சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
515 topics in this forum
-
பருவநிலை மாற்றம்: 2020இல் உலகம் சந்தித்த பேரிழப்புகள் மாட் மெக்ராத் சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி 29 டிசம்பர் 2020 பட மூலாதாரம், BABU கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஒருபுறமிருக்க, தீவிர வானிலை சார்ந்த பாதிப்புகளின் காரணமாக 2020ஆம் ஆண்டில் பேரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கிறிஸ்டியன் எய்டு என்ற தொண்டு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டுள்ளதாக கருதப்படும் இந்த ஆண்டின் 10 பேரிழப்புகளை பட்டியலிட்டுள்ள அந்த அமைப்பு, இதன் காரணமாக கோடிக்கணக்கான பணம் மட்டுமின்றி, பல்லாயிரக்கணக்கான உயிர்களும் பறிபோயுள்ளதாக தெரிவித்…
-
- 0 replies
- 436 views
-
-
பனிப்பாறை உடைவதால் உயிரினங்களைத் தொடரும் ஆபத்து - எங்கு, எப்படி நடக்கிறது? ஜோனாத்தன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 24 டிசம்பர் 2020 பட மூலாதாரம், COPERNICUS DATA 2020 / A.LUCKMAN படக்குறிப்பு, விரல் வடிவில் தோற்றமளிக்கும் பனிப்பாறை பிளவு தெற்கு அட்லான்டிக் பெருங்கடலில் மிதந்து பயணித்துக் கொண்டிருக்கும் A68a என்கிற பிரம்மாண்ட பனிப்பாறையில், சில பெரிய விரிசல்கள் ஏற்பட்டு உடைந்திருப்பதாகத் தோன்றுகிறது. நேற்று (டிசம்பர் 22, செவ்வாய்க்கிழமை) வெளியான செயற்கைக் கோள் படத்தில், A68a என்கிற பிரம்மாண்ட பனிப்பாறையின் மீது பெரிய பிளவுகள் …
-
- 0 replies
- 388 views
-
-
நாம் கடவுளர்க்குக் தூபம் காட்டும்போது இடும் சாம்பிராணியும்[Frankincense ] மரத்தில் இருந்து வடிந்து காய்ந்த பாற்கட்டியே. ஐயாயிர வருடங்களுக்கு மேலாகச் சாம்பிராணியை மனிதர் பயன்படுத்துகின்றனர். சிலர் குங்கிலியமும் சாம்பிராணியும் ஒன்று என்று கருதுகின்றனர். வெவ்வேறு விதமான மரங்களில் இருந்தே இரண்டும் கிடைக்கின்றன. இவற்றிலிருந்து வெவ்வேறு அமிலங்கள் கிடைக்கின்றறன. குங்கிலியத்தில் Stearic acid [C18H36O2] இருக்கிறது. சாம்பிராணியில் Boswellic acid [C30H48O3]இருக்கிறது. அவை பலவைகையான நோய்களை நீக்கின்றன. நம் முன்னோர் பெண்களின் கர்ப்பப்பைக் கட்டிகளையும் கர்ப்பப்பையில் ஏற்படும் புற்றுநோயையும் சாம்பிராணி நீக்குமென்பதை அறிந்திருந்தனர் என்பதற்கு நமது மருத்துவ வாகடங்களே சான்றாகும…
-
- 7 replies
- 2.3k views
-
-
மு. ஹரிஹரன் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DR TOLSTOY உயிரிழந்த உயிரினங்களை இரையாக உட்கொண்டு உயிர் வாழும் பிணந்தின்னிக் கழுகுகள் எனப்படும் பாறு கழுகுகளின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்துவருகிறது. 1990களில் தென்னிந்தியாவில் பரவலாக காணப்பட்ட பாறு கழுகுகள் தற்போது, தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திலும், கேரளாவின் வயநாட்டிலும், வடக்கு கர்நாடகாவின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. இறந்த உடல்களில் இருக்கும் நோய் பரப்பும் நுண்ணுயிர்களை உணவாக உட்கொண்டு நோய் பரவலை தடுக்கும் ஆற்றல்மிக்க பாறு கழுகுகளின் இறப்பு உடனடியாக மனிதர்களை பாதிக்காவிட்டாலும், எதிர…
-
- 0 replies
- 504 views
-
-
இயற்கை மீதான மனிதனின் போரை முடிவுக்குக் கொண்டுவர ஐ.நா. அழைப்பு.! இயற்கை மீது மனிதகுலம் நடத்திவரும் போரை முடிவுக்குக் கொ்டுவருமாறு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்தள்ளது. இயற்கை மீதான மனித குலத்தின் தாக்குதல் தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் தற்கொலைத் தாக்குதலுக்கு ஈடானது எனவும் ஐ.நா. எச்சரித்துள்ளது. நியயோர்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று பங்கேற்றுப் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குடரெஸ் இவ்வாறு தெரிவித்தார். இயற்கை மீதான மனிதர்களின் தாக்குதல்களால் இயற்கைச் சமநிலை சீர்குலைந்துள்ளது. இந்நிலையில் இயற்கையைப் பேணி சமநிலையைச் சீர் செய்ய வேண்டும். அமெரிக்காவின் தலைமை இல்லாமல் காலநிலை அவசரநிலைக்கு தீர்வு காண வ…
-
- 0 replies
- 356 views
-
-
டிம் ஸ்மெட்லி பிபிசி ஃபியூச்சர் 24 நவம்பர் 2020 பட மூலாதாரம்,GETTY IMAGES 2012ஆம் ஆண்டில் சூ நட்டாலி, சைபீரியாவின் டுவன்னவ் யர் பகுதிக்கு முதல்முறையாகச் சென்றார். பருவநிலை மாற்றத்தால் உறைபனி உருகுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் மாணவியாக அவர் சென்றார். அந்த இடத்தின் புகைப்படங்களைப் பல முறை அவர் பார்த்திருக்கிறார். டுவன்னவ் யர் பகுதியில் வேகமாக பனி உருகும் காரணத்தால், பெரிய அளவில் நிலச் சரிவுகள் ஏற்பட்டன. சைபீரியாவில் மரங்கள் இல்லாத பகுதிகளில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டன. ஆனால் நேரடியாக சென்று பார்ப்பதற்கு உந்துதலை ஏற்படுத்தவில்லை. ``அது வியப்புக்குரிய…
-
- 1 reply
- 1.1k views
-
-
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள புயல், சென்னைக்கு கிழக்கே 420 கி.மீ மற்றும் புதுச்சேரிக்கு அருகே 380 கி.மீ தூரத்தில் நகர்ந்து வருகிறது. அதி தீவிர புயலாக உருப்பெறும் இந்த புயலுக்கு நிவர் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டிருக்கிறார்கள். இந்த புயலுக்கு நிவர் என பெயரிட்டிக்கும் நாடு இரான். இந்த ஆண்டு மேற்கு வங்கத்தையும் வங்க தேசத்தையும் கடுமையாக பாதித்த புயலுக்கு உம்பான் என பெயரிடப்பட்டது. அந்த புயலுக்கு பெயர் வைத்தது தாய்லாந்து. இதேபோல, கடந்த ஜூன் மாதம் மகாராஷ்டிராவில் கரையை கடந்த புயலுக்கு நிஷாக்ரா என பெயரிடப்பட்டது. அந்த புயலுக்கு பெயரிட்டது வங்கதேசம். இரு தினங்களுக்கு முன்பு சோமாலியாவில் கரையை கடந்த கதி (GATI) புயலுக்கு அந்த பெயரை பரிந்து…
-
- 0 replies
- 546 views
-
-
2000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன இருவரின் சடலங்கள் கண்டுபிடிப்பு.! ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வெசுவியஸ் எரிமலை வெடித்த போது தப்பிக்க முயன்ற இருவரின் எலும்புக்கூடுகள் பாம்பீயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் தொல்பொருள் பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கி.பி 79 இல் எரிமலை வெடிப்பால் அழிக்கப்பட்ட பண்டைய ரோமானிய நகரமான பாம்பீயில் எரிமலை இடிபாடுகளை அகழ்வாராய்ச்சி செய்யும் போது இருவரின் மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகளின் பகுதிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. வெசுவியஸ் எரிமலை மலையிலிருந்து ஆரம்பத்தில் சாம்பல் விழுந்ததில் இருந்து இந்த இரு ஆண்கள் தப்பித்திருக்கலாம், பின்னர் மறுநாள் காலை நடந்த ஒரு சக்தி வாய்ந்த எரிமலை வெடிப்பில் இவர்கள் ப…
-
- 0 replies
- 408 views
-
-
இந்தோனேசியாவில் பிளாஸ்டிக் போத்தல்களில் அடைத்து கடத்தப்பட்ட கிளிகள் இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியான பப்புவாவில், கடற்கரையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் பிளாஸ்டிக் போத்தல்களில் அடைக்கப்பட்ட கிளிகளை அந்நாட்டு பொலிஸார் மீட்டுள்ளனர். கடற்கரையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்து ஒரு பெரும் பெட்டியில் சத்தம் வந்ததையடுத்து சென்று பார்த்ததில் உயிருடன் 64 கிளிகளும், 10 இறந்த கிளிகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துறைமுக நகரான பக்பக்கில் வியாழக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்ட இந்த கிளிகள் எங்கே கொண்டு செல்லப்பட இருந்தன என்பது தெளிவாக தெரியவில்லை என உள்ளூர் பொலிஸ் ஊடக பேச்சாளர் டொடிக் ஜுனைதி ஏ.எப்.பி செய்தி முகாமையிடம் தெரிவித்துள்ளார். "அசாதார…
-
- 0 replies
- 343 views
-
-
ஜோ பைடன்: பருவநிலை மாற்றத்தை சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறார்? மேட் மெக்ராத் பிபிசி சுற்றுச்சூழல் செய்தியாளர் பட மூலாதாரம், GETTY IMAGES பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக ஜோ பைடன் முன்னிறுத்தும் திட்டம், இதுவரை அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட எல்லாருடைய திட்டங்களையும் விட அதீத லட்சியவாதத்தோடு இருப்பதாக வர்ணிக்கப்படுகிறது. பிபிசி சுற்றுச்சூழல் செய்தியாளர் மேட் மெக்ராத் இதை விரிவாக அலசுகிறார். மீண்டும் இணைவோம் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம், பூமியின் வெப்பநிலை அளவுக்கு அதிகமாக அதிகரித்துவிடாமல் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. மீண்டும் அம…
-
- 0 replies
- 335 views
-
-
பரிஸ் பருவநிலை ஒப்பந்தம் – அதிகாரப்பூர்வமாக விலகியது அமெரிக்கா! பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா அதிகாரப்பூா்வமாக விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச நாடுகள் பரிஸ் நகரில் மேற்கொண்ட பருவநிலை மாற்றத்திலிருந்து விலகும் முடிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடநத 2017-ஆம் ஆண்டு அறிவித்தார். அந்த ஒப்பந்தத்திலிருந்து விலக நினைக்கும் நாடுகள், அதற்காக 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று அதில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவின் காத்திருப்பு காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா அதிகாரப்பூா்வமாக விலகியுள்ளது என்று தகவல்கள் …
-
- 0 replies
- 505 views
-
-
http://maridhasanswers.com/wp-content/uploads/2018/12/f-indonesia-forests-a-20160405-870x582.jpg விவசாயம் வேறு – இயற்கை என்பது வேறு விவசாயம் வேறு – இயற்கை என்பது வேறு. இரண்டையும் குழப்பும் சமூகத்திற்கு என் இந்தப் பதிவு சமர்ப்பணம்: விவசாயம் – விவசாயி என்றால் கண்ணை மூடிக்கொண்டு நம்பும் மாணவர்கள் இளையவர்கள் கவனத்திற்காக இந்தப் பதிவை வெளியிடுகிறேன். தவிர நான் விவசாயத்திற்கு எதிரானவனோ விவசாயிகளுக்கு எதிரானவனோ அல்ல. ஆனால், நிலத்தடி நீரைப் பாதுகாக்க, கண்மூடித்தனமாக பயன்படுத்துவதை முறைப்படுத்த விரிவான திட்டத்துடன் நரேந்திர மோடி அவர்கள் மேற்கொள்ள இருக்கும் முயற்சியை எடுத்த எடுப்பில் தவறாக மக்களிடம் பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டனர் அற்பன் நக்ஸல்வாதிகள், ப…
-
- 0 replies
- 515 views
-
-
நீரஜ் பிரியதர்ஷி பிபிசி இந்திக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், NEERAJ PRIYADARSHI / BBC படக்குறிப்பு, தனிஆளாக மண்வெட்டியால் வெட்டி, மூன்று கிலோமீட்டர் நீளமும், 5 அடி அகலமும், மூன்று அடி ஆழமும் கொண்ட ஒரு கால்வாயை லோங்கி உருவாக்கினார். பிஹாரின் தலைநகரான பாட்னாவில் இருந்து சுமார் 200 கி.மீ தூரத்தில் உள்ள கயா மாவட்டத்தின் பங்கேபஜார் வட்டார மக்களின் முக்கிய தொழில் விவசாயம், ஆனால் இங்குள்ள மக்களால் நெல் மற்றும் கோதுமையை பயிரிட முடியவில்லை, ஏனெனில் நீர்ப்பாசன வசதி இல்லை. இதன் காரணமாக இங்குள்ள இளைஞர்கள் வேலை தேடி வேறு நகரங்கள…
-
- 4 replies
- 944 views
-
-
உலகிலேயே அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றும் நாடு எது தெரியுமா? November 1, 2020 உலகிலேயே அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முன்னணியில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக சயின்ஸ் அட்வான்ஸஸ் (science advance) இதழில் வெளியிடப்பட்ட அறிக்கையில், உலக மக்கள்தொகையில் 4 % பேர் உள்ள அமெரிக்காவில் 17 % பிளாஸ்டிக் கழிவுகள் வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 217 நாடுகளில் வெளியான பிளாஸ்டிக் கழிவு குறித்த தரவுகளின் அடிப்படையில் அமெரிக்காவில் தனிநபர் ஆண்டு ஒன்றுக்கு 105 கிலோகிராம் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/85122
-
- 0 replies
- 353 views
-
-
https://youtu.be/-yHj2DtiaUA
-
- 4 replies
- 648 views
-
-
விஞ்ஞானத் திரித்தல் – தார் மண்ணிலிருந்து பெட்ரோல் கனடாவின் மிகப் பெரிய தொழில் எது? கோதுமை, கனோலா எண்ணெய் ஏற்றுமதி மரங்கள் மற்றும் காட்டுப் பொருட்கள் (forestry products) கனிமப் பொருளகள் (minerals) மாட்டிறைச்சி (beef) திராட்சை மது (wine) எஃகு (steel) இதில் எதுவுமே கனடாவின் மிகப் பெரிய தொழில் அன்று. இவை யாவும் பெரிய தொழில்கள்தான். ஆனால், கனடாவின் மிகப் பெரிய தொழில், வட ஆல்பர்டாவில் காடுகளை அழித்துத் தார் மண்ணிலிருந்து கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்வது. கனடா, உலகின் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் நான்காம் இடம் வகிக்கிறது. வளைகுடா நாடுகளைப்போல, எண்ணெய்யை நம்பியே காலம் தள்ளும் நாடு இல்லை கனடா. ஆனால், அதன் பொருளாதாரத்தி…
-
- 0 replies
- 432 views
-
-
சிறீலங்கா கடற்கரையில் இறந்து கரையொதுங்கும் கடல் உயிரினங்கள் 3 Views சிறீலங்காவின் தெற்கு மற்றும் கிழக்கு கடற்பகுதியில் அரிய வகை கடல் உயிரினங்கள் இறந்து கரையொதுங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்னிலங்கையின் கொழும்பு காலிமுகத்திடல், வெள்ளவத்தை, தெகிவளை மற்றும் மவுன்லவேனியா கடற்கரை பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட அரியவகை கடல் ஆமைகள் இறந்து கரையொதுங்கியுள்ளன. அதே சமயம் கிழக்கு மாகாணத்தின் அறுகம்குடா கடற் பகுதியில் 1.3 மீற்றர் நீளமான சிறிய வகை திமிங்கலங்கள் நான்கு இறந்து கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அனர்த்தத்துக்குரிய காரணங்கள் தெரியாத போதும் அண்மையில் கிழக்கு கடற்பகுதியில் எண்ணெய் கப்பலில் …
-
- 0 replies
- 411 views
-
-
அதிகரிக்கும் கார்பன் உமிழ்வு காலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்.! ஒக்ஸ்பாம் மற்றும் ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், பணக்கார நாடுகளால் அதிகரித்த கார்பன் உமிழ்வு உலகத்தை காலநிலை பேரழிவின் விளிம்பிற்கு கொண்டு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் உலகின் பணக்கார நாடுகளால் வளிமண்டலத்தில் வெளியிடப்பட்ட கார்பன் உமிழ்வு 60% அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் தீர்க்க முடியாத சிக்கலாக உருமாறி வருகிறது. நாளுக்குநாள் வளிமண்டலத்தில் வெளியிடப்படும் அதிகப்படியான கார்பன் வாயுவின் அளவு பூதாகரமாக உயர்ந்துள்ளது. உலகில் கடந்த 1990 முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வளிமண்டலத்தில் கார்பன் வாயுவின…
-
- 0 replies
- 443 views
-
-
டிரிஸ்டன் டா குன்ஹா: 245 பேர் வாழும் தனிமை தீவு - வித்தியாசமாக பொழுதை கழிக்கும் மக்கள் 1 அக்டோபர் 2020 பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டிரிஸ்டன் டா குன்ஹா என்ற இடம் அட்லான்டிக் கடலுக்கு நடுவே, ஒரு எரிமலை இருப்பதை போல் இருக்கும். ``நான் வேறு எங்கும் வாழ மாட்டேன்'' என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பிபிசியிடம் ஹரோல்டு கிரீன் கூறினார். ஆனால் டிரிஸ்டன் டா குன்ஹா அல்லது உள்ளூர் மக்களுக்கு டி.டி.சி. - பயந்த சுபாவம் கொண்டவர்களுக்கான பகுதி கிடையாது. அது வழக்கத்திற்கு மாறானது என்று கூறுவது, குறைத்து மதிப்பிடுவதாக ஆகிவிடும். உல…
-
- 0 replies
- 567 views
-
-
காலநிலை மாற்றம் - 2050 ஜனகன் முத்துக்குமார் ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் இலண்டனைத் தளமாகக் கொண்ட பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம், நாடுகளையும் பிராந்தியங்களையும் அச்சுறுத்தக்கூடியதும் உலகளவில் சமூக-பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதிக்கக்கூடிய சுற்றுச்சூழல் ஆபத்துகள் பற்றிய ஒரு ஆழமான பார்வையுடன் ஒரு அறிக்கையை கடந் தவாரம் வெளியிட்டிருந்தது. அவ் அறிக்கையின்படி, 2050 ஆம் ஆண்டில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடும். இது காலநிலை மாற்றங்கள், “சூறாவளி, வெள்ளம், நீர் பற்றாக்குறை மற்றும் உணவு” ஆகியவற்றின் விளைவாக இருப்பதுடன் இதன் காரணமாக பல குடியிருப்பு பகுதிகள் இனி வாழக்கூடியதான நிலையில் இருக்காது என்றும் கருத்து தெரிவித்திர…
-
- 0 replies
- 575 views
-
-
சர்ச்சைக்குரிய கொள்கலன்களை மீண்டும் பிரித்தானியாவுக்கு அனுப்பிய இலங்கை சர்ச்சைக்குரிய வெளிநாட்டுக் கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை மீண்டும் இங்கிலாந்திற்கே அனுப்பப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அது தொடர்பில் கருத்து தெரிவித்த சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன, சட்ட மா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமையவே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார். 2017ம் ஆண்டு பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு ஒரு தொகை கொள்கலன்களில் கழிவுகள் கொண்டுவரப்பட்டிருந்தன. மொத்தம் 21 கொள்கலன்கள் சனிக்கிழமையன்று இலங்கையிலிருந்து அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றன. இதேவேளை கடந்த ஜனவரி மாதம், சட்டவிரோதமா…
-
- 1 reply
- 479 views
-
-
செப்டெம்பர் 2020 பட மூலாதாரம், ROV SUBASTIAN/SCHMIDT OCEAN INSTITUTE ஆஸ்திரேலியாவில் கிரேட் பேரியர் ரீஃப் என்ற கடலடிப் பவளப்பாறை அமைந்த வடக்குக் கடல் பகுதியில், இதுவரை கண்டிராத "நடக்கும்" மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொதுவாக மத்திய பசிஃபிக் பகுதியில் காணப்படும் இந்த வகை மீன், ரினோபியஸ் அக்ரிலோபா எனப்படும் தேள் மீன் வகையை சேர்ந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வழக்கத்துக்கு மாறான இருப்பிடம் அல்லாத பிற கடல்பகுதியில் இந்த வகை மீன் காணப்படுவது இதுவே முதல்முறையாகும். அதன் மார்புப்பகுதியோடு ஒட்டி இருக்கும் துடுப்புகளால் கடலுக்கு அடியில் உள்ள தரையில…
-
- 1 reply
- 669 views
-
-
மேற்காசிய - கிழக்கு ஐரோப்பிய எல்லையில் உள்ள காகஸஸ் மலைத்தொடர்ப் பகுதியான ட்ரான்ஸ் காகேசியாவில் உள்ள நக்சிவன் (NAKHCHIVAN) என்ற இடம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இது அஜர்பைஜானில் உள்ள தன்னாட்சிக் குடியரசுப் பகுதியாகும். ஆர்மீனியா, இரான் மற்றும் துருக்கியால் சூழப்பட்டுள்ள இது, முன்னாள் சோவியத் யூனியனின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். இங்கு, சுற்றுலாப் பயணிகளின் வருகை மிக அரிதாகவே உள்ளது. 80-130 கி.மீ அகலமுள்ள ஆர்மீனியாவின் ஒரு பகுதி அஜர்பைஜானைச் சேர்ந்த நக்சிவனை அதனிடமிருந்து பிரிக்கிறது. முழுவதும் பிற நாடுகளால் சூழப்பட்ட உலகின் மிகப் பெரிய எக்ஸ்க்லேவ் (ஒரு நாட்டின் ஒரு நிலப்பகுதி, முற்றிலும் அதனிடமிருந்து பிரிந்திருப்பது) இதுவ…
-
- 1 reply
- 852 views
-
-
மனிதர்களால் பேரழிவை எதிர்கொள்ளும் வன உயிரினங்கள் – எச்சரிக்கும் ஆய்வாளர்கள் ஹெலன் பிரிக்ஸ் பிபிசி சுற்றுச்சூழல் செய்தியாளர் பட மூலாதாரம், GETTY IMAGES வன உயிர்களின் எண்ணிக்கை 50 வருடங்களுக்கும் குறைவான காலத்தில் மூன்றில் இரண்டு பங்காக குறைந்துள்ளது என உலக வன உயிர் நிதியத்தின் முக்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேரழிவு குறைவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை எனவும் அந்த அறிக்கை கூறுகிறது. மேலும் இதுவரை பார்த்திராத வகையில், மனிதர்களால் இயற்கை அழிக்கப்படுகிறது என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது. “நாம் காடுகளை எரி…
-
- 0 replies
- 356 views
-
-
“சீமை கருவேல” மரங்களை அழிக்க அதிகாரமளிக்கப்பட்ட உப குழு அமைக்க தீர்மானம்..! யாழ்.மாவட்டத்தில் சிறப்பு வேலைத்திட்டம் விரைவில்.. யாழ்.நகரின் கரையோர பகுதிகள் மற்றும் தீவக பகுதிகளில் மிக அதிகளவில் சீமை கருவேல மரங்களினால் நிலத்தடி நீர் அருகும் ஆபத்தை தவிர்ப்பதற்காக குறித்த மரங்களை அழிப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு முன்னாயத்த கூட்டம் இன்று யாழ்.மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது மேற்படி விடயம் கருத்தில் எடுக்கப்பட்டு சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குறித்த இத்தாவரம் யாழ் பிரதேசங்களில் அதிகம் வளர்ந்து வரும் நிலையில் எதிர்கால…
-
- 0 replies
- 405 views
-