தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
சற்றும் மனம் தளராத டாக்டர் கிருஷ்ணசாமி: தென்காசியில் 6-வது முறையாக தோல்வி Published : 24 May 2019 17:55 IST Updated : 24 May 2019 17:55 IST மு.அப்துல் முத்தலீஃப் சென்னை கோப்புப் படம் தன் முயற்சியில் சற்றும் மன தளராதவராக தொடர் தோல்விக்குப் பின்னரும் 6-வது முறையாக தென்காசி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியுள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி. புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திமுக அதிமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்து எம்.எல்.ஏவாக இருந்தவர். ஆரம்பத்தில் திமுகவில் இருந்த அவர், பின்னர் பிரிந்து தனிக்கட்சி தொடங்கி 1996-ல் மிகப்பெரிய அதிமுக எதிர்ப்பலையி…
-
- 0 replies
- 648 views
-
-
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ எந்தக் கூட்டணியில் இருக்கிறாரோ, அந்தக் கூட்டணி வெற்றிபெறாது என்கிற பார்வை தமிழக அரசியல் களத்தில் ஒரு சாராரிடம் உண்டு. பல தேர்தல்களில் வைகோ இடம்பெற்ற கூட்டணிகள், தோல்வியையே தழுவியுள்ளன. அதனால், வைகோ சேரும் கூட்டணி வெற்றிபெறாது என்கிற சென்டிமென்ட் பொதுவாக உண்டு. `வைகோ சென்டிமென்ட்’ என்று சொல்லி, மாற்றுக்கட்சிகளின் மேடைகளிலும், சமூகவலைதளங்களிலும் வைகோவைக் கிண்டல் செய்யும் நிலையும் இருந்துவந்தது. 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக்கூட்டணி என்கிற ஓர் அணியை அமைத்தனர். அதில் தே.மு.தி.க-வையும் த.மா.கா-வையும் கொண்டுவருவதில் வைகோ பெரும் பங்க…
-
- 0 replies
- 980 views
-
-
க.சே.ரமணி பிரபா தேவி கோப்புப்படங்கள் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் வேலூர் தவிர்த்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தேனி தொகுதியில் மட்டும் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுகவில் இருந்து பிரிந்த டிடிவி தினகரனின் அமமுக, திராவிடக் கட்சிகளின் வாக்குகளைக் கணிசமாகப் பிரிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்தனர். குறிப்பாக தினகரனின் வசீகரத் தலைமை, பணபலம் மற்றும் அதிமுக தலைமை மீதான அதிருப்தி ஆகியவற்றால், அமமுக கணிசமான எம்.பி. தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கூறப்பட்டது. அதே நேரத்தில் கடந்த தேர்த…
-
- 0 replies
- 809 views
-
-
10 மக்களவைத் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் மூன்றாம் இடம்: அமமுக, நாம் தமிழர் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளியது இந்து தமிழ் திசை கமல்ஹாசன்: கோப்புப்படம் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 10 தொகுதிகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட ஓராண்டில் இந்த மக்களவைத் தேர்தலைச் சந்தித்தது. அக்கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. வேட்பாளர் தேர்வில் கல்வித் தகுதியை தகுதியாகக் கொண்டது என மக்கள் நீதி மய்யம் மீது விமர்சனம் எழுந்தது. மேலும், தொழிலதிபர்கள், நெருங்கிய நண்பர்களுக்கே வேட்பாளராக வாய்ப்பளிக்கப்பட்டதாகவும், கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை எனவும் சர்ச்சை எழுந்தது. தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிரு…
-
- 1 reply
- 909 views
-
-
இந்திய அளவை மக்களவைத் தேர்தல் எவ்வளவு தாக்கங்களை ஏற்படுத்துமோ அதற்கு சற்றும் குறைந்தது அல்ல தமிழக சட்டமன்றத்திற்கான 22 தொகுதி இடைத்தேர்தல். அதிமுக ஆட்சி தொடர போகிறதா அல்லது ஆட்சி மாற்றம் ஏற்படப்போகிறதா என்று தீர்மானிக்க போகும் தேர்தல் இது. ஆட்சியைத் தக்கவைக்க வேண்டுமானால், 22 தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலில் குறைந்தது எட்டு தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் ஆளும் அ.தி.மு.க. இருக்கிறது. ஆகவே, இந்த இடைத்தேர்தல் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நீடிக்குமா என்பதையும் தீர்மானக்கும் தேர்தல். பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, தஞ்சாவூர், ஓசூர், மானாமதுரை, ஆண்டிப்பட்…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழகத்தில் வாக்கு எண்ணும் நடவடிக்கை காணொளியாக பதிவு! தமிழகத்தில் வாக்கு எண்ணும் நடவடிக்கை காணொளியாக பதிவு செய்யப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை குறித்து இன்று (புதன்கிழமை) கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அத்துடன் வாக்கு எண்ணிக்கையை 88 பார்வையாளர்கள் கண்காணிக்கவுள்ளனர். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 8 மணிக்கே தபால் வாக்குகளுடன் சேர்த்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். அதிகபட்சமாக திருவள்ளூரில் 34 சுற்…
-
- 2 replies
- 912 views
-
-
பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் கடந்த ஆண்டு மே 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட …
-
- 0 replies
- 581 views
-
-
ஸ்டெர்லைட் போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு இன்று நினைவு அஞ்சலி May 22, 2019 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது கொல்லப்பட்டவர்களுக்கு இன்று நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 3 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் 22ம் திகதி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்திய பொது மக்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண…
-
- 1 reply
- 356 views
-
-
மக்களவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களில் வெற்றி பெறும் இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடை பெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடை பெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 11-ம் தேதி முதல் 6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்தன. இறுதியாக இன்று 7-ம் கட்டத் தேர்தல் இன்று நடந்தது. இதைத்தொடர்ந்து கருத்து கணிப்பு இன்ற மாலை முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. தமிழகத்தில் எந்த கட்சிகளுக்கு எவ்வளவு இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து கருத்து கணிப்பு முடிவுக…
-
- 11 replies
- 1.7k views
-
-
ராஜீவ்காந்தி நினைவு தினத்தில் தமிழகத்தில் அமைதி ஊர்வலம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 28வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெறவுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 28வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நாளை தமிழகம் முழுவதும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெறுகின்றது. இந்த அமைதி ஊர்வலத்தின் இறுதியில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழ…
-
- 2 replies
- 1k views
-
-
கமலின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலடி எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதி அல்ல. அப்படி ஒரு பயங்கரவாதி இருப்பின் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் தஜீந்தர் பால் சிங் பாகா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “பயங்கரவாதத்தை ஒரு மதத்திற்குள் வரையறுப்பது தவறு. இந்தியாவின் தேசத் தந்தையான காந்தியைக் கொன்றவரை இந்து பயங்கரவாதி என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஆயிரக் கணக்கான சீக்கியர்களைக் கொன்று குவித்த ராஜீவ் காந்தியை அவர் எவ்வாறு அழைப்பார்? நாட்டில் மக்களிடையே மத அடிப்படையில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியுள்ள கமல்ஹாசன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்…
-
- 7 replies
- 1.5k views
- 1 follower
-
-
வீழ்ந்ததெல்லாம் மீண்டும் எழுவதற்காகவே! – சீமான் முழக்கம் வீழ்ந்த இனம் வீழ்ந்ததாகவே இருக்கட்டும் என வீழ்த்தியவர்கள் இறுமாந்து இருக்க, அதை முறியடித்து, வீழந்ததெல்லாம் மீண்டும் எழுவதற்காகவே என்பதை தமிழர்கள் தமக்குள்ளாகவே உறுதிசெய்யும் எழுச்சி நாளாக முள்ளிவாய்க்கால் நாள் அமைகின்றது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஈழப்போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் 10ஆம் ஆண்டு நிகழ்வு இன்று (சனிக்கிழமை) இடம்பெறுகிறது. இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது, “விடுதலைப்ப…
-
- 0 replies
- 689 views
-
-
சென்னை அருகே பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் அணை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது May 18, 2019 சென்னை அருகே பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் இயற்கையாக அமைந்துள்ள அணை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இருந்து வேலூர் மாவட்டம் காவேரிப் பாக்கம் வரை சுமார் 80 கிலோ மீற்றர் நீளத்துக்கு பூமிக்கடியில் இயற்கையாக இந்த அணை அமைந்துள்ளது. இந்த அணையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்பினால், சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு தேவையான குடிநீரும், விவசாயத்துக்கான தண்ணீரும் தாராளமாகக் கிடைக்கும் என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், வட கிழக்கு பருவமழையும் வழம…
-
- 0 replies
- 896 views
-
-
பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு தௌஹீத் ஜமா அத் கோரிக்கை! May 17, 2019 இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம் மக்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர்கள் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளைச் சந்தித்து இலங்கையில் நிகழ்ந்த அனர்த்தம் குறித்து, தமது கவலையை வெளிப்படுத்தியதுடன், அத்தாக்குதல்களுக்கு பின்னர் முஸ்லிம் சமூகத்தை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும…
-
- 3 replies
- 1k views
-
-
-
கமல் ஹாசன் மீது காலணி வீச்சு; சூலூரில் இடைத் தேர்தலுக்கு பிரசாரம் செய்ய அனுமதி மறுப்பு Getty Images இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சூலூர் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மே 19 அன்று தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ள சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இன்று மாலையோடு அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்வதற்கான நேரம் முடிவடைகிறது. எனவே, அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) சூலூர் சட்டமன்ற தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து கமல் ஹாசன் பிரசாரம் செய்வதாக இருந்த…
-
- 0 replies
- 775 views
-
-
"நாம் தமிழர் கட்சி என்பது தி.மு.க-வுக்கு எதிரான ஒரு கட்சி. அதை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லையே தவிர, அதுதான் அவர்களின் உண்மையான நோக்கம்." தி.மு.கவும், நாம் தமிழர் கட்சியும் இணையான கட்சிகள் இல்லை என்றாலும் இணையத்தில் நடக்கும் மோதலில் உக்கிரம் உச்சமாகத்தான் இருக்கும். சீமான் கட்சியினர் மற்றும் தி.மு.கவினர் இடையே இலைமறைகாயாக இருந்த மோதல், இப்போது `முரசொலி' தலையங்கம் மூலமாக முச்சந்திக்கு வந்துள்ளது. தி.மு.க-வின் `முரசொலி’ ஏட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, அவருடைய பெயரைக் குறிப்பிடாமலேயே கடுமையாக விமர்சித்து கடந்த வாரம் தலையங்கம் வெளியானது. ``நாம் தமிழர் என்பதற்காக உலக உரிமையைப் பெற்றுள்ளதாகக் கருதிக்கொண்டு கர்ஜனை என்று …
-
- 5 replies
- 2.1k views
-
-
தமிழர் என்பதால் ஏழு பேரின் விடுதலை தாமதிக்கப்படுகின்றதா? – ராமதாஸ் கேள்வி தமிழர் என்பதால் ஏழு பேரின் விடுதலை தாமதிக்கப்படுகிறதா என பா.ம.க. நிறுவுனர் டொக்டர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சரான சஞ்சய் தத், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தினார். 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் இந்திய குடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டிய மத்திய அரசு, தகு…
-
- 0 replies
- 438 views
-
-
ராஜ்யசபா சீட் யாருக்கு...? மகனுக்கா..? மருமகனுக்கா? மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கடி..! மக்களைவை மற்றும் 18 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியாக உள்ள நிலையில், ஜூலை மாதம் 6 ராஜ்யசபா இடங்களுக்கு நடைபெற உள்ள தேர்தலில் யாருக்கு அதிர்ஷ்டம் என்ற பேச்சுக்கள் இப்போதே எழத் தொடங்கி விட்டது. திமுகவில் கனிமொழியின் இடத்துக்கு மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதியா..? மருமகன் சபரீசனா.? என்ற போட்டா போட்டி இப்போதே தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த, டாக்டர் மைத்ரேயன், அர்ஜுனன், லட்சுமணன், ரத்தினவேல்; திமுகவில் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா ஆகிய 6 பேரின் ராஜ்யசபா எம்.பி பதவிக்காலம் வரும் ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது…
-
- 1 reply
- 1k views
-
-
பெப்ஸி, கோக் விற்பனைக்கு ஆகஸ்ட் 15 முதல் தமிழகத்தில் தடை? Newscast இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம். தி இந்து (ஆங்கிலம்) - ஆகஸ்ட் 15 முதல் தமிழகத்தில் பெப்ஸி, கோக் விற்பனைக்கு தடை? தமிழகத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இருந்து பெப்ஸி மற்றும் கோக் ஆகிய பானங்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று வர்த்தக அமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது போன்ற அறிவிப்பு வெளியாவது இது முதல்முறை அல்ல. 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு சில வியாபாரிகள் கோக் மற்றும் பெப்ஸி பானங்களை விற்பனை செய்யப் போவதில்லை என்று முடிவெடுத்திருந்தனர். DIBYANGSHU SARKAR கோப்புப்படம் இந்த முடிவுக்கு இரண்…
-
- 0 replies
- 1k views
-
-
இடைத்தேர்தல் நடக்கும் நான்கு தமிழக சட்டமன்றத் தொகுதிகள்: கள நிலவரம் என்ன? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் Getty Images கோப்புப்படம் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு ஏற்கனவே இடைத்தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கு வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்த வாய்ப்புள்ள இந்தத் தொகுதிகளின் நிலவரம் என்ன? மொத்தமுள்ள 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைந்து ஏப்ரல் 18ஆம் தேதியே வாக்குப்பதிவு நடத்தப்பட்டுவிட்டது. மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ…
-
- 0 replies
- 749 views
-
-
தமிழீழ விடுதலையை பா.ஜ.க அரசால் தடுத்திட முடியாது – வேல்முருகன் திட்டவட்டம்! தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை இந்திய அரசு 5 ஆண்டுகளுக்கு நீடித்துள்ள நிலையில், தமிழீழ விடுதலையை பா.ஜ.க அரசால் தடுத்திட முடியாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இந்த செயல் மூலம் பாரதீய ஜனதாக் கட்சி மனித விடுதலைக்கு எதிரான கட்சி என்பதை நிரூபித்துள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், இந்தியாவின் இறையான்மை மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கு எதிராக விடுதலைப்புலிகள் செயற்படுவதாகவும், தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவைப் பெருக்கும் முயற்சியில் சிலர் தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவும், இந்த…
-
- 0 replies
- 413 views
-
-
கமல்ஹாசன்: கோப்புப்படம் நான் பேசியது சரித்திர உண்மை. உண்மை கசக்கும். கசப்பே மருந்தாகும். அந்த மருந்தால் வியாதி குணமாகும் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பேசினார். முன்னதாக, அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து" என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். கமல்ஹாசன் கருத்துக்கு பிரதமர் மோடியும் பதிலளித்தார். இந்நிலையில், 2 நாட்களுக்குப் பின்னர் இன்று(புதன்கிழமை) மாலை மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் பேசிய கமல்ஹாசன் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து வாக்கு சேகரித்தார். தொடர்ந்து பேசிய…
-
- 6 replies
- 1.3k views
- 1 follower
-
-
மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வீட்டிற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு: சர்ச்சை பேச்சால் வந்த வினை..! இந்தியா, தமிழ்நாட்டில் கடந்த 19ஆம் திகதி நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அங்கு பிரசாரம் செய்துள்ளார். அப்போது, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியான நாதுராம் கோட்சே இந்துதான் என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கமலின் பேச்சுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அவரது வீட்டின் முன் சில இந்து அமைப்புகள் இன்று போராட்டம்…
-
- 2 replies
- 1.2k views
-
-
படத்தின் காப்புரிமை ARUN SANKAR/GETTY IMAGES சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து எனக் கூறிய கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டுமென கூறியிருக்கும் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பதவியைப் பறிக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கைவிடுத்துள்ளது. கமல்ஹாசனின் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி பள்ளப்பட்டியில் பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே ஒரு இந்து எனப் பேசியிருந்தார். இதற்கு பாரதிய ஜனதாக் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துவந்தனர். இ…
-
- 1 reply
- 791 views
-