Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தேமுதிக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.. 4 தொகுதிகள் ஒதுக்கீடு. லோக் சபா தேர்தலுக்கான அதிமுக - தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகள் அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த மூன்று வாரமாக தேமுதிக தனது கூட்டணி அறிவிப்பை வெளியிட தொடர்ந்து ஆலோசனை செய்து வந்தது. அதிமுகவுடன் தேமுதிக பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஆனாலும் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகமல் இழுபறி நீடித்தது. இந்த நிலையில் தற்போது கூட்டணி ஒப்பந்தம் சுமுகமாக நடந்து முடிந்து உள்ளது.இதுவரை தேமுதிக சார்பாக 6க்கும் மேற்பட்ட ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று மீண்டும் தேமுதிக தனது லோக்சபா கூட்டணி முடிவை எடுக்க ஆலோசன…

  2. கலாமின் வங்கியில் எவ்வளவு தெரியுமா? நம்ப முடியுமா இதை மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சொத்துகள், அவரது கடைசி காலத்தில் அவரது வங்கி இருப்பு, கலாம் உயில் எழுதி வைத்திருந்தாரா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது குறித்து கலாமின் உதவியாளர் பொன்ராஜ் `தி இந்து’விடம் கூறியதாவது: கலாம் தன் சம்பாத்தியத்தில் வாங்கிய பெங்களூரு வீடு அவரது காலத்திலேயே விற்கப்பட்டுவிட்டது. தற்போது ராமேசுவரத்தில் உள்ள பூர்வீக வீடு கலாமுக்காக அவரது தந்தை ஜெயினுலாபுதீன் விட்டுச் சென்றது. அந்த வீட்டை அவரது உடன் பிறந்த சகோதரர் முத்து மீரா லெப்பை மரைக்காயர் பொறுப்பில் கலாம் கொடுத்து விட்டார். கலாம் உயில் எழுதி வைத்தி ருந்தாரா? அவரது கடைசி காலத்தில் வங்கி இருப்பு எவ்வளவு என்பது குறித்து எ…

    • 0 replies
    • 372 views
  3. இலங்கை தமிழர்கள் மிகப்பெரிய அழிவை எதிர்நோக்கி இருப்பதால், அவர்களை காப்பாற்ற உலக நாடுகள் முன்வர வேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவரான பழநெடுமாறன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுதொடர்பாக நாகப்பட்டினத்தில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது... “விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு கூறியதை இந்திய அரசும் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் சோனியா காந்திக்கு அளிக்கப்பட்டு வந்த உயர் பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றதை கண்டிக்காமல், விடுதலைப் புலிகளால் சோனியாகாந்தி உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று மக்களவையில் திமுக உறுப்பினர் டி ஆர் பாலு கூறியிருப்பது வீண் பழிசுமத்தும் செயல். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு 2009 ஆம்…

    • 0 replies
    • 325 views
  4. படக்குறிப்பு,கனமழை பாதிப்பு 26 மே 2025, 08:45 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் திங்கள் காலை வரை அதிகபட்சமான நீலகிரி மாவட்டத்தின் அவலாஞ்சியில் 35 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் சின்னக்கல்லாரில் 21 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக கோவை மாவட்டத்தின் வால்பாறையில் 29.5 செ.மீ மழையும், கோவை மாநகரில் 22 செ.மீ மழையும் பதிவாகியிருந்தது. அதே போல் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் கனமழை செய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. தமிழ்நாட்டிக்கு வருகிற மே 29ம் தேதி வரை கணமழைக்கான ஆரஞ்ச…

  5. தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி 25-ம் தேதி வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.14.28 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு பொது தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் பறக்கும் படையினர் 24.3.16 அன்று சோதனையின்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.6.41 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 25.3.16 அன்று நடத்தப்பட்ட சோதனையில் வேலூரில் ரூ.1.30 லட்சம், திருவண்ணாமலையில் 340 சிமெண்ட் மூட்டைகள், நீலகிரி மாவட்டத்தில் ரூ.5.20 லட்சம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.4.50 லட்சம், விருதுநகர் மாவட்டத்தில் ரூ.1.19 லட்சம், மதுரை மாநகரில் மதுவகைகள் உட்பட மொத்தம் ரூ.12,19,000/- ரொக்…

  6. தமிழகத்திலிருந்து டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட மேலும் 85 பேருக்கு கொரோனா! தமிழகத்தில் இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 85 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் 30ஆம் திகதி வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால், டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளைச்…

  7. காவல் மரணத்தில் கணவரை இழந்து 27 ஆண்டுகளாக நீதிக்குப் போராடும் மதுரை பெண் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் மூத்த செய்தியாளர், பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கால் நூற்றாண்டிற்கு முன்பு மதுரை மாவட்டத்தில் ஒரு காவல் நிலையத்தில் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒரு தம்பதி கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதில் கணவர் உயிரிழந்தார். அந்தச் சம்பவம் நடந்தபோது பள்ளி மாணவராக இருந்த அவரது மகன் இப்போது வழக்கறிஞர். இந்த விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டுமென தாயும் மகனும் இன்னமும் விரும்புகின்றனர். 27 ஆண்டுகளைத் தாண்டித் தொடரும் ஒரு போராட்டத்தின் கதை இது. Play video, "போலீஸ் காவலில் உயிரிழந்த கணவர் - 27 ஆண்டுகளாக நீதிக்குப் போராடும் தாயும் மகனும்", கால அளவு 10,36 10:36 காணொளிக் …

  8. வாழ்வா சாவா நேரத்தில் “விக்” அவசியம் தானா..? சர்ச்சையில் சிக்கிய திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஒரு வாரமாக தினமும் 2000க்கும் அதிகமான கொரோனா பாதிப்பு உறுதியாகி கொண்டிருக்கிறது. நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 64603 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 35339 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், 833 பேர் உயிரிழந்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளை சிறப்பாக மேற்கொண்டுவருகிறது. மற்ற மாநிலங்களை விட அதிகமான பரிசோதனை, தரமான சிகிச்சை, சிறப்பான கட்டுப்படுத்தும் பணிகள் என கொரோனாவை தடுத்து விரட்டுவதில் முழு வீச்சில் செயல்பட்டு கொண்டிருக்க…

  9. உதயகுமாரை தொடர்ந்து : தம்பிதுரை ராஜினாமா? சசிகலாவுக்காக, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய, அமைச்சர் உதயகுமார் தயாராக இருப்பது போல, சசிகலா உறவினருக்காக, எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய, தம்பிதுரை முன்வந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா வகித்து வந்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியில், அவரது தோழி சசிகலா அமர்ந்துள்ளார். தற்போது, முதல்வர் பதவிக்கும் அவரே வர வேண்டும் என, அமைச்சர் உதயகுமார், முதல் குரல் எழுப்பினார். சசி, முதல்வரானால், தேர்தலில் போட்டியிட வேண்டும். ஆனால், ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில், வாக்காளர்களின் மனநிலை, சசிகலாவிற்கு எதிராக உள்ளது. ஜெயலலிதா நினைவிடத…

  10. தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாகவும் பதவியேற்று ஆட்சி நடத்திவருகின்றார். கடந்த இரு முறையும் முதலமைச்சராக பதவி ஏற்று பின்னர் அப்பதவியில் இருந்து இறங்கி மீண்டும், முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆட்சிப்பீடம் ஏறினார். இந்நிலையில், கடந்த வருடம் டிசம்பர் 5ம் திகதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். குறிப்பாக, முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடாமல் முதலமைச்சராகி தமிழக வரலாற்றில் அவர் சாதித்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். இது அவருக்கு அதிஷ்டம் என்றும் கூறுவோர் இருக்கவே செய்கின்றனர். இதற்கிடையில் தான் அவருக்கு இன்னொரு வாய்ப்பும் தேடிவருகின்றது. எதிர்வரும் 26ம் திகதி குட…

  11. தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் வேட்டையாடப்படுவது என்பது நின்றபாடில்லை. தமிழக அரசின் சார்பிலும், தமிழகத்திலே உள்ள அரசியல் கட்சிகளின் சார்பிலும் எத்தனையோ முறை மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும், ஏன் ஒருசில நேரங்களில் மத்திய அரசு இதைப்பற்றி இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதிலும், இலங்கை கடற்படை அதை காதிலே போட்டு கொள்வதே இல்லை. ராமேஸ்வரத்தில் இருந்து 5-6-2013 அன்று 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2,400-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருக்கிறார்கள். மதியம் சுமார் 3 மணியளவில், நெடுந்தீவு அருகில் இவர்களில் ஒரு பிரிவினர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கே…

    • 0 replies
    • 438 views
  12. ஸ்டார் தொகுதிகள்: திருவொற்றியூரில் கரைசேர்வாரா சீமான்? இரா.செந்தில் கரிகாலன் சீமான் வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பாகவே இரண்டு முறை தொகுதிக்குள் சுற்றுப்பயணத்தை முடித்திருக்கிறார் சீமான். பிரீமியம் ஸ்டோரி கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், வடசென்னையிலிருக்கும் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே 17,000 வாக்குகளுக்கு மேல் அள்ளியது நாம் தமிழர் கட்சி. ‘‘சென்னைக்கு மிக அருகில் எங்கள் கட்சிக்கு கிளைக் கட்டமைப்புகள் வலுவாக இருக்கும் தொகுதி இதுதான். இதன் அடிப்படையில்தான், திருவொற்றியூரைத் தனது களமாகத் தேர்வுசெய்திருக்கிறார் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்’’ என்கிறார்கள் நாம் தமிழர் தம்பிகள்! வே…

  13. பன்னீரின் தயக்கமும்.. பழனிச்சாமியின் பாய்ச்சலும்! “மூன்று முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் செய்யத் துணியாத செயலை, முதல்முறையாகப் பதவியேற்ற பழனிசாமி செய்துவிட்டார்” என்று சிலாகித்துப் பேசுகிறார்கள் அ.தி.மு.க-வின் முன்னணியினர். பெரியகுளம் தொகுதியின் வேட்பாளராக 2001-ம் ஆண்டு அறிமுகமாகி, தேர்தலில் வெற்றியும் பெற்று வருவாய்த் துறை அமைச்சராக ஜெயலலிதாவினால் தமிழகத்துக்கு அறிமுகம் செய்யப்பட்டார் பன்னீர்செல்வம். ஆனால், ஜெயலலிதா மீதான வழக்கைச் சுட்டிக்காட்டி அப்போது அவரின் முதல்வர் பதவி பறிக்கபட்டது. இதைச் சற்றும் எதிர்பாராத ஜெயலலிதா, அடுத்து என்ன செய்வது, யாரை பொறுப்புக்கு நியமிப்பது என்ற நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டார். சசிகலாவின் அக்கா மகனாகவும் அன்றை…

  14. தமிழால் இணைவோம் படித்தது பத்தாம் வகுப்பு; பேசப்போவது ஐ.நா.,சபை இளைஞர் மாநாட்டில்! ""பத்து மார்க் குறைஞ்சதுக்கெல்லாம் இப்போ 'தற்கொலை' பண்ணிக்கிறாங்க பசங்க. பத்தாம் வகுப்புல நான் எடுத்த மொத்த மார்க்கே 150தான்; ஒரு பாடத்துலயும் "பாஸ்' ஆகலை; அதுவரைக்கும் எப்படி "பெயில்' ஆகாமப் படிச்சீங்கன்னு கேக்குறீங்களா? டீச்சர்களுக்கு மத்த பசங்க "டீ' வாங்கிட்டு வந்தா, சூடே இருக்காது; ஆனா, நான் வாங்குன நொடியில, "சிட்டா' பறந்து வந்து "ஹாட்டா' கொடுப்பேன். அதுக்காகவே, ஒன்பதாங்கிளாஸ் வரைக்கும் என்னைய "பாஸ்' போட்டு விட்டாங்க. எந்த வேலை செஞ்சாலும், அதை ஈடுபாட்டோட செய்றதுதான் என்னோட வழக்கம். அந்த ஈடுபாடுதான், ஐ.நா.,சபை இளைஞர்கள் மாநாட்டுல, எனக்குப் பேசுற வாய்ப்பை வாங்கிக் கொடுத்திருக்கு...'' எ…

  15. '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜூலை 15ல் தீர்ப்பு புதுடில்லி: தி.மு.க., வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா, தி.மு.க., - எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் தொடர்புடைய, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சிறப்பு கோர்ட், ஜூலை, 15ல், தீர்ப்பளிக்கப் போவதாக அறிவித்துள்ளது. காங்., தலைமையிலான, முந்தைய, ஐ.மு., கூட்டணி ஆட்சிக் காலத்தில், தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தொலை தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்தார். சி.பி.ஐ., விசாரணை அப்போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்தது. '2ஜி' ஸ்பெக்…

  16. இந்திய அரசே ! மன்மோகன் சிங்கே கொழும்பு உச்சி மாநாட்டிற்குச்செல்லாதே! காமன்வெல்த்திலிருந்து இலங்கையை நீக்க வலியுறுத்து!’என்ற கோரிக்கையை வலியுறுத்தி ‘வெற்றி அல்லது வீரச் சாவு…’ என்ற முழக்கத்தோடு பட்டினிப் போராட்டத்தை தொடங்கிய தோழர் தியாகு, இன்றோடு, பத்து நாட்களை கடந்திருக்கிறார். முன்னதாக அக்டோபர் 7 ஆம் தேதி, தமிழக அரசு அவரை உண்ணாவிரதப் பந்தலிலிருந்து கைது செய்து, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொன்று சேர்த்தது. அங்குப் போன பிறகும் தனது பட்டினிப் போராட்டதை தொடர்ந்தார். தொடர்கிறார். 4 ஆம் தேதி அவரை நான் உண்ணாவிரத பந்தலில் சந்தித்தேன். இன்றும் (10.10.2013) மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். அன்று இருந்த மன உறுதி இன்னும் கூடுதலாகி இருக்கிறது அவரிடம். ஆனால் அரசுக்கு…

  17. அரசு பேருந்தில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பேருந்தில் ஆய்வு செய்த முதலமைச்சர், மகளிருக்கான இலவச பேருந்து சேவை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது பற்றி பெண்களிடம் கேட்டறிந்தார். சென்னை கண்ணகி நகரில் அரசு மாநகர பேருந்தில் திடீரென ஏறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதையடுத்து பயணிகளின் குறைகளையும் கேட்டறிந்தார். மேலும், மகளிருக்கான இலவச பேருந்து சேவை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது பற்றி பெண்களிடம் கேட்டறிந்தார். தி.நகர்-கண்ணகி நகர் வரை சென்ற M19B பேருந்தில் ஏறிய முதலமைச்சருடன் பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். https://www.kuriyeedu.com/?p=365856

    • 0 replies
    • 812 views
  18. 2031க்குள் குடிசையில்லா தமிழகம்! மின்னம்பலம்2021-12-13 ரியல் எஸ்டேட் டெவலப்பர்களின் கூட்டமைப்பான CREDAI சார்பில், சென்னையில் இன்று (டிசம்பர் 13) மாநாடு நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின், வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “வேளாண் துறைக்கு அடுத்தபடியாக மிக அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பு தருகிற தொழிலாக இந்த கட்டுமான தொழில் உள்ளது” என்று குறிப்பிட்டார். ஒரு உதாரணத்தைச் சொல்ல வேண்டும் என்று சொன்னால் கீழடியில் கிடைத்துள்ள கட்டடங்களின் இடிபாடுகளின் மூலமாக மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நகர்ப்புற நாகரீகம் கொண்டதாகத் தமிழ்ச் சமூகம் வளர்ந்து இ…

  19. சென்னை: "மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள தருணத்தையும், கருணாநிதியின் குடும்பத்தில் நடக்கும் குழப்பத்தையும் ஒப்பிடுகையில் மு.க.அழகிரியின் மூலம் ஆபத்து என்பது மறைமுகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று ஜெயலலிதா கூறியுள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்து ஜெயலலிதா பேசுகையில், "மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து சில குற்றச்சாட்டுகளை எதிர்கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரிவர பராமரிக்கப்படுவது இல்லை, குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று உண்மைக்கு மாறான ஒரு தொடர் பிரச்சாரம் தி.மு.க.வினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்த எ…

  20. இராஜிவ் கொலை வழக்கில் விடை தெரியாத வினாக்கள்...? 1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்தி அந்த இடத்தில் கூட்டம் நடத்த வேண்டாம் என சொல்லியும் ; ஏன் அங்கு கூட்டம் நடத்தப்பட்டது . ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா? 2. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்? 3. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப்…

  21. சென்னை: பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேன் கைது வழக்கில் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 2 பேரது பெயர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேன் கடந்த 30ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டான். இதைத் தொடர்ந்து அவனை 3 நாட்கள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், தீவிரவாத அமைப்புகளுடன் தமக்கு உள்ள தொடர்புகளை ஜாகீர் உசேன் ஒப்புக் கொண்டான். மேலும், சென்னை உயர் நீதிமன்றம், டிவி ஒளிபரப்பு கோபுரம், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அமெரிக்க துணை தூதரகம் ஆகியவற்றை தகர்க்க திட்டமிட்டிருந்தாகவும், பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ அமைப்பின…

  22. வாழை நாரில் நாப்கின் தயாரிக்கும் தம்பதி - சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழுக்காக 44 நிமிடங்களுக்கு முன்னர் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் வாழை நாரில் நாப்கின் தயாரித்து வருகின்றனர் சென்னையை சேர்ந்த சக்திவர்ஷினி மற்றும் ஷனத்குமார் தம்பதி. பிபிசி தமிழுக்காக அவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்கலாம். "நாங்கள் இருவரும் முதுகலை படிப்பை லண்டனில் ஒன்றாக படித்தோம். அப்போது நிக்கி ஜோடன்ஸ் என்ற பேராசிரியர் தலைமையில் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சியில் நாங்கள் இருவரும் ஈடுபட்டிருந்தோம். அந்த ஆராய்ச்சியின் முடிவில் சாதாரண பிளாஸ்டிக் …

  23. கொரோனா வைரஸ் BF.7 திரிபை கபசுர குடிநீர் கட்டுப்படுத்துமா? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 8 ஜனவரி 2023, 05:39 GMT பட மூலாதாரம்,MURALINATH/ GETTY IMAGES சீனாவில் மீண்டும் புதிய வகை திரிபால் உயிர்த்தெழுந்துள்ள கொரோனா வைரஸ் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சித்த மருந்தான கபசுரக்குடிநீருக்கான தேவை இந்திய அளவில் உணரப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம் உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில், சித்தமருந்தான கபசுரக்குடிநீரை தமிழ்நாட்டில் இருந்து பெற்று இந்தியா முழுவதும் பல மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு விநியோகித்தது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.