Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. படத்தின் காப்புரிமை Facebook Image caption சுபஸ்ரீ சென்னையில் அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் 23 வயது இளம்பெண் பலியாகியுள்ளார். பேனர் வைப்பதற்குச் சென்னை மாநகராட்சி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சுபஸ்ரீ சென்னை குரோம்பேட்டை பவானி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ. பி.டெக் படிப்பை முடித்துள்ள இவர் இன்று சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சுற்றுச் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். படத்தின் காப்புரிமை fACEBOOK அந்தப் பகுதியில் சாலையில் உள்ள மீடியன் நெடுக, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளரும் பள்ளிக்கரணையின் …

  2. மத்திய அரசின் மாதம் 3 ஆயிரம் ஓய்வூதிய திட்டம்.. 38 ஆயிரம் தமிழக விவசாயிகள் சேர்ப்பு மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தில் 38 ஆயிரம் தமிழக விவசாயிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு மாதம் தோறும் 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் இத்திட்டத்தின் தொடக்க விழா ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடக்கிறது. 60 வயதை கடந்த சிறு குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டப்படி 18 வயது முதல் 40 வயது விவசாயிகள் மாதந்தோறும் ஒரு தொகை பங்களிப்பாக செலுத்த வேண்டும். உதாரணமாக 18 வயதை கடந்த விவசாயி ரூ.55ஐ செலுத்த வேண்டும். 40 வயது வரை பிரீமியம் தொகை உயரும். இதற்கு இணையான தொகையை மத்திய அரசு அளிக்கும். 40 வயது நிறைவு செய்யும் …

  3. ஊரார் காசில் பேரு வாங்கும் உதயநிதி ஸ்டாலின்...!! அப்பாவையே மிஞ்சிட்டார் என்று அலறும் உபிக்கள்...!! தன் அதிரடி திட்டங்கள் மூலம், தந்தையைப்போலவே தொண்டர்கள் செலவில் ஒசியில் பெயரெடுக்கிறார் வாரிசுத்தலைவர் என்ற விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறார் உதயநிதி. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியை எப்படியாவது வீழ்ந்த வேண்டும் என்று வியூகம் வகுத்து நமக்கு நாமே திட்டம் தொடங்கி தமிழகம் முழுவதற்கும் டூர் சென்றார் ஸ்டாலின். ஆனால் எதிர்பார்த்தபடி தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லை. மாறாக கட்சி தொண்டர்களின் காசைக் கரியாக்கி அரசியலில் தன் இருப்பை தக்கவைத்துக் கொண்டதுதான் மிச்சம் என்று எதிர்கட்சிகளால் அப்போது விமர்சிக்கப்பட்டார். கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிக…

  4. மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு மத்திய அரசு விருது சிறந்த தூய்மை பராமரிப்பு சின்னத்திற்கான‌ 2ஆவது இடத்திற்கான விருதை மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் சிறந்த தூய்மை பராமரிப்பிற்கான இடங்களுக்கு ஜல் சக்தி அமைச்சகம் விருதுகளை வழங்கியது. அதில், தூய்மை பராமரிப்புகளுக்கான இரண்டாவது இ‌டமாக மீனாட்சியம்மன் ஆலயம் தேர்வு செய்யப்பட்டு, மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தைச் சுற்றி தூய்மையாக வைத்திருப்பதற்காக 25 கழிவறைகள், குப்பைகளை பிரித்து சேகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகள், சுழற்சி முறையில் சுகாதாரப் பணியாளர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பராமரிப…

  5. உயிருடன் தான் இருக்கும்போதே... ஆவணத்தில் ஆளுநர் கையொப்பமிட வேண்டும்: அற்புதம்மாள் உருக்கம் உயிருடன் தான் இருக்கும் போதே ஏழு பேர் விடுதலை தொடர்பான ஆவணத்தில் ஆளுநர் கையொப்பமிட்டு ஒப்புதல் அளிக்க வேண்டுமென ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால், இந்த தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் அமைதி காத்து வருகிறார். பேரறிவாளன், நளினி தரப்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி…

  6. 1000 வருடங்கள் பழமையான, தமிழகத்தை சேர்ந்த நடராஜர் சிலை.. ஆஸ்திரேலியாவிலிருந்து நாளை திரும்புகிறது ஆஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் அந்த நாட்டின் தேசிய கேலரி இயங்கிவருகிறது. இங்கு உலகின் பல பகுதிகளையும் சேர்ந்த அரிய பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த சுபாஷ்கபூர் என்ற பாரம்பரிய பொருட்களை விற்பனை செய்யு டீலரிடமிருந்து 5.6 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் பணம் கொடுத்து ஆஸ்திரேலிய கேலரி வெண்கலத்தால் செய்த நடராஜர் சிலையை வாங்கியுள்ளது. அதை தனது கேலரியில் காட்சிக்கும் வைத்துள்ளது.2012ம் ஆண்டு சிலை கடத்தல் வழக்கில் சுபாஷ்கபூரை போலீசார் கைது செய்தபோது, ஆஸ்திரேலிய கேலரிக்கு நடராஜர் சிலையை விற்பனை செய்ததையும் ஒப்புக்கொண்டார். இவர் ம…

  7. 13 நாட்கள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார் முதல்வர் பழனிசாமி! தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க, 13 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கொண்ட குழு, நாளை (செவ்வாய்க் கிழமை) நாடு திரும்பவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. டுபாயில் இருந்து புறப்பட்டு நாளை அதிகாலை 2.40 மணிக்கு, அவர்கள் சென்னை திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒகஸ்ட் 28ஆம் திகதி முதல்வர் பழனிசாமி இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றார். அவருடன் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கொண்ட குழுவும் சென்றது. 3 நாட்கள் லண்டனில் தங்கி இருந்த அவர், முதலீட்டாளர்களையும் தமிழ் அமைப்புகளை சந்தித்து, தமிழகத்த…

  8. மாந்தோப்பில் பணியாற்றி, கல்லூரி செல்லும் வரை காலணியே அணியாதவராக, விவசாயியின் மகனாக வாழ்ந்த தமிழர் சிவன், இஸ்ரோவின் தலைவராக உயர்ந்து, இதுவரை எந்த நாடும் தரையிறக்காத நிலவின் தென் துருவத்திற்கு ஆய்வூர்தியை அனுப்பிய பெருமையை பெற்றுள்ளார். 1957-ம் ஆண்டு தமிழகத்தின் கன்னியாகுமரியில் பிறந்த சிவன், மேலசரக்கல்விளை கிராமத்தில் அரசுப் பள்ளியில் தமிழ் வழிக்கல்வி பயின்றவர். மாந்தோப்பு வைத்திருந்த தந்தைக்கு உதவியாக விடுமுறை நாட்களில் பணியாற்றி, ஆட்கூலியை மிச்சப்படுத்தி வாழ்ந்தவர். தோட்ட வேளையில் தன் தந்தைக்கு தொடர்ந்து உதவ வேண்டும் என்பதற்காகவே அருகில் உள்ள தென் திருவாங்கூர் இந்து கல்லூரியில் சேர்ந்தார். பொறியியல் படிப்பதைக் கனவாகக் கொண்டிருந்த சிவன், பி.எஸ்.சி. மட்டுமே படிக…

    • 3 replies
    • 1.4k views
  9. ரஷ்யா – சென்னை இடையே விரைவில் நேரடி கப்பல் போக்குவரத்து ரஷ்யாவில் இருந்து சென்னைக்கு இடையில் நேரடி கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் இருந்து சென்னைக்கு நேரடியான முழுநேர கப்பல் போக்குவரத்து சேவையாக இது அமையும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அரச முறை பயணமாக ரஷ்யாவுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அதிபர் விளாடிமிர் புடினுடன் விளாடிவாஸ்டோக் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்டார். இதையடுத்து இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். இதன்போது பிரதமர் நரேந்திர மோடி தெரிவிக்கையில், “இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நல்லுறவு இருநாடுகள…

    • 2 replies
    • 691 views
  10. திருமாவளவனை தமிழ்த் தேசிய அரங்கிலிருந்து அகற்றும் முயற்சி கடந்த வார இறுதியில், சனி, ஞாயிறு தினங்களில் லண்டனில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார். லண்டனில் இயங்கும் ‘விம்பம்’ என்ற அமைப்பு இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திருந்தது. முதல் நாள் நிகழ்ச்சி திருமாவளவன் எழுதிய ‘அமைப்பாய் திரள்வோம்’ என்ற நூல் அறிமுகவிழாவாக அவரை மையப்படுத்தியதாக அமைந்தது. அடுத்த நாள் லண்டன் பல்கலைகழக மண்டபம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்சியில் அவரது கட்சி எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி திருமாவளவன் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிகள் மற்றும் அவர் ஆற்றிய உரைகள் பற்றிப் பார்க்க ம…

  11. தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருக்கு 2 ஆண்டுகள் சிறை September 7, 2019 தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த முத்தமிழ் முதல்வன் என்பவரை அந்த சமயத்தில் வெளியான தினமலர் நாளிதழில் ‘டீக்கடை பெஞ்ச்’ பகுதியில் பெங்களூருவிலிருந்து ஓசூர் வழியாக தமிழகத்திற்கு மதுபானம் கடத்துபவர்களிடம் முத்தமிழ் முதல்வன் லஞ்சம் பெற்றார் எனவும், சட்டவிரோதமான முறையில் சொத்துக்கள் வாங்கினார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது இதனையடுத்து, தனக்கு எதிராக அவதூறு பரப்பு விதமாக செய்தி வெளியிட்டதாகக் கூறி 10 லட்ச…

  12. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் 27 கிணறு, குளங்களை காணவில்லை என்றும், அதனை கண்டுபிடித்து தரக்கோரியும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 27 நீர்நிலைகளும் எங்கே என்பது குறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் வரும் 26ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. 27 கிணறு, குளங்களை காணவில்லை என மனு சென்னை மாநகரத்திற்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கத்தில் இருந்த தட்டான்கேணி, தீர்த்தன்கேணி, உப்பு கேணி, தாழியார் மானிய குளம், ராவுத்தர் கேணி உள்ளிட்ட 27 நீர்நிலைகள் காணாமல் போனதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொன் தங்கவேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் நீர்நிலைகளை …

    • 0 replies
    • 510 views
  13. 56 கிலோ தங்கம்.. ரூ. 95 கோடி பணம்.. ஒரே ஒரு டைரியால் சிக்கிய பழனி சித்தனாதன் & கந்த விலாஸ்! சித்தனாதன் மற்றும் கந்த விலாஸ் குழுமத்திற்கு தொடர்பான நிறுவனங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத 95 கோடி ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழனியில் உள்ள சித்தனாதன் மற்றும் கந்த விலாஸ் குழுமம் உலகப் புகழ்பெற்றது. சித்தனாதன் மற்றும் கந்த விலாஸ் குழுமங்கள்தான் பழனி பஞ்சாமிர்தம் உலகம் முழுக்க பிரபலம் அடைய முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல் இவர்கள் விபூதி, பிரசாதம் உள்ளிட்ட பூஜை சாமான்களையும் விற்பனை செய்து வருகிறார்கள். இவர்களின் குழுமத்தில் கடந்த வாரம் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. சித்தனாதன் மற்றும் கந்த விலாஸ் குழுமம் சிவநேசன், அசோக்,ரவி, செந்தில் ஆகிய நான்க…

  14. ப்ளூ கலர் ஸ்போர்ட்ஸ் ஷூ.. முகமெல்லாம் புன்னகை.. அமெரிக்க பஃபல்லோ பண்ணையில் அசத்திய எடப்பாடியார்அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அங்குள்ள பஃபல்லோ கால்நடை பண்ணைக்கு நேரில் சென்று, ஆய்வு செய்து அசத்தியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். லண்டன் சென்றதுமே எடப்பாடி பழனிச்சாமி லுக் முற்றிலும் மாறிவிட்டது. கோட்-சூட் அணிந்து எடப்பாடி பழனிச்சாமி மாஸ் லுக்கில் காட்சியளித்தார். இது சமூக வலைத்தளம் முழுக்க பேசு பொருளாக மாறிவிட்டதை பார்க்க முடிந்தது. கோட் சூட் போட்டது, சரியா தப்பா என்ற வாதம் ஒரு பக்கம், அவர் உடை அவர் உரிமை என்ற வாதம் மறுபக்கம் என்றால், சூட் போட்ட எடப்பாடி பழனி…

  15. எடப்பாடியின் வெளிநாட்டு விஜயமும் திரைமறை தமிழக அரசியலும் எம். காசிநாதன் / 2019 செப்டெம்பர் 02 திங்கட்கிழமை, மு.ப. 11:22 Comments - 0 தமிழகத்துக்கு முதலீடுகள் திரட்டுவதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இலண்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு, 14 நாள்கள் பயணமாகப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். முதன் முதல் 2016இல் அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், “அதிமுக ஆட்சி எத்தனை நாளைக்கு நீடிக்கும்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்றவுடன், “எத்தனை மாதங்களுக்கு இந்த ஆட்சி நீடிக்கும்?” என்ற கேள்வியோடு பட்டிமன்றமே நடத்தப்பட்டது. இப்போது வெளிநாட்டுக்குச் சென்று முதலீடு திரட்டி வருவோம் என்று அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் பழனிச…

  16. மகப்பேறு மருத்துவர் முதல் தெலுங்கானா ஆளுநர் வரை.. தமிழகத்துக்கு பெருமை சேர்த்த தமிழிசை! தெலுங்கானா மாநிலத்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்திரராஜன் மருத்துவர் முதல் ஆளுநர் வரை கடந்து வந்த பாதையில் உழைப்பும், திறமையும் இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தற்போது தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 1961-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார். அவரது தந்தை குமரி அனந்தன். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி அனந்தன் முன்னாள் எம்பியாகவும் இருந்துள்ளார். தமிழிசை சவுந்திரராஜன் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். இதையடுத்து எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தி…

  17. எந்த ஆட்சியைக் கவிழ்க்கலாம், யாரை பழிவாங்கலாம் என்றதை கைவிடுக... சரியும் பொருளாதாரத்தை சரி செய்குக.. பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் அறிவுரை.! எத்தகையை சோதனைகளையும் சமாளித்து சிலிர்த்து எழும் வல்லமை இந்தியப் பொருளாதாரத்திற்கு உண்டு என்பதை உணர்ந்து, உரிய வகையில் பொருளாதார நிபுணர்களைக் கலந்தாலோசித்து முனைப்பான நடவடிக்கைகளை, மேலும் தாமதம் செய்யாமல் எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அவசரம் அவசரமாக அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. சட்டம் போன்ற மிகப்பெரிய பிழைகளில் இருந்து இந்தியப் பொருளாதாரம் இன்னும் மீளவில்லை என்பது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாகக் கு…

    • 4 replies
    • 720 views
  18. தமிழகத்தில், ஆன்லைனில்... மட்டுமே இனி சினிமா டிக்கெட் விற்பனை: அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி. தமிழகத்தில் ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை விரைவில் அமலுக்கு வர உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித், உள்பட பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் மற்றும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இயக்குனர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் அதிகமாக விற்கப்படுவதாக புகார்கள் எழுவது வாடிக்கையாக உள்ளது.குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய்க்கு மேல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிக புகார்கள் எழுகிறது. இதேபோல் திரையர…

  19. தமிழக பாஜகவின் அடுத்த தலைவரே... வானதி சீனிவாசனுக்கு இப்பவே குவியும் வாழ்த்துகள்! தமிழக பாஜகவின் அடுத்த தலைவரே வாழ்த்துகள் என அக்கட்சி பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனுக்கு ட்விட்டரில் அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதனால் அடுத்த தமிழக பாஜக தலைவராகும் வாய்ப்பு வானதி சீனிவாசனுக்கா? என்கிற கருத்து விவாதிக்கப்பட்டு வருகிறது. தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டசபை, லோக்சபா தேர்தல்கள் போட்டியிட்டு அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தவர் தமிழிசை.ஆனால் தமிழகத்தில் பாஜக என்கிற கட்சி இருப்பதை ஊடக பேட்டிகள் மூலம் தொடர்ந்து நிலைநிறுத்தி வந்தவர் தமிழிசை. உட்கட்சியில் மிகக் கடும் எதிர்ப்புகள் இருந்த …

  20. தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் யார்.. கடும் போட்டியில் 6 தலைவர்கள்.. அதில் 2 பேருக்கு அதிக வாயப்பு! தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால் புதிய பாஜக தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. புதிய தலைவராக நியமிக்கப்பட பொன் ராதா கிருஷ்ணன் அல்லது எச். ராஜா ஆகியோருக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக பாஜக வட்டாரத்தில்.சொல்கிறார்கள். கடந்த 2014ம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சர் பதவி ஏற்றார். இதையடுத்து பாஜகவின் புதிய தலைவராக தமிழிசை சௌந்திரராஜன் நியமனம் செய்யப்பட்டார்.கடந்த ஆறு ஆண்டுகளாக பாஜக மாநில தலைவராக தமிழிசை சௌந்திரராஜன் பணியாற்றினார். தமிழிசை பாஜக தலைவராக மாறிய பின்னர் தமிழகத்தில் பாஜக எந…

  21. பார்ரா.. யாருன்னு தெரியுதா.. கோட் சூட்டில் ஜம்முன்னு இருக்காரே.. நம்ம எடப்பாடியாரா இது! சென்னை: கோட் சூட்டில் ஜம்முன்னு இருக்காரே.. யார்னு தெரியுதா.. நம்ம முதல்வரேதான்.. லண்டனில் புது கெட்டப்பில் கலக்கி வருகிறார்! பதவி ஏற்றது முதலே தான் ஒரு விவசாயி என்பதை ஆணித்தரமாக சொல்லி வருபவர்தான் எடப்பாடி பழனிசாமி. எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் சரி, யாருடைய கல்யாணத்துக்கு போனாலும் சரி.. நானும் விவசாயிதான். இன்று வரை விவசாயம் செய்து வருகிறேன் என்பதை மறக்காமல் பதிவு செய்துவிட்டு வருவார் எடப்பாடி பழனிசாமி. அதனால் ஒரு விவசாயி என்ற பிம்பமே எடப்பாடியார் மீது நமக்கு விழுந்து விட்டது. அது மட்டுமில்லை.. இவர் மிக மிக எளிமையான முதல்வரும்கூட! ஜோரா இருக்கு உண்மையிலேயே, எடப்…

  22. ஈழப்போரில் சரணடைந்த போர் கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர் – சீமான் ஈழப்போரில் சரணடைந்த போர் கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இதற்கு சர்வதேச விசாரணைகள் தேவை எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். உலக காணாமல்போனோர் தினம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையொட்டி இலங்கையில் ஈழப்போரின் போது காணாமல்போனவர்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “2009ஆம் ஆண்டு ஈழப்போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இலங்கையில் தற்போது போராடி வருகிறார்கள். போரில் சரணடைந்தவர்கள் யார்? அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பதை இலங்கை அரசு இன்னும் வெளியிடவில்…

    • 1 reply
    • 717 views
  23. ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரையிலான மன்னார் வளைகுடாவில் உள்ள 19 தீவுகள் கடலில் மூழ்கும் அபாய நிலையில் உள்ளதாக கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரை உள்ள 10,500 சதுர கி.மீ. பரப்பளவிலான மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரினங்கள் உயிர்கோளாக விளங்குகிறது. இதில் கீழக்கரையில் இருந்து பூவரசன்பட்டி தீவு, தூத்துக்குடியில் இருந்த விலங்குசலி தீவு, ஆகியவை ஏற்கனவே இயற்கை பேரிடர்களால் கடலில் மூழ்கிவிட்டன.இந்நிலையில் தூத்துக்குடியில் 4 தீவுகள், வேப்பாரில் 3 தீவுகள், கீழக்கரை மற்றும் மண்டபம் பகுதிகளில் உள்ள 14 என மொத்தம் 19 தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.மன்னார்வளைகுடாவில் கடந்த 50 …

    • 0 replies
    • 497 views
  24. தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம்! தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளார். இதேபோல் தி.மு.கவின் இலக்கிய அணி இணைச் செயலாளராக வி.பி.கலைராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பொள்ளாச்சியை சேர்ந்த கே.எம்.நாகராஜன் தி.மு.க நெசவாளர் அணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தங்க தமிழ்ச்செல்வன், மற்றும் வி.வி.கலைராஜன் ஆகியோர் அண்மையில் அ.தி.மு.கவில் இருந்து விலகி தி.மு.கவில் இணைந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/தி-மு-கவின்-கொள்கை-பரப்பு/

  25. இந்தியாவில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள 7 பேரை விடுவிக்க கோரி அரசிடம் நளினி மனு அனுப்பினார். அந்த மனுவை பரிசீலித்து, தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். குறித்த வழக்கு விசாரணையின் போது, 7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் நிலை குறித்து ஆளுநரிடம் தமிழக அரசு கேட்டறிய வேண்டும் என நளினி தரப்பில் வாதிடப்பட்டது. தமிழக அரசின் பதில் வாதத்தில், முன் கூட்டி விடுதலை செய்ய வேண்டும் என உரிமையாக கோர முடியாது எனவும், அது அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என தெரிவித்திருந்தது. அதே போல, இந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.