செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7111 topics in this forum
-
ஸ்ரீலங்கா தேசியக் கொடியை... கால் துடைக்கும், கம்பளத்தில் அச்சிட்ட உலகின் முன்னணி நிறுவனம்! உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனம் இலங்கையின் தேசிய கொடியுடன் கூடிய கால் துடைக்கும் கம்பளம் ஒன்றை இணையத்தளம் வழியாக பொருட்களை விற்பனை செய்து வரும் சந்தையில் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பொருட்களை விற்பனை செய்யும் இந்த நிறுவனம் சிங்கப்பூரில் இருந்து இந்த கால் துடைக்கும் கம்பளத்தை உலகம் முழுவதும் விநியோகித்து வருகிறது. இந்நிலையில், இந்த கால் துடைக்கும் கம்பளம் இலங்கை சந்தையில் விற்பனை செய்யப்பட்டால், எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை நுகர்வோர் சேவை அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சாந்த …
-
- 3 replies
- 451 views
-
-
தவிசாளர் பதவிக்காக மண்ணை விற்காதே’ – காத்தான்குடி நகரசபைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் 24 Views மட்டக்களப்பு, மண்முனை பிரதேச சபைக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தில் காத்தான்குடி நகரசபையின் மூலம் சுற்று மதில் அமைக்கும் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அச் செயற்பாட்டிற்கு மண்முனை பிரதேச சபையினால் எவ்வித எதிர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மண்முனை பிரதேச சபையின் உறுப்பினர்களும், ஆரையம்பதி பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் இணைந்து இன்றைய தினம் மண்முனை பிரதேச சபைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டிருந்தனர். இப் போராட்டத்தில் சபையின் முன்னாள் தவிசாளர் மகேந்திரலிங்கம் உட்ப…
-
- 0 replies
- 222 views
-
-
ஐநாவுக்கு எதிரான பரப்புரைக்கு “காஸ் தொலையச்சுக்களை” தவறாப் பயன்படுத்தும் இலங்கை அரசு 73 Views 2009 ஆம் ஆண்டு சிவில் போரின் இறுதிக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களை திசைதிருப்புவதற்காக இலங்கை அரசானது பிரிட்டனின் இராஜதந்திர தொலை அச்சுக்களை வேண்டுமென்றே திரிவுபடுத்திக் கூறும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளின் இலங்கை பற்றிய பத்து வருடகால அறிக்கைகளை இல்லாமல் செய்யும் தீவிர நடவடிக்கையாக இது உள்ளது என உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பு ( INTERNATIONAL TRUTH AND JUSTICE PROJECT) தெரிவித்துள்ளது. குறித்த அமைப்பு வ…
-
- 0 replies
- 258 views
-
-
பருத்தித்துறை – சுப்பர்மடத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த கும்பல், வளர்ப்பு நாய் மற்றும் புறாக்கள் அடித்துக் கொலை செய்தும் பெறுமதியான பொருட்களை தாக்கியும் வன்முறையில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது. வீட்டில் உள்ளவர்கள் சிவராத்திரி வழிபாட்டுக்காக நேற்றிரவு ஆலயத்துக்கு சென்றிருந்த நிலையில் இந்தச் செயலை குறித்த கும்பல் செய்துள்ளது. வளர்ப்பு நாய் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது. புறாக் கூடு சேதப்படுத்தி புறாக்கள் சில கொலை செய்யப்பட்டிருந்தன. வீட்டில் பெறுமதியான பொருட்கள் அடித்துச் சேதப்படுத்தியிருந்தன என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். வீட்டை சேதமாக்கி; வளர்ப்பு பிரானிகளை கொன்ற கும்பல் – உதயன் | UTHAYAN (newuthayan.com)
-
- 0 replies
- 491 views
-
-
மக்கள் மனங்களை வெல்லப் போவது யார்.
-
- 1 reply
- 386 views
- 1 follower
-
-
லண்டனுக்கு ஏற்றுமதி செய்ய கொண்டுவரப்பட்ட மீன்கள் பறிமுதல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொருட்கள் ஏற்றுமதி முனையத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த ஒரு வகையான மீன்கள் சுங்க பல்லுயிர் பிரிவின் அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுமார் 60 கிலோகிராம் எடையுள்ள இந்த மீன் பெட்டிகளில் அடைக்கப்பட்டு, இலங்கை ஏயர்லைன்ஸின் யுஎல் -503 என்ற விமானத்தின் மூலம் இங்கிலாந்தின் லண்டனுக்கு நேற்று காலை ஏற்றுமதி செய்ய, கட்டுநாயக்க விமான நிலைய பொருட்கள் ஏற்றுமதி முனையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதன்போதே சுங்க அதிகாரிகளினால் இந்த மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், முறையான ஆய்வுகளுக்கு பின்னர் அது அழிக்கப்படவுள்ளது. வித்தியாச…
-
- 0 replies
- 268 views
-
-
விவேக்-நீது உடல் எடையை குறைக்க வேண்டி, அம்மருத்துவமனையின் 12வது மாடிக்கு நீது தினமும் படிகளின் வாயிலாகவே ஏறி, இறங்கினார். அதோடு தனக்குப் பிடித்தமான உணவு வகைகளான இனிப்பு, ஆயில் வகைகளைத் தன் கணவருக்காகத் துறந்து, கடினமான டயட்டையும் பின்பற்றினார். மாகாராஷ்டிராவில், தன் கணவருக்கு கல்லீரல் தானம் வழங்குவதற்காக மனைவி மேற்கொண்ட முயற்சிகள், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் மதுபானக்கடை வைத்திருப்பவர் விவேக் ஜெயின். ஒயின் ஷாப் நடத்தி வரும் விவேக் ஜெயின்(51) மது பழக்கத்திற்கு அடிமையானார். அளவுக்கு அதிகமான மது காரணமாக அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் கல்லீரல் …
-
- 0 replies
- 338 views
-
-
கிளிநொச்சியில் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பத்தர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை பதிவாகியுள்ளது. கிளிநொச்சி வட்டக்கச்சி வைத்தியாலைக்கு அண்மித்த பகுதியில் குறித்த சம்பவம் நேற்று இரவு 07.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாள் தினமான நேற்ற வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த நபர் அதே பகுதியை சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2…
-
- 0 replies
- 238 views
-
-
200 வருடம் பழைமையான கத்தி மாயம்! மக்களிடத்தில் பதற்றநிலை! நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம் கிழ் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 200 வருடம் பழைமை வாய்ந்த கத்தி ஒன்று காணாமல் போனமையினால் குறித்த தோட்ட பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதோடு தோட்ட தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லாது பணி பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த தோட்டப்பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற போது இந்த ஆலயத்தில் உள்ள பழைமை வாய்ந்த கத்தி ஒன்று காணாமல் போனமை தொடர்பில் பொதுமக்கள் கேள்வி எழுப்பிய போது ஆலய நிர்வாகத்…
-
- 0 replies
- 351 views
-
-
சென்னை: பெண்களுடன் டேட்டிங்; நடிகை வீட்டில் வேலை! -மோசடி தம்பதியிடம் ரூ.16 லட்சத்தை இழந்த தொழிலதிபர் எஸ்.மகேஷ் டேட்டிங் மோசடியில் கைதுசெய்யப்பட்ட யாசிம் கான் ரசூல் பெக் நடிகை வீட்டில் வேலை, கைநிறைய சம்பளம் என விளம்பரப்படுத்தி, கொஞ்சும் குரலில் பேசி, தொழிலதிபர்களிடமும், சபல புத்தியுள்ளவர்களிடமும் பணம் பறித்த கணவன், மனைவியை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் மனிஷ்குப்தா. இவர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் menx her என்ற இணையதளம் மூலமாக அடையாளம் தெரியாத நபரால் தான் 16,50,993 ரூபாய் ஏமாற்றப்பட்டதாகப் புகாரளித்தார். அதன்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தன…
-
- 0 replies
- 350 views
-
-
8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் கைது – யாழில் சம்பவம்! யாழ்ப்பாணத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடம்பெற்ற வீட்டுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்று குறித்த தாயாரை கைது செய்தனர். விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றில் தாயார் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண்ணின் கணவர் தொழிலுக்காக வெளிநாட்டுக்குச் சென்ற நிலையில், அவர் குழந்தையை எப்போதும் அடித்துத் துன்புறுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, குறித்த பெண்ணின் சகோதரன் குழந்தையை துன…
-
- 8 replies
- 854 views
-
-
(எம்.மனோசித்ரா) கொழும்பு - டாம் வீதியில் பயணபைக்குள்ளிருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பான விசாரணைகளில், பாலியல் குற்றம் எதுவும் பதிவாகவில்லை. எனினும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் 4 நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளமைக்கமைய இக்கொலை திட்டமிட்டு இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தினடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு மத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சந்திரசேகர தெரிவித்தார். குறித்த சந்தேகநபர் தங்கியிருந்த விடுதியிலிருந்து ஹங்வெல்ல பஸ் தரிப்பிடத்திற்கு சென்ற முச்சக்கர வண்டியிலிருந்து இரத்த மாதிரிகள் பெற்றப்பட்டுள்ளதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நிஷாந்த சந்திரசேகர தெரிவித்தார். ப…
-
- 1 reply
- 731 views
-
-
கொழும்பில் பயண பைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம் யாருடையதென ஆரம்பத்தில் கண்டுபிடிக்க முடியா நிலை காணப்பட்டது. இதன் போது குறித்த சடலம் தொடர்பான தகவல்களை பெற பொது மக்களின் உதவியை நாடி தொலைபேசி இலக்கம் ஒன்று அறிவிக்கப்பட்டது. இந்த இலக்கத்திற்கு 200 அழைப்புகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்கள் மனைவிகள் அல்லது வீட்டை விட்டு ஓடிய மகள்களா என்பதனை உறுதி செய்வதற்கு பல்வேறு நபர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்கள் உட்பட பலர் அழைப்பை மேற்கொண்டதாக வெல்லவீதி பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அஜித் பேதுருஆராச்சி தெரிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்த பெண்ணை அடையாளம் காண தங்கள் மனைவியா, மகளா என உறுதி செய்வதற்காக பலர் புகைப்படங்களையு…
-
- 3 replies
- 468 views
- 1 follower
-
-
மூன்று பிள்ளைகளை அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் குதித்த தாய் ! கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் தாய் ஒருவர் குதித்த நிலையில் அவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இதில் உயிரிழந்த ஒரு பிள்ளையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய குழந்தைகளின் உடல்களை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த சம்பவம் குறித்து தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://www.meenagam.com/மூன்று-பிள்ளைகளை-அணைத்து/
-
- 0 replies
- 428 views
-
-
யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரின் தலைமையில் நூதன கொள்ளை! யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரின் தலைமையில் நூதன கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கொள்ளை கும்பல் முச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்தே கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது. இது குறித்து தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளான காக்கை தீவு, பொம்மைவெளி, ஓட்டுமடம் பகுதிகளில் வீதியில் நிற்கும் பெண் ஒருவர் வீதியால் வரும் முச்சக்கர வண்டிகளை மறித்து நகர் பகுதிக்கு செல்ல வேண்டும் என வாடகைக்கு அமர்த்துவார். பின்னர் பொம்மை வெளி பகுதியில் தனது உறவினர் வீடு ஒன்று உள்ளதாகவும், அங்கு முதலில் சென்று விட்டு நகருக்கு செல்வோம் என கூறி பொம்மை வெளி பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அழைத…
-
- 0 replies
- 432 views
-
-
நான் இறந்தால் சீமானை சிக்க வைக்க திட்டம் போட்டு இருக்கிறார்கள் -விஜயலஷ்மி பகீர் வாக்குமூலம்.
-
- 4 replies
- 891 views
-
-
கா.பொ.த.சாதாரண பரீட்சை எழுதும் ‘சுனாமி பேபி’ 22 Views கொரனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சை நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது. இன்றைய தினம் மாணவர்கள் பெரும் உற்சாகத்துடன் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றியதை காணமுடிந்தது. உலகத்தினையே தன்பால் ஈர்த்த சுனாமி பேபி எனப்படும் சுனாமியின்போது தெய்வாதீனமாக உயிர்தப்பிய ஜெயராஜா அபிலாசும் இன்று கா.பொ.த.சாதாரண பரீட்சைக்கு தோற்றினார். மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடத்தில் தற்போது வசித்துவரும் சுனாமி பேபி அபிலாஸ் இன்று செட்டிபாளையம் மகா வித்தியாலத்தில் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்ச…
-
- 0 replies
- 311 views
-
-
உடன்பிறவா சகோதரனால் தாக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு March 1, 2021 உடன்பிறவாத சகோதரனால் தாக்கப்பட்ட சிறுவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். சிறுவனின் தலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் கிளிநொச்சி கச்சேரி வீதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் தயா (வயது -7) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். கொல்லப்பட்ட சிறுவனின் தாயார் கடந்த 20ஆம் திகதி மட்டக்களப்பு சென்றுள்ளார். சிறுவனுக்கு மூத்த சகோதரனும் (ஒன்பது வயது) இளைய சகோதரனும் (நாலு வயது) உள்ளனர். தாயார் மட்டக்களப்புக்கு சென்றதை அடு…
-
- 0 replies
- 408 views
-
-
மனநிலை பாதிக்கப்பட்ட மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு! யாழ்.புத்தூர் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழந்துள்ளார். புத்தூர் இராச பாதை வீதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் உயிரிழந்துள்ளார். அவரது மகன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், நேற்று இரவு தந்தை – மகனுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்தார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. அதேவேளை தாக்குதலை மேற்கொண்ட மகன் தலைமறைவாகியுள்ளதாகவும் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , மகனை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் அ…
-
- 0 replies
- 280 views
-
-
-
- 0 replies
- 430 views
- 1 follower
-
-
கொரோனா பாஸ்போர்ட் ஏன் வழங்கப்படுகின்றது? 22 Views கடந்த ஓராண்டு காலமாக கொரோனா பெருந்தொற்று சூழல் உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களின் பயணத்திட்டங்களை முற்றிலுமாக சீர்குலைத்திருக்கிறது. இந்த சூழலில், கொரோனா பாஸ்போர்ட் என்ற சொல்லாடல் சர்வதேச மட்டத்தில் பேசப்பட்டு வருகின்றது. கொரோனா பாஸ்போர்ட் என்றால் என்ன? கொரோனா பாஸ்போர்ட் என்பது கொரோனா பெருந்தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தடுப்பூசி செலுத்தியிருந்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு கொரோனா பாஸ்போர்ட் வழங்கப்படும் எனக் கூறப்படுகின்றது. இது டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் எனவும் அல்லது நடைமுறையில் உள்ள பாஸ்போர்டுடன் ஒரு சான்றிதழாக வழங்கப்படும் எனவும் சொல்லப்படும் நிலை…
-
- 0 replies
- 297 views
-
-
அம்பாறை பொத்துவில்லில் இருந்து பதின்ம வயது சிறுமியை அழைத்து வந்து முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் குடும்பம் நடத்தி வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் பொத்துவில் கிராமத்தில் வசித்து வரும் இளைஞன் ஒருவன் தன் காதலியான 14வயது சிறுமியை அழைத்துக்கொண்டு முல்லைத்தீவு சிலாவத்தை மாதிரிகிராம பகுதியில் குடும்பம் நடத்தியுள்ளார். குறித்த சிறுமியினை காணவில்லை என பெற்றோர் அம்பாறை பொத்துவில் பகுதி பொலிசாருக்கு முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞனையும் சிறுமியையும் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவில் 14வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தியவர் கைது! | Virakesari.lk
-
- 1 reply
- 361 views
-
-
தற்கொலைக்காக ஐஸ்கிரிமில் விஷம் கலந்த பெண் ; எதிர்பாராதவிதமாக தங்கை - மகன் பலி காசர்கோடு கேரள மாநிலம் காசர்கோடு கன்கங்காட்டு பகுதியைச் சேர்ந்தவர் வர்ஷா( 25) . வர்ஷாவிற்கு திருமணமாகி 5 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் காசர்கோட்டில் உள்ள கன்ஹங்கட் பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு மகனை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார் வர்ஷா. கடந்த 11 ஆம் தேதி இரவு , தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில், ஐஸ் கிரீம் ஒன்றை வாங்கி அதில் எலி மருந்தைக் கலந்துள்ளார் வர்ஷா . பின் அதனை உட்கொண்ட வர்ஷாவிற்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தனது அறைக்குச் சென்று படுத்துவிட்டார் வர்ஷா. ஆனால் மீதமிருந்த எலி மருந்து கலந்த ஐஸ் கிரீமை அதே இடத்தில் வைத்தி…
-
- 0 replies
- 260 views
-
-
தற்கொலையைத் தடுக்க தனித்துறையை உருவாக்கியது ஜப்பான்! ஜப்பானில் தற்கொலையைத் தடுக்க வேண்டும் என்பதற்காக ‘தனிமை’ எனும் தனித்துறை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கு டெட்சுஷி சாகாமோட்டோ என்பவரை அமைச்சராக ஜப்பான் அரசாங்கம் நியமித்துள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘சமூக தனிமை மற்றும் தனிமைப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும் மக்களுக்கிடையிலான உறவுகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என கூறினார். கொரோனா நோய்த் தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு, வேலை வாய்ப்பின்மை மற்றும் சமூக தனிமைப் படுத்தல் காரணமாக, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஜப்பான் பெண…
-
- 0 replies
- 522 views
-
-
குப்பைப் பொதியினுள் வீசப்பட்ட 12பவுண் தங்க நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு February 22, 2021 அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் திண்மக் கழிவகற்றல் சேவையின் போது ஒரு வீட்டின் குப்பைப் பொதியினுள் தவறுதலாக வீசப்பட்ட 12பவுண் தங்க நகை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 20ஆம் திகதி சம்மாந்துறை சின்னப்பள்ளி வீதியில் குறித்த வீட்டு உரிமையாளர் தனது வீட்டில் திருமண நிகழ்வு இடம் பெற்ற நிலையில் 12பவுண் தங்க நகையை தன்னையுமறியாமல் குப்பையோடு குப்பையாக கழிவுப் பொதிக்குள் வீசியுள்ளார். அப்பொதி சம்மாந்துறை பிரதேச சபையின் கழிவகற்றல் வாகனத்திற்கு வழங்கப்பட்ட நிலையில், வீட்டு உரிமையாளர் வீட்டில் இருந்த நகையை தேடிய போது காணாமல் போயிருப்பது கண்டறிப்பட்டது…
-
- 5 replies
- 822 views
-