Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. புதுச்சேரி கடல் வழியாக இலங்கைத் தமிழ் அகதிகள் அவுஸ்ரேலியா செல்ல முயற்சி? அண்மையில் திருத்தப்பட்ட இந்திய குடியுரிமைச் சட்டத்தில், இந்தியாவில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் கணக்கில் கொள்ளப்படாமல் தவிர்க்கப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் புதுச்சேரி கடல் வழியாக அவுஸ்ரேலியாவுக்கு தமிழ் அகதிகள் செல்ல முயல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலைத் தொடர்ந்து புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதனை கண்காணிக்க கடலோர மற்றும் உள்ளூர் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட…

  2. 15 நாட்களில் பயிர் கடன் தள்ளுபடி ரசீது வழங்கப்படும்- எடப்பாடி பழனிசாமி ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கைனூரில் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 5-வது பிரசார பயணத்தை தொடங்கினார். அப்போது அங்கிருந்த மகளிர் குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற காலத்திலிருந்து கிராமப்புறத்தில் இருக்கின்ற மகளிர் முதல் அனைத்து மகளிருக்கும் சொந்தமாக தொழில் துவங்க சுய உதவி குழு உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் மட்டும் 7404 குழுக்கள் உள்ளது. ரூ.288 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.கடன் பெற்ற அனைத்து மகளிர் சுயஉதவி குழு மிக சிறப்பாக செயல்பட்டு வாங்கிய கடனை சரியான முறையிலே உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துகின்றனர்.சுய உதவி குழ…

  3. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஒரு போதும் உடையாது: திருநாவுக்கரசர் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஒரு போதும் உடையாது என, தமிழகத்திற்கான காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித் அவர் மேற்படி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கும எண்ணம் உள்ளதாகவும், விரைவில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உடையும் என்றும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறிய கருத்திற்கு பதில் கருத்து கூறிய திருநாவுக்கரசர் மேற்படி தெரிவித்தார். கமல்ஹாசன் காங்கிரசுடன் இணைஙய விரும்புவதை தான் வரவேற்பதாகவும், ஆனால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஒரு போதும் உடையாது என்றும் தெரிவித்தார். நடிகரும் மக்கள் நீதி ம…

  4. புதுடில்லியில் விரைவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி நிச்சயம் அமையும். எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அது வெளிப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சென்னையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே பாண்டியன் இதனைத் தெரிவித்தார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுமிக்க ஆட்சியொன்று புதுடில்லியில் வெகுவிøரவில் அமையும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அதன் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வினை விரைவாக எட்டுவதற்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு கொடுக்க முடியும் என்றும் பாண்டியன் தனது உரையில் குறிப்பிட்டார். முள்ளிவாய்க்காலில் காவு கொள்ளப்ப…

  5. தமிழக, இலங்கை மீனவர்கள் இடையே யான பேச்சுவார்த்தை தொடர்பான விவகாரத்தில் என் மீது கருணாநிதி பழி போடுவது, காங்கிரஸுடனான உறவை புதுப்பிக்க உதவுமே தவிர, பிரச்சினைக்கு தீர்வு காண உதவாது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும்போது, பிரதமருக்கு உடனுக்குடன் கடிதம் எழுதி தூதரக நடவடிக்கைகள் மூலம் அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1,111 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டபோதும், 836 மீனவர்கள் துரிதமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னமும் 275 மீனவர்கள் இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர். அவர…

  6. இந்தியாவில் முதல்முறையாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய திட்ட கருத்துரு September 30, 2018 1 Min Read இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சென்னை மாநகராட்சி அனுப்பிய 425 கோடி ரூபா பெறுமதியான திட்ட கருத்துருவுக்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம், டெல்லியில் மாணவி ஒருவர் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்திருந்ததனையடுத்து பல சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. சிறுவர் குற்றவியல் சட்டத்தில், 16 வயதுக்கு மேல் உள்ள சிறுவர்கள் கொடூர குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அவர்களை வயது வந்தவர்களாக கருதலாம் எனவும் திருத்தம் மேற்கொ…

  7. பிணிகள் ஆன அணிகள்... அ.தி.மு.க. இணைப்பில் தொடர் சிக்கல்! விக்கிரமாதித்யனின் வேதாளக் கதையை விட சுவாரஸ்யமாய் நீள்கிறது அ.தி.மு.க இரு அணிகளின் இணைப்பு விவகாரம். இரு அணிகள் என்பதும்கூட கண்ணுக்குத் தெரிகிற பிளவு. இரு அணிகளுக்குள்ளும் தலா நான்கு பிளவுகள் உருவாகியிருப்பதுதான் உண்மை. இந்நாள் எம்.எல்.ஏ-க்களாக உள்ள முன்னாள் அமைச்சர்கள் அணி ஒன்று, 'கூவத்தூர் உறுதிமொழியைக் காப்பாற்ற வலியுறுத்தி கச்சை கட்டுகிறது'. முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமே அடிக்கடி அப்பாயின்ட்மென்ட் கேட்டு பல அதிர்ச்சிகளைத் தருகிறது இந்நாள் அமைச்சர்களில் ஓர் அணி. இந்த இரு அணியினரையும் தெற்றுப்பல் தெரியப் பேசி அனுப்பும் எடப்பாடி, இதில் எந்த அணியைச் சேர்ந்தவர் என்றே அடையாளம்…

  8. ' எந்த வகையில் நான் உங்களுக்கு எதிரி?' -சசிகலா சமாதானத்தை ஏற்றாரா மோடி? எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஒரேநேரத்தில் ஆதரவுக்கரம் நீட்டும் மத்திய அரசை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். " இரண்டு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் மோடியின் விருப்பமாக இருக்கிறது. இதில், பிரதமரின் கோபத்தைத் தணிக்கும் வகையில் தூதுவர் மூலமாக பா.ஜ.க நிர்வாகிகளிடம் பேசிக் கொண்டு வருகின்றனர் சசிகலா குடும்பத்தினர்" என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 'வறட்சி நிவாரணம் உள்பட தமிழக மக்களின் நலன்கள் தொடர்பாக விவாதித்தேன்…

  9. ராஜ்நாத் சிங்குடன் ரங்கசாமி சந்திப்பு: புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரிக்கை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று டெல்லியில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். அப்போது புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் நிருபர்களை சந்தித்த ரங்கசாமி, “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். எங்கள் அரசாங்கத்தின் முக்கியமான கொள்கையாக இது தொடர்கிறது” என்றார். மாநில அந்தஸ்து வழங்கினால் மத்திய நிதி குறையும் என்று சந்தேகம் நிலவுவது குறித்து கேட்டபோது, அது உண்மையில்லை என்று ரங்கசாமி கூறினார். முன்னதாக நேற்று மோடியை சந்தித்தபோதும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து மற்றும் கூடுதல் நிதி தொடர்பாக ர…

  10. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது – எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை கிடையாது என்பதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு எனவும் கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவைக்கு பயணமாகியுள்ளார். இந்த நிலையில், விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தைப் பொருத்தவரை கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் 70 வயது வரை நடித்துவிட்டு…

  11. சென்னையில் படிப்படியாக வெள்ளம் வடியத் தொடங்கியது... ஆனாலும் மழை தொடர்கிறது சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் அடையாற்றில் வௌ்ளம் குறையத்தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஜாபர்கான் பேட்டை, கேகேநகர், சிஐடிநகர் , அ.சோக்நகர் சைதாப்பேட்டை பகுதிகளில் புகுந்த வெள்ள நீர் வடியத்துவங்கியுள்ளது. எனினும் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் மீட்புப்பணிகளில் சிக்கல் உருவாகியுள்ளது. சென்னையில் திங்கட்கிழமை பெய்த கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏரிகளில் இருந்து திறந்து விடப்பட்ட வெள்ளநீர் ஆறுகளில் கட்டுக்கடங்காமல் பாய்ந்து குடியிருப்புகளை கபளீகரம் செய்தது. இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் ப…

  12. தமிழர்கள் மூன்று பேருக்கு கத்தார் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை உடனடியாக வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.கத்தார் நாட்டில் பணி புரிந்து வந்த மூன்று தமிழர்கள் பெண் ஒருவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு,கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கத்தார் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பின்னர், சிறையில் அடைக்கப்பட்ட தமிழர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அழகப்பா சுப்பிரமணி, விருதுநகரைச் சேர்ந்த செல்லதுரை பெருமாள் மற்றும் சேலத்தைச் சேர்ந்த சிவக்குமார் அரசன் ஆகியோருக்கு 2015ம் ஆண்டு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. க…

  13. திருவண்ணாமலை கோவிலை ஆளில்லா விமானம் மூலம் படம் பிடித்த 9 பேர் கைது:பரபரப்பு தகவல்கள்! திருவண்ணாமலை: உலகப் பிரசித்த பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை ஆளில்லா விமானம் மூலம் படம் பிடித்ததற்காக, வெளிநாட்டவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கைதினைத் தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள 9 பேரும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 3 பேர் பெண்கள். இவர்களுக்கும் சர்வதேச தீவிரவாத இயக்கத்தினருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதால் திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோ…

  14. அண்ணா பிறந்தநாள்: தி.மு.கவைத் துவக்கிய நாளில் பெரியாரின் திருமணம் பற்றி அண்ணா பேசியது என்ன? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 23 பிப்ரவரி 2018 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ARUNKUMARSUBASUNDARAM (செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாள். அதையொட்டி இந்தக் கட்டுரை புதுப்பிக்கப்படுகிறது.) பொதுவாக ஒரு கட்சி துவங்கப்படும்போது, அக்கட்சியின் தலைவர் ஆற்றும் உரை மிகவும் முக்கியமானதாக, அந்தக் கட்சி துவக்கப்பட்டதற்கான நோக்கத்தைச் சொல்வதாக, அதன் எதிர்காலப் பாதையையும், கொள்கைகளையும் சொல்வதாக அமையும். திராவிடர் கழகத் தலைவர் …

  15. சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் நீக்கப்பட்டதை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறித்து நான் கருத்து தெரிவிக்க மாட்டேன். நீதிமன்றத் தீர்ப்பு குறித்து நான் எப்போதுமே கருத்து தெரிவிப்பதில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள்... கேள்வி - ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பதவி நீடிப்பு வழங்க வேண்டுமென்று, ஜெயலலிதா தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பற்றி தங்கள் கருத்து என்ன? கருணாநிதி - உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றியோ, உயர்நீதிமன்றத் தீ…

  16. பெட்டிகளுடன் வலம் வரும் சசி ஆதரவு கும்பல் : ஓட்டம் பிடிக்கும் ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் பன்னீர்செல்வம் அணியில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்க, பிள்ளை பிடிக்கும் கும்பலை போல, சசிகலா ஆதரவு மாவட்ட செயலர்கள் மற்றும் நிர்வாகி கள் சுற்றி வருகின்றனர். பணப்பெட்டிகளை காட்டி, அவர்களை கவரவும் முற்பட்டுள்ளனர். இதை பார்த்து, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஓட்டம் பிடிக்கின்றனர். அ.தி.மு.க.,வின் தற்காலிக பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டதை எதிர்த்து, பன்னீர் செல்வம் தரப்பினர் தேர்தல் கமிஷனில் மனு அளித்தனர். அந்த மனு தொடர்பாக அனுப்பிய நோட்டீசுக்கு, சசிகலா சார்பில் தினகரன் அளித்த விளக…

  17. எடப்பாடி - 99, தி.மு.க. கூட்டணி - 98, தினகரன் - 25, ஓ.பி.எஸ்-12... தள்ளாடும் தமிழ்நாடு ! மீண்டும் ஒருமுறை பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்டத்துக்கு ஆளும் அ.தி.மு.க. தள்ளப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், டி.டி.வி. தினகரனின் அரசியல் பிரவேச அறிவிப்பால் எடப்பாடி அரசு தள்ளாடத் தொடங்கியுள்ளது. டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து இதுவரையில் 25 எம்.எல்.ஏ.க்கள் அவர் வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். ஆக, இந்த நிமிடக் கணக்குப்படி 97 எம்.எல்.ஏ.க்களை கொண்ட ஆட்சியாக எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு இருக்கிறது. அடுத்தடுத்த அரசியல் வானிலை மாற்றங்களைப் பொறுத்து 97-ல் கொஞ்சம் …

  18. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு : புதிய நீதிபதி விசாரணை தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை இன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வந்த போது, புதிதாக பொறுப்பேற்றுள்ள நீதிபதி ஜான் மைக்கேல் கும்ஹா விசாரணை நடத்தினார். இதுவரையிலான வழக்கு விவரங்களை நீதிபதி கேட்டறிந்தார். இந்த விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. வழக்குரைஞர்கள் மட்டுமே ஆஜராகி நீதிபதிக்கு விளக்கம் அளித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணை 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. http://tamil24news.com/news/archives/117847

  19. டெல்லி சாலையில் மண்சோறு சாப்பிட்டு தமிழக விவசாயிகள் நூதனப் போராட்டம் Image captionஜந்தர் மந்தர் சாலையில் மண் சோறு டெல்லியில் கடந்த 29 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள், தங்களது நூதனப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று செவ்வாய்க்கிழமை மண்சோறு சாப்பிட்டனர். நேற்று திங்கட்கிழமை, பிரதமர் அலுவலகத்தில் மனுக்கொடுப்பதற்காக, காவல் துறையினர் அவர்களை அழைத்துச் சென்றனர். வெளியே வந்ததும், வாகனத்திலிருந்து குதித்த சில விவசாயிகள் தங்கள் ஆடைகளக் களைந்து நடுரோட்டில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோல தொடர்ந்து அவர்கள் நூதனப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்…

  20. தமிழகம் முழுவதும் 2-வது நாளாக ஜாக்டோ ஜியோ போராட்டம்…. January 23, 2019 அரச பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ போராட்டம் தமிழகம் முழுவதிலும் 300 இடங்களில் இன்று இரண்டாவது நாளாக நடைபெறுகின்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நேற்று முதல் நடைபெறுகின்றது. முதல்நாள் போராட்டத்தில் 6 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதாகவும் நடுநிலைப் பாடசாலை ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் அதிகளவு பங்கேற்றதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் அரச…

  21. சசிகலாவுக்கு எதிராகத் திரண்ட 3 சக்திகள்! -தியேட்டர் வில்லங்கமும் தீபக் கொந்தளிப்பும் அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளார் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக். 'சசிகலா குடும்பத்தில் அதிகாரப்போட்டி தலைதூக்கியுள்ளது. அதன் ஒரு பகுதிதான் தினகரனுக்கு எதிராக தீபக் கொந்தளித்தது. இதன் பின்னணியில் மூன்று பெரிய சக்திகள் உள்ளன' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த 60 ஆட்களுக்குள் அ.தி.மு.கவில் அதிகாரப் போட்டி தலைதூக்கியது. சசிகலா தலைமைக்கு எதிராகப் பேட்டியளித்தார் அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம். அதன்பிறகு அ.தி.மு.க நிர்வாகிகளும் பன்னீர்செல்வம் பக்கம் வர ஆரம்பித்தனர். எம்.எல்…

  22. 23 SEP, 2023 | 12:24 PM இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்" என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில் "உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும்இ அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து பல உயிர்…

  23. தமிழகம்: அனுமதி, தளர்வுகள், கட்டுப்பாடுகள்-முழு விவரம்! மின்னம்பலம் தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதியிலிருந்து நான்கு கட்டங்களாக ஊரடங்கு அமலில் இருந்தது. ஆனாலும், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராததால் ஊரடங்கை நாடு முழுவதும் நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் மாநில அரசுகள் கோரிக்கை வைத்தன. இந்த நிலையில் நாடு முழுவதும் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 31) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், மத்தி…

  24. மூன்று நிமிட பேச்சுக்கு 3 மணி நேரம் காத்திருக்கச் செய்வதா?* சசிகலா கூட்டத்தில் பங்கேற்ற, 'மாஜி'க்கள் கொதிப்பு சசிகலாவின் மூன்று நிமிட பேச்சை கேட்க, மூன்று மணி நேரம் காக்க வைக்கப்பட்டதால், 'மாஜி' அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். 'மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய சந்திப்பு, கசப்பானதாக முடிந்து விட்டது' என்றும், கொதிப்புடன் கூறினர். அ.தி.மு.க., பொதுச் செயலராகியுள்ள சசிகலாவுக்கு, பல மட்டத்திலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைச் சமாளிக்க, தலைமை அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகளை அவர் சந்தித்து வருகிறார். நேற்று காலை, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார். மதியம், முன்னாள் அமைச்சர்கள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.