பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1543 topics in this forum
-
பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்ற கதாபாத்திரங்களின் பெயர்கள் கொண்ட கல்வெட்டுகள் - புகைப்படத் தொகுப்பு ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழுக்காக 38 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UDAYA SHANKAR எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் சரித்திர புகழ்பெற்றது. இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. இந்திய தொல்பொருள் ஆய்வு துறை சார்பில் எழுதப்பட்டுள்ள தென் இந்திய கல்வெட்டுகள் குறித்த புத்தகங்கள் மற்றும், தமிழ்நாடு தொல்லியில் துறை சார்பில் வெளியிட்டுள்ள கல்வெட்டு குறித்த புத்தகங்…
-
- 0 replies
- 1k views
- 1 follower
-
-
பிரபாகரன் என்ற பெயர் தமிழர்களின் உதடுகளில் உச்சரிக்கப்பட்டு, உள்ளங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறது. 1954 நவம்பர் 26-ல் வல்வெட்டியில் வேலுப்பிள்ளை-பார்வதிக்கு மகனாக பிறந்த பிரபா கரனுக்கு இந்த ஆண்டில் 60-வது பிறந்தநாள்... அதாவது, மணிவிழா. ஈழத்திலும் தமிழகத்திலும் உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் நவம்பர் 26-ல் பிறந்தநாள் விழாவும், மறுநாள் (நவ.27) மாவீரர் நாளும் கடைப்பிடிக்கப்பட்டன. புலம்பெயர் தமிழர்கள் வாழும் நோர்வேயில், லண்டனில், ஐரோப்பிய ஒன்றியங்களில் வீர விளையாட்டு, ஆடல், பாடல் என களைகட்டியது திருவிழா. ஈழத்தைப் பொறுத்தவரை 2009 முள்ளிவாய்க்கால் கொடூரத்திற்குப் பிறகு இன்னும் முழுமையான அமைதி திரும்பவில்லை. உரிமைகளும் கிடைக்கவில்லை. பிரபாகரன் எங்கே இருக்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
தங்கம் வாங்குவது ஒரு பாவச்செயல்’ – பசமைத் தாயகம் பிரச்சாரம் சென்னை, ஏப்ரல் 20: ‘தங்கம் வாங்குவது ஒரு பாவச்செயல்’ எனும் விழிப்புணர்வு பிரச்சாரத்தினை புசுமைத் தாயகம் அமைப்பினர் இன்று (20-04-2007) சென்னை, தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் மேற்கொண்டார். இப்பிரச்சாரத்திற்கு பசுமைத் தாயகம் துணைச் செயலாளர் ச.க.சங்கர் தலைமை வகித்தார். சசிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் போது, நுகர்வோர்கள் தங்கம் வாங்கும் முன்பு அது சுற்றுச் சூழலை பாதிக்காமல், காடுகளை அழிக்காமல், மனித உரிமைகளை நசுக்காமல் உருவானதா என கடைக்காரர்களிடம் கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள நகைக்கடைக்காரர்கள் தாங்கள் விற்கும் தங்கம் இத்தகைய தீமைகள் இல்லாமல் உருவ…
-
- 0 replies
- 750 views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016 4-ஆம் பதிவு நாள்: 16.02.2016 பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி, இவ்வாண்டின் மூன்றாவது முழு நிலவை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். ஆண்டின் முதல் நாள் ................15.12.2015 முதல் முழுநிலவு ........................25.12.2015 ................................. தோல்வி முதல் மறைநிலவு.........................09.01.2016 ................................. வெற்றி இரண்டாவது முழுநிலவு ........ 23.01.2016 ................................ தோல்வி இரண்டாவது மறைநிலவு ....... 07.02.2016 .................................. வெற்றி இவ்வாண்டின் இரண்டு முழுநிலவுகளான தை…
-
- 0 replies
- 1.2k views
-
-
உலகத் தமிழராய்ச்சி மன்றம் அமைப்பதற்கு வழிகோலியவர் தனிநாயகம் அடிகளார் அவர்களே 1913ஆம் ஆண்டு ஆவணி மாதம் இரண்டாம் திகதி யாழ்ப்பாணம் கரம்பொன் என்னுமிடத்தில் கணபதிப்பிள்ளை நாகநாதன் ஸ்ரனிஸ்லாஸ், சிசீலியா பஸ்தியாம்பிள்ளை ஆகியோருக்கு மூத்த மகனாக சேவியர் பிறந்தார். ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியிலே ஆரம்பக் கல்வியை தொடங்கினார். 1923ஆம் ஆண்டு தொடக்கம் 1930ஆம் ஆண்டு வரை தனது மேற்படிப்பை யாழ். சென்.பத்திரிசியார் கல்லூரியில் தொடர்ந்தார். இக்காலகட்டத்தில் ஆங்கில இலக்கியம், ஆங்கில மொழி, ஆங்கில கவிதைகள், ஆகியவற்றில் நாட்டம் ஏற்பட்டது. அவரின் பன்னிரெண்டாவது வயதில் அவரின் தாயார் இறந்தார். அதன் பின்னர் அவர் தான் ஒரு குருவானவராக வரவேண்டும் என எண்ணினார்.…
-
- 0 replies
- 363 views
-
-
இன்று நாம் பார்க்கப்போவது பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட தடுபடையான கேடகங்கள் பற்றியே. நான் இங்கு தமிழர்களின் கேடகங்கள் பற்றிய பல்வேறு தகவல்களை உங்களின் கனிவான வாசிப்பிற்காக தந்திருகிறேன். 1)கடகம்/ கடகு/ கேடகம்/ கேடயம்/ சேடகம்/ வட்டணை - அனைத்து விளிம்புகளும் வளைந்து தொடுமாறு வளைவாக அமைக்கப்பட்ட சிறிய வட்ட வடிவ கேடகம் "கேடகம் வெயில்வீச' - (கம்பரா. கடிமண. 33) "மயிர்ப்புளக சேடகமு மேந்தி" (சூளா. அரசி. 159) "இட்ட வட்டணங்கன் மேலெறிந்த வேல்" (கலிங்.413), (யாழ்.அக.) "கடகு" - (சீவக.2218, உரை) "கடகம்" - (திவா.) 2)கடிகை/ கடித்தகம் - மிகுந்த காவலான அரணைத் தரும் கேடகம் "கடித்தகப் பூம்படை கைவயி னடக்கிக் காவல்" (பெருங். உஞ்சை.53:14…
-
- 0 replies
- 5.3k views
- 1 follower
-
-
இராவணன் தமிழ் அரசனா?அண்மையில் சிட்னி வந்த பிரபலம் இராவணனொரு ஆரியன் என்ரு சொல்லி புத்திஜிவி தமிழர்களை ஏமாற்றுகிறார் போல் இருக்கிறது,இவரின் கருத்தால் நான் குழம்பி போய் உள்ளேன் இது பற்றி அறிய ஆவலாக உள்ளேன். "சிட்னி சினப்பு கலங்கி போய் உள்ளேன்"
-
- 0 replies
- 1.2k views
-
-
தற்காப்பு கலை | தமிழரின் தற்காப்பு கலையை பாதுகாக்கும் குமரி மாவட்ட கிராமம் | தடம் |
-
- 0 replies
- 666 views
-
-
https://app.box.com/s/0hs2bfr8m13kcq69yrkp446acaoofgc8 தொழூஉப் புகுத்தல் – 18 தாக்குபு தம்முள் பெயர்த்து ஒற்றி எவ்வாயும் வைவாய் மருப்பினால் மாறாது குத்தலின் மெய்வார் குருதிய ஏறு எல்லாம் பெய்காலைக் கொண்டல் நிரை ஒத்தன (முல்லைக்கலி 106: 11-14) பொருள்:- குருதி சொரிய வீரர்களைக் குத்தி இங்கும் அங்கும் தாவித் திரியும் காளைகள் ஒன்றையொன்றை உடலால் உரசிக் கொள்வதால் அவற்றின் உடல் எங்கும் வீரர்களின் குருதி வழிந்து காட்சியளிக்கின்றன. ஒரு காளை ஒருவனைக் குத்தித் தன் உடலில் குருதி படிய அலைந்தாலும் அது அக்குருதியைப் பல காளைகளின் உடல்கள் மீது பூசி விடுகிறது. அக்காட்சியானது, மழை பெய்யும் போது கொண்டல் வரிசை அனைத்தும் நனைந்து தோன்றுவது போலத் தெரிகிறது. கடற்பரப்பில் முதலில் கர…
-
- 0 replies
- 597 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் .க. பதவி, பிபிசி தமிழுக்காக 13 டிசம்பர் 2023 மன்னராட்சி காலகட்டத்தில் கட்டப்பட்ட, இன்று நம் கண்முன்னே காணக் கிடைக்கும் அரண்மனைகளும் கோட்டைகளும் மற்றக் கட்டுமானங்களும் சிதைந்திருக்கலாம், அழிவின் விளிம்பில் நிற்கலாம். ஆனாலும் அவை கம்பீரமானவை, காண்போரை வியக்க வைப்பவை. இவை, முன்னோர்களின் வீரத்தை, போர்த் திறனை, நிர்வாகத் திறனை, வாழ்வியலை, உணர்த்தி நிற்கும் மௌன சாட்சியங்கள். கால ஒட்டம் இந்த சின்னங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைத்து வந்தாலும், தன் கடைசி அடையாளம் இம்மண்ணில் உள்ளவரை இவைதம் பணியை நிறுத்தப் போவதில்லை. கோட்டை என்பது அக்கால அரசர்களால் பாதுகாப்பு காரணங்களுக்காக கட்ட…
-
- 0 replies
- 278 views
- 1 follower
-
-
மெல்பேண் மேடையில் எல்லோரையும் கவர்ந்த “சிலப்பதிகாரம்” ! மெல்பேண் மேடையில் எல்லோரையும் கவர்ந்த “சிலப்பதிகாரம்” ! January 4, 2025 — சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா — (அவுஸ்திரேலியாவில், விக்ரோறிய மாநிலத்தில் உள்ள பாரதிபள்ளி தயாரித்து வழங்கிய, “சிலப்பதிகாரம்” நாடக ஆற்றுகையின் அரங்கேற்ற நிகழ்ச்சிகள் கடந்த 2024 டிசெம்பர் 6 ஆம், 8ஆம் திகதிகளில் விக்டோரியாவில், டண்டினோங்க் நகரத்தில் அமைந்துள்ள, ட்றம்ப் எனப்படும் அழகிய உள்ளரங்கில்நடைபெற்றன. இந்த நாடக ஆற்றுகை பற்றிய எனது பார்வையைப் பதிவுசெய்வதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.) இள…
-
- 0 replies
- 371 views
-
-
நியூஸிலாந்து நாட்டின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மணி.! நியூஸிலாந்து நாட்டில் வெங்கேரி என்னுமிடத்திடத்தருகே கண்டெடுக்கப்பட்டு தற்சமையம் நியூஸிலாந்து தலைநகர் வெலிங்டன் அருங்காட்சியத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும் ‘கப்பல்மணி’ தமிழர்களின் கடல் கடந்த வணிபத்திற்கு சான்றாக மட்டும் இல்லாமல், நியூஸிலாந்து நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய தொன்மையானப் பொருளாகவே இது் கருதப்படுகின்றது. இங்கிலாந்திலிருந்து நியூஸிலாந்திற்கு அனுப்பப்பட்ட சமயப்பரப்புக் குழுவில் இடம் பெற்ற வில்லியம் கோல்ன்ஸோ எனும் பாதிரியாரால் கண்டுபிடிக்கப் பட்ட இந்த வெண்கல மணியின் வாய் விழிம்பில் ‘முகைதீன் வக்குசுடைய கப்பல் உடைய மணி’ என்று மணியைச் சுற்றிலும் பொறிக்கப் பட்டுள்ளது. இம்மணி…
-
- 0 replies
- 568 views
-
-
தமிழ்-தமிழர்கள் மழைப் பொழிவு பற்றிய அறிவியல் உண்மைகளை பண்டைத் தமிழர் மிக முன்பே அறிந்து கொண்டுள்ளனர். கடலில் இருந்து நீரை முகந்து மேகமானது மழையைக் கொண்டு வந்து நிலத்திற்கு தருகின்றது என்ற அறிவியல் கோட்பாடு அன்றே நிலைப்பட்டுவிட்டது. பட்டினப்பாலையில் ‘வான்முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப் பொழிந்த நீர் கடற்பரப்பவும் மாரி பெய்யும் பருவம்போல’ (பட்டின:126) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வானம் நீரை மேகமாக முகந்து மலையின் மீது பொழிகின்றது, மலையில் பொழிந்த நீர் கடலில் சென்று சேர்கிறது. இந்த நீர்ச் சுழற்சியை (hydrological cycle) இன்றைய அறிவியல் உலகம் விளக்குகிறது. இதேபோல, ‘மறந்து கடல் முகந்த கமஞ்சூழ் மாமழை பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்’ (நற்றிணை-99) என்ற பா…
-
- 0 replies
- 2.1k views
-
-
உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜுன் முதல் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. 1972 ம் ஆண்டு ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் வெவ்வேறு கருத்துக்களுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு ராமநாதபுரம் அருகே எட்டிவயலில் உள்ள நம்மாழ்வார் அரங்கில் உலகச் சுற்றுச்சூழல் தினக் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு ராமநாதபுரம் முன்னோடி விவசாயி தரணி முருகேசன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஒருங்கிணைந்த கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு கலந்து கொண்டு பேசியதாவது: கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி ஆமைகள் இனப் பெருக்கத்துக்காக 180 நாட் கள் பயணம் செய்கின்றன. ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், மத்திய தரைக்…
-
- 0 replies
- 615 views
-
-
திருவண்ணாமலை ஒரு அறிமுகம்: திருவண்ணாமலை நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். திருவண்ணாமலை நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் வருகின்றது. *சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் திருவண்ணாமலை நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அரிய முடிகின்றது. *கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் திருவண்ணாமலை குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் முக்கிய நகராக விளங்கிய திருவண்ணாமலை, கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது. *பல்லவர்கள் ஆட்சிக்க…
-
- 0 replies
- 650 views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசிய தக்கார் அவையம்-2015 நாள்: 01.09.2015 பதினோராம் பதிவு பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி இவ்வாண்டின் 8-வது மற்றும் 9-வது முழு நிலவுகள் முறையே ஒவ்வொரு நாள் முந்தி 29 நாள் முறைக்குச் சுருங்கி விட்டன. எட்டாவது நிலவு 31.07.2015 அன்றும் 9-வது நிலவு 29.08.2015 அன்றும் தோன்றின. எந்த ஐயப்பாட்டுக்கும் இடமின்றி உரிய வேளையில் நள்ளிரவைக் கடந்ததுடன் தமது ஆடுதலைப் போக்கையும் திருப்பிக் கொண்டன. 8, 9 தோல்வியுற்ற நிலையில் 7வது நிலவையும் தோல்விக் கணக்கில் வைப்பது என்ற நிலைப் பாட்டில் இப்போது முடிவு எடுக்க இயலவில்லை. இன்னும் மிச்சமுள்ள 10, 11, 12 வது நிலவுகளின் செயல்பாட்டில் இடைநாட்களைக் கணக்கிட்டு 12-வது முழு நிலவு நாளினை…
-
- 0 replies
- 965 views
-
-
[size=3][size=3][size=4][/size][/size][/size] [size=3][size=3][size=4]இந்த வார்த்தைகளைக் கேட்டாலே உலகத் தமிழர் எல்லோருக்கும் தேன்பட்ட நாவைப் போல செவிஇனிக்கும். மற்ற விழாக்கள்- தாமரை இலைத் தண்ணீர். பொங்கல் விழா தமிழர்களுக்கு உணர்வுள் ஊற்றெடுக்கும் விழா. உயர்ந்த இனத்தின் பண்பாட்டைத் தெரிவிக்கும் விழா. நாகரிகத்தின் முன்னோடி நானே என நெஞ்சுயர்த்தி வாழும் தமிழ்க் குலத்தின் தனிப்பெரும் விழா.[/size][/size] [size=3][size=4]உலகத்தின் மற்ற விழாக்கள் எல்லாம் பெரும்பாலும் – ஒரு நாட்டின் அரசன் குறித்தோ- ஒரு இனத்தின் தலைவனைக் கொண்டாடவோ அல்லது ஏதோ ஓர் மாயத் தோற்றத்தைப் போற்றவோ இப்படித்தான் அந்த விழாக்களின் பின்புலம் அமைந்திருக்கும். ஆனால் இயற்கையோடு இயைந்து இயற்கைக்கு உளப்பூர்வ நன்ற…
-
- 0 replies
- 2.8k views
-
-
-
- 0 replies
- 682 views
- 1 follower
-
-
https://www.youtube.com/watch?v=vlh5RahWM8A
-
- 0 replies
- 481 views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசிய தக்கார் அவையம் – 10-ம் பதிவு நாள்: 07.07.2015 பெருந்தச்சு நிழல் நாட்காட்டியின்படி இவ்வாண்டின் 7-வது முழு நிலவு 02.07.2015 அன்று கடந்தது. 02.07.2015 அன்று இரவு 07.00 மணிக்குத் தோன்றி நள்ளிரவில் ½ மணி நேரம் பிந்தியதுடன் விடிந்த பின்னும் ½ மணி நேரம் போகாதிருந்தது. ஆயினும் சரிவிலிருந்து மீண்ட இரண்டாவது முழு நிலவாகக் கணக்கிடுவது பொருத்தமாகலாம். ஒருவேளை 8-வது முழுநிலவின் 30-ம் நாள் மேலும் பிந்தினால் 7-வது முழு நிலவையும் சேர்த்துத் தோல்வியுற்ற நிலவாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம். கடந்த ஆண்டில் 7 முழு நிலவுகள் முறையே ஒவ்வொரு நாள் பிந்திய நிலையில் இந்த ஆண்டும் அதே நிலை நீடிப்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம். வளர்பிறையின் போக்கு: வழக்கம் போலவே இம்முறை வளர்…
-
- 0 replies
- 841 views
-
-
[size=4]ஆதித்த கரிகாலன் சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம் இராஜராஜனின் தமையனும் சுந்தர சோழரின் மகனுமாவான். ஆதித்தன் சிறுவனாய் இருந்த பொழுதே சிங்கம் யானையுடம் போரிடுவதைப் போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட செய்த கண்டராதித்தனின் முயற்சிகளைத் தகர்த்து தன்னுரிமையுடன் வாழ்ந்து வந்த வீரபாண்டியனுடன் போரிட்டதாக லெய்டன் பட்டயங்கள் புகழ்கின்றன. புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்த கரிகாலனது வீரம் வெளிப்பட்டதோடு, வீரபாண்டியன் தலைகொண்ட என்று கூறிக்கொள்ளவும் இவனுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. வீரபாண்டியன் ஆதித்தனால் கொல்லப்பட்டதாகத் திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன. குடும்ப வாழ்வில…
-
- 0 replies
- 935 views
-
-
ஒரு 20 வருடங்களுக்கு முன்னால் அநேகமாக தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு நாளும் தமிழ் தாய் வாழ்த்துடன் தான் ஆரம்பமாகும்... அதென்ன 20 வருடங்கள் - இப்பொழுது இல்லையா என்கிற கேள்விக்கு --- இப்பொழுது#அரசு பள்ளிகளில் மற்றும் ஒரு சில #தனியார் பள்ளிகளில் மட்டுமே பாட படுகின்றன என்பதருகிறேன் ... மற்ற பள்ளிகளில் "நம் பாட்டன் முப்பாட்டன் பாடிய நம்#கலாச்சாரம் #பண்பாடு போற்றும் #ஆங்கில #பாடல்கள்தான்" ! # தமிழ் தாய் வாழ்த்து # ஒரு 20 வருடங்களுக்கு முன்னால் அநேகமாக தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு நாளும் தமிழ் தாய் வாழ்த்துடன் தான் ஆரம்பமாகும்... அதென்ன 20 வருடங்கள் - இப்பொழுது இல்லையா என்கிற கேள்விக்கு --- இப்பொழுது அரசு பள்ளிகளில் மற்றும் ஒர…
-
- 0 replies
- 2.6k views
-
-
கண்கலங்க வைத்த ஜெனீவாவில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்ச்சி
-
- 0 replies
- 480 views
-
-
தமிழில் அறிவியல் இல்லை, அறிவியலுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பில்லை , தமிழ் மொழி ஒரு காட்டுமிராண்டி மொழி என்று தமிழையும் தமிழர்களையும் தமிழின எதிரிகள் இழித்தும் பழித்தும் பேசி வந்துள்ளனர். அப்படி பேசியவர்களை தலைவர்கள் என்று தமிழர்களே தலையில் தூக்கி சுமக்கவும் செய்த கொடுமை தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. தமிழின எதிரிகள் திட்டமிட்டு தமிழர்களுக்கு எந்த பண்பாடும் நாகரீகமும் அறிவும் இல்லை என்ற பொய்ப்பரப்புரை செய்து வெற்றி பெற்றுள்ளனர் என்பதை நாம் அறிதல் வேண்டும். சரி, அப்படி எத்தகைய அறிவை பண்டைய தமிழர்கள் பெற்றிருந்தனர் என்பதை நாம் ஆய்வு செய்தல் அவசியமாகும். சங்க கால தமிழர்கள் வானத்தையே தன் வீட்டின் மேற் கூரையாகக் கொண்டவர்கள். வானத்தில் நாள்தோறும் நிகழ்கின்ற வானியல்…
-
- 0 replies
- 8.5k views
-
-
- அறம்
- ஓவியக் கலைஞர்கள்
- குறித்த நாளில் முதல் மழை
- கூத்துக் கலைஞர்கள்
-
Tagged with:
- அறம்
- ஓவியக் கலைஞர்கள்
- குறித்த நாளில் முதல் மழை
- கூத்துக் கலைஞர்கள்
- சூருள்ளியாடும் மகளிர்
- செய்யுள்
- செவ்வாய்க் கிழமைகளில் முழு நிலவு
- தமிழரின் மரபு வழிப்பட்ட நாட்டுப்புற இசைக் கலைஞர்கள்
- தமிழ் இசைக் கலைஞர்கள்
- தமிழ்ப் புலமை மரபினர்
- தமிழ்ப்புத்தாண்டு
- தென்செலவு
- படிமக்கலை
- பண்மீட்பாளர்கள்
- பாவைக்கலை வல்லுநர்கள்
- பெண் கோள் ஒழுக்கம்
- பெருங்கணி
- பெருங்கணியர்
- பெருந்தச்சர்
- முரசு
- மென்பொருள் வல்லுநர்கள்
- வேல்
- அறிவியல்
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் 12-ஆம் பதிவு தமிழ்ப் புத்தாண்டு புரிதல் – முன்னோட்டம் நாள்: 17.09.2015 அழகிய இளம் பாடினி ஒருத்தியைக் களிறுகள் வழங்கும் காட்டு வழியில் இசைக் குழுவினருடனும் ஆள் உயர யாழுடனும் நடத்திச் செல்கிறான் பாணர் குழுத் தலைவன் ஒருவன். பேரூர் ஒன்றில் விழாவினை முடித்துக் கொண்டு அங்கே தங்கி ஓய்வெடுக்காமலும் விருந்துணவை ஏற்காமலும் மிகவும் பொறுப்பாக எங்கோ செல்கிறான். வழியில் இன்னொரு பாணன் எதிர்ப்படுகிறான். நல்லவேளை வழியில் என்னைச் சந்தித்தாய். நீ வேறெங்கும் சென்று விடாதே! ஈற்று ஆ விருப்பின் போற்றுபு நோக்கும் கரிகாலனைச் சென்று பார்! என்று அறிவுரை கூறுகிறான். பீடுகெழு திருவின் பெரும்பெயர் நோன்…
-
- 0 replies
- 2.3k views