செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7128 topics in this forum
-
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் ஐந்து வயது கறுப்பு பூனையான கீத், கடந்த மூன்று ஆண்டுகளாக திருட்டில் ஈடுபட்டு வருகிறது. இந்த திருட்டுப் பூனையினால், அதன் உரிமையாளர் பெரும் சங்கடத்தை அனுபவித்து வருகிறார். குறித்த பூனை தினமும் திருடி வரும் பொருட்களை, வீட்டின் முன்பாக ஒரு பெட்டியில் அவர்கள் வைத்து விடுகிறார்கள். பொருட்களை தொலைத்தவர்களும் அந்த வீட்டிற்கு நேராக வந்து, பெட்டியிலுள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு சென்று விடுவார்கள். ஆடைகள், பெண்களின் உள்ளாடைகள், காலணிகள், என நீளும் இந்த பட்டியல், போதைப்பொருள் வரையும் செல்கிறது. அதுமட்டுமல்லாமல் இரும்பு தகடு பொருத்தப்பட்ட 2.5 கிலோகிராம் எடையுள்ள காலணியொன்றையும் அது திருடி சென்றுள்ளது. பூனையை எப்படி திருத்துவதென தெரியா…
-
- 14 replies
- 836 views
- 1 follower
-
-
மின்னல் தாக்கிய நபர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைப்பு - (காணொளி இணைப்பு) இந்தோனேஷியா ஜகார்த்தாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு பணியாளராக பணியாற்றி வரும் 35 வயதான நபர் ஒருவர், மழை பெய்து கொண்டிருந்த போது கையில் குடையுடன் பயணித்த வேளை அவரை மின்னல் தாக்கியது. மழை பெய்து கொண்டிருந்த போது வெட்டவெளியான இடத்தில் கையில் குடையுடன் அவர் சென்றுள்ளார். இதன்போது, திடீரென அவரை மின்னல் தாக்கியதில் தீப்பொறிகள் வெளிவந்தன. இருப்பினும் அவர் அதில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். இந்த காட்சிகள் அங்கு பொறுத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமராவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து மயங்கி விழுந்த அவரை அவருடன் பணி புரிபவர்கள் விரைந்து சென்று முதலுதவி அளித்…
-
- 0 replies
- 239 views
-
-
மட்டக்களப்பு நகர பார் வீதியில் வீட்டில் இருந்த பெண் ஒருவரை துண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்ததுடன், அவரின் கழுத்தில் இருந்த தங்க நகைகளையும் தோட்டுடன் காதை வெட்டி எடுத்து பையிலி்ட்டு கொண்டு செல்ல முட்பட்ட குறித்த வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணையும் அவரது தந்தையையும், அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (20) மாலை 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு பார் வீதியைச் சேர்ந்த 47 வயதுடைய செல்வராஜா தயாவதி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த வீட்டில் உயிரிழந்தவர் அவருடைய கணவர் மகள் ஆகிய மூவரும் வாழ்ந்து வருகின்ற நிலையில் சம்பவ தினமான இ…
-
- 12 replies
- 970 views
-
-
தாய்க்கு மறுமணம் செய்துவைத்த மகளின் சமூக வலைத்தள பதிவு இணையத்தில் வைரலாகி வருவதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு மறுமணம் என்பது இன்றும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க இன்றைய இளைஞர்கள் சமூக சிந்தனையுடன் எடுக்கும் முயற்சி பலராலும் பாராட்டப்படுகின்றன. பெறும் வரவேற்பையும் பெறுகிறது. அப்படி பல சம்பவங்கள் சமீப காலங்களில் நடைபெற்று வருகின்றன. அண்மையில் தமிழ்நாட்டில் தனது தாயின் திருமணத்திற்கு மகன் தாலி எடுத்துக் கொடுத்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி பலராலும் பாராட்டப்பட்டது. அதேபோல் தனது தாய்க்கு, மகள் ஒருவர் வரன் தேடியதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. …
-
- 2 replies
- 407 views
-
-
சிறுப்பிட்டியில் கேக்வெட்ட கெலியில் வந்திறங்கிய பிறந்தநாள் பெண்..
-
- 3 replies
- 670 views
-
-
நண்பர்களுடன் பாரிய பட்டம் ஒன்றை ஏற்றிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் கயிற்றை நண்பர்கள் விடும் போது இளைஞன் பிடியை விடாததால் அவனை அலாக்காக பட்டம் தூக்கி மேலே கொண்டு சென்ற காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞன் கீழே வீழந்து படுகாயமடைந்துள்ளான். https://vampan.net/wp-content/uploads/2021/12/269565160_242147331382458_1406662015373078646_n.mp4?_=1 https://vampan.net/34938/
-
- 5 replies
- 532 views
-
-
தனது நண்பியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்த யாழ். இளைஞன் - பரிதாபமாக பறிபோன உயிர் தனது பெண் நண்பியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்து கழுத்தில் கயிறு போட்டு நேரலை காணொளியில் காண்பித்த இளைஞன் கயிறு இறுகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை யாழ்ப்பாணம் நாச்சிமார் வீதியில் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பைச் சேர்ந்த வீரசிங்கம் ஸ்ரான்லின் ஜெயசிங்கம் (வயது -31) என்ற இளைஞன் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அச்சகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவர் தான் தங்கியிருக்கும் அறையில் கதிரையில் ஏறி கூரை மரத்தில் கயிற்றைப் போட்டு கழுத்தில் சுருக்கிட்டு தனது பெண் நண்பிக்கு நேரலை காணொளி அழைப்பை எடுத்து மிரட்டியுள்ளார். எனினும் கதிரை சரிந்ததால் நிலை தடுமாறி…
-
- 8 replies
- 617 views
-
-
(எம்.மனோசித்ரா) கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவரிடமிருந்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்ட நபர், அப்பெண்ணின் குடும்ப பிண்ணனியை அறிந்து கொள்ளையிட்டவற்றை மீள கையளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வெள்ளவத்தை பகுதியில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் 3 பிள்ளைகளின் தாயான பெண்ணொருவர் தினமும் மோட்டார் சைக்கிளில் தொழிலுச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரமும் வழமையைப் போன்று குறித்த பெண் தொழிலுக்கு சென்று இரவு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, அப்பெண்ணை வழிமறித்த ஒருவர் தன்னை பொலிஸ் உத்தியோகத்தர் என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு தன்னை பொலிஸ் உத்தியோக்கதர் என்று கூறி நபர், அப்பெண்ணை மிரட்டி அவர் செல்லும் வழியில் அவரை பின் தொடருமாறு …
-
- 4 replies
- 728 views
-
-
சுவிட்சர்லாந்தில் வலி இல்லாமல் தற்கொலை செய்துகொள்ள நவீன எந்திரம் Posted on December 8, 2021 by தென்னவள் 23 0 சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானதாக உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 1,300 பேர் கருணைக்கொலை அமைப்புகளின் சேவைகளின் மூலம் தற்கொலை கொண்டதாக புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்திரமயமாகிவிட்ட இந்த உலகில் மனிதனின் ஒவ்வொரு தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு எந்திரங்களை கண்டுபிடிப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஆனால் மனிதன் தனது வாழ்க்கையை முடித்து கொள்வதற்கு கூட ஒரு எந்திரத்தை கண்டுபிடித்திருப்பது சற்று வியப்பை ஏற்படுத்தத்தான் செய்கிறது. ஆம், சுவிட்சர்லாந்தில் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்காக நவீன எந்திரம் …
-
- 49 replies
- 2.4k views
- 2 followers
-
-
ஆமையுடன் கைது December 12, 2021 சுமார் 300 கிலோ கிராம் எடையுள்ள கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் உடமையிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆமை உயிருடன் உள்ளதால் நீதிமன்றின் அனுமதியுடன் குறிகாட்டுவான் கடலில் மீள விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உப காவல்துறைப் பரிசோதகர் மேனன் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது https://globaltamilnews.net/2021/170274
-
- 0 replies
- 519 views
-
-
( எம்.எப்.எம்.பஸீர்) நபர் ஒருவருக்கு கை விலங்கிட்டு, அவரின் காரிலேயே அவரைக் கடத்தி அவர் அணிந்திருந்த ஆபரணங்கள், 30 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. பம்பலபிட்டி - லோரன்ஸ் வீதியில் உள்ள வாகன தரிப்பிடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். சுமார் 5 இலட்சம் ரூபா வரை பெறுமதி மிக்க ஆபரணங்களும் 30 ஆயிரம் ரூபா பணமும் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். கொழும்பு - திம்பிரிகஸ்யாய பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக, தனது காரை நிறுத்துவதற்காக வாகன நிறுத்துமிடத்துக்கு சென்றுள்ளார். இதன்போது, மோட்டார் சைக்கிளில் முகத்தை முழுமையாக மறைக்கும் முக…
-
- 1 reply
- 333 views
-
-
காலநிலை மாற்றத்தின் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வெளிநாட்டு பறவை இனங்கள். அம்பாறை மாவட்டம் பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. பொத்துவில் ,அக்கரைப்பற்று ,அட்டாளைச்சேனை, சம்மாந்துறை ,நாவிதன்வெளி, மத்தியமுகாம் ,சவளக்கடை ,நற்பிட்டிமுனை, ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளை நாடி புதிய கறுப்பு நிறத்தினை உடைய வெளிநாட்டு பறவை இனங்கள் வருகை தருகின்றன. குறித்த பறவையினங்களை இரசிப்பதற்காக அப்பகுதிகளுக்கு பலரும் வருவதோடு அங்கு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர் இம் மாதக் கடைசியில் அம்பாறை மாவட்டத்தில் பல நாட்டுப் பறவைகளும் இங்கு வந்து தங்குகின்றன. இங்கு டிசம்ப…
-
- 6 replies
- 637 views
-
-
ஆலயத்தில் திருடிய பணத்தில் நகைகள் செய்து அணிந்து வலம் வந்தவர் கைது December 1, 2021 ஆலயங்களில் திருடிய பணத்தில் ஒரு பகுதியை தனக்கு நகை செய்து அணிந்துகொண்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் உடமையிலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தங்க நகை மற்றும் ஆலயப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர். “கொடிகாமம் காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட இராமாவில் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கடந்த 21ஆம் திகதி 4 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஆலயத்திலிருந்த பொருள்களும் திருட்டுப் போயிருந்தன. அதுதொடர்பில் கொடிகாமம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. …
-
- 4 replies
- 588 views
-
-
தலை வேற லெவல்ல போய்க்கிட்டிருக்கு.. ஐநாவின் சிறும்பான்மையினருக்கான பிரச்சனைகளுக்கான 14வது அமர்வில் கைலாசாவின் பிரதிநிதி . கீழே உள்ள ஐநா வீடியோவில்
-
- 2 replies
- 397 views
-
-
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. திசையன்விளை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் நம்பியாறு அணை நிரம்பியதால் அதில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு நம்பியாறு கால்வாய் மூலம் குளங்களுக்குச் செல்கின்றன. கிணற்றின் உள்ளே செல்லும் தண்ணீர் திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளம் கிராமத்தின் குளம் நிரம்பிய நிலையில் அந்தக் குளத்தின் படுகையில் இருக்கும் தனியாருக்குச் சொந்தமான கிணற்றுக்குள் தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. சுமார் 40 கன அடி தண்ணீர் அந்தக் கிணற்றுக்குள் சென்ற போதிலும், இதுவரை கிணறு நிறையாமல் இருப்பதால் அந்த அதிசய கிணறு உள்ள இடத்துக்கு சுற்றுப்புறப் பக…
-
- 0 replies
- 385 views
-
-
ஆமைக்கறி சாப்பிட்ட 7 பேர் பரிதாப பலி தான்சானியா நாட்டின் ஜன்ஜிபாரில் உள்ள பெம்பா தீவு பகுதியில் வசித்து வரும் சிலர் கடல் ஆமைக்கறியை சாப்பிட்டு உள்ளனர். இதில் ஒரே குடும்பத்தின் 3 குழந்தைகள் உடல்நலம் பாதித்து உயிரிழந்து உள்ளதுடன், 22 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். கடல் ஆமைக்கறியில் விஷம் உள்ளது என சந்தேகிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, பொலிஸார் அதன் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். பெம்பா தீவு பகுதியில் கடல் ஆமைக்கறியை சாப்பிட்டு பலர் உயிரிழந்த சம்பவங்கள் கடந்த காலங்களில் உள்ளன. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு 7 ஆக உயர்ந்து உள்ளது. 38 பேர் சிகிச்சை பெற்ற நிலையில் பலர் வீடு திரும்பியுள்ளனர்…
-
- 67 replies
- 4.9k views
-
-
-
- 0 replies
- 418 views
- 1 follower
-
-
விரைவில் வருகிறது கஞ்சா பீட்சா..எந்த நாட்டில் தெரியுமா? தாய்லாந்து நாட்டில் விரைவில் கஞ்சா பீட்சா விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தாய்லாந்து நாட்டில் உள்ள 'கிரேசி ஹாப்பி பீட்சா' இந்த தகவலினை வெளியிட்டிருந்தது. இது தொடர்பில் நிறுவனத்தின் மேலாளர் பானுசக் குன்சாட்பூன் கூறியதாவது, கிரேஸி ஹேப்பி பீட்சா என்பது தாய்லாந்தின் புகழ்பெற்ற டாம் யம் கை சூப்பின் சுவை கொண்டது. மேலும் அதன் மேல் நன்றாக வறுத்த கஞ்சா இலையும் தூவப்பட்டு இருக்கும். பாலாடைக்கட்டியுடன் கஞ்சாவும் சேர்க்கப்படுகிறது. ஒரு பீட்சாவின் விலை ரூ1123 . இரண்டு அல்லது மூன்று கஞ்சா இலைகளுக்கு கூடுதலாக ரூ. 225 வசூலிக்கபடும். அண்டை நாடான கம்போடியாவின் தலைநகரான புனோ…
-
- 9 replies
- 567 views
-
-
RAW- IB உளவு பிரிவுகள் எப்படி செயல்படுகிறது தெரியுமா?-விளக்கும் சவுக்கு சங்கர் | கொடி பறக்குது சில இடங்கள் அவதானத்திற்குரியவை. நாம் உளவுஅமைப்புகள் தொடர்பாக அறிந்துகொள்ள வேண்டியவை என்று நினைக்கின்றேன். அதனால் இணைத்துள்ளேன். இடம்பொருந்தாவிடின் நிர்வாகத்தினர் உரிய பகுதிக்கு நகர்த்தி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். நன்றி நன்றி - யூரூப் இணையம்
-
- 2 replies
- 465 views
-
-
நன்றி - யூரூப்
-
- 2 replies
- 437 views
-
-
துப்பாக்கிச்சூட்டில்... நிழல் உலக தாதா உயிரிழப்பு – இரு பொலிஸாருக்கு காயம்! பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரான ஹேவா லுனுவிலகே லசந்த, பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். களுத்துறை − தியகம பகுதியில் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு மற்றும் கைத்துப்பாக்கியை காண்பிக்க அழைத்து சென்ற வேளையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியினால் பொலிஸார் மீது, அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதையடுத்து, பொலிஸார் பதில் தாக்குதல் நடத்தியதிலேயே, சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தரப்ப…
-
- 0 replies
- 198 views
-
-
யாழில் குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட இளம் பெண்ணும் அவருடைய தாயாரும் கைது! யாழ்ப்பாணம்- மட்டுவில் பகுதியில் இளம் பெண்ணொருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம் குழந்தை ஒன்றை, அப்பெண்ணும் அவருடைய தாயாரும் உயிருடன் புதைக்க முற்பட்ட நிலையில் அயலவர்களினால் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மட்டுவில் முத்துமாரி அம்மன் ஆலயத்தை அண்மித்த பகுதியில் 18 வயதுடைய இளம் பெண், தன்னுடைய பச்சிளம் குழந்தை ஒன்றை நிலத்தில் புதைப்பதற்கு அவருடைய தாயாருடன் முனைந்ததாக அயலவர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு அவர்கள் இருவரும் செயற்படும்போது, குழந்தை அழுததால் தாம் அங்கு விரைந்து அசம்பாவிதத்தை உணர்ந்து குழந்தையை மீட்ட…
-
- 2 replies
- 398 views
- 1 follower
-
-
நான்கு காதுகளுடன், பிறந்துள்ள பூனைக் குட்டி! துருக்கியில் 4 காதுகளுடன் பிறந்த பூனைக்குட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மிடாஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த பூனைக் குட்டி, மரபணு குறைபாடு காரணமாக 4 காதுகள் மற்றும் குறைபாடுள்ள தாடையுடன் பிறந்துள்ளது. 6 குட்டிகளில் ஒன்றாக பிறந்த இந்த பூனைக் குட்டியை ஒரு தம்பதி எடுத்து வளர்த்து வருகின்றனர். இந்த மரபணு குறைபாடு காரணமாக பூனைக் குட்டிக்கு உடல் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லை எனவும் சாதாரண பூனைகளைப் போலவே நன்றாக காது கேட்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், மிடாஸ் பூனைக்குட்டி இணையத்தில் பிரபலமடைந்து வருகின்றது. https://athavannews.com/2021/1251329
-
- 1 reply
- 248 views
-
-
Published by Gayathri on 2021-11-17 12:41:49 புத்தளம், கற்பிட்டியில் டொல்பின் வசந்த காலம் ஆரம்பமாகியுள்ளது. கற்பிட்டியில் டொல்பின் வசந்தம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக டொல்பின் மீன்களை பார்க்கும் பருவம் ஒரு மாதம் தாமதமாக தொடங்கியுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர். எனினும், டொல்பின்களைப் பார்க்கும் பருவம் இம்மாதம் முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் இறுதி வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய இயந்திர படகில் மாலுமி மற்றும் உதவியாளர் உட்பட ஆறு பேர் மட்டுமே டொல்பின்களை பார்வையிட பயணிக்க முடியும். இதேவேளை, டொல்பின்களை பார்வையிடுவதற்காக பயணிப்போர் அதன் இயற்கையான…
-
- 8 replies
- 583 views
- 1 follower
-
-
கனகராசா சரவணன் மட்டக்களப்பில் விபச்சாரவிடுதி நடத்திய குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட, மட்டு மாநகரசபையின் முன்னாள் மேயர் சிவகீர்த்தா, 50 ஆயிரம் ரூபாயை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் நேற்று (17) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில், இலங்கை போக்குவரத்து சபைக்கு முன்னாள் அமைந்திருந்து முன்னாள் மாநகரசபை மேயரான சிவகீர்த்தாவின் வீட்டுடன் நடாத்திவந்த தங்குவிடுதியில் இயங்கிவந்த விபச்சார விடுதியை, கடந்த 2016ஆம் ஆண்டு பொலிசார் முற்றுகையிட்டிருந்தனர். இதன்போது, அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள், விடுதியை நடாத்திவந்த முன்னாள் மேயர் ஆ…
-
- 0 replies
- 242 views
-