சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
985 topics in this forum
-
ஒரு பெரிய டிவி கம்பனியில் ஆன்கர் (Primary anchor) ஆகவேண்டும் என்பது என் ஆசை. ஆனால் எந்த ஜர்னலிசம் டிகிரியும் என்னிடம் இல்லை. பொலிட்டிகல் சயன்ஸ் டிகிரி படித்துவிட்டு ஏபிசி சேனலில் டெலிபோன் அட்டண்டர் ஆக வேலைக்கு அப்ளிகேசன் போட்டேன். அதுகூட கிடைக்கவில்லை. அதன்பின் பள்ளிக்கூட மாணவர்களுக்கு செய்திகளை தொகுக்கும் சேனல் ஒன் எனும் தொலைகாட்சியில் செய்திகளின் உண்மை நிலவரத்தை செக் செய்யும் ஃபேக்ட் செக்கர் எனும் வேலையில் சேர்ந்தேன். நான் செய்யும் வேலையை 10 வருடமாக செய்யும் நபர்கள் இருந்தார்கள். பள்ளி மாணவர்கள் மட்டுமே பார்க்கும் தொலைகாட்சியில் பணியாற்றினால் மிகப்பெரிய ஒரு சானலில், உலகம் அறிந்த செய்தி ஆங்கர் ஆகவேண்டும் எனும் ஆசை எப்படி நிறைவேறும்? அது மிகப்பெரும் போட்டிகள் நி…
-
- 0 replies
- 773 views
-
-
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனம் பயனார்களுக்காக புதிய கட்டுப்பாட்டினை அறிமுகம் செய்துள்ளது. மரணித்த ஒருவர் குறித்து வெளியிடப்படும் கேலி செய்திகள் அல்லது மரணத்தை தூண்டும் வகையில் கருத்துக்களைபதிவிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறான கருத்துக்கள் ஆரம்பத்தில் பேஸ்புக் எந்தவித தடையையும் ஏற்படுத்தவில்லை. எனினும் தற்போது புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் பற்றி பதிவு செய்யப்படும் தரக்குறைவான கருத்துக்களை சம்மந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர் பேஸ்புக் நிறுவனத்திடம் முறையிடலாம். பேஸ்புக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களத…
-
- 0 replies
- 898 views
-
-
என் அப்பா ஒரு நேர்மையான...அரசுப் பேருந்து ஓட்டுநர். அவருடைய அந்தக் காலத்து டைரிகளைப் புரட்டினால் மனிதர் அவர் ஓட்டிச் சென்ற வண்டி பற்றியும் கூடவந்த நடத்துனர் பற்றியும் மட்டுமே எழுதி இருப்பார். அல்லது பெரும்பாலான தினங்கள் நிரப்பப்படாமல் இருக்கும். அழகான குண்டு கையெழுத்தில் 'இன்று டிஎன் 9867 வண்டியை ராம்நாடு டெப்போவில் எடுத்து குற்றாலம் ஹால்ட் அடித்தேன். நடந்துனராக தம்பி முருகேசன் உடன் வந்தார்'... பெயர்களும் ஊர்களும் வண்டி நம்பர்களும் மாறி இருக்குமே தவிர இவ்வளவேதான் அந்த நாட்குறிப்புகளின் சாராம்சம். அப்பாவுக்கு மோட்டாரைத் தவிர வேறு எதுவும் தெரியாது. குடும்பமே உட்கார்ந்து கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருப்போம். அவருக்கு கிரிக்கெட் புரியாவிட்டாலும் எங்களுக்கு இணையாக உட்க…
-
- 4 replies
- 1.7k views
-
-
முந்தைய நிறுவனத்தில் என்னுடன் பணிபுரிந்த சில நண்பர்களுடன் இரவுணவு. அநேகமாக எல்லாருமே சில/பல ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதுதான் சந்திக்கிறோம். முன்பு ஒரே கட்டடத்தில் கிட்டத்தட்ட ஒரேமாதிரி பணியைச் செய்துகொண்டிருந்தவர்களிடம் இந்தச் சிறிய காலகட்டத்துக்குள்தான் எத்தனை மாற்றங்கள்! அவர்களில் ஒருவர், மென்பொருள்துறையிலிருந்து விலகி, அதற்குச் சிறிதும் தொடர்பில்லாத தனித்தொழிலொன்றைத் தொடங்கிச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளார். அது எங்களுக்கு வியப்பளித்தது. அதற்கான காரணங்களை விசாரித்தோம். அவர் விரிவாக விளக்கினார். அவர் இந்தத் தொழிலைத் தொடங்கியபோது, இத்துறையைப்பற்றி அவருக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. ஏதோ தெரிந்ததை வைத்துத் தொடங்கியிருக்கிறார், கொஞ்சம்கொஞ்சமாகக் கற்றுக்கொண்டிரு…
-
- 0 replies
- 1k views
-
-
❤️❤️ தன்னுடைய அம்மாவிற்கு ஒரு மகன் இரண்டாம் திருமணம் செய்து வைத்தது பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. மிகவும் நல்ல செய்தியே. ஆனால் இதெல்லாம் ஒரு செய்தினு பேசுற சமூகத்துலதான் நாமெல்லாம் வாழ்ந்துட்டு இருக்கோம் இன்னும்ங்கிறது தான் கேவலமா இருக்கு. என் அம்மாவிற்கு 15 வயதில் திருமணம். அப்பாவிற்கு 28. 16 ல் அண்ணன், 18 ல் நான் பிறந்தாகிவிட்டது. அம்மா மிகவும் அழகாக இருப்பார். சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர். அப்பா கோடீஸ்வரர். ஊருக்கெல்லாம் மிகவும் நல்லவர். ஆனால் அம்மாவைப் பொருத்தவரை மிகவும் சந்தேகம். அந்த சந்தேகத்தினால் அடி, உதை, வாயில் வந்த வார்த்தைகள் என மிகவும் ஒரு அடிமையான வாழ்க்கையே கிடைத்திருந்தது. எனக்கு 16 வயதிலும் அண்ணாவிற்கு 18 வயதிலும் இருவரும் பிரிந்துவி…
-
- 4 replies
- 4.8k views
- 1 follower
-
-
”மற்ற மாநில மக்களைவிட தமிழ்ச்சமூகத்துக்கு இசையறிவு அதிகம். காரணம், ராஜாவும் ரகுமானும்” - நிவாஸ் கே பிரசன்னாவைப் பேட்டி எடுத்திருந்தபோது இப்படிச் சொன்னார். தமிழர்களுக்கு இசையறிவைவிட நகைச்சுவை உணர்வு ரொம்ப அதிகம். அதற்குச் சமீபத்திய உதாரணம் மீம்ஸ். வேறு எந்த மொழியிலும் இவ்வளவு கிரியேட்டிவாக மீம்ஸ் வருவதில்லை. இதற்குக் காரனமென என்.எஸ்.கேவில் தொடங்கி யோகி பாபு வரை பலருக்கும் கிரெடிட் தரலாம். முக்கியமாக, வடிவேலுவையும் கவுண்டமணியையும் சொல்வார்கள். ஆனால், இந்தப் பட்டியலில் தவறாமல், முக்கியமான இடத்தில் இடம்பிடிக்க வேண்டிய பெயர் கிரேஸி மோகன். நகைச்சுவை பல விதம். எந்த வசனமுமில்லாமல் வெடித்துச் சிரிக்க வைத்த சார்லி சாப்ளின், சூழலை வைத்து காமெடி செய்த விவேக், உடல்மொழியால் மட்டும…
-
- 2 replies
- 1.3k views
-
-
சதிக் கோட்பாடுகள் மீதான எமது தீராத ஆசை ! அண்மையில் வேலைத்தளத்தில் நண்பர் ஒருவருடன் அளவலாவிக்கொண்டிருக்கும்போது, அமெரிக்க ரெட்டைக் கோபுரத் தாக்குதல்பற்றியும் பேச்சு எழுந்தது. இதுபற்றி மேலும் எழுதுவதற்குமுன்னர், அந்த நண்பர் பற்றிய சில விடயங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். அவர் ஒரு வெள்ளையினத்தவர், வாழ்க்கையின் அதிகமான நேரங்களை தனிமையில் கழிப்பவர். பெரும்பாலான தருணங்களில் தனிமையில் இருக்கும் அவருக்கு தாழ்வு மனப்பன்மை இருப்பதென்பது அவரது சில செயல்கள் மூலம் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். மெளனமே பெரும்பாலும் அவரது மொழியாக இருப்பினும், சில விடயங்கள் பற்றிப் பேசும்பொழுது அவரது சுபாவம் மாறிவிடும். அப்படியொன்றுதான் இந்த ரெட்டைக் கோபுரத் தாக்குதல் தொடர்பாக அவர் கொண்டிருக்கும் …
-
- 45 replies
- 4.4k views
-
-
Ananda AK மன்னார் மனித புதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா? புதைகுழிக்கு காரணமானவர்கள் யார்? கொன்று புதைக்கப்பட்டவர்கள் யார்? கேள்விக்கு விடைதெரிய பதிவினை வாசியுங்கள் சிலவேளை பதில் இருக்கலாம். மன்னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெளிவந்து பல சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் தோற்றுவித்திருக்கிறது. புளோரிடாவில் இருந்து கிடைக்கப்பெற்ற காபன் அறிக்கையில் அந்த மனித எச்சங்களின் காலம் கி.பி 1450 தொடக்கம் கி.பி 1650 வரைக்கு இடைப்பட்டதென்று கூறப்பட்டுள்ளது. மன்னார் புதைகுழி மிகச்சமீப காலத்துக்குறியதாக இருக்கும் என…
-
- 1 reply
- 1.2k views
-
-
பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை, 1. ஆண் பனை 2. பெண் பனை 3. கூந்தப்பனை 4. தாளிப்பனை 5. குமுதிப்பனை 6.சாற்றுப்பனை 7. ஈச்சம்பனை 8. ஈழப்பனை 9. சீமைப்பனை 10. ஆதம்பனை 11. திப்பிலிப்பனை 12. உடலற்பனை 13. கிச்சிலிப்பனை 14. குடைப்பனை 15. இளம்பனை 16. கூறைப்பனை 17. இடுக்குப்பனை 18. தாதம்பனை 19. காந்தம்பனை 20. பாக்குப்பனை 21. ஈரம்பனை 22. சீனப்பனை 23. குண்டுப்பனை 24. அலாம்பனை 25. கொண்டைப்பனை 26. ஏரிலைப்பனை 27. ஏசறுப்பனை 28. காட்டுப்பனை 29. கதலிப்பனை 30. வலியப்பனை 31. வாதப்பனை 32. அலகுப்பனை 33. நிலப்பனை 34. சனம்பனை பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் : பனை உணவு பொருட்கள் : 🌴நுங்கு 🌴பனம் பழம் …
-
- 5 replies
- 4.3k views
-
-
#பதிவிட்டவருக்கு_நன்றி: அருள்நிலா (புலிகளின் குரல் பொறுப்பாளர் ஜவான் அவர்கள் இளைய மகள்) 17, 05, 2009 எப்போதும் போலவே சேவல் கூவவில்லை, குருவிகள் கீச்சிடவில்லை; அவல ஓலத்தைதையும் வெடிப்பொலியையும் தவிர அப் பிரதேசத்தில் வேறெதுவும் கேட்கவில்லை. முள்ளிவாய்க்கால் மண்ணில் அன்றைய விடியலை பறைசாற்றிக் கொண்டு சூரியன் மட்டும் தன் கதிர் பரப்பி எழுந்து வந்தான். இரத்தமும், பிய்ந்து போன தசைத் துண்டுகளாகவும், வெடித்துச் சிதறுகின்ற இரும்புத் துண்டுகளாகவும் அழுது கொண்டிருந்தது நந்திக்கடல் விரிந்து கிடந்த அந்த பிரதேசம். திரும்பும் இடமெங்கும் அழுகுரல்கள். விட்டுப் பிரிய மாட்டோம் என்ற உறுதிகள், எங்களோடு நீங்களும் வாங்கோ என்று கெஞ்சல்கள், எங்களால் வர முடியாது நாங்கள் சரணடைய மாட்டோம் ந…
-
- 2 replies
- 1.7k views
-
-
தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டு பதவி விலகிய கிஸ்புல்லாவின் இனவாதப் பேச்சைப் பாருங்கள்! கிழக்கை முழுவதுமாக கைப்பற்றி கிழக்கிஸ்தான் அமைத்து தமிழர்களை அழிப்பதே தனது நோக்காமாம்! இந்த பெருமை கூட்டமைப்பையே சாரும் 11பேரை கொண்ட தமிழத்தேசிய கூட்டமைப்பு 7பேரை கொண்ட ஒரு கட்சியிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை கொடுத்தது -வரலாறு. கிஸ்புல்லா தமிழர்களுக்கு செய்த அநியாயங்களை அவரே ஒத்துக் கொள்கிறார்! அன்று அவர் தமிழர்களுக்கு செய்த அநியாயங்கள் அடக்குமுறைகளுக்கான தண்டனையைத் தான் இன்று அல்லா அவரிற்கு கொடுத்திருக்கிறார்! கிழக்கில் தமிழர்கள் மீது முஸ்லீம் ஊர்காவல் படை நடாத்திய கொலைகளில் சிலதை பட்டியல் படுத்துகின்றோம்…
-
- 9 replies
- 2.2k views
-
-
படிக்க படிக்க தலை சுத்துது ! Dr. Swamy letter to PM on P Chidambaram. வருமான வரித் துறையின் சென்னை புலனாய்வு பிரிவு முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவர் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு வெளி நாடுகளில் இருக்கும் சொத்து மற்றும் வங்கி இருப்பு பற்றிய முழு விவரங்களை 2௦௦ பக்கங்களுக்கு மேல் அறிக்கையாக வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளது. பி ஜே பி கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி அண்மையில் ஊடகவியலார் சந்திப்பின் போது இந்த சொத்து விவரங்கள் அடங்கிய அறிக்கையின் ஒரு பகுதியை வெளியிட்டார். ஆனால் ப. சிதம்பரத்துக்கு வேண்டிய பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் இச்செய்தியை வெளியிடாமல் மறைத்துவிட்டன. வருமான வரி துறையும் அமலாக்கத் துறையும் நடத்திய பல …
-
- 0 replies
- 1.7k views
-
-
PrayForNesamani | டிவிட்டரில் டிரெண்டாகும் 'காண்டிராக்டர் நேசமணி' ஹேஷ்டேக்- வீடியோ தேசிய அளவில் இன்று நேசமணிதான் ஒரே பேச்சாக உள்ளது. அந்த அளவுக்கு மறந்து போன நேசமணியைத் தூக்கிக் கொண்டு நாட்டையே அல்லோகல்லப்படுத்திக் கொண்டுள்ளனர் வடிவேலு ரசிகர்கள். ஹூ இஸ் திஸ் நேசமணி.. நேஷன் வான்ட்ஸ் டு நோ என்று அர்னாபே அலறும் அளவுக்கு டிரெண்டிங்கில் உள்ளது நேசமணி. தமிழக மக்களின் வாழ்வில் ஒரு அங்கம்தான் நேசமணி. ஒவ்வொரு தெருவிலும் ஒரு நேசமணி கேரக்டரை சந்திக்க முடியும். அந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கையில் உள்வாங்கிப் போனவர் இந்த நேசமணி. பிரண்ட்ஸ் படத்தில் வரும் வடிவேலு கேரக்டர் பெயர்தான் நேசமணி. மின்னலென வந்து மனங்களை அள்ளிச் சென்ற காமெடிக் காட்சிகள் அவை. அதை வைத்துத்தான் இப்…
-
- 3 replies
- 1.8k views
-
-
Saravanan Vel மேற்கு வங்கத்தில் மமதாவின் தோல்வி எப்படி ஏற்பட்டது? --------------------------------------------------------- உலகிலேயே தீவிரமான மொழிப்பற்று உடையவர்கள் வங்காளிகள். உலகத் தாய்மொழி தினம் என்பது வங்க மொழியை வைத்தே கொண்டாடப் படுகிறது. முட்டாள் தனமாக வங்க மொழியின் மீது தாக்குதல் தொடுத்தார் மமதா. பள்ளிக் கல்வியில் உருது மொழியைத் திணித்தார் மமதா. பள்ளி கல்லூரிப் பாட நூல்களில் உர…
-
- 0 replies
- 1.2k views
-
-
மாமூலன் வாடி R R SrinivasanFollow 14 hrs "பார்ப்பரேட்டுகளின் எழுச்சி.... எகனாமிக் டைம்ஸ்" தரும் எச்சரிக்கை பிறப்பின் அடிப்படையில்தான் பார்ப்பனர்கள் உயர் ஜாதி யினர் என்று கருத வேண்டாம் - பொருளாதார அடிப்படையில் பார்த்தாலும் பார்ப்பனர்கள் முதலிடத்தில் தான் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. ஊடகங்கள் பார்ப்பனர்களின் கரங்களில் வசமாகக் சிக்கிக் கொண்டிருக்கும் காரணத்தால் ஒரு தவறான கருத்தைப் பரப்பி வைத்துள்ளனர். …
-
- 0 replies
- 1.3k views
-
-
இது மீள்பதிவு. இறுதிப்போர்க் காலகட்டத்தில், புலிகள் தப்ப விரும்பிய தமிழ் மக்கள்மீதே தாக்குதல் நடத்தினார்கள் போன்ற அயோக்கியத்தனங்களுக்கு... "He will not waste a single bullet on a civilian like me" - Anita Pratap இதனை எழுதக்கூடாது என்று நினைத்திருந்தேன். ஏன் என்று பிறகு சொல்கிறேன். என் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது, அனிதா பிரதாப் அவர்களை ஒரு நிகழ்வுக்கு அழைத்திருந்தார்கள். (அனிதா பிரதாப் முதன்முதலாக தலைவர் பிரபாகரனை பேட்டி கண்டவர். இதுவரை அதிக அளவில் பேட்டி கண்டவரும் அவரென்று தான் நினைக்கிறேன்) அவருக்கு தேவையானவற்றை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டிருந்தது. அனிதா பிரதாப், ரொம்பவே இனிமையானவர் என்றாலும், 2009க்குப் பிறகு,…
-
- 3 replies
- 1.9k views
-
-
நேரலை வசதியில் புதிய கட்டுப்பாடு – மீறினால் தடை! நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் பேஸ்புக்கில் நேரலை செய்யப்பட்டதை அடுத்து நேரலை வசதியில் புதிய கட்டுப்பாடுகளை பேஸ்புக் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்திய நபர் அதனை நேரலையாக பேஸ்புக்கில் ஒளிபரப்பியது உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேரலை வசதியை பயன்படுத்துவதில் பேஸ்புக் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. பேஸ்புக்கின் விதிமுறைகளை மீறியதற்காக தடை செய்யப்படுபவர்கள் குறிப்பிட்ட சில நாட்கள் நேரலை வசதியை பயன்படுத்த தற்காலிக தடை விதிக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. http:/…
-
- 0 replies
- 1.4k views
-
-
Rajavarman Sivakumar Tholar Balan •ரோகன விஜயவீரா மகனுக்கு ஒரு நியாயம் பிரபாகரன் மகனுக்கு இன்னொரு நியாயம் இதுதான் இலங்கை அரசின் நியாயம்? பத்து வருடங்களுக்கு முன்னர் இதே காலப்பகுதியில் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். சரணடைந்த ஒருவரைக் கொல்வதே தவறு. அதைவிட சரணடைந்த சிறுவனைக் கொல்வது மிகப் பெரிய தவறு. “பிரபாகரன் பயங்கரவாதி. எனவே பிரபாகரன் மகனும் பயங்கரவாதி” என்று சுட்டுக் கொன்றமைக்கான காரணத்தை கோத்தபாய ராஜபக்ச கூறினார். 1989ம் ஆண்டு ஜேவிபி தலைவர் ரோகன விஜயவீ…
-
- 6 replies
- 2.6k views
-
-
பேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை! நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் மதங்களுக்கு இடையே முறுகல்நிலை ஏற்படும் வகையில் பதிவிட்ட 360க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான பல்வேறு தகவல்களை வெளியிட்ட 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அது குறித்து விசாரணை செய்யும் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. இதனையடுத்தே பேஸ்புக் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலனவை, தடைசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களுடையது என்பதும் தெரியவந்துள்ளது. சமூக வலைத்தளங்களின் ஊடாக தவறான பிரசாரங்களை பரப்புவோரைக் கண்டறிவதற்கு 24 மணிநேர க…
-
- 0 replies
- 1.2k views
-
-
பல்கலைக்கழக உணவகத்தில் தியாகி திலீபன் படம் வைத்திருந்தமையால் உரிமையாளர் கைது... இலங்கையின் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் ஐயா அதே தியாகியின் படத்திற்கு மாலையிட்டு மரியாதை வணக்கம் செலுத்தினாரே அப்போது எங்கே போயிருந்தீர்கள் பொலிசாரே? கைகட்டி வாய்பொத்தி அவருக்கு பாதுகாப்புக்குத்தானே நின்றீர்கள்? உங்கள் வன்மத்தை தீர்க்க அப்பாவிகள்தானா கிடைத்தார்கள்? தியாகி திலீபன் எங்கள் வணக்கத்திற்குறியவர் அவர் இலங்கை அரசுக்கு எதிராக போரிட்டு மடிந்தவர் இல்லை இலங்கை மீதான இந்தியாவின் ஆதிக்கத்தை எதிர்த்து அகிம்சையை போதித்து உயிர் நீர்த்தவர். உங்கள் நாட்டின் இறையாண்மையை காப்பாற்றவும்தான் அவர் உயிர் ஈகம் செய்தார். தமிழர்கள் மாத்திரம் அல்ல இனம் மொழி கடந்த அத்தனை இலங்கையர்களும் வணங…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 9 replies
- 2.6k views
-
-
முஸ்லிம்கள் நாம் சுயபரிசீலிப்போம்! பாத்திமா மாஜிதா வெடிகுண்டுத் தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. ஆனால், அரசை மட்டுமே நாங்கள் பொறுப்புக்கூறுவது ஒருவிதத் தப்பித்தல்தான். “தாக்குதல்களை நடத்தியவர்கள் முஸ்லிம்கள் அல்ல; அவர்கள் பயங்கரவாதிகள்; அவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை” என்று சப்பைக்கட்டுவதை நிறுத்துங்கள். இப்போதுகூட நம்மை நாமே சுயபரிசீலனை செய்துகொள்ளாவிட்டால் எங்கேயோ போய் முட்டி மோதிவிடுவோம். கிட்டத்தட்ட இரு தசாப்தங்கள் முன்னோக்கிப் பார்க்கிறேன். என்னையும் என்னைச் சுற்றி இருந்தவர்களும் படித்த பாடசாலை, பல்கலைக்கழகங்கள், வேலை செய்த இடங்கள் எல்லாவற்றிலும் மனிதம் இருந்தத…
-
- 3 replies
- 1.8k views
-
-
ஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல், உலகின் முன்னாள் சிக்கிக் கொண்ட, இலங்கையின் அரசியல் வியாபாரிகள் இலங்கையின் இன்றைய அரசியல் தலைமைகள் இன்றுதான் அரசியலுக்கு வந்த புதியவர்கள் அல்ல, காலத்திற்கேற்ற புதிய சிந்தனைகளைக் காவி மாற்றங்களை ஏற்படுத்தவல்ல புனிதர்களுமல்ல, என்பதை கடந்த ஞாயிறு இலங்கையில் நடந்தேறிய ஒரு பெரும் நரபலி மீண்டும் நிரூபித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, தமது தனிப்பட்ட அரசியல் இருப்பிற்காக, இன, மத முரண்பாடுகளை தொடாந்தும் வளர்த்து, அதில் அப்பாவி மக்களைப் பலியிட்டு, அதனூடாக தமது ரத்த அரசியல் வியாபாரத்தை தொடர்ந்தும் அரங்கேற்றும் அதே சாத்தான்களே, அரசியல் சிம்மாசனத்தை தொடர்ந்தும் கடந்த 50 ஆண்டுகளாக அலங்கரித்து வருகின்றனர். இன்றைய சூழல் ஒரு சனாநாயக நாட்டில…
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏ, இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளது. அதன் முதல் பதிவில், மக்களுக்கு புதிர் ஒன்றை அளித்து, அதனை தீர்க்க சொல்லியுள்ளது. அதில் ஒரு மேசையில், வெவ்வேறு பொருட்கள் சிதறி வைக்கப்பட்டுள்ளன. அதில் இருக்கும் பொருட்களை அடையாளம் காண வேண்டும். இளைஞர்களை சிஐஏ அமைப்பில் சேர்க்கும் திட்டத்திலேயே இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. உதாரணமாக, 2 - என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள கடிகாரத்தில், மணி 8:46. 2001ஆம் ஆண்டு 9/11 தாக்குதலில் உலக வர்த்தக மையத்தின் வடக்கு டவர் அப்போதுதான் தாக்கப்பட்டது. 3 - சீனாவின் வரைபடம் - ஆசியாவில் உள்ள அமெரிக்காவின் முக்கிய போட்டியாளர்களில் சீனாவும் ஒன்று.
-
- 0 replies
- 729 views
-
-
எழுந்து வா மகளே எழுந்து வா அழுகுரல் அண்மைய தாக்குதலில் தன் குஞ்சு மகளை பறிகொடுத்த ஒரு தந்தையின் மனக்குமுறல் நீண்ட நேரமாக தூங்குகிறாயே எழுந்து வா கொஞ்சம் நீ தாமதமாக எழுந்தாலும் அம்மாவும் அப்பாவும் துடிதுடித்து விடுவோமே இன்று மட்டுமேன் நீண்டதோர் நேரம் தூங்குகிறாய். நீ தடக்கி விழுந்தால் கூட இதயம் உடைந்து விடுவாளே அம்மா நீ எப்படி விழுந்தாய் உடனே எழுந்து வா மகளே எழுந்து வா, உனக்கு பிடித்த பஞ்சு மிட்டாய் வாங்கி தாறேன் பால் மிட்டாய் வாங்கித் தாறேன் எழுந்து வா மகளே எழுந்து வா. உனக்குப் பிடித்த பட்டர் சிக்கன் சாப்பிடலாம் பாம்பே ஸ்வீட் சாப்பிடலாம் எழுந்து வா மகளே எழுந்து வா. நீ கேட்ட பாபி பொம்மை வாங்கித்தருகிறேன் குரங்கு பொம்மை வாங்கித்தருகிறேன் எழுந்து வா மகளே …
-
- 0 replies
- 1.5k views
-