வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
622 topics in this forum
-
டாலருக்கு வந்த வாழ்வு புதிய ஏற்பாடு: அமெரிக்க டாலர் பணமல்ல, செத்த பிணம். பிணத்திற்கு எப்படி எடை அதிகமோ, அப்படித்தான் டாலரின் மதிப்பும் ஊதிப் பெருகியுள்ளது. ஏனென்றால் அது இறந்து போய் 49 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் டாலருக்கு சவுதி அரேபியாதான் மறுவாழ்வு கொடுத்துள்ளது என்று சொல்லியிருந்தோமே, அது உண்மைதான். ஆனால் மறுவாழ்வு பெற்றும் அது பிணமாகத்தானே உள்ளது? அப்படியிருந்தும் எது அமெரிக்காவிற்கு உலகத்தையே அச்சுறுத்தும் அதிகாரத்தைத் தந்தது? அமெரிக்க டாலர் உலகப் பணம் என்ற தகுநிலைதான் அது உலகின் மிகப்பெரிய வல்லரசாக நீடிப்பதற்கு முதன்மைக் காரணம் இன்று வரை உலகளாவிய வர்த்தகம் பெருமளவில் அமெரிக்க டாலரில் நடப்பதுதான். இதனால் உலகப் பொருளாதாரம் தன்னை நம்பியே உள்ளது என்று…
-
- 0 replies
- 943 views
-
-
2000 ம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் கடனட்டை என்பது மிக பெரிய சவாலாக இருந்தது.இலவச கடனட்டை என்று கொடுக்க மாட்டார்கள்.வருடாவருடம் சந்தாவாக ஒருதொகை வாங்குவார்கள். எங்காவது நாங்கள் சிறு தவறு செய்துவிட்டாலும் ஒருதொகையை அபராதமாக செலுத்த வேண்டிவரும். இந்தக் கடனட்டையாலேயே மூழ்கிப் போன குடும்பங்களும் உண்டு. 2000 ம் ஆண்டுக்குப் பின்னர்(சரியான ஆண்டு நினைவில் இல்லை)இலவச கடனட்டைகள் கொடுக்கத் தொடங்கினார்கள். இதிலும் பலர் நன்மையும் தீமையும் அடைந்தார்கள். அண்மையில் திரு @நியாயம் அவர்கள் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் ஒரு தேநீர் குடிக்கக் கூட வழியில்லை என்று விசனமாக எழுதியிருந்தார்.அப்போதே இப்படி ஒரு பதிவு எழுதணும் என்று எண்ணினேன்.இப்போ தான் கொஞ்சம் கொஞ்…
-
-
- 16 replies
- 940 views
- 1 follower
-
-
இந்தியாவின் தளராத பொருளாதாரமும் தடுமாறும் ரூபாவும் இந்தியாவின் பொருளாதாரம் 2018-இன் இரண்டாம் காலாண்டில் 8.2வீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இது உலகின் பெரிய நாடுகளில் மிக அதிக அளவிலான வளர்ச்சியாகும். ஒரு நாட்டின் பொருளாதாரம் அதிக அளவில் வளர்ச்சியடையும் போது வட்டி வீதம் அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் அந்த நாட்டின் நாணயத்தின் பெறுமதி அதிகரிக்கும். ஆனால், இந்திய ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே இருக்கின்றது. மற்ற வளர்முக நாடுகளுடன் ஒப்பிடுகையில் , இந்திய ரூபாவின் வீழ்ச்சி குறைவானதாக இருந்தாலும் இந்திய ரூபாவின் வீழ்ச்சி பெரிய அரசியல் பொருளாதாரத் தாக்கத்தை இந்தியாவில் ஏற்படுத்தும…
-
- 0 replies
- 940 views
-
-
உலகலேயே, பொருளாதார நெருக்கடியில் மிக இலகுவாக சிக்கவுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கையும் விரைவில் உள்வாங்கப்படும் என சர்வதேச நிதி தர நிர்ணயப்படுத்தும் மூடி (Moody) நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் வௌியிட்ட தமது புதிய தரப்படுத்தலை அடிப்படையாக கொண்டு இந்த தகவல் வௌியாகியுள்ளது. உலகில் பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள, அபாய நிலையில் உள்ள நாடுகள் தொடர்பாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு அமைவாக கடந்த காலங்களில் இலங்கையின் அந்நிய செலாவணி இருப்பு அதிகரித்துள்ளது. இருந்த போதும் முறையான நீண்ட கால அந்நிய செலாவணி விநியோகமின்மையால் 2019 – 2023, 2024 ஆம் ஆண்டகளுக்கு இடையில் மீண்டு செலுத்தப்பட வேண்டிய கடன் தொகை அதிகரித்து…
-
- 2 replies
- 922 views
-
-
கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தைச் சீரமைக்க 2 லட்சம் கோடி டாலர் நிதியுதவி வழங்க அமெரிக்க நாடாளுமன்றமும், அதிபர் டிரம்பும் ஒப்புக்கொண்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பரவலைத் தடுக்கத் தனியார் நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்பதற்கு 2 லட்சம் கோடி டாலர் நிதியுதவி வழங்க உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி எரிக் ஊலேண்ட் தெரிவித்துள்ளார். இந்த மாபெரும் நிதியுதவித் திட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் உடனடியாக ஒப்புதலைப் பெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்படி வேலையின்மையால் தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்கச் சிறு வணிக நிறுவனங்களுக்கு 36 ஆயிரத்து 700 கோடி டாலர் …
-
- 5 replies
- 916 views
-
-
அன்னாசி வளர்ப்பு எல்லாரும் விரும்பி உண்ணக்கூடிய அன்னாசிப்பழமானது பிரேசில் நாட்டின் தென்பகுதி இடங்களைத் தாயகமாகக் கொண்டது. இது பிரமிலசே இனத்தை சேர்ந்த தாவரம் ஆகும். அன்னாசி என்ற பெயர் போர்த்துகீசிய மொழியில் இருந்து பெறப்பட்டது. தற்போது அன்னாச்சி எல்லா நாடுகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. பயிரிடும் முறை ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நடவுக்கு ஏற்ற பருவம் ஆகும். நல்ல வடிகால் வசதியுள்ள களிமண் பகுதியில் நன்கு வளரும் தன்மை கொண்டது. மண்ணின் கார அமிலத்தன்மை 5.5 முதல் 7.0 க்குள் இருக்க வேண்டும். சாகுபடிக்கு தேர்வு செய்த நிலத்தை நன்கு உழுது கட்டிகள் இல்லாமல் சமன்படுத்திக்கொள்ள வேண்டும். நாற்றுகளை இரட்டை வரிசை முறையில் நடவு செய்வதற்கு ஏற்றவாறு பார்களை அமைக்க வேண்டு…
-
- 2 replies
- 913 views
-
-
ஒரு காலத்தில் இன்ஜினீயரிங் என்பது இளைஞர்களின் கனவாகவும், அவர்களுக்கு மரியாதையையும் சம்பளத்தையும் அள்ளித்தரும் படிப்பாகவும் பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது இன்ஜினீயரிங் படித்தவர்களுக்கு சமூகத்திலும் கம்பெனிகளிலும் 'மவுசு' குறைந்திருக்கிறது. எலெக்ட்ரிக்கல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் படித்த கரூரைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர், கரூர் பேருந்துநிலையம் அருகில் உள்ள கடையில் டீ ஆத்துகிறார். பிரபல கம்பெனிகளில் பணிபுரிந்த அவருக்கு, மாதம்தோறும் 15,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைக்காமல் போக, தன் தந்தை நடத்தி வந்த, டீ மற்றும் கூல்ட்ரிங்ஸ் கடையைப் பொறுப்பேற்று திறம்பட நடத்தி வருகிறார். அவரைச் சந்தித்தோம். அட்டகாசமான ஒரு டீ கொடுத…
-
- 0 replies
- 910 views
-
-
கடந்த ஆறு மாதங்களில், பங்குச் சந்தையில், அனில் அம்பானியின் சொத்து மதிப்பு, 73 சதவீதம் அளவுக்கு குறைந்து, 970 கோடி ரூபாயாக ஆகியுள்ளது.அனில் அம்பானியின், 'ரிலையன்ஸ்' குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு, 2008ல், 4 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது, 2,361 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. அதேபோல், அனில் அம்பானியின் பங்குகளின் மதிப்பும், ஆறே மாதங்களில், 73.43 சதவீதம் அளவுக்கு சரிந்து, 970.10 கோடி ரூபாயாகியுள்ளது. கடந்த ஜூன், 11ம் தேதி, இவற்றின் மதிப்பு, 3,651 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த, 2008ம் ஆண்டு, அனில் அம்பானி உச்சத்தில் இருந்த சமயத்தில், இந்தியாவின் ஆறாவது பெரிய பணக்காரராக இருந்தார். அந்த சமயத்தில் அவரது சொத்து மதிப்பு, 2.98 லட்சம் கோடி ரூபாயாக …
-
- 0 replies
- 898 views
-
-
2019ஆம் ஆண்டு சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த நாடுகள் – இலங்கைக்கு முதலிடம் 2019 ஆம் ஆண்டு சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த நாடுகள் வரிசையில் இலங்கைக்கு முதலிடம் கிடைத்துள்ளது. Lonely Planet சஞ்சிகை வருடாந்தம் நடத்தும் தரப்படுத்தலுக்கமைய, 2019ஆம் ஆண்டு சிறந்த சுற்றுலா நாடுகளில் முதலிடம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையைத் தவிர ஜோர்தான், சிம்பாப்வே, பனாமா, தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளும் முதல் 5 இடங்களுக்குள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. குறைந்த செலவில் சுற்றுலா செல்வதற்காக சிறந்த நாடு இலங்கையென்றும் குறித்த சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் இந்த பட்டியலில் முதலாவது இடத்தில் இலங்கை, 2 ஆவது ஜேர்மனி, 3ஆவது சிம்பாப்வே, 4 ஆவது பனாமா 5 ஆவது குர்…
-
- 0 replies
- 888 views
-
-
ராபர்ட் கியோஸாகி ஒரு அமெரிக்கர். இவரின் மொத்த சொத்து 80 அமெரிக்க மில்லயன்கள். இவரின் தந்தை படிப்பில் உழைப்பில் வெற்றி பெற்றவரராக இருந்தாலும், பணத்தை முறைப்படி நிர்வகிக்க தெரியாத காரணத்தால் வறுமையில் இறந்தார். ராபர்ட் கியோஸாகியின் நண்பரின் தந்தை எவ்வாறு நீ செல்வந்தராக வரலாம் என வழி நடத்தினார். சொந்த தந்தை படி, உழை என்கிறார். நண்பரின் தந்தை எவ்வாறு உனக்காக மற்றையவர்கள் உழைக்கும் வழிகளை கூறினார். ஆங்கிலத்தில் 'பசிவ் இன்கம்', அதாவது நீங்கள் தூங்கும் பொழுதும் உங்களுக்கான வருமானம் வந்த வண்ணம் இருக்கும். சொந்த தந்தை எங்களால் அதை வாங்க முடியாது என்கிறார். நண்பரின் தந்தை எவ்வாறு அதை நாங்கள் வாங்க முடியும் என திட்டம் வகுத்தார். பொதுவாக நாங்கள் …
-
- 1 reply
- 888 views
-
-
அமேரிக்கா 2020 For married individuals filing jointly: ஒன்றாக வாழும் இருவர்களின் வருமான வரி பிரிவுகள் 10%: Up to $19,750 12%: Income between $19,750 to $80,250 22%: Income between $80,250 to $171,050 24%: Income between $171,050 to $326,600 32%: Income between $326,600 to $414,700 35%: Income between $414,700 to $622,050 37%: Income over $622,050 For unmarried individuals: தனியாக வாழும் நபர் 10%: Up to $9,875 12%: Income between $9,875 to $40,125 22%: Income between $40,125 to $85,525 24%: Income between $85,525 to $163,300 32% Income between $163,300 to…
-
- 5 replies
- 882 views
-
-
இந்தியா என்ற பன்முகங்களை கொண்ட நாட்டில் பொருளாதார வளர்ச்சி என்பது சீராக எல்லா மாநிலங்களிலும் இல்லை. சில மாநிலங்கள், குறிப்பாக தென் மாநிலங்கள் தமது சனத்தொகை வளர்ச்சியை ஓரளவிற்கு வெற்றிகரமாக கட்டுப்படுத்தியும் பலவேறு முன்னேற்றகரமான திட்டங்களையும் அறிமுகப்படுத்தி நகருகின்றது. பொருளாதார பின்தங்கிய மாநிலங்களில் இருந்து மக்களும் தென் மாநிலங்களுக்கு நகருகிறார்கள். மத்திய அரசும், பொருளாதார ரீதியில் முன்னேறிய மாநிலங்களில் இருந்து பணத்தை எடுத்து சனத்தொகையில் பெரிதாகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்களுக்கு கொடுத்து வருகின்றது. சமீபத்தில் லண்டன், அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியுள்ளார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டில் தொழில்…
-
- 5 replies
- 878 views
-
-
இலங்கையின் பொருளாதார நிலைப்பாடும் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் தேவையும் அனுதினன் சுதந்திரநாதன் / 2019 ஓகஸ்ட் 12 திங்கட்கிழமை, மு.ப. 01:4 கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி, இலங்கையில் இடம்பெற்ற அசம்பாவித நிகழ்வுகளுக்குப் பின்னர், இலங்கையின் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சி நிலையொன்று ஏற்பட்டதை, யாரும் மறுக்க முடியாது. மூன்றுக்கு மேற்பட்ட மாதங்களை நாம் கடந்துள்ள போதிலும் குறித்த நிகழ்வால் ஏற்பட்ட பொருளாதார அதிர்வுநிலையில் பெரிதாக மாற்றம் ஏற்படவில்லை. இலங்கையின் பொருளாதாரச் செயற்பாடுகள், இந்நிகழ்வுகளுக்கு முன்னதாகவே, மிகப்பெரும் நெருக்கடியிலிருந்ததுடன், அதைத் தீர்ப்பதற்கு, சுற்றுலாத்துறை, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அடிப்படையாகக் கொண்டே, நாட்டின் அபிவிருத்தி இலக்குகள்…
-
- 0 replies
- 871 views
-
-
'கிக்' எனப்படும் சேவை பொருளாதாரமும் எனது மக்களும் அமசோன் என்ற மிகப்பெரிய நிறுவனத்தின் வியாபார வடிவமைப்பு - மாற்றி யோசி . அதாவது வழமையான முறையில் இல்லாமல் புதிதாக, மலிவாக மக்களுக்கு செய் என்பதே. முன்னர் மக்கள் ஒன்றில் முழு நேர வேலை இல்லை பகுதி நேர வேலை செய்தனர். இப்பொழுது அதிகளவில் பலரும் முழு நேர வேலையுடன் பகுதிநேர வேலையையும் செய்கின்றனர். இதையே ஆங்கிலத்தில் கிக் பொருளாதாரம் (GIG ECONOMY) என்கின்றனர். இது இன்று வேகமாக வளர்ந்து வருகின்றது. இத வளர்ச்சிற்கு காரணம் தொழில்நுட்பம், ஒவ்வொருவர் கையிலும் இருக்கும் செல்லிடத்தொலைபேசி. பலரும் வீடுகளில் இருந்து வேலை செய்ய கூறியதாக உள்ளது, ஊபர் ; ஏயர் பி என் பி போன்ற பகிரும் பொருளாதார வருமானம்; முகவலை போன்ற சமூக வலை…
-
- 5 replies
- 857 views
-
-
Monday, February 3, 2020 - 3:19pm ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதான் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகிய இருவரையும் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் சிஐடி பணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளார். ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் எயார்பஸ் நிறுவனம் இடையேயான பரிவர்த்தனையில் நிதி முறைகேடுகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் குறித்த இருவரையும் சந்தேகநபர்களாக பெயரிட்டு, பிடியாணை பெற்று அவர்களை கைது செய்யுமாறு சட்ட மாஅதிபர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக, சட்ட மாஅதிபரின் இணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார். அதனைத் தொடர்ந…
-
- 1 reply
- 857 views
-
-
$100,000 டொலர்களை நெருங்கும் பிட்கொயின் பெறுமதி! உலகின் மிகவும் பிரபலமான மின்னியல் நாணயமான பிட்கொயின் (Bitcoin) பெறுமதி வியாழன் (22) அன்று 100,000 அமெரிக்க டொலர்களை நெருங்கியது. 2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நவம்பர் 5 அன்று டொனால்ட் ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து பிட்கொயின் பெறுமதி உயர்வு கண்டுள்ளது. அந்த வியாழக்கிழமை உலகின் முன்னணி மின்னியல் நாணயமான பிட்கொயின் 99,300 அமெரிக்க டொலர்களை எட்டியது. ஆசிய வர்த்தக நேரங்களின்படி, பிட்கொயின் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 4% அதிகரித்து $99,314.95 இல் வர்த்தகமானது. அதன் சந்தை மூலதனமும் $1.97 டிரில்லியனாக உயர்ந்துள்ளது. அமெரிக்க தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து …
-
- 0 replies
- 856 views
-
-
இப்பொழுது உலகம் முழுவதும் செல்லக்கூடிய மாதிரியும்; தமிழ் மொழி தெரியாதவர்கள் கூட பார்க்கக்கூடிய மாதிரியும்; எமது கதைகளை புலம்பெயர் மக்களுக்கு எடுத்து சொல்லக்கூடிய விதத்திலும்; இதன்மூலம் திரை உலகம்; தொழில்நுட்பம் பற்றிய அறிவை வளர்க்கவும் ; இவற்றை தரைவேற்றம் செய்து யூட்டிட்யூப் போன்ற தளங்களில் ஏற்றி பின்னர் புலம்பெயர் ஊடகங்கள் மற்றும் தனிநபர் ஆதரவுடன் வளரலாம். இது வருமானத்தை பெற்றுத்தருவதுடன் ஒரு பரப்புரை காரணியாகவும் வளரலாம். சில தரவுகள்: - ஐந்து நிமிடத்திற்கு உட்பட்டாத்தாக இருப்பது நன்று - மொழி இல்லாத படங்களை உருவாக்கலாம் - மொழி சார்ந்து உருவாக்கப்படும் பொழுது கீழே ஆங்கிலத்தை அல்லது வேற்று மொழிபெயர்ப்பை இணைக்கலாம் கீழே ஒரு …
-
- 1 reply
- 855 views
-
-
@மெசொபொத்தேமியா சுமேரியர் @வல்வை சகாறா அக்காமார்! புத்தங்கள் வெளியிட்ட அனுபவம் உள்ள நீங்கள் அதிலுள்ள அனுபவங்களை பகிர முடியுமா? நான் எழுதுவதை பற்றி கேட்கவில்லை. Publishing குறித்தே கேட்கிறேன். எனது உறவினர் இந்தியா, இலங்கை என்று quotation எடுத்து, £600 முதல் £800 வரை செலவு செய்து 400 புத்தங்களை அடிப்பித்து எடுத்திருக்கிறார். இன்னொருவர், சென்னையில் நிறுவனம் ஒன்றுக்கு £500 கொடுத்து அமேசனில் KDP யில் ஏத்துவித்திருக்கிறார். இந்த சனியன்று, கனடாவில் இருந்து ஒரு தமிழறிஞர் இலண்டண் வந்து தனது 4 புத்தகங்களை வெளியிட்டிருந்தார். அவரும், புத்தகங்களை அச்சிட்டே கொண்டு வந்திருந்தார். ரொராண்டோவில் வெளியிட்டு இங்கு வந்திருந்தார். இவருக்கு பயணச் செலவே …
-
- 12 replies
- 845 views
-
-
உலகின் மிகப்பெரிய வங்கிகள் மூலம் 150 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடான பணிப்பரிவர்த்தனை நிகழ்ந்துள்ளதை வெளிப்படுத்தும் ஆவணங்கள் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க அரசின் அதிகாரிகளுக்கு சர்வதேச அளவில் செயல்படும் மிகப்பெரிய வங்கிகள் 2000வது ஆண்டில் இருந்து 2017வது ஆண்டு வரை அனுப்பிய ஆவணங்களில் 2500க்கும் மேற்பட்ட ஆவணங்கள் கசிந்துள்ளன. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் இரண்டு லட்சம் கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்பில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள உலகின் மிகப்பெரிய வங்கிகள் மூலம் எவ்வாறு நிகழ்ந்து ள்ளன என்பதை தற்போது கசிந்துள்ள ஆவணங்கள் காட்டுகின்றன. 2,000 கோடி அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு சுமார் 150 லட்சம் கோடி ரூபாய். அதா…
-
- 0 replies
- 845 views
-
-
பொருளியல் நிபுணர் கூறுவது இந்தியா சார்ந்து இருந்தாலும், அடிப்படை பொருளியல் தத்துவங்கள் தங்கள் தங்கள் நாடுகளிலும் பொருந்துவனவாக இருக்கும். குறிப்பு : பொதுவாக கிழமைக்கு சராசரியாக 40 மணித்தியாலங்கள் வேலை செய்யும் நாங்கள் முதலீடுகள் பற்றி 4 நிமிடங்கள் கூட சிந்திப்பதில்லை 😞 உழைக்காத வருமானம்; வாகன காப்புறுதி;
-
- 2 replies
- 844 views
-
-
’’வாகன இறக்குமதித் தடை ஏற்றுக் கொள்ள முடியாது’’ -இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் வாகன இறக்குமதி தொடர்பில், விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, ஏனையஇறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில், அரசாங்கம் கவனம்செலுத்த வேண்டுமென, இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது. ''பற்றுச்சான்றுகள் மீது, உயர் எல்லைப் பெறுமதிகளை நிர்ணயித்தல் போன்ற,சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அமல்படுத்தப்பட்ட மாற்றுவழிமுறைகளை, அரசாங்கம் பின்பற்றலாம். மாறாக, வாகன இறக்குமதியை முற்றாகத்தடை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தை, எம்…
-
- 0 replies
- 839 views
-
-
கம்பன் விழாவில் எஸ் .பி. என்னை இலங்கைக்கு அறிமுகப்படுத்திய சிரேஷ்ட அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் மற்றும் ராமதாஸ் ஆகியோர் எனது நன்றிக்குரியவர்கள். ராமதாஸ் இப்போது எம்மத்தியில் இல்லை. அப்துல் ஹமீட் அவையில் அமர்ந்திருக்கின்றார். இந்த நிகழ்வுக்கு வருவதாகக் கூறியிருந்தார். அதேபோன்று வந்திருக்கின்றார். அவரை நான் மிகவும் நேசிக்கின்றேன். அவரது தமிழ் இனிமையானது. அவரிடமிருந்து நான் இனிய தமிழைக் கற்றுக்கொண்டுள்ளேன். நான் பாடிய பல மேடைகளில் என் பாடல்களை இரசித்துள்ளார் அவர். வி. ரி. வி. தெய்வநாயகம்பிள்ளை அறக்கட்டளை மூலம் கம்பன் கழகம் கம்பன் விருது வழங்கி என்னை கௌரவித்து வாழ்த்துகிறது. இலங்கையில் கிடைக்கும் இது போன்ற …
-
- 1 reply
- 834 views
-
-
எந்த வேலையும் செய்யலாம், அவமானம் இல்லை- என்ஜினீயரிங் பட்டதாரியின் வியாபாரம் என்ன தெரியுமா? கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சுந்தர் (வயது 28). 2011-ம் ஆண்டு பி.டெக். என்ஜினீயரிங்கில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் படிப்பை முடித்தார் பட்டதாரியான அவர் வேலை தேடி பல நிறுவனங்களுக்கு நடையாய் நடந்தார். வழக்கம் போல சொந்த ஊரில் வேலை கிடைக்காததால் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.அங்கு ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் முதலில் ரூ.8 ஆயிரம் மாத சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் அதில் ஜெய்சுந்தரால் நீடிக்க முடியவில்லை. பிறகு கோவை சென்று ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றினார்.ஆனாலும் குறைந்த சம்பளமே கிடைத்ததால் சுவற்றில் அடித்த …
-
- 4 replies
- 830 views
-
-
நிதி முறைகேடு வழக்கில் சிக்கி, ஜப்பானில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிஸான் கார் நிறுவன முன்னாள் தலைவர் கார்லோஸ் கோஷன்,(Carlos Ghosn) லெபனானுக்கு தப்பிச் சென்று விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. நிஸான் மோட்டார் மற்றும் ரெனால்ட் கார் நிறுவனத்தின் தலைவராக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர் கார்லோஸ் கோஷன். நிஸான் பங்குதாரர்களிடம் தவறான தகவல் அளித்து அவர் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்தார் என்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அவரை ஜாமினில் விடுவித்த ஜப்பான் நீதிமன்றம், கடந்த ஏப்ரல் மாதம் முதல் அவரை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டது. இந்த வழக்கில் அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் துருக்கி வழியாக லெபனான் தலைநகர் பெய்ர…
-
- 3 replies
- 818 views
-
-
ஆபரணம் விற்பது என்பது சாதாரணத் தொழில்முறை என்றால், ஆபரணம் விற்பதில் இருக்கும் பிரச்னையைத் தீர்ப்பதே திவ்யா தேர்ந்தெடுத்த ஸ்டார்ட்அப் தொழில்முறை. சர் வில்லியம் கோல்டிங் இப்படி குறிப் பிட்டிருக்கிறார்... 'பெண்கள் தங்களை ஆணுக்கு நிகரானவர்கள் என்று தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால் அவர்கள் ஆண்களை விட மேலானவர்கள்!' உண்மைதான்... இன்று பெண்கள் யாருடைய உதவியும் இல்லாமலேயே, சமூகத்தோடு போராடி எட்டிக்கொண்டிருக்கிற உச்சங்கள் அதை நிரூபிக்கும்படியே இருக்கின்றன. அப்படி உலக அளவில் பெண்கள் வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டிருக்கும் இன்னொரு துறை ஸ்டார்ட்அப்! ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் என்பவர் யார்? ஸ்டார்ட்அப் தொழில்முனைவ…
-
- 0 replies
- 818 views
-