தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10293 topics in this forum
-
சிறப்புக் கட்டுரை: எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி வரை! எதிர் புரட்சியின் வரலாறு! மின்னம்பலம் ராஜன் குறை புரட்சி நடிகர் என்றும் பின்னால் அரசியல் கட்சி துவங்கி தலைவரான பிறகு புரட்சித் தலைவர் என்றும் அறியப்பட்டவர் எம்.ஜி.ஆர். இந்த புரட்சி என்ற வார்த்தையின் பொருள் நெகிழ்வானது. உள்ள நிலையினை மாற்றி அமைப்பது, அப்படி அமைக்க துணிகரமாக முயல்வது போன்றவை புரட்சிகர செயல்பாடுகள். பொதுவாக ஜாதிய ஏற்றத்தாழ்வு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, பாலியல் சமமின்மை இவற்றை சமன் செய்ய முயல்வதும், அரசியல் ரீதியாக இந்த பாகுபாடுகளை கடந்து எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் சம உரிமை பெற்றவர்கள் என்று கருதுவதுமே புரட்சிகர முன்னேற்றங்கள்தான். எம்.ஜி.ஆர் துவக்க காலத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் …
-
- 0 replies
- 635 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கோவையில் கடந்த ஆண்டு ஏப்ரலில் அதிகபட்ச வெப்பநிலை பதிவான நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே கனமழை பதிவாகியுள்ளது. இது வெப்பச்சலன மழை என்றும், வரும் நாட்களில் இது இன்னும் அதிகமாகும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். வெப்பச்சலனம் மட்டுமின்றி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையும் கூட தற்போதைய மழைக்கு காரணம் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலையின் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சத்தியமூர்த்தி பிபிசி தமிழிடம் தெரிவித்தார். கோவையில் கடந்த ஆண்டு கோடையில் அதீத வெப்பம் நிலவிய நிலையில், இந்தாண்டு அதிக மழை பெய்துள்ள…
-
- 0 replies
- 256 views
- 1 follower
-
-
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கம்: ஜெ. அதிரடி- பின்னணி என்ன? முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம், வேளச்சேரி பகுதி செயலர் எம்.கே.அசோக் எம்எல்ஏ உள்பட ஐந்து பேரை கட்சி பொறுப்பில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அதிரடியாக நீக்கியுள்ளார். இவர்கள் அனைவரும் நிதியமைச்சர் ஓபிஎஸ்-ஸின் தீவிர ஆதரவாளர்கள் ஆவர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் அதிமுகவில் உட்கட்சி விவகாரங்களை களை எடுக்க கட்சி பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தீவிரம் காட்டி வருகிறார். நிதியமைச்சராக உள்ள ஓபிஎஸ் மீது நேரிடையாக இல்லாமல் மறைமுகமாக ஜெயலலிதாவின் நடவடிக்கை பாய்ந்துள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் துணை சபாநாயக…
-
- 0 replies
- 591 views
-
-
மதுரை கூத்தியார்குண்டு அருகில் உள்ள உச்சபட்டி அகதிகள் முகாமில் கடந்த 25 ஆண்டுகளாக மனிதர்கள் வதை செய்யப்படுகிறார்கள். அரசாங்கம் இவர்களை தங்களின் கட்டுக்குள் வைத்திருக்க கையாளும் வழிகள் அனைத்துமே மனித உரிமை மீறல் தான். முகாமில் இருப்பவர்களை CHECKING செய்கிறோம், ROLL CALL எடுக்கிறோம் என்கிற பெயரில் இங்கே வசிக்கும் 1600க்கும் மேற்பட்டவர்களை நினைத்த நேரத்தில் அங்குள்ள மைதானத்தில் ஒன்று கூடச் சொல்வது இந்த வழக்கங்களில் ஒன்று, அதற்கு ஒரு உறுதியான நாள், நேரம் கிடையாது. இவர்களில் வேலைக்கு செல்லும் ஆண்கள்/ பெண்கள், பள்ளி/கல்லூரியில் பயிலுபவர்கள் என அனைவரும் இவர்கள் அழைக்கும் போது எல்லாம் அந்த CHECKINGக்கு வந்து விட வேண்டும். இந்த CHEKCING என்பது மாதம் ஒருமுறையாக இருந்து பின்னர் 15 ந…
-
- 11 replies
- 1.8k views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், மோகன் பதவி, பிபிசி தமிழ் 28 நிமிடங்களுக்கு முன்னர் ரூ.100 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சி மோசடியில் 5 மாநில காவல்துறையினரால் முக்கியப் புள்ளியாக செயல்பட்ட ஒருவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி சைபர் கிரைம் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இந்தியா முழுவதும் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களிடம் பணத்தை இழந்துள்ளனர். கோவையில் தொடங்கப்பட்ட நிறுவனம் இந்தியா முழுவதும் ரூ. 100 கோடி கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டது எப்படி? அவர்களிடம் பணத்தை இழந்தவர்களால் அதனை திரும்பப் பெற முடியுமா? அந்த நிறுவனத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? ஹாஷ்பே மோசடி நடந்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAG…
-
- 0 replies
- 159 views
- 1 follower
-
-
பிரிவினையை உருவாக்குபவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை… ஸ்டாலின் விமர்சனம்! 28 Jun 2025, 11:18 AM ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்தநிலையில், மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகிற துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை மக்கள் உறுதி செய்யும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுக்கப்படுகிறது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொண்டர்களுக்கு ஸ்டாலின் இன்று எழுதியுள்ள கடிதத்தில், “திமுக அரசின் திட்டங்களும் சாதனைகளும்! அண்ணா காலம் முதல் உங்களில் ஒருவனான என் தலைமை வரை இந்த உறவுதான் இந்த இயக்கத்தின் பலம். நமக்கிடையிலான உணர்வுமிக்க உறவ…
-
- 0 replies
- 152 views
-
-
பட மூலாதாரம்,KAMARAJARUDAN KAAL NOOTRANDU கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 17 ஜூலை 2025, 13:52 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "காமராஜருக்கு குளிர்சாதன வசதி இல்லாவிட்டால் உடலில் அலர்ஜி வந்துவிடும் என்பதால் அனைத்துப் பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதியைச் செய்து கொடுத்தார் முதலமைச்சராக இருந்த கருணாநிதி" என தி.மு.க எம்.பி திருச்சி சிவா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது இறுதிக் காலத்தில், தமிழ்நாட்டைக் காப்பாற்றுமாறு கருணாநிதியிடம் காமராஜர் கேட்டுக் கொண்டதாகவும் திருச்சி சிவா பேசினார். "இது உண்மைக்குப் புறம்பானது" என காங்கிரஸ் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காமராஜர் தொடர்பாக திருச்சி சிவா பேசிய கருத்தில் உண்மை உள்ளதா? …
-
- 1 reply
- 255 views
- 1 follower
-
-
அ திமு க, தி மு க. தே தி.மு க தமிழர்களுக்கு எதிரானவை?
-
- 0 replies
- 497 views
-
-
தமிழகத்தின் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள்! மின்னம்பலம் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் தீவிர கொரோனா பாதிப்பு கொண்ட சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடையும் நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத் துறை, நாடு முழுவதும் உள்ள 733 மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாக பிரித்து புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 133 மாவட்டங்கள் சிவப்பு மண்டத்தில் இடம்பிடித்துள்ளன. உத்தர பிரதேசத்தில் 19, மகாராஷ்டிராவில் 14 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் இடம்பிடித்துள்ளன. மூன்றாவது இடத்தில் 12 மாவட்டங்களுடன் தமிழகம் உள்ளது. பெருநகரங்களான மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதர…
-
- 0 replies
- 628 views
-
-
போலி இ-பாஸ் தயாரித்து ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை -சென்னையில் அரசு அதிகாரிகள் உள்பட 5 பேர் அதிரடி கைது சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்து ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாக அரசு அதிகாரிகள் 2 பேர் உள்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். பதிவு: ஜூன் 25, 2020 04:30 AM சென்னை, சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்து ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாக அரசு அதிகாரிகள் 2 பேர் உள்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கொரோனா தாக்குதலையொட்டி சென்னையில் இருந்து வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் செல்வதற்கு அரசு இ-பாஸ் வழங்கி வருகிறது. ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பித்தால் மருத்துவம், திருமணம் மற்றும் இறப்பு காரியங்களுக்கு இ-பாஸ் வழங்கப்படுகிறது. இதனை அரசு அதிகார…
-
- 0 replies
- 387 views
-
-
தமிழக அரசும் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் எவ்வளவு முறை எதிர்ப்பு தெரிவித்தாலும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தாலும் இன்னமும் அடங்காத அமைப்பாகவே இலங்கை அரசு உள்ளது. (ஒரு வேலை இந்திய மத்திய அரசு இந்த விடயத்தை கண்டு கொள்ளவில்லையோ?) ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் 18 பேரை இலங்கைக் கடற்படையினர் நேற்று பிடித்துச் சென்ற நிலையில், இன்றும் 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். 652 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் , தனுஷ்கோடி - கச்சத்தீவு இடையே மீன்பிடித்து விட்டு, இன்று அதிகாலையில் கரை திரும்பிக் கொண்டிருந்தனர். ஆதாம்பாலம் அருகே வந்த போது, 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகளையும், அதில் இருந்த மீனவர்களையும் இலங…
-
- 0 replies
- 662 views
-
-
துப்பாக்கி சூட்டில் மீனவர்கள் காயம்: இலங்கை கடற்படை அட்டூழியம் காரைக்கால், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாகை, காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்திய கடல் எல்லையில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், காரைக்காலைச் சேர்ந்த தினேஷ், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக கரை திரும்பினர். காயம் அடைந்த தினேஷ், அரவிந்தன் ஆகியோர் ஜிப்…
-
- 0 replies
- 352 views
-
-
இலங்கை தமிழர்கள் பதிவு செய்வது கட்டாயம்: காவல் நிலையங்களுக்கு வருபவர்களை அலைக்கழித்தால் நடவடிக்கை - ஆய்வாளர்களுக்கு எச்சரிக்கை சென்னையில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்வது கட்டாயம். பதிவு செய்ய வருபவர்களை அலைக்கழித்தால் சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உச்சக்கட்ட போர் நடந்தபோது அங்கிருந்து ஏராளமான தமிழர்கள் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். குறிப்பாக தமிழகத் துக்கு அதிக அளவில் அகதிகளாக வந்தனர். தமிழகத்தில் தற்போது 113 முகாம்களில் 65 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் உள்ளனர். சென்னையில் மட்டும் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். மற்ற இடங் களில் 35 …
-
- 0 replies
- 486 views
-
-
தூத்துக்குடி மடத்தூர், புதிய பஸ் நிலையம், அண்ணாநகர், பழைய பஸ் நிலையம் தேவர் புரம் ரோடு, காய்கறி மார்க்கெட் பகுதி, ஜார்ஜ்ரோடு, லயன்ஸ் டவுன், பீச் ரோடு மற்றும் பல பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்களுக்கு நேற்று அதிகாலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மேலும் அவர்கள் கண் எரிச்சல் மற்றும் வறட்டு இருமலாலும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு படையெடுத்தனர். ரோட்டில் நடந்து சென்றவர்கள் மற்றும் வாகனங்களில் சென்றவர்களுக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் தூத்துக்குடி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. ஏதாவது தொழிற்சாலையில் இருந்து ரசாயன கசிவு ஏற்பட்டதால் மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல், வறட்டு இருமல் ஏற்பட்டிருக்கலாம் என கரு…
-
- 2 replies
- 547 views
- 1 follower
-
-
2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்குவதற்கான வர்த்தமானியை வெளியிட்டது தமிழக அரசு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்குவதற்கான வர்த்தமானி அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. தமிழகத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய தொகுப்புடன் பொங்கல் பரிசு 2500 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த நிலையில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்க வர்த்தமானி அறிவிப்பை தமிழக அரசு இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளது. 2.10 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. அரிசி அட்டைகளாக மாற்றம் செய்யக்கூடிய 3,75,235 சர…
-
- 1 reply
- 546 views
-
-
ஒரே வாரத்தில் இரு பெரும் அடி.. ஜெயலலிதா நிர்வாக திறமை பிம்பம் தூள் தூளானது! ஜெயலலிதா அரசு நிர்வாகத்தில் நடைபெற்ற இருபெரும் நிர்வாக குளறுபடிகள் தற்போது அம்பலமாகியுள்ளது. சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறந்த நிர்வாகத் திறன் மிக்கவர் என்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பிம்பத்தின் மீது இவ்வாரத்தில் மட்டும் இரண்டு பெரிய அடிகள் விழுந்துள்ளன. அரசு ஊழியர்கள் 2 லட்சம் பேரை வேலையை விட்டு நீக்கியவர், இரும்பு பெண்மணி என்றெல்லாம் அவரது ஆதரவாளர்களால் புகழப் பெற்றவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் அவரது நிர்வாக திறனை கேள்விக்குள்ளாக்கும் இரு அதிரடி சம்பவங்கள் இந்த வாரத்தில் நடந்துள்ளன. ராம மோகன ராவ் முதலாவத…
-
- 0 replies
- 584 views
-
-
ராம மோகன ராவின் மருத்துவனை ஒப்பந்த ஊழல்... அதிர வைக்கும் ஆதாரங்கள்?! அரசு மருத்துவமனைகளில் துப்புரவுப் பணிகளைத் தனியாருக்கு வழங்குவதில் நடைபெற்ற ஒப்பந்தத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் முறைகேடு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ அதிகாரிகளிடம் ஆதாரங்களை வழங்கி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் துப்புரவுப் பணிகளை தனியார் நிறுவனங்கள் மூலம் செய்யப்படுகின்றன.தனியார் நிறுவனங்களைத் தேர்வு செய்ய டெண்டர்முறை பின்பற்றப்படுகின்றது.கடந்த 2013 - ம் ஆண்டு மருத்துவமனைகளில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ள பத்மாவதி ஹாஸ்பிட்டாலிட்டிஸ் (Padmavathi Hospitality And Facility Management Servi…
-
- 0 replies
- 451 views
-
-
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்கள் விடுவிப்பு! தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி, அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்கான வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே சன் குழும தலைவர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலா க்கத்துறை தாக்கல் செய்திருந்த வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட…
-
- 1 reply
- 452 views
-
-
உச்சகட்ட அரசியல் குழப்பத்தில் தமிழகம்... ஆளுநர் மவுனம் சாதிப்பது சரிதானா? ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிகார மோதலால் நொடிக்கு நொடி பரபரப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. 30 ஆண்டுகளுக்கு பின்னர் ஆளும் கட்சியில் முதல்வர் யார் என்ற அதிகாரப்போட்டி இப்போது தான் ஏற்படுகிறது. யார் முதல்வர் என்பதில் தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்குமிடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 5ம் தேதி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டிய அ.தி.மு.க., கட்சியின் சட்டமன்ற குழுத்தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவை தேர்வு செய்தது. இதையடுத்து அவரை முதல்வராக பதவியேற்க அழைக்குமாறு சசிகலா ஆளுநரைக் கேட்டுக்கொண்டார். தனக்கு…
-
- 1 reply
- 467 views
-
-
தமிழகத்தில் மன்னார்குடி கும்பலின் பினாமி ஆட்சி நேற்று துவங்கியது. அதன் 'ரப்பர் ஸ்டாம்ப்' முதல்வராக இடைப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றார். சசி சொந்தங்கள் போடும் உத்தரவுகளை ஏற்று, தலையாட்டி பொம்மை களாக செயல்பட 30 மந்திரிகளும் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். ஜெயலலிதாவின் திடீர் மறைவுக்கு பின், ஓ.பன்னீர்செல்வம் புதிய முதல்வராக பொறுப்பேற் றார். அவரது ஆட்சியில் அரசு நிர்வாகம் வேகமாக செயல்பட துவங்கியது. மத்திய - மாநில உறவும் மேம்பட ஆரம்பித்தது. இதற்கிடையில், 'வர்தா' புயல் நிவாரண பணிகள், ஜல்லிக்கட்டு போராட்டம், அதை முறியடிக்க அவசர சட்டம், கிருஷ்ணா நதி நீருக்காக, ஆந்திர அரசுடன் நடத்திய பேச்சு என, பன்னீர் ஆட்சியின் பலன்கள், மக்களை சென்றடைந்…
-
- 0 replies
- 402 views
-
-
டெல்லி மேல்-சபையில் தமிழக எம்.பி.க்கள் 6 பேரின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் 6 இடங்களுக்கு 7 பேர் போட்டியிடுவதால் ஓட்டுப்பதிவு நடக்கிறது. டெல்லி மேல்-சபைக்கு தமிழ்நாட்டில் இருந்து சமீபகாலமாக போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வாகி வந்தனர். 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. டெல்லி மேல்-சபை தேர்தலுக்கு சென்னை தலைமை செயலக கட்டிடத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள சட்டமன்ற பேரவை குழுக்கள் கூடும் அறையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 234 எம்.எல்.ஏ.க்கள் என்ற அடிப்படையில் அத்துடன் 10 சதவீதம் கூடுதலாக வாக்குச்சீட்டுகள் அச்சிடப்…
-
- 0 replies
- 324 views
-
-
5 முக்கிய கோப்புகளில் கையெழுதிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!
-
- 0 replies
- 144 views
-
-
சென்னை: இளவரசனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள திவ்யா விரும்பினால் உரிய பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால், இளவரசனின் உறவினர்கள் அதிகம் பேர் இருப்பதால் இறுதிச் சடங்கில் திவ்யா கலந்து கொள்ள இயலாமல் உள்ளது என்று வழக்கறிஞர் வைகை சென்னை நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இளவரசன் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள திவ்யா மற்றும் அவரது குடும்பத்தினர் விரும்பினால், அது குறித்த கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் திவ்யா தரப்பினர் அளிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர், அங்குள்ள சட்டம் ஒழுங்கு பிரச்னையை கணக்கில் எடுத்துக் கொண்டு மனு குறித்து பரி…
-
- 0 replies
- 1.3k views
-
-
பேரவை நிர்வாகிகள் நியமன விவகாரம் : கணவருடன் தீபா குடுமிப்பிடி சண்டை ஜெ., அண்ணன் மகள் தீபா, புதிதாக துவக்கி யுள்ள பேரவைக்கு, நிர்வாகிகள் நியமிக்கும் விவகாரத்தில், அவருக்கும், அவரது கணவருக் கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள் ளது. பதவி தொடர்பாக, குடுமிப்பிடி சண்டை நடக்கிறது. 'எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை' என்ற அமைப்பை, தீபா துவக்கி உள்ளார். இதன் தலை வர் மற்றும் செயலராக, தன்னுடன் இருக்கும் தம்பதியரான ராஜா - சரண்யா ஆகியோரை நியமித்துள்ளார். இதற்கு, பேரவை ஆதரவாளர் கள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந் நிலையில், சென்னையில், நேற்று முன் தினம் இரவு, வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பிரதா…
-
- 2 replies
- 561 views
-
-
எது 3ஆவது பெரியக் கட்சி?: கே.எஸ்.அழகிரி மின்னம்பலம் காங்கிரஸ் மட்டுமே மூன்றாவது பெரியக் கட்சி என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைந்துள்ளது. திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 25 தொகுதிகளில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும், 29 லட்சத்து 67ஆயிரத்து 853 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில், யார் மூன்றாவது பெரிய கட்சி என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள…
-
- 7 replies
- 1.1k views
-