Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கியமும் இசையும்

இலக்கிய கட்டுரைகள் | நேர்காணல்கள் | கர்நாடக இசை | நவீன இசை

பதிவாளர் கவனத்திற்கு!

இலக்கியமும் இசையும் பகுதியில் இலக்கிய கட்டுரைகள், நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை சம்பந்தமான தரமானதும் அவசியமானதுமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இலக்கியக் கட்டுரைகள், படைப்பாளிகளின் நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை பற்றிய தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பாரிஸ் இலக்கியச் சந்திப்பும் கூக்குரல் இட்டோரும் — ராகவன் — கடந்த மார்ச் 30-31 இல் நிகழ்ந்த இலக்கியச் சந்திப்பில் நூல்கள் பற்றிய விமர்சனங்கள் அறிமுகங்கள் அத்துடன் பாலஸ்தீனப் பிரச்சனை, இன முரண்பாடு, மலையக மக்கள், பால் நிலை வேறுபாடுகள், LGBTQ, சாதியம் போன்ற பல்வேறு விடய தானங்கள் பேசப்பட்டன. விவாதங்கள் நிகழ்ந்தன. இரண்டாம் நாள் மாலை நிகழ்விற்கு நாலு பேர் புதிதாக வந்திருந்தனர். அவர்கள் நால்வரும் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தனர். ஒருவர் யோகு அருணகிரி. மற்றவர் கார்வண்ணன். மூன்றாமவர் நெய்தல் நாடன். மற்றவர் பெயர் தெரியாது. டெலோன் மாதவன் என்ற இரண்டாம் தலைமுறையை சேர்ந்த பிரான்ஸு நாட்டு அறிஞர் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் புவியியலில் டாக்டர் பட்டம…

  2. சோழ மன்னனின் பொறாமையும் ஆவேசமும்.. வடக்கில் இருந்த ராஜாவின் நிலை என்ன? https://www.facebook.com/100043983976036/videos/968465944187593?__so__=watchlist&__rv__=video_home_www_playlist_video_list முத்தமிழ்னு பேசுவாங்க.. ஆனால் யாருக்கும் இது தெரியாது! - பாண்டியக்கண்ணன் https://www.facebook.com/FullyNewsy/videos/முத்தமிழ்னு-பேசுவாங்க-ஆனால்-யாருக்கும்-இது-தெரியாது-பாண்டியக்கண்ணன்/721051806580297/

  3. எனது நீ கொன்ற எதிரி நான் தான் தோழா கவிதைப் புத்தகத்துக்காக, என்னை IBC தமிழ் நிறுவனத்தினர் நேர்காணல் செய்திருந்தனர். சர்மிளா வினோதினி அவர்களின் மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன். நன்றி தியா - காண்டீபன் நன்றி தியா - காண்டீபன்

    • 0 replies
    • 420 views
  4. Polappu Thedi| மலையகத்தான் கதடா 2 Album New Official Video Song 2024 மலையக சமுதாயத்தில் மலையக மக்கள் வாழும் வாழ்க்கை கதையை ஒரு பாடலாக தயாரித்து உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம் ❤️.

  5. மேட்டிமைவாதமா? jeyamohanDecember 26, 2023 அன்புள்ள ஜெ உங்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் பயன்படுத்தப்படும் சொல் ’மேட்டிமைவாதம்’ என்பது. அதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உண்மையில் என்னைப்போன்ற சாமானியர்களுக்கே இந்தப்பிரச்சினை உள்ளது. சமூகத்தையோ அல்லது சுற்றியிருக்கும் நண்பர்களையோ எதாவது குறைசொன்னால் உடனே மேட்டிமைவாதம் என்கிறார்கள். வரும் ஜனவரி 1 அன்று மெரினாவில் குடித்துவிட்டு பைக் ஓட்டி கூச்சல்போட திட்டம்போட்டு பட்ஜெட் போடுகிறார்கள். அது ஒரு வகை கேனத்தனம் என்று சொன்னால் உடனே மேட்டிமைவாதம் என்று சொல்லிவிடுகிறார்கள். இதைச் சொல்பவர்கள் ஒன்றரை லட்சம் ரூ கொடுத்து ஐஃபோன் வாங்குபவர்கள். முப்பதாயிரம் ரூபாய்க்கு ஷூ வாங்குபவர்கள். ஆனால் ஒரு பு…

      • Haha
      • Like
      • Thanks
    • 13 replies
    • 1.5k views
  6. மஜ்னு முதல் மாமாக்குட்டி வரை சி.சரவணகார்த்திகேயன் காதல் - எத்தனை இனிமை ததும்பும் ஒரு சொல்! எவ்வளவு இன்ப மயமான‌ ஒரு செயல்! காதலின் ஆதார குணம் பரஸ்பரத் தன்மை. ஆனால் காதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரி அனுபவத்தை அளிக்கிறதா? ஆணின் காதலும் பெண்ணின் காதலும் ஒன்று போலவேதான் நமது சமூகத்தால் அணுகப்படுகிறதா? காதலில் இருக்கிறதா சமத்துவம்? வரலாறு நெடுகிலும், புராணப் பக்கங்களிலும், இலக்கிய இடுக்குகளிலும் ஆண்களின் காதலானது கொண்டாடப்படாதது மட்டுமின்றி கண்டுகொள்ளப்படாதது மட்டுமல்லாது, கேலிக்கும் கிண்டலுக்கும் வசைக்கும் வெறுப்புக்கும் உள்ளாகியேதான் வந்திருக்கிறது. ஆணின் காதல் என்பது அவனது இதர‌ வெற்றிகளைக் காட்டி அடையும் ஒரு பரிசாகவே காலங்காலமாகவே இ…

      • Thanks
    • 1 reply
    • 374 views
  7. நெருங்கின பொருள் : வெற்றிராஜா ‘வேண்டுவன’ என தலைப்பிட்டு, பாரதியின் கையெழுத்தில், ‘மனதில் உறுதி வேண்டும்’ என்று துவங்கும் பாடல், கைபேசியில் ஒரு செய்தியாக வந்து இருளில் ஒளிர்ந்தது. மகாகவியின் கையெழுத்தும், சொற்களை பிரித்து பிரித்து அவர் எழுதியிருந்த விதமும் வசீகரிக்க, வரிகளை உச்சரித்து வாசிக்கையில் அது ஒரு கானமாகவே மனதுள் ரீங்கரித்தது. கவிதைக்குள் சறுக்கி சுழன்று ஊஞ்சலாடிய மனம், ”நெருங்கின பொருள்” என்ற வாக்கியத்தில் மீண்டும் மீண்டும் சென்றமர்ந்தது. ”நெருங்கின பொருள் கைப் பட வேண்டும்”. இந்த வாக்கியம் ஒரு ஆப்த வாக்கியமோ? என்ன சொல்ல வருகிறார் பாரதி? பொம்மையை விரும்பும் குழந்தையாய், பணத்தை விழைகின்ற வியாபாரியாய், உன்னதத்தை தேடும் கலைஞர்களாய், நாம் விரும்பும் பொருள் ஒன்…

  8. கனடாவில் ஒரு வானொலிப் பேட்டி November 16, 2023 வேண்டிய ஒருவர் வலுவாக சிபாரிசு செய்தமையால் இந்த வானொலிப்பேட்டிக்கு ஒப்புக்கொண்டேன், இந்த வானொலி பற்றி அப்போது எனக்குத் தெரியாது. என்னைப் பற்றி பேட்டியாளருக்கு அனேகமாக ஏதும் தெரியாது. இணையத்திலிருந்தும் பலவகை வம்புகளிலிருந்தும் கேள்விகளை தொடுத்துக்கொண்டு கேட்டார். அனேகமாக எல்லா கேள்விகளுமே எதிர்மறையானவை. ‘மடக்கிவிடும்’ நோக்கம் கொண்டவை. பேட்டியில் அரசியல் கேட்ககூடாது, பேசமுடியாது என்று முன்னரே நிபந்தனை விதித்திருந்தேன். ஆனால் வானொலி நெறியாளர் அதற்கு ஒப்புக்கொண்டாலும் பேட்டியில் அதை கடைப்பிடிக்கவில்லை. ஒரு வெளிநாட்டில், சுற்றுலா விசாவில் வந்த பயணி அரசியல் பேச முடியாது என்பதைக்கூட அவர்கள் பொருட்பட…

  9. யாழ்ப்பாணச் செலவு பெருமாள்முருகன் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கை சென்று திரும்பிய திரு.வி.க. தம் பயண அனுபவத்தை ‘எனது இலங்கைச் செலவு’ என்னும் தலைப்பில் விரிவாக எழுதினார். தமிழ்ப் பயண இலக்கியத்தில் முக்கிய இடம்பெறும் கட்டுரை அது. அதில் ‘ஈண்டுச் செலவு என்னுஞ் சொல்லைப் பொருட் செலவென்னும் பொருளில் பெய்தேனில்லை. தரை – நீர்ச் – செலவு என்னும் பொருளில் அச்சொல்லைப் பெய்தேன்’ (ப.57) என்கிறார். செலவு என்னும் சொல் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் பயின்றுவருகிறது. செல்லுதல் – பயணம் என்னும் பொருளுடையது. தலைவன் பொருள் தேடிப் பிரிந்து செல்லுதலைச் ‘செலவு’ என்றும் தலைவியின் துயர் கண்டு அவன் தம் பயணத்தை நிறுத்திவிடுதலைச் ‘செலவழுங்குதல்’ என்றும் அகப்பொருள் இ…

  10. “நாங்கள் அருகில் இருந்திருந்தாலும் எங்கள் தந்தையின் மறைவை இத்தனை மரியாதையுடன் அணுகியிருக்க மாட்டோம். தமிழ் இலக்கிய உலகம் எங்கள் தந்தையின் இறுதி மரியாதையை கண்ணியத்துடன் நடத்தியது” என்று நினைவுகளைக் கூறி நெகிழ்கிறார், ஈழத்து எழுத்தாளர் கே.டானியலின் மகனான டானியல் வசந்தன். கே.டானியல் இலக்கியம் என்பது ஒரு காலம் வரை குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்வியலை மட்டுமே பதிவு செய்தது. சொல்லப்போனால் இலக்கியம், ஒரு பொழுதுபோக்குக் களமாக மட்டுமே இருந்த காலம். அப்போது அதனை ஒருவர் தலைகீழாக மாற்றி அரசியல் படுத்தியவர் எழுத்தாளர் கே.டானியல். ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் வாழ்வியலை, வாழ்க்கை அனுபவங…

  11. 2000க்கு பின் தமிழ் இலக்கிய உலகம் கே.ஜே.அசோக்குமார் ஆகஸ்ட் 13, 2023 1 எழுபதுகளின் தமிழ் சினிமா உலகம் பல புதிய மாற்றங்களைக் கண்டது. புதிய கதைகள், புதிய கூறல் முறைகள், இசையில் இருந்த புதிய பாய்ச்சல் என்று அன்று வந்த திரைப்படங்கள் புதியனவாக இருந்தன. அவற்றுள் ஒரேவகைக்குள் அடக்க முடியாத காட்சி ஊடகத்தை காணமுடியும். கருப்பு வெள்ளையிலிருந்து வண்ணம் என்று வண்ண மாற்றங்கள் நிகழ்ந்தன. பலவகை இசை கோலங்கள் கொண்ட இசையமைப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது இந்த காலகட்டத்தில்தான். இதே மாதிரியான மாற்றத்தை 2000க்குபின் தமிழில் இலக்கிய உலகில் நிகழ்ந்திருக்கிறது. 2000க்கு பின்னான தமிழ் இலக்கிய விரிவிற்கு இணையத்தின் பெருக்கமும், அச்சு ஊடகத்தின் எளிமையாக்கமும…

  12. பட மூலாதாரம்,குட்டி ரேவதி படக்குறிப்பு, இந்தியாவின் பல இடங்களில் வெவ்வேறு பெயர்களில் இசைக்கப்படுவது ஆதித் தமிழிசையே என நிரூபித்த தமிழர், ஆபிரகாம் பண்டிதர். கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 ஆகஸ்ட் 2023, 05:44 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் பல இடங்களில் வெவ்வேறு பெயர்களில் இசைக்கப்படுவது ஆதித் தமிழிசையே என நிரூபித்த தமிழர், ஆபிரகாம் பண்டிதர். பண்டிதர் என்ற பெயருக்கு ஏற்ப தமிழிசை, இயற்கை விவசாயம், சித்த மருத்துவம், புகைப்படத்துறை என பல்வேறு துறைகளில் வல்லவராக திகழ்ந்தவர் ஆபிரகாம் பண்ட…

  13. கதையின் மொழி இசை போன்றிருக்க வேண்டும் March 28, 2023 ஷோபாசக்தி இச்சா, BOX, கொரில்லா உள்ளிட்ட முக்கிய நாவல்களை எழுதிய எழுத்தாளர் ஷோபாசக்தியிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையத்தளத்திற்காக உரையாடினோம். அதிலிருந்து தொகுக்கப்பட்டது. உரையாடியவர்: வாசுகி ஜெயஶ்ரீ – இலங்கையில் உங்களது சொந்த ஊர் எது? இலங்கையின் வடதிசையில் ‘பாக்’ நீரிணையில் மிதக்கும் சின்னஞ்சிறிய தீவுகளில் ஒன்றான ‘லைடன்’ தீவில் அமைந்துள்ள ‘அல்லைப்பிட்டி’ கிராமம் ஒருகாலத்தில் என்னுடைய ஊராக இருந்தது. அங்கேதான் நான் பிறந்து வளர்ந்தேன். இப்போது என்னுடைய குடும்பத்தினர் யாரும் அங்கில்லை. எங்களுடைய குடிசை வீடும் இராணுவத்தால் எரிக்கப்பட்டுவிட்டது. வீடிருந்த காணியோ காடு பற்றிக் கிடக்கிறது. யு…

  14. யுத்தம் கதைகளை உருவாக்கி இரகசியமாக வைத்திருக்கிறது March 2, 2023 ஷோபாசக்தி படைப்பு தகவு பிப்ரவரி -2023 இதழில் சுருக்கப்பட்டு வெளியாகியுள்ள நேர்காணலின் முழுமையான வடிவம் இங்கே. நேர்கண்டவர் :அம்மு ராகவ் -சினிமா, இலக்கியம், போராளி இவற்றில் எந்தவொன்றில் ஷோபாசக்தி நிறைவு பெறுகிறார்? முதலில், நான் போராளி இல்லை என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். என்னுடைய பதின்ம வயதுகளில் நான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆயுதப் பயிற்சி பெற்ற உறுப்பினனாக இருந்தேன். ஆனால், சனநாயக மத்தியத்துவமற்ற, இறுக்கமான அந்த அமைப்பில் தலைமையின் எண்ணங்களையும் கட்டளைகளையும் நிறைவேற்றும் ஆயிரக்கணக்கானோரில் நானும் ஒருவன் மட்டுமே. விசுவாசத்தாலும் இயக்கக் கட்டுப்பாடு என்ற கா…

    • 1 reply
    • 945 views
  15. தரவுகளையும் கதைகளையும் எப்படி நாவலாக மாற்றுவது? ஈழத்தை சேர்ந்த இளம் எழுத்தாளர் ஒருவர் இக்கேள்வியைஎன்னிடம் எழுப்பியிருந்தார். அவர் ஈழப்போரின் பின்னணியில் ஒருஅடித்தட்டு மனிதரின் நிஜக்கதையை நாவலாக எழுதவுள்ளதாகவும், அதற்காக நிறைய தரவுகளையும், நேர்முகங்களைக் கண்டு பதிவுபண்ணியுள்ளதாகவும், இத்தகவல்களையும் உணர்வுகளையும்எப்படித் தொகுத்து நாவலாக எழுத ஆரம்பிப்பது என்று வினவினார். நான் அவரிடம் சொன்ன சில விசயங்களை உங்களில் இளம்நாவலாசிரியர்களுக்கு பகிர்வது பயனுள்ளதாக இருக்குமெனநம்புகிறேன். ஏதாவது ஒரு பாத்திரத்தை தேர்வு பண்ணி அவரது பார்வையில்கதையைச் சொல்லுங்கள். அப்பாத்திரம் உங்கள் மனதுக்குநெருக்கமாக, வித்தியாசமாக இருக்க வேண…

  16. தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் புகழ்வணக்க நினைவேந்தல் (நவ.05 – சென்னை தி.நகர்)

  17. பழங்கால இசைக்கருவியான கின்னாரம்' கருவியை வாசிக்கும் கடைசி நபராக இருக்கிறார், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை சேர்ந்த அருணாசலம். தன் தந்தையிடமிருந்து இக்கலையை கற்றுக்கொண்ட அருணாசலம், கிராமங்களில் கோவலன் கூத்து பாடி வருகிறார். பாணர் மரபில் 'கின்னாரம்' வாசிக்கும் கடைசி நபர் அருணாசலம் தான் என்று நிறுவுகிறார் தமிழ் ஆய்வாளர் பொன்னுச்சாமி.

  18. இலக்கிய சிகரம் பேட்டி - பகுதி 1 2021 டிசம்பரில் இலக்கிய சிகரம் எனும் இதழில் வெளியான பேட்டி இது. நான்கு பகுதிகளாக வெளியிடப் போகிறேன். முதற் பகுதி இங்கே: சொல்வனம், இலக்கிய சிகரம் பேட்டி - ஆர். அபிலாஷ் உங்களைப் பற்றி அறிமுகக் குறிப்பு தர முடியுமா? பதில்: என் அப்பாவுக்கு சொந்த ஊர் நாகர் கோயில் அருகிலுள்ள பத்மநாபபுரம் எனும் சிற்றூர். அம்மாவுக்கு விளவங்கோடு தாலுகாவில் உள்ள காஞ்சாம்புறத்தில் உள்ள, கடலை ஒட்டிய, வைக்கலூர் எனும் பகுதி. நான் பள்ளிக் கல்வி பயின்றது தக்கலையில். கல்லூரிக் கல்வியில் இளங்கலையை நாகர்கோயிலில் உள்ள ஸ்காட் கிறித்துவக் கல்லூரியிலும்,…

  19. நாம் எல்லோரும் ஒவ்வொரு வகையில், வாழ்க்கையில் என்றோ நம்வசம் இருந்து நாம் இழந்துபோன சில விடயங்களை தேடிக்கொண்டே இருப்போம் என நினைக்கிறேன். அப்படி நான் பல பத்து வருடங்களாக (1991 இல் இருந்து) தேடிக்கொண்டிருக்கும் விடயம் ஒரு காலத்தில் ஈழத்தில் மிக பெரும் ஞனரஞ்சக நகைச்சுவை படைப்பாக ஒவ்வொரு தேத்தண்ணி கடையிலும் கேட்ட “லூஸ் மாஸ்டர்” நகைச்சுவை ஒளிநாடா பதிவு. 2015 வாக்கில் யாழிலும் எழுதினேன். இன்றுவரை இந்த நாடகத்தின் ஆடியோ கசட்டை யாரும் எங்கும் தரவேற்றியுள்ளதாக தெரியவில்லை. ஆனால் பின்னர் தேடிப்பார்த்ததில் - 2014 இலேயே இதை எழுதி, நடித்த நாவாலியூர் ஐசக் இன்பராஜா ஜேர்மனியில் வசித்து காலாமாகினார் என்ற சோழியன்( 🙏) அண்ணாவின் பதிவும், அந்த திரியில் பொயட் ஐயா உட்பட பலர…

  20. என்னை ஆச்சரியப்படுத்திய ஆட்டோ டிரைவர்|Chai with Chithra - Social Talk| Writer S. Ramakrishnan Part 1

  21. யாழ் களத்தில் ஒருகாலத்தில் அதிகம் கருத்துக்கள் எழுதிய கருத்தாளர் இரா. சேகர் (யாழ் இணையம் தமிழ்ச்சூரியன்) ஒரு சிறந்த இசையமைப்பாளர். அவர் பற்றிய நிகழ்ச்சி. கேட்டு பாருங்கள்.

  22. எழுத்தாளர் இளங்கோவின் மெக்சிகோ நாவல் வாசிப்பு அனுபவம். காதலும் நம்பிக்கையும் நிறைய வாழ்வை நேசித்த அவனின் அவளின் கதை. வாசித்து முடித்த பிறகும் மனசுக்குள் துயர் நிறைய மெக்சிகோ அலைகிறது.

    • 0 replies
    • 556 views
  23. படைப்பாளியைச் சுரண்டிக் கொழுக்கும் பதிப்பகத்தார்கள்! -எழில் முத்து தமிழ்நாட்டில் பதிப்பகங்களுக்கு பஞ்சம் இல்லை. ஆனால், அதில் நேர்மையாக எழுத்தாளனுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு தான் பஞ்சமோ பஞ்சம்! உச்சபட்ச பித்தலாட்டமும், சுரண்டலும் நிலவும் துறைகளில் பதிப்பகத் துறை முக்கியமானது. சொன்னால் நம்பமாட்டீர்கள், பல அறிவாளிகளை எல்லாம் அதோகதிக்கு ஆளாகியுள்ளார்கள்! நல்ல வேளையாக எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு நேர்மையான மீனாட்சி புத்தக நிலையத்தார் அமைந்தனர்! இந்த பதிப்பகம் வருடம்தோறும் ஜே.கேவுக்கு லட்சக்கணக்கில் ராயல்டி கொடுத்தனர். அவர் இறந்த பிறகும் விற்பனையில் 15% ராயல்டி இன்றும் தந்து வருகின்றனர். ஆனால், பிரபல எழுத்தாளர் சுஜாதாவிற்கு அப்படி அமையவில்லை.ம…

  24. மேடைவதைகள், சில நெறிகள். ஜெயமோகன் February 19, 2022 (Peter Saul ) இலக்கிய கூட்டங்கள் பற்றிய ஒரு செய்தியை அண்மையில் வாசித்தேன். மறைந்த குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை பற்றி அமுதசுரபி ஆசிரியரும் எழுத்தாளர் சங்கத்தலைவருமாக இருந்த விக்ரமன் ( வேம்பு) ஒரு கட்டுரையில் குறிப்பிடும்போது அவர் தமிழின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவர் என்றார். பிறரும் அதை பதிவு செய்திருக்கிறார்கள். கல்கி மறைந்தபோது எஸ்.ஏ.பி. ஆற்றிய உரை தமிழின் தலைசிறந்த உரைகளில் ஒன்று என்று அவருடைய மகன் ராஜேந்திரன் தன் குறிப்பொன்றில் பதிவு செய்திருக்கிறார். விவேகானந்தர், பகவத் கீதை இரண்டிலும் பெரும் ஈடுபாடு கொண்டவராகிய எஸ்.ஏ.பி. விவேகானந்தர் நூற்றாண்டின்போது தமிழகத்தின் பல ஊர்களுக்குச் சென்…

  25. இலத்திரனியல் சாதனங்கள்,இணையம்,தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களின் வருகையாலும் ஆக்கிரமிப்பாலும் வாசிப்பு இன்று எம்மை விட்டு தொலைவாகிக்கொண்டு இருக்கிறது…. இயந்திரமாய் ஓடும் வாழ்க்கையில் கிடைக்கும் சிறிது நேரத்தையும் தொலைக்காட்சிக்கும் தொலைபேசிக்கும் கொடுத்துவிடுகிறோம்… எழுத்தாளர்கள் அதிக நூல்களை வாசிப்பவர்கள்.. அவர்களின் உரையை கேட்கும்போது அவர்கள் வாசித்த பலநூல்களின் அனுபவங்கள் எமக்கு கிடைக்கும்… புத்தகங்களை வாசிக்க நேரமில்லாதவர்கள் ஆர்வத்தையும் சிந்தனையையும் தூண்டும் எழுத்தாளர்களின் உரையை கேட்கும்போது நம்மை அறியாமலே பல்வேறு புத்தகங்களை நாம் படித்துவிடுகிறோம் அவர்களின் உரைகளினூடு… எஸ் ராவின் அருமையான இந்த பேச்சை நேரம் ஒதுக்கி கேட்பவர்கள் நிச்சயமாக இனி நான் தொடர்ந்து இங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.