செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
வீர வணக்கம் 14 .08 .1983 _ 14.08.2012 குலசேகரம் தேவசெகரம் (ஒபராய் தேவன்) தமிழ் ஈழ விடுதலை இராணுவத்தின் தலைவர் (Tamil Eelam Liberation Army(TELA ) குலசேகரம் தேவசெகரம் (ஒபராய் தேவன்) (Kulasegaram Devasegaram (aka 'Oberoi Devan') படு கொலை செய்யப்பட்டு 29 ஆண்டுகள் கடந்துவிட்டன. அவருக்கும் மற்றும் இலங்கை இராணுவத்திடம் போராடி உயிர் நீர்த்த ஏனைய டெலா போராளிகளுக்கும் மற்றும் புளட் தேச விரோத கும்பலினால் படு கொலை செய்யபட்ட கூச், சேகர் போன்ற டெலா அரசியல் பிரிவு இராணுவ பிரிவு தலைவர்கள் மற்றும் அனைத்து போராளிகளுக்கும் விடுதலை போரில் ஆகுதியாகிய பொது மக்களுக்கும் அனைத்து மாவீரர்களுக்கும் எமது வீர வணக்கங்கள் . தமிழ் ஈழ விடுதலை இராணுவம் Tamil Eelam Liberation …
-
- 1 reply
- 2.4k views
-
-
தனது ஆயுளின் கடைசி நாளை அறிய அனைவர்க்கும் ஆசை இருந்தாலும் அது பயம் கலந்ததாகவே இருக்கும் நமது ஆயுளின் கடைசி நாளை அறிந்து சொல்லும் ஒரு இணைய தளம் உள்ளது www.deathclock.com என்ற முகவரியில் உள்ள இணையத்திற்கு சென்று பிறந்த நாள், பிறந்த மாதம், ஆண்டு , ஆணா பெண்ணா போன்ற மேலும் சில விவரங்களை கொடுத்து பட்டனை அழுத்தினால் உங்கள் ஆயுளின் கடைசி நாள் காண்பிக்கப்படும் இதை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம் ஆனால் ஒன்று சாகின்ற நாள் தெரிந்தால் வாழ்கின்ற நாள் நரகமாயிடும் http://agarathan.blo...og-post_16.html
-
- 15 replies
- 1.4k views
-
-
இலங்கை தொடர்பான விடயங்களில் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது இந்தியா மிக நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இலங்கைக்கான தனது ஆதரவை இந்தியா தொடருமானால் இலங்கைக்கு எதிராக இனிமேல் எந்தவொரு தீர்மானமும் முன்வைக்கப் பட வாய்ப்பில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை மீது ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இந்த ஆண்டு முற்பகுதியில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு வழங்கியமை குறித்துக் கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஜெனிவா மனித உரிமைகள் சபையில் இலங்கை மீது அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததிலிருந்து இது வரை இறுக்கமான கருத்தெதனையும் வெளிப்படுத்தாத ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தம…
-
- 0 replies
- 4.1k views
-
-
லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின்போது சர்வதேசத்தின் கவனம் அங்கு நடைபெறும் நிகழ்வுகளை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது. இது ஈழத்தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு நடாத்தும் இனவழிப்பு நடவடிக்கைளை அம்பலப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பான சூழலை எமக்கு தந்திருக்கிறது. இந்நிலையில் சிறிலங்கா அரசின் இனவழிப்பு நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை பன்னாட்டுத் தலைவர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், பொது மக்கள் என பரந்துபட்ட மக்களின் கவனத்திற்கு கொண்டுவருவது மிகவும் அவசியமான பணியாக அமைந்துள்ளது. யூலை 22ம் திகதி நடைபெற்ற கறுப்பு யூலை நினைவுப் பேரணியிலிருந்து இன்று வரை பல கவனயீர்ப்புப் போராட்டங்களை மக்களின் ஆதரவுடன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நடாத்தி வருகிறது. இதனொரு அங்கமாக, திரு. சிவ…
-
- 0 replies
- 392 views
-
-
விமானப் பயணத்தின் நடுவே விமானத்துக்குள் 'பிகினி 'உடை அணிந்த பெண்களின் நடன நிகழ்ச்சியை நடத்திய வியட்நாம் நாட்டு விமான சேவைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 'வியட் ஜெட் எயார்' என்ற விமான சேவை மீதே 1000 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் அந்நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த விமான சேவையானது வியட்நாமின் ஹோ சீ மின் மற்றும் நா டிராங் ஆகிய நகரங்களுக்கிடையிலான தனது முதல் விமானப் பயணத்தினைக் கடந்த சில தினங்களுக்கு முன் ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக அதன் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் முகமாகவே நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதனை தமது கெமராக்கள் மற்றும் கையடக்கத்தொலைபேசிகள் மூலம் படமெடுத…
-
- 8 replies
- 1.1k views
-
-
“நான் முன்னெடுத்திருக்கிற இவ்வுண்ணாநிலைப் போராட்டத்தில் சர்வதேசத்தை நோக்கி ஈழத்தமிழ் மக்களின் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். அவை தமிழீழ ஆதரவாளர் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்படுமா?” என இன்று பத்தொன்பதாவது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தை நடாத்திவரும் திரு. சிவந்தன் கோபி கேள்வி எழுப்பினார். ரெசோ என அழைக்கப்படும் தமிழீழ ஆதரவாளர் அமைப்பு தமது மாநாட்டினை வரும் பன்னிரண்டாம் திகதி சென்னையில் கலைஞர் கருணாநிதி தலைமையில் நடாத்தவிருக்கிறது. இம்மாநாடு பற்றி திரு. சிவந்தனிடம் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோதே அவர் மேற்படி கேள்வியை பதிலாக வழங்கினார். இவ்விடயம் பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், “ரெசோ மாநாடு தொடர்பாக தமிழ் மக்களாகிய நாங்கள் ஒரு தெளிவோடு இருக்கவேண்டும். …
-
- 0 replies
- 407 views
-
-
[size=3][/size] [size=3][size=4]தன்னை பார்த்து சிரிக்காத, இரண்டு வயது மகளை, மிதித்து கொன்ற தந்தை மீது, கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளது.நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பகுதியை சேர்ந்தவர் கெபு இகமானு. இவரது, இரண்டு வயது குழந்தை பிறந்தது முதல், பாட்டி வீட்டில் வளர்ந்தது. கடந்த, 2010ம் ஆண்டு, தன்னுடைய மகளை வீட்டுக்கு அழைத்து வந்தார் கெபு இகமானு. பாட்டி வீட்டில் வளர்ந்ததால், அந்த குழந்தை தந்தையிடம் பழக தயங்கியது. இதனால், கடுப்பான இகமானு, குழந்தையை சிரிக்கும் படி வற்புறுத்தினார்.[/size][/size] [size=3][size=4]ஆனால், குழந்தை சிரிப்பதற்கு பதில் அழுதது. மேலும் கோபமடைந்த இகமானு, அந்த குழந்தையை தூக்கி வீசினார். சுவருக்கு வெளியே போய் விழுந்த குழந்தையை மிதித்து காயப்படுத்தினார். கை…
-
- 1 reply
- 730 views
-
-
அண்மையில் நாளிதழை புரட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது. வைரமுத்து எழுதி வெளியிட்ட ‘மூன்றாம் உலகப் போர்’ எனும் நாவலை ஒரே வாரத்தில் மூன்றாம் பதிப்பு வெளியிட்டார்களாம். ஆச்சரியமாக இருந்தது. முதல் பதிப்பை வெளியிடும் போதே, இது இரண்டாம் பதிப்புக்கு, இது மூன்றாம் பதிப்புக்கு என்று ஒதுக்கி வைத்து விட்டார்களோ. கவிஞர் வைரமுத்து வெகுவாக அறியப்பட்டவர் தான். இன்னும் பாட்டெழுதிக் கொண்டிருக்கும், போன தலைமுறை திரைப்பட பாடலாசிரியர். பாரதிராஜா போன்ற இயக்குனர்களுக்கு இலக்கியத்தை ஊறுகாயாய் தொட்டுக் கொண்டும், ஏனையவர்களுக்கு காசுக்கு ஏற்றாற்போலும் பாட்டெழுதுவார். தேவை என்றால் தன் பேனாவில் நீல மையூற்றி “ரவிக்கை அடிக்கடி வெடிக்குது” என்று எழுதுவார், அவசியமேற்பட்டால் ச…
-
- 2 replies
- 2.7k views
-
-
கஜான்: ரஷ்யாவில் 1 முதல் 17 வயதுள்ள 20 சிறுவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக பாதாள அறையில் உள்ளனர் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷியாவில் உள்ள டாட்டார்ஸ்டான் மாகாணம் கஜான் நகரைச் சேர்ந்தவர் பைஸ்ரஹ்மான் சடாரோவ்(83). தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லிக் கொள்ளும் அவர் தனது ஆதரவாளர்களை உலக நடப்பில் இருந்து விலகி இருக்குமாறு தெரிவித்தார். இதையடுத்து கடந்த 2000ம் ஆண்டு கஜானில் உள்ள ஒரு வீட்டுக்கு அடியில் பாதாள அறைகள் கட்டப்பட்டு 70 ஆதரவாளர்கள் அதில் குடியேறினர். இதில் 1 முதல் 17 வயதுள்ள சிறுவர்களும் அடக்கம். அவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சூரிய ஒளியைக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பாதாள அறைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். இதை ரஷ்யாவின் வெஸ்டி என்ற தொலைக்காட்ச…
-
- 1 reply
- 580 views
-
-
[size=2][size=4] உலகப் புகழ்பெற்ற சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதியானது சரிந்து வீழ்ந்துள்ளது. சீனாவின் வடபகுதியில் இச்சுவருக்கு முன்னால் அகழ்வு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் இச்சுவரின் ஒரு பகுதி சரிந்து வீழ்ந்துள்ளது. ஹேபேய் மாகாணத்தில் ஸாங்ஜியாக்கோ பகுதிக்குக்கூடாக செல்லும் சீன சுவற்றின் 100 அடி அளவிலான பகுதி உடைந்து வீழ்ந்தது. இதனால் பல தொன் எடையுடைய கற்கள் மற்றும் சிதைவுகள் நேற்று காலை சரிந்து வீழ்ந்தன. இப்பெருஞ்சுவருக்கு முன்னால் நிர்மாண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், பல வாரங்களாக பெய்தபின் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். சுவர் இடிந்து வீழ்ந்தமைக்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற…
-
- 0 replies
- 436 views
-
-
[size=2] [size=4]உலகில் அதிகம் சோம்பேறிகள் அதிகம் வாழும் நாடுகள் தொடர்பாக கருத்துக்கணிப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆபிரிக்க நாடான மால்டா இப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அங்கு 71.9 வீதமானவர்கள் சோம்பேறிகளாக உள்ளனர். சுவாஸிலாந்து (69 வீதம்) இரண்டாமிடத்தை வகிக்கிறது. சவூதி அரேபியா இப்பட்டியலில் (68.8 வீதம்) மூன்றாமிடத்தை வகிக்கிறது. ஒரு வாரத்தில் 2.5 மணித்தியாலங்கள் குறிப்பிடத்தக்க உடலுழைப்பில் ஈடுபடாதவர்கள் சோம்பேறிகளாக, செயலற்றவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். 122 நாடுகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் இருந்து பிரிட்டன் 8 ஆவது இடத்தில் காணப்படுகின்றது. அங்கு சோம்பேறிகளின் சதவீதம் 63.3 ஆகும். இதேவேளை சோம்பேறிகள் குறைந்த நாடாக கிரீஸ் காணப்பட…
-
- 7 replies
- 1.3k views
-
-
புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்னவிற்கு வீசா வழங்க இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் நடைபெறவுள்ள டோசோ மாநாட்டில் கலந்து கொள்ளும ;நோக்கில் விக்ரமபாகு கருணாரட்ன வீசா விண்ணப்பம் செய்திருந்தார். எனினும், விக்ரமபாகுவின் இந்திய விஜயத்திற்கு வீசா வழங்க முடியாதுஎன இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக விக்ரமபாகு முன்னர்அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஐக்கிய சோசலிச கட்சியின் தலைவர் சிறிதுங்கஜயசூரியவும் டொசோ மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சிறிதுங்க ஜயசூரியவிற்கு வீசா வழங்கப்பட்டாத இல்லையா என்பதுஇதுவரையில் த…
-
- 1 reply
- 462 views
-
-
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் ஏன் ஒழுங்காக மழை பெய்யவில்லை என்று 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு வருண பகவானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடவுள் 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹர்டோய் மாவட்டத்தில் உள்ள சவயாஜ்பூருக்கு ஏன் மழை தரவில்லை என்று கேட்டு வருண பகவானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் சவயாஜ்பூர் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் சத்ய பிரகாஷ் சர்மாவின் கையொப்பம் உள்ளது. ஆனால் அது போலியானது. நோட்டீஸ் வைக்கப்பட்ட கவரில் பெறுநர் முகவரியில், சொர்க்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கவரில் உள்ள தபால் தலையும்…
-
- 1 reply
- 459 views
-
-
ஹைதராபாத்: தன்னை விமர்சிக்கும் வகையில் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் சுவாமி சத்தியானந்தா என்ற கன்னட - தெலுங்கு படத்தை தடை செய்யுமாறு நித்தியானந்தா வழக்கு தொடர்ந்துள்ளார். நித்தியானந்தா சார்பில் அவரது வக்கீல், ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், "நித்தியானந்தாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு கன்னடத்தில் 'சுவாமி சத்தியானந்தா` என்ற பெயரில் சினிமா படம் தயாரிக்கப்பட்டு அது தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும், அந்த மொழி மாற்று படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்," என்று கூறியுள்ளார். அந்தப் படத்தில் நித்தியானந்தாவை தவறாக சித்தரித்து இருப்பது அவருடைய பக்தர்களின் மனதை புண்படுத்துவது போல் உள்ளது என்றும் மனுவில் அவர்…
-
- 0 replies
- 429 views
-
-
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்டனின் நடனக் காணொளி தற்போது இணையத்தைக் கலக்கி வருகின்றது. தென்னாபிரிக்க வெளியுறவுத் துறை அமைச்சினால் ஜொஹன்னஸ் பேர்க்கில் நடத்தப்பட்ட இராப்போசன நிகழ்வொன்றிலேயே அவர் நடனமாடியுள்ளார். அவரது நடனத்தை ஊடகங்கள் பதிவு செய்து வெளியிட்டுள்ளன தென்னாபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஹிலரி கிளின்டன் ஆபிரிக்க நாடுகள் பலவற்றுடனான அமெரிக்காவின் உறவைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இப்பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றமையைக் குறைப்பதே இவரது விஜயத்திற்கான பிரதான நோக்கமெனத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விஜயத்தின் ஓர் அங்கமாக நெல்சன் மண்டேலாவையும் அவர் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.
-
- 0 replies
- 499 views
-
-
[size=2] [/size] [size=2]மோனாலிஸாவின் எலும்புக் கூடு கண்டுபிடிப்பு? [/size] உலகப் பிரபல்யம் பெற்ற ஓவியமான மொனாலிஸா ஓவியத்தினை வரைவதற்கு மொடலாக இருந்த லிஸா கிரார்தினியின் எலும்புக்கூடுகளை கண்டுபிடித்துள்ளதாக தொல்பொருளாய்வார்கள் தெரிவித்துள்ளனர். மொனாலிஸா ஓவியத்தை டாவின்சின் வரைவதற்கு தூண்டுகோலாக இருந்தவர் லிஸா கிரார்தினி. இப் பெண் தொடர்பாக பல தகவல்கள் அவ்வப்போது வெளியாகியுள்ளன. அவற்றில் சில உண்மையானவையாகவும், சில வதந்திகளாகவுமேயுள்ளன. இந்நிலையில் இத்தாலிய தொல்பொருளியலாளர்கள் மொனாலிஸா ஓவியத்தினை வரைவதற்கு மொடலாக இருந்த லிஸா கிரார்தினியின் எலும்புக்கூடுகளைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இத்தாலியின் புளொரொன்சில் உள்ள புனி…
-
- 0 replies
- 507 views
-
-
தேடலின் போது அறிவு பிறக்கின்றதோ இல்லையோ கற்றல் நடைபெறுகிறது. அப்பிடி தேடிய போது கிடைத்தது.. தமிழில் மாதங்கள் இருப்பது போன்று வருடங்கள் உள்ளனவா? தமிழில் மொத்தம் 60 வருடங்கள் இருக்ககின்றன. இவை மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும். 60 தமிழ் வருடங்கள் ஒரு சஷ்டியாகக் கருதப்படும. இப்போது புரியுது “சஷ்டி அப்த பூர்த்தி ” ஏன் என்று? சரி இப்போ 60 வருடங்களின் பெயரை தெரிஞ்சுக்கலாம். எண். பெயர் பெயர் ஆங்கில வருடம் எண். பெயர் பெயர் ஆங்கில வருடம் 01. பிரபவ Prabhava 1987–1988 31. ஹேவிளம்பி Hevilambi 2017–2018 02. விபவ Vibhava 1988–1989 32. விளம்பி Vilambi 2018–2019 03. சுக்ல Sukla 1989–1990 33. வி…
-
- 0 replies
- 2.6k views
-
-
லண்டனில் இன்று பதினைந்தாவது நாளாகத் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்துள்ள சிவந்தன் கோபி, ஒலிம்பிக் போட்டிகளின் முடிவுநாளாகிய இம்மாதம் 12ஆம் திகதிவரை உறுதியாக தமது போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாகத் தெரிவித்தார். தன்னை சந்தித்து வரும் பல இளையவர்கள் தனது போராட்டத்திற்கு ஆதரவினை வழங்குவதுடன், புலம்பெயர் நாடுகளில் இது போன்ற கவனயீர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டியதன் அவசியம் பற்றி தன்னுடன் கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்ட அவர் மின்னஞ்சல் மூலமாக ஆதரவினை வழங்கி வரும் தமிழக உறவுகளுக்கும், உலகத்தமிழ் உறவுகளுக்கும் நன்றியை தெரிவித்தார். சிவந்தன் பெரும்பாலான நேரத்தில் படுக்கையில் சோர்வாகக் காணப்படுகிறார். இது தொடர்பாக அவரை மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர் இந்து குமரேந்…
-
- 1 reply
- 540 views
-
-
[size=3][size=4]லண்டன்: இங்கிலாந்தில் உள்ள ஒரு விலங்கியல் பூங்காவில் அடைக்கப்பட்டிருந்த சிம்பன்சி, தன்னை வேடிக்கை பார்க்க வந்தவரிடம், இந்தக் கேட்டைத் திறந்து விடுங்கள் என்று 'சைன் பாஷையில்' பேசியது அனைவரையும் வியக்க வைத்தது. அதை விட ஆச்சரியமாக, அந்தக் கதவை எப்படித் திறக்க வேண்டும் என்பதையும் சிம்பன்சி சொல்லிக் கொடுத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.[/size][/size] [size=3][size=4]மனிதனுக்கு மட்டும்தான் ஆறறிவு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஐந்தறிவு படைத்த விலங்குகள் கூட சில நேரங்களில் நம்மை மிஞ்சி விடுகின்றன தங்களது அறிவுப்பூர்வமான செயல்பாடுகளால். அப்படி ஒரு சம்பவம், இங்கிலாந்தின் வடக்கு வேல்ஸில் உள்ள வெல்ஷ் இயற்கை விலங்கியல் பூங்காவில் நடந்துள்ளது.[/si…
-
- 1 reply
- 727 views
-
-
!பிரித்தானியாவில் பான்சிலி எனும் பகுதியில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான கடை ஓன்று ஆயுததாரியால் கொள்ளையிடப்பட்டது. இவ் சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது . சம்பவத்தின் போது கடையில் பணிபுரிந்த தமிழர் ஒருவரை வலுக்கட்டயமாக காசு பதிவு இயந்திரத்தை திறக்க வைத்து அதில் இருந்த பணம் அனைத்தையும் கொள்ளையிடப்பட்டது. www.irruppu.com
-
- 0 replies
- 679 views
-
-
இரத்தமும் யுத்தமும் இவன் தாய்ப்பால் வீரமும் விவேகமும் இவன் ஆயுதம் கம்பீரமும் அழகும் இவன் சக்தி எட்டுத்திசைகளையும் ஏறெடுத்துப் பார்க்க வைத்த கிரேக்கப்புயல் உலக வரைபடத்தை நிர்ணயம் செய்யும் அளவில் உலக தேசங்களை தன் எஃகு பாதையில் நசுக்கி வைத்திருந்த ஓர் இரும்புப்பறவை ஒரே ஒரு அணு ஆயுதமே அபாயகரமானதென்றால் ஒவ்வொரு அணுவையுமே ஆயுதமாக கொண்ட மனிதன் எத்தகையவன் அந்த மனிதன்தான் அலெக்ஸாண்டர் அலெக்ஸாண்டர் (THE GREAT ) கி.மு க்கு முன் 356 ஆம் ஆண்டு ஜூலை 20 ந்தேதி மாஸிடோனியாவில மன்னர் பிலிப்ஸ்க்கு மகனாக கிரேக்க மண்ணில் உதித்தது அலெக்ஸாண்டர் என்ற வீரக்குழந்தை. குழந்தை பிறந்த நேரம் பிலிப்ஸ் மன்னன் அகமகிழ்ந்தான் காரணம் அதே நேரம்தான் பிலிப்ஸின் ராசியான குதிரை ஒல…
-
- 0 replies
- 22.1k views
-
-
[size=4]மலேசிய விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் இருந்த பயணி ஒருவர் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பறக்கும் விமானத்தில் இருந்த குதித்துள்ளார். யாரும் எதிர்பாராத விதமாக அவசர நுழைவாயில் கதவை திறந்து பயணி குதித்தது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.[/size] [size=4]சக பயணிகள் இதனைக் கண்டு அலறியதால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 24 வயதுடைய அந்த இளைஞர் காயங்கள் ஏதும் இன்றி மீட்கப்பட்டுள்ளார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.[/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]
-
- 0 replies
- 666 views
-
-
[size=4]கெலிபோர்னியா நிறுவனம் ஒன்று பௌத்த தர்மத்தின் ஸ்தாபகராக கௌதம புத்தரின் உருவம் பொறித்த சப்பாத்து வகை ஒன்றைத் தயாரித்துள்ளது.[/size] [size=4]மேற்படி சம்பவம் உலகில் வாழும் பல கோடி பௌத்தர்களை கவலையடையச் செய்துள்ளதாகப் பல்வேறு அமைப்புக்கள் விசனம் தெரிவித்துள்ளன. 1999ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கெலிபோர்னியாவிலுள்ள இகோன் என்ற நிறுவனமே இதனைத் தயாரித்துள்ளது. இதன் உரிமையாளர் ஒரு ஹொலிவூட் நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. __[/size] http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39813
-
- 9 replies
- 665 views
-
-
[size=3][size=4]திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று காலையில், சூரியனைச் சுற்றி வண்ணமிகு ஒளிவட்டம் தென்பட்டது. இதை உள்ளூர் மக்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து, புகைப்படம்' எடுத்தனர். அதேசமயம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது. இதனால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.[/size][/size] [size=3][size=4]ஆனால் இது வழக்கமான இயற்கை நிகழ்வுதான் என்றும் பீதி அடைய்த தேவையில்லை என்றும் வானியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அங்குள்ள விஞ்ஞானிகள் கூறுகையில்,[/size][/size] [size=4] [/size] [size=3][size=4]பூமியில் இருந்து 5 கி.மீ., உயரத்தில் உள்ள மேகங்களின் வெப்பநிலை குறையும் போது, அதில் உள்ள நீர், சிறிய, …
-
- 4 replies
- 1k views
-
-
இரும்புப் பெண் என்று அழைக்கப்பட்டவரான இங்கிலாந்து நாட்டு முன்னாள் பிரதமர் மார்கரெட் தட்சருக்கு அழகான ஆண்கள் என்றால் கொள்ளைப் பிரியமாம். அவர்களுக்கு ஏதாவது பதவி கொடுத்து தனக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டு இரசிப்பாராம். இதுகுறித்த தகவலை தட்சரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் லார்ட் வாடிங்டன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தட்சருக்கு அறிவெல்லாம் பிறகுதான். அழகுதான் அவரை ஈர்க்கும். அதிலும் அழகான ஆண்களைக் கண்டார் விட மாட்டார். அழகான, இளம் எம்.பிக்கள் என்றால் அவருக்குப் பிரியம். உடனே அமைச்சர் பதவி கொடுத்து அவர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொள்வார். அந்த அமைச்சருக்கு சுய புத்தி உள்ளதா, அறிவு உள்ளதா, செயல் திறன் உள்ளதா என்பதையெ…
-
- 29 replies
- 2.3k views
-