Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றமும் சூழலும்

சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்

பதிவாளர் கவனத்திற்கு!

சுற்றமும் சூழலும் பகுதியில்  சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. உயரும் கடல் மட்டம்... இங்கிலாந்தில், 200,000 சொத்துக்கள்... கைவிடப்படும் அபாயம் ! 2050-க்குள் கடல் மட்டம் உயரும் காரணத்தால் இங்கிலாந்தில் உள்ள சுமார் 200,000 சொத்துக்கள் கைவிடப்படலாம் என ஒரு அறிக்கை கூறுகிறது. தண்ணீர் எங்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்பதனால் தொழில்நுட்ப ரீதியாகவும் நிதி ரீதியாகவும் அவற்றை சரிசெய்ய சாத்தியமா என்பது குறித்து ஆராயப்படுகின்றது. பல தசாப்தங்களாக கடல் மட்ட உயர்வு தவிர்க்க முடியாதது என விஞ்ஞானிகள் தெரிவிக்கும் அதேவேளை சொத்துக்களையும் காப்பாற்ற முடியாது என்று அரசாங்கம் கூறியுள்ளது. இங்கிலாந்தின் கடற்கரையில் மூன்றில் ஒரு பங்கு கடல் மட்ட உயர்வினால் அழுத்தத்திற்கு உள்ளாகும் என்று அறிக்கை கூறுகிறது. https://athavann…

  2. பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் புழுக்கள் கண்டுபிடிப்பு சுற்றுசூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் புழுக்களை அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். மூன்று வகை புழுக்களிடம் மூன்று வார சோதனை மேற்கொண்டதில் சூப்பர் வார்ம் என்றழைக்கப்படும் புழுக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை கடித்து தின்று ஜீரணிக்கும் அதிசயத்தை கண்டுபிடித்தனர். இந்த புழுக்களின் குடலில் உள்ள ஒருவிதமான நொதி பிளாஸ்டிக்கையே ஜீரணமாக்கி விடுகிறது. இந்த நொதியில் உள்ள பக்டீரியாக்களை ஆய்வு செய்தால் பிளாஸ்டிக் மறுசுழற்சியில் புரட்சியை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. மேலும் சுற்றுசூழலை பாதிக்காத பிளாஸ்டிக்கை கூட உரு…

    • 1 reply
    • 364 views
  3. அண்டார்டிகா பனியிலும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் - ஏன் இது கவலையானது? நவீன் சிங் கட்கா சூழலியல் செய்தியாளர், பிபிசி உலக சேவை 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிளாஸ்டிக் நுண்துகள்கள் அண்டார்டிகா பனியில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை முதன்முறையாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அண்டார்டிகாவின் 19 பகுதிகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை நியூசிலாந்தின் கேன்டெர்பெரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் ஒவ்வொரு மாதிரியிலும் மிகச்சிறிய பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ப…

  4. உலக சுற்றுச்சூழல் தினம்: மரம் நடுவது எப்படி - தெரிந்து கொள்ள வேண்டிய 10 விதிகள் ஹெலன் ப்ரிக்ஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 31 ஜனவரி 2021 புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மரம் நடுவதற்கான 10 விதிமுறைகளை அறிவியலாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதைக் கவனமாக பின்பற்றுவது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும். மரம் நடுவது நன்மை தரும்; பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைக் காக்க உதவும் என மரங்கள் பல பலனை தரும். ஆனால் இடத்திற்கு தகுந்தாற்போல ஒரு மரத்தை நடவில்லை என்றால் அதுவே தவறாக முடிந்துவிடும் என்கின்றனர் லண்டனில் உள்ள …

  5. மெகலடான் சுறா 2 கோடியே 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அழிந்தது எப்படி? ஹெலன் பிரிக்ஸ் சூழலியல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2 கோடியே 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து அவை கடலில் சுமார் 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வரை சுற்றித்திரிந்துள்ளது. இதுவரை இந்த உலகில் வாழ்ந்த மிக நீளமான சுறா இனமான மெகலடானின் முடிவுக்கு மற்றொரு மிகப்பெரிய உயிரினத்துடன் ஏற்பட்ட வரலாற்றுக்கு முந்தைய உணவுச்சண்டை காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெருங்கடலில் வாழ்ந்த இந்த மிகப்பெரிய கடல் உயிரினத்தின் புதைபடிவ பற்…

  6. அறிவியல் அதிசயம்: உலகின் மிக நீளமான தாவரம் - ஒரே விதையிலிருந்து உருவானது டிஃப்பேனி டர்ன்புல் பிபிசி செய்திகள், சிட்னி 55 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RACHEL AUSTIN அமெரிக்காவின் மான்ஹாட்டன் நகரைவிட மூன்று மடங்கு அளவில் பெரிய கடற்புல் தாவரம் ஆஸ்திரேலிய கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக நீளமான தாவரமாக அறியப்படுகிறது. மேற்கு ஆஸ்திரேலியாவில் நீருக்கடியில் இந்த நீளமான கடற்புல் தாவரத்தை மரபணு சோதனை மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த நீளமான கடற்புல் ஒரே தாவரம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. ஒரேயொரு விதையிலிருந்து சுமார் 4,500 …

  7. பிளாஸ்டிக் மூடியை வைத்து பனிச்சறுக்கு செய்த காகம்: விஞ்ஞானிகளுக்குப் பயன்படும் யூட்யூப் காணொளிகள் விக்டோரியா கில் அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் 27 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CHESTER ZOO படக்குறிப்பு, இணைய காணொளிகள் யானைகளின் அறிவுத் திறனுக்கான கூடுதல் ஆதாரங்களை ஆய்வாளர்களுக்கு வழங்குகின்றன ஆசிய யானைகள், மயில் சிலந்திகள், ஸ்னோபால் என்றழைக்கப்படும் காக்கடூ பறவை ஆகியவற்றுக்குப் பொதுவாக இருக்கும் ஒரு விஷயம் என்ன தெரியுமா? அவையனைத்துமே இணைய காணொளிகளில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் நட்சத்திரங்களாகத் திகழ்கின்றன. இந்தக் காணொளிக…

  8. ஈரக்குமிழ் வெப்பநிலை என்றால் என்ன? நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? நிடாலே அபூ ம்ராட் பிபிசி உலக செய்திகள் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தெற்காசியாவின் பல்வேறு நாடுகளில் தீவிர வெப்ப அலை வீசிக் கொண்டிருக்கிறது. கடந்த ஞாயிறன்று டெல்லியில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. அதேபோல, பாகிஸ்தானிலும் வெப்பம் சுட்டெரிக்கிறது. வரும் காலங்களில் இந்தியாவின் வட மேற்கு பகுதிகளில் வெப்பநிலை புதிய உச்சத்தை அடையும் என, வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த 50 டிகிரி செல்சியஸ் என்பதன் தீவிரம் வேறுபடும். அதாவது, வெப்பநிலை என்பது எல்லா இடங்களி…

  9. அவுஸ்ரேலியாவில் திடீர் வெள்ளம்: இதுவரை குறைந்தது எட்டு பேர் உயிரிழப்பு! கிழக்கு அவுஸ்ரேலியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குயின்ஸ்லாந்தின் தலைநகரான பிரிஸ்பேனின் சில பகுதிகள் நேற்று (திங்கட்கிழமை) நீருக்குள் மூழ்கின. 2,145 வீடுகள் மற்றும் 2,356 வணிகங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், 10,827 கட்டடங்களின் தரைப் பலகைகளுக்கு மேல் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த செவ்வாய் கிழமை முதல் பெய்து வரும் தொடர் மழையால் பிரிஸ்பேன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரிஸ்பேனின் தெற்கே உள்ள கோல்ட் கோஸ்ட் சிட்டியில் சூரிய உதயத்திற்கு முன் வெள்ளத்தி…

  10. முன்பு காண்டாமிருக வேட்டைக்காரர்கள், இன்று பாதுகாவலர்கள்: அதிரடி மாற்றம் நடந்தது எப்படி? கீதாஞ்சலி கிருஷ்ணா & சாலி ஹோவர்ட் பிபிசி ஃப்யூச்சர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வட இந்தியாவின் ஒரு காட்டுப் பகுதியில், இன ரீதியிலான மோதலுக்குள் சிக்கியிருந்த இனக் குழு ஒன்றுக்கு அமைதியை மீண்டும் கொண்டு வருவதில் காண்டாமிருகம் காரணமாக இருந்துள்ளது. 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதியன்று நள்ளிரவில் அந்த அழைப்பு வந்தது. காசிரங்கா தேசிய பூங்காவில் இருந்து 400 கி.மீ தொலைவில் அசாமிலுள்ள மனாஸ் தேசிய பூங்காவிற்கு இடம் மாற்றப்பட்டிருந்த பெரிய ஒற்றைக் கொம்ப…

  11. ரஷ்யா vs யுக்ரேன்: போரால் புதைபடிவ எரிபொருட்கள் பயன்படுத்த திரும்பியது 'முட்டாள்தனம்' -ஐ.நா. பொதுச் செயலாளர் மாட் மெக்ராத் சுற்றுச்சூழல் நிருபர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,EMPICS யுக்ரேனில் நடந்து வரும் படையெடுப்பு காரணமாக, புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதற்கான முடிவு என்பது 'முட்டாள்தனம்' என்றும், இது உலகளாவிய காலநிலை இலக்குகளை அடைவதற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் ஐ.நா பொதுச்செயலாளர் கூறியுள்ளார். யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக, ரஷ்யாவிடம் இருந்து பெறப்படும் எரிவாயுகளை பிற நாடுகள் நிறுத்தியதை அடுத்து, நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு …

  12. சதீஸ் ராமசாமி Living Things தி ஸ்பாட்டட் ராயல் Share கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும் 'தி ஸ்பாட்டட் ராயல்' என்ற வண்ணத்துப்பூச்சியை 1800களின் இறுதியில் ஆய்வாளர்கள் நீலகிரியில் பதிவு செய்திருக்கிறார்கள். அதற்கான ஆதாரங்கள் உள்ளன. யுனெஸ்கோவால் நாட்டின் பல்லுயிர் வளம் நிறைந்த முதல்‌ உயிரச்சூழல் மண்டலமாக நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் அறிவிக்கப்பட்டது. அழிவின் விளிம்பில் உள்ள பல உயிரினங்களின் கடைசிப் புகலிடமாக இந்த நீலகிரி காடுகளே விளங்கி வருகின்றன. இந்தக…

  13. யூனிஸ் புயல் அச்சம்: மில்லியன் கணக்கான மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தல்! பல தசாப்தங்களில் மிக மோசமான புயல்களில் ஒன்றான யூனிஸ் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தால், மில்லியன் கணக்கான மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். லண்டன், தென்கிழக்கு மற்றும் இங்கிலாந்தின் கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கும் வகையில் இரண்டாவது அரிய சிவப்பு வானிலை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. ஒரு சிவப்பு எச்சரிக்கை, அதாவது பறக்கும் குப்பைகளால் உயிருக்கு ஆபத்து உள்ளது. தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு வேல்ஸின் சில பகுதிகளை உள்ளடக்கும் வகையில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்படும், வேல்ஸில் உள்ள அனை…

  14. காலநிலை மாற்றம்: அமேசான், கூகுள், வோடஃபோன் போன்ற 25 பெருநிறுவனங்கள் செய்வதை அம்பலப்படுத்தும் அறிக்கை ஜார்ஜினா ரன்னார்ட், பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான தங்கள் சொந்த இலக்குகளைக் கூட உலகின் பல பெருநிறுவனங்கள் எட்டவில்லை. கூகுள், ஆப்பிள், அமேசான் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் உள்ளன. அதேசமயம், தாங்கள் ஆற்றிய பணிகளை மிகைப்படுத்தியோ அல்லது தவறாகவோ சொல்லும் வழக்கத்தைக் கொண்டுள்ளன என்றும் நியூ க்ளைமேட் இன்ஸ்டிட்யூட் எனும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. வாடிக்கையாளர்கள், பசும…

  15. எவரெஸ்ட் சிகரம்: 'அதிவேகத்தில் உருகும் பனிப்பாறைகள்; 100 கோடி பேருக்கு பாதிப்பு' - அறிவியல் ஆய்வு 5 பிப்ரவரி 2022 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES எவரெஸ்ட் சிகரத்தில் உள்ள உயரமான பனிப்பாறை பருவநிலை மாற்றம் காரணமாக மிக வேகமாக உருகி வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மையின் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் கடந்த 25 வருடங்களில் அந்த பனிப்பாறை இதுவரை 54 மீட்டர் வரையில் அகலத்தில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த பனிப்பாறை கடல் மட்டத்திலிருந்து 25 ஆயிரத்து 938 அடி உயரத்தில் உள்ளது. இது பனியாக மாறி…

  16. கையுறை,ஊசி சிறிஞ்ச்,ரெஸ்ற்-கிட்..மலைபோலப் பிளாஸ்ரிக் கழிவுகள்! கொரோனா ஏற்படுத்தும் புதிய சவால் – எச்சரிக்கிறது WHO February 2, 2022 கொரோனா பெருந் தொற்று நோயின்விளைவாக உலகம் முழுவதும் சுகாதாரப்பாவனைப் பொருள்களின் கழிவுகள் மலைபோன்று (mountain of medical waste) பெருகி வருகின்றன.அதனால் உயிரினங்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் பெரும்தீங்கு உருவாகலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. கையுறைகள், முகக்கவசங்கள் , தடுப்பூசி மருந்து ஏற்றும் சிறிஞ்சுகள், சுய வைரஸ் பரிசோதனைக் கருவிகள் (test kits) என்று கொரோனா வைரஸுடன் தொடர்புடைய பலமருத்துவக் கழிவுப் பொருள்கள் – அவற்றில் பெரும்பாலானவை பிளாஸ்ரிக்பொருள்கள் – மிகப் பெரும் தொன் கணக்…

  17. மேக்கொங் பகுதியில் கண்டறியப்பட்ட 200க்கும் மேற்பட்ட புதிய உயிரினங்கள் 30 ஜனவரி 2022 புதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,©WWF - MYANMAR VIA PA MEDIA படக்குறிப்பு, போபா லங்கூர் வகை குரங்கு - பேய் தோற்றம் போன்று அதன் கண்களைச் சுற்றி வெள்ளை வட்டங்களைக் கொண்டுள்ளது. மேக்கொங் பகுதியில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 224 உயிரினங்களின் பட்டியலை உலக வனவிலங்கு நிதியத்தின் (WWF) பாதுகாப்புக் குழு வெளியிட்டுள்ளது. அவற்றுள், பேய் தோற்றம் போன்று, கண்களைச் சுற்றி வெள்ளை வட்டங்கள் உடைய குரங்கு, தவளைகள், ஒரு வகையான பல்லி இனங்கள் (Newts) மற்றும் சதைப்பற்றுள்ள மூங்கில் இனங்கள் அ…

  18. சத்தமின்றி சுற்றுச்சூழலைப் பாழாக்கும் `Fast Fashion' ஆடைக் கலாசாரம்; ஆய்வுகள் கூறும் நிதர்சனம் என்ன? தனியொரு மனிதன் மூன்று ஆண்டுகளுக்குக் குடிக்கும் சராசரி தண்ணீர் அளவான 3,781 லிட்டர்கள் (வயலில் பருத்தி விளைச்சல் தொடங்கி, தொழிற்சாலையில் தயாராகி, சில்லறைக் கடைக்கு விற்பனைக்குச்செல்லும்வரை) ஒரேயொரு ஜோடி ஜீன்ஸ் மட்டுமே தயாரிக்கச் செலவாகும். புத்துணர்வு தோற்றத்தைத் தரும் என்னும் போலியான தேவையை உருவாக்கும் எண்ணமுடன் பரவுகிறது குறைந்த விலையில் வேகமாகத் தயாரிக்கப்படும் நவநாகரிக ஆடைக் கலாசாரம். இதன் காரணமாக அதிக அளவில் உற்பத்தியாகும் ஆடைகள் காலப்போக்கில் கழிவுகளாக மாறிச், சுற்றுச்சூழல் பாதிப்பை அதிகப்படுத்துகின்றன. ஒவ்வொரு புடவையும் சராசரி 6 - …

    • 0 replies
    • 343 views
  19. “2021”உலகின் கடும் வெப்பமான ஆண்டாக பதிவு! January 15, 2022 உலகில் மிக அதிக வெப்பம் மிகுந்த ஆறாவது ஆண்டாக 2021 வகைப்படுத்தப்பட்டுள்ளது. புதிய தகவல்கள் அதற்குச் சான்றாய் அமைந்திருப்பதாக, அமெரிக்கப் பருவநிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். உலக மக்கள் தொகையில் சுமார் கால்வாசிப் பேர் கடந்த ஆண்டு கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டனர். தெற்காசியா, வட அமெரிக்கா, தென்னமெரிக்கா ஆகிய வட்டாரங்களில் கடந்த ஆண்டு சூரியன் சுட்டெரித்தது. ஆர்டிக்கில் மீண்டும் அதிகமான பனி உருகியது. உலக சாராசரியை விட ஆர்டிக், மும்மடங்கு அதிகம் சூடாவதாக நாசா ஆய்வு நிறுவனம் கூறியது. காடுகளை அழித்தல், படிம எரிபொருள் பயன்பாடு போன்ற ந…

  20. 200 மில்லியன் ஆண்டுகளில் இலங்கை மறைந்து புதிய இந்திய துணைக்கண்டத்தின் ஒரு பகுதியாக மாறும் என ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கன் ஜெர்னல் ஆப் சயின்ஸ் இதழில் உட்ரெக்ட் பல்கலைக்கழக புவியியலாளர் பேராசிரியர் டூவே வான் ஹின்ஸ்பெர்கன் ஒரு ஆய்வுகட்டுரை எழுதி உள்ளார். அந்த கட்டுரையிலேயே அவர் மேற்கண்ட விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார். நமது பூமிக்கு கீழே உள்ள டெக்டோனிக் தகடுகள் தொடர்ந்து நகர்ந்து வருவதால் . அனைத்து கண்டங்களும் தொடர்ச்சியாக நகர்ந்து வருகின்றன. டெக்டோனிக் தகடுகள் மெதுவாக ஆனால் நிச்சயமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து வருகின்றன. இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளில், கிழக்கு ஆப்பிரிக்கா (நவீன சோமாலியா, கென்யா, தான்சானியா…

    • 6 replies
    • 491 views
  21. காலநிலை மாற்றமும் இந்தியப் பெருங்கடலும் - நாராயணி சுப்ரமணியன் olaichuvadiJanuary 1, 2022 சீனத்து மிங் பேரரசின் நீல நிறப் பூக்கள் கொண்ட பீங்கான் துண்டுகள் இந்தியப் பெருங்கடலில் உள்ள பல கடற்கரைகளில் காணக்கிடைக்கின்றன என்று சொல்லப்படுகிறது. உலகின் மிகப்பழமையான வணிகப் பாதை ஒன்று இந்தியப் பெருங்கடல் வழியாகத்தான் ஓடியது. இந்தியப் பெருங்கடலை “உலகமயமாக்கலின் தொட்டில்” என்று அழைப்பவர்களும் உண்டு. மிளகும் ஜாதிக்காயும் மணக்கும் பல புகழ்பெற்ற கப்பற்பயணங்களை இந்தக் கடற்பகுதி சந்தித்திருக்கிறது. இந்தியப் பெருங்கடலில் வசிப்பதாக சொல்லப்படும் கடல்சார் தெய்வங்கள், ஜின்கள், கடற்கன்னிகள், மூதாதையரின் ஆன்மாக்கள் குறித்த நாட்டார் கதைகள் கடற்கரைதோறும் விரவியிருக்கின்றன. மாம்போ…

  22. பார்க்கர்: சூரியனுக்கு மிகவும் அருகில் சென்று நாசா விண்கலம் சாதனை ஜோனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA-JHU-APL சூரியனின் புற வளிமண்டலத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் விண்கலம் ஒன்று கடந்து சென்றுள்ளது. இது ஒரு வரலாற்றுத் தருணம் என்று நாசா தெரிவித்துள்ளது. நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் (Parker Solar Probe) விண்கலம் இவ்வாறு சூரியனின் புற வளிமண்டலம் வழியாகக் கடந்து சென்றுள்ளது. 'கொரோனா' என்று அழைக்கப்படும் இந்தப் பகுதியின் வழியாக பார்க்க சோலார் ப்ரோப் கடந்து சென்றுள்ளது. (கொரோனா என்றால் லத்தீன் மொ…

  23. பருவநிலை மாற்றம்: உலகத்துக்கு ஆர்க்டிக் ஊதும் அபாய சங்கு 14 டிசம்பர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆர்க்டிக் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ: கோப்புப்படம் ஆர்க்டிக் துருவப்பகுதியில் இதுவரை பதிவானதிலேயே அதிக வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது, காலநிலை மாற்றம் குறித்த எச்சரிக்கை மணிகளை அடித்துள்ளது. கடந்தாண்டு ஜூன் 20 அன்று சைபீரிய நகரமான வெர்கோயன்ஸ்கில் பதிவான இந்த வெப்பநிலையை, உலக வானிலை மையம் செவ்வாய்க்கிழமை சரிபார்த்துள்ளது. இந்த வெப்பநிலை, ஜூன் மாதத்தில் அப்பகுதியில் பதிவாகக்கூடிய தினசரி அதிகபட்ச சர…

  24. பருவநிலை மாற்றம்: ஜப்பானில் நிலக்கரிக்கு மாற்றாகிறதா நீல ஹைட்ரஜன்? ரூபெர்ட் விங்ஃபீல்ட் - ஹேய்ஸ் பிபிசி, டோக்யோ 13 டிசம்பர் 2021, 11:52 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் அதுவொரு அழகான இலையுதிர்க் காலத்தின் மதிய நேரம். நான் மலைப்பாங்கான இடத்தில் நின்றுகொண்டு டோக்யோ விரிகுடாவைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு அருகில், பொதுவாக சாந்தமான குணமுள்ள, தனது 70களில் உள்ள தகாவோ சாய்கி இருந்தார். ஆனால், இன்று சாய்கி கோபமாக காணப்பட்டார். "இது முழுவதும் நகைச்சுவையாக இருக்கிறது" என, நேர்த்தியான ஆங்கிலத்தில் கூறினார். "அபத்தமாகவும் இருக்கிறது!". அவருடைய வருத்தத்திற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.