Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் செயற்குழு கூடி ஆராயவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் முகவர் நிறுவனங்கள், நிதியங்கள் மற்றும் தணை நிறுவனங்களின் பொறுப்பதிகாரிகள் இவ்வாறு கூடத் தீர்மானித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட பெட்ரீ குழுவின் மீளாய்வு அறிக்கை தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளது. எதிர்வரும் ஆண்டின் நடுப்பகுதியளவில் இந்த மீளாய்வு தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்க முடியம் என எதிர்பார்க்கப்படுகிறது. http://www.globaltamilnews.net

  2. யாழ் பல்கலைக் கழக மாணவர்களை இலங்கை இராணுவம் கைதுசெய்தது, மற்றும் சித்திரவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பாகவும். மேலும் பல மாணவர்களை இலங்கை இராணுவம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருவதைக் கண்டித்தும், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் இல்லத்துக்கு முன்னதாக தொடர்போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நடைபெறும் இப் போராட்டம் இன்று மாலை 6.00 மணி முதல் 8.00 மணிவரை நடைபெறும் எனவும், நாளை மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை நடைபெறும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள். 3 எழுத்துப் பெயரில் இயங்கி வரும் தமிழ் தொலைக்காட்சி ஒன்று, நேரங்களை மாற்றிச் சொல்லி மக்களை குழப்பி வருகிறது. எனவே போராட்டம் நடைபெறும் இடத்தையும் நேரத்தையும் நாம் இங்கே மிகத் தெளிவாக தந்துள்ளோ…

  3. http://youtu.be/Gm_sU5m6N08 உக்ரைன் (சிறீலங்கா சிங்கள அரசிற்கு அழிவாயுதங்களை அள்ளி வழங்கி தமிழர்களைக் கொன்றொழிக்க உதவிய.. உதவும் நாடுகளில் ஒன்று) பாராளுமன்ற சனநாயகம்.. இப்படி இருக்குது. இதுக்கெல்லாம் நேட்டா அந்தஸ்து வழங்கி கெளரவிக்கிறது உலகில்.. தானே பெரும் படையும்.. தானே அணு குண்டும்.. தானே ஏவுகணையும் வைச்சிருக்கனும் என்று பெரும் கனவு காணும்.. அமெரிக்கா என்ற சனநாயக பெருந்தேசம்..!

  4. உக்ரைனில் கடும் பனியையே கரைய வைத்த நிர்வாணப் பெண்களின் போராட்டம் உக்ரைன் நாட்டு பாராளுமன்றம் பெரும் அமளி துமளியை சந்தித்துள்ளது. கூட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே எம்.பிக்களுக்கிடையே கடும் அடிதடி மூண்டுள்ளது. அதேபோல பெண்கள் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் சிலர் நாடாளுமன்றத்திற்கு வெளியே நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியே பரபரப்பானது. உறைய வைக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பெண்கள் உடைகளைக் களைந்து நிர்வாணமாகி நடு வீதியில் நின்று கூச்சலிட்டுப் போராட்டம் நடத்திய காட்சி அனைவரையும் அதிர வைத்துள்ளது. பெண்கள் இப்படி மேலாடை துறந்து வீதியில் போராடிய அதே நேரத்தில் பாராளுமன்றத்தினுள் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கும், ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கும் இடையே…

  5. நிலாவில் காய்கறித் தோட்டம் அமைக்க சீனா திட்டம் Posted by: Mayura Akilan Published: Thursday, December 13, 2012, 11:33 [iST] விண்வெளியில் காய்கறித் தோட்டம் அமைக்க சீனா முடிவு செய்துள்ளது. இதன் மூலம் விண்வெளியில் ஆய்வு மேற்கொள்ளும் வீரர்கள் இனி உணவுக்காக திண்டாட தேவையிருக்காது என்று வெற்றிகரமான ஆய்வுக்கூட சோதனைக்கு பின்னர், ஒரு சீன உயர் அதிகாரி கூறியுள்ளார். சீனா விஞ்ஞானிகள் வருங்காலத்தில், நிலவிலோ அல்லது செவ்வாய் கிரகத்தில்லோ காய்கறித்தோட்டம் அமைக்க உள்ளனர். இதற்காக ஒரு மூடிய அமைப்பில் மக்கள் மற்றும் தாவரங்களுக்கு இடையேயான ஒரு டைனமிக் சமச்சீர் ஆக்சிஜன் நுட்பம், கார்பன் டை ஆக்சைடு, நீர் மீது கவனம் செலுத்தி நடந்து வருவதாக டெங் யிபிங் என்ற சீன விண்வெளி வீரர் ஆராய்ச்சி …

  6. Started by akootha,

    இந்த நூற்றாண்டின் மிக முக்கிய தினங்களில் ஒன்றாக இன்றைய தினம் (12.12.12) வானியல் கணித மேதைகளா லும், அறிவியலாளர்களாலும் கரு தப்படுகின்றது. 12ஆம் திகதி 12ஆம் மாதம் 12ஆம் ஆண்டு அதாவது 12.12.12 எல்லாமே 12ஆக அமையப்பெற்ற புதுமைமிகு நாளாக இருப்பதை அவதானிக்க முடியும். இவ்வாறானதொரு நிகழ்வு கடந்த 11ஆம் ஆண்டிலும் (11.11.11) இடம்பெற்றது. அந்த வகையில் இன்றைய 12.12.12 சர்வதேச ரீதியாக பேசப்படுகின்றது. இதற்கான காரணம் இந்த 2000ஆம் ஆண்டில் இவ்வாறானதொரு தினம் இனிமேல் எவ்வாண்டிலும் ஏற்படப் போவதில்லை. குறிப்பிட்டுச் சொல்வதாக இருந்தால் இந்த 2000ஆம் ஆண்டில் ஒரு ஆண்டிலும் ஏற்படமாட்டாது. இனிமேல் இவ்வாறானதொரு நிகழ்வு 2101ஆம் ஆண்டிலேயே அமையப்பெறும் அன்று 01.01.01 ஆக இருக்கும் அப்போது மன…

    • 2 replies
    • 680 views
  7. மும்பையை சேர்ந்த காதல் ஜோடி, இன்று( 12.12.12) திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இவர்கள் தங்கள் காதல் திருமணத்தை, 10.10.10ல் நிச்சயம் செய்துள்ளனர்; அதை, 11.11.11ல் பதிவு செய்துள்ளனர்.பாந்த்ரா பகுதியை சேர்ந்தவர், பிராண்டன் பெரெரா, 33. வளைகுடா நாடு ஒன்றில், கப்பல் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர், எமிலியா டி சில்வா, 28, என்ற பெண்ணை, 12 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களின் காதல் கதை, பள்ளிப் பருவத்திலிருந்தே துவங்கியது. இருவரும், ஒருவரை ஒருவர் மனதார விரும்பினர். காதல் பறவைகளாக வலம் வந்த இந்த ஜோடி, 2009ல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தது. 12 ஆண்டு காதல் திருமணத்தை, எந்த காலத்திலும் மறக்க முடியாத அளவிற்கு, பதிவு செய்ய, முடிவு செய்தது. இருவ…

  8. உலகெங்கும் மிக அற்புதமான நாளாக கருதப்படும் 12-12-12 என்ற இந்த நாளில் பிறக்கும் குழந்தைகளை இந்த நூற்றாண்டின் அதிசய குழந்தைகளாக உலகம் கருதுகிறது. இந்த நாளில் உலகில் பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிறந்திருந்தாலும், நாம் சந்தித்த சில குழந்தைகள் பற்றிய குறிப்புகளை இங்கு காண்போம். இனிமேல் தேதி,மாதம்,வருடம் இம்மூன்றும் ஒரே நாள் வரும் தேதியை நாம் காண்பதற்கு பல நூற்றுக்கணக்கான வருடங்கள் நாம் காத்திருக்க வேண்டும். அடுத்ததாக நாம் சந்திப்பது 01-01-2101 என்ற வருடத்தில்தான் தேதி, மாதம், வருடம் இம்மூன்றும் ஒன்றாக வருவதை நாம் பார்க்கமுடியும். எனவே இன்று பிறந்த குழந்தைகளை அதிசய குழந்தைகள் என்று உலகம் எண்ணுவது சரிதானே? இந்தியாவில் புதுடில்லி மருத்துவமனையில் பல பெற்றோர்கள், இந்த வித்த…

  9. எஸ்.மாறன் மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த சடலங்களை தோண்டியெடுத்து அதிலிருந்து அவயங்கள் எடுத்துச்செல்லப்பட்டுள்ள சம்பவமொன்று கல்முனையில் இடம்பெற்றுள்ளது. கல்முனை, பாண்டிருப்பு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த பல சடலங்களைத் தோண்டி எடுத்த இனந்தெரியாதோர் அந்த சடலங்களிலிருந்து அவயங்களை எடுத்துச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர் பாண்டிருப்பு அன்புவெளிபுரம் கடற்கரை வீதியில் உள்ள இந்து மயானத்தின் ஊடாக இன்று செவ்வாய்க்கிழமை காலை சென்ற பொதுமக்கள் புதைகுழிகள் தோண்டப்பட்டிருப்பதை கண்டு அது தொடர்பில் பொலிசாருக்கு தெரிவித்தனர் இதனையடுத்து குறித்த மயானத்திற்கு விரைந்த பொலிஸார் இது தொடர்பில் ஆரம்பக்கட்ட…

  10. வானத்தில் இருந்து விழுந்த நீலநிறப் பனிக்கட்டி ஒன்று தமிழகத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேரணாம்பட்டு- குண்டலபல்லி சாலையில் கள்ளிச்சேரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த சக்தி (24) என்ற இளம்பெண், நேற்று காலை வீட்டு முன் கோலம்போட சென்றார். அப்போது, வானத்தில் இருந்து நீல நிறத்தில் பனிக்கட்டி ஒன்று விழுந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக்தி குடும்பத்தினரிடம் கூறினார். இதுகுறித்து, தகவல் சுற்றுவட்டாரத்தில் பரவியது. கிராம மக்கள் அங்கு திரண்டனர், சுமார் 50 கிலோவரை எடை கொண்ட அந்தப் பனிக்கட்டியை சிறுசிறு துண்டு களாக உடைத்து, எடுத்துச் சென்றனர். தகவல் காட்டுத்தீ போல பரவியதால், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்தனர். நீலநிற பனிக்கட்டி துண்டுகள…

  11. 2012 ஆம் ஆண்டின் 61வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி டிசம்பர் மாதம் 19ஆம் தேதி Planet Hollywood Resort & Casino in Las Vegas, Nevada என்ற இடத்தில் மிகவும் ஆடம்பரமாக நடக்கவிருக்கிறது. இந்த போட்டியில் பங்கு பெறுவதற்காக உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இருந்து வந்துள்ள அழகிகள், மிக முக்கிய போட்டியான நீச்சலுடை போட்டிக்கு தயாராகி வருகின்றனர். வெள்ளிக்கிழமை முதல் உலக அழகிகள் பலர் Las Vegas நகரில் உள்ள Pure Nightclub என்ற இடத்தில் நீச்சலுடையில் நடந்து, பயிற்சி எடுத்து வருகின்றனர். இம்மாதம் 19ஆம் நடக்கவிருக்கும் இப்போட்டியை NBC தொலைக்காட்சி, ஐரோப்பிய நேரம் இரவு 8 மணிமுதல் நேரடியாக ஒளிபரப்ப இருக்கிறது. பல நாட்டு அழகிகள் நீச்சலுடையில் பயிற்சி எடுக்கும் படங்கள் பார்க்க....

  12. கனடாவில் மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் டொரண்டோவின் பியர்சன் விமான நிலைய ஊழியர் ஒருவர் தனது பணி நேரத்தில் லேப்டாப்பில் ஆபாச படம் பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கையில் சிக்கியுள்ளார். டொரண்டோ பியர்சன் விமான நிலையத்தில் பணிபுரியும் ஆண் ஊழியர் ஒருவர், தனது மேஜையின் கீழ் லேப்டாப்பில் ஆபாச வீடியோ பார்த்துக்கொண்டிருந்ததை, ஒருவர் பார்த்து அதை தனது மொபைல் போனில் படமெடுத்து, கனடாவின் முன்னணி பத்திரிகை ஒன்றிற்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த முன்னணி பத்திரிகை தனது இணையதளத்தில் உடனே இந்த செய்தியை வெளியிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பியர்சன் விமான நிறுவனம், அந்த ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. விமான நிலைய உயர் அதிகார் Scott Ar…

  13. லண்டனில் இளவரசர் வில்லியம்சின் மனைவிக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது குடும்பத்துக்கு அவுஸ்ரேலிய வானொலி நிறுவனம் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது. ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக அவுஸ்ரேலிய வானொலி நிறுவன தொகுப்பாளர்கள், இளவரசரின் மனைவி கேத் பற்றி, அறிந்து கொள்ள அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு போன் செய்து, அரண்மனையில் இருந்து பேசுவதாகக் கூறி விவரங்களைக் கேட்டு அதனை வானொலியில் ஒலிபரப்பினர். தகவல் அளித்த நர்ஸ் ஜெசிந்தா இதனால் அதிர்ச்சி அடைந்து தற்கொலை செய்து கொண்டார். இவரது குடும்பத்துக்கு அவுஸ்ரேலிய வானொலி நிறுவனம் 523,600 டொலரை இழப்பீடாக அளிக்க முன்வந்துள்ளது. இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெசிந்தாவுக்கு இரண்டு குழந்தைகள…

  14. நாளை திகதி, மாதம், வருடம் எல்லாம் 12ஆம் எண்ணில் வருகிறது. 12-12-12 என்ற இந்த திகதியை அதிர்ஷ்டநாளாக பலரும் கருதுகின்றனர். எனவே இந்த நாளில் நல்ல காரியங்கள் செய்தால் அது வெற்றியடையும் என்றும் கருதுகின்றனர். வெளிநாட்டில் நாளை திருமணம் செய்து கொள்வது சிறப்பானதாக இருக்கும் என்று பல இளைஞர்கள் நம்புகின்றனர். எனவே பல நாடுகளிலும் நாளை ஜோடிகள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். சிங்கப்பூர், ஹொங்கொங், தாய்லாந்து போன்ற நாடுகளில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். ஹாங்ஹாங்கில் மட்டும் நாளை 696 பேர் திருமணம் செய்வதற்காக பதிவாளர் அலுவலகத்தில் முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல சிங்கப்பூரிலும் திருமணம் செய்ய விரும்பி 540 பேர் பதிவு செய்ய விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இதேபோல சீ…

    • 3 replies
    • 835 views
  15. மீண்டும் பாம்புடன் இரவு நாயகி கொள்ளுப்பிட்டியிலுள்ள இரவு களியாட்ட விடுதி ஒன்றில் நாகபாம்புடன் நடனமாடிய யுவதியிடமிருந்து மீட்கப்பட்ட பாம்பு மீண்டும் அப் பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வியாழக்கிழமை யுவதி ஒருவர் நாகபாம்புடன் நடனமாடிக்கொண்டு இரவு களியாட்ட விடுதியில் இருக்கின்ற ஏனையோரை அச்சம்கொள்ளச் செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து களியாட்டவிடுதிக்குச் சென்ற பொலிஸார் யுவதியைக் கைதுசெய்ததுடன் பாம்பையும் பிடித்துச்சென்றனர். பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டபோது போதையில் இருந்த குறித்த யுவதி மயங்கிவிழுந்தார். இதனையடுத்து அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். எனினும் அவர் போதையில் இருந்தமையினால் பாம்பின் விஷம் …

  16. நியூசிலாந்து நாட்டில் பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு நாயார் மிக இலாவகமாக கார் ஓட்டி மகிழ்கிறார். அத்தோடு எஜமானிகள் கையால் அடிக்கடி சாப்பாடு வாங்கியும் சாப்பிட்டுக்கிறார். http://youtu.be/bO5bL77e0Rs நம்ம போக்குவரத்து வந்து கேட்கப்போறார்.. நாயாரே கார் ஓட்டிக்கிறப்போ.. நீங்கள் ஏன் ஓட்ட முடியாது. ஆகவே.. துணிச்சலோடு.. கால தாமதமின்றி.. கார் ஓட்ட பழகிக்க.. போக்குவரத்தை தொடர்பு கொள்ளுங்க என்று. அவர் அப்படி கேட்க நினைக்கிறதும் நியாயம் தானே.

  17. இங்கிலாந்தில் அளவுக்கதிகமாக போதைப்பொருள் உட்கொண்ட 25 வயது பெண் ஒருவர், போதையில் தனது 4 மாத குழந்தை மீது டிவியை தூக்கிபோட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய கணவர் மீது போலீஸார் வழக்கு தொடுத்துள்ளனர். 25வயது பெண் ஒருவர் நேற்று காலையில் அளவுக்கதிகமாக ஹெராயின்,வேலியம் மற்றும் ஆல்கஹால் முதலியவற்றை உட்கொண்டு, என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் வீட்டில் இருந்த பொருட்களையெல்லாம் உடைத்து இருக்கின்றார். ஒரு கட்டத்தில் டிவியை தூக்கி, தனது நான்கு மாத குழந்தையின் தலையில் போட்டு உடைத்திருக்கின்றார். இதில் படுகாயம் அடைந்த குழந்தை சிகிச்சைக்கு பலனளிக்காமல் சிறிது நேரத்தில் இறந்துவிட்டது. அளவுக்கு அதிகமான பலவித போதைபோருட்களை ஒன்றுசேர்த்து உட்கொண்ட காரணத்தால்,…

  18. யானைகளின் இலத்தியைப் பயன்படுத்தி உலகிலேயே விலை உயர்ந்த கோப்பியை தயாரித்து கனேடியர் ஒருவர் புதுமை படைத்துள்ளார். பிளேக் டின்கின் (42) என்ற இக் கனேடியர் 20 தாய்லாந்து யானைகளுக்கு அவரை விதைகளை உண்ணக் கொடுத்த பின் அவற்றிலிருந்து பெறப்பட்ட இலத்தியைப் பெற்று இந்தக் கோப்பியை தயாரித்து வருகிறார். மேற்படி பிளெக் ஐவெரி கோப்பியானது அரிய சுவையுடன் பருகுவதற்கான ஆவலை தூண்டக்கூடிய சுகந்தமான மணத்துடனும் இருப்பதாக அவர் கூறுகிறார். இந்தக் கோப்பியைத் தயாரிப்பதற்கு தேவையான சாணத்தைப் பெறுவதற்கு ஒவ்வொரு யானைக்கும் மாதம் ஒன்றுக்கு 625 ஸ்ரேரிங் பவுணை செலவிட வேண்டியுள்ளதாக டின்கின் தெரிவித்துள்ளார். இந்தக் கோப்பியின் 1 இறாத்தலின் விலை 312 ஸ்ரேலிங் பவுண்களாகும். http:/…

  19. இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முதலாக மாவீரர் தின நிகழ்வினை புலம் பெயர் நாடுகளில் இருந்து நேரடியாக GTV SPV தொலைக்காட்சி அண்மையில் வழங்கியிருந்தது. காட்சியினை இங்கே பார்வையிடலாம் இது எம் தேசத்துக்காக எம் இனத்துக்காக தம் உயிரைக் கொடையாக வழங்கிய மாவீரர் செல்வங்களின் தியாகத்திற்குக் கிடைத்த கெளரவமாகும். மாவீரர்களை ஒரு தனிப்பட்ட மனிதரோ ஒரு பிரதேசமோ உரிமை கொண்டாட முடியாது. மாவீரர்கள் ஒட்டு மொத்த தமிழ் இனத்துக்குமான சொத்து. மாவீரர்கள் தமிழினத்தின் எழுச்சியின் வடிவம். எம் நெஞ்சில் மாவீர செல்வங்களின் நினைவுகள் இருக்கும் மட்டும் தமிழீழத்தின் விடியலை யாராலும் தடுத்து விட முடியாது. இரண்டாயிரம் வருடங்களுக்குப் பிறகு தமிழினம் மீண்டும் வீர மறவர்களால் புது எழுச்சி வரலாற்றைப…

  20. பிரபல கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோ, திரையுலகில் பிரபலமாவதற்கு முன், 1940ஆம் ஆண்டுகளில், வெறும் $10 பணத்திற்காக அரைநிர்வான போஸ்களை பிரபல பத்திரிகைக்கு கொடுத்திருக்கின்றார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளன. ஒரு மணி நேரத்திற்கு $10 மட்டுமே சம்பளமாக பெற்றுக்கொண்டு, Blue Book Modeling Agency என்ற விளம்பர நிறுவனத்திற்காக அரைநிர்வாண போஸ் உள்பட படுகவர்ச்சிகரமான போஸ்களை கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை Earl Moran என்ற புகைப்படக்கலை நிபுணர் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது லண்டனில் வெளியாகி, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னாளில் ஹாலிவுட் திரைப்படங்களில் பிரபலமாகி, மில்லியன் கணக்கில் சம்பளம் பெற்ற மர்லின் மன்றோ, தனது ஆரம்ப காலத்தை வறுமையின் காரணம…

    • 2 replies
    • 1.7k views
  21. 'பவர் கட்'டுக்கு நடுவே சமையல்... சாம்பாரில் மிதந்த பாம்பு...ஷாக்கில் நிலைகுலைந்த பெண்! Posted by: Sudha Published: Sunday, December 9, 2012, 12:02 [iST] சென்னை: சென்னை அருகே மின்சாரத் தடை காரணமாக இருட்டில் சமையல் செய்தார் ஒரு பெண். சாம்பாரை வைத்து அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கி வீட்டாருக்கு சாப்பாடு பரிமாறினார். அடுத்த நாள் காலையில் சாம்பார் இருந்த பாத்திரத்தைப் பார்த்தபோது, அதில், பாம்பின் எலும்புக் கூட கிடந்ததைப் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்தவர் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து தெளியாமல் பித்துப் பிடித்தவர் போல காணப்படுகிறார். சென்னை அகருகே வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மங்கம்மாள். 47 வயதான இவர் டிசம்பர் 4ம் தேதி மாலை 7 மணியளவில் சமையல் செய்துள்ளார்…

  22. எகிப்து விமானத்தில் திடீரென நாகபாம்பு நுழைந்ததால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எகிப்து நாட்டின் கெய்ரோவிலிருந்து, குவைத் நோக்கி, விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் பயணித்த ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த, பாம்பு வியாபாரி, எகிப்தில் வாங்கிய நாகபாம்பை, கள்ளத்தனமாக எடுத்து வந்தார். திடீரென இந்த பாம்பு, 48 வயதான அந்த நபரை கடித்து விட்டது. இதனால், அவர் கையை உதறிய போது, அந்த பாம்பு அவரிடமிருந்து தப்பித்து, விமானத்தின் மற்ற இருக்கைகள் வழியாக சென்று விட்டது.இந்த பாம்பை அவர் பிடிக்க முயன்ற போது, விமான ஊழியர்கள் உஷாரடைந்து விட்டனர். ஆனால், பயணிகள் பீதியடைந்து அலறினர். இதையடுத்து, விமானம் உடனடியாக, அல் கர்தாகா நகரில் தரையிறக்கப் பட்டது.விமானத்தில் சுற்றிக் கொண்டிருந்த…

    • 13 replies
    • 1.5k views
  23. பொய்யான விளம்பரத்திற்காக மைக்டோனால்ட் நிறுவனம் மன்னிப்பு கோரியது! Published on December 6, 2012-8:19 pm · சுவிஸ் நாட்டில் உள்ள பிரபல உணவு நிறுவனமான மைக்டோனால்ட் விளம்பரம் ஒன்றில் பொய்யான தகவலை வெளியிட்டதற்காக மன்னிப்புக் கோரியுள்ளதுடன் விளம்பரத்தை திருத்தி அமைத்துள்ளது. மைக்டொனால்ட் நிறுவனத்தில் வழங்கப்படும் பூர்கர் என்ற உணவிற்கு பயன்படுத்தப்படும் சீஸ் அல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள பசுக்களின் பாலில் இருந்து பெறப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டு வந்தது. இணையத்தளங்களிலும் தொலைக்காட்சியிலும் இந்த விளம்பரம் ஒளிபரப்பபட்டு வந்தது. ஆனால் சுவிஸ் விவசாய திணைக்கள தகவல் பிரிவு இது பொய்யான தகவல்களை கொண்ட விளம்பரம் என சுட்டிக்காட்டியுள்ளது. இது பொய்யான தகவல் என்றும் சுவிஸ் அல்ப்ஸ…

  24. [size=4]சீனாவின் பெய்ஜிங் மாகாண வென்லிங் என்ற நகரில் வசித்து வரும் வயதான சீனத் தம்பதி தாங்கள் வசித்து வந்த வீட்டை நெடுஞ்சாலை நிர்மாணத்துக்காக கொடுக்க மறுத்து விட்டதால், வேறு வழியின்றி அவர்களது வீட்டை மட்டும் விட்டுவிட்டு, அந்த வீட்டைச் சுற்றிலும் நெடுஞ்சாலையை நிர்மாணித்துள்ளனர் அதிகாரிகள். இதனால் நெடுஞ்சாலைக்கு மத்தியில் தனியாக அந்த வீடு மட்டும் வித்தியாசமாக காட்சி அளிக்கிறது. லூ பகோன் மற்றும் அவரது மனைவி மட்டும் இந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீடு உள்ள பகுதியில் நெடுஞ்சாலையொன்று நிர்மாணிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து காணி சுவீகரிக்கும் பணிகள் இடம்பெற்றன. ஆனால் லூ, அரசு கொடுக்கும் இழப்பீட்டுத் தொகை மிகக் குறைவாக இருப்பதாக கூறி வீட்டுக் காணியைக் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.