சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
515 topics in this forum
-
பட மூலாதாரம்,KANYIRNINPA JUKURRPA MARTU RANGERS கட்டுரை தகவல் எழுதியவர், டிஃபனி டர்ன்புல் பதவி, பிபிசி செய்திகள், சிட்னி 11 ஏப்ரல் 2024 உலகிலேயே மிக அரிதான விலங்குகளில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு சிறிய அகழெலி (mole) ஆஸ்திரேலியாவின் மக்கள் புழக்கமில்லாத பாலைவனப் பகுதியில் காணப்பட்டு, புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. நார்தர்ன் மார்சுபியல் மோல் (northern marsupial mole) என்றும், ‘ககராடுல்’ என்றும் அழைக்கப்படும் இந்தச் சிறிய விலங்கு ஆஸ்திரேலியாவில் செல்வதற்கே கடினமான, தொலைதூரப் பகுதியில் வசிக்கிறது. இந்த விலங்கு மனிதர்களின் கையளவே இருக்கிறது. இதற்கு கண்களே கிடையாது. இதன் உடல் முழுதும் தங்கநிற ரோமம் …
-
-
- 2 replies
- 274 views
- 1 follower
-
-
புவி வெப்பமயமாதல்: அதிகம் மரம் நடுவதே பூமிக்கு ஆபத்து என்று கூறும் ஓர் ஆய்வு மேட் மெக்கிராத் சுற்றுச்சூழல் செய்தியாளர் CRISTIAN ECHEVERRÍA சமீபத்தில் நடந்த இரண்டு ஆய்வுகளின் முடிவில், அதிக அளவில் மரம் நடுவது, பூமிக்கு நன்மையைவிட தீங்கே விளைவிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மரம் நடுவதற்காக கொடுக்கப்படும் நிதிச்சலுகைகளால் ஏற்படும் எதிர்வினை, பூமியின் பல்லுயிர் சூழலை குறைக்கும் என்றும், இவ்வாறு மரம் நடுவதால், கரியமில வாயு வெளியேற்றத்தை சமாளிப்பதில் மிகக்குறைந்த தாக்கமே இருக்கும் என்றும் ஒரு ஆய்வு கூறுகிறது. புதியதாக நடப்பட்டு வரும் காடுகள், எவ்வளவு கரியமில வாயுவை உள்ளிழுக்கும் என்று எடுக்கப்பட்டுள்ள கணக்கீடு மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக இருப்பதாக மற்றொர…
-
- 1 reply
- 800 views
-
-
உலக கடல் மட்டத்தை உயர்த்துவதற்கு ஏதுவான மிகப் பெரிய பனிப்பாறை உருகியது! கிறீன்லாந்தின் பெரும்பாலான பனி படலங்கள் இந்த வருடத்தில் குறிப்பிடத்தக்க அளவு உருகியுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவற்றில் மிகப் பெரிய பனிப்பாறையும் உருகியிருக்கலாம் என்று அச்சம் வௌியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மாத்திரம், சராசரி உலக கடல் மட்டத்தை ஒரு மில்லிமீட்டருக்கு மேல் உயர்த்துவதற்கு ஏதுவான பனி உருகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள கடற்கரைகளை அண்டிய நகரங்களின் எதிர்காலம் தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொண்டிருப்பதாகவும், பலர் செய்வதறியாது திகைத்துப்போயுள்ளார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தெற்கு கிறீன்லாந்தில் ஒரு பனிப்பாறை இறுதியாக 2004…
-
- 0 replies
- 292 views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சங்கர், ஜிம்பாப்வேயிலிருந்து இராஜதந்திரப் பரிசாக 1998-ல் இந்தியாவிற்கு வந்த இரண்டு ஆப்பிரிக்க யானைகளில் ஒன்று. கட்டுரை தகவல் அபிஷேக் டே பிபிசி நியூஸ், டெல்லி 21 செப்டெம்பர் 2025 இந்தியாவில் உள்ள விலங்கு நல ஆர்வலர்கள், நீண்ட நாட்களாக மறுவாழ்வு அளிக்க முயன்ற ஒரு அதிகம் நேசிக்கப்பட்ட யானையின் மரணத்திற்காகத் துக்கம் அனுஷ்டித்துக்கொண்டிருக்கின்றனர். டெல்லியின் மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒரே ஆப்பிரிக்க யானையான சங்கர், தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தனிமையில் கழித்தது. புதன்கிழமை அன்று உணவு உண்ண மறுத்து, மாலைக்குள் அது சரிந்து விழுந்தது. கால்நடை மருத்துவர்கள் முயற்சி செய்தாலும் 29 வயதான அந்த ஆண் யானை, 40 நிமிடங்களுக்குள் இறந்துவிட்டத…
-
- 0 replies
- 114 views
- 1 follower
-
-
கடலுக்குள் புதையுண்ட பூமியின் 8 ஆம் கண்டம் பற்றி வரைபடத்தை வெளியிட்ட குழு.! பூமியில் தற்போது வரை ஏழு கண்டங்கள் ஒட்டுமொத்த கிரகத்தின் குறுக்கே பரவியுள்ளது என்று கூறிவந்தனர். ஆனால் பூமியில் ஏழு கண்டங்கள் இருக்கிறது என்பது முற்றிலுமான ஒரு பெரிய பொய் என்று GNS விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. இவர்களின் கணக்குப்படி பூமியில் ஒட்டுமொத்தமாக 8 கண்டங்கள் இருக்கிறது. பல மில்லியன் ஆண்டுகளாக கடலுக்குள் புதைக்கப்பட்டிருந்த பூமியின் 8 ஆம் கண்டதை இவர்கள் இப்பொழுது கண்டுபிடித்துள்ளனர். பூமியின் 8 ஆம் கண்டம் இதற்கு முன்பு வரை பூமி 7 கண்டங்களாகப் பிரிக்கப்பட்டது, இப்போது நாம் அறிந்திடாத புதிய நிலப்பரப்பை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு பசிபிக் கடலின் கீழ் ச…
-
- 0 replies
- 406 views
-
-
இயற்கை விவசாயத்தில் புதுமுறை: மண்ணையே உரமாக, பூச்சிக் கொல்லியாகப் பயன்படுத்தி சாதிக்கும் தெலங்கானா இயற்கை விவசாயி 10 மார்ச் 2021, 02:12 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சிந்தலா வெங்கட் ரெட்டி "நைட்ரஜன், ஃபாஸ்பரஸ், சூப்பர், பொட்டாஷ் - அனைத்தும் மண்ணிலேயே உள்ளன. மழையில் நனைந்தால், மண்ணிலிருந்து வெளிப்படும் இனிய மணம் பயிருக்கு சிறந்த சுவையையும், பழங்களுக்கு இனிப்பையும் தருகிறது" என்று மண் மற்றும் தனது விளைபொருட்களின் பின்னால் உள்ள ரகசியத்தை விளக்குகிறார் வெங்கட் ரெட்டி. "2002 ஆம் ஆண்டில் மண்ணுடன் பரிசோதனை செய்யும் எண்ணம் எனக்கு வந்தது. எனக்கு தெரிந்த ஒருவரின்…
-
- 3 replies
- 910 views
- 1 follower
-
-
காலநிலை மாற்றம்: ``இனி ஒவ்வோர் ஆண்டும் பேரிடர்கள் நிகழும்!" - எச்சரிக்கும் IPCC அறிக்கை Guest Contributor09 Aug 2021 2 PM Published:09 Aug 2021 2 PM Climate Change (Representational Image) ( AP Photo/Victor Caivano ) ``கடந்த நூறாண்டுகளுக்கு முன்பு எப்போதோ ஓரிரு முறை நிகழ்ந்த பேரிடர்கள் இனி வரும் காலங்களில் ஒவ்வோர் ஆண்டும் நிகழும். இதற்கு முழுமையான காரணம் இயற்கை மீதான மனிதனின் செல்வாக்கு மட்டுமே." - ஐ.பி.சி.சி அறிக்கை ``Heat save spread fire that `erased' Canadian Town" கடந்த ஜூலை மாதம் பிரபலமான அமெரிக்க நாளிதழான `தி நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்ட செய்தியின் தலைப்புதான் இது. இந்தத்…
-
- 4 replies
- 788 views
-
-
காலநிலை மாற்றத்தினால் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்து உறுப்பு நாடுகளிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் நாங்கள் எங்கள் எதிர்காலத்தை எரித்துக்கொண்டிருக்கின்றோம் என தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐநா மனித உரிமை பேரவையின் அமர்வில் தொடக்கவுரை ஆற்றுகையி;ல் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். காலநிலை மாற்றத்தினால் உலகின் அனைத்து நாடுகளும் பாதிப்பை எதிர்கொள்ளப்போகின்றன என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். காலநிலை மாற்றம் என்பது தற்போது உலகின் அனைத்து பகுதிகளையும் பாதிக்கும் யதார்த்தம் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது எதிர்வு கூறப்படும் வெப்பநிலை அதிகரித்தல் காரணமாக மனிதர்கள் பேரழிவை எதிர்கொள்…
-
- 0 replies
- 433 views
-
-
அழிந்து வரும் தேனீக்களை பாதுகாப்பதற்காக, அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த நபர் ஒருவர் அவற்றை இயற்கை முறையில் வளர்த்து வருகிறார். அழிந்து வரும் வனப்பரப்புகள், பருவநிலை மாற்றம், அதிகளவிலான பூச்சி மருந்துகள் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனை தடுத்து தேனீக்களை பாதுகாக்கும் பொருட்டு கலிபோர்னியாவில் வசித்து வரும் தீயல் ((Thiele)) என்பவர், தனது வீட்டிலேயே கூடுகள் அமைத்து தேனீக்களை வளர்த்து வருகிறார். வர்த்தகப் பயன்பாட்டுக்காக தேனீக்கள் வளர்க்கப்படுவதை போல் அல்லாமல், வனப்பகுதியில் அவை வாழும் முறையிலேயே மரங்களில் கூடுகள் அமைத்து, தேனீக்களை பராமரித்து வருகிறார். https://www.polimernews.com/dnews/86341/மரங்களில்-…
-
- 0 replies
- 427 views
-
-
எவரெஸ்ட் சிகரத்தை வீட்டில் இருந்தே கண்ட காத்மாண்டு. ஊரடங்கால்,காற்று மாசு கணிசமாக குறைந்ததை தொடர்ந்து,200 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை வீட்டில் இருந்தே காணும் அற்புத வாய்ப்பை காத்மாண்டு மக்கள் பெற்றுள்ளனர். உலகின் மிகப்பெரிய மலைச்சிகரமான எவரெஸ்ட் நேபாளம் வழியாக செல்லும் இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது. நேபாளத்தின் தலைநகரமான காத்மாண்டுவில் இருந்து இருநூறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த சிகரம் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஊர் மக்களுக்கு பளிச் என்று தெரியும் வகையில் காட்சியளிக்க துவங்கி உள்ளது. இந்த காட்சியை வெளியிட்டுள்ள நேபாளி டைம்ஸ் பத்திரிகை, ஊரடங்கால் நேபாளம் மற்றும் வட இந்தியாவின் காற்று மாசு பல மடங்கு குறைந்துள்ளதே இந்த காட்ச…
-
- 0 replies
- 642 views
-
-
உரிகம் வனச்சரகத்தில் தொடரும் கோடை மழை: பசுமை திரும்பிய காப்புக்காடுகளில் வனவிலங்குகள் குதூகலம் ஓசூர் ஓசூர் வனக்கோட்டம், உரிகம் வனச்சரகத்தில் உள்ள காப்புக்காடுகளில் தொடரும் கோடை மழை காரணமாக வனத்தில் நீர்நிலைகள் நிரம்பி, காடுகளில் பசுமை துளிர் விடுவதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குதூகலமாக வலம் வரத் தொடங்கியுள்ளன. ஓசூர் வனக்கோட்டத்தின் கடைக்கோடியில் உள்ள உரிகம் வனச்சரகம், காவிரி ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த உரிகம் வனச்சரகத்தில் தக்கட்டி, பிலிக்கல், கெஸ்த்தூர், மஞ்சுகொண்டப்பள்ளி, மல்லள்ளி, உரிகம் உள்ளிட்ட 6 காப்புக்காடுகள் அமைந்துள்ளன. நடப்பாண்டு கோடைக் காலத்தின் ஆரம்பம் முதலே நிலவிய சுட்டெரிக்கும் கடும் வெயில் காரணமா…
-
- 1 reply
- 352 views
-
-
மிக வெப்பமான காலப்பகுதியாக ஜூலை மாதம் பதிவாகியுள்ளது! சர்வதேச ரீதியாக மிகவும் வெப்பம் நிலவிய மாதமாக இந்த வருடம் ஜூலை மாதம் பதிவாகியுள்ளதாக செய்மதித் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்றச் சேவையின் ஆராய்ச்சியாளர்களால் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது பூமி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெப்பமயமாதலை அனுபவிக்கிறது என்பதற்கான சமீபத்திய அறிகுறி இதுவென்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர் ஆர்க்டிக் வட்டத்திற்குள் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலையுடன், வெப்பமான காற்றலைகள் கடந்து சென்றன. அதேவேளை கடந்த மாதம் ஐரோப்பா முழுவதும் உயர்வான வெப்பநிலை அளவுகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. உலகளவில், 2019 ஜூலை மாதம் ஓரளவு வெப்பமா…
-
- 0 replies
- 542 views
-
-
மொரீஷியஸில் விபத்துக்குள்ளான எண்ணெய்க் கப்பல் இரண்டாக பிளவடைந்து பெரும் நாசம்! மொரீஷியஸ் கடற்கரைப் பகுதியில் விபத்துக்குள்ளாகி, ஆயிரம் டொன் எரிபொருளை கடலில் கசியவிட்ட, ஜப்பானிய கப்பல் இரண்டாக பிளவடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சுமார் 4000 டொன் எரிபொருளை ஏற்றுக் கொண்ட பயணித்த எம்.வி.வகாஷியோ என்ற ஜப்பானுக்கு சொந்தமான இந்த கப்பலானது ஜூலை 25 அன்று மொரீஷியஸ் பகுதியில் ஒரு ஒரு பவளப்பாறையுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் நூற்றுக் கணக்கான டொன் எரிபொருட்கள் கடலில் முன்னதாகவே கலந்துவிட்டதாக தெரிவித்த அதிகாரிகள், சனிக்கிழமை கப்பல் இரண்டாக பிளவடைந்து விட்டதாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர். அது மாத்திரமன்றி ஞாயிற்றுக்கிழமை, உத்தியோகபூர்வ தூய்மை…
-
- 2 replies
- 682 views
-
-
தும்பிகள் வேகமாக அழிந்து வருவதற்கு காரணம் இதுதான் - எச்சரிக்கும் ஆய்வாளர்கள் விக்டோரியா கில் அறிவியல் செய்தியாளர், பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANDRE GUNTHER உலகில் சதுப்பு நிலங்கள் தொடர்ந்து அழிந்துவரும் காரணத்தால் தும்பிகள் மறைந்து வருகின்றன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது இயற்கைப் பாதுகாப்பிற்கான சர்வதேச யூனியனால் வெளியிடப்பட்ட அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் சிவப்புப் பட்டியலில் குறிப்பிட்டுள்ளது. இந்த வண்ணப் பூச்சி வகைகள் குறித்த முதல் தொகுப்பு மதிப்பீட்டின் மூலம் இதை கண்டறிந்துள்ளனர். நகரமயமாக்கலும், நிலையில்லாத விவசாயமுமே ச…
-
- 2 replies
- 344 views
- 1 follower
-
-
காலநிலை மாற்றத்தின் கோர விளைவுகளை, எல்லோரும் அனுபவிக்கிறோம். இடைவிடாத மழை, வெள்ளம், வரட்சி, நீர்ப்பற்றாக்குறை என, எதிர்மறையான அனைத்தையும் ஒருசேர நாம் அனுபவிக்கிறோம். இவற்றை வெறுமனே, வானம் பொய்த்ததென்றோ, எதிர்பாராத மழை என்றோ புறந்தள்ளவியலாதபடி, இவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால், சூழலை மாசாக்குதல், புவி வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும் செயற்பாடுகள் என, எமது பூமிப்பந்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் செயல்களை, நாம் விடாது செய்து வருகிறோம். எமது எதிர்காலத் தலைமுறைக்கு, நாம் எவ்வாறான உலகத்தை விட்டுச் செல்லப் போகிறோம்; நாம், எமது பிள்ளைகளுக்கான எதிர்காலத்தை மட்டுமல்ல, அவர்களது பேரப்பிள்ளைகளது எதிர்காலத்தையும் சேர்த்து, கேள்விக்குறியாக்கிக் கொண்டிரு…
-
- 0 replies
- 536 views
-
-
உலக காட்டுயிர் தினம்: இருவாச்சி பறவை தன் துணை இறந்துவிட்டால் செத்துவிடுமா? உண்மை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாழும் மலை இருவாச்சி பறவைகள், சோலைக்காடுகளின் அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது. அவை இறுதிவரை ஒரே துணையுடன் பேரன்போடு வாழும் முறை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இந்தியாவின் உயிர்நாடியான முக்கிய பல்லுயிர் பெருக்க மண்டலமான மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர், குஜராத் மாநிலத்தில் தொடங்கி தமிழகத்தில் முடிவடைகிறது. 1.6 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள மேற்குத்…
-
- 0 replies
- 601 views
- 1 follower
-
-
அதிகரிக்கும் கார்பன் உமிழ்வு காலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்.! ஒக்ஸ்பாம் மற்றும் ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், பணக்கார நாடுகளால் அதிகரித்த கார்பன் உமிழ்வு உலகத்தை காலநிலை பேரழிவின் விளிம்பிற்கு கொண்டு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் உலகின் பணக்கார நாடுகளால் வளிமண்டலத்தில் வெளியிடப்பட்ட கார்பன் உமிழ்வு 60% அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் தீர்க்க முடியாத சிக்கலாக உருமாறி வருகிறது. நாளுக்குநாள் வளிமண்டலத்தில் வெளியிடப்படும் அதிகப்படியான கார்பன் வாயுவின் அளவு பூதாகரமாக உயர்ந்துள்ளது. உலகில் கடந்த 1990 முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வளிமண்டலத்தில் கார்பன் வாயுவின…
-
- 0 replies
- 443 views
-
-
கடல் நீரை குடி நீராக்குவது மிகக் கேடானது! -சாவித்திரி கண்ணன் தமிழ்நாடு நன்கு மழை பொழியும் இடமாகும்! இது செளதி இல்லை.ஆனால், பெய்யும் மழை நீரை எல்லாம் கடலுக்கு அனுப்பி மீண்டும், மீண்டும் கடல் நீரைக் குடிநீராக்க பல ஆயிரம் கோடிகளை விரயமக்குகிறார்கள்! கடல் நீரைக் குடிப்பது உடலுக்கு கேடு! சூழலுக்கும் கேடு.ஒரு விரிவான அலசல்; ஆசியாவிலேயே மிகப் பெரிய குடிநீர் திட்டமாக நெம்மேலியில் ரூ.4,276.44 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். 2026 ல் இந்த திட்டத்தை முடிக்க திட்டமிட்டு உள்ளனர். 40 கோடி லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் இந்த கடல் குடிநீர் சுத்திகரிப்பு திட்டத்தின் மூலம் தாம்பரம் மாநகர மக்க…
-
- 0 replies
- 428 views
-
-
இறந்து கல்லாக மாறிய ராட்சத பாம்பு.! நாகா குகைகள், புவெங் கான் மாகாணத்தின் புவெங் காங் லாங் மாவட்டத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குகை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இணைய பயனர்கள் இந்த மர்மமான குகையின் படங்களை பிரம்மாண்டமான பாம்பு தலை வடிவை ஒத்த மற்றொரு மேற்பரப்புடன் இணைத்து பதிவிட்டுள்ளது பலரை வியக்க வைத்துள்ளது. இந்த குகை “நாகா குகை” என்று கண்டுபிடிக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளது. ஆர்ட் தனவானிஜ் என்ற பேஸ்புக் பயனர் இந்த குகையின் படத்தை வெளியிட்டார். இது பாறை மேற்பரப்பைக் கொண்டுள்ள இது ஒரு பாம்பின் சுருண்ட உடல் ஒரு பெரிய பாம்பின் செதில்களாக தோற்றமளிக்கிறது. குறித்த புகைப்படத்தில் பாம்பு செதில்களைப் போலவோ அல்லது கல்லாக மாறிய மாபெரு…
-
- 0 replies
- 436 views
-
-
மனித குலத்துக்கு பனிமலைகள் உருகுவதால் ஏற்படப்போகும் ஆபத்துகள் என்னென்ன? வில்லியம் பார்க் 22 அக்டோபர் 2021, 01:54 GMT பட மூலாதாரம், DENIS BALIBOUSE/AFP/GETTY IMAGES பனிப் பாறைகளில் உறைந்துள்ள நீரைப் பல லட்சம் மக்கள் வாழ்வாதாரத்துக்கும், மின்சாரத்துக்கும் உணவுக்கும் நம்பியுள்ளனர். ஆனால் பருவநிலை மாற்றத்தால் அவை உருகி ஓடிக் கொண்டிருக்கின்றன? அவை மாயமானால் நமக்கு ஏற்படும் இழப்பு என்ன? பனிக்கட்டிகள் ஆறுகளாகி மலையடிவாரங்களை நோக்கிச் செல்லும் போது, கீழே உள்ள பாறைகளைக் கழுவிப் பண்படுத்திக்கொண்டு செல்வது, மனம் கவரும் காட்சி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவை நம் அனைவரின் வாழ்விலும் முக்கியப் பங்கு வகிக்…
-
- 0 replies
- 302 views
-
-
அதிகரித்துவரும் வெப்பமயமாதல் மற்றும் உலக மயமாதல் போன்றவற்றால் மனித குலம் பெரும் அழிவினை சந்தித்து வருகிறது. மனிதனின் ஆக்கமும் அழிவும் அனைத்தும் இயற்கை சார்ந்தே அமைகிறது.ஒரு இடத்தில் ஆக்கம் என்றால் மற்றொரு இடத்தில் அழிவு என்பதை அடிக்கடி உணர்த்தும் சம்பவங்கள் அதிகம் . காலநிலை மாற்றத்தின் மூலம் இந்த பூமி சந்திக்க கூடிய நிகழ்வுகளை அடிக்கடி செய்திகள் மூலமாக அச்சுறுத்தி கொண்டிருக்கிறது.காடழிப்பு, நகரமயமாதல், மழையின்மை போன்ற காரணிகளால் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள மனித குலம் தயாராக வேண்டும் என்பதே இயற்கை ஆய்வாளரின் கருத்தாக இருக்கிறது.அண்மையில் நடந்த இரு நிகழ்வுகளே காலநிலை மாற்றத்திற்கு உதாரணம். ஆஸ்திரேலியா காட்டு தீ எங்கு காணும் தீம்பிழம்புகளை கக்கிய வானம், வாழ்வ…
-
- 1 reply
- 382 views
-
-
சூரியனுக்கு மிக அண்மையில் பூமி – மக்களுக்கு அவசர எச்சரிக்கை சூரியனுக்கு மிக அண்மையில் பூமி சுழலுவதால், வெப்பத்துடனான காலநிலை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாடளாவிய ரீதியில் நிலவும் வெப்பத்துடனான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல்வாரத்தில் மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்படக்கூடிய உபாதைகளை தவிர்த்துக்கொள்ளும் வகையில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த காலப்பகுதியில் குழந்தைகள், நான்கு வயதுக்குற்பட்ட சிறுவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடற்பருமன் கூடியவர்கள், நோயாளர்கள் ஆகியோர் தொடர்பாக அதிகூடிய கவனம் தேவை எனவும் சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. …
-
- 0 replies
- 384 views
-
-
உலகிலேயே அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றும் நாடு எது தெரியுமா? November 1, 2020 உலகிலேயே அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முன்னணியில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக சயின்ஸ் அட்வான்ஸஸ் (science advance) இதழில் வெளியிடப்பட்ட அறிக்கையில், உலக மக்கள்தொகையில் 4 % பேர் உள்ள அமெரிக்காவில் 17 % பிளாஸ்டிக் கழிவுகள் வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 217 நாடுகளில் வெளியான பிளாஸ்டிக் கழிவு குறித்த தரவுகளின் அடிப்படையில் அமெரிக்காவில் தனிநபர் ஆண்டு ஒன்றுக்கு 105 கிலோகிராம் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/85122
-
- 0 replies
- 356 views
-
-
பாறைக் கழுகின் காதலாட்டம் க. வி. நல்லசிவன் அது ஒரு அக்டோபர் மாத ஞாயிற்றுக்கிழமை. விடுமுறையாதலால் ஏதேனும் ஓர் இடத்திற்கு கானுலா செல்லலாம் என முடிவுசெய்திருந்தோம். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் அல்லது பறவை சரணாலயங்கள் என வழக்கம்போல் செல்லாமல், வறண்ட நிலப்பகுதிகளில் உள்ள சிறிய குன்றுகள், பாறை சூழ்ந்த பகுதிகளைத் தேடிச்செல்ல நினைத்து, கோபிசெட்டிபாளையத்துக்கு அருகே உள்ள பெரிய பாறைகள் சூழ்ந்த, மரங்கள் அடர்ந்த நவமலைக் குன்றினைத் தேர்வுசெய்திருந்தோம். அங்கு ஏற்கெனவே பலமுறை கானுலா சென்றிருந்தாலும் பருவ மழைக்காலத்தில் அந்த இடம் எப்படி இருக்கிறது எனப் பார்க்கும் ஆர்வத்தோடு அதிகாலையில் புறப்பட்டோம். காலைக் கதிரவனின் பொன் நிற ஒளியும், ஊர்ப…
-
- 2 replies
- 512 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption பூமியின் நுரையீரல் என்றும் சிலரால் அமேசான் காடுகள் அழைக்கப்படுகின்றன உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக் காடான அமேசான் காடுகளில் இந்த தசாப்தத்தில் காடுகள் அழிக்கப்பட்ட விகிதம்தான், இதுவரை அங்கு நடந்த காடுகள் அழிப்பிலேயே வேகமானது என பிரேசில் அரசு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. தென்னமெரிக்க கண்டத்தில் உள்ள அமேசான் காடுகளின் பெரும் பரப்பு பிரேசில் எல்லைக்குள்தான் உள்ளன. ஆகஸ்ட் 2017 முதல் ஜூலை 2018 வரையிலான ஓராண்டு காலகட்டத்தில் மட்டும், பிரேசிலில் உள்ள சுமார் 7,900 சதுர …
-
- 0 replies
- 343 views
-