Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஐரோப்பாவில் மிகவும் குறைந்த வயதில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்த முதல் பெண்ணாக பிரான்சைச் சேர்ந்த பதினாறு வயதான Julie (16) அறியப்பட்டிருக்கிறாள். “உடல் ரீதியாக Julie எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் இருந்தாள். முதலில் சாதாரண இருமல்தான் அவளிடம் இருந்தது. கடந்த வார இறுதியில் அவளின் நிலைமை மோசமடைந்ததால் திங்கட்கிழமை (23.03.2020) அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். மருத்துவரின் ஆலோசனையின்படி அவளை பாரிஸுக்கு அருகாமையில் உள்ள Longjumeau நகர மருத்துவமனையில் சேர்த்தோம். அவளது நிலை மோசமாக இருந்ததால் அவளை உடனடியாக Paris நகரத்தில் உள்ள Necker வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றார்கள். அங்கு வைத்தியர்கள் மேற்கொண்ட அதீத முயற்சி பலனளிக்காமல் Julie புதன்கிழமை இரவு மரணமடைந்து விட்டாள். …

  2. கொரோனா வைரஸ் தாக்கம்: சர்வதேச அளவில் ஆணுறைகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் Getty Images கொரோனா வைரஸால் சமுக முடக்கம் செய்யப்பட்டதை அடுத்து ஆணுறைகள் நுகர்வு ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இன்னொருபக்கம் சர்வதேச அளவில் ஆணுறை தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது, சர்வதேச அளவில் அதிகளவில் ஆணுறை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தியதை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இது நீண்டகாலத்திற்கு சமூகத்தில் தாக்கம் செலுத்தும். காரெக்ஸ் பெர்ஹாடின் மூன்று மலேசிய ஆணுறை உற்பத்தி தொழிற்சாலைகள் கடந்த 10 நாட்களாக உற்பத்தியை நிறுத்தி உள்ளது. இதன் காரணமாக ஏறத்தாழ 10 கோடி ஆணுறைகள் உற்பத்தி குறைந்துள்ளது என்கிறது ராய்ட்ட…

  3. கொரோனா தாக்கத்தால் தங்களது தொழில் பாதிக்கப்பட்டதாக கூறி பிரிட்டன் பாலியல் தொழிலாளிகள் சங்கத்தினர் பிரிட்டன் அரசிடம் நஷ்ட ஈடு கேட்டுள்ளனர். லண்டன் கெண்டிஷ் டவுனைத் தலைமை இடமாகக் கொண்ட 'தி இங்கிலிஷ் கலெக்டிவ் ஆஃப் ப்ராஸ்டிடியூட்ஸ்' அமைப்பில் நூற்றுக்கணக்கான பாலியல் தொழிலாளிகள் உறுப்பினர்களாக உள்ளனர். கொரோனா தாக்கத்தைத் தொடர்ந்து இவர்களது தொழில் பாதிப்பு அடைந்ததால் இவர்கள் பிரிட்டன் அரசிடம் நஷ்ட ஈடு கேட்டுள்ளனர். கொரோனாவைத் தொடர்ந்து சமூக விலகல் ஆதரிக்கப்பட்டு வருகிறது. தொடுதலை முழுவதும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் இதனை தவிர்க்க முடியாத, பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து பெண்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உ…

    • 0 replies
    • 176 views
  4. மெக்சிகோவில் புலிக்குட்டி ஒன்றுக்கு கோவிட் என்று பெயரிடப்பட்டுள்ளது. கோர்டோபா நகரில்(Cordoba) உள்ள சிறிய தனியார் வனவிலங்கு சரணாலயத்தில் கடந்த 14 ஆம் தேதி வங்காள புலிக்குட்டி பிறந்தது. முதுகெலும்பு உடைந்த நிலையில் சர்க்கஸ் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட 8 வயது தாய் புலிக்கும் வாயில் காயத்துடன் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்ட 6 வயது தந்தை புலிக்கும் பிறந்த குட்டிக்கு கோவிட் என பெயரிடப்பட்டுள்ளது. இது, கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தங்களது வாழ்வாதாரத்துக்கு புது நம்பிக்கை அளிப்பதாக சரணாலயத்தை நடத்துபவரின் மகளும் மருத்துவருமான கிட்ஸியா ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். https://www.polimernews.com/dnews/105027/மெக்சிக்கோவில்-புதிதாகபிறந்த--புலிக்குட்டிக்கு-”க…

    • 0 replies
    • 293 views
  5. இன்றைய நாட்களில் இது போன்ற செய்திகள் எங்களை வந்தடையும் போது எங்கள் முகத்தில் ஒரு புன்னகை தானாக வந்து விடுகிறது. மனது சந்தோசப் படுகிறது. “கோரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டது இத்தாலி. கொரோனோவை கட்டுப் படுத்த முடியாமல் இத்தாலி திண்டாடுகிறது” என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கும் போது இத்தாலி நாட்டில் Rimini நகரத்தில் இருந்து ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்திருக்கிறது. 101 வயதான முதியவர் ஒருவர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக இத்தாலியில் Emilia-Romagna இல் உள்ள Infermi மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அந்த முதியவர் பூரண குணமடைந்து புதன் கிழமை (25.03.2020) மருத்துவமனையில் இருந்து வெளியேறி தனது குடும்பத்தாருடன் இணைந்து கொண்டார் என்றொரு…

  6. கொரோனா அச்சுறுத்தலால் உத்தர பிரதேசத்தில் வீடியோ கான்பெரன்சிங் மூலமாக திருமணம் நடந்தது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நேற்று (மார்ச் 25) முதல் அமலானது. இதனால் அத்தியாவசிய போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. மேலும், மக்கள் வெளியே வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக உ.பி., மாநிலம் ஹார்டாய் பகுதியில் ஒரு ஜோடி வினோதமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடைபெற இருந்த மணப்பெண் மெஹபீன் வீட்டிற்கும், மணமகன் ஹமீத் வீட்டிற்கும் இடையே 15 கிலோ மீட்டர் தூரம் இடைவெளி இருந்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைக்கு வ…

    • 0 replies
    • 351 views
  7. கொரோனா பீதியில் உறைந்து கிடக்கும் மக்களுக்கு உளவியல் ரீதியான அணுகுமுறை கொரோனா அச்சுறுத்தலால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள மக்களை உற்சாகப்படுத்தும் வகையில், வியட்நாமில் விற்பனை செய்யப்படும் கொரோனா வைரஸ் வடிவிலான பர்கர் வரவேற்பை பெற்றுள்ளது. ஹனோய் (Hanoi) நகரில் செயல்படும் பீட்சா கடையில், கொரோனா போன்று வடிவமைக்கப்பட்ட பன்களுக்கு இடையே சீஸ், தக்காளி, இறைச்சி உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. கொரோனா வடிவிலான பர்கரை சாப்பிடும்போது வைரஸை வென்றது போன்ற நேர்மறை உணர்வை பெற முடியும் என்று பீட்சா கடையின் உரிமையாளர் ஹோங் துங் (Hoang Tung) தெரிவித்துள்ளார். https://www.polimernews.com/dnews/104969/மன-உளைச்சலைபோக்க…

    • 0 replies
    • 4.9k views
  8. வீட்டுக்குள் இருங்கள் இல்லாவிட்டால் சுட்டுத் தள்ளுவோம்- தெலுங்கானா முதலமைச்சர் ஊரடங்கு உத்தரவை மதித்து அனைவரும் வீட்டில் இருங்கள். இல்லாவிடின் சுட்டுத் தள்ளுவோம் என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பெரும்பாலானோர் இதன் தீவிரம் புரியாமல் வழக்கமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக கூறுப்படுகின்றது. இதையடுத்தே பொலிஸாருக்கு கடுமையாக நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். மேலும் தேவை ஏற்படுமெனின் இராணுவத்தை அழைப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். http://athavannews.com/வீட்டுக்குள்-இருங்கள்-இல/

  9. தனது மனைவி கொடுக்கும் தொல்லைகள் கொரோனா வைரஸால் ஏற்பட்ட பிரச்சினைகளை விட பெரியது என்றும் இதனால் தனக்கு வீட்டினுள் இருக்க முடியாது எனவும் இத்தாலிய ஆணொருவர் அந்நாட்டு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால் பல ஆயிரம் உயிரிழப்புகளை சந்தித்துள்ள இத்தாலியில் தற்போது அனைவரும வீட்டினுள் இருக்க வேண்டும் என்ற சட்டம் அமுல்படுததப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நபர் இத்தாலிய அதிகாரிகளிடம், அவர் தனிமைப்படுத்தப்படவோ அல்லது வீட்டுக்குள்ளேயே இருக்கவோ தயாராக இல்லை, ஏனெனில் அவரது மனைவி மற்றொரு பெரிய பிரச்சினை என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை விட அவரது மனைவி மிகப் பெரிய பிரச்சினை என்றும், தனிமைப்படுத்தப்பட வேண்டியதை விட வைரஸுடன் தொடர்பு கொள்வதை அவர் விரும்புகிறார் எனவும்…

  10. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா, இலங்கையில் மாத்திரமின்றி சீனாவிற்கு அடுத்தபடியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், இத்தாலியே காணப்படுகின்றது. இந்நிலையில், மொத்தமாக முடங்கியுள்ள இத்தாலி மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வலம் வர ஆரம்பித்துள்ளது. மிலன் நகரில் உள்ள வைத்தியசாலையொன்றில் குழந்தையொன்று பிறந்துள்ளது. பிறந்த குழந்தை அணிந்திருந்த டயபரின் பின் புறத்தில் "எல்லாம் சரியாகிவிடும்(Andrà tutto bene )" என பொருள்படும் என்ற வாசகம் இத்தாலி மொழியில் எழுதப்பட்டிருந்தது. இந்தப் புகைப்படத்தை மார்ச் 16 ஆம் திகதி வெளியிட்ட வைத்தியசாலை நிர்வாகம் அதில் "வேறு எதையும் விட வாழ்க்கை வலிமையானது ! நாங்கள் …

    • 0 replies
    • 347 views
  11. கொரோனா வைரஸ் எதிரொலியாக தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யும்மாறு ஐ.டி. நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில் 'கொரோனா முன்னெச்சரிக்கை' நடவடிக்கையாக பெங்களூருவை சேர்ந்த இன்ஸ்டா கிளீன் என்ற நிறுவனம் தேனி மாவட்ட மலை அடிவாரத்தில், இயற்கை எழில் கொஞ்சும் கிராமம் ஒன்றில் 8 பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் தேவாரம் டி.ரெங்கநாதபுரத்தை சேர்ந்த அரவிந் ராஜு 'இன்ஸ்டாகிளீன்' என்ற செயலி உருவாக்கும் 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்தை பெங்களூருவில் நடத்தி வருகிறார். இதில் இந்தியர்கள், வெளிநாட்டினர் என 20 பேர் பணி புரிந்து வருகின்றனர். கிராமத்தில் ஐ.டி நிறுவனம் 'கொரோனா'வின் பாதிப்பால் ஊழியர்கள் அலுவலகம் வர அஞ்சியதால் தேனி மாவட்டம் தேவாரம், அனுமந்தன்…

    • 3 replies
    • 574 views
  12. திருவனந்தபுரம்: பாலக்காடு அருகே வயல்வெளியில் தூங்கிய வெளிநாட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் யுவான் ஜாக்விஸ். சைக்கிளில் பல்வேறு நாடுகளை சுற்றி வருகிறார். கடந்த ஜனவரியில் திருவனந்தபுரம் வந்தார். பல இடங்களையும் சைக்கிளில் சுற்றுப்பார்த்தார். பின்னர் இலங்கை சென்றார். இதையடுத்து சென்னை திரும்பியவர் மீண்டும் கேரளாவுக்கு வந்தார். கோவை வழியாக நேற்று முன்தினம் பாலக்காடு வந்தவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கொடுவாயூர் பகுதியில் சென்றபோது மிகவும் களைப்படைந்தார். அப்போது வயல் பகுதியை பார்த்தவர் சிறிது ஓய்வெடுக்க விரும்பினார். இதமான காற்று வீசியதால் வயலில் படுத்து தூங்கி விட்டார். இரவு முழுவதும் எழும்பவில்லை. நேற்று காலை வயலுக்கு வந்த தொழிலாளர்…

  13. கொரோனா அச்சுறுத்தல் – 1500 கைதிகள் தப்பியோட்டம்! கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பிரேசில் சிறையில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சா பாலோ நகரில் நான்கு திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு அதிகளவான சிறைக்காவலர்கள் விடுமுறையில் சென்றுள்ளனர். இதையறிந்த கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களைக் கட்டுப்படுத்த போதியளவு சிறைக்காவலர்கள் இல்லாததால் கைதிகள் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. தப்பிச் சென்ற கைதிகளில் 40 பேர் மாத்திரமே பிடிபட்டுள்ள நிலையில் எஞ்சியவர்களைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/கொரோனா-அச்சுறுத்தல்-1…

  14. கொரோனாவை விட கொள்ளையர்களிடமிருந்து தங்களை பாதுகாக்க அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழல் அமெரிக்க மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 12 மாகணங்களில் கொரோனா வைரசால், 3,774 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 69 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பெரும் பீதி அடைந்துள்ள, அமெரிக்க மக்கள், வெளியில் நடமாட அஞ்சுகின்றனர். அதனால், கழிவறைக்குப் பயன்படுத்தப்படும் பேப்பரைக் கூட, அதிகளவில் வாங்கி சேமித்து வைத்துள்ளனர். இதனால் அதற்கு அங்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோக்கள் சமீபத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில், ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளில் கொள்…

    • 5 replies
    • 947 views
    • 2 replies
    • 617 views
  15. உலகின் மிகவும் பழங்கால மரம் மாறிவரும் பருவநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் சிடர்பெர்க் மலைப்பகுதியில் கிளான்வில்லியம் சிடார் என்ற மரம் உள்ளது. சுமார் 22 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாகக் கருதப்படும் இந்த மரம்தான் உலகிலேயே மிகவும் வயதான மரம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் காலநிலை மாற்றம், உலகம் முழுவதும் அதிக வெப்பநிலை, குறைந்த மழைப்பொழிவு ஆகிய காரணிகளால் இந்த மரத்தின் விதைகள் பலமிழந்து காணப்படுவதாகவும், இதனால் இந்த மரம் மேலும் பரவும் முறை தடுக்கப்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உறைபனிக்காலத்தில் தோன்றியதாகக் கருதப்படும் இந்த மரத்தின் பின் வந்த சந்ததி மரங்கள் சுமார் 13 …

    • 0 replies
    • 331 views
  16. உலக முழுதும் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொரோனா நோய்த் தொற்றால் பல தொழில்களும் முடங்கிப்போய் உள்ளது. கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் படமாக்கப்பட வேண்டிய பல படங்களின் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல ஹாலிவுட் படங்களில் ரிலீஸ் தேதிகள் தள்ளிப்போய் இருக்கின்றன. இதன் உச்சமாக கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகக் கேரளாவில் திரைப்படங்களின் ரிலீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரங்களில் திரைப்படங்கள் எதுவும் வெளியாகாது எனவும் மேலும் மார்ச் 31ம் தேதி வரை திரையரங்குகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க இந்திய …

    • 1 reply
    • 765 views
  17. ஒட்டகச்சிவிங்கி ( Credit: Hirola Conservation ) கடந்த 30 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 40 சதவிகித ஒட்டகச்சிவிங்கிகள் வேட்டைக்காரர்களாலும் கடத்தல்காரர்களாலும் அழிக்கப்பட்டிருக்கின்றன என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. உலகிலேயே அரிய வகை உயிரினமான வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள், கென்யா நாட்டில் மட்டுமே இருக்கின்றன. இந்நிலையில், கென்யா வனவிலங்கு சரணாலயத்தில் வசித்து வந்த ஒரு தாய் ஒட்டகச்சிவிங்கியும் அதன் குட்டியும், நேற்று எலும்புக்கூடுகளாகக் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட இந்த ஒட்டகச்சிவிங்கிகள், இறந்து நான்கு மாத காலம் ஆகியிருக்கலாம் என அதிகாரிகள் கணித்திருக்கிறார்கள். …

    • 0 replies
    • 361 views
  18. சிறைச்சாலை அத்திட்சகரின் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிக் கொண்டு கைதி தப்பி ஓட்டம் தண்டனை வழங்கப்பட்ட சிறைக் கைதி ஒருவர் சிறைச்சாலை அத்திட்சகரின் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த சிறிமால் என்ற சிறைக் கைதி கொள்ளை சம்பவம் தொடர்பாக கண்டியில் கைது செய்யப்பட்டு ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் குறித்த கைதியை மட்டக்களப்பு சிறைச்சாலையில் 4 மாதங்;களாக அடைக்கப்பட்டு தண்டனை பெற்றுவரும் நிலையில் சிறைச்சாலைக்கு முன்னாள் உள்ள அத்தியட்சகரின் காரியாலயத்தை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். இ…

    • 1 reply
    • 275 views
  19. கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை குணப்படுத்த மது அருந்தலாம் என்ற வதந்தி: 27பேர் உயிரிழப்பு கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை குணப்படுத்த மது அருந்தலாம் என்ற வதந்திகளுக்குப் பின்னர் ஈரானில் மெத்தனால் அருந்திய இருபத்தேழு பேர் உயிரிழந்துள்ளனர். உயிர்களை காவு கொண்டுவரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மது அருந்தலாம் என்ற வதந்தி கடந்த சில நாட்களாக வைரலாக பரவிவருகின்றது. இந்தநிலையில் இந்த வதந்திகளை நம்பி மெத்தனால் அருந்திய 218 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குஜெஸ்தானின் தலைநகரான அஹ்வாஸில் உள்ள ஜுண்டிஷாபூர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் அலி எஹ்சான்பூர் தெரிவித்துள்ளார். மது அருந்துவது கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிப்பதில் பய…

  20. வாரணாசி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், வாரணாசி பிரகலதேஸ்வரர் கோவிலில் உள்ள விஸ்வநாதர் சிலைக்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. சாமி சிலையை பக்தர்கள் யாரும் தொட வேண்டாம் என அர்ச்சகர் கேட்டுக்கொண்டுள்ளார். சீனாவில் உருவான, 'கொரோனா' வைரஸ், இன்று சர்வதேச நோயாகி இருக்கிறது. இந்தியா உட்பட, 100க்கும் மேற்பட்ட நாடுகளை ஆட்டம் காண செய்துள்ளது. இந்நிலையில், வாரணாசி பிரகலதேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் ஒருவர் சாமி சிலைகளுக்கு முகக்கவசம் அணிவித்துள்ளார். பக்தர்கள் யாரும் சாமி சிலையை தொடவேண்டாம் எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து அர்ச்சகர் கிருஷ்ண ஆனந்த் பாண்டே கூறுகையில், கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த விஸ்வநாதர் சிலைக்கு ம…

    • 0 replies
    • 367 views
  21. "சாகும்வரை ஒரு ரூபாய்க்குதான் இட்லி விற்பேன். என்னை நம்பி என் கடைக்கு வருகிறார்கள். அவர்களை ஏமாற்ற மாட்டேன்” - 80 வயது பாட்டி கமலாத்தாளின் நெகிழ்ச்சி கதை இது!

    • 1 reply
    • 498 views
  22. பயமுறுத்தும் கொரோனா.. டாய்லெட் பேப்பர் தட்டுப்பாடு.. ஆஸ்திரேலியா செய்திதாள் நிறுவனம் செய்த காரியம் பிரபல ஆஸ்திரேலிய செய்தித்தாள் நிறுவனம் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வாடிக்கையாளர்களிடையே பீதி ஏற்பட்டதால், எங்கே கிடைக்காமல் போய்விடுமா என்ற அச்சத்தில் அனைவரும் கழிப்பறை காகிதத்தை தேடி அலைகிறார்கள். இதற்கு ஆஸ்திரேலியாவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மக்கள் கழிப்பறி காகிதத்தை பயன்படுத்த கூடுதல் பக்கங்களை தனது செய்திதாளில் இரண்டு பக்கங்களை ஒன்றும் இல்லாமல் அச்சிட்டுள்ளது. சீனாவில் தொடங்கி கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பரவி விட்டது. சீனாவில் மட்டும் கொரோன வைரஸ் தாக்கி 3200 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளார்கள். இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட நாட…

    • 2 replies
    • 391 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.