தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10261 topics in this forum
-
படத்தின் காப்புரிமைThinkstock சென்னையிலிருந்து செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்ஃபில், பிஎச்டி மாணவர்களுக்கு இந்தி பயிற்சி அளிக்கும் வகுப்புகள் துவங்கப்பட்டிருக்கின்றன. இதற்கு தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் திங்கட்கிழமையன்று இதற்கென நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் இந்தி, பிரெஞ்சு மொழிகளைக் கற்பிப்பதற்கான சிறப்பு மொழிப் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்ஃபில், பிஎச்டி ஆகிய ஆய்வுப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, விருப்பப்பாடமாக பிரெஞ்சு மற்றும் இந்தி வகுப்புகள் நடத்தப்படவிருக்கின்றன. இதற்கென ஆறு லட்ச ரூபாயை தமிழக அரசு சம…
-
- 0 replies
- 693 views
-
-
ஐ.என்.எக்ஸ் முறைகேடு தொடர்பான அமுலாக்கத்துறை வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் .மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமுலாக்கத்துறை கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி கைது செய்தது. இந்நிலையில், ப.சிதம்பரம் தொடர்ந்த பிணை மனுவை டில்லி நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு இன்று ப.சிதம்பரத்திற்கு நிபந்தனையுடனான பிணை வழங்கியுள்ளது. முன்னதாக, சி.பி.ஐ. தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் ஒக்டோபர் 22ஆம் திகதி உச்ச நீதிமன்றம் சிதம்பரத்திற்கு பிணை வழங…
-
- 0 replies
- 473 views
-
-
நர்சரி தொழில்: "அன்று சாராயம் காய்ச்சினோம்; இன்று வனம் உருவாக்குகிறோம்" - ஒரு கிராமத்தின் வெற்றிக் கதை மு. நியாஸ் அகமதுபிபிசி தமிழ் 12 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அன்று மரம் வெட்டினார்கள்;…
-
- 0 replies
- 873 views
- 1 follower
-
-
மேட்டுப்பாளையம் விபத்தில் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த கல்லூரி சென்ற மகளும், பள்ளியில் பயின்ற மகனும் உயிரிழந்த சோகத்திலும் அவர்களின் கண்களைத் தானமாக வழங்கியுள்ளார் டீக்கடை தொழிலாளி ஒருவர். தொடர் கனமழை காரணமாக நேற்று அதிகாலையில் மேட்டுப்பாளையம், நடூர் ஆதி திராவிடர் காலனியில் கட்டப்பட்டிருந்த 20 அடி உயர கருங்கல் சுற்றுச்சுவர் இடிந்து, அருகில் இருந்த வீடுகளில் விழுந்தது. இதில் தூக்கத்தில் இருந்த ஆண், பெண், குழந்தைகள் உட்பட 17 பேர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தமிழகத்தைப் பரபரப்பில் ஆழ்த்திய இந்த விபத்தைப் பலரும் கண்டித்து சுவர் கட்டிய உரிமையாளரைக் கைது செய்ய வலியுறுத்தினர். சம்பவ இடத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆறுத…
-
- 0 replies
- 628 views
-
-
திரை கவர்ச்சியை மட்டும் வைத்து நேரடியாக முதல்வராகும் கனவில் இருக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினி, கமலுக்கு செருப்படி கொடுத்த ஆந்திர தொழில்துறை தலைவர்
-
- 5 replies
- 786 views
- 1 follower
-
-
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு மேட்டுப்பாளையம் அருகே நடூர் – ஏடிக்காலனி பகுதியில் தனியாருக்கு சொந்தமான காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த அனர்த்தத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேட்டுப்பாளையம் அருகே நடூர் – ஏடிக்காலனி பகுதியில் தனியாருக்கு சொந்தமான காம்பவுண்ட் சுவர் இடிந்து அருகில் உள்ள 4 வீடுகளின் மீது விழுந்துள்ளது. இதில் 4 வீடுகளில் இருந்த 12 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதனையடுத்து அவர்களை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஈடுபட்டனர். அ…
-
- 5 replies
- 948 views
- 1 follower
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! தேசிய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் 5ஆவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. இதனை முன்னிட்டு மத்திய அரசு டெல்லியில் விருது வழங்கி கௌரவித்துள்ளது. இதற்கான விருதினை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரிடம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தன் மற்றும் இணை அமைச்சர் அஸ்வின் குமார் சௌபே ஆகியோர் வழங்கி கௌரவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தான சிகிச்சை சிறப்பாக வழங்கும் மருத்துவமனைக்கான விருது சென்னை இராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. மேலும் இந்தியாவிலேயே முதன்முறையாக இறந்தவரின் கைகளை மற்றவருக்கு வெற்றிகரமாக பொருத்தியதற்காக ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவர் ரமாதேவிக்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
கோவை பள்ளி மாணவி: ஆண் நண்பர் முன்னிலையிலேயே கூட்டுப் பாலியல் வல்லுறவு - அதிர்ச்சி சம்பவம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "கோவையில் பள்ளி மாணவி கூட்ட…
-
- 5 replies
- 1.7k views
- 1 follower
-
-
-
- 82 replies
- 10.8k views
- 2 followers
-
-
காஞ்சிபுரம் தலித் இளம்பெண் மரணம்: வன்கொடுமை வழக்குகள் சரியாக விசாரிக்கப்படுவதில்லையா? 9 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption(கோப்புப்படம்) காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் விவகாரத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டி…
-
- 0 replies
- 387 views
- 1 follower
-
-
தமிழகத்தில் நாம் தமிழர் ஆட்சி: ஜெயக்குமார் பதில்! மின்னம்பலம் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும் என்ற சீமானின் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். மதுரை ஒத்தகடையில் கடந்த 27ஆம் தேதி நடந்த மாவீரர் நாள் பொதுக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “ நாம் தமிழர் கட்சியின் போஸ்டர்களை கிழிப்பவர்கள், தம்பிகள் மீது வழக்கு போடுபவர்கள் எல்லோரும் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்குள் இறந்துவிடுங்கள். இல்லையென்றால் அவர்களை கொன்றுவிடுவேன். வழக்கு போடுபவர்களின் பெயர்ப்பட்டியலை தயார் செய்து வைத்துள்ளேன்” என்று தெரிவித்தார்.மேலும், வரும் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் மட்டுமே மக்கள் வாழ முடியும் இல்லையெனில் செத்து…
-
- 8 replies
- 1.8k views
-
-
கருணைக் கொலை செய்யக்கோரி பிரதமருக்கு நளினி கடிதம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் நளினி, தன்னை கருணை கொலை செய்யுமாறு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை எழுதி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், வேலூர் ஆண்கள் சிறையிலும் அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நளினி தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர் உண்ணாவிரதத்தை நேற்று (வியாழக்கிழமை) முதல் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று முன்தினம் சிறை அதிகாரிகளிடம் மனு கையளித்துள்ளார். இதற்கிடையே 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாழ்ந்து விட்டதாகவும், பல ஆண்டுகள் விடுதலைக்காக ப…
-
- 0 replies
- 518 views
-
-
தமிழகத்தில் உள்ளூராட்சி தேர்தலை நடத்தக்கூடாது – தி.மு.க. மனு தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமல் தமிழகத்தில் உள்ளூராட்சி தேர்தலை நடத்தக்கூடாது என்று தி.மு.க புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன் தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் இந்தப் பணிகளை நிறைவு செய்யாமல் தமிழகத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே தொ…
-
- 0 replies
- 521 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் தேசிய சித்தாந்தத்தின் அடிப்படையில் போர் நடத்தியதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பும், இன்று தங்களை தமிழ் தேசியவாதிகள் என்றே கூறிக்கொள்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று சிங்கள ஆட்சியாளர்களுடனும், பேரினவாதிகளுடனும் கைகோர்த்து நிற்கின்றனர். இந்நிலையில், சர்வதேசத்தையும், தமிழ் மக்களையும் அவர்கள் காட்டிக்கொடுகின்றனர்” எனவும் அவர் கூறியுள்ளார். https://www.tamilwin.com/special…
-
- 0 replies
- 432 views
-
-
உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவுக – மாநிலங்களவையில் வைகோ கோரிக்கை! உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவ வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) உரையாற்றும் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் கூறுகையில், “உயர் நீதிமன்றங்கள் அளிக்கின்ற தீர்ப்பில் வழக்குத் தொடுத்தவர்கள் தீர்ப்பு தவறானது எனக் கருதினால், அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடலாம். ஆனால், தென்னிந்திய மக்கள் உச்ச நீதிமன்றத்தை எளிதில் நாட முடியவில்லை. மொழி வேறுபாடு, நெடுந்தொலைவுப் பயணம், மிக உயர்ந்த கட்டணம், பயணத்தில் வீணாகும் நேரம், டெல்லியில் தங்கும் இடம் ஏற்பாடு, நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வழக்…
-
- 0 replies
- 434 views
-
-
படத்தின் காப்புரிமை FACEBOOK பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்றங்களுக்கு "பசங்க மட்டுமே காரணமில்லை" என்று பேசி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் இயக்குநர் - நடிகர் கே.பாக்யராஜ். "கருத்துகளை பதிவு செய்" திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், இயக்குனர் பாக்கியராஜ் பேசிய கருத்துகள் சர்ச்சை ஆகியுள்ளன. "இதுவரை நான் என் கருத்துகளை" துணிச்சலாகப் பதிவு செய்துளேன் என தன் உரையை ஆரம்பித்து தான் எழுதிய கதைகளையும் அவர் சொன்னார். "யாரும் தவறாக நினைக்கக் கூடாது, நான் இதுவரை எடுத்த திரைப்படங்களில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, பெண்களுக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழகத்தின் 34ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயம்! தமிழகத்தின் 34ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி இன்று (செவ்வாய்கிழமை) உதயமாகியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய மாவட்டத்தை துவங்கிவைத்து உரையாற்றினார். இதன்போது தமிழக அரசை பற்றி செல்லுமிடமெல்லாம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பொய்யுரைத்து வருவதாகவும் முதலமைச்சர் குற்றஞ்சாட்டினார். இதேவேளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 சட்டமன்றத் தொகுதிகள், ஒரு நாடாளுமன்றத் தொகுதி, 6 வருவாய் வட்டங்கள், 2 வருவாய் கோட்டங்கள், 573 வருவாய் கிராமங்கள் அடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://athavannews.com/தமிழகத்தின்-34ஆவது-மாவட்ட/
-
- 0 replies
- 710 views
-
-
பிரபாகரன் பெயரையே என் மகனுக்கும் சூட்டி அவனிலும் அவரையே பார்க்கிறேன் – சீமான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் நமது தேசியத்தலைவர் அண்ணன் பிரபாகரன் 65-வது பிறந்த நாள் வாழ்த்துகளை உலகம் முழுக்கப் பரந்து வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளிடத்தில் பகிர்ந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியும், அளப்பெரிய பெருமிதமும் அடைகிறேன். நம் இனத்தைக் கொன்றொழித்த சிங்களர்களால் கூடக் குற்றஞ்சாட்டவோ, களங்கம் கற்பிக்கவோ முடியாத அளவுக்குக் காவியங்களில் மட்டுமே நாம் பார்த்த ஓர் அதிஉன்னதப் புனித வாழ்வை நம் கண்முன்னே வாழ்ந்த வரலாற்று பெருநாயகன் நம் தலைவராவார். உலகமே தனது வீரத்தைக் கொண்டாடினாலும் தன்னை ‘மாவீரன்’ என விளிக்க ஒருபோத…
-
- 1 reply
- 1.2k views
-
-
சென்னை ராயப்பேட்டையில் காவல் துறையின் அடக்குமுறையையும் மீறி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரால் தமிழீழ தேசியத்தலைவரின் 65 அகவை நாள் கொண்டாடப்பட்டது, இதில் ஈழ உணரவாளர்கள் கலந்து கொண்டதோடு திரைப்பட இயக்குனர் கோபி நைனார் கலந்துகொண்டார். https://www.pathivu.com/2019/11/Thalaivar65_2.html?m=1&fbclid=IwAR0d2EJe6bpZbUBU_6uG9PnMMw1_4Lkc8mUxsBl49bzzyzanYs7oH-ZI890 #மேதகு65 தமிழின தலைவரின் அகவை தினத்தை உலகறிய செய்வோம் இன்று மாலை 6:00 மணிக்கு Twitter பரப்புரை
-
- 0 replies
- 559 views
-
-
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ராபர்ட் பயாஸ் பிணையில் செல்ல அனுமதி முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் இருந்துவந்த ராபர்ட் பயாஸ், தனது மகனின் திருமணத்திற்காக ஒரு மாதம் பிணையில் விடுதலையாகியுள்ளார். ராபர்ட் பயாஸ், தனது மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளை செய்ய பிணை வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவை நீதிபதிகளான சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டிக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு உட்படுத்தியது. இதன்போது விசாரணையின் நிறைவில் குறித்த அமர்வு தெரிவித்துள்ளதாவது, “ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது. அரசியல் கட்சி தலைவர்களை சந்திக…
-
- 0 replies
- 539 views
-
-
பச்சையம்மாள்: கொத்தடிமையாக இருந்து மீண்டு அமெரிக்கா வரை சென்ற பெண் - நம்பிக்கை பகிர்வு #iamthechange மு. நியாஸ் அகமதுபிபிசி தமிழ் 53 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பச்சையம்மாள்: கல்குவாரி டூ …
-
- 0 replies
- 783 views
- 1 follower
-
-
தமிழக காவல் நிலையங்களில், பதிவேடுகள் மற்றும் குறிப்பாணைகள் தமிழில் இடம்பெறவேண்டும் என தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இருக்கைகளில் உள்ள தன் பதிவேடு, முன்கொணர்வு பதிவேடு உள்ளிட்ட அனைத்து பதிவேடுகளும் தமிழில் பராமரிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகை பதிவேட்டில் தமிழில் கையொப்பம் இடுவதுடன், அனைத்துவிதமான வரைவு கடித தொடர்புகள் மற்றும் குறிப்பாணைகள் தமிழில் எழுதப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளது. அனைத்து காவல் வாகனங்களிலும் “காவல்” என தமிழில் எழுதுவதுடன் அலுவலக முத்திரைகள் மற்றும் பெயர்ப்பலகைகள் தமிழில் மாற்றப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து காவல்துறை அலுவலர்களுக்கும் …
-
- 1 reply
- 874 views
- 1 follower
-
-
இலங்கை தமிழர்கள் மிகப்பெரிய அழிவை எதிர்நோக்கி இருப்பதால், அவர்களை காப்பாற்ற உலக நாடுகள் முன்வர வேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவரான பழநெடுமாறன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுதொடர்பாக நாகப்பட்டினத்தில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது... “விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு கூறியதை இந்திய அரசும் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் சோனியா காந்திக்கு அளிக்கப்பட்டு வந்த உயர் பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றதை கண்டிக்காமல், விடுதலைப் புலிகளால் சோனியாகாந்தி உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று மக்களவையில் திமுக உறுப்பினர் டி ஆர் பாலு கூறியிருப்பது வீண் பழிசுமத்தும் செயல். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு 2009 ஆம்…
-
- 0 replies
- 320 views
-
-
இலங்கை தமிழர்கள் தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தி அ.தி.மு.க. தீர்மானம் இலங்கை தமிழர்கள் சம உரிமை பெற்று வாழ்வதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க.வின் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பலஸ் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர…
-
- 1 reply
- 422 views
-