செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7107 topics in this forum
-
'பவர் கட்'டுக்கு நடுவே சமையல்... சாம்பாரில் மிதந்த பாம்பு...ஷாக்கில் நிலைகுலைந்த பெண்! Posted by: Sudha Published: Sunday, December 9, 2012, 12:02 [iST] சென்னை: சென்னை அருகே மின்சாரத் தடை காரணமாக இருட்டில் சமையல் செய்தார் ஒரு பெண். சாம்பாரை வைத்து அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கி வீட்டாருக்கு சாப்பாடு பரிமாறினார். அடுத்த நாள் காலையில் சாம்பார் இருந்த பாத்திரத்தைப் பார்த்தபோது, அதில், பாம்பின் எலும்புக் கூட கிடந்ததைப் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்தவர் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து தெளியாமல் பித்துப் பிடித்தவர் போல காணப்படுகிறார். சென்னை அகருகே வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மங்கம்மாள். 47 வயதான இவர் டிசம்பர் 4ம் தேதி மாலை 7 மணியளவில் சமையல் செய்துள்ளார்…
-
- 0 replies
- 550 views
-
-
எகிப்து விமானத்தில் திடீரென நாகபாம்பு நுழைந்ததால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எகிப்து நாட்டின் கெய்ரோவிலிருந்து, குவைத் நோக்கி, விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் பயணித்த ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த, பாம்பு வியாபாரி, எகிப்தில் வாங்கிய நாகபாம்பை, கள்ளத்தனமாக எடுத்து வந்தார். திடீரென இந்த பாம்பு, 48 வயதான அந்த நபரை கடித்து விட்டது. இதனால், அவர் கையை உதறிய போது, அந்த பாம்பு அவரிடமிருந்து தப்பித்து, விமானத்தின் மற்ற இருக்கைகள் வழியாக சென்று விட்டது.இந்த பாம்பை அவர் பிடிக்க முயன்ற போது, விமான ஊழியர்கள் உஷாரடைந்து விட்டனர். ஆனால், பயணிகள் பீதியடைந்து அலறினர். இதையடுத்து, விமானம் உடனடியாக, அல் கர்தாகா நகரில் தரையிறக்கப் பட்டது.விமானத்தில் சுற்றிக் கொண்டிருந்த…
-
- 13 replies
- 1.5k views
-
-
பொய்யான விளம்பரத்திற்காக மைக்டோனால்ட் நிறுவனம் மன்னிப்பு கோரியது! Published on December 6, 2012-8:19 pm · சுவிஸ் நாட்டில் உள்ள பிரபல உணவு நிறுவனமான மைக்டோனால்ட் விளம்பரம் ஒன்றில் பொய்யான தகவலை வெளியிட்டதற்காக மன்னிப்புக் கோரியுள்ளதுடன் விளம்பரத்தை திருத்தி அமைத்துள்ளது. மைக்டொனால்ட் நிறுவனத்தில் வழங்கப்படும் பூர்கர் என்ற உணவிற்கு பயன்படுத்தப்படும் சீஸ் அல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள பசுக்களின் பாலில் இருந்து பெறப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டு வந்தது. இணையத்தளங்களிலும் தொலைக்காட்சியிலும் இந்த விளம்பரம் ஒளிபரப்பபட்டு வந்தது. ஆனால் சுவிஸ் விவசாய திணைக்கள தகவல் பிரிவு இது பொய்யான தகவல்களை கொண்ட விளம்பரம் என சுட்டிக்காட்டியுள்ளது. இது பொய்யான தகவல் என்றும் சுவிஸ் அல்ப்ஸ…
-
- 0 replies
- 305 views
-
-
[size=4]சீனாவின் பெய்ஜிங் மாகாண வென்லிங் என்ற நகரில் வசித்து வரும் வயதான சீனத் தம்பதி தாங்கள் வசித்து வந்த வீட்டை நெடுஞ்சாலை நிர்மாணத்துக்காக கொடுக்க மறுத்து விட்டதால், வேறு வழியின்றி அவர்களது வீட்டை மட்டும் விட்டுவிட்டு, அந்த வீட்டைச் சுற்றிலும் நெடுஞ்சாலையை நிர்மாணித்துள்ளனர் அதிகாரிகள். இதனால் நெடுஞ்சாலைக்கு மத்தியில் தனியாக அந்த வீடு மட்டும் வித்தியாசமாக காட்சி அளிக்கிறது. லூ பகோன் மற்றும் அவரது மனைவி மட்டும் இந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீடு உள்ள பகுதியில் நெடுஞ்சாலையொன்று நிர்மாணிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து காணி சுவீகரிக்கும் பணிகள் இடம்பெற்றன. ஆனால் லூ, அரசு கொடுக்கும் இழப்பீட்டுத் தொகை மிகக் குறைவாக இருப்பதாக கூறி வீட்டுக் காணியைக் க…
-
- 19 replies
- 1.2k views
-
-
2012-12-21 உலகம் அழியாது, வதந்திகளை நம்பாதீர் – அமெரிக்கா0 Peter December 06, 2012 Canada இந்த மாதம் டிசம்பர் மாதம் 21ம் திகதி மாயன் நாட்காட்டி முடிவிற்கு வருகிறது உலகம் அழியப்போகிறது என்பதோடு ஆரம்பத்து பல பல புனைகதைகளிற்கு கை, கால் வைத்து மக்களிடைய பீதியை ஏற்படுத்தும் முயற்சி அமெரிக்காவை உத்தியோகபூர்வமாக அறிக்கை விட வைத்திருக்கிறது. அமைதியாய் இருங்கள்ஸ உலகில் எந்த மாற்றமுமே டிசம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறப்போவதில்லை. மாயன் நாட்காட்டியில் கூட ஒரு ஆண்டுக்கான சுற்று டிசம்பர் 21ம் திகதி முடிந்து புதிய ஆண்டு டிசம்பர் 22ம் திகதி தொடங்குகிறதே தவிர அந்த நாட்காட்டியின் ஊழிக்காலம் முடியவில்லை எனத் தெரவிக்கப்பட்டுள்ளது. Scary Rumors about the World Ending in 2012 Are Just Ru…
-
- 3 replies
- 1.3k views
-
-
உலகில் அதிக வயதுடைய பெண் மரணம் புதன்கிழமை, 05 டிசெம்பர் 2012 09:36 உலகில் அதிக வயதுடைய பெண்ணாகக் கருதப்பட்ட பெஸி கூப்பர் தனது 116 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். ஜோர்ஜியா, மொன்ரே பகுதியில் உள்ள அவரது வீட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளதாக அவரது மகன் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். 1896 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி பிறந்த பெஸி கூப்பர் உலகில் நீண்ட ஆயுளை கொண்ட பெண்ணாக கடந்த 2011 ஆம் ஆண்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பரிந்துரை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/pirapalankal/54127-2012-12-05-04-08-38.html
-
- 1 reply
- 391 views
-
-
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு கால்பந்து வீரர் டாய்லெட் போய் விட்டு டிஷூ பேப்பருக்குப் பதில் 20 பவுண்ஸ் நோட்டை எடுத்து துடைத்துக் கொண்டார். இந்தப் படத்தை அவர் வெளியிட இப்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அந்த கால்பந்து வீரரின் பெயர் லியாம் ரிட்ஜ்வெல். 28 வயதான இவர் வெஸ்ட் ப்ரோமியான் அல்பியான் கால்பந்து கிளப்பைச் சேர்ந்த அணியின் கால்பந்து வீரர் ஆவார். தடுப்பாட்டக்காரரான இவர் ஒரு சீரியஸான சர்ச்சையில் சிக்கியுள்ளார். பிர்மிங்காமில் உள்ள தனது வீட்டில் டாய்லெட் போன பின்னர் டிஷூ பேப்பரை எடுத்துத் துடைப்பதற்குப் பதில், 20 பவுண்டு நோட்டை எடுத்து துடைத்துள்ளார். அதை புகைப்படமாகவும் வெளியிட்டுள்ளார். இதுதான் பஞ்சாயத்தைக் கூட்டி விட்டது. அதில் ரூபாய் நோட்டை எடுத்து துடைத்த நிலைய…
-
- 14 replies
- 719 views
-
-
மனைவியை விவாகரத்து செய்யும் மைக்டைசன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக்டைசன். முன்னாள் உலக சாம்பியனான இவர் ராபின் கிவென்ஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது டைசன் மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார். இதுபற்றி டைசன் கூறியதாவது:- ராபினை திருமணம் செய்த பின் ஒருநாள் நான் வீட்டுக்கு திடீர் என்று வந்தேன். அப்போது ராபினும் ஆலிவுட் நடிகர் பிராட் பிட்டும் உல்லாசமாக இருந்ததை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். போட்டியில் எதிரிகளுக்கு குத்துவிட்ட எனக்கு என் மனைவி குத்து விட்டது போல் இருந்தது. நான் ஒரு மடையன். நான் அவளைப்பார்த்தேன். அவள் என்னைப் பார்த்தாள். அவ்வளவு தான் என்னால் முடிந்தது. அவள் ஒரு பன்றி, என்னை ஏமாற்றிவிட்டாள். வக்கீலை சந்தித்து விவாகரத்துக…
-
- 2 replies
- 667 views
-
-
டுவிட்டரில் பாப்பரசர்: வத்திக்கான் அறிவிப்பு செவ்வாய்க்கிழமை, 04 டிசெம்பர் 2012 07:43 0 COMMENTS ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் செய்திகளைப் பரப்பும் நோக்குடன் பாப்பரசர் பெனடிக்ட்,@pontifexஎன்ற பெயரில் சமூகவலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டரில் டுவிட்டர் கணக்கொன்றை தொடங்கியுள்ளார். பாப்பரசரிடம் கேட்கப்பட்டிருக்கின்ற கேள்விகளுக்கான பதில்களை அவரே டிசெம்பர் 12 ஆம் திகதி முதல் டிவிட் தகவல்களாக வெளியிடத் தொடங்குவார் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆங்கிலத்திலும் அரபு உள்ளிட்ட ஏனைய 7 மொழிகளிலும் பாப்பரசர் பதில்களை அளிப்பார் என்றும் அந்த அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வெளிநாட்டு செய்தி சேவைகள் வெளியிட்டுள்ள செய்திகளில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,…
-
- 0 replies
- 306 views
-
-
பிரான்சில் அரசியற் தஞ்சம் கோரி அது நிராகரிக்கப்பட்ட நிலையிலுள்ள இளைஞர்களின் நிலைமையைத் தமக்கு சாதகமாக்கப் பயன்படுத்தி சிலர் அரசியல் மற்றும் பண இலாபங்களை அடைவதற்கு எத்தனிப்பதாக தெரியவருகின்றது. இவ்வாறு அவர்களிடம் செல்கின்றவர்களின் சுயவிபரங்கள், முகவரிகள் என்பவை பெறப்பட்டுப் பதிவு செய்யப்படுகின்றன. வதிவிட உரிமையற்று நிற்கும் இளைஞர்களின் நிர்க்கத்தியான நிலைமையைப் பயன்படுத்தித் தமது கட்சி ஆட்சேர்ப்பில் இவர்கள் ஈடுபடுகின்றார்கள். அது மட்டுமல்லாது அலுவலக வாடகை, வழக்கறிஞர் கட்டணம் எனக் கூறிப் பெருந்தொகையான கட்டணங்கள் அறவிடுவதற்கும் முயற்சி எடுக்கின்றனர். பிரான்ஸ் நாட்டுச் சட்டதிட்டங்களுக்கு அமைய ஒருவரிடம் தனிப்பட்ட விபரங்களைச் சேகரிப்பது சட்டப்படி குற்றமாகும். இளைஞர்களே! அ…
-
- 0 replies
- 440 views
-
-
அமெரிக்காவில், புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட மீன் வகைகளுக்கு, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில், அலபாமா மற்றும் டென்னிசி மாகாணங்களில் உள்ள நதிகளில், ஆரஞ்சு நிறத்தில், நீல நிற புள்ளிகள் மற்றும் கோடுகளுடன், 43 மி.மீ., நீளத்தில், 200 மீன்கள் கண்டு பிடிக்கப்பட்டன. பாறைகளுக்கு அடியிலும், சகதிகளுக்கு இடையேயும் ஒளிந்து கொண்டிருந்த இந்த மீன்கள், "டார்டர்' என்ற வேகமாக நீந்தும் மீன் வகையை சேர்ந்தவை. அமெரிக்க அதிபர் ஒபாமா, சுற்றுச்சூழல் போன்றவற்றில் அதிக அக்கறை செலுத்துவதால், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த மீன்களுக்கு, அதிபர் ஒபாமாவின் பெயரை விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர். http://www.virakesari.lk/article/world.php?vid=311 http://…
-
- 0 replies
- 3k views
-
-
பல லட்சத்திற்கு ஏலத்திற்கு வரும் மடோனாவின் 'புல்லட்' பிரா! லண்டன்: பாப் பாடகி மடோனா ஒரு இசை நிகழ்ச்சியில் அணிந்திருந்த பிரா, தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. பல லட்சத்திற்கு இந்த பிரா ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புல்லட் பிரா என்று இந்த பிராவுக்குச் செல்லப் பெயரும் உண்டு. காரணம், புல்லட்டைப் போல படு ஷார்ப்பாக இதன் நுனிப்பகுதி இருக்கும். மடோனாவுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது இது. இந்த பிராவை அணிந்து 1990ல்நடந்த இசைச் சுற்றுப்பயணத்தில் ஆடிப் பாடினார் மடோனா. இந்த பிராதான் தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. இந்த பிராவைத் தயாரித்தது ஜீன் பால்கால்டியர் நிறுவனமாகும். இந்த பிராவை தற்போது பிரபல கிறிஸ்டி நிறுவனம் ஏலத்திற்குக் கொண்டு வந்துள்ளது. குறைந்தது ர…
-
- 11 replies
- 1k views
-
-
இம்முறையும் சில இடங்களில் இரண்டு மாவீரர் தினம் நடந்தது எல்லாருக்கும் நினைவு தானே அந்த மாவீரர் கனவுகளைச் சுமந்ததாக சொன்ன எத்தனை பேர் , மாவீரர் விழா நடாத்துவதற்கு அப்பால் , ஏதாவது செயல்பாட்டில் உங்கள் நாட்டில் , சென்றிருக்கின்றார்கள். செல்கின்றார்கள் என்பதை மக்களே உங்கள் வீட்டுச் சுவரில் எழுதி வையுங்கள். கண்டிப்பாக இது தேவைப்படவேண்டிய விடயம் . (உங்கள் மறதிக் குணத்தை அறிந்து அரசியல் வாதிகள் செயல்படுவதை தடுக்க இது தான் ஒரே வழி ..ஹி ஹி ) இப்பொழுது சிறீலங்காவுக்கு எதிராக சர்வதேச விசாரணை என்ற விடயம் சர்வதேச அரசியலில் முக்கியமான விடயமாக உள்ளது . இதனை நாம் செய்தால் தான் இனப்படுகொலை நிரூபிக்கப் படும் . தமிழீழம் மலரும் . நாம் ஒவ்வொருவரும் முதலில் நாம் …
-
- 1 reply
- 899 views
-
-
மும்பை: விமான பயணிகளின் பாதுகாப்பைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் இரண்டு ஸ்பைஸ்ஜெட் விமானங்களின் பைலட்டுகள், நடுவானில் வாய்ச்சண்டை போட்ட சமாச்சாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் முதலில் தரையிறங்குவது என்பது தொடர்பாக இந்த மோதல் நடந்துள்ளது. புதன்கிழமை இரவு 7 மணிக்கு இந்த சண்டை நடந்துள்ளது. டெல்லியிலிருந்து இந்தூர் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம் தரையிறங்க மும்பை விமானக்கட்டுப்பாட்டு அறை அனுமதி கொடுத்தது. இந்த நிலையில் அதே நேரத்தில், ஹைதராபாத்-இந்தூர் இடையிலான ஸ்பைஸ்ஜெட் விமானமும் தரையிறங்க அனுமதி கோரியது. ஆனால் டெல்லி விமானம் இறங்கிய பின்னர் நீங்கள் தரையிறங்குங்கள் என்று ஹைதராபாத் விமானத்திற்கு விமானக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் போனது. ஆனால் அதை ஹைதர…
-
- 2 replies
- 712 views
-
-
[size=2] [/size][size=2] [size=4]காந்திக்கு அப்பன் இவன் அகிம்சைக்கே தந்தை இவன். இவன் புகழ் காப்போம். இவன் பெயர் காப்போம். இவன் கண்ட கனவை அடைவோம்...!!![/size][/size]
-
- 5 replies
- 718 views
-
-
தாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் By General 2012-11-28 11:48:32 பெண்கள் அணியும் நவநாகரிக ஆடைகளுக்கான விற்பனையை ஊக்குவிக்க அந்த ஆடைகளை அணிந்து புகைப்படங்களுக்குக் காட்சியளித்து 75 வயது தாத்தா ஒருவர் வியப்பில் ஆழ்த்திய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. குவாங்சொயு நகரைச் சேர்ந்த மடிககா எனச் செல்லமாக அழைக்கப்படும் லியு கியென்பிங்க் என்ற வயோதிபரே இவ்வாறு பெண்களின் ஆடைகளை அணிந்து புகைப்படங்களுக்குக் காட்சியளித்துள்ளார். அவரது பேத்தியான லு ரிங்கும் (24) அவரது நண்பிகளும் இணையத்தளம் மூலமாக தம்மால் நடத்தப்பட்டு வந்த நவநாகரிக ஆடைகளின் விற்பனையை ஊக்குவிக்க, அவற்றை மொடல் அழகிகளுக்கு அணிவித்துப் புகைப்படம் …
-
- 0 replies
- 576 views
-
-
[size=3]1950களில் நிலவை அணு குண்டு வைத்து தகர்க்க அமெரிக்கா திட்டமிட்டிருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.[/size] [size=3]1950களில் நிலவை அணு குண்டு வைத்து தகர்க்க ‘புராஜெக்ட் ஏ119′ என்ற திட்டத்தை அமெரிக்கா தீட்டியது. ஆனால் அத்திட்டத்தை அது செயல்படுத்தவில்லை.[/size] [size=3]இது குறித்து தி டெய்லி மெயில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,[/size] [size=3]சோவியத் யூனியன் விண்வெளிக்கு ஸ்புட்னிக் விண்கலத்தை அனுப்பிய பிறகு பூமியில் இருந்து நிலவு வெடிப்பதைப் பார்த்தால் அது சோவியத் யூனியனுக்கு ஒரு பேரதிச்சியாகவும், அமெரிக்காவின் நம்பிக்கையை அதிகரிப்பதாகவும் இருக்கும்.[/size] [size=3]பெயர் வெளியிடப்படாத இடத்தில் இருந்து சிறிய அணு குண்டை நிலவுக்கு அனுப்ப அமெரிக்கா …
-
- 0 replies
- 675 views
-
-
அமெரிக்காவில் சுமார் 70 வருடங்களுக்கு முன்னர் இரண்டாம் உலகப்போரின் போது அனுப்பப்பட்ட போஸ்ட் கார்ட் தற்போது தான் உரியவரிடம் சென்று சேர்ந்துள்ளது. கடந்த 1943ம் வருடம் ஜூலை 4ம் தேதி இலினாய்சின் ராக்போர்டு பகுதியில் எல்மிரா பகுதியில் உள்ள பாவுலின் மற்றும் தெரசா என்ற சகோதரிகளுக்கு அனுப்பப்பட்டது. இவர்களின் சகோதரன் ஜார்ஜ், இரண்டாம் உலகப்போரின் போது, ராக்போர்டு ராணுவ மருத்துவ முகாமில் பணியாற்றி வந்தார். அப்போது இந்த போஸ்ட் கார்ட் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த வாரம் வந்த இந்த போஸ்ட் கார்டில், குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் தற்போது, வேறு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 526 views
-
-
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தமிழீழ தேசிய செயற்பாட்டாளர் ஒருவர் தேசவிரோதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். இன்று மாலை பாரிசில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலகம் முன்பாக இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. 1996 ஒக்ரோபர் மாதம் 26ஆம் நாளன்று பாரிஸ் லாச்சப்பலில் இடம்பெற்ற லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரின் படுகொலையின் பாணியில் இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருப்பதாக சங்கதி-24 இணையத்திற்கு தெரிய வருகின்றது. இது தொடர்பான முழு விபரங்கள் விரைவில் வெளியிடப்படும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதேயிடத்தில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினர் பருதி அவர்கள் தேசவிரோதிகளின் வாள்வீச்சுக்கு இலக்காகியமை சு…
-
- 240 replies
- 17.8k views
- 1 follower
-
-
[size=3] கேணல் பரிதி அவர்களின் வீரவணக்க நிகழ்விலும் வித்துடல் விதைப்பிலும் சுவிஸ் வாழ் எம் உறவுகள் கலந்து கொள்ளும் வகையில் சுவிசின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பேரூந்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.[/size][size=3] [/size] WWW.Irruppu.com
-
- 0 replies
- 324 views
-
-
[size=4]போர் என்பது அமைதிபேச்சு வார்தை முறிந்ததால் வந்தஒன்று அமைதிபேச்சுவார்த்தையும் அதில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களையும் பன்னாடுகள் காக்கதவறியதால் வந்ததுபோர் பன்னாட்டு தலையீடு இல்லை என்றால் தமிழர்களுக்கு இனப்படுகொலை நடந்திருக்காது என்று மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]தமிழ்நெற் இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணில் அவர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். தமிழர்களை காப்பதற்கு என்று ஒருகாவல் அணிஇருந்தது ஒருபடை இருந்தது அதுஇருந்திருக்கும் இந்த இனப்படுகொலை என்பது இலங்கை அரசினால் சாத்தியப்படுத்தியிருக்க முடியாது அமைதி ஒப்பந்தம் என்பது இந்த இனப்படுகொலை செய்வதற்கான முகாந்தரமாகத்தான் நாம் பார்க்கவேண்டியுள்ளது.[/size] [size=4]ஏன் எ…
-
- 0 replies
- 375 views
-
-
மொகலாய மன்னர்கள், நம் நாட்டை ஆண்ட போதெல்லாம், அவர்களது தலைநகரம், இன்றயை பழைய டில்லி தான். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், 1911ல், அதாவது இன்றைக்கு, 100 ஆண்டுகளுக்கு முன், இங்கிலாந்தில் மன்னராக இருந்த, ஐந்தாம் ஜார்ஜ், டில்லி வந்தார். இந்தியாவில், பிரிட்டிஷ் அரசுக்கு, புதியதொரு தலைநகரம் நிர்மாணிக்க திட்டமிட்டிருப்பதாக அறிவித்தார். அதன்படி உருவானதே, இன்றைய புதுடில்லி. புதுடில்லி நகரின் நடுநாயகமாக விளங்குவது, ஜனாதிபதி மாளிகை. 1931ல், இது கட்டி முடிக்கப்பட்டது. இதற்குத் தேவையான, வெள்ளை மற்றும் சிவப்புக் கற்கள், தொலைவில் உள்ள பகுதிகளில் தான் கிடைத்தன. அவற்றை, லாரிகளில் கொண்டு வருவதெனில், அதிக செலவாகும். அதனால், ரயிலில் கொண்டு வந்தனர். மேற்படி பகுதிகளுக்கு, அப்போது ரயில் பாதை இல…
-
- 3 replies
- 1k views
-
-
[size=4]பணிபுரிபவர்களிறகும் பயன்பாட்டாளர்களிற்கும் வரும் விருந்தினர்களிற்கும் அலுவலகம் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டுமென்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கும் வகையில் கூகுளின் ரொறன்ரோ அலுவலகம் அமைந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் ஏனைய அலுவலங்களும் இதே பாணியை ஒத்ததாக இருத்தாலும் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட கூகுளின் ரொறன்ரோ அலுவலகத்தில் மற்றைய அலுவலங்களை விடவும் சில சிறப்பம்சங்களும் உள்ளடக்கப்பட்டுளளன. உணவு இலவசம் அதைவிட அவை ஒவ்வொரு மாடிகளின் வண்ணங்களிற்கும் ஏற்ப வேறுபடுத்தப்பட்டுள்ளன. யாருமே தொடர்ந்து மேசையில் இருந்து பணிபுரிய வேண்டுமென்றல்ல, அவர்கள் தங்கள் வசதிக்கேற்ப வேறு இடங்களிலும் அமர்ந்து பணி செய்வதற்கு ஏற்ப அலுவலகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டுச் சாதணங்கள்,…
-
- 0 replies
- 506 views
-
-
ஈரோடு: வரதட்சணைக்காக திருமணம் தடைபடுவது கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் ஈரோடு அருகே திருமண வீட்டில் தாலிக்கயிற்றின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருப்பதாக காரணம் கூறி மணப்பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார். ஈரோடு பெரியவலசுவை கல்லூரி மாணவிக்கும் திருச்செங்கோடு வாலிபருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. நேற்று மணநாள் என்பதால் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் மண்டபத்தில் குவிந்தனர். முகூர்த்த நேரம் நெருங்கியதும் மணமகன், மணமகளை மேடைக்கு அழைத்து வந்து அமர வைத்தனர். மணமகன் தாலி கட்டும் நேரத்தில் அதை மணப்பெண் தடுத்து நிறுத்தினார். இதனால் மாப்பிள்ளையும் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதற்கு மணப்பெண் கூறிய காரணம்தான் அங்கே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘தாலிக்கொட…
-
- 4 replies
- 848 views
-
-
[size=3]அமெரிக்காவின் ஒகாயோ மாகாணத்திலுள்ள கிளிவ்லண்ட் நகரில் ஒரு பாடசாலை பேருந்து மாணவர்களை ஏற்றியிறக்கும் போது அந்தப் பேருந்தைத் தவறான முறையில் கடந்து செல்ல முயன்ற பெண் ஒருவர் அங்கு மாட்டிவைக்கப்பட்டிருந்த வீடியோக் கமிராவினால் கண்டுபிடிக்கப்பட்டு குற்றஞ் சாட்டப்பட்டார்.[/size] [size=3][/size] [size=3]இதனை விசாரித்த நீதிபதி 30 நாட்கள் வாகண சாரதிப்பத்திரத்தைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டதுடன், 250 டொலர்கள் அபராதம் விதித்ததோடு இரண்டு தினங்களிற்கு பாடசாலை மாணவர்களை இறக்கும் நேரத்தில் ஒரு பதாதைகையை தாங்கியபடி நிற்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.[/size] [size=3]“ஒரு முட்டாள் தான் பாடசாலை மாணவர்களை பேருந்தில் ஏற்றிஇறக்கும் போது கடந்து செல்வாள்” என்று எழுதப்பட்ட மேற்படி பத…
-
- 1 reply
- 687 views
-