தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
தி.மு.க., தலைவர் கருணாநிதி காலமானார் மாலை 6.10 மணிக்கு கருணாநிதி உயிர் பிரிந்தது http://www.dinamalar.com/ கருணாநிதி மறைந்தார் - கண்ணீரில் தமிழகம்! #Karunanidhi கருணாநிதி காலமானார் : தி.மு.க. தலைவர் கருணாநிதி மிகவும் கவலைக்கிடமாக கடந்த சில தினங்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இந்நிலையில், இன்று மாலை 6.10 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். https://www.vikatan.com/news/tamilnadu/133308-live-updates-on-karunanidhi-health-condition.html
-
- 124 replies
- 21.7k views
- 1 follower
-
-
ஈழப் போராட்டம் தொடர்பில் கருணாநிதி செய்தது என்ன? on: August 08, 2018 Print Email ஈழப் போராட்டத்தில் கருணாநிதியின் பாத்திரம் துரோகத்துடன் தொடங்கி துரோகத்துடனேயே முடியப் போகிறது. தமிழகத்தில் போராளி இயக்கங்கள் தம்மை தயார்படுத்திக் கொண்டிருந்த காலம் அது. இந்திய உளவுத்துறை இயக்கங்களை பிரித்து வைத்து கையாள சதிகளை முடுக்கி விட்டிருந்த போதும் அதற்குப் பலியாகாமல் இயக்கங்கள் ஓரளவு கருத்துடன்பாடுடன் இயங்கிய காலம் அது. அந்த நேரத்தில் அப்போதைய தமிழக முதல்வர் எம்ஜிஆர் போராளி இயக்கங்களின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் நோக்கிலும் அவர்களுக்கு பொருளாதார உதவ…
-
- 0 replies
- 732 views
-
-
கருணாநிதி ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டார்: துரைமுருகன் காவேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தி.மு.க.தலைவர் கருணாநிதி, ஆபத்தான காலக்கட்டத்தை கடந்து விட்டாரென தி.மு.க.முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் கருணாநிதியின் உடல்நிலையில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் நாம் கூறுவதை அவரால் கேட்க முடிகிறது. இந்தவகையில் அவர் ஆபத்தான காலகட்டத்தை தற்போது கடந்து விட்டார் . இதனால் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நிச்சயம் வீடு திரும்புவார…
-
- 1 reply
- 1k views
-
-
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிப்பு பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89 தி.மு.க. தலைவர் மு. கருணாநிதிக்கு சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றின் காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு. கருணாநிதி கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து உடல் நலக் குறைவின் காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்துவருகிறார். அவர் மூச்சு விடுவதை எளிதாக்க அவருக்கு ட்ராக்யோஸ்டமி குழாயும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம், ட்ராக்யோ…
-
- 49 replies
- 8.6k views
-
-
கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு கல்லீரல் செயல்பாட்டில் திருப்தி இல்லாததால் கருணாநிதிக்கு நேற்று முதல் மஞ்சள் காமாலை ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களிலும் (ப்ளெட்லெட்ஸ்) குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளை தீர்க்க டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சைகளை அளித்து வருகிறது.இந்த நிலையில் இன்று காலை அவரது நாடி துடிப்பிலும் சற்று தொய்வு ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலை உறுதி செய்ய இயலவில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை தரும் தட்டணுக்கள் குறைந்து வருவதால் கருணாநிதி உடலில் செலுத்தப்படும் மருந்துகள் மிக மெதுவாகவே வேலை செய்கின்றன. இதனால் அவர் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக இன்று மதியம் தகவல்கள் வெள…
-
- 3 replies
- 883 views
-
-
சிலை கடத்தல் வழக்கு சி. பி .ஐக்கு மாற்றியதில் எந்த உள்நோக்கமும் இல்லை - ஜெயக்குமார் தமிழகத்தில் நடைபெற்ற சிலைக்கடத்தல் வழக்கை விசாரிக்கும் பொறுப்பை சி. பி. ஐக்கு மாற்றியதில் தமிழக அரசிற்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது, ‘சிலை கடத்தல் பிரச்சினை சர்வதேச அளவிலான பிரச்சினை. தமிழக பொலிஸார் ஸ்கொட்லாந்து பொலிஸாருக்கு இணையான வல்லமை பெற்றது என்பதில் மாற்று கருத்து இல்லை. சர்வதேச பிரச்சினை என்பதால் சி. பி. ஐ அமைப்பை நாடவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சி பி ஐக்க மாற்றினாலும் அல்லது மாற்றாவிட்டாலும் கேள்வி எழுப்புகின்றனர். குறித்த விவகாரத்தில் க…
-
- 4 replies
- 1.7k views
-
-
தெருவாசகம் 1: ஆங்கிலேயத் தமிழறிஞரின் சாலை சென்னை மாநகரத்தின் இதயப் பகுதியான அண்ணா சாலையும், வாலாஜா சாலையும் சந்திக்கும் புள்ளிக்கு அருகில் உள்ளது எல்லீஸ் சாலை. அதன் மறுமுனை திருவல்லிக்கேணி பாரதி சாலைக்கு அருகில் சென்று முடிகிறது. இதற்கு இணையாக காயிதே மில்லத் சாலை வடபகுதியில் செல்கிறது. இந்தச் சாலை மட்டுமல்லாது இந்தப் பகுதியே எல்லீஸ்புரம் என்று அழைக்கப்படுகிறது. யார் இந்த எல்லீஸ்? பிரான்சிஸ் வைட் எல்லீஸ் கிழங்கிந்தியக் கம்பனி ஆட்சியில் அதிகாரியாகப் பணியாற்றிய பிரான்சிஸ் வைட் எல்லிஸின் (Francis Whyte Ellis) நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயர…
-
- 18 replies
- 5.3k views
-
-
அண்ணா பல்கலை. விடைத்தாள் மறுமதிப்பீட்டில் மோசடி.. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா சஸ்பென்ட்! அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் ஈடுபட்டதாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கி இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை வெற்றிபெற வைக்க மறுகூட்டலின் போது லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள். ஒரு பாடத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று இருக்கிறார்கள். 2017 கல்வி ஆண்டில் அண்ணா பல்கலையில் இந்த மோசடி நடந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 2015-2018 வரை தேர்வுக்கான கட்ட…
-
- 4 replies
- 730 views
-
-
முதல் பார்வையிலேயே கலைஞரை கவர்ந்த தொண்டர் - பகுதி 1 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) படத்தின் காப்புரிமைTHE INDIA TODAY GROUP கலைஞர் அவர்கள், 1970களில் மெரினா கடற்கரையில் காந்தி சிலையின் பின்புறமுள்ள மணல் பரப்பில் இரவு நேரங்களில் ந…
-
- 1 reply
- 1.6k views
-
-
' நம்பிக்கையோடு கால் எடுத்து வையுங்கள்!' - ரஜினியை உற்சாகமூட்டிய அழகிரி ஆடி மாதம் முடிந்த பிறகு கட்சி தொடர்பான விஷயங்களில் தீர்க்கமான முடிவை எடுக்க இருக்கிறார் ரஜினி. அப்போது, அமைப்புரீதியாக சைதை துரைசாமி, அழகிரி போன்றவர்களின் பங்களிப்பு தனக்கு வேண்டும் எனவும் அவர் நினைக்கிறார். தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலனை விசாரிக்கச் சென்ற நடிகர் ரஜினிகாந்த், அழகிரியுடன் விவாதித்தது தி.மு.க வட்டாரத்தை உற்று கவனிக்க வைத்திருக்கிறது. 'அழகிரியுடன் சில விஷயங்களை மனம்விட்டுப் பேசினார் ரஜினி. அரசியல் பிரவேசம் தொடர்பாகவும் சில நிமிடங்கள் விவாதித்தனர்' என்கின்றனர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள். சென்னை, காவேரி மர…
-
- 3 replies
- 987 views
- 1 follower
-
-
பிரியாணிக்கடை ஊழியர்களிடம் பாக்ஸிங்... தி.மு.க. நிர்வாகி யுவராஜ் பின்னணி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பிரியாணிக்கடையில் ஊழியர்களைத் தாக்கிய தி.மு.க நிர்வாகி யுவராஜ் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பிரபல பிரியாணிக்கடையில், கடந்த 29-ம் தேதி இரவு 15 பேர் கொண்ட கும்பல் நுழைந்து ஊழியர்கள், மேலாளர், உரிமையாளர் ஆகியோரை சரமாரியாகத் தாக்கியது. இந்தச் சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அப்போது, தாக்குதல் நடந்தபோது சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளையும் போலீஸாரிடம் கொடுத்தனர். அந்த வீடியோ வெளியானதும், சம்பந்தப்பட்ட தி.மு.க நிர்வாகிகள் யுவராஜ், திவாகர் ஆகியோ…
-
- 4 replies
- 1k views
-
-
தமிழக அரசின் நோக்கம் மக்களை அச்சத்தில் வைத்திருப்பதா? நீதிமன்றின் கடுமையான கேள்வி… ஸ்டெர்லைட் ஆலை போராட்ட வழக்கின் உத்தரவுகள் வெளியாகின… ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த மே 22ஆம் தேதி போராட்டம் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 243 வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டதை சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களை முறைகேடாக பயன்படுத்துவதாக மட்டுமே பார்க்க முடியும் vd அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அனைத்து வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையைப் படித்தாலே அவை அனைத்தும் ஸ்டெர்லைட் …
-
- 0 replies
- 469 views
-
-
தமிழகத்திலிருந்து, இந்தியாவிற்கு அகதிகள் வருகிறார்களாம்.. நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் உளறல். நாடாளுமன்ற கூட்டத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்தியாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவில் அகதிகள் வருகின்றனர் என்று பேசியதால் நாடாளுமன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கேட்கப்பட்ட பல்வேறு துணைக் கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்துப் பேசினார். அப்போது, அவர் மியான்மரிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக வந்து குடியேறியுள்ள ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் குறித்துப் பேசினார். இந்தியாவுக்கு வருகின்ற அகதிகள் பற்றி கிரண் ரிஜிஜு பேசுகையில், தமிழ்நாடு, பங்களாதேஷ், மியான்மரில் இருந்து இந்தியா…
-
- 0 replies
- 382 views
-
-
$ அமெரிக்காவின் வாசிங்டன் டி.சி. நகரில் வரும் செப்டம்பர் 1, 2 ஆகிய நாட்களில் “அமெரிக்க கொங்கு குடும்ப விழா - 2018” என்ற பெயரில் ஒரு ஜாதிச்சங்க மாநாடு நடைபெற உள்ளது. அதில் தமிழ்நாட்டிலிருந்து பல கொங்கு வேளாளக் கவுண்டர் ஜாதியின் முக்கியமானவர்கள் பங்கேற்கின்றனர். இந்தக் குடும்ப விழாவை நடத்துபவர்கள் அவர்களது இணையதளத்தின் வழியாக அழைப்பு விடுத்துள்ளனர். கொங்கு வேளாளர்கள் மட்டுமல்ல; அமெரிக்காவில் வாழும் பல பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும் இதைப் போல குடும்ப விழாக்களை நடத்தி தங்களுக்குள் ஜாதிய உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டு, ஜாதியச் சொந்தங்களை வளர்த்துக் கொண்டும் தான் வருகின்றனர். அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஃப்ரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற பல …
-
- 0 replies
- 1.5k views
-
-
கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியில், சாலையில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மற்றும் பஸ்சுக்காக காத்து கொண்டிருந்த பொது மக்கள் மீது அந்த வழியாக அதிவேகத்தில் வந்த ஆடி கார் மோதியது.இந்த சம்பவத்தில் 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டிரைவரை பொது மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்த வாகனங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். http://www.dinamalar.com/news_detail.asp?id=2073184
-
- 0 replies
- 461 views
-
-
மிஸ்டர் கழுகு: பன்னீர் VS பழனிசாமி... பதவிச்சண்டையில் புது இன்னிங்ஸ் ‘காவேரி மருத்துவமனையில் இருக்கிறேன்’ என்ற கழுகார், வாட்ஸ் அப் மூலம் சில செய்திகளை அனுப்பியிருந்தார்... தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட பிறகு மத்திய அரசின் உளவுப் பிரிவான ஐ.பி., தமிழக சூழ்நிலைகளை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் பல ஐ.பி அதிகாரிகள் உள்ள நிலையில், கருணாநிதியின் உடல்நிலை தொடர்பான ரிப்போர்ட்களை அனுப்புவதற்காக எஸ்.பி லெவலில் உள்ள அதிகாரி ஒருவரை சிறப்பு அலுவலராக நியமித்துள்ளனர். அந்த சிறப்பு அதிகாரி, ‘ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், தி.மு.க தொண்டர்கள் தரப்பிலிருந்து பெரிய அளவில் சச்சரவுகள் வராது’ என ரிப்போர்ட் கொடுத்திருக…
-
- 0 replies
- 802 views
-
-
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை கடுமையாக விமர்சித்துள்ளார் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு திமுக தலைவர் கருணாநிதி கடந்த நான்கு நாட்களாக உடல் நலமின்றி சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கையசைவை காண பல தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு காத்துக்கிடக்கின்றனர். மேலும், பல அரசியல் தலைவர்களும் அவரை சந்தித்து அவரது உடல் நலம் குறித்து நலம் விசாரித்து வருகின்றனர். பல கருத்து வேறுபாடுகளும், கொள்கை வேறுபாடுகளும் இருந்தாலும்கூட திமுகவை பரம எதிரியாக கருதும் அதிமுக அமைச்சர்களும் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் …
-
- 0 replies
- 754 views
-
-
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த எழுத்துப்பூர்வ உத்தரவு பெறப்பட்டதா? மதுரை ஐகோர்ட்டு கேள்வி தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த எழுத்துப்பூர்வ உத்தரவு பெறப்பட்டதா? மதுரை ஐகோர்ட்டு கேள்வி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கூடுதலாக சிப்காட் போலீஸ் நிலையத்தில் 142 வழக்குகளும், தூத்துக்குடி வடக்கு, தெற்கு உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 100 வழக்குகளும் என மொத்தம் 243 வழக்குகள் பதிவு ச…
-
- 1 reply
- 359 views
-
-
மத்திய மந்திரியாக நான் செய்த சாதனைகள் என்ன? எடப்பாடி பழனிசாமியுடன் விவாதிக்க தயார் அன்புமணி ராமதாஸ் சவால் மத்திய மந்திரியாக நான் செய்த சாதனைகள் என்ன? எடப்பாடி பழனிசாமியுடன் விவாதிக்க தயார் அன்புமணி ராமதாஸ் சவால் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சேலத்தில் அரசுப் பொருட்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதார மந்திரியாக இருந்த போது தமிழக மக்களுக்காக என்ன செய்தார்?’ என்று வினா எழுப்பியுள்ளார். உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் என்றால் அது தேசிய ஊரக சுகாதார இயக்கம் தான். இந்த திட்டத்தை 2005-ம் ஆண்டில் நான் தான் தொடங்கினேன். இந்…
-
- 0 replies
- 307 views
-
-
முல்லைத்தீவு மூதாட்டி – தமிழகம் அகதி முகாமில் கொலை!! முல்லைத்தீவு முள்ளியவளையைச் சேர்ந்த 80 அகவையுடைய (சுப்பிரமணியம் முத்துப்பிள்ளை) மூதாட்டி கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகம் சென்னையில் உள்ள கும்புடிபூண்டி அகதிகள் முகாமில், மனநிலை பாதிக்கப்பட்ட மகனுடன் வசித்து வந்த மூதாட்டியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மூதாட்டியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன் ஒருவர், அவரைக் கொலை செய்து விட்டு, அங்கிருந்த தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. http://newuthayan.com/story/03/முல்ல…
-
- 0 replies
- 438 views
-
-
திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழகத்துக்குத் தந்தது என்ன? 1967 பொதுத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் முதன்முறையாக மாநிலக் கட்சியொன்று ஆட்சியைப் பிடித்தது. முதலில் மாணவராகவும், பிறகு மாநில நிர்வாகத்தில் அதிகாரியாக இடம்பெற்றும் அப்போதைய மாற்றங்களை நேரிலேயே பார்த்தவர் எஸ்.நாராயண். “தமிழகத்தில் அரசியல் சித்தாந்தம் அரசின் கொள்கையாகவும், திட்டங்களாகவும் மாற்றப்பட்டதால் மக்கள் பயன்பெற்றார்கள். அப்படிப்பட்ட மாற்றம் இந்தியாவில் வேறு எங்கும் நிகழவில்லை” என்று தன்னுடைய புதிய நூலில் எழுதியிருக்கிறார். ‘தி திரவிடியன் இயர்ஸ்: பாலிடிக்ஸ் அண்ட் வெல்ஃபேர் இன் தமிழ்நாடு’ என்ற அவருடைய நூலிலிருந்து சில பகுதிகள்: அண்ணாவுக்குப் பிறகு… …
-
- 2 replies
- 676 views
- 1 follower
-
-
ராணுவ (ஹெலிகாப்டர்) ரகசியத்தை உடைத்த ஓ.பன்னீர்செல்வம்! 'அவரை சாலை வழியாக வாகனத்தில் கொண்டு செல்வது உயிருக்கு ஆபத்தானது, ஓரிரு மணி நேரத்தில் சென்னைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்; பயணிகள் விமானத்திலும் செல்ல முடியாது' என்று சொல்லப்படவே, உடனே ஓ.பி.எஸ். தனக்கு தெரிந்தவர்களிடம் தனியார் ஏர் ஆம்புலன்ஸை புக் பண்ண சொல்லியுள்ளார். அது உடனே கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டதும், ராணுவ ஏர் ஆம்புலன்ஸைப் பெறுவதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசியுள்ளார். ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் விவகாரம், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பதவிக்கு சிக்கலைத் தரும் வகையில் சென்று கொண்டிருக்கிறது. இ…
-
- 2 replies
- 894 views
- 1 follower
-
-
சொத்துக்குவிப்பு வழக்கு... ஜெ. போல சிக்கும் ஓ.பி.எஸ்! முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 21 ஆண்டுகாலக் கொடுங்கனவாகத் தொடர்ந்தது சொத்துக்குவிப்பு வழக்கு. தி.மு.க ஆட்சிக் காலத்தில், தன்மீது தொடரப்பட்ட அத்தனை வழக்குகளையும் உடைத்த ஜெயலலிதாவால், சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து மரணத்துக்குப் பிறகும் விடுதலை பெற முடியவில்லை. அதேபோன்ற ஒரு கடும் வெள்ளத்தில் சிக்கிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். இந்த வெள்ளத்தின் முதல் சுழலில் தப்பிய ஓ.பி.எஸ்., இரண்டாவது சுழலில் வசமாகச் சிக்கியிருக்கிறார். ரெய்டுகள் சூழ்ந்த ஜூலை மாதத்தில், ‘ஏன் இந்த விவகாரத்தை சி.பி.ஐ விசாரிக்கக் கூடாது’ என்று சென்னை உயர் நீதிமன்றம் கேட்டு, ஓ.பி.எஸ் மீதான புகாரை, அவர் துணை முதல்வராக அங்கம் வகி…
-
- 0 replies
- 637 views
-
-
சுற்றுலா பயணிகளுக்கு மீனவர்கள் அறிவுறுத்தல் இராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியதால் மீன்பிடி தொழல் பாதிப்படைந்துள்ளதோடு, கடல் பூச்சிகள் கரைக்கு வருவதால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பிராந்தியங்களில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கரையோர மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை முதல் ஓலைக்குடா, சங்குமால் தெற்குவாடி, வடகாடு உள்ளிட்ட கடலோரப்பகுதிகளில் கடல் சுமார் 600 மீட்டர் தூரம் வரை உள் வாங்கியுள்ளது. இதனால் கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நாட்டுபடகுகள் …
-
- 0 replies
- 551 views
-
-
தஞ்சம் கோரிய தமிழ் குடும்பங்களுக்கு மேலதிக நிலம் ஒதுக்க வலியுறுத்தல்! இலங்கையில் இருந்து அந்தமான் தீவுகளுக்கு அகதிகளாக சென்று குடியேறிய 48 இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு, மேலதிக நிலம் ஒதுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் Bishnu Pada Ray வலியுறுத்தியுள்ளார். 1976 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து அந்தமானில் உள்ள கட்சல் தீவில் தஞ்சம் கோரிய 48 தமிழர்கள் குடும்பங்களுக்கு, 5 ஆயிரம் சதுர அடி மட்டுமே நிலம் வழங்கப்பட்டது. கடந்த அரசாங்கத்தால் அவர்களுக்கான பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் அவை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் தற்போது காம்ரோட்டா தீவில் வாழும் இந்த 48 குடும்பங்களுக்கு 15 ஆயிரம் சதுர அடியில் நிலம் ஒத…
-
- 0 replies
- 388 views
-