Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கோஸ்ட ரிக்காவில் கடல் ஆமைகளின் இறப்பு வீதம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை 280 கடல் ஆமைகளின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவலை சுற்று சூழல் ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர். மத்திய அமெரிக்க நாடான கோஸ்ட ரிக்கா, இருப்பக்கமும் பசபிக் மற்றும் கரீபியன் கடலால் சூழப்பட்ட நாடாகும். கோஸ்ட ரிக்கா கடல் பகுதியில் அரிய வகையான கடல் ஆமைகள், சால்பிஷ் மற்றும் மார்லின் போன்ற கடல் வாழ் உயிரினங்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்தன. இந்த நிலையில் கோஸ்ட ரிக்காவின் டூள்ஸ் வளைகுடா கரை ஓரங்களில் அரிய வகை கடல் ஆமைகளின் உடல்கள் அவ்வப்போது ஒதுங்கிவருகின்றன. இதுவரை 280 அரியவகை கடல் ஆமைகள் இதுபோல கரை ஒதுங்கியுள்ளதாக அந்நாட்டு சுற்றுசூழல் அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் கடல் சார் உயிரின …

  2. கோவையில் 3 பெண்களை திருமணம் செய்த புகாரில் செல்வபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர் செந்தில் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். செந்தில் குமாரை பணியிடை நீக்கம் செய்து கோவை கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். தம்மை ஏமாற்றி மேலும் 2 பெண்களை திருமணம் செய்ததாக முதல் மனைவி கமிஷனரிடம் புகார் கூறியிருந்தார். விசாரணையில் திருமண மோசடி உறுதியானதால் கமிஷனர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். http://tamil.allnews.in/news/state-news/3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D%E0%A…

  3. அவுஸி.. சிட்னியில் மியூசியம்... பூங்கா ஒன்றில் பூமரங்களை வேட்டையாடியதற்காக.. மன்னிக்கனும்.. மேய்ந்ததற்காக ஆடு (ஆட்டின் பெயர் Gary) ஒன்று.. நீதிமன்றம் போய் நீதி கேட்க வேண்டியதாப் போச்சுது. அதன் சொந்தக்காரருக்கு பூங்காவால் விதிக்கப்பட்ட 464 டொலர் தண்டனைப் பணம்.. பற்றி நீதிமன்றில் நியாயம் கேட்க ஆடும் நீதிமன்றம் போனது. நீதிமன்றில் Gary (ஆடு) பூங்காவை அழிக்க வேண்டும் என்ற எந்த ஒரு கெட்ட என்னத்தோடும்.. போய் பூக்கன்றுகளை சாப்பிடாத படியால்.. அது குற்றமற்றது என்று சொல்லி விடுவிக்கப்பட்டுள்ளது. அப்பாடா.. ஆட்டுக்காவது நீதி கிடைச்சிச்சே. மனிசனை கொத்துக் கொத்தா கொன்று குவிக்கிற சிறீலங்காவை கூப்பிட்டு வைச்சு கிரிக்கெட் விளையாடி மகிழிற... அவுஸி.. ஆட்டுக்கு நீதி வழங்கினது பெரிய …

  4. காஜியாபாத்: மனைவியின் ஜடையை அறுத்ததாக கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத் மாவட்டம் லோனி நகரில் பிரேம்நகர் பகுதியில் ருக்ஸானா எனும் பெண் தன்னுடைய கணவர் இஸ்ரார் என்பவர் மீது இது தொடர்பாக முறையிட்டுள்ளார். ருக்சானா செய்துள்ள முறையீட்டில், வீட்டின் கூரை மீது தலையில் முக்காடு அணியாமல் தான் சென்றதால், கணவர் கோபம் கொண்டு தனது ஜடையை அறுத்தெறிந்ததாகக் கூறியுள்ளார். மேலும் திருமணத்திற்கு பின் மூன்றாண்டுகளாக தான் கணவர் வீட்டில் கொடுமைக்காளாகி வருவதாகவும், இம்முறை தன்னை வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். முறையீட்டின் பேரில் இஸ்ரார் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். http://www.inneram.com/news/india-new…

  5. டோக்கியோ: ஜப்பானில் தன்னை ஒரு பாம்பு ஆட்கொண்டதாகக் கூறி ஆட்டம் போட்ட வாலிபரை அவரது தந்தை கடித்துக் கொன்றார். ஜப்பானில் உள்ள ஒகாசாகி நகரைச் சேர்ந்தவர் கட்சுமி நகாயா. அவரது மகன் டகுயா நகாயா(23). ஆஞ்சோ நகரில் வசித்த அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது பெற்றோரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் தான் ஒரு பாம்பு என்று கூறி பாம்பு போல் ஆடியதுடன் வெறிப்பிடித்தது போன்று நடந்து கொண்டார். இதைப் பார்த்து அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தனது மகனை ஆட்கொண்ட பாம்பை விரட்ட கட்சுமி டகுயாவை அடித்தும், கடித்தும் உள்ளார். இந்த கூத்து காலையில் இருந்து மாலை வரை நடந்துள்ளது. தந்தை அடித்து, கடித்து, தலையால் முட்டியதில் படுகாயம் அடைந்த டகுயாவை மருத்துவமனைக்கு கொண்டு…

  6. By General 2013-01-22 11:10:50 அவுஸ்திரேலியாவில் முதலைகளுடன் அச்சமின்றிப் பழகும் 3 வயது பாலகன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளான். சார்ளி பார்க்கர் என்ற இச்சிறுவன் விக்டோரியா மாநிலத்திலுள்ள தனது தந்தை கிரெய்க்கால் நடத்தப்படும் வனவிலங்கு பூங்காவுக்கு விஜயம் செய்தவேளை 2.5 மீற்றர் நீளமான வட ஆபிரிக்க முதலையொன்றுடன் நீந்தி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளான். இச்சிறுவனின் தந்தை மிருகங்களை பராமரிப்பதில் 3 தலைமுறையாக ஈடுபட்டுவரும் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். http://www.virakesari.lk/article/interesting.php?vid=75

  7. பெண்களின் துணைக்கு, வாடகைக்கு விடப்படும் ஆண் நண்பர்கள் -சீனாவில் கொடிகட்டிப் பறக்கும் புது பிஸ்னஸ்! [Monday, 2013-01-21 09:10:31] பெண்களின் துணைக்கு, ஆண் நண்பர்களை வாடகைக்கு அனுப்பி வருகிறது, சீனாவிலுள்ள பிரபல விற்பனை நிலையம். ஒரு மணி நேரத்திற்கு, கட்டணமாக, 500 டொலர் வசூலிக்கப்படுகிறது.சீனாவில், ஜெட் வேக வளர்ச்சி இருந்தாலும், மக்கள் தொகை அதிகரித்தாலும், எப்படியெல்லாம் வியாபாரம் செய்யலாம் என்பதையும், யோசித்து, நடைமுறைப்படுத்தி வெற்றியும் பெற்று விடுகின்றனர். தற்போது, பெண்களுக்கு துணையாகச் சென்று வர, ஆண் நண்பர்களை வாடகைக்கு அனுப்பி, ஒரு தனியார் நிறுவனம் மும்முரமாக, கல்லா கட்டி வருகிறது.இந்நாட்டில், 18 கோடி பெண்கள் தனியே வசித்து வருவதாக, பத்திரிகை புள்ளி விவரம் தெரிவ…

    • 9 replies
    • 3.2k views
  8. உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவராக கருதப்படுபவர், மைக்ரோ சாப்ட் துணை நிறுவனரான பில்கேட்ஸ். சுமார் 65 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சொத்து குவித்துள்ள இவர், பணத்தால் எனக்கு பயன் இல்லை என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். லண்டனில் இருந்து வெளியாகும் டெலிகிராப் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- உணவு, உடை போன்ற அடிப்படை தேவைகளை பொருத்த வரையில் நான் தன்னிறைவுடன் வாழ்கிறேன். இந்த அளவுகோலுக்கு மேல் என்னிடம் பணம் இருந்து பயன் ஏதுமில்லை. ஒரு அமைப்பை ஏற்படுத்தி இந்த பணத்தை எல்லாம் உலகில் உள்ள ஏழைகளுக்காக செலவிட விரும்புகின்றேன். போலியோவை ஒழித்தது போல், பல்வேறு நோய்களால் வாடும் ஏழை குழந்தைகளுக்கு நோய் தடுப்பூசி மற்றும் சுகாதார பணிகளில் சே…

  9. மனிதர்களைவிட நாய்கள் நல்லவை’ என்கிறார் 23 வயது ஆண்ட்ரூ. வீடில்லாதவர். சாலைகளில் வசிப்பவர். இவருக்கு உற்றத் துணை இவரது செல்ல நாய் ஸ்மோக்கிதான். என்னுடைய வாழ்க்கையைத் தவிர என்னுடன் தொடர்ந்து வருவது இந்த நாய்தான்’ என்று நன்றியுடன் சொல்லுகிறார் ஆண்ட்ரூ. இவர் மட்டும் அல்ல ரொறான்ரோ வீதிகளில் வசிக்கும் பல வீடில்லா அனாதைகளின் உற்ற தோழனாக நாய்கள்தாம் இருக்கின்றன. நாய்கள் வளர்ப்பதனால் இவர்கள் முக்கியமான ஒரு பிரச்சனையைச் சந்திக்க நேரிடுகிறது. இவர்களை பல ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்த்துக் கொள்ளுவதில்லை. அங்கெல்லாம் நாய்கள் வளர்க்க தடை இருக்கிறது. ‘நாய்கள் வளர்ப்பது இவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. மனிதர்களுடன் பழக முடியாத இவர்களூக்கு நாய்கள்தாம் வாழ்க்கையை நகற்ற உதவுகிறது’ என்கிறார…

  10. பல்கேரியாவில் ஒரு கூட்டத்தில் அந்த நாட்டின் துருக்கிய சிறுபான்மை கட்சி சார்பாக ஒரு பேசிக்கொண்டு இருந்தபொழுது துப்பாக்கியுடன் ஒருவர் மேடையில் தோன்றினார். எந்த சூடும் நடக்கவில்லை. அவருக்கு பலத்த அடி உதை ... http://www.youtube.com/watch?v=Lg_819dQALo

    • 0 replies
    • 462 views
  11. டெட்ராய்டு: விமானநிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள உடலின் அங்கங்களை பிரதிபலிக்கும் எக்ஸ்-ரே ஸ்கேனர்களை அகற்ற அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்காவின் டெட்ராய்ட் விமான நிலையத்தில் தீவிரவாதி ஒருவன், நின்றிருந்த விமானத்தில் வெடிகுண்டை பொருத்தி பரபரப்பை ஏற்படுத்தினான். இதனையடுத்து, அமெரிக்காவில் உள்ள அனைத்து விமானநிலையங்களிலும் நவீனராக எக்ஸ்-ரேஸ்கேனர்கள் பொருத்தப்பட்டன. இது சாதாரண ஸ்கேனர்களைப் போல இல்லாமல் உடலின் சதைப்பகுதிகளும் துல்லியமாக திரையில் தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நவீன ஸ்கேனர்களில் பதிவாகும் காட்சிகளை விமானநிலைய ஊழியர்கள், சோதனைக்கு பிறகும் போட்டு பார்க்கக்கூடும். எனவே, இந்த ஸ்கேனர்களை அகற்ற வேண்டும் என்று சிலர் கூறினர். எ…

  12. பங்களாதேஷ் நாட்டைச் சார்ந்தவர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் கேம் ஒவர் என்ற ஹேக்கர்கள் குழு இலங்கை அரச இணையம் உட்பட பலநாடுகளில் உள்ள அரச இணையங்களைச் சீர்குலைத்துள்ளனர். இலங்கை இராணுவத்திற்கு தகவல்களை இராணு கணணியில் நுளைந்து அனுப்பக் கூடிய வசதி கொண்டவர்களின் பெயர்களையும் மினஞ்சல்களையும் வெளியிட்டுள்ளனர். அவர்களின் தமிழ்ப் பெயர்களில் ரங்கன் தேவராஜன் உட்பட பலரின் பெயர்கள் உள்ளன. இணைய உள்ளீட்டாளர்கள்(hackers) இலங்கை அரசின் தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தின் (MNSC ) இணையத்தைத் தமது கட்டுப்பாடினுள் கொண்டுவந்தது மட்டுமன்றி அதனை உருக்குலைத்தும் சென்றுள்ளனர். உள்ளீட்டாளர்கள் (ilovefcc.com/gameover) என்ற இனையத்திற்கு இலங்கை அரசின் www.nationalsecurity.lk …

  13. விளையாட்டும் வினையும் னே தனது வேலையை சீனாவிற்கு அனுப்பி வேலையில் விளையாட்டில் ஈடுபட்ட அமெரிக்க மென்பொருள் வடிவமைப்பாளர். இலட்சம் டாலருக்கு மேலே சம்பளம் எடுக்கும் ஒரு மென்பொருள் வடிவமைப்பாளர் தனது வேலையை சீனாவிற்கு ஒருவருக்கு கொடுத்திருந்தார். பூனை சம்பந்தமான ஒரு விளையாட்டை இவர் முகநூலிலும் ஈபேயில் நேரத்தை செலவிட்டுள்ளார். இதை தெரிந்த நிறுவனம் அவரை வேலையால் நிற்பாட்டி உள்ளது. Downtrodden employees of the world, take heart: a rebel hero walks among us. A man in his mid-40s, identified in reports only as "Bob", was a star programmer earning a six-figure salary at an American infrastructure company. When the company commissioned a network-securit…

    • 0 replies
    • 511 views
  14. சமூக வலைதளமான, பேஸ்புக்கில், ரகுமானுக்கு ஒரு கோடிக்கும் மேலான ரசிகர்கள் உள்ளது தெரிய வந்துள்ளது. இதில், 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தங்களின் கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தன் புகைப்படத்துடன், ஒரு கோடி ரசிகர்களுக்கு நன்றி என, ரகுமான் பதில் அளித்துள்ளார். ரகுமானுக்கு அடுத்தபடியாக, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு, 90 லட்சம் ரசிகர்களும், இந்தி நடிகர் சல்மான் கானுக்கு, 70 லட்சம் ரசிகர்களும் உள்ளனர். அதே நேரத்தில், அமிதாப் பச்சனுக்கு, 30 லட்சம் ரசிகர்களே உள்ளது, தெரியவந்துள்ளது. http://tamil.yahoo.com/ப-ஸ்-ப-க்க-ல்-ம-ந்-ன-161100663.html ...

    • 2 replies
    • 552 views
  15. டொரொண்ட்டோ மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக் கூட்டத்தில் பெண் நோயாளிகளிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட மருத்துவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மருத்துவர் ஜார்ஜ் டூட்னாட்(வயது 64) மீது 21 குற்றவழக்குகள் பதிவாகியுள்ளன. இவர் கடந்த 2006 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் 25 வயது முதல் 75 வயது வரையிலான பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக வழக்குப் பதிவாகியுள்ளது. இவர் தான் மயக்கமருந்து கொடுக்க வேண்டிய பெண் நோயாளிகளுக்கு மருந்து கொடுத்த பின்பு அவர்கள் அரைகுறையாக மயங்கியிருந்த வேளையில் அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்த போது அவர்களிடம் தவறாக நடந்திருக்கிறார். 2010ம் ஆண்டில், ஒரு பெண் நோயாளிக்கு கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை நடந்தபோது அவர் இந்த மருத்துவர் தனக்கு முத்…

  16. பிரிட்டிஷ் மற்றும் அயர்லாந்து குடியரசில் உள்ள பல சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் மாட்டிறைச்சி பர்கர்களில் குதிரை மாமிசம் கலந்திருப்பது குறித்து உணவுத் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். உணவுப் பொருட்களை விநியோகிக்கும் பல நிறுவனங்கள் இந்த இரு நாடுகளுக்கும் மாட்டிறைச்சி என்று விற்ற உணவுப் பொருட்களில், குதிரை மற்றும் பன்றி இறைச்சியின் கூறுகள் இருந்ததாக அயர்லாந்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்திருக்கிறார்கள். குதிரை இறைச்சி உண்பதால் உடல் நலத்துக்கு கேடு எதுவும் விளையாது, ஆனால் பிரிட்டிஷ் தீவுகளில் இதை உண்பது குறித்து ஒரு கலாசார ரீதியான அருவருப்பு நிலவுகிறது. பிரிட்டனின் முன்னோடி சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒன்றான டெஸ்கோவினால் …

  17. போத்தல்தண்ணீரை விட குழாய் நீரே பாதுகாப்பானது என பிரிட்டன் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பால் யங்கர் தலைமையிலான குழு தெரிவித்துள்ளதாவது: பொதுவாக குழாய்களில் வரும் தண்ணீரை விட பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனையாகும் குடி நீர்தான் பாதுகாப்பானது என பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் குழாய் நீருக்கு எந்த விதத்திலும் போத்தல்தண்ணீர் உயர்ந்தது அல்ல என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக குழாய் நீரில் கலக்கப்படும் குளோரின் "மினரல் வாட்டர்' எனப்படும் போத்தல் தண்ணீரில் இல்லை. போத்தல்தண்ணீர் மூடியைத் திறந்தவுடன் சில மணி நேரங்களுக்குள் அந்தத் தண்ணீரை அருந்த வேண்டும். இல்லாவிட்டால் நோய்த் தொற…

  18. நம்மூர்ல இவங்களுக்கு பேரு பைரவர் ........ ஆனா சீனாவுல பை எவர் .... ###அட கொடுமையே ... நன்றி முக நூல் நம்மூர்ல இவங்களுக்கு பேரு பைரவர் ........ ஆனா சீனாவுல பை எவர் .... ###அட கொடுமையே ...

  19. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இராட்சத பாம்புகளைப் பிடிப்பதற்கான போட்டி நேற்று முன்தினம் ஆரம்பமானது. இந்தப் போட்டி பெப்ரவரி மாதம் 10ம் திகதி வரை நீண்டு செல்லும். இந்தக் காலப் பகுதியில் ஆகப் பெரிய பாம்பைப் பிடிப்பவர்களிற்கு 1.500 டொலர்கள் வழங்கப்படும். மலைப்பாம்பு என வெப்பவலய நாடுகளில் அழைக்கப்படும் இந்தப் பாம்புகள் இராட்சமாக வளரக்கூடியன. புளோரிடாவின் ஆற்றுநிலம் மற்றும் சேற்றுப் பகுதிகளில் இந்தப் பாம்புகளின் தொகை அதிகரித்துள்ளதால் இந்த பாம்புகள் காடுகளில் மற்றும் கிராமப்புறங்களில் வாழும் மிருகங்கள் அணைத்தையும் தமக்கு உணவாக்குகின்றன. இதனால் ஏனைய மிருகங்களின் தொகை குறைந்து வருவதனால் இந்தப் பாம்புகளின் தொகையை அரசு இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் குறைத்து வருகிறது. 800 பேர்…

  20. ஹேற்றியில்(In Haiti) ...........

  21. வீடுகளை உடைத்த களவெடுக்கப்பட்ட புகையிரதம் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ரெயில் பணிமனை உள்ளது. இங்கு வேலை செய்த துப்புரவு பெண் பணியாளர் இன்று காலியாக நின்றிருந்த பயணிகள் ரெயிலை புறநகர் பகுதிக்கு திடீரென ஓட்டிச் சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அந்த பெண்ணுக்கு சரியாக ரெயிலை ஓட்டத் தெரியாததால் சுமார் ஒரு மைல் தூரம் சென்றதும் தடம் புரண்டது. பின்னர் அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மோதி நின்றது. ரெயிலை கடத்திச் சென்ற பெண் பலத்த காயம் அடைந்து ஸ்டாக்ஹோம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் 3 குடும்பத்தினர் இருந்தனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து …

    • 0 replies
    • 439 views
  22. வங்கதேசத்தில், காதலனிடமிருந்து பிரிக்கப்பட்ட கிளி, ஒரு வாரமாக பட்டினி கிடந்ததால், கோர்ட் மூலம், மீண்டும் காதலனுடன் இணைந்துள்ளது. வங்கதேசத்தை சேர்ந்தவர் இக்ரம் சலீம். இவர் பிரேசில் நாட்டை சேர்ந்த பஞ்சவர்ண கிளிகளை வளர்த்து வந்தார். வாடகை வீட்டில் இந்த கிளிகளை, வளர்க்க போதிய இடவசதி இல்லாததால், சிறிது காலத்துக்கு, தாகா நகரில் உள்ள, தனியார் உயிரியல் பூங்காவில் விட்டிருந்தார்.உயிரியல் பூங்கா வில், ஆண் பஞ்ச வர்ணகிளியுடன், இந்த ராணி கிளிக்கு தொடர்பு ஏற்பட்டு, மூன்று குஞ்சுகள் உருவாயின. ஒரு கிளியை, உயிரியல் பூங்கா உரிமையாளர் விலை கொடுத்து வாங்கி கொண்டார். இதற்கிடையே, வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்த சலீம், தனது செல்ல பெண் கிளி ராணியை, உயிரியல் பூங்காவிலிருந்து அழைத்து வ…

  23. By Kavinthan Shanmugarajah 2013-01-15 14:17:01 இந்தியாவில் இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் மகா கும்பமேளாவில் நேற்று தொடங்கியது. இம்முறையும் இதில் கோடிக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர். மேலும் கோடிக்கணக்கானோர் தொடர்ச்சியாக அங்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்து சமயத்தினரால் ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா அலகாபாத்தில் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அரை கும்பமேளா கொண்டாடப்படுகின்றது. மகா கும்பமேளாவே உலகில் அதிகளவு மக்கள் ஒன்று கூடும் திருவிழாவாகத் திகழ்கின்றது. இத்திருவிழாவானது எதிர்வரும் மார்ச் மாதம் வரை 55 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. மகா சங்கராந்தி தினத்தில் தொடங்கும்…

  24. சிறீலங்கா அரசு தமிழர்களுக்கு எதிரான இனவாத, இன அழிப்பு நடவடிக்கையை கட்டவிழ்த்தபோது, தமிழ் மக்கள் மீது பொருளாதார, மருந்துத் தடைகளை விதித்தபோது பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்காகத் தோற்றம் பெற்றதுதான் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (Tamils Rehabilitation Organisation). பாதிக்கப்படும் தமிழ் மக்கள் யாரிடமும் கையேந்தி நின்றுவிடக்கூடாது, தங்களைக் கவனிப்பதற்கு யாருமே இல்லை என்று அவர்கள் சோர்ந்துபோய்விடக்கூடாது என்பதற்காக இலாப நோக்கமற்ற, அரச சார்பற்ற ஒரு நிறுவனமாக உருவாக்கப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் பூரணமான ஆதரவை வழங்கியது மட்டுமல்ல, சிறீலங்காவின் சட்டவிதிகளின் கீழ் அதனையரு அமைப்பாகப் பதிவு செய்து தமிழ் மக்களுக்கான உதவிகளைப் புரிவதற்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.