செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7157 topics in this forum
-
உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் கைது. பல்வேறு காரணங்களால் உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் ஆனமடுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, அவர்களிடமிருந்த சுமார் 75 கிலோ கிராம் இறைச்சி பொது சுகாதார பரிசோதகர்களால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறந்த இக்கோழிகளை விலங்கு உணவிற்காகக் கொண்டு செல்வதாகக் கூறி, அவற்றை மனித நுகர்விற்காக (உணவுக்காக) விற்பனை செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில், ஆனமடுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகக் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை ஆனமடுவ நீதிமன்றத்தி…
-
- 0 replies
- 122 views
-
-
உயிரிழந்த நாய்க்கு மரணச்சடங்கு : களனியில் சம்பவம் களனிப்பகுதியில் உயிரிழந்த நாயொன்றுக்கு மரணச்சடங்கு செய்யப்பட்டுள்ளது. மனிதர்கள் உயிரிழக்கும் போது நடைபெறும் மரணச் சடங்கு போன்று, குறித்த நாய்க்கும் மரணச்சடங்கு நடத்தப்பட்டுள்ளது. இளைஞர் பாராளுமன்ற பிரதி பிரதமராக செயற்படும் மலித் சுதுசிங்க என்பவரின் செல்லப்பிராணியான மிஷெல் என்ற நாய்க்கே இவ்வாறு மரணச் சடங்கு நிகழ்த்தப்பட்டுள்ளது. மலித் சுதுசிங்கவினால் வளர்க்கப்பட்ட ஆறு வயது நிரம்பிய மிஷெல் என்ற நாய் சிறுநீரகம் பாதிப்படைந்தமையினால் உயிரிழந்துள்ளது. இந்நிலையில் மனிதர்களுக்கு இணையாக நாய்க்கும் மரணச் சடங்கு உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டுள்ளமை குறி…
-
- 0 replies
- 231 views
-
-
Published by T Yuwaraj on 2022-02-11 21:21:02 மாத்தறை ஹக்மன நகரில் பொலிஸார் நடத்திய சோதனையில், சுகவீனம் காரணமாக உயிரிழந்த பிச்சைக்காரின் ஆடைகளில் இருந்தும், அவரிடமிருந்த பல்வேறு பைகளில் இருந்தும் சுமார் 400,000 ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளதாக ஹக்மன பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் ஹக்மன, கொங்கல பகுதியில் வசிக்கும் 69 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் மலை உச்சியில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்ததாகவும், வெளியில் செல்லும் வழியில் கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து குறித்த நபரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், ஆனால் அந்த நபருக்கு உறவினர்கள் …
-
- 0 replies
- 219 views
-
-
(எம்.மனோசித்ரா) கொழும்பு - டாம் வீதியில் பயணபைக்குள்ளிருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பான விசாரணைகளில், பாலியல் குற்றம் எதுவும் பதிவாகவில்லை. எனினும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் 4 நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளமைக்கமைய இக்கொலை திட்டமிட்டு இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தினடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு மத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சந்திரசேகர தெரிவித்தார். குறித்த சந்தேகநபர் தங்கியிருந்த விடுதியிலிருந்து ஹங்வெல்ல பஸ் தரிப்பிடத்திற்கு சென்ற முச்சக்கர வண்டியிலிருந்து இரத்த மாதிரிகள் பெற்றப்பட்டுள்ளதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நிஷாந்த சந்திரசேகர தெரிவித்தார். ப…
-
- 1 reply
- 751 views
-
-
உயிரிழந்த தன் சொந்த மகளின் உறைந்த கருமுட்டைகளை பயன்படுத்தி குழந்தையை பெற்றெடுப்பது தொடர்பான சட்ட போராட்டத்தில் 60 வயதான பிரிட்டன் பெண் வெற்றி பெற்றுள்ளார்.அவருடைய மகள் தன்னுடைய 23 வயதில் புற்று நோயால் பாதிக்கப்பட்டதால் தன் கருமுட்டைகளை உறைய வைத்திருந்தார்.ஐந்தாண்டுகளுக்கு பின் அவர் மரணம் அடைந்தார். உறையவைக்கப்பட்ட தனது கருமுட்டைகள் மூலம் குழந்தை பெற்றெடுக்கும் தாயாக தனது தாய் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், எழுத்துப் பூர்வமாக அவர் தனது விருப்பத்தைத் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, செயற்கைக் கருத்தரிப்பு முறையால் குழந்தை பெறும் முறையை ஒழுங்குபடுத்தும் அமைப்பு, அந்தக் கருமுட்டைகளை வெளியே எடுக்க அனுமதி மறுத்துவிட்டது. உயர்நீதிமன்றம…
-
- 0 replies
- 167 views
-
-
உயிருக்கு எமனான கையடக்கத்தொலைபேசி திருட்டினால் ஏற்படும் பின்விளைவுகள் விபரீதமாகிய பல சம்பவங்களை நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் உகாண்டாவில் நபரொருவர் திருட்டினால் மிகவும் மோசமான பின்விளைவுக்கு முகங்கொடுத்துள்ளார். ஆம் கொடிய நோய்த்தொற்றுக்குள்ளாகியிருந்த நோயாளியிடமிருந்து கையடக்கத்தொலைபேசியொன்றைத் திருடிய நபரொருவரும் அதே நோய்க்கு ஆட்பட்டுள்ளார். உகாண்டாவின் பின் தங்கிய பகுதியொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கையடக்கத்தொலைபேசியைக் குறித்த நபர் வைத்தியசாலையொன்றில் இருந்தே திருடியுள்ளார். அக்கையடக்கத்தொலைபேசியின் உரிமையாளர் ' இபோலா' எனப்படும் கொடிய வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்தவர். இவர் தனது கையடக்கத்தொலைபேசியைக் காணவில்லையென பொலிஸ…
-
- 0 replies
- 571 views
-
-
உயிருக்கு போராடிய காகமும், காப்பாற்றிய மனிதரும் - நெருங்கிய நண்பர்களானது எப்படி? நடராஜன் சுந்தர்பிபிசி தமிழுக்காக 39 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionசெல்வராஜ் மற்றும் அவரது நண்பரான காகம் ஒரு காகமும் ஒரு மனிதரும் நெருங்கிய நண்பர்கள். என்ன? நம்பும்படியாக இல்லையா? இக்கட்டுரையை படியுங்கள். புது…
-
- 0 replies
- 315 views
- 1 follower
-
-
குழந்தை இறக்கும் தருவாயில் அதற்கு தாலாட்டு பாடிய தந்தையின் காட்சிகளடங்கிய வீடியோவொன்று இணையத்தளங்களில் வெளியாகி பலரை கண்ணீர் சிந்த வைத்துள்ளது. அமெரிக்கா, கலிபோர்னியா மாநிலம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்தவர் கிறிஸ் பிக்கோ. கர்ப்பமாக இருந்த அவரது மனைவி ஆஷ்லிக்கு கடந்த 8ஆம் திகதி குறைமாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது. லொஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள லோமா லிண்டா பல்கலைக்கழக மருத்துவமனையில் நடந்த பிரசவத்தின்போது ஆஷ்லி மரணம் அடைந்தார். தாயின் வயிற்றில் 24 வாரங்களே இருந்த குழந்தை இன்குபேட்டரில் வைக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தது. ஆனால் குழந்தை கடந்த 11ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. குழந்தை மருத்துவமனையில் உயிருக்கு போராடியபோது கிறிஸ் அதன் அருகில்…
-
- 2 replies
- 5.1k views
-
-
வாழப்பாடி அருகே ஏற்பட்ட விபத்தில் உயிருக்கு போராடிய இளைஞர்களை பொதுமக்கள் செல்போனில் படம் எடுக்க ஆர்வம் காட்டியதால் 3 பேர் உயிர் இழந்தள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புழுதிக்குட்டை புதுக்காடை பகுதியை சேர்ந்த டிரைவர் ரமேஷ் (24) நேற்று முன்தினம் தனது நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பேளூர் நோக்கி சென்றார். மோட்டார் சைக்கிள் ஏரிகோழிக்கரையில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 மோட்டார் சைக்கிளில் சென்ற 4 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். மற்ற மூவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.இதைபார…
-
- 0 replies
- 434 views
-
-
யாழ்ப்பாணத்தில் உயிருடன் வாழந்து கொண்டிருக்கும் ஒருவர் தன்னுடைய மரணக் கொடுப்பனவை வழங்குமாறு விண்ணப்பித்துள்ள சுவாரஸ்யமான சம்பவமொன்று நடைபெற்றுள்ளது. யாழ். மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கம் அங்கத்தவர்கள் மரணித்தால் 10 ஆயிரம் ரூபா வழங்கி வருகிறது. இதில் அங்கம் வகிக்கும் கொக்குவிலைச் சேர்ந்த ஒருவர் அவ் விதம் சங்க நிர்வாகத்திடம் விண்ணப்பித்து இருக்கிறார். விண்ணப்பித்ததுடன் நின்று விடாமல் அடிக்கடி சங்கத்துக்குப் போய் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவருக்கு மரணத்தின் பின்பாக வழங்கப்பட வேண்டிய மரணக் கொடுப்பனவை சங்கம் முன்னதாகவே வழங்கி விடவும் தீர்மானித்திருப்பதாகவும் தெரிய வருகிறது. http://www.virakesari.lk/article/local.php?vid=5949
-
- 2 replies
- 252 views
-
-
உயிரைப் பறிக்குமா பேன் கொல்லி?! - வாட்ஸ்அப்பில் வலம்வரும் வீடியோவும் நிபுணரின் விளக்கமும் மா.அருந்ததி ஷாம்பூ பேன் கொல்லி ரசாயனங்கள் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானவையா... இந்த மருந்துகளைப் பயன்படுத்தும்போது என்னென்ன விஷயங்களைை கவனத்தில் கொள்ள வேண்டும்? கடந்த சில நாள்களாக வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோ வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது. அதில் பேசும் பெண்மணி பிரபல செய்தித்தாள் ஒன்றில் தான் படித்த செய்தி ஒன்றை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்தி: ``பெண்மணி ஒருவர் தன் ஏழு வயது மகளுக்குத் தலையில் பேன் கொல்லி ஷாம்பூவை தேய்த்துவிட்டு தொலைக்காட்சியில் மூழ்கிவிடுகிறார். அந்த ஷாம்பூ 20 நிமிட…
-
- 0 replies
- 221 views
-
-
உயிரைப் பறிக்குமா பேன் கொல்லி?! - வாட்ஸ்அப்பில் வலம்வரும் வீடியோவும் நிபுணரின் விளக்கமும் மா.அருந்ததி ஷாம்பூ பேன் கொல்லி ரசாயனங்கள் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானவையா... இந்த மருந்துகளைப் பயன்படுத்தும்போது என்னென்ன விஷயங்களைை கவனத்தில் கொள்ள வேண்டும்? கடந்த சில நாள்களாக வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோ வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது. அதில் பேசும் பெண்மணி பிரபல செய்தித்தாள் ஒன்றில் தான் படித்த செய்தி ஒன்றை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்தி: ``பெண்மணி ஒருவர் தன் ஏழு வயது மகளுக்குத் தலையில் பேன் கொல்லி ஷாம்பூவை தேய்த்துவிட்டு தொலைக்காட்சியில் மூழ்கிவிடுகிறார். அந்த ஷாம்பூ 20 நிமிட…
-
- 0 replies
- 1.1k views
-
-
https://www.youtube.com/watch?v=BfrroXbHBnM இந்த விஷப்பரீட்சையெல்லாம் தேவையா?
-
- 3 replies
- 535 views
-
-
ரொம் மியொக் எனும் சிற்பக் கலைஞர் தத்ரூபமான மனித சிற்பங்களை செய்வதில் வல்லவராகத் திகழ்கிறார். உண்மையான மனிதர்களோ என எண்ண வைக்கும் அளவுக்கு இவரின் சிற்பங்கள் உள்ளன. உலகின் பல நாடுகளில் இவரின் சிற்பகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிறார்களுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் தயாரித்துக்கொண்டிருந்த ரொ மியொக், 1996 ஆம் ஆண்டு முதல் மனிதச் சிற்பங்களை தயாரித்து வருகிறார். அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் ஜேர்மன் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவர் ரொன் மியொக். பின்னர் லண்டனுக்குச் சென்று சிற்பங்களை உருவாக்க ஆரம்பித்த அவர் சொந்த நிறுவனமொன்றையும் ஸ்தாபித்தார். இவரின் மனிதச் சிற்பங்கள் அசல் மனிதர்களைப் போலவே தோற்றமளிப்பதால் பலரையும் கவரத்…
-
- 0 replies
- 431 views
-
-
உலகில் நம்ப முடியாத எத்தனையோ சம்பவங்களை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்; செய்திகளில் படிக்கிறோம்; கேள்விப்படுகிறோம். அப்படி ஒரு சம்பவம் பிரேசிலில் நடந்தது 2011, மே. பிரேசில். ரியோ டி ஜெனிரோவுக்கு அருகே இருக்கும் ஒரு தீவு. அந்த முதியவருக்கு வயது 71. பெயர், ஜோவோ பெரீரா டி சோஸா ( Joao Pereira de Souza). எப்போதாவது தோன்றினால், கடலுக்குச் சென்று மீன்பிடிப்பார். அன்றைக்கு மாலை நேரத்தில் கடற்கரைக்கு நடக்க சென்றார். முதுமை உடலைத் துளைத்திருந்தாலும், கடற்கரை மணலில் கால் புதைய நடப்பது சற்று சிரமமாக இருந்தாலும் கடற் காற்றும், அலை தெறித்து தன் மேல் விழும் சிறு நீர்த்துளிகளும் அவருக்குத் தேவையாக இருந்தன. மெல்ல நடந்தார். கடற்கரை ஓரமாக, மணல்வெளியில் ஏதோ ஒன்று கிடப்பதைப் …
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
மேதகு இயக்குனர் கிட்டுவின் பழைய காணொளிகளை நோண்டிய போது இது சிக்கியது. கருணாநிதியின் பிறந்த நாளுக்கான 'வாழ்த்து' இது. செம.. உடன் பிறப்புக்கள் கொலவெறியில் கிட்டு மீது பாய்ந்து பிராண்டுவதற்கு இதுதான் காரணம் போல https://www.facebook.com/pkrish.parani/videos/471308867331650
-
- 0 replies
- 500 views
-
-
Published:Today at 3 AMUpdated:Today at 3 AM பிரியங்கா - நிகில் டெல்லியில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் புதன்கிழமை 24 வயது பெண் ஒருவர் ரோலர் கோஸ்டரிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சாணக்யபுரியைச் சேர்ந்த விற்பனை மேலாளரார் பிரியங்கா. கடந்த புதன்கிழமை மதியம் தனது வருங்கால கணவர் நிகிலுடன் கபாஷேராக்கு அருகிலுள்ள ஃபன் அண்ட் ஃபுட் வில்லேஜ் பொழுதுபோக்கு பூங்காவுக்குச் சென்றிருந்தார். அங்கு இருந்த நீர் விளையாட்டுகள் எனப் பல்வேறு விளையாட்டுகளில் பங்கெடுத்து மகிழ்ந்தனர். அதின் ஒருபகுதியாக, ரோலர்-கோஸ்டர் சவாரியை மேற்கொண்டனர். அது உச்சிக்கு சென்றபோது, அதன் ஸ்டாண்ட் உடைந்து, பிரியங்கா நேராக கீழே விழுந்தார். அதில் பிரியங்காவுக்கு பலத்த காயம் ஏற்ப…
-
- 0 replies
- 123 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- புலத்சினி மீண்டும் இலங்கை வந்துள்ளார்? விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சிஐடியினருக்கு உத்தரவு உயிர்த்த ஞாயிறுதாக்குதலுடன் தொடர்புடையவர் என கருதப்படும் சார என அழைக்கப்படும் புலத்சினி ராஜேந்திரன் இந்தியாவிலிருந்து மீண்டும் இலங்கை வந்துள்ளார் என வெளியாகும் தகவல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஆணைக்குழு சிஐடியினருக்கு உத்தரவிட்டுள்ளது. கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்டவரின் மனைவி சாரா என அழைக்கப்படும் புலத்சினி இராஜேந்திரன் இந்தியாவிற்கு தப்பியோடியிருந்த நிலையில் மீண்டும் கடல்மார்க்கமாக இலங்கை திரும்பியுள்ளார் என்பது குறித்து விசாரணைகளை ம…
-
- 0 replies
- 266 views
-
-
உய்குர் இன பெண்களின் தலைமுடியை வெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சீனா உய்குர் இன பெண்களின் தலைமுடியை வெட்டி அவற்றை வெளிநாடுகளுக்கு அழகுசாதான பொருள்களாக சீனா ஏற்றுமதி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பதிவு: ஜூலை 07, 2020 14:11 PM நியூயார்க் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் லட்சக்கணக்கான உய்குர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் இந்த மக்களை சீனர்களின் வாழ்க்கை முறைக்கு 5 ஆண்டுகளுக்குள் மாற்ற சீனா திட்டமிட்டுள்ளது. சீன அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உய்குர் இன மக்கள் அங்குள்ள, வதை முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர். சீனாவில் சிறுபான்மையின முஸ்லிம் வகுப்பினரான உய்குர் முஸ்லிம…
-
- 1 reply
- 383 views
-
-
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதமொன்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கருத்தொன்றைக் கூறியிருந்தார். விடுதலைப் புலிகளின் கருத்தொருமைமிக்கவர்களாகவும் கனவில் சஞ்சரித்துக் கொண்டு தனி நாட்டை அமைக்கும் நோக்கில் செயற்படுகின்ற இனவாத சக்திகள், இன்னும் இருந்து கொண்டுதானிருக்கின்றன. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் இனவாதம் களையப்பட வேண்டுமென தெரிவித்திருந்தார். இனக்குரோதங்களும், சிறுபான்மைத் தேசிய இனங்களின் மீதான ஒடுக்கு முறைகளும், யாரால் கட்டவிழ்த்து விடப்படுகின்றன எனும் உண்மை, தமிழ் இலக்கியத்தின் மீது பற்றுகொண்ட ஹக்கீமிற்கு புரியவில்லை என்பது கவலைக்குரியது. மகாவலி அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக தமிழ், முஸ்லிம் ம…
-
- 0 replies
- 379 views
-
-
பூனையும் நாயும் வளர்ப்புப் பிராணிகள் பலவும் பலரின் குடும்பத்தில் ஒரு அங்கமாகவே மாறிவிடும். பலரும் தங்களின் வளர்ப்பு பிராணிகளை குழந்தைகளாக பாவித்து உணர்ச்சிப் பெருக்கோடு வளர்ப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தவகையில் ஹச்சிகோ என்ற ஒரு வளர்ப்பு நாயின் நிஜக்கதை ஏராளமான புத்தகங்கள் தொடங்கி திரைப்படங்கள்-அறிவியல் புனைகதைகள் வரை அனைத்திலும் இடம்பெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஷிபுயா ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த நாயின் உருவச்சிலையை வெண்கலத்தில் செதுக்கி சிறப்பும் செய்துள்ளனர். இந்த ஹச்சிகோ நாய்க்கு பின்னால் உள்ள கதை மிகவும் சிறப்பு வாய்ந்தது. 1923 ஆம் ஆண்டு, ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழத்தில் பணிபுரிந்த ஹிடெசாபுரோ யுனோ என்ற பே…
-
- 2 replies
- 388 views
- 1 follower
-
-
உரிமையாளர் மரணசடங்கில் கண்கலங்கிய குதிரை உரிமையாளர் மரணசடங்கில் கண்கலங்கிய குதிரையின் பாசத்தினை கண்டு மரணசடங்கில் கலந்துக்கொண்டவர்களும் கண்ணீர் விட்ட சம்பவம் பிரேஸிலில் இடம்பெற்றுள்ளது. செரினோ என்ற குதிரையும் அவரின் உரிமையாளரான 34 வயதுடைய வாக்னர் டே லிமா பிகுயிரோடோ என்ற நபரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கடந்த 1 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்தில் பிகுயிரோடோ உயிரிழந்துள்ளார். இவரின் இறுதி கிரிகையில் கலந்துக் கொண் ட அவரின் குதிரை பிகுயிரோடோவின் பிரிவினை தாங்காது கண்ணீர் விட்டு அழுதுள்ளது. இச்சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் குதிரையின் பாசத்தினை கண்டு வியப்பில்…
-
- 2 replies
- 441 views
-
-
https://www.facebook.com/MAlSsayyed/videos/505969552895875/
-
- 0 replies
- 403 views
-
-
உரும்பிராயில்... பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட, குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது! நீதிமன்ற பிடிவிறாந்தை நடைமுறைப்படுத்த சென்ற இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோகபுரம் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு செல்லாததால் நீதிமன்றினால் அவர்களுக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடிவிறாந்தினை நடைமுறைப்படுத்தி அவர்களை கைது செய்வதற்காக இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) யோகபுரம் பகுதிக்கு சென்று இருந்தனர். அதன் போது அங்கு …
-
- 0 replies
- 189 views
-
-
உருளைக் கிழங்கில் அல்லாஹ், பிஸ்மில்லாஹ் போன்ற சொற்பதங்கள். மடவளை பஸார் புகையிலை தோட்ட பிரதேசத்தில் வசிக்கும் ஜனாப் ரிம்சான் என்பவரின் வீட்டில் இருந்த உருளைக் கிழங்கு ஒன்றில் அல்லாஹ், பிஸ்மில்லாஹ் போன்ற சொற்பதங்கள் காணப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மடவளை, வாங்குவகடை அக்ரம் என்பவரின் கடையில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட குறிப்பிட்ட தொகை உருளைக் கிழங்கில் இருந்தே இந்த அபூர்வ கிழங்கு கண்டறியப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி.
-
- 5 replies
- 627 views
-