந்து, இந்த முறை முதலிடத்தில் வந்துள்ளது. இரண்டாவது இடத்தை, ஆஸ்திரேலியாவும், அடுத்த இடங்களை, நார்வே, சுவீடன் மற்றும் டென்மார்க் நாடுகள் பெற்றுள்ளன.ஆறாவது இடத்தை, சிங்கப்பூரும், எட்டாவது இடத்தை, நெதர்லாந்தும், ஒன்பதாவது இடத்தை க…

    • 7 replies
    • 974 views
  10. "தூங்கிய பெண்ணுடன் காதலன் போல நடித்து உடலுறவு கொள்வது குற்றமாகாது" அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஒருவர் மீது பாலியல் வல்லுறவு குற்றத்தை உறுதி செய்து கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்து முடிவு வழங்கியிருப்பதை எதிர்த்து அங்குள்ள பெண்ணுரிமைக் குழுக்கள் குரல்கொடுத்துள்ளன. 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு மாகாணச் சட்டத்தின் கீழ் இந்த முடிவு வழங்கப்பட்டுள்ளது. தான் வேறொருவர் என்று ஏமாற்றி ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்கிறார் என்றால், அந்தப் பெண்ணுக்கு திருமணம் ஆகியிருந்திருக்க வேண்டும், தவிர அந்த ஆண் அந்தப் பெண்ணின் கணவனாக என்று நடித்து உடலுறவு வைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்றால் மட்டுமே அந்த ஆண் பாலியல் வல்ல…

  11. இரத்தினபுரியில் பௌத்த பிக்குவை "எப்படி மச்சான்" என அழைத்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேருந்து தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த பௌத்த பிக்குவின் தோளில் கையைப் போட்டு, எப்படி மச்சான் என அழைத்த பேருந்து சாரதி ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். பிக்கு இதுகுறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்தே, பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தின் போது சாரதி மது போதையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://seithy.com/breifNews.php?newsID=73272&category=TamilNews&language=tamil

  12. அழையா விருந்தாளியாக நுழைந்த குரங்கு காற்றை சுத்திகரிக்கும் குழாய்க்குள் மாட்டுப்பட்டது ஒரு நாள் சென்றே அகற்றப்பட்டது Diplomacy typically isn’t monkey business, but the folks at the U.S. Embassy in Sri Lanka recently had their usual routine disrupted by a wandering primate. The embassy invasion began on Dec. 20, when an an e-mail went out to employees of the facility in Colombo notifying them that the ground floor doors were locked because a monkey was trapped in the building and instructing them to use alternate exits. “A little bit different than a Kabul ‘lock down!’” observed one worker there whose previous tours of duty were perhaps a bit more dangerous. We’…

    • 3 replies
    • 443 views
  13. மாயன் காலண்டர் கடந்த 21-ந்தேதியுடன் முடிந்தது. எனவே அன்றுடன் உலகம் அழியும் என்ற பீதி சர்வதேச நாடுகளை ஆட்டிப் படைத்தது. இக்கருத்தை விஞ்ஞானிகள் மறுத்தாலும், விண்ணில் நிகழும் மாற்றங்களை கண்காணித்து கொண்டுதான் இருந்தனர். மாயன் காலண்டர் முடிந்த சில நிமிடங்களில் அதாவது 22-ந்தேதி அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தின் சூரிய சக்தி கண்காணிப்பு மைய விஞ்ஞானிகள் சூரியனை போட்டோ எடுத்தனர். அப்போது சூரியன் விட்டுவிட்டு கண் சிமிட்டியபடி ஒளிர்ந்தது. இதற்கு, மாயன் காலண்டரில் குறிப்பிட்டபடி உலகம் அழிவதற்கான அறிகுறி இல்லை. சூரியனில் காந்த ஈர்ப்பு சக்தி அதிகரிப்பே இதற்கு காரணம் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மாயன் காலண்டரின் கூற்றுப்படி பூமியை வேற்று கிரகம் தாக்குக…

  14. http://youtu.be/ob3AnXScn98 8 டே மாதமான தன் குழந்தையை அடித்துத் துன்புறுத்தும் தாய்... (இவர் இந்தக் காணொளி வெளியிடப்பட்ட பின் 18 மாதம் ஜெயில் தண்டனை பெற்றதாகச் சொல்லப்படுகிறது.) http://youtu.be/jWO0WEcRGXg 2/3 அல்லது 4 வயதுள்ள பிள்ளையை அடித்து.. உதைத்து.. எறிந்து துன்புறுத்தும் தகப்பன்.... (இவர் தமிழர்) https://www.facebook.com/v/442284069154906

  15. டாக்டரின் விரலைப் பிடித்துக் கொண்டு அம்மாவின் வயிற்றிலிருந்து வெளியே வந்த சிசு! கிளான்டெல், அமெரிக்கா: தனது மனைவியின் பிரசவத்தின்போது எடுக்ப்பட்ட படம் ஒன்றை அவரது கணவர் வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அவரது மகள் பிறந்தபோது, பிரசவம் பார்த்த டாக்டரின் விரலை இறுகப் பற்றியபடி வெளியே வந்ததே இந்த ஆச்சரியத்திற்குக் காரணம். இந்தப் புகைப்படம் இப்போது இன்டர்நெட்டில் படு வேகமாகப் பரவி வருகிறதாம். அமெரிக்காவின் அரிசோனா, கிளான்டெல் பகுதியைச் சேர்ந்தவர் அலிசியா அட்கின்ஸ். இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி பிரசவம் நடந்தது. அழகிய மகளைப் பெற்றெடுத்தார். அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை டாக்டர்கள் வெளியே எடுத்தனர். நெவியா என்று குழந்தைக்குப் பெயரிட்டனர். ப…

  16. கோவை: கோவையில் ஒரு பங்குச் சந்தை புரோக்கரின் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ. 28,000 கோடி மதிப்புள்ள அமெரிக்க கருவூல பத்திரங்கள் (US Treasury bonds) சிக்கின. இவை உண்மையானவையா அல்லது போலியானவையா என்பது குறித்து அமெரிக்க தூதரக உதவியுடன் ஆய்வு நடந்து வருகிறது. மத்திய நிதியமைச்சகத்தின் உளவுப் பிரிவான Financial Intelligence Unit கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த ரெய்ட் நடத்தப்பட்டது. அப்போது ரூ. 28,000 கோடி அளவுக்கு அமெரிக்கப் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டதற்கான பங்குகளின் ஆவணங்கள் சிக்கியபோது வருமான வரித்துறை அதிகாரிகளே மலைத்துவிட்டனர். ஒரு தனி மனிதர் இவ்வளவு பெரிய அமெரிக்க முதலீடு செய்தது எப்படி என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. சென்ன…

    • 2 replies
    • 505 views
  17. 16 ஆம் லூயி மன்னன் கொல்லப்பட்டதை சித்தரிக்கும் படம் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயியின் இரத்தக் கறை படிந்துள்ள துணி ஒன்று தம்மிடம் உள்ளது என்பதை கிட்டத்தட்ட உறுதியாக சொல்ல முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருநூறு ஆண்டுகளுக்கும் முன் பிரஞ்சு புரட்சி நடந்தபோது கிளர்ச்சிக்காரர்களால் கிலட்டின் இயந்திரத்தில் வைத்து தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டவர் மன்னர் பதினாறாம் லூயி ஆவார். இந்தத் துண்டியில் இருக்கும் ரத்தத்தின் மரபணுத் தகவலும், லூயிக்கு முன்னாள் வாழ்ந்த பிரஞ்சு மன்னன் ஒருவரின் பதப்படுத்தப்பட்ட சடலத்தின் மண்டை ஓட்டின் மரபணுத் தகவலும் கணிசமான அளவில் பொருந்திப்போகிறது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். பதினாறாம் லூயி பாரிசில் தலைதுண்டிக்கப்பட்டுக் கொல்ல…

  18. புனே நகர தொழிலதிபர், 1.27 கோடி ரூபாய் மதிப்புள்ள, தங்க சட்டையை அணிந்து, புத்தாண்டை கொண்டாட உள்ளார். இதற்காக அவர், 3.25 கிலோ எடையில், புதிய தங்க சட்டையை உருவாக்கியுள்ளார். புனே அருகே உள்ள, பிம்ப்ரி என்ற இடத்தை சேர்ந்தவர், தத்தா புகே. சிட்பண்ட் தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி, சீமா, புனே நகர மாநகராட்சி கவுன்சிலர்; தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். ஏற்கனவே, 5 கிலோ எடையில் கழுத்து, கை மற்றும் இடுப்பில், தங்க நகைகளை அணிந்து வலம் வரும் தத்தா, 2013ம் ஆண்டை புதுமையாக கொண்டாட விரும்பினார். இது வரை யாருமே செய்யாத வகையில், தங்க சட்டை அணிந்து, புத்தாண்டை கொண்டாட விரும்பிய அவர், அதற்காக 3.25 கிலோ தங்கத்தை கொடுத்தார். பதினைந்து பொற்கொல்லர்கள், 15 நாட்கள் உழைத்…

  19. சோனியா காந்தி புத்தாண்டைக் கொண்டாட மாட்டார். டெல்லி: டெல்லியில் பிசியோதெரப்பி மாணவி பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகி கொடுமையாக மரணமடைந்த சம்பவத்தின் எதிரொலியாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்த ஆண்டு புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தில் ஈடுபட மாட்டார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி கூறுகையில், டெல்லி பாலியல் பலாத்காரக் கொடுமை தேசிய அவமானமாகும். இதையொட்டி கட்சித் தலைவர் சோனியா காந்தி இந்த ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார். இதேபோல காங்கிரஸ் பேரியக்கத்தினரும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார் என்று கூறியுள்ளார். நன்றி : http://tamil.oneindia…

  20. உருளைக் கிழங்கில் அல்லாஹ், பிஸ்மில்லாஹ் போன்ற சொற்பதங்கள். மடவளை பஸார் புகையிலை தோட்ட பிரதேசத்தில் வசிக்கும் ஜனாப் ரிம்சான் என்பவரின் வீட்டில் இருந்த உருளைக் கிழங்கு ஒன்றில் அல்லாஹ், பிஸ்மில்லாஹ் போன்ற சொற்பதங்கள் காணப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மடவளை, வாங்குவகடை அக்ரம் என்பவரின் கடையில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட குறிப்பிட்ட தொகை உருளைக் கிழங்கில் இருந்தே இந்த அபூர்வ கிழங்கு கண்டறியப்பட்டுள்ளது. ந‌ன்றி வீர‌கேச‌ரி.

  21. 74 வயதில் 7வது முறையாக தந்தையாகும் தாத்தா.. மூத்த மகனுக்கு வயது 52! Posted by: Sudha Published: Monday, December 31, 2012, 10:02 [iST] லண்டன்: இங்கிலாந்தில் 74 வயதான நபர் தனது 32 வயது மனைவியின் மூலம் 7வது முறையாக தந்தையாகவுள்ளார். இவரது மூத்த மகனுக்கு தற்போது 52 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நபருக்கு ஏற்கனவே 6 மகன்களும், 10 பேரக் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பெயர் மைக் அமிடேஜ். இவருக்கு 32 வயதில் லின்ட்சே என்ற இளம் மனைவி உள்ளார். இவர் 3வது மனைவி ஆவார். அமிடேஜுக்கு ஏற்கனவே முதல் இரு மனைவிகள் மூலம் 6 மகன்களும், 10 பேரக் குழந்தைகளும் உள்ளனர். இதில் மூத்த மகனுக்கு தற்போது 52 வயதாகிறது. இந்த நிலையில், லின்ட்சே தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.…

  22. உலகிற்கு மக்களாட்சி படம் காட்டும் அமெரிக்காவில் 2001 செப் 11 க்குப் பின் கருத்துச் சுதந்திரம் விதைத்த நச்சு விதைகளின் அறுவடை ஆரம்பமாகியுள்ளது. அதன் கீழ் நியூயோர்க் பகுதியில் Queens subway station இல் நிலக்கீழ் ரயிலில் பயணிக்க காத்திருந்த ஒரு முஸ்லீம் ஆண் பயணியை அமெரிக்கப் பெண் ஒருவர் ஓடும் ரயிலின் முன் தள்ளி விட்டுக் கொலை செய்துள்ளார். அதுமட்டுமன்றி தான் செய்ததிற்கு நியாயம் கற்பிக்கும் அவர் 2001 செப் 11 க்குப் பின் தான் முஸ்லீம்களையும் இந்துக்களையும் வெறுக்கிறாராம். Prosecutors said in a statement that Ms Menendez, from the Bronx, admitted pushing the victim, saying: "I pushed a Muslim off the train tracks because I hate Hindus and Muslims ever since 2001 whe…

  23. குயின்ஸ்: அமெரிக்காவின் குயின்ஸ் பகுதியில் சுரங்க ரயிலில் தள்ளி இந்தியரைக் கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார். தமக்கு இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிடிக்காது என்ற காரணத்தாலேயே அவரைக் கொலை செய்ததாக அப்பெண் வாக்குமூலம் அளித்திருக்கிறார். அமெரிக்க குயின்ஸ் பகுதியில் மூன்று நண்பர்களுடன் வசித்து வந்த இந்தியர் சுனந்தோ சென், அங்கு பிரிண்டிங் தொழில் செய்து வந்தார். கடந்த வியாழன் அன்று குயின்ஸ் சுரங்க ரயிலில் பயணிக்க சென்றபோது அடையாளம் தெரியாத ஒரு பெண், அவரை எதிரே வந்த ரயிலில் தள்ளிக்கொன்றார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பித்து சென்றார். ரயில் பாதையில் அமைக்கப்பட்டிருந்த வீடியோ காமிராவில் அந்த பெண் உருவம் பதிவாகியிருந்ததை போலீசார் கண்டுபிடித்து வெளியிட்டனர். அந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.