Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. துரைமுருகன் வீட்டில் நடந்த ரெய்டு.. ஸ்பெஷல் ரிப்போர்ட் ரெடி.. தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பு! திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடந்த வருமானவரித்துறை சோதனை குறித்த அறிக்கை தற்போது தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் மூன்று நாட்களாக நடந்த ரெய்டு நேற்று முடிவிற்கு வந்தது. அதேபோல் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் கல்லூரியில் நடந்த வருமானவரித்துறையினர் சோதனையும் முடிந்துள்ளது.முதல்நாள் சோதனையில் 10 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்ததாக செய்திகள் வந்தது. ஆனால் அதையும் கூட துரைமுருகன் தரப்பு மறுத்தது. அதற்கு மறுநாள் மீண்டும் சோதனை நடந்தது. வேலூர் அருகே காட்பாடியில் உள்ள சிமெண்ட் குடோனில் வருமானவரி…

  2. மு. நியாஸ் அகமது பிபிசி தமிழ் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 50 சதவீத இடஒதுக்கீட்டை பெண்களுக்கு அளித்துள்ளது. இந்திய அளவில் ஒரு கட்சி சரி பாதி அளவில் பெண்களுக்கு வாய்ப்பு அளிப்பது இதுவே முதல் முறை. தேர்தலில் பெண்களின் பங்களிப்பு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகையில் பெண்களின் பங்கு 49.7 கோடி. அதாவது 48 சதவீதம். ஆனால், மக்களவையில் அவர்களின் பங்கு 11.8 சதவீதம் (64/543) என்ற அளவிலும், மாநிலங்களவையில் அவர்கள் பங்கு 11 சதவீதம். அதாவது, 27 பெண் உறுப்பினர்கள் …

  3. சமூகத்தின் அடித்தட்டில் இருந்து, கடின உழைப்பின் மூலம் சரவணபவன் என்னும் நிறுவனத்தின் ஆரம்பித்து, இன்று உலகம் முழுவதும் கிளை பரப்பி பெரும் அந்நிய செலாவணி வருமானத்தினை பெற்றுத் தரும் வகையில் கட்டி அமைத்தவர் ராஜகோபால் அவர்கள். ஆனாலும், சில வெற்றியாளர்களுக்கு இருக்கும், பெண்ணாசை இவரையும் விடவில்லை. கிருத்திகா என்னும் வேலைக்கு வந்த திருமணமான பிராமணப்பெண்ணை முதலில் மடக்கி, அவரது, அப்பிராணி கணவர், கணேஷ் என்பவரை துரத்தி விட்டு, இரண்டாவது மனைவியாக வைத்துக் கொண்டிருந்தார். பின்னர் தனது நிறுவனத்தில், வேலை செய்துகொண்டிருந்த ஒருவரின் மகளான, மகள் வயது இளம் பெண, ஜீவஜோதி என்னும் பெண்ணின் மேல் ஆசை கொண்டார். இவர் மோகம் கொண்டிருந்ததை அறியாத அந்த பெண், தனது காதலரை மணந்…

  4. தமிழகத்துக்கு அடுத்துவரும் ஆட்சியில் அதிக நிதி ஒதுக்கீடு – அமித் ஷா நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பா.ஜனதாவின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அத்துடன், பாரதிய ஜனதா வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமரானால் அடுத்த 5 ஆண்டுகளும் ஏழைகளுக்கான ஆட்சியாக மோடி அரசு இருக்கும் என்று அவர் தெரிவித்தார். தூத்துக்குடியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றினார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து அமித்ஷா பிரசாரம் மேற்கொண்டார். இதன்போது அவர் பேசுகையில், “புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தைச் ச…

  5. சென்னை பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கடற்கரையை குப்பையாக்கிய இளைஞர்கள்: காவலர் கொடுத்த நூதன தண்டனை, குவியும் பாராட்டு Published : 02 Apr 2019 17:04 IST Updated : 02 Apr 2019 17:04 IST மு.அப்துல் முத்தலீஃப் காவலர் எபேன், சுத்தம் செய்யும் இளைஞர்கள் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிறந்த நாள் கொண்டாடிவிட்டு குப்பைக்கூளமாக்கி, அசுத்தம் செய்த அலட்சிய இளைஞர்களை போன் செய்து வரவழைத்த காவலர் அவர்களை திருத்த கொடுத்த நூதன தண்டனையால் பாராட்டு குவிகிறது. பொதுவாக பொதுஇடத்தை சுத்தமாக பராமரிக்கவேண்டும் என்கிற எண்ணம் நம்மில் பலருக்கு இல்லை என்ற கருத்தை யாரும் மறுக்க மாட்டார்கள். அது குழந்தை வளர்ப்பிலிருந்து கொண்டு வரப்படவேண்டிய ஒன்று.…

  6. தென் சென்னையில் எனக்கே வெற்றி... சீரியஸாகப் பேசும் பவர் ஸ்ரார் சீனிவாசன்..! தென் சென்னை தொகுதியில் இந்தியக் குடியரசு கட்சி (அ) பிரிவு சார்பில் களமிறங்கியிருக்கிறார் நடிகர் பவர் ஸ்ரார் சீனிவாசன். அவருக்கு அயர்ன் பாக்ஸ் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தென் சென்னைக்கு உட்பட்ட தொகுதியில் தீவிரமாகப் பிரசாரம் செய்துவருகிறார். இந்நிலையில் தன்னுடைய வெற்றி வாய்ப்பு குறித்து பவர் ஸ்ரார் சீனிவாசன் பேட்டி அளித்திருக்கிறார். “நடிகர் கமல் கட்சியில் நான் ஏன் சேரவில்லை என்று பலரும் கேட்கிறார்கள். கமல் கட்சி இப்போதுதான் தொடங்கப்பட்டது. நான் சேர்ந்துள்ள இந்திய குடியரசுக் கட்சி 40 ஆண்டுகளாக உள்ள கட்சி. அந்தக் கட்சியின் மாநில துணை தலைவராக இருக்கிறேன். தேர்தலில் தென் சென்னை …

  7. துரைமுருகன் ஆதரவாளர்கள் வீடுகளில் கட்டுக்கட்டாகப பணம், அனைத்தும் 200 ரூபாய் கட்டுகள் 9 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி: 'துரைமுருகன் ஆதரவாளர்கள் வீடுகளில் கட்டுக்கட்டாக பணம்' திமுக பொருளா…

  8. கோவை மாவட்ட எஸ்பி பணியிட மாற்றம் - பொள்ளாச்சி விவகாரம் எதிரொலி? 5 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயராமன் மற்றும் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் முதன்மை செய…

  9. தேர்தல் 2019 - "30 இடங்களில் தி.மு.க. கூட்டணியை வெற்றிபெறச் செய்வோம்" - வேல்முருகன்; மீதமுள்ள 10 தொகுதிகள்? முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionவேல்முருகன் 2019 மக்களவை தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தி.மு.கவுக்கு ஆதரவளிக்கப்போவதாக…

  10. என்னிடம் வசூலித்த ரூ.10 ஆயிரத்தில் 1000 ரூபாய் வைத்துக்கொண்டு மீதியை கொடுங்க: கமலுக்கு விருப்ப மனு அளித்த எஸ்.ஐ. கடிதம் Published : 31 Mar 2019 17:27 IST Updated : 31 Mar 2019 21:27 IST மு.அப்துல் முத்தலீஃப் ஓய்வு எஸ்.ஐ. புகழேந்தி, கமல் கோப்புப் படம் மக்கள் நீதிமய்யத்தில் விருப்பமனுக்காக கட்டிய பணத்தில் 1000 ரூபாயை எடுத்துக்கொண்டு மீதியை தாருங்கள் என நடிகர் கமல் ஹாசனுக்கு ஓய்வுப்பெற்ற உதவி ஆய்வாளர் கடிதம் எழுதியுள்ளார். நடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதிமய்யம் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அரசியல் நேர்மை, ஊழலில்லாத ஆட்சி, ஊழல் கட்சிகளுடன் கூட்டில்லை என அறிவித்துள்ளார். அவரது கட்சியில் ஆர்வத்துடன் இணைந்த ப…

  11. இந்தியாவில் கருத்துக்கணிப்பு செய்வதற்கு கடினமான மாநிலம் தமிழ்நாடு' - விவரிக்கும் மூத்த பத்திரிகையாளர் தை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP CONTRIBUTOR மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் தொடர்பான முக்கிய புத்தகங்களை அறிமுகப்படுத்த உள்ளோம். அதில் முதல் புத்தகம் The Verdict: Decoding India's Elections. புத்தகம் The Verdict: Decoding India's Elections …

    • 0 replies
    • 457 views
  12. இப்பவே இந்தக் கொடுமையா...? செந்தில் பாலாஜி - ஜோதிமணி முன் தனியாய் சிக்கியவர் மீது வெறியாட்டம்.. ! திமுக கூட்டணியில் கரூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வாக்கு சேகரிக்க சென்றபோது கேள்வி கேட்ட ஒருவரை அவரது ஆதரவாளர்கள் தாக்கிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த தேர்தலில் தம்பிதுரைக்கு ஆதரவாக தேர்தல் களத்திம் வாக்கு சேகரித்த செந்தில் பாலாஜி டி.டி.வி.அணிக்கு தாவி கடந்த சில மாதங்களுக்கு முன் திமுகவில் இணைந்தார். தற்போது ஜோதிமணியை வெற்றி பெறவைத்து கரூர் தொகுதியை திமுகவின் கோட்டையாக மாற்றுவேன் என ஸ்டாலினிடம் சபதம் செய்…

  13. பொள்ளாச்சி சம்பவம் தொடர்பில் யூடியூப் நிறுவனத்துக்கு சிபிசிஐடி மீண்டும் கடிதம் March 30, 2019 பொள்ளாச்சி விவகாரத்தில் அண்மையில் வெளியான ஒலிப்பதிவின் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டு அதனை பதிவு செய்தவரின் தகவலை பெறுவது தொடர்பாக யூ டியூப் நிறுவனத்திற்கு சிபிசிஐடி மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது. பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய குழுவொன்றினை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் அது தொடர்பில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் பாதிக்கப்பட்ட இளம்பெண்களின் வீடியோக்கள் முகப்புத்தகம் , வட்ஸ்-அப், யு-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தநிலையில் அவ்…

  14. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராடும் காவிரிக் கரையோர மக்கள் 28 மார்ச் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil …

  15. கடலில் 28 கிலோ மீற்றர் தூரத்தை 10மணி நேரத்தில் நீந்தி சிறுவன் சாதனை March 29, 2019 தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் 28 கிலோ மீற்றர் தூரத்தை 10 மணி நேரத்தில் நீந்தி கடந்து சிறுவன் ஒருவர் புதிய சாதனை படைத்துள்ளார். தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த 4ம் வகுப்பில் கல்வி கற்று வரும் 10 வயதான ஜெய் ஜஸ்வந்த் என்பவரே இவ்வாறு சாதனை புரிந்துள்ளார் இலங்கை தலைமன்னாரில் இருந்து ராமேசுவரம் தனுஷ்கோடி வரை 28 கிலோ மீற்றர் தூரத்தை கடலில் நீச்சல் அடித்து கடக்கும் சாதனையை இவர் நிகழ்த்தி உள்ளார். ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை சிறுவன் ஜெய் ஜஸ்வந்த், பயிற்சியாளர் உள்பட 14 பேர் கொண்ட குழுவினர் ஒரு மீன்பிடி விசைப்படகு மூலமாக தல…

  16. கோவையில் சிறுமி கொலை – உடற்கூற்று பரிசோதனையில் அம்பலமாகிய திடுக்கிடும் தகவல்கள் கோவையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஏழு வயது சிறுமியின் உடற்கூற்று பரிசோதனை குறித்த அறிக்கை வெளியாகி அனைவர் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த உடற்கூற்று அறிக்கையில் சிறுமி ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் தொடச்சியாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படத்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் சிறுமி அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளதுடன், கயிறொன்றின் மூலம் கழுத்து நெரிக்கப்பட்டு, கழுத்திலுள்ள நரம்பு துண்டாகி உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றிய விபரங்களை தெரிந்தவர்…

  17. ராமநாதபுரத்தில் கரையொதுங்கிய பொருளின் மர்மம் விலகியது ராமநாதபுரம் அருகே, கடற்கரையில் ஒதுங்கிய சிலிண்டர் போன்ற பொருள் குறித்த மர்மம் விலகியதையடுத்து, மீனவர்கள் நிம்மதி அடைந்தனர். தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகே உள்ள புதுக்குடியிருப்பு கடலோரப்பகுதியில், பெரிய சிலிண்டர் போன்ற பொருள் ஒன்று கரையொதுங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மீனவர்கள், இதுகுறித்து கடலோரக் காவல்படை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பொலிஸார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, சிலிண்டர்போல் இருந்த அந்த பொருள் 12 அடி நீளம், இரண்டே கால் அடி சுற்றளவில் இருந்தது. அதில், பிரமோஸ் என்ற ஆங்கில எழுத்தும், 24-10-2016 என்ற திகதியும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவ…

  18. உயிரோடு இருப்பேனோ இல்லையோ.. மகனுக்கு ஓட்டு போடுங்க.. அப்பாக்கள் எல்லாம் என்ன இப்படி இறங்கிட்டாங்க! எல்லாம் ஒரு நாள் போகத்தானே போறோம்.. இப்படி கூட ஓட்டு கேட்பாங்களா?ன்னு நெல்லை தொகுதி மக்கள் பேசி கொள்கிறார்கள். இவ்வளவு காலம் கட்சியில் இருந்த செல்வாக்கை வைத்து இந்த முறை பெரிய புள்ளிகள் எல்லாம் வாரிசுகளுக்கு சீட் வாங்கிவிட்டார்கள். இதனால் இந்த விஷயம் அதிமுக, திமுக கட்சிகளுக்குள் இன்னமும் புகைந்து கொண்டிருக்கிறது. இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத இந்த பெரிய புள்ளிகள் மகன்களை ஜெயிக்க வைக்கும் அடுத்த கட்ட வேலையில் இறங்கிவிட்டனர். ஒரு பக்கம் துரைமுருகன், "என் மகன் செய்றானோ இல்லையோ, உயிரை தந்தாவது உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவான் இந்த துரைமுருகன்" என்கிறார். வ…

  19. 47 சதவீத ஆண்கள் மதுவுக்கு அடிமை: நாட்டில் நடக்கும் குற்றச்சம்பவங்களுக்கு அரசை ஏன் பொறுப்பாக்க கூடாது?- அரசுக்கு உயர் நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவு Published : 27 Mar 2019 20:56 IST Updated : 27 Mar 2019 20:56 IST கோப்புப் படம் மதுபோதைக்கு 47 சதவீத ஆண்கள் அடிமையாக உள்ளனர். நாட்டில் நடக்கும் குற்றச்சம்பவங்களுக்கு மதுவிற்கும் அரசே அதற்கு பொறுப்பு என ஏன் அறிவித்து தண்டனை விதிக்கக்கூடாது என அரசுக்கு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இரண்டு பேர் தற்கொலை செய்த வழக்கில் வீராசாமி உட்பட இருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இருவருக்கும் நிபந்தனை முன் …

  20. படத்தின் காப்புரிமை SPUKKATO கோவை துடியலூர் பகுதியில் காணாமல்போன ஐந்து வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். திங்கள்கிழமை காலை வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய அந்த சிறுமி, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென காணாமல் போனதால், அனைவரும் தேடியுள்ளனர். …

  21. சென்னை விமான நிலையத்தில் அரியவகை உயிரினங்களுடன் மாணவன் கைது! சென்னை விமான நிலையத்தில் அரிய வகை உயிரினங்களை கடத்தி வந்த கல்லூரி மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். தாய்லாந்திலிருந்து சென்னைக்கு வந்துசெல்லும் விமானத்தில் இருந்த கல்லூரி மாணவன் ஒருவர் வைத்திருந்த பெட்டியிலேயே இந்த அரிய வகை உயிரினங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த சோதனையின் போது அதில் ஹார்ன்ட் பிட் வைபர் எனும் கொடிய விஷமுள்ள பாம்பு, உடும்பு, எகிப்திய ஆமைகள், விஷ அரணை, எறும்புத்திண்ணி ஆகியவை இருந்துள்ளன. அதேநேரம் இவை 34 வகையான கொடிய உயிரினங்கள் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட உயிரினங்கள் தாய்லாந்து செல்லும் விமானத்தில் திருப்பி அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரி…

  22. இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்து இந்திய அரசிடம் வலியுறுத்தும் அ.தி.மு.க. இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்துவதற்கு இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தவுள்ளதாக அ.தி.மு.க. தெரிவித்துள்ளது. இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அ.தி.மு.க.வின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒரு வாரத்திற்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், புதிய இணைப்பு விஞ்ஞாபனம் ஒன்றை கட்சியின் இணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், முதலமைச்சர் கே.பழனிசாமியும் வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், இந்திய மத்திய அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகம் என்பன, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்…

  23. தமிழக காவல்துறையில் ஒரு புரட்சிகர சீர்த்திருத்தம்: இனி குற்ற வழக்குகள் அனைத்தையும் விசாரிக்க தனி அமைப்பு Published : 26 Mar 2019 19:52 IST Updated : 26 Mar 2019 19:52 IST மு.அப்துல் முத்தலீஃப் கோப்புப் படம் காவல்துறையில் பெரும் புரட்சிகரமான மாற்றம் ஒன்று உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் தமிழகத்துக்கு அமலாக உள்ளது. இனி அனைத்து குற்றவழக்குகளும் அதற்கென்று உருவாக்கப்படும் குற்றப்பிரிவு மட்டுமே விசாரிக்கும் புதியமுறை அமலுக்கு வந்தது. போலீஸில் குற்றப்பிரிவு (CRIME), சட்டம் ஒழுங்கு (L&O), போக்குவரத்து (TRAFFIC) என நேரடியாக பொதுமக்களுடன் தொடர்பில் உள்ள மூன்று பிரிவுகள் உண்டு. தவறவிடாதீர் …

  24. படத்தின் காப்புரிமை Getty Images காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள நெமிலியில் ஒரு வீட்டின் கழிவுநீர்த் தொட்டியிலிருந்து விஷ வாயு தாக்கியதால், ஆறு பேர் பலியாகியுள்ளனர். இதில் மூன்று பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நெமிலி பகுதியில் உள்ள விநாயக நகரில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் கழிவு நீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டதால், முன்னதாக அந்த தொட்டி இயந்திரங்களின் மூலம் சுத்தம் செய்யப்பட்டது. இதற்குப் பிறகு, அந்த வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி (53) என்பவர் அந்த கழிவு நீர்த் தொட்டி சரியாக சுத்தம் செய்ய்பட்டி…

  25. கதை கேளு.. கதை கேளு... 200 ரூபாய்க்காக கட்சி கூட்டத்துக்கு போகும் பெண்களின் கண்ணீர் கதையை கேளு..! சென்னை: முதல் நாள் இரவில் குடித்துவிட்டு வரும் கணவர்களால் அடுத்த நாள் காலையில் வீட்டில் உலை வைக்க காசு இல்லாத நிலையில் தான் பல வீட்டில் பெண்கள் தவிக்கிறார்கள். கிடைக்கும் அந்தக்கூலி வேலைக்கு செல்லும் பெண்கள், கட்சிகள் தரும் ரூ.200க்காக கோஷம் போட சென்று வருகிறார்கள். அவர்களை பற்றிய கதை தான் இது... இப்போது பெரும்பாலான வீடுகளில் ஆண்கள், மனைவி மற்றும் குழந்தைகளை விட, குடிதான் பெரிசு என்ற அளவுக்கு முழு நேரமும் மதுவுக்கு அடிமையாகி கிடக்கிறார்கள். முன்பெல்லாம் ஏதேனும் விஷேசம் என்றால் குடித்துவந்த ஆண்கள், தினசரி குடிகாரர்களாக மாறிவிட்டார்கள். அதிலும் பலர் பகல் நேரக் கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.