தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10268 topics in this forum
-
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 12 இடங்களில் அகழாய்வு நடத்த அனுமதி by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/1610526516134302-720x430.jpg தமிழகத்தில் ஒரே நேரத்தில் 12 இடங்களில் அகழாய்வும் 2 இடங்களில் கள ஆய்வும் நடைபெறவுள்ளதாக தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், தொல்லியல் துறையின் பொற்காலமாக இந்தாண்டு இருக்கும் என்றும் 12 இடங்களில் மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரே நேரத்தில் 12 இடங்களில்…
-
- 0 replies
- 576 views
-
-
நெல்லை தாமிரபரணி கரையோர தாழ்வானப் பகுதிகளில் வெள்ளம்: மீட்புப் பணிகள் துரிதம் திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங் கரையோரத்தில் உள்ள தாழ்வானப் பகுதிகளில் நேற்றிரவு வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மழை நீடித்துவரும் நிலையில் தாமிரபரணியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்குக் காணப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளநீர் பாய்வதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் நேற்றிரவு (செவ்வாய் இரவு) தாமிரபரணி…
-
- 0 replies
- 949 views
-
-
6 மாவட்டங்களில் ஜல்லிக் கட்டு போட்டி நடத்தலாம் – தமிழக அரசு அனுமதி! சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது இது தொடர்பில் தமிழக கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் முதன்மைச் செயலாளர் கே.கோபால் வெளியிட்டுள்ள வர்த்தமானியில் மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானியில், “விலங்குகளுக்கு எதிரான கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் சில இடங்களில் 15-ந் திகதியில் இருந்து 31-ந் திகதிவரை ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த ஆளுநர் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தின் பெரியகலையம்புதூர், உள்ளகம்பட்டி, ஏ.வெள்ளோடு, கிருஷ்ணகிரி மாவட்டம் காவ…
-
- 0 replies
- 378 views
-
-
அலங்காநல்லூர் வாடிவாசலில் தமிழ் மரபுவழித் திருமணம்! - ஆட்சியரிடம் அனுமதி கோரிய ஜோடி செ.சல்மான் பாரிஸ்ஈ.ஜெ.நந்தகுமார் கார்த்திகேயன்-வித்யாதரணி ``ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூர் வாடிவாசலில்வைத்து திருமண உறுதியேற்பை நடத்த விரும்பினோம். அதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்க வந்தோம்'’ - கார்த்திகேயன் - வித்யாதரணி மதுரையைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்களான கார்த்திகேயன்-வித்யாதரணி, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் நாளில் வாடிவாசலில்வைத்து தமிழ் மரபுவழியில் திருமணம் செய்துகொள்ள மதுரை கலெக்டரிடம் அனுமதி கேட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. கார்த்திகேயன்-வித்யா…
-
- 0 replies
- 539 views
-
-
கொட்டும் மழையில் திறந்து கிடந்த கால்வாயை மூடிய சிறுவன்-சிறுமிக்கு குவியும் பாராட்டு தாம்பரம்: இன்றைய அவசர உலகில் சமூக பொறுப்பு என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமானது. ஆனால் இது நம்மில் பலருக்கும் இல்லை என்பதே உண்மை. இதனை மாற்றும் வகையில் சமூக பொறுப்பை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் லட்சுமிபுரத்தை சேர்ந்த அசோக்குமார் - கிருஷ்ணவேணி தம்பதியினரின் குழந்தைகள் தேவயாணி (11), விக்னேஷ் (8) நடந்திருப்பது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.கடந்த 8-ந்தேதி கிருஷ்ணவேணியும், விக்னேசும் கொட்டும் மழையில் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.அப்போது சாலையோரம் கழிவுநீர் செல்லும் மழைநீர் கால்வாய் திறந்து கிடப்பதை கண்…
-
- 0 replies
- 633 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிப்பு- சென்னையில் வைகோ தலைமையில் இலங்கை தூதரகம் முற்றுகை Digital News Team முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். வைகோ தலைமையில் சென்னையில் இலங்கை துணை தூதரகம் முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன. இதையடுத்து இன்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரக…
-
- 1 reply
- 546 views
-
-
மு. ஹரிஹரன் பிபிசி தமிழுக்காக கரூர் நகரில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதை ஆய்வு செய்த 'எவிடென்ஸ்' தன்னார்வ அமைப்பு, அதனை ஆணவக்கொலை என தங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறுகிறது. கடந்த புதன்கிழமை பிற்பகல் 1:30 மணி அளவில், கரூரில் உள்ள பசுபதி ஈஸ்வரன் கோயில் முன்பு 23 வயது இளைஞர் ஹரிஹரன் என்பவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியது. பொதுமக்கள் முன்னிலையில், கற்களால் அடித்தும், கத்தியால் குத்தப்பட்டும் பலத்த காயமடைந்த ஹரிஹரன், ரத்த வெள்ளத்தில் சாலையில் துடிக்கும் காணொளி தமிழகம் முழுவதும் பரவி காண்போரை அதிர்ச்சி அடையவைத்தது. இந்த சம்பவம் குறித்த விசாரணையில், வஞ்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெயராம் என்பவரின் மகன் ஹரிஹரன், அதே …
-
- 0 replies
- 663 views
-
-
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்து அகற்றப்பட்டமைக்கு தமிழக முதல்வர் எடிப்பாடி கே.பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான தகவலை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. உலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் இந்த மாபாதக செயலுக்கும் அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எனத…
-
- 8 replies
- 1.2k views
-
-
ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் சிங்கள அரசின் துணைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம்! இலங்கைத் தீவில் யாழ்ப்பாண பல்கலைக் கழக வளாகத்தில் எழுப்பப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் - நினைவு முற்றத்தை இரவு நேரத்தில் விளக்குகளை அணைத்துவிட்டு சிங்கள அரசின் ஏவுதலின் பேரில் இராணுவத்தினர் இடித்துத் தகர்த்துள்ளனர். இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து இனப்படுகொலை செய்த சிங்கள அரசு, படுகொலையின் அடையாளங்கள் கூட இருக்கக்கூடாது என்பதற்காக மாவீரர் துயிலகங்களை இடித்தது. இப்போது யாழ் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்துள்ளது. இது கொடுமையிலும் கொடுமை ஆகும். ஈழத் தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி, சிங்கள இராணுவ…
-
- 0 replies
- 699 views
-
-
அதிமுக முதல்வர் வேட்பாளர் பழனிசாமி: அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம் பட மூலாதாரம், AIADMK படக்குறிப்பு, (கோப்புப்படம்) எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொள்வதாக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெற்று வரும் வேளையில், கட்சியின் தேர்தல் செயல்பாடுகள், முதல்வர் வேட்பாளர் குறித்த விவகாரங்கள் தொடர்பான 16 தீர்மானங்களை அதிமுக நிறைவேற்றியுள்ளது. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முடிவு செய்துள்ளதால், இந்த முடிவை கூட்டணி கட்சிகள் ஏ…
-
- 0 replies
- 389 views
-
-
தமிழகத்தில், 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்குவதற்கு தடை நீடித்ததால், பல திரையரங்குகள் செயல்படவில்லை. தற்போது தமிழக தலைமைச் செயலாளர் கே. சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கொரோனா கால வழிமுறைகளை பின்பற்றி, திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. படங்களை திரையிடுவதற்கு முன்னதாக, எல்லா திரையரங்குகளிலும் கொரோனா விழிப்புணர்வு செய்திகள் வெளியிடப்படவேண்டும் என்றும் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதித்து செயல்படலாம் என…
-
- 7 replies
- 1.1k views
-
-
புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியை எதிர்த்து ஆளும் காங்கிரஸ் போராட்டம்: துணை ராணுவம் குவிப்பு புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியை எதிர்த்து ஆளும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணிக் கட்சியினர் மீண்டும் போராட்டம் நடத்துகின்றனர். இதையடுத்து புதுவையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். புதுவை யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு கிரண் பேடி தடையாக இருப்பதாக குற்றம்சாட்டியும், அவரைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. 300 பேரைக் கொண்ட மூன்று கம்பனி துணை ராணுவப் படையினர் ஆளுநர் மாளிகை மற்றும் போராட்டம் நடைபெறும் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்று …
-
- 0 replies
- 976 views
-
-
கொரோனா தடுப்பூசி : தமிகழகத்தில் இன்று ஒத்திகை! தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு செய்யவுள்ளார். தமிழகத்தில், ஏற்கனவே, 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுதும், 190 இடங்களில், இன்று ஒத்திகை நடைபெற உள்ளது. இதன்படி சென்னை, பெரியமேட்டில் உள்ள, மத்திய மருந்து கிடங்கு, சென்னை ராஜிவ் காந்தி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகளில் ஒத்திகை நடைபெறவுள்ளதுடன், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு செய்யவுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந…
-
- 0 replies
- 348 views
-
-
சீமான் கோரிக்கையை ஏற்ற முதல்வர் மின்னம்பலம் தைப்பூச தினத்தில் பொது விடுமுறை அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழ்க் கடவுளாகிய முருகனைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச தினத்தில் பொது விடுமுறை விடப்பட வேண்டும் என்பது முருக பக்தர்களின் நெடுங்கால கோரிக்கைகளில் ஒன்றாக இருந்து வந்தது. முருகனை தமிழ் நிலத்தின் கடவுள் என வணங்கும் நாம் தமிழர் க…
-
- 6 replies
- 1.5k views
- 1 follower
-
-
106 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் ஜனவரியில் பொழிந்த கனமழை 6 ஜனவரி 2021, 08:54 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, (கோப்புப்படம்) கடந்த 106 ஆண்டுகளுக்கு பின்னர், ஜனவரி மாதத்தில் சென்னை நகரத்தில் பலத்த மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குளிர்கால மாதமான ஜனவரி முதல் வாரத்தில், சென்னையில் பெய்த கனமழை, சராசரியை விட 3,000 சதவீதத்திற்கும் அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நூறு ஆண்டுகளுக்கும் மேலான வானிலை மாற்றம் குறித்த பதிவுகளை சென்னை வானிலை …
-
- 1 reply
- 952 views
-
-
திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க தமிழக அரசு கடந்த 4ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை உடனே ரத்து செய்யும்படி அம்மாநில அரசுக்கு இந்திய உள்துறை உத்தரவிட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில், கொரோனா பரவல் தடுப்பு தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் 2020ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதியிட்ட வழிகாட்டுதலுக்கு உட்பட்டு செயல்படுமாறும் இந்திய உள்துறை கேட்டுக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் கே. சண்முகத்துக்கு இந்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஜனவரி 5ஆம் தேதியிட்டு எழுதிய கடிதத்தில், இந்திய உள்துறை கடைசியாக கடந்த டிசம்பர் 28ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது என்று சுட்டிக…
-
- 0 replies
- 537 views
-
-
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் 3 பேர் கைது - அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் 6 ஜனவரி 2021, 04:17 GMT படக்குறிப்பு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் புதிதாக கைது செய்யப்பட்டவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவருமான அருளானந்தம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ போலீசார் இந்த வழக்கு தொடர்பாக பொள்ளாசியை சேர்ந்த மேலும் 3 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், இவர்கள் மூவரையும் ஜனவரி 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உட்பட பல…
-
- 1 reply
- 1.1k views
-
-
மேடையில் ஒரே இருக்கை... கார்ப்பரேட் ஸ்பான்ஸர்... தனி ஹெலிகாப்டர் பயணம்! - கமலைச் சுற்றும் சர்ச்சைகள் இரா.செந்தில் கரிகாலன் கமல் கமல்ஹாசன் பிரசாரம் தொடங்கியதில் இருந்தே அவர்மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ''என்னப் பார்த்துக் கேட்குறாங்க, என்ன நீங்க ஹெலிகாப்டர்'ல வந்து இறங்குறீங்கன்னு, ஐயா, நான் 230 படத்துக்கும் மேலே நடிச்சுருக்கேன். நான் ஹெலிகாப்டர் இல்ல, போயிங் விமானம் கிடைச்சா, மக்களைச் சீக்கிரம் சந்திக்க அதையும் எடுத்துகிட்டு வருவேன். நான் ஹெலிகாப்டர்ல போகணும் ஏழைகள் எனக்குப் பணத்தைக் கொடுங்கன்னு நான் கேட்கல, இது எங்க பணம். அதனால கேள்வி கேட்காதீங்க...டீக்கடை, பூக்கடை வைத்திருந்தவர்கள் இன்னைக்குப் பெரு…
-
- 0 replies
- 800 views
-
-
சிறப்புக் கட்டுரை: போகாத ஊருக்கு வழி தேடும் பாரதீய ஜனதா கட்சி! மின்னம்பலம் ராஜன் குறை பாரதீய ஜனதா கட்சிக்கு ஒரு கருத்தியல் அடிப்படை உண்டு. அது இந்துத்துவம். அது வெறும் மத நம்பிக்கையோ, கடவுள் நம்பிக்கையோ கிடையாது. மாறாக அது இந்துக்கள் என்ற ஒற்றை அடையாளத்தில் கலாசார தேசியத்தை, அகண்ட பாரதத்தை கட்டமைப்பது. இந்துக்கள் என்ற அடையாளம் என்று சொல்லும்போது சனாதன ஜாதீய இந்து அடையாளம் அதற்குள் புகுந்துகொள்கிறது. அதனால் இஸ்லாமிய, கிறிஸ்துவ வெறுப்புடன் பார்ப்பனீய, ஜாதீய, ஆணாதிக்க சிந்தனையும் இந்துத்துவத்தில் புகுந்துவிடுகிறது. அதற்கெல்லாம் மாற்றாக, மறுப்பாக உருவானது திராவிடம் என்ற பண்பாட்டு அடையாளமும், அதன் மாநில சுயாட்சி கோரிக்கையும், கூட்டாட்சி தத்துவமும். அதனா…
-
- 0 replies
- 892 views
-
-
பாஜக போட்ட ரஜினிகாந்த் கணக்கும் தற்போது அதன் முன் உள்ள சவாலும் பத்ரி சேஷாத்ரி அரசியல் விமர்சகர் பட மூலாதாரம், GETTY IMAGES (இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துகள். பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.) ரஜினி, யானை போன்றவர். அவர் கட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொன்னாலும் சரி, கட்சி ஆரம்பிக்கமாட்டேன் என்று சொன்னாலும் சரி, ஊடகங்களும் பிற அரசியல் கட்சியினரும் அவரைப் பற்றி விவாதிப்பதில் குறைவே இல்லை. ரஜினி உண்மையிலேயே ஒரு கட்சியை ஆரம்பித்து மாநிலம் முழுதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்திருந்தாலுமே தமிழக அரசியலில் அவர் எந்த …
-
- 0 replies
- 732 views
-
-
ரஜினிகாந்த் பின்வாங்கியதற்கான உண்மையான காரணம் என்ன? எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சியொன்றை ஆரம்பிக்கவிருந்த நடிகர் ரஜினிகாந்த் தன எண்ணத்தைத் திடீரென ஒத்திப்போட்டதற்கு அவரது உடல்நிலை மட்டும் காரணமில்லை எனத் தற்போது வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ‘அண்ணாத்தே’ படப்படிப்பின்போது திடீரெனச் சுகவீனமுற்றார் எனக்கூறி ரஜினி மருதுவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது இரத்த அழுத்தம் நிலையற்றதாக இருந்தமையே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது. அதில் உண்மையிருந்தாலும், சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்குட்பட்டவர்களுக்கு இவ்வறிகுறி ஆச்சரியப்படும் ஒரு விடயமல்லவெனவும், இப்படியான பிரச்சினைகளை அறிந்திருந்தும் ரஜினி தனது…
-
- 4 replies
- 1.2k views
-
-
Dec 31, 2020 02:31:44 PM 0 302891 உறவினர்கள் கேலி செய்வதால் 3 நாட்களாக வீட்டிற்கு செல்லவில்லை - ரஜினிகாந்த் ரசிகர்கள் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்பதை குடும்பத்தினர் கேலி செய்வதால் கடந்த மூன்று நாட்களாக வீட்டிற்கு செல்ல முடியாமல் சென்னை போயர்ஸ் கார்டனில் உள்ள இல்லத்தின் முன்பு காத்திருப்பதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்ததை தொடர்ந்து அவரது இல்லத்திற்கு ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர். https://www.polimernews.com/dnews/132877?fbclid=IwAR2WVqJaJQyisnagGZes1ULyruVrjyNUyJqA0Em5AFDcEDnJd5q7lWut1JM
-
- 2 replies
- 1.1k views
-
-
சட்டமன்ற தேர்தலில்... விடுதலை சிறுத்தைகள், தனிச் சின்னத்தில் போட்டி சட்டமன்ற தேர்தலில் விசிக தனிச் சின்னத்தில் போட்டியிடும் என கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், புதுச்சேரியில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம் என அரசாணை பிறப்பித்ததற்கு, முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து நன்றி தெரிவித்ததாக கூறினார். மேலும், தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, வரும் தேர்தலில் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும் என்றும் திருமாவள…
-
- 0 replies
- 422 views
-
-
`வேளாண் சட்டங்களை எதிர்ப்பதே சட்டவிரோதமா?' - எடப்பாடிக்கு எதிராக கொதிக்கும் விவசாயிகள் கு. ராமகிருஷ்ணன்ம.அரவிந்த் விவசாயிகள் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதகங்கள் குறித்து பொதுக்கூட்டங்கள் நடத்தக்கூட அனுமதி மறுக்கப்படுவதாக விவசாயிகள் கொந்தளிக்கிறார்கள். மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக்கோரி, நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இக்கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த பல வாரங்களாக நடத்தி வரும் தொடர் போராட்டம், உலக அளவில் கவனம் ஈர…
-
- 0 replies
- 762 views
-
-
கோவை: `அவங்களை வெளிய அனுப்புங்க’ - அ.தி.மு.க பெண் நிர்வாகியிடம் கொதித்த ஸ்டாலின்... என்ன நடந்தது? குருபிரசாத்தி.விஜய் கோவை பெண் கோவை தொண்டாமுத்தூர் அருகே தி.மு.க நடத்திய மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் அ.தி.மு.க பெண் இடையூறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தேவராயபுரம் பகுதியில் தி.மு.க சார்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோரை அவர் கடுமையாக விமர்சித்தார். மேலும், அமைச்சர் வேலுமணியின் உள்ளாட்சித்துறையில் நடைபெற்ரிருக்கும் ஊழல்கள் குறித்தும் பேசினார். …
-
- 0 replies
- 617 views
-