பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1543 topics in this forum
-
ஜேயமோகனின் ஏழாம் உலகோடு விமலின் வெள்ளாவி ஒரு ஒப்பீடு புலம்பெயர் சூழலில் உள்ள ஏதாவது ஒரு தமிழ் புத்தக் கடையினுள் சென்று “சோபா சக்தியின்” புத்தகம் ஏதேனும் விற்பனைக்குள்ளதா என்று கேட்டால் கடைக்காரர் படும் பாட்டைப் பார்ப்பது வேடிக்கையான அனுபவம். பதின்நான்கு வயதுப் பையன் நிரோத் கேட்டால் தமிழ்நாட்டுப் பெட்டிக்கடைக் காரர் எப்படி நெளிய வேண்டும் என்று தமிழ் படம் சித்தரிக்குமோ அது போன்று முழித்துக் கொள்வார் கடைக்காரர். அக்கம் பக்கம் பார்த்துவிட்டுத் தான் புத்தகத்தைத் தேடுவார். “ம்” உள்ளதா என்று கேட்டால் “தேசத் துரோகி வாசித்து விட்டீர்களா“ என்று கடைக்காரர் இரகசியம் பேசுவார். அதுவும் போராட்டம் சார் தளங்களில் பரிட்சயமான முகமென்றால் கடைக்காரர் கேள்விக்குறியாய் மாறிப்போவார். இது ப…
-
- 2 replies
- 986 views
-
-
ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னிறுத்தி, ஓர் அவதானம் யதீந்திரா எழுதாத என் கவிதையை எழுதுங்களேன். எல்லையில் என் துப்பாக்கி எழுந்து நிற்பதால் எழுந்துவர என்னால் முடியவில்லை. - கப்டன் வானதி 1 இவ்வாறான ஒரு தலைப்பில் கட்டுரையொன்றை எழுத வேண்டுமென, நான் எண்ணிய நாளிலிருந்து இதற்கான குறிப்புக்களை சேகரிப்பதற்காக பல நூல்களைப் புரட்டி வந்திருக்கிறேன் எனினும் அடேல் பாலசிங்கத்தின் சுதந்திர வேட்கையைத் தவிர வேறு எங்கும் எனது அவதானத்திற்கு வலு சேர்க்கும் வகையிலான கருத்துக்களை காண முடியவில்லை. ஒரு வகையில் இது ஏலவே நான் எதிர்ப்பார்த்த ஒன்றும்தான். சில வேளை எனது பார்வைக்கு அகப்படாதவைகள் பல இருக்கலாம். குமாரி ஜெயவர்த்தனாவின் ‘தேசியமும் மூன்றாமுலக பெண்களின் …
-
- 0 replies
- 887 views
-
-
தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ் August 12, 2008 – 1:32 am http://jeyamohan.in/?p=600 இந்தியத் துணைக்கண்டத்தில் மனித இனம் உருவானது குமரிக்கண்டம் என்னும் லெமூரியாவில். இங்கே பழங்குடிகள் வாழ்ந்துவந்தார்கள். இவர்கள் பேசிய மொழி தமிழ். இவர்கள் கல்லையும் மண்ணையும் வழிபடுவதுபோன்ற மதப்பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்தார்கள். குமரிக்கண்டத்தில் இருந்து இவர்கள் வடக்கே பரவி வடக்கே உள்ள பிராகிருதம் போன்ற பண்படாத மொழிகளை உருவாக்கினார்கள். சிந்துசமவெளிநாகரீகம் அவர்களால் உருவாக்கப்பட்டதுதான். இவர்கள் சிவன் அல்லது பசுபதி போன்ற கடவுள்களை வழிபட்டார்கள். பண்பாட்டுவளர்ச்சி இல்லாத ஒரு வாழ்க்கை இங்கே நிலவியது. இக்காலத்தில் தமிழர்களின் ஆன்மவியல் [soulology] வளர்ச்சியுறாத நிலை…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழை இழந்துவரும் உலகத் தமிழர்கள் மொழியியலறிஞர் ஜே.நீதிவாணன் தரும் அதிர்ச்சி தகவல்கள்! புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் வந்தேறி தமிழர்களின் மொழி உணர்வு நூலின் முக்கியப்பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு சமுதாயம் புலம் பெயர்வதற்கு கீழ்க்கண்ட 5 வகையான காரணங்கள் உண்டு என இராபர்ட் கோகன் என்னும் அறிஞர் கருதுகிறார். போர் மற்றும் கலவரங்களினால் பாதிக்கப்படுபவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், பேரரசு நிறுவியவர்கள், கலாச்சார ரீதியில் சென்றவர்கள் என 5 வகையாக புலம் பெயர்ந்தவர்களைப் பகுக்கலாம். ஆப்பிரிக்கர்களும், ஆர்மீனியர்களும் போரினால் பாதிக்கப்பட்டு புலம் பெயர்ந்தவர்கள். இந்தியத் தமிழர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காகத் தொழிலாளர்களாகப் புலம் பெயர்ந்தவர்கள். பிரித்தானியர…
-
- 1 reply
- 3.3k views
-
-
நூல் மதிப்புரை: தி. அழகிரிசாமி எழுதிய - படகுப் பயணமும் பட்டினிப் போராட்டமும் மனித நேயத்தின் தியாக வரலாறு பேரா. அ. அய்யாசாமி சிங்களப் பேரினவாத அரசு மூர்க் கத்தனமாக இனப்படுகொலையில் ஈடு படுவது உலகறிந்த இரகசியம் இராணு வத்தை அனுப்பித் தமிழர் குடும்பங்களை ஆண், பெண், குழந்தைகள் என்ற வேறு பாடு பார்க்காமல் கொத்துக் கொத்தாக மானபங்கப் படுத்துவதும் கொலை செய்து குவிப்பதும் இலங்கைத் தீவில் அன்றாட நடவடிக்கைகளாகிவிட்டன. இது போதாதென்று கொழும்புவிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் ஒரே ஒரு பாதை யையும் அடைத்து யாழ்ப்பாணத்தையே சிறைக்கூடமாக்கியிருக்கிறது சிங்கள அரசு. யாரும், எந்தப் பொருளும் உள்ளே செல்லவோ வெளியே வரவோ முடியாது. உணவில்லை, மருந்தில்லை, பசியால் அழும் குழந்தைக்கு…
-
- 0 replies
- 820 views
-
-
சீன வானொலியில் தமிழ் வட இந்தியாவின் புத்தமதம் சீனா வுடன் வரலாற்று வழிப்பட்ட இணைப்பு களை ஏற்படுத்தியது நன்கு அறியப் பட்டதே. அதுபோன்றே சீனாவுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் இடையிலான உறவுக்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு. தென்னிந்தியாவுக்கும் சீனாவுக் கும் இடையிலான வர்த்தக இணைப்பு கள் மத்திய காலத்திலிருந்து ஏற்பட்டு வந்ததாகும். இதன் பயனாகப் பல தமிழ் கல்வெட்டுகள் - 9வது, 13வது நூற் றாண்டு காலத்தவை - குவான் ஜோ துறைமுகத்தைப் போன்று கடலோர சீனாவின் சில பாகங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலோருக்குத் தெரியாத இந்த மத்திய காலத் தொடர்பு நவீன கால வடிவத்தில், அதாவது சிற்றலை வானொலியில் தொடர்கிறது. அரசுக்குச் சொந்தமான சீன ரேடியோ இண்டர் நேஷனல் (சிஆர்ஐ), ஒவ்…
-
- 0 replies
- 789 views
-
-
தமிழ் மொழியின் அவசியம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 2.6k views
-
-
தமிழீழம் வரலாற்றுத்தேவை வாழ்க்கையின் கட்டளை (நூல் விமர்சனம்) தோழர் தியாகு அவர்கள் எழுதி வெளி வந்த சில கட்டுரைத் தொகுப்புகளுடன் தலைப்புக்குரிய கட்டுரையையும் புதிதாக எழுதிச் சேர்த்து வாசகர்களாகிய நமக்கு அளித்துள்ள நூல்தான் தமிழீழம் - வரலாற்றுத் தேவை வாழ்க்கையின் கட்டளை: இந்தப் புத்தகத்தில் வரும் 17 கட்டுரைகளும் கடந்த நாட்களில் நடந்த பேச்சுவார்த்தைகளை, வீரப்போர்களை, அதன் தியாகங்களை நினைவுப் படுத்துவதுடன், நிகழ்கால தேவைகளை, எதிர்கால எதிர்பார்ப்புகளை உள்ளடக்கிய கட்டுரைத் தொகுப்பாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகளையானாலும், வேறு உண்மையான தேசிய விடுதலை இயக்கங்களையானாலும் உலக அரசுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து எதிர்த்தாலும் முறியடிக்க முடியாது. வி…
-
- 1 reply
- 826 views
-
-
சீனாவில் தமிழ்க் கல்வெட்டுகள் சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 மைல்கள் வடக்கே உள்ள சூவன் செள என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்தத் துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகஙகளிலும் தங்கி பிறகு வியட்னாம் சென்று அங்கிருந்து சீன நாட்டை அடைந்துள்ளனர். தமிழ் நாட்டிலிருந்து நேரடியாக சீனாவிற்குக் கடல் மார்க்கமாகச் செல்ல வேண்டுமானால் வங்காள விரி குடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாக தென் சீனக் கடலை அடை யலாம். மலேசிய தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இந்தப்…
-
- 0 replies
- 3.5k views
-
-
வணக்கம், இண்டைக்கு ஜெயா ரீவியில் திரைப்பட விருதுகள் நடைபெறும் நிகழ்ச்சி ஒண்ட தொலைக்காட்சியில பார்த்தன். ஒவ்வொருத்தரும் விருத வாங்கேக்க விருது குடுத்தவருக்கு தங்கியூ தங்கியூ தங்கியூ எண்டு சொல்லிச்சீனம். ஒருத்தனாவது நன்றி சொன்னதா தெரிய இல்ல. நான் வாய் அசைவ வச்சுத்தான் கண்டுபிடிச்சன். தங்கியூ எண்டு சொல்லிறதுக்கும், நன்றி எண்டு சொல்லிறதுக்கும் வாய் அசைவில சரியான வித்தியாசம் இருக்கிது தானே..? நீங்கள் யாராச்சும் இந்த நிகழ்ச்சி பார்த்தனீங்களோ? விருது வாங்கின யாராவது நன்றி எண்டு சொன்னத நீங்கள் கேட்டனீங்களோ? தெரிஞ்சால் சொல்லுங்கோ. நானும் தங்கியூ தாராளமா பாவிக்கிறது. ஆனால்.. இப்பிடி ஆக்கள் தமிழில செய்த ஏதுக்கும் விருது தரேக்க தங்கியூ எண்டு சொல்லமாட்டன் எண்டு ந…
-
- 6 replies
- 1.7k views
-
-
எனக்கு ஒரு கேள்வி அல்லது சந்தேகம் வருகிறது.. ஏன் பொங்கு தமிழ் நிகழ்வு இந்தியாவில் நிகழ்த்தபடுவதில்லை??? யாராவது முயற்சி செய்திருக்கிறார்களா???
-
- 5 replies
- 1.7k views
-
-
-
- 1 reply
- 1.8k views
-
-
தமிழ்த்தேசியத்தை வளர்க்கப் போகிறோம் என்று பலர் இங்கு அடிக்கடி எழுதி வருகிறார்கள் அதே போல் தன்னுடைய கருத்து வெட்டப்படும் போதும் இப்படி செய்வதால் தமிழ்த்தேசியம் வளரப்ப்போவதில்லை என்றும் கூக்குரலிடுகிறார்கள் இது என்னவென்று சொல்வது ??? ஆக எதற்கெடுத்தாலும் தமிழ்தேசியம் பலிக்கடாவாக்கப்படுகிறது இங்கு ஒரு சாபகேடான என்னவெனில் தமிழ்மக்களுக்கே இன்னும் தமிழ்த்தேசியம் பற்றி விளங்கப்படுத்திக்கொண்டிருப
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈழப்போராட்டக் காரணிகள். வணக்கம்! ஈழப்போராட்டம் ஏன் தொடங்கப்பட்டது, அது எப்படி வளர்ந்தது, இற்றை வரை அது எதிர்கொண்ட சவால்கள் எவை என்பன பற்றி விரிவாக எழுதப்பட வேண்டுமென்பது உண்மை. இந்தத் தேவையை மயூரன் அண்மையில் தெளிவுபடுத்தியுள்ளார். ஏற்கெனவே பெயரிலி இது பற்றி எழுத முயற்சிப்பதாகச் சொல்லியுள்ளார். அந்த வகையில் எனது மிகச்சின்ன முயற்சியிது. முதலில் சிங்கள - தமிழ் இனமுறுகல் என்பது இன்று நேற்றுத் தொடங்கப்பட்டதன்று என்பது என் எண்ணம். இதை மற்றவர்களும் ஏற்றுக்கொள்வார்களென்றே நம்புகிறேன். ஏறக்குறைய ஈராயிரம் -குறைந்தபட்சம் 1500 வருடங்களாகப் புகைந்து வருவது தான் இந்த இன முரண்பாடு. ஆயிரம் வருடங்களுக்கு முன்பேயே இலங்கையைத் தனிச்சிங்கள - பொளத்த நாடாக மட்டுமே அடையாளங்…
-
- 0 replies
- 930 views
-
-
புலப் பெயர்வாழ் உறவுகளிடத்தில் உள்ள கடும் பணி நம்மவர்கள் புத்தூக்கத்துடன் செயற்பட வேண்டிய காலம் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். நாம் வாழும் தற்காலிக நாடுகளின் சட்ட ஒழுங்குகளுக்கு அமைய செயற்படவேண்டியதோடு, பொறுப்புணர்வுடன், நியாயமான எமது விடுதலை வெளிப்பாட்டை வழிநடத்தும் நிலை முக்கியமானது. ஏற்கனவே உள்ள விடயங்களின் தவறுகளை சரிப்படுத்தி புதிய அரசியல் இராசதந்திர வழிமுறைகளை கையாண்டு புதிய சிந்தனைகளை உள்வாங்கி இளைய, முதிய, அனுபவமிக்க பெரியவர்களின் இணைவுடன் செயற்படுவோம். • .இங்குள்ள பொருளாதார தமிழர்கள் .ஏனைய நாட்டவர்களின் நட்புடன் கூடிய திட்டமிடல்களை கையாலுதல். • .பொருளாதார வளமிக்க கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்துதல். • .பொருளாதார பல் துறைப் பிரிவுகள் …
-
- 0 replies
- 924 views
-
-
வாரமொரு சிந்தனைத் தொடர் இல. 241 May 30, 2008 சிங்களவரும் போற்றும் சிறுத்தை பிரிகேடியர் பால்ராஜ் ! பிரிகேடியர் பால்ராஜ் என்றும் வீர வேங்கை காற்றோடு காற்றாகி ஒரு வாரம் ஓடிவிட்டது. நேற்றிருந்தார் இன்றில்லை என்னும் பெருமை மிக்கது என்று போற்றப்படும் உலகு அந்த வீரனின் நினைவுகளை தன் உடலில் பச்சை குத்திக்கொண்டு மாற்றமின்றிச் சுழன்று கொண்டிருக்கிறது. அத்தோடு மனிதர்கள் வடித்த கண்ணீர், கவலை, கவிதை, வீர அஞ்சலிகள் என்று பெற வேண்டிய மரியாதைகள் யாவும் பெற்று அந்த வீரன் போகாமல் போனதையும் நாம் பார்த்துவிட்டோம். இப்போது மனதில் மலையாக உயர்வு பெற்று நிற்கும் வீரன் பிரிகேடியர் பால்ராஜ் நினைவலைகள் மனத்திரையில் ஓடை நீராய் சலசலத்து ஓடுகிறது. ஒவ்வொரு விடுதலைப் புலி வீ…
-
- 0 replies
- 973 views
-
-
தமிழ்நாட்டின் காவிரி டெல்டாப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வாய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பேட்டித் தொகுப்பு கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் படங்கள் இந்த முதுமக்கள் தாழிகளில் காணப்பட்ட சில குறியீடுகள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டெடுக் கப்பட்ட சிந்து சமவெளி நாகரிக குறியீடுகளைப்போன்றே இருப்பதாக, பழங்கால எழுத்துக்களை ஆய்வு செய்துவரும் ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தெரிவித்திருக்கிறார். இந்த முதுமக்கள் தாழிகளின் தொல்லியல் முக்கியத்துவம் குறித்தும், இதற்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் இருக்கும் ஒற்றுமைகள் குறித்தும், இந்த ஆய்வை மேற்கொண்ட தொல்லியல் துறையின் நிபுணர…
-
- 1 reply
- 2.8k views
-
-
என்று நாம் முன்னேறுவோம்? - செல்வா - நண்பர்களே, உழைப்பவர்களுக்கே உலகம்! தமிழர்களாகிய நாம் எப்பொழுதுதான் விழிப்படைவோமோ?! உலகில் உள்ள சில ஆயிரம் மொழிகளில், 256 மொழிகளில் இன்று விக்கிப்பீடியா என்னும் இலவச அறிவுக்களஞ்சியம், அழகான படங்களுடன், உரிமைக் கட்டுப்பாடுகள் இல்லாமல், யாரும் பயன்படுத்துமாறு, கட்டற்ற கலைக்களஞ்சியமாக உள்ளது. நாளும் வளர்ந்து வருகின்றது. http://ta.wikipedia.org/ தமிழர்கள் ஏன் இப்படி உறங்கிக்கொண்டுள்ளனர்?! உலக மொழிகளின் வரிசையில் தமிழ் 68 ஆவது இடமாக மிகப் பின் தங்கி உள்ளது. இந்திய மொழிகளுள் முதன்மையானதாக நாம் இருந்தாலும் (200 எழுத்துகளுக்குக் கூட உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையிலும், மொத்த பைட் அளவிலும், மற்ற பல்வேறு தரக் கட்டுப…
-
- 4 replies
- 1.5k views
-
-
அவ்வையார் படம் அரை நூற்றாண்டுக்கு முன்பு மிகப் பெரும் வெற்றி பெற்ற திரைக்காவியம். அவ்வையாராக நடித்த கே.பி. சுந்தராம்பாள் அக்காலக்கட்டத்திலேயே ஒரு லட்சரூபாயை அப்படத்தில் நடித்ததற்காக சம்பளமாக பெற்று தமிழ் திரை சரித்திரத்தில் இடம் பிடித்தார். ஜெமினி பிக்சர்ஸின் எஸ்.எஸ். வாசன் இப்படத்தை தயாரித்து பெரும் லாபம் சம்பாதித்தார். இவையெல்லாம் நமக்கு தெரிந்த செய்திகள். இத்திரைப்படத்தின் பின்னணியில் நடைபெற்ற சுவையான சம்பவம் ஒன்று பலரும் அறியாதது. அவ்வையார் கதையை திரையில் கொண்டுவர முடிவு செய்த ஜெமினியின் கதை இலாகா கதை விவாதத்துக்காக அமர்ந்திருக்கிறது. இது ஏற்கனவே நாடகமாக பெரும் வெற்றி பெற்ற கதை என்றாலும் திரைக்காக சில புதிய விஷயங்களை மெருகேற்றுகிறார்கள். கதையின் பாத்திரங்களுக்கு …
-
- 17 replies
- 4.3k views
-
-
தம்பி, தங்கச்சி எண்ட பிள்ளைகள், ராசாக்கள், செல்லக் குஞ்சுகள் எல்லாருக்கும் கனடாக் கிழவனிண்ட இனிய வணக்கங்கள் பாருங்கோ. ஈழக்கிழவன் பலதையும் பத்தையும் பற்றி யோசிச்சு கதைப்பார் பாருங்கோ. நான் பலதையும் பத்தையும் பற்றி கதைச்சுப்போட்டுத்தான் யோசிக்கிறது பாருங்கோ. கனடாக் கிழவன் எண்டால் கொஞ்சம் வித்தியாசமா இருக்கிறது நல்லதுதானே? சரி இனி நாங்கள் விசயத்துக்கு வருவம் பாருங்கோ. இண்டைக்கு நான் உங்களோட கதைக்கப்போற விசயம் மொழிமீட்பு பற்றியது. எல்லாரும் மாதிரி இந்தக்கிழவனும் யாழ் இணையத்துக்குவந்து விடுப்பு வாசிக்கிறது, விடுப்பு அளக்கிறது வழமையுங்கோ. அதில இண்டைக்கு ஒரு செய்திபோட்டு இருக்கிது என்ன எண்டால் தம்பி இளங்குமரன் தாயக மீட்போட மொழிமீட்பும் பெறப்படவேண்டும் எண்டு இளம் சமுதாய…
-
- 11 replies
- 2.8k views
-
-
தமிழின் பொருள் தற்போது உலகத்தில் 6800 மொழிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மொழிகளுள் சில தொன்மையானவை. சில புதியவை. சிலவற்றுக்கு இலக்கிய வளம் உண்டு. சிலவற்றுக்கு எழுத்துகூட கிடையாது. சில மொழிகள் நெடுங்காலம் வாழக்கூடிய நலமான நிலையைப் பெற்றுள்ளன. ஒரு சில மொழிகள் அழிவின் விளிம்பில் நிலை தடுமாறிக்கொண்டிருக்கின்றன. உலக மொழிகள் எதற்கும் இல்லாத தனிச்சிறப்புகள் தமிழ்மொழிக்கு உண்டு. கிரேக்க நாட்டு மொழி கிரேக்கம். இங்கிலாந்து நாட்டின் மொழி இங்கிலீசு(ஆங்கிலம்). கிரேக்கம், இங்கிலீசு என்ற சொற்கள் மொழியை மட்டுமே சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் தமிழ் என்ற சொல், மொழி என்பதோடு சேர்த்துப் பதினொரு பொருளைத் தருகிறது. இப்படிப்பட்ட சிறப்பு உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லவே இல்…
-
- 0 replies
- 6.1k views
-
-
தமிழ் காட்டு மிராண்டி மொழி – ஏன்? எப்படி? தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகின்றேன். இடையில் இந்தியை நாட்டுமொழியாகவும், அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழுக்கு சிறிது இடம் கொடுத்து வந்தேன். ஆங்கிலத்துக்கு ஆதரவு ஆயினும் ஆங்கிலமும் தமிழின் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும் என்று பேசியும், எழுதியும் முயற்சித்தும் வந்திருக்கிறேன். அக்காலத்தில் எல்லாம் நம் நாட்டில் ஆங்கிலம் அறிந்த மக்கள் மிக மிகச் சிலரேயாவர். தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த மக்கள் 100க்கு சுமார் 5 முதல் 10பேருக்கும் உட்பட்ட எண்ணிக்கை உடையவர்களா…
-
- 17 replies
- 5.7k views
-
-
(ஒரு பேப்பரில் திரு. இரவி அருணாச்சலம் எழுதிய கட்டுரை) அபூர்வமான அனுபவம் அடைந்தேன். நெஞ்சார ஒன்று சொல்கிறேன். சென்ற ஞாயிறு (4-5-08) நடந்த ஒரு நிகழ்வு, என்வாழ்வில் நேர்ந்த மிக அபூர்வமான தருணங்களில் ஒன்று. நெஞ்சு இனிக்க அந்த நாள் என்னில் பதிந்தது. “ஒரு பேப்பர்” இல் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள் எழுதுகிற வி.சபேசன் (ஜேர்மனி) அவர்கள் கலைநிதியை வதுவை புரிந்த அந்தத் தருணத்தையே மிக்க அபூர்வமான தருணம் என நான் குறிப்பிட்டேன். சனிக்கிழமை (3-5-08) காலையில் இராம.கே.நாதன் அவர்களின் மகிழ்வுந்தில், கோபி, பார்த்தி, இளங்கோ, இராம.கே.நாதன் என ஒருபேப்பர்காரன்கள் புறப்பட்டோம். மணிவாசகனை விட்டுப் போவது வருத்தமாக இருந்தது. பிரகாசமான காலை வெய்யிலில் தெளிவான தார்ப் பாதையில…
-
- 180 replies
- 42.8k views
-
-
உலகின் மூத்தமொழி. கல்தோன்றி, மண்தோன்றா காலத்து மனிதர்கள் பேசி மகிழ்ந்த மொழி. ஆரியக் கலாச்சார, சமஸ்கிருத ஊடுருவல், மொகலாய உருது, பார்சி, வெள்ளையரின் ஆங்கிலேய ஊடுருவல்களையும் சமாளித்து நின்று இன்றும் வாழும் ஒரே மொழி தமிழ்மொழி. சமயம் மட்டுமே இம்மொழியைக் காத்தது என்ற புனையுரைகள் இணையத்தில் புனையப்பட்டு வரும் சூழ்நிலையில் இனமான திராவிட இயக்கத்தின் பங்களிப்பு இம்மொழியின் வளர்ச்சிக்கு எத்தகையது என்று விளக்க வேண்டிய அவசியம் நமக்கு இயல்பாகவே எழுகிறது. பண்டிதர்களும், சமயத் தலைவர்களும் தங்களுக்குள்ளாகவே நம் மொழியின் பயன்பாட்டினை பிரித்து எடுத்துக் கொண்டு சமயம் பரப்ப மொழியைப் பயன்படுத்திய வேளையிலே திராவிடர் இயக்கம் மட்டுமே தமிழை பாமரருக்கும் உரிமை கொண்டதாக்கியது. தமிழி…
-
- 12 replies
- 4k views
-
-
"அய்" யில் இருந்து "ஐ"க்கு! (ஐ -> அய் -> ஐ) "ஐ" என்ற எழுத்தை "அய்" என்று எழுதும் அணிமைக்காலப் பழக்கம் எப்படி வந்தது என்ற ஆய்வுக்குள் நான் நுழையவில்லை. ஆனால் அது மெல்லப் பரவியது இணையத்திலும். "ஐ" என்றே எழுதிவந்த நானும் "அய்" என்ற பழகினேன். சில ஆண்டுகள் அப்படியே எழுதினேன். "அய்" என்று புழங்கியபோது சில உரையாட்டுகளும் வாதுகளும் கூட வந்தன. "அய்" என்று எழுதுவது தவறில்லை என்பதே அறிஞர்களின் கருத்தாக இருக்கிறது. ஆயினும் அவர்கள் "அய்" என்றே எழுதவேண்டும் என்று வலியுறுத்துவதில்லை. ஆனால், "அய்" என்ற புழக்கத்தை எதிர்த்தவர்களிடம் இருந்து சரியான ஏரணம் அப்போது முன்வைக்கப் படவில்லை. வழக்கம்போல தி.க, தி.மு.க என்று போய்விட்ட அந்த எதிர்வாதுகளை…
-
- 6 replies
- 2.4k views
-