Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. இத்தாலியில் வெரோனா நகரத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தன்னுடன் இருந்த இரண்டு பெண் பிள்ளைகளை இலங்கைத் தாய் ஒருவர் கொலை செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது வரை கொலைக்கான காரணம் கண்டுப்பிடிக்கப்படவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இலங்கையை பூர்வீகமாக கொண்ட 33 வயதுடைய சச்சித்ரா நிசன்சலா பெர்னாண்டோ தேவ்த்ரா மஹவடுகே என்பவர் தனது சாபதி (11 வயது) மற்றும் சாந்தனி (03 வயது) மகள்களுடன் ஜனவரி மாதம் முதல் இத்தாலியில் வெரோனா நகரத்தில் வசித்து வந்துள்ளார். வெனிஸ் சிறுவர் நீதிமன்ற உத்தரவின் கீழ் இரு பிள்ளைகளும் அவர்களின் தந்தையிடமிருந்து பிரிந்து தாயுடன் வசித்து வந்துள்ளார்கள். இந்நிலையில், நேற்று காலை குறித்த இரு பிள…

  2. TMVP தலைமையில் மட்டக்களப்பில் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள்? மட்டக்களப்பில் தமிழர்கள் செறிவாக வாழுகின்ற பிரதேசம் ஒன்றில் தெற்கில் இருந்து கொண்டுவரப்பட்ட சிங்களவர்களுக்கு காணி வழங்கும் நிகழ்வு நேற்று அதிரடியாக நடைபெற்றது. குடும்பம் ஒன்றுக்கு 20 பேர்ச் காணி என்ற ரீதியில் காலி, மாத்தறை, தம்புள்ள, கம்பஹா, கொழும்பு போன்ற பிரதேசங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட சிங்களக் குடும்பங்களுக்கு காணி உறுதிகள் வழங்கிவைக்கப்பட்டன. குடியேற்றப்பட்டவர்களில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட சிலரும், இராணுவத்தில் கடமையாற்றிய சிலரும் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த காணி வழங்கும் நிகழ்வு TMVP என்ற பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்…

  3. வவுனியாவில் பெரும்பான்மை இன இளைஞனை காதல் திருமணம் செய்த மல்லாவியைச் சேர்ந்த 18 வயது இளம் யுவதியை பெற்றோர் பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா தேக்கவத்தையை சேர்ந்த 19 வயதான குறித்த இளைஞனும், மல்லாவியைச் சேர்ந்த 18 வயதான தமிழ் யுவதியும் காதலித்து, கடந்த யூலை மாதம் வவுனியாவில் பதிவுத் திருமணம் செய்துள்ளனர். அவர்கள் இருவரும் திருமணத்தின் பின் தேக்கவத்தையிலுள்ள கணவன் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (22) வாகனமொன்றில் அங்கு சென்ற பெண்ணின் பெற்றோர்கள், யுவதியை பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக கூறப்படுகின்றது. அதன்போது யுவதியை கூட்டிச்செல்வதை தடுக்க முயன்ற கணவனின் தந்தைய…

  4. தனக்கிளப்பில் டிப்பர் – பட்டா விபத்து – ஆறுபேர் படுகாயம் October 28, 2021 யாழ்.சாவகச்சோி – தனங்கிளப்பு பகுதியில் டிப்பர் வாகனமும் பட்டா ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி நோக்கி சென்று கொண்டிருந்த பட்டா ரக வாகனமும், யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றன. சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://globaltamilnew…

  5. மட்டக்களப்பில்... 5 ஆயிரம் ரூபா, இலஞ்சமாக பெற்ற 3 போக்குவரத்து பொலிஸார் பணிநீக்கம்! மட்டக்களப்பில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாது முச்சக்கரவண்டி செலுத்திச் சென்றவரிடம் 5 ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்ற மட்டு தலைமையக பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவில் கடமையாற்றிவரும் 3 பேரை உடனடியாக தற்காலிகமாக கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பில் இருந்து செங்கலடி பிரதேசத்திற்கு முகத்துவாரம் வீதி ஊடாக முச்சக்கரவண்டியில் சம்பவதினமான நேற்று (புதன்கிழமை) மாலை சென்று கொண்டிருந்த போது சவுக்கடி பாலத்திற்கு அருகில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து பொலிசார் குறித்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்ட நி…

  6. உணவில் பல்லி – மட்டு. போதனா வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலைக்கு சீல்! மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையை மூடி பொதுசுகாதார பரிசோதகர்கள் சீல் வைத்துள்ளனர். குறித்த சிற்றுண்டிச்சாலையில் நோயாளி ஒருவர் வாங்கிய சாப்பாட்டில் பல்லி காணப்பட்டதையடுத்து, அவர் உடனடியாக வைத்தியசாலை பணிப்பாளருக்கு முறையிட்டுள்ளார். இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த சிற்றுண்டிச்சாலையை பரிசோதனை செய்த பின்னர் சிற்றுண்டிச்சாலையை நடாத்தி வருபவருக்கு எதிராக மட்டக்களப்பு நீதிமன்றில் இன்று (திங்கட்கிழமை) உணவு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்குதல் செய்தனர். இதனையடுத்து, 10 ஆயிரம் ரூபாய் அபதாரமாக செலுத்துமாறும் சிற்றுண்டிச்சாலையை மூடி சீல்வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான…

  7. பதவியை இராஜினாமா செய்கிறாரா கெஹலிய? சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தமது அமைச்சுப் பொறுப்பை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மருந்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகு வதற்காகப் பிரசன்ன குணசேன எடுத்த தீர்மானத்தை ஒரு மாதத் திற்கு ஒத்திவைக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார். இதனால் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அசௌகரியத் திற்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. கெஹெலிய ரம்புக்வெல்லவுடனான தகராறு காரணமாகப் பிரசன்ன குணசேன தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்ததாக முன்னதாக ஊடகங்கள் செய்திகள் வெளியான. நேற்றுவரை கெஹலிய ரம்புக்வெல்ல அணி வெற்றி பெற்றதாகத் தோன்றினாலும், ஜனாதிபதியின் தலையீட்டால் நில…

  8. இலங்கையில் முதல் முறையாக... ஒரே பிரசவத்தில், ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்! இலங்கையில் முதல் முறையாக பெண்ணொருவர் ஒரே தடவையில் ஆறு குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இன்று (வியாழக்கிழமை) அவர் குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். அங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான தாய் ஒருவரே, இவ்வாறு ஒரே தடவையில் ஆறு குழந்தைகளைப் பிரசவித்துள்ளதாகவும் தாயும் குழந்தைகளும் நலமாகவுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவருக்கு 3 ஆண் குழந்தைகளும் 3 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1245983

  9. யாழ்ப்பாணத்தில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கும்பல் சிக்கியது – நகைக் கடை உரிமையாளரும் கைது யாழ்ப்பாணத்தில் வீதியில் சென்றவர்களின் தங்க நகைகளை அபகரித்துச் சென்ற நால்வர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை, அச்சுவேலி, சுன்னாகம் உள்பட 5 இடங்களில் வீதியில் பயணித்தவர்களிடம் தங்க நகைகளை அறுத்து அபகரித்துச் சென்ற தெல்லிப்பழை மற்றும் ஏழாலையைச் சேர்ந்த 20 - 25 வயதுடைய நான்கு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து நகைகளைக் கொள்வனவு செய்த சுன்னாகத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவர் 6 தங்கப் பவுண் எடையுடைய 5 சங்கிலிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வழிப்பறிக்குப் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்…

  10. யாழில்... முகநூல் ஊடாக மிரட்டி, கப்பம் பெற்ற நபர் கைது! குடும்பத்தையே கொலை செய்வோம் என முகநூல் ஊடாக மாணவனுக்கு மிரட்டல் விடுத்து , நகைகள் மற்றும் பெரும் தொகை பணத்தினை கப்பமாக பெற்று வந்த நபர் ஒருவரை நேற்று வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவனுடன் , போலி முகநூல் ஊடாக அறிமுகமான நபரொருவர் , மாணவனின் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தையே கொலை செய்ய போவதாக முகநூல் ஊடாக மிரட்டல் விடுத்து கப்பம் கோரியுள்ளார். அதற்கு மாணவன் கப்பம் செலுத்த தயாராகியுள்ளார். அதற்கு அந்நபர் பணத்தினை வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள இடம் ஒன்றினை குறிப்பிட்டு , அங்கு பணத்தினை வைத்து விட்டு …

  11. கடந்த வாரம் கேளராவை சேர்ந்த ஒருவருக்கு மனைவியை பாம்பு கடிக்க வைத்து கொலை செய்த குற்றத்தில் இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்தது. பிபிசி செய்தியாளர்கள் செளதிக் பிஸ்வாஸ் மற்றும் அஷ்ரஃப் படானா இந்த கொடூர கொலை எவ்வாறு கண்டறியப்பட்டது என்பதை விளக்குகின்றனர். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 28 வயது சூரஜ் குமார் உலகின் ஆபத்தான விஷப் பாம்பான நல்ல பாம்பை 7 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினார். இந்தியாவில் பாம்பை விற்பது சட்டவிரோதம். எனவே யாருக்கும் தெரியாமல் பாம்பை விலைக் கொடுத்து வாங்கினார் சூரஜ் குமார். ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் காற்று போவதற்காக ஓட்டை போட்டு அதில் பாம்பை வைத்து வீட்டுக்கு எடுத்து வந்துள்ளார் சூரஜ். 13 நாட்கள் கழித்து அந்த டப்பவை ஒரு பையில் போட்டுக் கொ…

  12. மனிதர்களை உட்கொள்ளும் “பிரன்ஹா” மீன் இலங்கையில் அடையாளம் இலங்கையிலுள்ள நீர் நிலைகளில் மனிதர்களை உட்கொள்ளும் “பிரன்ஹா” எனப்படும் மிக ஆபத்தான மீன் வகைகள் உள்ள தெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வனஜீவராசிகள் திணைக்களத்தின் உற்பத்தி பிரிவின் சிரேஷ்ட ஆய்வாளர் அஜித் குமார தெரிவித்தார். ஏதோ ஒரு வகையில் இந்த மீன் வகைகள் இலங்கை நீர் நிலைகளில் விடுவிக்கப்பட்டுள்ளதாக, மீன் வளர்ப்பு பிரிவின் மூத்த விஞ்ஞானி அஜித் குமார தெரிவித்துள்ளார். மனிதர்களை உட்கொள்ளும் “பிரன்ஹா” எனப்படும் மிக ஆபத்தான மீன் வகைகளே இவ்வாறு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பிரன்ஹா என்ற இந்த வகை மீன்கள் தியவன்னா ஓயா,களனி கங்கை மற்றும் பொல்கொட குளம் ஆகியவற்றில் கண்டறியப்…

    • 1 reply
    • 1.2k views
  13. இது கொஞ்சம் பெரிய இடத்து விசயம்.... பொல்லாப்பு தான். இருந்தாலும் பேசத்தான் வேணும். பிரிட்டிஷ் ராணியம்மாவுக்கு நான்கு பிள்ளைகள். முடிக்குரிய இளவரசர் சார்லஸ், இளவரசர் அன்ரூ, இளவரசி ஆன், இளவரசர் எட்வர்ட். இவர்களில் இரண்டாவது மகன், அன்ரூ சிறுவயதில் கொஞ்சம் துடுக்கானவர். பின்னாளில் பிரச்சனைக்குரியவர்.....ஆகி உள்ளார். நான்கு சகோதரர்களில், ஏனைய மூவரும், இவர் இனி பொது நிகழ்வுகளில் பங்கு பெறக்கூடாது என்று ஒருமித்த முடிவினை எடுத்துள்ளனர். இவரது அண்ணர் மகன், வில்லியம், சிம்மாசனத்துக்கு, இரண்டாவது வாரிசு. அடுத்த முடிக்குரிய வாரிசு சார்லின் மகன். இவர் தனது சித்தப்பா, அன்ரூ அரச குடும்ப நலன்களுக்கு ஆபத்தானவர் என்று வைத்த உள்குடும்ப கருத்து ஒன்று வெளியே கசிந்துள்…

    • 17 replies
    • 1.5k views
  14. சிறுமி வன்புணர்வு ; யாழ்.நகர ஒளிப்படப்பிடிப்பாளர் தொடர்பில் தீவிர விசாரணை 13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாநகரில் இயங்கும் ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளரினால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் சில ஒளிப்படங்களை வெளியிட முயற்சித்த சிலரை பொலிஸார் தேடி வருகின்றனர். யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவிலில் 13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாநகரில் ஒளிப்படப்பிடிப்பு (ஸ்ருடியோ) நடத்துபவர் கடந்தவாரம் கைது செய்யப்பட்டார். …

  15. நவாலியில்... வீட்டு வேலிக்கு, தீ வைத்த இருவர் கைது! யாழ்.நவாலியில் உள்ள வீடொன்றின் வேலிக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் இருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நவாலி தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றின் வேலி நேற்று முன்தினம் இரவு தீ வைத்துக் கொழுத்தப்பட்டிருந்தது. குறித்த வேலி சில நாட்களுக்கு முன்பே கட்டப்பட்டதாகும். இந்நிலையில் வேலிக்கு தீ வைத்த விசம செயல் தொடர்பாக வீட்டு உரிமையாளரினால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் 19வயது, மற்றும் 21 வயதான இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர். https://athavannews.com/2021/1245351

  16. வட்டுவாகலில் தாயின் மூன்றாவது கணவரால் சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம்! October 16, 2021 முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் உள்ள குடும்பம் ஒன்றில், தாயின் மூன்றாவது கணவரால் இரண்டு சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இச்சம்பவம் குறித்து வெளியாகிய தகவலில், வட்டுவாகல் கிராமத்தில் தாயின் மூன்றாவது கணவரால் மகள்கள் தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளமை தொடர்பில் கிராமத்தவர்களால் சிறுவர் துஸ்பிரயோக தடுப்பு பிரிவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவற்துறையினர் தாயினையும் தாயின் மூன்றாவது கணவரையும் கைது செய்துள்ளார்கள். ஏற்கனவே இரண்டு கணவர்களுக்கு பிறந்த இரண்டு …

  17. தனது நாட்டில், இறந்தவர்களின் நினைவுகளை கொண்டாட தடை போடும் கோத்தா, நியூயோர்க்கில், ரோஜாபூவுடன், 9/11 இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார், மனைவியுடன். 🥴 http://www.sundaytimes.lk/210926/uploads/special-event.jpg

    • 17 replies
    • 1.5k views
  18. இடி தாங்கி விற்பனை செய்ய... மோசடியாக பணம் சேகரித்த, பொலிஸ் அதிகாரி உட்பட 9 பேர் கைது! இடி தாங்கி ஒன்றினை வெளிநாட்டில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்து, அதன் பின் சுமார் 100 கோடி ரூபா பணம் தருவதாக கூறி ஒருவரிடம் பல இலட்சம் ரூபா பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட 9 சந்தேக நபர்களை நுவரெலியா மாவட்ட குற்ற விசாரணை பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நுவரெலியா குற்ற விசாரணை பிரிவின் பொலிஸ் அதிகாரிகளுக்கு நேற்று (திங்கட்கிழமை) கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி ஒருவரின் பின் ஒருவராக இவ…

    • 2 replies
    • 409 views
  19. (க.கிஷாந்தன்) இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை இலக்கம் (01) தோட்ட பிரிவில் மண்ணால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தனி வீடு ஒன்று நேற்று (07) இரவு பத்து மணியளவில் தீ பிடித்துள்ளது. இந்த திடீர் தீ விபத்து சம்பவத்தில் குறித்த வீட்டில் வசித்து வந்த ஆறு பேரில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவர் தீயில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர். இதன் போது குறித்த சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் மகள், மகளுடைய ஒரு வயது மற்றும் 12 வயது உடைய இரு ஆண் பிள்ளைகள் என ஐவர் தீயில் எரிந்து சம்பவ வீட்டிலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் சம்பவத்தை கேள்வியுற்ற வீட்டில் அருகில் உள்ளவர்கள் விரைந்து வந்து கூச்சலிட்டு தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முயற்சித்தும் அது பயனளிக்கவில்லை. …

    • 9 replies
    • 821 views
  20. இந்திய பீகார் மாநிலத்தில் சாசராம் ரயில் நிலையத்தின் மேடையில் இவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? மின்சாரத்தில் இயங்கும் ரயில்களுக்காக 24 மணிநேர தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது. பக்கத்து ஊர்களில் மின்சாரம் இல்லாத வீடுகளில் அல்லது, அடிக்கடி மின்தடை உண்டாவதால் பாதிப்புக்கு உள்ளான மாணவர்கள், இந்த மேடைக்கு வந்து அங்கே கிடைக்கும் வெளிச்சத்தில் படிக்க தொடங்கினார்கள். நாளடைவில் சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களுக்கு உதவி செய்யும் கலாசாரம் ஆகியது. இன்று.... ஒரு பெரிய கல்வி கூடமாக, மாணவர்கள் கூட்டம், கூட்டமாக இருந்து படிக்கும் இடமாகி உள்ளது. முக்கியமாக, போட்டி மிக்க, இந்திய நிர்வாக சேவை பரீட்சைக்கு (IAS) ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கே தயாராகுகிறார…

    • 0 replies
    • 347 views
  21. "வாள் வெட்டுக்குழுவை" சேர்ந்தவரை... தப்ப விட்ட பொலிஸார்! வாள் வெட்டுக்குழுவை சேர்ந்த நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து சுன்னாக பொலிஸாரிடம் ஒப்படைத்த போது , பொலிஸார் அவரை தப்ப விட்டுள்ளனர் என அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏழாலை சிவகுரு கடைக்கு அருகாமையில் வீடொன்றினுள் கடந்த திங்கட்கிழமை புகுந்த வாள் வெட்டு கும்பல் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் , வீட்டில் இருந்த உடமைகளுக்கும் சேதம் விளைவைத்தனர். சத்தம் கேட்டு அயலவர்கள் கூடிய வேளை வன்முறை கும்பல் அவ்விடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளது. அதன் போது அயலவர்கள் கும்பலில் ஒருவரை மடக்கி பிடித்தனர். அதேவேளை சம்பவத்தில் காயமடைந்த நபரை தெல்லிப்பளை வைத்திய சாலையில் அனுமதித்த அயலவர்க…

  22. கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால்ஈர்ப்புடைய( lesbian) பெண்களின் திருமணம்👩‍❤️‍👩 திருமண வாழ்த்துக்கள்💐 💝 டிவிட்டரிலிருந்து......

  23. மன்னாரில் கடும் மழை- மக்களின் இயல்புநிலை பாதிப்பு. October 4, 2021 மன்னாரில் சில தினங்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலையும் கடும் மழை பெய்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாந்திபுரம், சௌத்பார், ஜிம்றோன் நகர் உள்ளிட்ட சில கிராமங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளமையினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் பெய்த கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ள நீர் தேங்கியுள்ளது. https://globaltamilnews.net/2021/166795

  24. ஏ.ஏ.எம்.பாயிஸ் பலாங்கொடை பஹந்துடாவா எல்ல நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக பாலியல் செயற்பாடுகளை ஈடுபடும் போது, அவற்றை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களை பொலிஸார் தேடி வலைவிரித்துள்ளனர். வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாச பயணிகள் குடும்பங்களுடன் சென்று நீராடும் அந்த நீர்வீழ்ச்சிக்கு கீழிருக்கும் நீர் நிலையில் வைத்தே, நிர்வாணமாக பாலியலில் ஈடுபடும் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளமை தொடர்பிலும் அதன் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தரவேற்றப்பட்டுள்ளமை குறிப்பித்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என இரத்தினபுரி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என்.டீ.டி.வீரசிங்க உறுதிப்படுத்தினார். அங்குச் சென்றிருந்த கா…

  25. யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததில் நீர்வெறுப்பு நோய்க்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி தோப்பு பகுதியைச் சேர்ந்த வைரமுத்து வசந்தராசா (வயது44) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபரை கடந்த மாதம் வளர்ப்பு நாய் கடித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தடுமாற்றம், தண்ணீரை கண்டால் பயம் போன்ற நிலை உருவானதால், அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று வியாழக்கிழமை அவர் உயிரிழந்துள்ளார். நாய் கடித்த நிலையில் உரிய தடுப்பூசியை பெறாமையால் நீர் வெறுப்பு நோய்க்குள்ளாகி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.