செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
நீதிமன்றம் அமைதியாக இருந்தது. கமராக்களின் கிளிக் கிளிக் சத்தங்களுடன் காலில் மாட்டப்பட்டிருந்த சங்கிலியின் சத்தம் மட்டும் இப்போது மன்றில் கேட்கத் தொடங்கியது. தனது முகத்தை நீல நிறக் கோப்பினால் மூடியபடி, குற்றவாளி என்று கருதப்பட்டவன் தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்தான். சிவப்பு நிற உடை அணிந்திருந்த சிறிய தோற்றம் கொண்ட அந்த இளைஞனை புகைப்படம் எடுப்பவர்கள் சூழ்ந்திருந்தனர். அவனருகே அவனது சட்டத்தரணி அமர்ந்திருந்தார். நீதிமன்றத்தின் இருக்கைகள் நிரம்பி இருந்தன. அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் நிருபர்களாக இருந்தார்கள் என்பதைச் சொல்லும் விதமாக பலரது கைகளில் கணினிகள் இருந்தன. யேர்மனி இல்லர்கியார்ஸ் நகரில் நடந்த கொலையின் தீர்ப்பை அறிந்து கொள்ளவே அவர்கள் வந்திருந்தார்கள். …
-
- 0 replies
- 507 views
-
-
மனைவி, குழந்தைகளைக் கொன்ற இந்தியர்; பிரித்தானியப் பொலிஸார் வெளியிட்ட பதபதைக்க வைக்கும் வீடியோ பிரித்தானியாவில் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் மனைவி மற்றும் இரு குழந்தைகளைக் கொன்ற கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பிரித்தானிய நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஜூ சவுலவன் என்ற நபருக்கே இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது, சஜூ சவுலவனைக் கைது செய்த வீடியோவை பொலிஸார் வெளியிட்டுள்ள நிலையில் குறித்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1337563
-
- 0 replies
- 571 views
-
-
“25 யூன் 2021இல் சோமாலியாவைச் சேர்ந்த அப்டிரஹ்மான் (26) யேர்மனியில் வான் என்ற இடத்தில் ஹோங்ஸ் ஆசிய சிற்றுண்டிக்கு அருகே மூன்று பெண்களை கத்தியால் குத்தியதும் பின்னர் பொதுமக்கள் அவனை மடக்கிப் பிடித்ததும் நினைவுக்கு வந்தது. அப்போது நடந்தது போல் ஒரு அசம்பாவிதம் இப்பொழுது நடந்துவிடக் கூடாது என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது” இப்படிச் சொல்கிறார் 62 வயது நிரம்பிய வியட்னாம் நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட வான் லோங் கொங். 30ந் திகதி யூன், ஒரு சிரிய நாட்டைச் சேர்ந்த இளைஞன் கையில் கத்தியுடன் நகரத்தில் நடமாடியதை அடுத்து பொது மக்கள் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் அந்த இளைஞனை கைது செய்வதற்கும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுப்பதற்கும் பொலிஸார் வந்திருந்தார்கள். மதியம் 1.40க்கு ஆசிய சிற…
-
- 2 replies
- 647 views
-
-
மேல் ஆடை இல்லாமல் வெறும் பிக்னி மட்டும் அணிந்து கொண்டு பொது நீச்சல் தடாகத்தில் நீந்துவதற்கு அவளுக்குப் போதுமான துணிவு இருந்தது. மேலாடை இல்லாமல் நீந்த முயற்சித்ததைப் பற்றி எதிரான கருத்துகள் வந்த போது அவள் அவற்றைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. அவளுக்கு கொலை அச்சுறுத்தல்கள் வரத் தொடங்கிய பொழுதுதான் அவள் தீவிரமாகச் செயற்பட ஆரம்பித்தாள். “சிலர் என்னை பலாத்காரம் செய்யக் கூடத் தயங்க மாட்டார்கள்” இப்படிச் சொன்னவர் 33 வயதான லொற்றே மீஸ். “இங்கே என்ன பிரச்சனை இருக்கிறது? எல்லோருக்கும் ஒரே மார்பகம்தானே. நாங்கள் இந்த வருட கடும் கோடையில் பிக்னி மட்டுமே அணிந்து கொண்டு நடைப் பயணம் செல்லலாம் என்று தீர்மானித்திருக்கிறோம்” என்று லொற்றே மீஸ் சொல்கிறார். கடந்த வருட…
-
- 11 replies
- 2.8k views
-
-
ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து போகும் இடம்தான் ரோமில் உள்ள கொலோசியம். கடந்த வெள்ளிக்கிழமை (30.06.2023) அங்கு வந்த ஒரு இளைஞன் ஒருவனுக்கு அந்தப் பழைய காலத்து பிரபலமான கட்டிடத்தைப் பார்த்ததும் ஒரு விசித்திரமான ஆசை வந்தது. பழமை வாய்ந்த அந்தக் கட்டிடத்தின் கல்லில் தனது பெயரையும் தனது காதலியின் பெயரையும் எழுத வேண்டும் என்பதே அவனது ஆசையாக இருந்தது. தன்னிடம் இருந்த திறப்பினால் பழமையான அந்தக் கட்டிடத்தின் ஒரு கல்லில் கிறுக்க ஆரம்பித்தான். இளைஞன் கல்லில் ஏதோ கிறுக்குவதை இன்னும் ஒரு சுற்றுலாப் பயணி கண்டு, அதை வீடியோவில் பதிவு செய்ய ஆரம்பித்தார். பதிவு செய்தவருக்கும் அவசரம் போல், அந்த வீடியோவை அவர் சில நிமிடங்களுக்குள் சமூகவலைத் தளங்களில் பரவ விட அது இ…
-
- 1 reply
- 444 views
-
-
மெக்சிகோவில் உள்ள மாண்டேரி பகுதியில் சுற்றுலா பொழுதுபோக்கு பூங்கா ஒன்று உள்ளது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஜிப்லைனில் சாகச பயணம் செய்து மகிழ்வார்கள். இந்நிலையில் கடந்த 25ஆம் திகதி அங்கு சுற்றுலா சென்றவர்களில் 6 வயது சிறுவன் ஒருவன் ஜிப்லைனில் சாகச பயணத்தை மேற்கொண்டான். அப்போது எதிர்பாராத விதமாக கம்பி அறுந்து சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தான். அதிர்ஷ்டவசமாக பூங்காவில் இருந்த செயற்கை குளத்தில் அந்த சிறுவன் விழுந்தான். உடனே அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் நீச்சல் குளத்துக்குள் குதித்து சிறுவனை காப்பாற்றினார். இதில் சிறுவன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினான். எனினும் அவனுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அந்த சி…
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
மீனுடன் புகைப்படம் எடுத்த இருவர் கைது நட்சத்திர மீனுடன் செல்பி எடுத்த சீன சுற்றுலா வாசிகள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விநோத சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சுற்றுலாவாசிகள் நட்சத்திர மீன்களைக் கையில் பிடித்து அதனுடன் புகைப்படம் எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு தாய்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் . தாய்லாந்து அரசு இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக பவள பாறைகள் மற்றும் அழியக்கூடிய சூழலில் வாழும் கடல் வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக கடுமையான சட்டங்கள…
-
- 0 replies
- 555 views
-
-
வியாழக்கிழமை(29.06.2023) மதிய நேரம், சுவீடனுக்கும் போலந்துக்கும் இடையில் பால்ரிக் கடலில் Stena Spirit கப்பல் பயணித்துக் கொண்டிருந்தது. கடல் நீர் 18 பாகை செல்சியஸாக இருந்தது. அந்தக் கப்பலில் இருந்த ஏழு வயதுச் சிறுவன் ஒருவன் கப்பலில் இருந்து தவறிக் கடலில் விழுந்து விட்டான். இதை அவதானித்த அவனின் தாய் எதைப் பற்றியும் யோசிக்காமல் அடுத்த செக்கனே மகனை க் காப்பாற்றுவதற்காக தானும் கடலில் குதித்து விட்டாள். கடலில் இருந்த கடல் நீர் நடுவே இருவரும் காணாமல் போய்விட்டனர். அமெரிக்கக் கரையோரக் காவல் பணியில் இருந்த NATO தகவல் அறிந்து தங்கள் விமானங்கள் மூலம் தேடுதல்களை ஆரம்பித்தார்கள். Stena Sprit நிறுவனத்தின் மீட்புப் படகுகளும், உலங்கு வானூர்திகளும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப் ப…
-
- 6 replies
- 760 views
-
-
தனது வாழ்நாள் முழுவதும் கூண்டிலேயே அடைக்கப்பட்டிருந்த 28 வயதான வனில்லா ( Vanilla ) என்ற சிம்பன்சி, புளோரிடாவில் உள்ள தனது புதிய இருப்பிடமான சேவ் தி சிம்ப்ஸ் சரணாலயத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அது கூண்டிலிருந்து வெளியே வந்து முதன்முறையாக வானத்தை பார்த்து அதிசயித்து நின்ற வீடியோ, பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது. வனில்லா தனது 2 வயது வரை ஒரு மோசமான ஆய்வகத்தில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. 1997ம் ஆண்டு அந்த ஆய்வகம் மூடப்பட்டதும், வனில்லா உட்பட சுமார் 30 சிம்பன்சிகளும் கலிபோர்னியாவில் இருந்த மூடப்பட்ட விலங்குகள் சரணாலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு, 5 அடி சதுர கூண்டு வடிவிலான இடத்தில்தான் வனில்லா வாழ்ந்து வந்தது. 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட காட்டுத்தீயின் பாதிப்…
-
- 1 reply
- 308 views
- 1 follower
-
-
மேலாடையின்றி நீச்சல் குளத்தில் குளிக்க பெண்களுக்கு அனுமதி ஸ்பெயினிடமிருந்து தன்னாட்சி அதிகாரம் பெற்ற கட்டலோனியாவில் மேலாடையின்றி பொது நீச்சல் குளத்தில் குளிக்க பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்அறிவிப்பினையடுத்து சமூக ஆர்வலர்கள் பலரும் கொண்டாடிவருகின்றனர். கட்டலோனியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து பெண்கள் மேலாடையின்றி செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. எனினும் பல நீச்சல் குளங்களில் மேலாடையின்றி செல்லும் பெண்களுக்கு உள்ளே நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாக ஒவ்வொரு கோடையிலும் இதுகுறித்த ஏராளமான புகார்கள் குவிந்த வண்ணம் இருந்துள்ளது. குறிப்பாக பெண்கள் மேலாடையின்றி செல்வதைத் தடுப்பது, “தனிமனித சுதந்திரத்தை மீறும் செயல் எனவும் க…
-
- 0 replies
- 327 views
-
-
தந்தையுடன் வாக்குவாதம் - மகள் கொலை தந்தையுடன் வாக்குவாதம் செய்த குடிபோதை ஆசாமி, காத்திருந்து, வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ஒன்றும் அறியாத 19 வயது மகளை மறைந்திருந்து பின்னால் சென்று கத்தியால் குத்தினார். வைத்தியசாலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார், அந்த இளம் பெண். சிங்கள ஊரில் சம்பவம், குடி, போதைப்பொருள்....கொலை, கொலை.... கொலைகள்.... இலங்கை எங்கே செல்கிறது. https://www.youtube.com/watch?v=u4IR5Y56xWU&ab_channel=DailyMirrorNews
-
- 0 replies
- 253 views
-
-
இளைஞனின் உயிரைப் பறித்த ஐஸ்; யாழில் பரபரப்பு யாழ்ப்பாணத்தில் அதிகளவான ஐஸ் போதைப் பொருளை நுகர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்டத்தரிப்பைச் சேர்ந்த குறித்த இளைஞர் நேற்று முன்தினம் இரவு ஐஸ் போதை பொருளை நுகர்ந்துள்ள நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https…
-
- 0 replies
- 377 views
-
-
யேர்மனியில் Saarbruecken மாநிலத்தின் Wehrden நகரப் பொலீஸ் நிலையத்துக்கு சனிக்கிழமை 24.06.2023 மதியத்தின் பின்னர் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “பொருட்கள் வாங்க பல்பொருள் அங்காடிக்கு வந்தேன். காரை வாடிக்கையாளர்கள் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து பார்த்தால் எனது காரைக் காணவில்லை” என்று கவலையோடு 45 வயதான ஆண் ஒருவர் தொலைபேசியினூடாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்தார். பொலிஸர் அந்த ஆணிடம் அவரது கார் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொண்டனர். அங்காடியில், கமரா மூலம் பதிவு செய்யப்பட்டிருந்த விபரங்களைப் பொலிஸார் பரிசோதித்த போது அவரது கார் தரிப்பிடத்தை விட்டு வெளியேறவேயில்லை என்பது உறுதியாகத் தெரிந்தது. பொலிஸார் சந்தேகம் வந்து அந்த ஆணுடன் அங்…
-
- 15 replies
- 1.1k views
-
-
உலகில் நம்ப முடியாத எத்தனையோ சம்பவங்களை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்; செய்திகளில் படிக்கிறோம்; கேள்விப்படுகிறோம். அப்படி ஒரு சம்பவம் பிரேசிலில் நடந்தது 2011, மே. பிரேசில். ரியோ டி ஜெனிரோவுக்கு அருகே இருக்கும் ஒரு தீவு. அந்த முதியவருக்கு வயது 71. பெயர், ஜோவோ பெரீரா டி சோஸா ( Joao Pereira de Souza). எப்போதாவது தோன்றினால், கடலுக்குச் சென்று மீன்பிடிப்பார். அன்றைக்கு மாலை நேரத்தில் கடற்கரைக்கு நடக்க சென்றார். முதுமை உடலைத் துளைத்திருந்தாலும், கடற்கரை மணலில் கால் புதைய நடப்பது சற்று சிரமமாக இருந்தாலும் கடற் காற்றும், அலை தெறித்து தன் மேல் விழும் சிறு நீர்த்துளிகளும் அவருக்குத் தேவையாக இருந்தன. மெல்ல நடந்தார். கடற்கரை ஓரமாக, மணல்வெளியில் ஏதோ ஒன்று கிடப்பதைப் …
-
- 0 replies
- 185 views
- 1 follower
-
-
27 JUN, 2023 | 10:35 AM உத்தர பிரதேசத்தின் காஜிபுர் மாவட்டம், சைத்பூர் நகர் அருகே நசீர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராம் அவதார். இவரது மகன் சிவசங்கருக்கும் (27), பசந்த் பட்டி கிராமத்தை சேர்ந்த ரஞ்சனா என்பவருக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 11-ம் தேதி மணமகன் குடும்பத்தினர் ரஞ்சனா வீட்டுக்கு சென்றனர். திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் நடைபெற்று கொண்டு இருந்தன. அப்போது மணமகள் குடும்பத்தினர் மணமகன் சிவசங்கரிடம் இயல்பாக பேசிக் கொண்டிருந்தனர். திடீரென மணமகள் ரஞ்சனாவின் தங்கை, மணமகனிடம் நமது நாட்டின் பிரதமர் யார் என்று கேட்டார், பதில் தெரியாமல் மணமகன் சிவசங்கர் விழித்தார். பிரதமர் மோடியின் பெயர் பட்டி த…
-
- 0 replies
- 288 views
- 1 follower
-
-
தன்னைக் கடத்திச் செல்வதாக எண்ணி ஊபர் சாரதியைக் கொன்ற பெண் தன்னைக்கடத்திச் செல்வதாக எண்ணி ஊபர் சாரதி மீது பெண் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃபோப் கோபா (Phoebe Copa) என்ற பெண் மீதே கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெண்டகியைச் சேர்ந்த குறித்த பெண் தனது காதலனைக் காண ஊபரில் பயணித்துள்ள நிலையில், டெக்ஸாஸின் எல்லைநகரமான எல் பாசோ பகுதியில் வைத்து தான் மெக்ஸிகோவுக்கு கடத்தப்படுவதாக எண்ணி அதன் சாரதியான டேனியல் பீட்ரா கார்சியா மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே 52 வயதான குறித்த சாரதி உயிரிழந்துள்ளார் . இதனையடுத…
-
- 0 replies
- 254 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,லக்ஷ்மி பட்டேல் பதவி,பிபிசி குஜராத்திக்காக 26 ஜூன் 2023, 05:22 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் "எங்கள் 13 வயது மகள் எங்களைக் கொல்ல சதி செய்கிறாள். சமையில் அறையில் உள்ள சர்க்கரைக் குப்பியில் மருந்தை கலக்குகிறாள், தினமும் காலையில் நான் குளியலறைக்குச் செல்லும்போது குளியலறையில் எண்ணெயை கொட்டுகிறாள், யூடியூப்பில் கொலை வீடியோக்களை எப்போதும் பார்க்கிறாள். " குஜராத்தின் ஆமதாபத்தைச் சேர்ந்த 56 வயது தந்தை தனது மகள் குறித்து கூறிய வார்த்தைகள் இவை. குஜராத் அரசால் செயல்படுத்தப்படு 'அபயம்' என்ற 181 ஹெல்ப்லைனை தொடர்புகொண்ட…
-
- 1 reply
- 253 views
- 1 follower
-
-
கடந்த வெள்ளிக்கிழமை 23.06.2023 யேர்மனி முனிச் நகரில் இருந்து சோபியா (பல்கேரியா)வுக்கு லுஃப்தான்சா விமானம் ஒன்று புறப்படத் தயாரக இருந்தது. திடீரென 27 வயது நிரம்பிய பெண் பயணி ஒருவர் தனது உடைகளைக் களைந்து விட்டு பெரும் சத்தமாகக் கூச்சல் போட ஆரம்பித்தாள். நிலமையைச் சீராக்க விமானத்துக்குள் பொலிஸார் வரவழைக்கப் பட்டனர். அவர்கள் எவ்வளவோ முயன்றும் அவளுக்கு உடையை அணிவிக்கவோ, அவளைச் சமாதானப் படுத்தவோ முடியவில்லை. இதற்கிடையில் அவளது நிர்வாண மேனியை போர்வை கொண்டு மூடி விட எத்தனித்த ஒரு பொலிஸின் இடது கையின் முன்பக்கத்தில் கடித்து காயத்தையும் ஏற்படுத்தியிருந்தாள். நீண்ட போராட்டங்களுக்குப் பின்னர் விமானத்தை விட்டு வெளியே கொண்டு வரப்பட்ட பல்கேரியாவைச் சேர்ந்த அந்தப் பெண் மருத்…
-
- 5 replies
- 647 views
-
-
கனடாவின் ஒன்ராறியோ லொட்டரி மற்றும் கேமிங் கோர்ப்பரேஷன் மூலம் கடந்த 6ஆம் திகதி நடத்தப்பட்ட சீட்டிழுப்பின் போது இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஜெய் ஜெயசிங்க என்பவர் பெருந்தொகை பரிசை பெற்றுள்ளார். அவருக்கு 35 மில்லியன் டொலர் பரிசாக கிடைத்துள்ளது. தமக்கு வாய்ப்பு வரும் என்று தாம் எப்போதும் நம்பியதாக பரிசு கிடைத்தன் பின்னர் டொராண்டோவில் இடம்பெற்ற நிகழ்வின் போது ஜெயசிங்க தெரிவித்துள்ளார். சில்லறை வணிகத் தொழிலாளியான ஜெயசிங்க, தமது குடும்பத்திற்காக ஒரு புதிய வீட்டை கொள்வனவு செய்யவும், தனது மகளின் கல்விக்கு செலவிடவும் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/259728
-
- 2 replies
- 413 views
- 1 follower
-
-
குட்டைப் பாவாடை அணிந்த மருமகளுக்கு மாமனார் செய்த கொடூரம் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நபர் ஒருவர் தனது மருமகளைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று அவரது மருமகள் மிகவும் குட்டையான ஆடைகளை அணிந்திருந்ததாகவும் இதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் ஆத்திரமடைந்த மாமனார் மருமகளின் மீது சூடான எண்ணெயை ஊற்றியதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து தனது கணவரிடம்தெரிவித்தபோது, அவரும் தந்தையின் செயலை ஆதரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது கணவரை விவாகரத்து செய்யத் தான் தி…
-
- 0 replies
- 468 views
-
-
மாடுகள் கொல்லப்பட வேண்டும் “எங்கள் நாட்டு பட்டர் மிகவும் சுவயானவை. ஏனெனி்ல் எங்கள் மாடுகள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றன” என்று ஐயர்லாண்ட், பட்டருக்காக விளம்பரம் செய்கிறது. ஆனால் 19.06.2023 ஐயர்லாண்ட் நாட்டால் இருந்து வந்த செய்தி அதற்கு நேர்மறையாக இருந்தது. மாடுகளுக்கு ஒருவேளை படிக்கத் தெரிந்திருந்தால் அந்தச் செய்தியை வாசித்து அவைகள் மகிழ்ச்சியைத் தொலைத்து கண்ணீர் வடிக்கும் . பட்டர்களும் கூட இனி சுவை குறைந்து போகும். காபனீர்ஒக்சைட் வெளியேற்றத்தை 1990 ஆம் ஆண்டை விட 2050 ஆம் ஆண்டளவில் 80 சதவிகிதத்தால் குறைக்கும் நோக்கை ஐயர்லாண்ட் நாடு அடைய வேண்டுமாயின் 200,000 மாடுகள் கொல்லப்பட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். ஒரு மாடு ஆண்டுக்கு 100 கிலோக…
-
- 0 replies
- 397 views
-
-
பிரேதப்பெட்டியில் சுவாசித்த பெண் - ஈக்குவடோரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் 13 Jun, 2023 | 10:50 AM இறந்ததாக கருதப்பட்ட பெண்ணொருவர் உயிருடன் இருப்பதுஇறுதி நிகழ்வி;ன் போது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஈக்குவடோரில்இடம்பெற்றுள்ளது. பெண்ணொருவரின் இறுதிநிகழ்வில் கலந்துகொண்டவர்கள் அவர் உயிருடன் இருப்பதை கண்டுபெரும் அதிர்ச்சியடைந்த சம்பவம் ஈக்குவடோரில் இடம்பெற்றுள்ளது. பெல்லா மொன்டயா என்ற 76 வயது பெண் கடந்தவாரம் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை உறவினர்கள் அவரின் உடைகளை மாற்றிஇறுதி நிகழ்விற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தவேளை அவர் சுவாசிப்பதை கண்டுபிடித்தனர். …
-
- 5 replies
- 433 views
- 1 follower
-
-
உலகின் மிகப்பெரிய மற்றும் கனமான சிறுநீரகக் கல்லை பாரிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. 2023 ஜூன் முதலாம் திகதியன்று கொழும்பு இராணுவ மருத்துவமனையில் அந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிறுநீரக மருத்துவர், லெப்டினன்ட் கேணல் கே. சுதர்ஷன் தலைமையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு இராணுவ மருத்துவமனையில் ஜூன் முதலாம் திகதியன்று இராணுவ மருத்துவர்களால் அகற்றப்பட்ட சிறுநீரக்கல் 13.372 செ.மீ நீளமும் 801 கிராம் எடையும் கொண்டது. தற்போதுள்ள கின்னஸ் உலக சாதனைகளின்படி, உலகில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய சிறுநீரகக் கல் 13 சென்றிமீற்றர், 2004 இல் இந்…
-
- 7 replies
- 569 views
- 2 followers
-
-
ஈக்வாட்டார் நாட்டின் லாஸ் ரியோஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென அந்த விமானத்தின் மீது ராட்சத பறவை ஒன்று மோதியது. பறவையின் காலும், இறக்கையும் மோதியதில் விமானத்தின் காக்பிட் அறை சேதமடைந்தது. இதில் கண்ணாடிகள் சிதறி விழுந்ததில் விமானி படுகாயம் அடைந்தார். அவரது முகத்தில் இரத்தம் கொட்டியது. உடனே அவர் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. விமானம் தரை இறங்கியதும், விமானி இரத்தம் சொட்ட, சொட்ட விமானத்தில் இருந்து வெளியே வந்தார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. விமானத்தின் மீது மோதிய பறவை ஆண்டியன் காண்டன் வகை இராட்சத பறவையாக இருக்க…
-
- 0 replies
- 227 views
- 1 follower
-
-
திடீர் விபத்துகள் ஏற்படும் போது அதில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு பலரும் உதவி செய்வார்கள். ஆனாலும் அடுக்குமாடி கட்டிடங்களில் தீ விபத்து ஏற்படும் போது அதில் ஏறி பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது என்பது சற்று கடினமானது. ஆனால் பெரு நாட்டில் உள்ள லிமா பகுதியில் பெரிய கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான நாய்கள் சிக்கி கொண்டன. கட்டிடத்தை சுற்றிலும் தீ பரவியதால், அதில் சிக்கிய நாய்களை மீட்பதில் தீயணைப்பு வீரர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்த செபாஸ்டியன் அரியாஸ் என்ற வாலிபர் தீப்பிடித்த கட்டிடத்தில் ஏறி அதில் சிக்கி இருந்த நாய்கள் ஒவ்வொன்றாக மீட்டு பாதுகாப்பாக கீழே வீசினார். அப்போது அங்கு வலையுடன் தயாராக நின்ற தீயணைப்பு வீரர்கள் அந்த நா…
-
- 0 replies
- 206 views
- 1 follower
-