Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 16 MAR, 2025 | 11:53 AM உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று நாங்கள் சொல்வது பிறமொழி வெறுப்பல்ல. அது தாய்மொழியை பாதுகாக்கும் முயற்சி” என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக, ஜன சேனா கட்சியின் 12-வது ஆண்டு விழாவில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் அக்கட்சியின் தலைவரான பவன் கல்யாண் பேசி இருந்தார். அப்போது அவர், “இந்தியாவுக்கு பல மொழிகள் தேவை. அது தேசத்துக்கு சிறப்பு சேர்க்கும். இது தமிழகத்துக்கும் பொருந்தும். இந்தி மொழியை எதிர்க்கும் தமிழகம், தமிழ் திரைப்படங்களை பிற மொழிகளில் டப்பிங் செய்யக் கூடாது. ஆனால், நிதி ஆதாயத்துக்காக தமிழ் படங்கள் பல மொழிகளில் டப் செய்யப்படுகின்றன” எனக் கூறியிருந்தார். இதற்குப்…

  2. ஏ.ஆர்.ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி! இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று (16) காலை நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். காலை 7:30 மணியளவில் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டடதாகவும், அங்கு வைத்தியர்கள் ECG மற்றும் எக்கோ கார்டியோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகளை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்படலாம் என்று வைத்தியசாலைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளருக்கு சிறப்பு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. அவரது உடல்நிலை குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://athavanne…

  3. ‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை Published:14th Mar, 2025 at 6:20 PM பரமசிவன் பாத்திமா படம். செய்திகள் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் டிரைலரை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், பாஜக தலைவர் அண்ணாமலையும் இணைந்து வெளியிட்டுள்ளனர். Updated:14th Mar, 2025 at 6:20 PM ‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் டிரைலரை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், பாஜக தலைவர் அண்ணாமலையும் இணைந்து வெளியிட்டுள்ளனர். விமல் நடிப்பில் உருவாகி வரும் படம் பரமசிவன் பாத்திமா. இதில் விமலுக்கு ஜோடியாக சாயா தேவி கண்ணன் நடித்துள்ளார். மேலும் படத்தில் சாயாதேவி, எம்.எஸ்.பாஸ்கர், கூல் சுரேஷ், காதல் சுகுமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கார்வண்ண…

  4. பட மூலாதாரம்,TN ASSEMBLY 14 மார்ச் 2025, 03:23 GMT புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசின் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. திருக்குறள் மொழிபெயர்ப்புக்கு ரூ.133 கோடி ஒதுக்கீடு முதல் சென்னை அருகே புதிய நகரம் உருவாக்கப்படுவது வரை பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை இலச்சினையில் 'ரூ' சேர்க்கப்பட்டது விவாதமாவது ஏன்? 'விதிகளை வளைத்து ரூ.300 கோடி முறைகேடு' - உணவுத்துறை மீதான குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில் இந்திய மீனவர்களுக்கு எதிராக கச்சத்தீவு உற்சவத்தை புறக்கணிக்க இலங்கையில் தீர்மானம் திருக்குறளை மொழிபெயர்க்க ரூ.133 லட்சம் ஒதுக்கீடு திருக்குறளை 45 புதிய மொழிகளில் மொழிபெயர்க…

  5. சென்னை: நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் சம்மன் ஒட்டியபோது போலீஸாருடன் பிரச்சினை செய்ததாக கைதான சீமான் வீட்டுக் காவலர் மற்றும் பணியாளருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் பதியப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் வீட்டில் வளசரவாக்கம் போலீஸார் சம்மன் ஒட்டினர். இந்த சம்மனை சீமான் வீட்டில் இருந்த பணியாளர் கிழித்தார். இதில் ஏற்பட்ட பிரச்சினையில் போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டதாக சீமான் வீட்டுப் பணியாளரான சுபாகர் மற்றும் வீட்டின் பாதுகாவலரான அமல்ராஜ் ஆகியோரை கைது செய்த நீலாங்கரை போலீஸார், அமல்ராஜ் வைத்திருந்த துப்பாக்கி…

  6. படக்குறிப்பு,அமைச்சர் சக்கரபாணி 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து நெல் மூட்டைகளைக் கொண்டு செல்வதற்கு போக்குவரத்து ஒப்பந்தம் வழங்கியதில் 300 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக ஒப்பந்த விதிகளை வளைத்து முறைகேடு நடைபெற்றதாகக் கூறுகிறார், அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன். இந்திய அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டே விலைப் பட்டியல் இறுதி செய்யப்பட்டதாகக் கூறுகிறார், தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி. நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களுக்கு நெல் மூட்டைகளை அனுப்புவதில் முறைகேடு நடந்ததா? அமைச்சர் சக்கரபாணி சொல்வது என்ன? தமிழ்நாட்டில் விவசாயிகளிடம் இருந்து …

  7. இந்திய ரூபாவுக்கு புதிய குறியீடு; இந்தி திணிப்புக்கான ஸ்டாலினின் அதிரடி நடவடிக்கை! திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான தமிழக அரசு, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் அதிகாரப்பூர்வ இந்திய ரூபாய் சின்னத்தை (₹) நீக்கி, அதற்கு பதிலாக தமிழ் எழுத்துக்களை (ரூ) மாற்ற முடிவு செய்துள்ளது. மார்ச் 14 ஆம் திகதி மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மாநில வரவுசெலவுத் திட்டத்துக்கான ஒரு முன்னோட்டத்தை ஸ்டாலின் எக்ஸில் பகிர்ந்து கொண்டார். அதில், “சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சிய‍ை உறுதி செய்திட…” என்று கூறியுள்ளார். தேசிய கல்விக் கொள்கைக்கு (NEP) எதிரான எதிர்ப்பை ஒரு மாநிலம் புதிய நிலைக்கு எடுத்துச் சென்று, தேசிய ந…

  8. பெரியார் தமிழ் மொழியை 'காட்டுமிராண்டி மொழி' எனக் கூறியது ஏன்? பட மூலாதாரம்,DHILEEPAN RAMAKRISHNAN கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பெரியார் மீது அவருடைய எதிர்ப்பாளர்களால் தொடர்ந்து முன்வைக்கப்படும் ஒரு விமர்சனம், அவர் தமிழை 'காட்டுமிராண்டி மொழி' எனக் கூறினார் என்பதுதான். நாடாளுமன்ற மக்களவையில் மார்ச் 11ஆம் தேதியன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரியாரின் பெயரைக் குறிப்பிடாமல், "தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் படத்தை ஒவ்வொரு அறையிலும் (திமுகவினர்) வைத்திருக்கின்றனர். அவருக்கு மாலை அணிவித்து வணங்குகின்றனர், திராவிட இயக்கத்தின் அடையாளம் என்கின்றனர். ஆனால், அவர் தமிழை 'காட்டுமிராண்டி மொழி' எனக் க…

  9. D Jeya DeviPublished: Wednesday, March 12, 2025, 12:25 [IST] அதில், சீமான் கூட நான் வாழ்த்துக்கள் படத்தில் நடித்தேன். அந்த படத்தின் மூலமா தான் சீமான் எனக்கு பழக்கமானார். ஆரம்பத்தில் இருந்த எனக்கும் அவருக்கும் ஒத்துப்போகவில்லை. எனக்கு எப்போதுமே கடவுள் முருகன் மீது, ஈடுபாடு உண்டு. இதனால் எப்போது படப்பிடிப்பு நடந்தாலும் நான் முருகரை ஒரு முறையாவது சென்று தரிசனம் செய்துவிட்டு வருவேன். ஆனால், சீமான் அவர்கள் என்னிடம் பேசியம் போதே உங்களை நான் கோவிலுக்கு போகவிட மாட்டேன் என்று தான் சொன்னார். முருகரை பிறகு தரிசனம் செய்து கொள்ளலாம், முதலில் படப்பிடிப்பில் இருக்கிறவர்களுடன் நன்றாக பழகி பேசுங்கள் என்று சொன்னார். அப்பொழுதே எனக்கும் அவருக்கும் முரண்பாடு ஏற்பட்டு விட்டது. இதனால் நான் எப்…

  10. D Rajkumar RPublished: Wednesday, March 12, 2025, 1:43 [IST] சென்னை: சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். காரில் அமர்ந்திருந்த சீமானின் கைய பிடித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "அண்ணா விட்றாதீங்க ஃபைட் பண்ணிக்கிட்டே இருங்க" என ஊக்கம் கொடுத்தார். Also Read ஆனாலும் நாம் தமிழர் கட்சி சீமான் மீது தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. காரணம் பெரியார் குறித்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பெரியாரி அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. அதே நேரத்தில் அவரது கட்சி நிர்வாகிகளும் அடுத்தடுத்து வெளியேறி வருவது சீமானுக்கு ச…

  11. படக்குறிப்பு, தமிழக மீனவர்கள் மீது கடற்படை துப்பாக்கிச் சூட்டை நடத்தியதற்கான காரணத்தை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் வெளிப்படுத்தினார். 45 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கை கடற்பரப்பு பாலைவனமாவதைத் தவிர்க்க வேண்டும் என்றால், இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை கடற்றொழில், நீரியல்வள, கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவிக்கின்றார். ஆனால், இதுபோன்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் மறுத்து வருகின்றனர். பிபிசி தமிழுக்காக இலங்கையில் இருந்து செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதைக் குறிப்பிட்டார். தமிழக மீனவர்கள் மீது கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணத்தை அமைச்சர் இராமலிங்கம் ச…

  12. முத்தையா முரளிதரனின் நிறுவனத்திற்கு காஷ்மீரில் இலவசமாக நிலம் வழங்கப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முத்தையா முரளிதரன் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தவர். 2010 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், தற்போது தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார். முத்தையா முரளிதரன், Ceylon Beverages என்ற குளிர்பான நிறுவனத்தை இலங்கையில் தொடங்கி நடத்தி வருகிறார். குளிர்பான நிறுவனம் இந்த நிறுவனத்தை இந்தியாவில் விரிவுபடுத்தும் வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில், ரூ.1,600 கோடி முதலீட்டில் குளிர்பானம் மற்றும் அலுமினியம் கேன் தயாரிப்பு …

    • 3 replies
    • 484 views
  13. எடப்பாடி முதல்வர் வேட்பாளர் இல்லை.. சீமான்தான்.. பாஜக மாஸ்டர்பிளான்.. ரவீந்திர துரைசாமி பளீர் Shyamsundar IUpdated: Monday, March 10, 2025, 15:00 [IST] சென்னை: பாஜக அதிமுக கூட்டணி வைத்தால்.. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி இருக்க மாட்டார். மோடி அப்படி யோசிக்க மாட்டார். மோடி என்ன முட்டாளா? சீமானிடம் பலவீனம் ஆனவர் எடப்பாடி. அவரை பற்றி உளவுத்துறைக்கு தெரியாதா? மோடிக்கு இது தெரியாதா? அப்படி இருக்க எடப்பாடி எப்படி முதல்வர் வேட்பாளர் ஆவார்?, என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார். மீண்டும் சேரும் அதிமுக - பாஜக பாஜக, அதிமுக இரண்டும் மாறி மாறி கூட்டணிக்கு தூதுவிட தொடங்கி உள்ளன. திமுகதான் எதிரி; வேற எந்த கட்சியுமே எதிரி இல்லை; திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறவ…

  14. மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்! இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை வலியுறுத்தி தமிழகத்தில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்போவதாக விஜயின் கட்சியான தமிழக வெற்றி கழகம் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் தளபதி விஜய்யும் கலந்து கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அடுத்தவராம் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான அனுமதியை தமிழக வெற்றி கழகம் பொலிசாரிடம் முன்வைத்துள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் இந்த போராட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424675

  15. https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-tasmac-liquor-scam-three-day-ed-raid-in-chennai-concludes-686211.htmlதமிழகம் அதிர்ந்த டாஸ்மாக் மதுபான முறைகேடு:சென்னையில் 3 நாட்கள் நீடித்த அமலாக்கத்துறை ரெய்டு நிறைவு By Mathivanan Maran Updated: Sunday, March 9, 2025, 17:04 [IST] Subscribe to Oneindia Tamil சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக சென்னையில் கடந்த 3 நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி வந்த சோதனை தற்போது முடிவடைந்துள்ளது. சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் மற்றும் பெருமளவு ரொக்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்க…

  16. பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் எழுதியவர்,விஜயானந்த் ஆறுமுகம் பதவி,பிபிசி தமிழ் 9 மார்ச் 2025, 04:05 GMT புதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர் சென்னையில் தமிழக அரசின் ஓய்வு பெற்ற உயர் அதிகாரி ஒருவர் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் மோசடி கும்பலிடம் 6 கோடி ரூபாயை இழந்துள்ளார். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரபலங்களின் பெயரில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு காவல்துறை எச்சரித்துள்ளது. பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் பேசியதாக புனையப்பட்ட செய்தி ஒன்றையும் சைபர் கிரைம் ஏடிஜிபி சந்தீப் மிட்டல் மேற்கோள் காட்டியுள்ளார். மோசடிக் கும்பலிடம் பணத்தை இழந்தாலும் அதனை விரைந்து மீட்பதற்கான வழிகள் உள்ளதாகக் கூறுகின்றனர், சைபர் தொழில்நுட்ப வல…

  17. D கோடி பேர் இருக்காங்க வெளில.. ராயப்பேட்டையில் மாஸ் காட்டிய விஜய்! பதறிப் போன பவுன்சர்கள்.. என்னா அடி! Rajkumar RPublished: Friday, March 7, 2025, 22:12 [IST] சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சென்னையில் இன்று நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் கலந்து கொண்டார். முன்னதாக எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் திரண்ட நிலையில் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பவுன்சர்கள் திணறினர். ஒரு கட்டத்தில் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் அவர்களே அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 15க்கும் மேற்…

  18. பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் எழுதியவர்,சாரதா வி பதவி,பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தெரு நாய்கள் மற்றும் வீட்டு நாய்களுக்கு உடலில் சிப் பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா, இனப்பெருக்க கட்டுப்பாடு சிகிச்சை செய்யப்பட்டுள்ளதா என்பனவற்றைக் கண்காணிக்கவும், வீட்டு நாய்கள் தெருவில் கைவிடப்படுவதைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை உதவும் என்று சென்னை மாநகராட்சி நம்புகிறது. சென்னையில் உள்ள 1.8 லட்சம் தெரு நாய்களில் உடலில் சிப் பொருத்தும் பணியை மாநகராட்சி நிர்வாகம் செய்யத் தொடங்கியுள்ளது. வீட்டு நாய்கள் உள்ளிட்ட செல்ல பிராணிகளுக்கு உரிமம் பெற உடலில் சிப் பொருத்துவதைக் கட்டாயப்படுத்தும் வகையி…

  19. பட மூலாதாரம்,Police Department படக்குறிப்பு,கொலை செய்யப்பட்ட லோகநாயகி கட்டுரை தகவல் எழுதியவர்,சேவியர் செல்வக்குமார் பதவி,பிபிசி தமிழ் 6 மார்ச் 2025 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஏற்காட்டில், கடந்த மார்ச் 1ஆம் தேதியன்று இளம் பெண் ஒருவர் மயக்க மருந்து செலுத்தி மலைப் பகுதியில் இருந்து துாக்கி எறியப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் அழுகிய நிலையில் மார்ச் 5ஆம் தேதியன்று மீட்கப்பட்டது. இதுதொடர்பாக, பொறியியல் மாணவர் ஒருவர், பெண் ஐடி ஊழியர் ஒருவர், ஒரு நர்சிங் கல்லுாரி மாணவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மாணவர், மூன்று பெண்களையும் (கொலை செய்யப்பட்ட பெண், கைது செய்யப்பட்ட பெண்கள்) காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியிருப்பதாக…

  20. பட மூலாதாரம்,Getty Images 3 மணி நேரங்களுக்கு முன்னர் இன்றைய (06/03/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மலை கிராமத்தில் சிறுமிக்கு குழந்தைத் திருமணம் செய்து வைத்து, அவரது கணவர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்களின் செயல் சமூக வலைதளங்களில் பரவியது என்றும் இந்த விவகாரத்தில் போலீஸார் மூன்று பேரை கைது செய்துள்ளனர் என்றும் தி இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே, கடல் மட்டத்திலிருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில், ஒன்னேபுரம், சித்தப்பனூர், சிக்கமஞ்சி, கிரியானூர், பெல்லட்டி, தொட்டமஞ்சி என 20-க்கும் …

  21. சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், சீமானிடம் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. இதுகுறித்து பதிலளிக்க தமிழ்நாடு போலீஸ், விஜயலட்சுமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கில் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றிய எதிர்பார்ப்புகள் சட்ட வட்டாரங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் அதிகரித்துள்ளன. ஒரு பக்கம் சீமான் தரப்பில் இருந்தும், இன்னொரு பக்கம் சீமான் எதிர்ப்பாளர்கள் தரப்பில் இருந்தும் விஜயலட்சுமிக்கு அழுத்தங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. நாம் தமி…

  22. சென்னை: “தமிழகத்தின் உரிமைகளைப் பறித்து, தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கத் துடிக்கும் பாஜகவும், அதன் சில ஏஜண்டுகளும் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தார்கள். அவர்கள் என்றும் தமிழகத்தின் பகைவர்கள்தான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்” என்று திமுக சாடியுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பாஜக, நாதக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய 5 கட்சிகள் புறக்கணித்தது கவனிக்கக்கது. தமிழக அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து திமுக வெளியிட்ட அறிக்கையில், “தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழகத்துக்கு ஏற்படப்போகும் பேராபத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் க…

  23. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் 5 மார்ச் 2025, 02:22 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இன்றைய (05/03/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் விஜயகுமார் தெரிவித்துள்ளார் என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பேட்டரி தயாரிக்க பயன்படும் லித்தியம் என்ற கனிமமும் தமிழ்நாட்டில் பூமிக்கு அடியில் படிமங்களாக இருக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது. அந்த செய்தியில், "இந்திய புவியியல் ஆய்வு மையத்த…

  24. 4 Mar, 2025 | 12:56 PM இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அந்நாட்டு கடற்படையால் கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தங்கச்சிமடத்தில் நேற்று திருவோடு ஏந்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கடற்படையால் கடந்த ஜனவரி முதல் 18 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டு, 131 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், 38 மீனவர்கள் தண்டனை பெற்று, அங்குள்ள சிறைகளில் உள்ளனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 42 மீனவர்கள், புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்கள் நீதிமன்றக் காவலில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் பிப்.…

  25. என்னை விட்டுடுங்க! இனிமேல்.. சீமான் வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு பின் நடிகை பரபரப்பு வீடியோ Mani Singh SUpdated: Tuesday, March 4, 2025, 14:24 [IST] இனி எந்த கம்ப்ளைண்டும் கொடுக்க மாட்டேன்.. கம்ப்ளைண்ட் கொடுத்தாலும் எந்த ஆக்‌ஷனும் யாரும் எடுக்கப்போவதில்லை. இதனால் எந்த போராட்டமோ.. எந்த வித கம்ப்ளைண்டோ கொடுக்கப்போவதில்லை.. இது தான் என் கடைசி வீடியோ.. எனக்கு நியாயம் கிடைக்காது.. எனக்கு நியாயம் கிடைக்கவும் விடமாட்டாங்க என்று பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். நடிகை கொடுத்த புகாரின் பேரில் சீமானுக்கு எதிராக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 2 மாதங்களுக்குள் இந்த விவகாரத்துக்கு பேசி முடிவு காண அறிவுறுத்திய நீதிபதிகள், மேலும் இது தொடர்பாக புகார்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.