Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இன்று ஆஜராகிறார் எஸ்.வி.சேகர்.. சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் விசாரணை. போலீஸ் தேடி வரும் எஸ்.வி.சேகர் இன்று சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். சென்னையை சேர்ந்த பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது பிரச்சனை ஆனது. இதில் பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார்.இதனால் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. உடனே சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்தார்.ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கவில்லை. அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீன் கேட்டார். உச்ச நீதிமன…

  2. சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள ஏரியில் சாயக்கழிவுகள் மற்றும் செப்டிக் டேங்க் கழிவு நீர் கலந்து ஏரியில் பத்து நாட்களுக்கு மேலாக துர்நாற்றம் வீசுவதால் வாழ முடியவில்லை எனக் கூறி பொதுமக்கள் ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ளது கொட்டணத்தான் ஏரி. பனமரத்துப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெய்காரப்பட்டி பகுதியிலுள்ள கொட்டநத்தான் ஏரி சுமார் 390 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய ஏரியாகும். கொண்டாலாம்பட்டி, நெய்காரப்பட்டி, பூலாவரி, தம்மநாயக்கன்பட்டி, நிலவாரபட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீரை பெருக்கும் முக்கிய ஏரியாக இந்த ஏரி உள்ளது…

  3. மீண்டும் ஆட்சியை பிடிக்க கருணாநிதியின் தந்திரத்தை பயன்படுத்துவோம் – மு.க.ஸ்டாலின் தமிழ்நிலாJune 17, 2018 கருணாநிதியின் தந்திரத்தை உரிய நேரத்தில் பயன்படுத்துவோம். தி.மு.க. ஆட்சி வெகு விரைவில் உதயம் ஆகும் என்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். தி.மு.க. தலைவர் கருணாநிதி யின் 95-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை அண்ணா நகரில் உள்ள எம்.ஜி.ஆர். காலனியில் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்துக்கு அண்ணாநகர் பகுதி செயலாளர் ச.பரமசிவம் தலைமை தாங்கினார். எம்.கே.மோகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்…

    • 1 reply
    • 693 views
  4. திருமாவளவனை அவதூறாக விமர்சித்து வாட்ஸ் அப்பில் காணொலி வெளியிட்ட இளைஞர் கைது June 19, 2018 விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை அவதூறாக விமர்சித்து வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்ட இளைஞரைக் கைது செய்த போலீஸார்அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையை அடுத்த லிங்கனப்பட்டியைச் சேர்ந்தவர் மாதேஷ் (25). இவர் ஒரு அரசியல் கட்சியில் இருக்கிறார். இவர் கடந்த ஏப்ரம் மாதம் வாட்ஸ் அப்பில் காணொலி ஒன்றை வெளியிட்டார். அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் அவர் சார்ந்த சமுதாயத்தினரை அவதூறாக, ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்திருந்தார். அந்தக் காணொலியில் திருமாவளவனை விமர்…

  5. தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்ற துடிக்கும் தேசத் துரோகிகளின் சூழ்ச்சி

  6. `வேதாந்தா குழுமம் பா.ஜ.க-வுக்கு கொடுத்த நன்கொடைப் பணத்துக்கான கைம்மாறுதான் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி வந்த மக்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் துப்பாக்கிச்சூடு. இந்தச் சம்பவத்துக்கு மோடி அரசுதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். மோடி அரசுக்கு தமிழகத்தின் அ.தி.மு.க அரசும் துணை போகிறது” என இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி சி.பி.எம் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய சில கிராமங்களுக்குச் சென்ற…

  7. பொங்கி வரும் காவிரி.. ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை. கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் அதிகளவில் வருவதால் தருமபுரி ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தற்போது கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலம் வயநாடு, மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகமாக மழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணை வேகமாக நிறைந்தது. நேற்று நீரின் அளவு 37,000 கனஅடியானது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. …

  8. ராஜீவ் கொலை – முக்கிய குற்றவாளி இத்தாலியில் – 7 தமிழர் விடுதலை மறுப்பு சுப்பர் வரவேற்பு…. June 15, 2018 ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக, 7 தமிழர் விடுதலை கோரிய மனு ஜனாதிபதியால் நிராகரிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், அதனை பாஜக சிரேஸ்ட்ட தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வரவேற்றுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பேரறிவாளன் உள்பட 7 பேர் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலேயே இருப்பதால், அவர்களைக் கருணை அடிப்படையில், விடுதலை செய்ய வேண்டும் என, தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தது. தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு இந்தக் கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. …

  9. மு.பார்த்தசாரதி ``ஏப்பா, என்னப்பா நடக்குது? காலையிலிருந்தே புள்ளைகள் போன் போட்டு அறிவு விடுதலைக்கு ஜனாதிபதி மறுப்பு தெரிவிச்சுட்டாரு. இனிமே வெளியவர வாய்ப்பே இல்லைன்னு சொல்றாங்களே உண்மையா? மனசு கலங்குதுப்பா. தலை சுத்துது. தப்பா நெனச்சுக்காதே அம்மா கொஞ்ச நேரம் கழிச்சு திரும்பவும் கூப்பிடறேன்!'' 27 வருடங்களாக சிறையிலிருக்கும் தன் மகனின் விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் பாசத் தாயின் வேதனைக் குரல். …

  10. தூத்துக்குடியில், தொடரும் கைது நடவடிக்கைகளை நிறுத்திட வலியுறுத்தியும் கைதுசெய்தவர்களை விடுவிக்கக்கோரியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்துக்கு பல கட்சிகள், அமைப்புகள் எனப் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்களை விசாரணை செய்கிறோம் எனக் காரணம் கூறி, காவல்துறையினர் நள்ளிரவில் வீடுகளில் புகுந்து கைதுசெய்யும் நடவடிக்கை தொடர்ந்து நட…

  11. ``நடிகர் கமல்ஹாசன் காவிரி நடுவர் மன்றம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும். தெரிந்த வேலையைச் செய்தால்தான் நல்லது. தெரியாத வேலையைச் செய்யக் கூடாது" என்று கடுமையாக விமர்சித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன். சேலம் முள்ளுவாடி கேட் அருகே உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு வந்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும். இதில் மத்திய அரசு கபட நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறது. ராகுல், சோனியா விடுதலை செய்யச் சொல்லியும் மனிதாபிமானம் அடிப்படையில் இன்னும் விடுதலை செய்யாமல் இருந்து…

  12. அ.தி.மு.க அணிகள் இணைந்தாலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையிலான மனக்கசப்புகள் மறையவில்லை என்றே தகவல்கள் வெளியாகின. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அடுத்த சில நாள்களில் அ.தி.மு.கவின் தற்காலிகப் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.கவின் சட்டமன்றக் குழுத் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டு, முதலமைச்சராக விரைவில் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சசிகலா தலைமையை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் கலகக் குரல் எழுப்பினார். சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் தியானத்தி…

  13. தூத்துக்குடியில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது! தூத்துக்குடியில் ஸ்டெட்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடும் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனது ஊர் ஆரியப்பட்டி. இந்த கிராமத்திற்கு அருகே உள்ள முண்டுவேலன்பட்டியில் தோழர் கோட்டை என்பவர் இரு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். தற்போது பள்ளியில் படித்திக் கொண்டிருக்கும் அவரது 15 வயது மகனை கைது செய்து உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்திருக்கிறது. கேட்டால் தடுப்புக் காவல் – கைது என்கிறது. …

  14. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், நளினி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார் கள். இந்த கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத…

  15. யார் நீங்க " என்று ரஜினியை இதற்காகத்தான் கேட்டேன்... காரணம் சொல்கிறார் தூத்துக்குடி இளைஞர் ஜெ.அன்பரசன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் படுகாயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று, தூத்துக்குடி சென்றார். அப்போது, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நபர் ஒருவர், ``நீங்கள் யார்? இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள்?" என ரஜினியைப் பார்த்துக் கேட்டார். இதையடுத்து இறுக்கமான முகத்துடன் நடிகர் ரஜினி, அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தூத்துக…

  16. டிடிவி தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்படவிருக்கிறது. படத்தின் காப்புரிமை Getty Images இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் அடங்கிய அமர்வால் விசாரிக்கப்பட்டுவந்தது. ஜனவரி 23ஆம் தேதியன்று வாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று பிற்பகல் சுமார் ஒன்றரை மணியளவில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீ…

  17. Published : 14 Jun 2018 16:47 IST Updated : 14 Jun 2018 17:06 IST உதகையிலிருந்து குன்னூர் நோக்கி சென்ற அரசு பேருந்து 50 அடி பள்ளத்தில் உருண்டது. இதில் 2 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 26 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து இன்று (வியாழக்கிழமை) காலை சுமார் 11.30 மணிக்கு அரசு பேருந்து குன்னூர் நோக்கி சென்றது. இந்த பேருந்த ஓட்டுநர் ராஜ்குமார் (42) என்பவர் ஒட்டிச் சென்றார். பேருந்து மந்தாடா பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென சாலையோரத்திலிருந்து 50 அடி பள்ளத்தில் உருண்டது. இதில், பயணித்தவர்கள் படுகாய…

  18. ம.தி.மு.க பொதுச் செயலாளரான வைகோ, ஆயுர்வேதச் சிகிச்சைக்காகக் கேரளாவுக்குச் சென்றுள்ளார். புத்துணர்வு சிகிச்சைக்காகச் சென்றுள்ள அவருக்கு மூலிகை குளியல், ஆயில் மசாஜ், மூலிகை ஒத்தடம் எனப் பல்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன. கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக வெளி மாநிலங்களிலிருந்து மட்டும் அல்லாமல், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் வருகை தருகிறார்கள். ம.தி.மு.க பொதுச் செயலாளரான வைகோ ஒவ்வொரு வருடமும் கேரளாவுக்குச் சென்று மூலிக…

  19. `பசுமை வழிச்சாலைக்காகக் கருத்துக் கேட்புக் கூட்டம் எனக் கூறிவிட்டு, நெடுகிலும் போலீஸாரை நிறுத்தி அச்சப்பட வைக்கிறார்கள். எங்களைக் கொன்று புதைத்துவிட்டு ரோடு போடட்டும்' எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கொதிக்கின்றனர் அப்பகுதி மக்கள். சேலம் டு சென்னை வரையிலான எட்டு வழிப் பசுமை சாலைத் திட்டம் குறித்து, பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்கும் கூட்டம் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதையொட்டி, சேலம் கலெக்டர் வளாகம் முழுவதும் காவல்துறை குவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வோர் அடிக்கும் ஒரு போலீஸ் நிறுத்திவைக்கப்பட்டிருந்தார். இரண்டு வஜ்ரா வாகனங்கள் தயார் நிலையில் …

  20. சேலையை பிடித்து இழுத்து.. அநாகரீகமாக சட்டசபையிலிருந்து வெளியேற்றினர்.. விஜயதாரணி பரபர குற்றச்சாட்டு! சபை காவலர்கள் தன்னை சேலையை பிடித்து இழுத்து அநாகரீகமான முறையில் காயப்படுத்தி சட்டசபையில் இருந்து வெளியேற்றினார்கள் என விஜயதாரணி குற்றம்சாட்டியுள்ளார். சட்டசபையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பேச சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்ததால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து விஜயதாரணி சபாநாயகருடன் மோதலில் ஈடுபட்டதால் அவரை வெளியேற்ற சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பெண் காவலர்கள் உள்ளே வந்து விஜய…

  21. டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரின் தகுதிநீக்கம்குறித்த வழக்கில், நாளை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று அ.தி.மு.க-வைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், அப்போதைய தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். அதனால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அ.தி.மு.க கொறடா, சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரைசெய்தார். அதில், கடிதம் அளித்தது தொடர்பாக எம்.எல்.ஏ.…

  22. எஸ்.வி.சேகருக்காக 89 எம்.எல்.ஏ-க்களும் வெளிநடப்பு செய்கிறார்கள் என்றால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நிச்சயமாக அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது அரசாங்கத்தின் கடமை" என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார். சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீட்டினால் தமிழகத்தில் ஏற்படும் தற்கொலைகளை அரசியலாக்கி அரசியல்கட்சிகள் அதன்மூலம் லாபம் காண்கின்றன. இந்தத் தற்கொலைகள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும். தற்கொலைகள் நடக்காமல் அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்ட வேண்டும். ஆனால், தற்கொலை நடந்தால், தங்கள் அரசியல் லாபத்துக்காக …

  23. போர்க்களமான ஸ்டெர்லைட் போராட்டம்! போலீஸ் தடியடியால் சிதறி ஓடிய பொதுமக்கள்; தூத்துக்குடியில் பதற்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, கலெக்டர் அலுவலத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள்மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் தூத்துக்குடியில் பதற்றம் நிலவுகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திவரும் 21 கிராம மக்கள், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதால், தூத்துக்குடி மாநகரம் முழுவதும் 2,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டம…

    • 82 replies
    • 10.6k views
  24. நீட் தேர்வில் தோல்வி- விழுப்புரம் மாணவி பிரதீபா விஷம் குடித்து தற்கொலை. நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விழுப்புரம் மாணவி பிரதீபா எலி மருந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவபடிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழக மாணவர்கள் 60 பேர் தேர்ச்சி பெற முடியவில்லை.இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெருவலூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்து எலி மருந்தை குடித்தார். 10-ம் வகுப்பில் 495 மதிப்பெண்களும் 12-ம் வகுப்பில் 1125 மதிப்பெண்களும் பெற்றவர் பிரதீபா. விஷம் குடித்த நிலையில் ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரத…

  25. நாளையுடன் முடிகிறது 27 ஆண்டுகள்: பேரறிவாளன் விடுதலை எப்போது? ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்று 27 ஆண்டுகள் நாளை முடிவடையும் வேளையில் பேரறிவாளன் விடுதலை எப்போது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ராஜீவ்காந்திகொலைவழக்கில் எந்த குற்றமும் இழைக்காத பேரறிவாளன் கைது செய்யப்பட்டு நாளையுடன் 27 ஆண்டுகள் நிறைவடைகின்றன . கைது செய்யப்பட்டு இரு ஆயுள் தண்டனைக் காலங்கள் முடிவடைந்த பிறகும், ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது கண்டிக்கத்தக்கதாகும். ராஜ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.