தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10261 topics in this forum
-
கப்டன் பிறந்தநாள் – 71 நிமிடங்களில் 71 டாட்டூ. விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. விஜயகாந்த் பிறந்து 71 ஆண்டுகள் இன்று நிறைவடைவதை ஒட்டி 71 நபர்களுக்கு டாட்டூ போட்டு உலக சாதனை நிகழ்வு நடைபெற உள்ளது. 71 பேருக்கு 71 நிமிடங்களில் விஜயகாந்த் முகத்தை டாட்டூ போட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட உள்ளது. கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் என 71 பேருக்கு 71 டாட்டூ கலைஞர்கள் ஒரே நேரத்தில் 71 நிமிடத்தில் டாட்டூ போடுகின்றனர். டாட்டூ போடும் நிகழ்ச்சியை பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 4 replies
- 739 views
-
-
கமலின் அரசியல் எதிர்காலம் ஆர். அபிலாஷ் சமீபத்தில் கமலஹாசனின் அரசியல் எதிர்காலம் பற்றி சாருஹாசன் சொன்ன கருத்துக்களை ஒட்டி ஒரு டிவி சேனலில் விவாதம் நடந்தது. நிகழ்ச்சியில் இரண்டு பா.ஜ.க ஆதரவாளர்கள். ஒரு அதிமுக பிரதிநிதி. இன்னொருவர் கமல் ஆதரவாளர். அவர் டை கட்டி, சட்டையை இன் பண்ணி டிவி திரையே பிதுங்கும் வண்ணம் அமர்ந்திருந்தார். யார் என்ன சொன்னாலும் இடையிடையே வந்து “ஊழலை எதிர்க்கிறோம், எதிர்ப்போம், கமல் வந்தால் ஊழல் இல்லாத சமூகம் மலரும் பார்த்திக்குங்க…” என திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். வெளியே நல்ல மழை. நானும் நண்பருமாய் டீ அருந்தியபடி டீவி பார்க்கிறோம். நண்பர் வெளியே கடுமையான கமல் எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டவர். ஆனால் உள்ளுக்குள் கமல் வெறியர்.…
-
- 0 replies
- 747 views
-
-
கமலின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலடி எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதி அல்ல. அப்படி ஒரு பயங்கரவாதி இருப்பின் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் தஜீந்தர் பால் சிங் பாகா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “பயங்கரவாதத்தை ஒரு மதத்திற்குள் வரையறுப்பது தவறு. இந்தியாவின் தேசத் தந்தையான காந்தியைக் கொன்றவரை இந்து பயங்கரவாதி என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஆயிரக் கணக்கான சீக்கியர்களைக் கொன்று குவித்த ராஜீவ் காந்தியை அவர் எவ்வாறு அழைப்பார்? நாட்டில் மக்களிடையே மத அடிப்படையில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியுள்ள கமல்ஹாசன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்…
-
- 7 replies
- 1.5k views
- 1 follower
-
-
கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பட்டரி டோர்ச் சின்னம் March 10, 2019 நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பட்டரி டோர்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த ஆண்டு பெப்ரவரி 21ம் திகதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்திருந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 40 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. இதற்காக, தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கமல்ஹாசன் விருப்ப மனுக்களை பெற்று வருகின்ற நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பட்டரி டோர்ச் சின்னத்தை தேர்தல் ஆணையகம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதேவேளையில் தங்களுக்கு மோதிரம் சின்னம் வழங்க …
-
- 5 replies
- 777 views
-
-
கமலுக்குப் பயந்து காணாமல் போன அமைச்சர்களின் இமெயில் முகவரிகள்!! உங்களது அமைச்சர்கள் மீதான புகார்களை அவர்களுக்கே இணையதளங்கள் மூலம் அனுப்புங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்ட அடுத்த சில மணி நேரங்களில் அரசு இணையதளத்தில், அமைச்சர்களின் பக்கங்களில் இணையதள, இமெயில் முகவரிகள் நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்களின் புரபைல் பக்கத்தில் இடம் பெற்றிருந்த இமெயில், இணையதள முகவரிகள் மாயமாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் இணையதளத்தில் திடீரென அனைத்து இமெயில் ஐடிகளும் நீக்கப்பட்டிருப்பது ஏன் என்ற குழப்பமும் எழுந்துள்ளது. அதேசமயம், தமிழக சட்டசபை இணையதளத்திற்குப் போய்ப் பார்த்தால் அங்கு எம்.எல்.ஏக்களின் இமெயில் ஐடிகள் உள்ளன. க…
-
- 0 replies
- 448 views
-
-
கமலுடன் இணைந்து பணியாற்றினால் முதல்வர் வேட்பாளர் யார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார். 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிசயம் நடக்கும் என்றும் ரஜினி கூறினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், கோவாவில் நேற்று வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளர் விருதுபற்றி தனது கருத்தை தெரிவித்தார். ‘'நேற்று நான் வாங்கிய விருதுக்கு தமிழக மக்கள்தான் காரணம். எனவே அந்த விருதை தமிழக மக்களுக்கே சமர்ப்பிக்கிறேன்'' என்று விருதுபற்றி ரஜினி கூறினார். தொடர்ந்து, ‘கமலும் நீங்களும் இணைந்து பணியாற்றுவதாக கூறினீர்கள். அப்படியென்றால் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுகிறதே?' என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘தேர்தல் நேரத்தில்…
-
- 5 replies
- 1.6k views
-
-
கமல் vs ரஜினி, முதல்வர் போட்டியில் கமலுக்கு என்ன ரேங்க்..?! சர்வே ரிசல்ட் நடிகர் கமல்ஹாசன் "மக்கள் நீதி மய்யம்" என்ற கட்சியை மதுரை ஒத்தக்கடையில் தொடங்கினார். அங்கு பேசிய அவர், "மாணவர்களுக்கு நல்ல, தரமான கல்வி கிடைக்க வேண்டும். சாதி, மதம் போன்றவற்றை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். இதெல்லாம் தனி ஒருவனாக என்னால் செய்ய முடியாது. நீங்களும் என்னுடன் சேர்ந்து பணியாற்றுவீர்களா" என்று அங்கு கூடியிருந்த மக்களிடம் கேட்டதுடன், கட்சியின் சில கொள்கைகளையும் விளக்கினார். அவர் கட்சித் தொடங்கிருப்பது தொடர்பாக 'விகடன்' இணையதளத்தில் சர்வே எடுக்கப்பட்டது. சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான பதில்களும் கீழே... …
-
- 0 replies
- 736 views
-
-
கமல் அரசியல் பிரவேசம்: பிப்.,21ல் கட்சி பெயர் சென்னை: பிப்.,21ம் தேதி கட்சியின் பெயரை அறிவிக்கும் கமல், ராமநாதபுரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை துவங்குகிறார். இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜனநயகத்தின் நாயகர்களை சந்திக்க சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். உங்கள் ஆதரவோடு இந்த பயணத்தை துவக்குகிறேன். தலைவன் வழிநடத்தவே இருக்க வேண்டும். என்னை வளர்த்தெடு…
-
- 2 replies
- 974 views
-
-
`தி.மு.க, அ.தி.மு.க என இருவருமே அகற்றப்பட வேண்டியவர்கள்தான். அவர்கள் செய்த தவறுக்கு தண்டனையை அனுபவிக்க வேண்டும்' என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய கமல்ஹாசன், ` கூட்டணி தொடர்பாக ஒவ்வொரு முறையும் என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இதனை முதல் அணியாகத்தான் பார்க்கிறேன். எங்கள் வசதிக்காக ஒரு பெயர் வைக்க வேண்டும் என்றால் `முதல் அணி' எனக் கூறுமாறு உங்களைக் கேட்…
-
- 0 replies
- 480 views
-
-
கமல் இந்துத்துவாவை எதிர்த்தது ஏன் ? | Socio Talk கமல் தீடீர் என்று இந்துத்துவா அரசியலை பற்றி பேச காரணம் என்ன ? மதங்களை முன் நிறுத்தி இந்தியாவில் அரசியல் ஆரம்பமானது எப்போது ? அது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது ? பா,ஜ.கவும், காங்கிரஸும் வெவ்வேறு கொள்கை கொண்ட கட்சிகளா ? மேலும் பல கேள்விகளும், விடைகளும் இந்த விடீயோவில்.
-
- 1 reply
- 624 views
-
-
மிஸ்டர் கழுகு: கமல் கட்சிக்கு யார் நிர்வாகிகள்? கழுகார் உள்ளே நுழைந்ததும் சில துண்டுச்சீட்டுகளை டேபிளில் போட்டார். ‘‘ஒவ்வொரு சீட்டிலும் ஒரு விஷயம் எழுதியிருக்கும். எடுத்துப் பிரித்து, உள்ளே இருப்பதைப் படித்தால் நான் தகவல் சொல்கிறேன்’’ என்று தயாரானார். முதல் சீட்டை எடுத்து, ‘‘ஆடிட்டர் குருமூர்த்தி?’’ என்றோம். ‘‘சென்னையில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் குருமூர்த்தி பேசினார். அங்கு நிருபர்களைச் சந்தித்த அவர், ‘ரஜினிக்கு நான் ஆலோசகர் இல்லை. ஊடகங்கள் அப்படிச் சொல்கின்றன. அது உண்மையாக இருந்தால், எனக்கு மகிழ்ச்சிதான்’ என்றார். அங்கு அவர் பேசியதற்கும், ரஜினி தன் மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் பேசியதற்கும…
-
- 0 replies
- 1.7k views
-
-
நடிகர் கமல் ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து சமூக ஊடகப் பிரபலம் பத்ம பிரியா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு ஆகியோர் விலகியுள்ளனர். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சந்தோஷ் பாபு அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் எனது பதவியிலிருந்தும் விலகுவதாக கனத்த மனதுடன் அறிவிக்கிறேன். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்திருக்கிறேன். கமலும் அவருடைய அணியினரும் என் மீது காட்டிய அன்புக்கும் நட்புக்கும் நன்றி" என குறிப்பிட்டிருக்கிறார். …
-
- 1 reply
- 817 views
-
-
நடிகர் கமல் போன்றவர்கள் பற்றி கேள்வி கேட்டு என்னை அவமானப்படுத்தாதீர்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கமலின் அரசியல் பிரவேசம் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு சீமான் ஆவேசத்துடன் கூறியதாவது:- கமல் போன்றவர்கள் பற்றி கேள்வி கேட்டு என்னை அவமானப்படுத்தாதீர்கள். அவர்கள் வரும்போது வரட்டும். அப்போது பார்த்து கொள்ளலாம். தமிழக அரசு மின்சாரம் வாங்குவதற்கு 9 ஆயிரம் கோடி ரூபாயை செலவிடுவதில் முனைப்பு காட்டுகிறது. ஆனால் உற்பத்தி துறையில் அந்த தொகையை முதலீடு செய்ய மறுக்கிறது. இதுபோன்று பல பிரச்சினைகள் உள்ளன. அவைகளை…
-
- 0 replies
- 397 views
-
-
கமல் ஹாசன் மீது காலணி வீச்சு; சூலூரில் இடைத் தேர்தலுக்கு பிரசாரம் செய்ய அனுமதி மறுப்பு Getty Images இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சூலூர் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மே 19 அன்று தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ள சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இன்று மாலையோடு அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்வதற்கான நேரம் முடிவடைகிறது. எனவே, அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) சூலூர் சட்டமன்ற தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து கமல் ஹாசன் பிரசாரம் செய்வதாக இருந்த…
-
- 0 replies
- 778 views
-
-
படத்தின் காப்புரிமை ARUN SANKAR/GETTY IMAGES சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து எனக் கூறிய கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டுமென கூறியிருக்கும் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பதவியைப் பறிக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கைவிடுத்துள்ளது. கமல்ஹாசனின் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி பள்ளப்பட்டியில் பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே ஒரு இந்து எனப் பேசியிருந்தார். இதற்கு பாரதிய ஜனதாக் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துவந்தனர். இ…
-
- 1 reply
- 798 views
-
-
கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் கோல்டன் விசா: முழு விவரங்கள் 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER திரைப்பட நடிகரும் இயக்குநருமான கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் 'கோல்டன் விசா' வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகாலம் செல்லுபடியாகும் இந்த கோல்டன் விசா மூலம் ஐக்கிய அரபு எமிரேட்சில் தங்கவும், தொழில் செய்யவும் பணிபுரியவும் பல்வேறு சலுகைகள் கிடைக்கும். 2021ஆம் ஆண்டு இயக்குநர் பார்த்திபன் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கோல்டன் விசாவை பெற்ற பொழுது இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் தமிழ் நடிகர் ஆனார். அதன் பின்னர் விஜய் சேதுபதி, திரிஷா, இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோருக்கும் கோல்டன் வ…
-
- 6 replies
- 679 views
- 1 follower
-
-
கமல்ஹாசனை சுட்டுக்கொல்ல வேண்டும்: இந்து மகா சபை தலைவர் சர்ச்சை பேச்சு இந்து தீவிரவாதம் இனி இல்லை என கூற முடியாது என கருத்து கூறியிருந்த நடிகர் கமல்ஹாசனை சுட்டுக்கொல்ல வேண்டும் என இந்து மகா சவை துணை தலைவர் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக கூறியுள்ளார். புதுடெல்லி: தமிழ் வார இதழ் ஒன்றில் கட்டுரை எழுதி வரும் நடிகர் கமல்ஹாசன், முன்பெல்லாம் இந்து வலதுசாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர். ஆனால், இந்த பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும், யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கிவிட்ட…
-
- 0 replies
- 537 views
-
-
கமல்ஹாசன் சகோதரர் சந்திரஹாசன் காலமானார்! கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன், உடல்நலக்குறைவால் காலமானார். நடிகர் கமல்ஹாசனின் சகோதரரும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாகியுமான சந்திரஹாசன் உடல்நலக்குறைவால், உயிரிழந்துள்ளார். லண்டனில், தனது மகள் அனுஹாசன் வீட்டில் இருந்த அவருக்கு நேற்று இரவு திடீரென்று கார்டியக் அரெஸ்ட் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 82. இதைத்தொடர்ந்து அவரது மறைவுக்கு, திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம்தான் சந்திரஹாசனின் மனைவி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில், அவர் உயிரிழந்த இரண்டு மாதங்களில் சந்திரஹாசனும் உயிரிழந்துள்ளார். http://www.vikatan.com/n…
-
- 2 replies
- 470 views
-
-
கமல்ஹாசன் பேட்டி: "நான் ஏன் அகண்ட திராவிடம் பேசக்கூடாது?" #BBC_Exclusive தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 3 ஏப்ரல் 2021 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தேர்தல் பரப்புரை ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் நிறைபெறுகிறது. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தமது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். காலில் செய்யப்பட்டிருக்கும் அறுவை சிகிச்சையில் இருந்து முழுமையாக மீளவில்லை என்றாலும் அவர் தொடர்ந்து பயணம் செய்கிறார், மக்களை சந்திக்கிறார். இதற்கு நடுவில், தமிழக சட்டமன்ற தேர்தல், திராவிட கட்சிகள், பிராமணர் - பிராமணர் அல்லாதோர் விவகாரம் ஆகியவை குறி…
-
- 0 replies
- 479 views
-
-
கமல்ஹாசன் மீது வழக்குப்பதியலாம்! காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு Chennai: நிலவேம்புக் கஷாயம் விவகாரத்தில், மனுதாரர் புகாரில் முகாந்திரம் இருந்தால், நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதற்குக் காரணமான கொசுவை அழிக்கும் நடவடிக்கையில் தமிழக சுகாதாரத்துறை ஈடுபட்டுவருவதோடு, நாேய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பாதிக்கப்பட்டவர்களுக்கும் பொதுமக்களுக்கும் நிலவேம்புக் கஷாயத்தை வழங்கிவருகிறது. இதன…
-
- 1 reply
- 410 views
-
-
கமிஷனர் ஜார்ஜ் அதிரடி மாற்றம்: ஆணையராக கரண் சின்ஹா நியமனம்- தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கோரிக்கையை ஏற்று கமிஷனர் ஜார்ஜ் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். புதிய ஆணையராக கரண் சின்ஹாவை நியமித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. சென்னை: ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க. 2 அணிகளாக உடைந்து இடைத்தேர்தலை சந்திக்கிறது. அ.இ.அ.தி.மு.க. அம்மா (சசிகலா அ…
-
- 1 reply
- 890 views
-
-
கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழாரா? : சமூக வலைதளத்தில் கேலிக்குள்ளான எடப்பாடியின் பேச்சு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி புதன்கிழமையன்று தஞ்சாவூரில் பேசும்போது கம்ப ராமாயணத்தை இயற்றியது சேக்கிழார் என்று குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் பெரும் கேலிக்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகிவருகிறது. 2012ஆம் ஆண்டில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி கே. பழனிச்சாமி தமிழக சட்டப்பேரவையில் தன் பேச்சைத் துவக்கும்போது, "1989ல் சேவல் சின்னத்தில் எடப்பாடி தொகுதியில் நிற்கவைத்து என் அரசியல் வாழ்க்கையில் கோடு போட்டது நீங்கள்தான்; நெடுஞ்சாலைத் துறைக்கு அமைச்சராக்கி, என்னை ரோடு போடச் சொன்னதும் நீங்கள்தான்" என்று ஆரம்பித்தார். அப்போது…
-
- 0 replies
- 287 views
-
-
கரிசல் எழுத்தின் 'முன்னத்தி ஏர்' - ராயங்கால் ஸ்ரீ கிருஷ்ண ராமானுஜ பெருமாள் ராஜ நாராயணன் எனும் கிரா! சென்னை: தமிழில் கரிசல் இலக்கியத்தின் தந்தையாக போற்றப்படுகிற கி.ரா. எனும் ராயங்கால் ஸ்ரீ கிருஷ்ண ராமானுஜ பெருமாள் ராஜ நாராயணன் (வயது 99) வயது மூப்பு காரணமாக புதுச்சேரியில் திங்கள்கிழமையன்று காலமானர். கி.ராவின் உடல் அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் இடைச்செவலில் நாளை பகல் 12 மணியளவில் தகனம் செய்யப்படும். கரிசல் இலக்கியத்தின் தந்தையாக, போற்றுதலுக்குரிய கதை சொல்லியாக திகழ்ந்தவர் கி.ரா. 1923-ம் ஆண்டு அன்றைய நெல்லை மாவட்டம் இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர் கி.ரா. …
-
- 0 replies
- 640 views
-
-
-
கரு முட்டை எடுத்து விற்க பல ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஈரோடு சிறுமி: தாய் கைது ஏன்? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கருமுட்டை - சித்தரிப்புப் படம். ஈரோடு மாவட்டத்தில், பணத்துக்காக 13 வயது சிறுமியின் கருமுட்டைகளை அவரது தாய் உள்ளிட்ட சிலர், தனியார் மருத்துவமனைகளில் பலமுறை விற்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருமுட்டைகளை விற்பதற்காக, சிறுமியை அவரது தாய் தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கு அழைத்துச்சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். …
-
- 1 reply
- 515 views
- 1 follower
-